[10/6, 13:36] Am Yoga: உடனடி தீர்வைத் தரும் தேங்காய் எண்ணெய் :
மேக்-அப்பை நீக்க...
ஏற்கனவே சொன்னதை போல், வீட்டு சிகிச்சை அளித்திட தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக உள்ளது. இதனை மேக்-அப்பை களைப்பதற்கும் பயன்படுத்தலாம். முகத்தில் போட்டிருக்கும் மேக்-அப்பை நொடிப்பொழுதில், எந்த ஒரு பாதிப்பும் இன்றி நீக்க இது உதவும்.
மௌத் ஃப்ரெஷ்னர்
தேங்காய் எண்ணெயின் வீட்டு சிகிச்சைகளில் மௌத் ஃப்ரெஷ்னரும் ஒன்றாகும். இதனை புரிய தேங்காய் எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் உதவிடும்.
பேன் சிகிச்சை
பேன் சிகிச்சைக்கும் இது பயன்படுவதால் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த வீட்டு சிகிச்சையாக செயல்படுகிறது. இதனை தலையில் தேய்த்து விட்டு 12-24 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் தலையை வாரிக்கொள்ளுங்கள்.
மாய்ஸ்சுரைசர்
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வறண்ட சருமத்திற்கு, குறிப்பாக முழங்கைகள் மற்றும் மூட்டுகள்.
தோல் வெடிப்புகள்
தேங்காய் எண்ணெயின் மிகச்சிறந்த பயன்களில் இதுவும் ஒன்றாகும். மேல்தோல் உரிக்கப்படும் போது அதனை ஆற வைக்க இது உதவும். மேனிக்யூர் செய்த நகங்களில் பயன்படுத்தினால் அது நீடித்து நிலைக்கும்.
உதட்டு தைலம்
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் வலி மிகுந்ததாக இருக்கும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய்:
ஸ்ட்ரெட்ச் மார்க்
பிரசவத்திற்கும் முன்பும் பின்பும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
தழும்புகள்
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தழும்புகள் முழுமையாக நீங்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால் வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் போது கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உருவாகாமல் தடுக்கும்.
கண்களுக்கு கீழ்
இதில் பல வித மருத்துவ தன்மைகள் உள்ளதால், முகத்தில் உள்ள சருமத்தில் மிகவும் மென்மையானதாக விளங்கும் கண்களுக்கு கீழான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும்.
தொற்றுக்கள்
தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால், உங்களுக்கு சில தொற்றுக்கள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக அமையும். காயங்கள் மற்றும் வெட்டுப் புண்களுக்கும் இது கிருமிநாசினியாக செயல்படும்.
பொடுகு சிகிச்சை
வறண்ட தலைச்சருமத்தால் ஏற்படுவது தான் பொடுகு. அதற்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்திடுங்கள்.
அரிப்பு நிவாரணம்
மூட்டை ,கொசு கடிக்காமல் பாதுகாக்கும்.! மற்றும் பல விதமான அரிப்புகள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக விளங்கும். இது கிருமிநாசினியாக செயல்பட்டு, அரிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும்.!
கண்டிஷனர்
உங்கள் முடிக்கு இயற்கையான வழியில் கண்டிஷன் அளிக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை தேர்ந்தெடுங்கள். சந்தையில் கிடைக்கும் பிற பொருட்களுடன் ஒப்பிடுகையில், சிறப்பாக செயலாற்ற இது கண்டிப்பான உத்திரவாதத்தை அளிக்கும்.
சுருக்கம்
சுருக்கங்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வை அளிக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். அதனால் இரவு நேர கிரீம்மாக இதனைப் பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சியை மேம்படுத்தும்
தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்தால், முடி வளர்ச்சி மேம்படும். மேலும் முடி கொட்டுவதையும் இது தடுக்கும்.!
குறிப்பு:தேங்காய் எண்ணைய் என்பது செக்கில் ஆட்டிய இயற்கை எண்ணையை குறிக்கிறது.! பாதிகலப்படம் மற்றும் ரீபைண்ட் செய்த எண்ணைகளுக்கு நாம் உத்தரவாதம் அளிக்க முடியாது.!
☘இணையப்பகிர்வு
[10/6, 15:32] Am Yoga: காற்றைச் சுத்தப்படுத்தும்
வீட்டுச் செடிகள்...!
வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!
🌱இணையப்பகிர்வு
மேக்-அப்பை நீக்க...
ஏற்கனவே சொன்னதை போல், வீட்டு சிகிச்சை அளித்திட தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக உள்ளது. இதனை மேக்-அப்பை களைப்பதற்கும் பயன்படுத்தலாம். முகத்தில் போட்டிருக்கும் மேக்-அப்பை நொடிப்பொழுதில், எந்த ஒரு பாதிப்பும் இன்றி நீக்க இது உதவும்.
மௌத் ஃப்ரெஷ்னர்
தேங்காய் எண்ணெயின் வீட்டு சிகிச்சைகளில் மௌத் ஃப்ரெஷ்னரும் ஒன்றாகும். இதனை புரிய தேங்காய் எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் உதவிடும்.
பேன் சிகிச்சை
பேன் சிகிச்சைக்கும் இது பயன்படுவதால் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த வீட்டு சிகிச்சையாக செயல்படுகிறது. இதனை தலையில் தேய்த்து விட்டு 12-24 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் தலையை வாரிக்கொள்ளுங்கள்.
மாய்ஸ்சுரைசர்
குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வறண்ட சருமத்திற்கு, குறிப்பாக முழங்கைகள் மற்றும் மூட்டுகள்.
தோல் வெடிப்புகள்
தேங்காய் எண்ணெயின் மிகச்சிறந்த பயன்களில் இதுவும் ஒன்றாகும். மேல்தோல் உரிக்கப்படும் போது அதனை ஆற வைக்க இது உதவும். மேனிக்யூர் செய்த நகங்களில் பயன்படுத்தினால் அது நீடித்து நிலைக்கும்.
உதட்டு தைலம்
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் வலி மிகுந்ததாக இருக்கும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய்:
ஸ்ட்ரெட்ச் மார்க்
பிரசவத்திற்கும் முன்பும் பின்பும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.
தழும்புகள்
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தழும்புகள் முழுமையாக நீங்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால் வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் போது கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உருவாகாமல் தடுக்கும்.
கண்களுக்கு கீழ்
இதில் பல வித மருத்துவ தன்மைகள் உள்ளதால், முகத்தில் உள்ள சருமத்தில் மிகவும் மென்மையானதாக விளங்கும் கண்களுக்கு கீழான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும்.
தொற்றுக்கள்
தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால், உங்களுக்கு சில தொற்றுக்கள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக அமையும். காயங்கள் மற்றும் வெட்டுப் புண்களுக்கும் இது கிருமிநாசினியாக செயல்படும்.
பொடுகு சிகிச்சை
வறண்ட தலைச்சருமத்தால் ஏற்படுவது தான் பொடுகு. அதற்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்திடுங்கள்.
அரிப்பு நிவாரணம்
மூட்டை ,கொசு கடிக்காமல் பாதுகாக்கும்.! மற்றும் பல விதமான அரிப்புகள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக விளங்கும். இது கிருமிநாசினியாக செயல்பட்டு, அரிப்பு நோய்க்கு நிவாரணம் அளிக்கும்.!
கண்டிஷனர்
உங்கள் முடிக்கு இயற்கையான வழியில் கண்டிஷன் அளிக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை தேர்ந்தெடுங்கள். சந்தையில் கிடைக்கும் பிற பொருட்களுடன் ஒப்பிடுகையில், சிறப்பாக செயலாற்ற இது கண்டிப்பான உத்திரவாதத்தை அளிக்கும்.
சுருக்கம்
சுருக்கங்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வை அளிக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். அதனால் இரவு நேர கிரீம்மாக இதனைப் பயன்படுத்தலாம்.
முடி வளர்ச்சியை மேம்படுத்தும்
தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்தால், முடி வளர்ச்சி மேம்படும். மேலும் முடி கொட்டுவதையும் இது தடுக்கும்.!
குறிப்பு:தேங்காய் எண்ணைய் என்பது செக்கில் ஆட்டிய இயற்கை எண்ணையை குறிக்கிறது.! பாதிகலப்படம் மற்றும் ரீபைண்ட் செய்த எண்ணைகளுக்கு நாம் உத்தரவாதம் அளிக்க முடியாது.!
☘இணையப்பகிர்வு
[10/6, 15:32] Am Yoga: காற்றைச் சுத்தப்படுத்தும்
வீட்டுச் செடிகள்...!
வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!
🌱இணையப்பகிர்வு
No comments:
Post a Comment