Saturday, July 30, 2016

மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம்.



இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும், யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.

இடது மூளையின் செயல்பாடு தர்க்க அறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன, ஞானஅறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்பட வேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும், அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.

ஏனெனில் கைகளை மாற்றி, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும் போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம் பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் … நம்மவர்கள் பலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை.!

‎நம்முன்னோர் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் பழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்...

நன்றி : ஆம்யோக ட்ரஸ்ட் 

குறிப்புகள் - ஆலோசனைகள்

[7/26, 13:42] Am Yoga: பிள்ளைகள் படுத்தும்பாடு  பதின்பருவத்தில் பிள்ளைகளின் முக்கிய நோக்கமும் உழைப்பும்  கல்விக்கானதாக  இருந்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மிக சிறப்பானதாக  அமையும்.! எனது பள்ளிப்பருவத்தில் நான் டாக்டர், இன்ஜினியர், நான் கலெக்டர் என்று கூறியவர்களெல்லாம் இப்பொழுது வியாபாரம், அரசியல்,   ஒட்டுனர் பணி, துப்புரவுபணி, கொத்தனார் வேலை என்று தனது கனவல்லாத வேறுபணிகளில் இருக்கிறார்கள். நான்கூட டாக்டர் என்றுதான் கனவு கண்டேன். பிறகு ஆரம்பக் கல்வியிலேயே  பல இடையூறுகள் தென்பட்டதால் இன்று ஒரு யோகா தெரபிஸ்ட், இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் என்ற அளவில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. <டாக்டர் வேலையை விட இப்பொழுது உள்ள எனது பணியை மிகவும் நேசிக்கிறேன் என்பது வேறுவிசயம்> ஆனால், இன்றைக்கு டாக்டர், விஞ்ஞானி, இன்ஜினியர், கலெக்டர் என்று தங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு  பலப்பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. பத்தாவது, பணிரெண்டாவது தேர்வில் தோல்வி அடைந்தால் கூட உடனடியாக அடுத்த தேர்வை  எழுதி அதே ஆண்டு  தங்கள் விரும்பிய படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தந்துள்ளது. எம்.பி.பி.எஸ் படிக்க மதிப்பெண் போதவில்லை என்றாலோ அல்லது விருப்பமில்லை என்றாலோ சித்தா, இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் என்று அதே ஐந்தரை வருட கால அளவில்  வேறு பல டாக்டர் டிகிரி  படிப்புகளும் உள்ளன. அதுவும் வேண்டாமெனில் அக்குப்பஞ்சர், பிசியோதெரபி, யோகாதெரபி போன்ற மருந்தில்லா மருத்துவ படிப்புகளும் உள்ளன.!  மருத்துவத்துறையை  ஒரு உதாரணத்திற்கு கூறினேன். இன்ஜினியரிங் போன்ற மற்ற துறைகளில் பயில இதைவிட அதிக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. <படித்தவனுக்கு வேலை இல்லை என்பது வேறுவிசயம்>   இன்றைக்கு தெருவிற்கு பத்து இன்ஜினியர் இருக்கிறார் ஆனால், அவசரத்திற்கு ஒரு கொத்தனார் தான் கிடைக்க மாட்டேங்கிறார் என்று பலரும் தேடுகிறார்கள். இதுபோலவே தேங்காய் பறிக்க ஆளில்லை, ஓட்டல் வேலைக்கு ஆளில்லை என்று பலரும் தவித்தாலும் கூட எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இதுபோன்ற சாதாரணமான வேலைகளுக்கு அனுப்ப முன்வருவதில்லை. ஒருவேளை தாங்கள் ஒரு எளிய பணியை மேற்கொள்பவராய் இருந்தாலும்  கூட தங்கள் பிள்ளைகள் அதுபோன்று இல்லாமல் சமுதாயத்தில்  பெரிய அந்தஸ்தயும், மரியாதையையும், நிறைய வருமானத்தையும் தருகின்ற  பெரிய பணிகளுக்கு செல்ல வேண்டும் என்றே கனவு காண்கிறார்கள். இதற்காகவே ஆங்கில மீடிய வாசலிலும், டியூசன் சென்டர் வாசலிலும்  தங்கள் ஓய்வு நேரத்தையும் தங்கள் மொத்த வருமானத்தையும் கொட்டுகிறார்கள். எளிய, நடுத்தர மக்களின் நிலை இதுவெனில்  ஏற்கனவே சமூக அந்தஸ்துடன் புகழ்பெற்ற டாக்டராகவோ,  அரசுப் பணியாளர்களாகவோ இருப்பவர்களின் நிலமையோ இன்னும் மோசம்  தங்கள் பிள்ளைகளை தன்னைவிட ஒருபடி முன்னே செல்ல வழிகாட்ட வேண்டும் என்றே  இவர்கள்  முனைகிறார்கள் அதற்காகவே அதிக டோனேசன் கேட்கும் பள்ளி,  இடையறாது பல்வேறு பயிற்சி என்று தங்கள் பிள்ளைகளை நினைத்தே உருகுகிறார்கள். அப்படியும் போதிய மதிப்பெண்  கிடைக்கவில்லை எனில் மருத்துவக்கல்லூரி வாசலிலும் அரசியல்வாதிகளின் இல்லத்திலும்  தவம் கிடந்து அதுவரை தாங்கள் பல்வேறு வழிகளில் சம்பாதித்த  செல்வத்தையும் கொட்டிக் கொடுக்கிறார்கள்.! இப்படி பெற்றோர்களின் நினைவெல்லாம் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீதே மையம் கொண்டிருக்க பல பதின்பருவ பிள்ளைகளோ அதிக நண்பர்களின் சகவாசம், அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பெற்றோர்கள், ஆசிரியர்களின் சொல்கேளாமை,  உடைகளையும், தலைமுடியையும்  வித்தியாசமாய் செய்து பிறரை கவனிக்க வைப்பதற்கு  முயற்சி செய்தல்,  சமூக ஊடகங்களில் வெட்டியாக பலமணி நேரங்களைப் போக்குவது,சிகரெட், மது, சினிமா, பார்ட்டி என்று  அலைவது.எதிர்பாலின ஈர்ப்பில்  தகாத செயல்களை செய்து தங்கள் எதிர்கால கல்வியை கேள்விக் குறியாக்குதல்   போன்ற பல்வேறு செயல்களை செய்து பெற்றோர்களின் அருமையையும்  தங்கள் எதிர்காலத்தையும் ஒருசேர இழக்கிறார்கள்.!  இதற்கு காரணம் பிள்ளைகள் மட்டும் இல்லை. சில பிள்ளைகளுக்கு படிப்பே வராது. ஆனாலும் பெற்றோர் விருப்பத்திற்காக படிக்க சென்று பிறகு நமக்கு இது லாயக்குப் படாது என்று புரிந்து எதோ கடமைக்கு படித்துக் கொண்டே தனக்குப் பிடித்த சமூக ஊடகங்களில் அலைவது, அடிக்கடி கட் அடித்து சினிமா,பீச் என்று சுற்றுவது, எதிர்பாலின மயக்கத்தில் திளைப்பது போன்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்துவார்கள். இதன்மூலம் இவர்கள் ஓரளவு படிக்கும் இவர்களின் நட்புவட்டத்தில் உள்ள மற்ற மாணவர்களின் எதிர்காலத்தையும் சேர்த்துக் கேள்விக் குறியாக்குகிறார்கள்.!  நுங்கம்பாக்கம் கொலைவழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் போன்றவர்களோ படித்தும் தனக்குரிய ஆங்கீகாரம் கிடைக்காத காரணத்தினாலேயே இதுபோன்ற விசயங்களில் மாட்டுகிறார்கள். சுவாதி போன்றவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையும், உரிமையையும், அங்கீகாரத்தையும் முறையாக பயன்படுத்தத் தெரியாத காரணத்தினாலேயே  பலியாகிறார்கள்.!  படிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து நல்லப் படிப்பினைகள் பெறவேண்டும். இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் எனது மகன்கள் தான். எனக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் +2 வரை ஒழுங்காகப் படித்ததால் அவரை இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தேன், இளையவர் லெவன்த் எக்ஸாமே எழுதவில்லை. ஏனெனில் சேர்க்கை சரியில்லை. ஊரில் உள்ள கசாப்புக்கடக்காரன் பையன்,  குடிகாரன் பையன், அப்பன் வெளிநாட்ல நிக்றவன் பையன் இவங்க கூட சேந்து ஊரைச்சுத்தி எல்லாம் மொத்தமா தறுதலையாப் போச்சிது.! உருப்பட இன்னும் வழியிருக்கானு பார்ப்போம்னு அவங்கம்மா அடம்பிடிச்சி அரசு பாலிடெக்னிக்ல சேர்த்து விட்டிருக்காங்க.! எப்படியோ உருப்பட்டவன் டாக்டர், உருப்படாதவன் இன்ஜினியர் அப்படினு கொஞ்சம் தெம்பா இருந்தேன். அப்பதான் என் உற்சாகத்தை கெடுக்க ஒரு பொம்பளப் புள்ளை போன் போட்டுது. என் பையன் பேரைச் சொல்லி நீ  ஏன்கிட்ட பேச மாட்டியானு கேட்டுது. யாரும்மா நீனு பதறிப்போய் கேட்டால் என் மூத்தப்  பையனோட கல்லூரில படிக்கிறதா சொல்லிச்சு. சரியாப் போச்சு அவன் கல்லூரில இருக்கான்மா, நான் அவங்கப்பானு சொன்னா அந்தப் புள்ளைக்கு ஒன்னும் புரியலை. மறுபடியும் ரெண்டு மூனுதரம் போன் போட்டுது, என்னடா இது புதிய குழப்பம் … கல்லூரில   சேர்ந்து முளுசா ஒருவருசம் கூட ஆகலை. இன்னும் நாலரை வருசம் கடக்க வேண்டி இருக்கு.  அதுக்குள்ள  இப்படியானு நினைச்சிட்டே  என் மனைவிகிட்டே  விசயத்தை சொன்னா வாங்க நாம கல்லூரிக்குப் போயி இந்த நம்பர் யாரோடதுனு கேட்டு புகார் கொடுப்போம்னு சொன்னா, அட நீ வேறம்மா இது எதோ ஆர்வக்கோளாறு பொண்ணு அப்பன்காரன் டாக்டராகும்னு  இயற்கை மருத்துவக் கல்லூரில சேத்துட்டு வீட்ல இருக்கான்.! இது தேவையில்லாமா ஆடு கசாப்புக் கடைக்காரன்ட்ட  பக்ரீத் எப்பனு கேட்டது மாதிரி - பாய்வீட்டு பையனுக்கு போனை போட்டிருக்கு. சனிக்கிழமை பையன் வருவான் விசாரிக்கலாம்னு  சொல்லி சமாதானப் படுத்தி வைச்சேன்.! பையன் வந்தவுடனே அந்தப் பொண்ணோட வாட்ஸ் போட்டோவைப் பார்த்து எங்க கல்லூரில படிக்கிற பொண்ணுதான், எங்கூட பேசினதே இல்லையே ,எதற்கு  போன் பண்ணிச்சுனு ஆச்சரியப்பட்டான். அது உண்மையா நடிப்பானு  தெரியலை.  <உண்மைனு நம்புவோம் வேறவழி>  அட மவனே  கவனம் கவனம்.! என் பையனை மருத்துவக் கல்லூரில  சேர்ப்பதற்கான அப்ளிகேசன் வாங்குவதற்கு 500 ரூபாய் செலவாகியது. அது மட்டும் தான் என்னால்  உடனே கொடுத்து வாங்கித் தர முடிந்தது. பிறகு கலந்தாய்வு வரும்போது 5000 ரூபாய்க்கான டிடி எடுத்துவர வேண்டும் என்றார்கள். அதற்கே அப்பொழுது நான் யோகா வகுப்பெடுத்துக் கொண்டிருந்த டாக்டர் இராமலிங்கம் அவர்களிடம்  வழக்கமாக முதல்தேதி கொடுக் கும் பணத்தை முன்கூட்டியே  வாங்கினதால் தான் முடிந்தது.  பிறகு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்ததால் வருடம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் என்றார்கள் அதற்கும் இராமலிங்கம் அய்யாதான் முதலில் இதை கட்டிச் சேருங்கள்   என்று 25000 ரூபாய்க்கு  செக்கை  கொடுத்தார்கள்.! பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து 65000 கடன்வாங்கி கொடுத்துதான் அவன் படிக்கிறான். இன்னும் கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டி உள்ளது. புத்தகம், உடைகள் எல்லாம் எனது நண்பர்களின் உபயம் தான். இந்த தந்தையிடம் இருந்தது வெறும் நம்பிக்கையும் பல நல்ல ஆத்மாக்களின் பிராத்தனையும் மட்டும் தான்.!  இது எனது நிலமை அதற்காக ஒருவேளை வசதியாக தங்கள் பணத்தை கட்டியப் பெற்றோர்களின் பிள்ளைகள்  அசிரத்தையாக இருக்கலாம் என்பது பொருளல்ல. ஒவ்வெரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பல தியாகங்களை செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்.  பிள்ளைகள் அதை புரிந்துகொண்டு செயல்படுவது மிக அவசியம். மாணவப் பருவம் என்பது  தன் அறிவை விரித்துக்கொள்ளவும், தன்னிலையை உயர்த்திக் கொள்வதற்குமான களம். இங்கு கவனம் வேறு திசைகளில் பயணம் செய்தால் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேர்வதோடு பலரின் லட்சியங்களின்  மரணமாகவும் அது ஆகிவிடும்.! பறவைகள், ஆடு,மாடு, கோழி, பன்றி, யானை போன்ற மிருகங்கள்  எல்லாவற்றிற்கும் நட்புறவு கொள்ளவும் , நேசம் கொள்ளவும், தன் இனத்தை விருத்திச் செய்துகொள்ளவும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி உள்ளது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இறைவன், தன் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் இந்த உலகத்தையே உயர்த்தவும்  வாய்ப்பை வழங்கி உள்ளான்.!   அதை இந்த பருவத்தில் உணர்ந்துகொண்ட எல்லாப் பிள்ளைகளுமே சாதனையாளர்கள் ஆகிவிடுவார்கள்.!ஆண், பெண் நட்பால்  ஒரு குடியும் முழுகாது. ஆனால், அது தெளிந்த நல்லறிவோடு கூடியதாக நம்மை முன்னேற்றப் பாதையில் செலுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.எதிர் பாலினக் கவர்ச்சி எது, தொழில் ரீதியான நட்பு எது, காதல் எது என்று எல்லாவற்றையும்  பகுத்தாராய்ந்து  நட்புகொள்வதே அறிவுப் பெற்றதின் அடையாளமாகும்.!  இது ஒரு எதிர்பாலின ஈர்ப்பு தான், எதோ ஒரு விசயம் அந்தப் பொண்ணுக்கு இந்தப் பையன்ட்ட பேசனும், பழகனும்னு சொல்லுது. இதை புரிஞ்சிகிட்டு   கல்லூரி நிர்வாகமே  மாணவ, மாணவிகளின் நட்பு ரீதியான   தேவைகளுக்கான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தித் தரனும்.! அதுபோலவே பதின்பருவ பிள்ளைகளும் தங்கள் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு முறையாக நடந்துகொண்டு தங்கள் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து இந்த சமுதாயம் மேன்மையடைய வழிகாட்ட வேண்டும்.!  இதுவே   என்னைப் போன்ற பல பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பாய்  உள்ளது.!  நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.in
[7/26, 18:21] Am Yoga: *சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்*

வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

சத்துக்கள்

எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் :

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.! குறிப்பு: பச்சை வாழையில் நாட்டு இரகம் மட்டுமே நல்லது. பெங்களூர் வாழை என்று கூறப்படும் மஞ்சள் நிறப்பழமும் விதையில்லாத மரபணு மாற்றப்பட்ட இரகமும் ஆபத்தானவை.! இணையப்பகிர்வு
[7/27, 04:48] Am Yoga: இயற்கை மூலிகை தயாரிப்புகள்
***********************

பஞ்சமூலி சூரணம்

உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

மூலிகை தேனீர்

ஆவரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்ப மூலிகை தேனீர் பொடி

உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!

950 கிராம் 600 ரூபாய்

சக்கரை வியாதி சூரணம்

உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை

100 மாத்திரை 300 ரூபாய்

யோகா புத்தகம் & வீடியோ

சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!
 
 இன்சுலின் ஆவணப்படம்  சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்தும் சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/-நமது அறக்கட்டளையின் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு நிதி திரட்டவே நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம்.!


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …  AUM HERBALS தொடர்புக்கு:9629368389
amyogatrust.blogspot.in
[7/27, 09:39] Am Yoga: யோகா ஆசிரியருக்கு வந்த சக்கரைவியாதி இரண்டு மாதங்களுக்கு முன்  நாகர்கோவிலில் புகழ்ப்பெற்ற ஒரு யோகா ஆசிரியர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறி , எப்ப வரலாம் என்று கேட்டார் நானும் காலை 11 மணிக்குள் என்றால் நமது பார்வதிபுரம் பயிற்சியகத்தில் சந்திக்கலாம் என்று கூறினேன். சரியென்று அடுத்தநாளே காலை ஒம்பது மணிக்கு வந்துவிட்டார். அவர் வந்தநேரம் ஓய்வுப்பெற்ற ஒரு ஆசிரியருக்கு சக்கரை நோயை குணப்படுத்தும் ஆசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் சற்றுநேரம் காத்திருங்கள் வந்துவிடுகிறேன் என்றேன்.! <அது என்னவோ தெரியலை பொதுவாக ஆசிரியப்பணி செய்பவர்களுக்கே சக்கரை நோய் அதிகமாக வருகிறது> நண்பர் உடனே இதோ வந்துவிடுகிறேன் என்று கிளம்பிவிட்டு பிறகு அடுத்த நாள் அதே நேரம் வந்து பள்ளி ஆசிரியருக்கு அளிக்கும் பயிற்சியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவர் பயிற்சி முடிந்து போனதும். நேற்று ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் சென்றுவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது எடுத்துப் பேசியவர் தன்னால் இன்று  வரமுடியாது. வேண்டுமானால் வேறு ஒரு யோகா ஆசிரியரை அனுப்புகிறேன் என்றார் எதிர்முனையில் என்ன சொன்னார்களோ தெரியல கைப்பேசியை வைத்துவிட்டு பேச்சை தொடர்ந்தார் … சக்கரைவியாதியை நீங்கள் யோகாவின் மூலம் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்துள்ளீர்கள், இது எந்த அளவிற்கு சாத்தியம்? எனென்றால்  எனக்கும் மூன்று ஆண்டுகளாக சக்கரை உள்ளது.நானும்  சக்கரைக்காக பரிந்துரைக் கப்பட்டுள்ள வக்ராசனம், சலபாசனம், மயூராசனம் போன்றவற்றை தினமும் செய்துவருகிறேன். ஆனாலும், எந்த இனிப்பை சாப்பிட்டாலும் சக்கரை ஏறிவிடுகிறது, தினமும் இரண்டு அலோபதி மாத்திரைகளை போட்டால் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க முடிகிறது என்று அவர் கூறவும் மீண்டும்  கைப்பேசி ஒலித்தது. நான் அவரிடம் கூறினேன் நண்பரே தயவாய் இப்பொழுது சென்றுவிட்டு உங்களுக்கு கைப்பேசி அழைப்பு வராத நேரத்தில் வாருங்கள் அல்லது கைப்பேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் என்றதும் கைப்பேசியை அதிர்வு நிலையில் போட்டு  கொஞ்சம் தூரமாக வைத்துவிட்டு  என்னைப் பார்த்தார்   நான் கூறினேன்; " சக்கரை என்பது ஒரு வியாதியே அல்ல, அது உடலியல் இயங்குத் திறனில் ஏற்ப்பட்ட ஒரு தடுமாற்றம் மட்டுமே ஆறுமாதம் வரை தொடர்ந்து நாம் வரையறுத்துக் கூறும் யோகா நுட்பங்களுடன், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டால்  சக்கரை குணமாகிவிடும். நம்மிடம் பயிற்சி ஆரம்பித்த பத்தே நாட்களில்  நீங்கள் பயன்படுத்தும்  ஆங்கில மாத்திரை அல்லது இன்சுலினை  ஒருவேளையாக இருந்தால் முற்றிலும் நிறுத்திவிடலாம். இரண்டு வேளையாக இருந்தால் அதிகப்பட்சம் ஒரு மாதத்தில் நிறுத்தி ஆரோக்கியமாக வாழலாம். பயிற்சி ஆரம்பித்த சிலநாட்களிலேயே நாவறட்சி, அதிமூத்திரம், உடல்சோர்வு, எடைகுறைதல், பசியின்மை, படப்படப்பு போன்ற அனைத்தும்  கட்டுப்பாட்டில் வந்துவிடும், எல்லா வகையான இயற்கை இனிப்புகளையும் தராளமாக சாப்பிடலாம்  நீங்கள் நம்மிடமோ அல்லது வேறு எந்த ஆய்வகத்திலேயோ சக்கரை பரிசோதனை செய்துபார்த்தாலும் சக்கரை அளவு முன்பை விட குறைந்துகொண்டே வந்து ஆறுமாதத்தில் முழு குணம் கிடைக்கும் "  ' அய்யா கோபித்துக் கொள்ள வேண்டாம்  பிறகெதற்கு இதை குணப்படுத்தவே முடியாது என்று கூறுகிறார்கள்? " அது அறியாமை அல்லது வியாபர யுத்தியாக இருக்கலாம் " நீங்கள் கூறுவதை எப்படி நம்புவது? என்று அவர் கேட்டதும் நமது இன்சுலின் ஆவணப்பட குறுந்தகட்டை கொடுத்து இதைப்பாருங்கள் சகோதரரே.! ஒரு மாதத்திலேயே ஆங்கில மருந்துகளை நிறுத்தி யோகாவால்  தங்கள் சக்கரையை சீரமைத்துக் கொண்டவர்களின்  முழு விபரமும் இதில் உள்ளது. என்று நாம் கூறியதும் மிக நல்லது  என்று கூறி டிவிடியை வாங்கிவிட்டு எழுந்து இதைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று  விடைபெற  முயன்றார்.  குறுந்தகடின் விலை 250 ரூபாய் " என்று நான்   கூறினேன்; உடனே அவர் இலவசம் என்று கேள்விப்பட்டேனே என்று புருவத்தை உயர்த்தினார்;  கூறினேன்; "நண்பரே எளிய ஆலோசனைகளுக்கு நாம் கட்டணம் வாங்குவதில்லை, அதுபோலவே வருடத்தில் பாதிநாட்கள் ஒவ்வெரு வியாதிக்கும் தனித்தனியாக ஆராய்ச்சிப் பூர்வமாக இலவச வகுப்புகளுடன் மூலிகை மருந்துகளும் இலவசமாக வழங்குகிறோம். ஆனால், நமது டிவிடி, புத்தகம், பல்வேறு நோய்தீர்க்கும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை கட்டணத்திற்கே கொடுக்கிறோம்" என்றதும் எவ்வளவு என்று கேட்டுக் கொண்டு பிறகு நமது புத்தகம், சிறுகுறிஞ்சான் மாத்திரை போன்றவற்றையும் பணம் செலுத்தி வாங்கிசென்றார். ஆனால், இதுவரை  பயிற்சிக்கு வரவில்லையே என்று  நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்று மதியம் போன் செய்து  அய்யா, சக்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் எனது வழக்கமான ஆசனப்  பயிற்சிகளோடு உங்கள் டிவிடியில் கூறப்பட்டுள்ள கிரியை, பிராணாயாமப் பயிற்சியையும் சேர்த்து செய்துவருகிறேன். சக்கரை கட்டுக்குள் இருக்கிறது. முன்பிருந்த அடிக்கடி நாவறட்சி ஏற்படுதல், இரவில் இரண்டு மூன்றுமுறை எழுந்து சிறுநீர் கழிப்பது இப்போது இல்லை. அதோடு முன்பு அடிக்கடி ஏற்படும் வயிற்று உப்புச குறைபாடுகளும் சரியாகி விட்டன என்று மகிழ்வாக கூறியதோடு நானும் இப்பொழுது யோகாவுடன் இயற்கை வாழ்வியல் முறைகளையும் உணவு முறையையும் சேர்த்து எனது மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். இப்பொழுதுதான் என்னால் குற்ற உணர்வில்லாமல் பிறருக்கு பயிற்சி கொடுக்க முடிகிறது. என்றார். அதானே;  யோகா சக்கரையை கட்டுப்படுத்தும் என்று சொல்லிக் கொண்டே ஆசிரியர் மாத்திரையை போட்டுக் கொண்டு வகுப்பெடுத்தால் அது கேலிக் குறியதாகத்தான்  இருக்கும். இயற்கை இன்னும் யாருக்கெல்லாம் தன் அருளாசியை வழங்கி தூய்மைப்படுத்த முனைகிறதோ அவர்களெல்லாம் பாக்கியவான்களே.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.in AM HERBALS Mobile:9629368389
[7/28, 05:14] Am Yoga: இயற்கை பற்றிய புரிதல் இல்லாமல் தயாரிக்கப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனித வாழ்க்கையை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த சூழலையும் சீரழித்துவிடும்.

 கொசுக்கொல்லிகளின் வருகை இந்த விதமான சீரழிவுகளைக் கொண்டுவந்துள்ளது. குழந்தைகளைக் கொசு கடித்தால் உருவாகும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் வழியாகத் தான், கொசுக்கொல்லிகள் வீடுகளுக்குள் நுழைந்தன. நச்சுப் புகை பரப்பும் கருவிகளை, படுக்கை அறைக்குள் வைத்துக்கொண்டு உறங்கும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது.

கொசுக்களைக் கொலைசெய்வதாக நம்பிக் கொண்டு உறங்கும் மனிதர்கள், தம்மைத்தாமே சீரழித்துக்கொள்வதை அறியாதிருக்கிறார்கள். `கொசு விரட்டி’ என்ற சொல் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அவை `விரட்டிகள்’ அல்ல `கொல்லிகள்’. கொசுக்களைக் கொலைசெய்யும் அளவுக்கு நஞ்சு அந்தக் கருவிகளில் உள்ளது.

மிக எளிமையான கேள்வி ஒன்றைக் கேட்டுப் பாருங்கள். கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், காய்ச்சல்களின் தீவிரம் குறைந்துள்ளதா... அதிகரித்துள்ளதா?

ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின்போதும் சிலவகை காய்ச்சல்களைப் பற்றிய பதற்றம் உருவாக்கப் படுகிறது. இதன் ஊடாக, கொசுக்களின் மீதான அச்சம் தூண்டப்படுகிறது. விளைவாக, வீட்டு மளிகைப் பொருட்களின் பட்டியலில் கொசுக்கொல்லிகளும் இணைக்கப்பட்டுவிட்டன.

கடந்த 20 ஆண்டுகளாக கொசுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பெருவணிகத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை `கொசுப் பொருளாதாரம்' என்றே அழைக்கலாம்.

கொசுக்கொல்லிகளின் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்த மிக முக்கிய மாற்றம் நுரையீரல் நோய்களின் பெருக்கம். இதைப் புரிந்துகொள்ள எந்தப் புள்ளிவிவரங்களையும் தேடாதீர்கள். எல்லா புள்ளிவிவரங்களும் நிறுவனங்களின் தயாரிப்புகள்தான்.

உங்கள் சுற்றத்தாரைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களைச் சுற்றிலும் எத்தனை மூச்சிரைப்பு நோயாளிகள் இருந்தனர், இப்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிடுங்கள்.

உங்கள் குழந்தை களின் நுரையீரலை சளி, எவ்வளவு மோசமாகப் பற்றிக்கொண்டுள்ளது எனப் பாருங்கள். சளி தொடர்பான தொல்லைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மருத்துவ முயற்சிகள் எவ்வளவு தீவிரம் அடைந்துள்ளன எனக் கவனியுங்கள்.

சீராக மூச்சு விடுவதற்குக்கூட, மருந்துகளை நம்பி இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகுவதை உற்று நோக்குங்கள். சுவாசத்தைச் சீராக்குவதற்கான பொருட்களின் விளம்பரங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன எனப் பாருங்கள்.

நமது மரபு மருத்துவக் கொள்கைகளின்படி தோல் நோய்களுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் உறவு உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக, தோல் நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிவிட்டதை நீங்களே உணர்ந்து புரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் சிந்தனைக்கு ஒரு திறவுகோலை நான் தருகிறேன். இனி நீங்களே சிந்தித்து, நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும்.

மூடிய அறைக்குள் நச்சுப் புகையைப் படரவிட்டால், கொசுக்கள் மட்டும் செத்து விழும், மனிதர்கள் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

நிறுவனங்களின் நச்சுத் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் ஓர் ‘எச்சரிக்கை’ அறிவிப்பு இருக்கும். கொசுக்கொல்லிகளிலும் அந்த அறிவிப்பு உண்டு. மனதாரச் சொல்லுங்கள் நீங்கள் அந்த அறிவிப்புகளைப் படித்தது உண்டா? ஒருவேளை படித்தாலும் அவற்றை உங்களால் கடைப்பிடிக்க முடியுமா?

 `கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, எல்லா கதவுகளையும் மூடி வைக்கக் கூடாது’ என்பது ஓர் அறிவிப்பு. இதை உங்களால் செயல்படுத்த முடிகிறதா?

`கதவுகளைத் திறந்தாலே கொசுக்கள் உள்ளே புகுந்துவிடும்’ என்ற அச்சத்திலும் அருவருப்பிலும் அல்லவா நீங்கள் வாழ்கிறீர்கள். நிறுவனங்களும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் மேதைகளும் எல்லா சட்டங்களில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஏனெனில், அவர்கள் ‘சட்டப்படி’ நஞ்சு தயாரிக்கிறார்கள். நீங்கள்தான் ‘சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல்’ நஞ்சுக்கு இரையாகிறீர்கள்.

மீண்டும் எனது முதல் கேள்வியை நினைவூட்டுகிறேன். கொசுக் கொல்லிகளின் வருகைக்குப் பின்னர், அச்சுறுத்தும் காய்ச்சல் களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா... உயர்ந்துள்ளதா?

ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்திலும் காய்ச்சல்களின் மீதான அச்சமும், அவற்றின் தாக்குதலும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் நீங்கள் கொசுக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறீர்கள்.

மறுபக்கம் காய்ச்சல்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கின்றன. இந்தப் போரில், மருந்து நிறுவனங்களும், கொசுக்கொல்லி நிறுவனங்களும் மாபெரும் வெற்றி பெறுகின்றன. சமூகத்தின் நலனும் பூமியின் உயிர்ச் சூழலும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

கொசுக்களின் உணவு, மனித ரத்தம் அல்ல... மனிதக் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும் தாவரச் சுரப்புகளும்தான் அவற்றின் முதன்மை உணவுகள். சக உயிரினங்களின் ரத்தமும் அவற்றின் உணவுதான். அந்தச் சக உயிரினங்களில் மனிதர்கள், கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் வீடுகளைச் சுற்றிலும் தவளைகளும் பிள்ளைப்பூச்சிகளும் மரவட்டைகளும் நத்தைகளும் வாழ்ந்தன. இவை எல்லாம் வாழ்வதற்கு ஏற்றவகையில் செடிகளும் புதர்களும் அப்போது இருந்தன. வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர்தான் இந்த எல்லா உயிரினங்களுக்கும் உணவு ஆதாரம். கொசுக்களும் இவற்றோடு இணைந்து வாழ்ந்தன. அப்போது கொசுக்கள் மனிதர்களைத் தேடி வரவில்லை.

படைப்பின் ஒழுங்குவிதிகள் குலையாத காலம் அது. கழிவுநீரிலும் அழுகிய உணவுகளிலும் உருவாகும் நுண்ணுயிரிகளை உணவாக உட்கொண்டு சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு பல உயிரினங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

 கொசுக்கள் அவற்றில் முதன்மை யானவை. ஆடு, மாடு, நாய், பூனை, எலி போன்ற விலங்குகளும் பரவலாக வாழ்ந்த காலம் அது என்பதால், கொசுக்களின் உலகம் பெரியதாக இருந்தது.

நுண்ணுயிரிகளின் பெருக்கம் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பெரிய உயிரிகளின் உயிர் வாழ்க்கை சிக்கலாகிவிடும். நுண்ணுயிரிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தவளை, நத்தை, கரப்பான் போன்ற எண்ணற்ற பூச்சி இனங்கள் செயலாற்றுகின்றன. கொசுக்களும் ஈக்களும் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

நவீனச் சமூகக் கட்டமைப்பில் மேற்கண்ட உயிரினங்களில் பெரும்பாலானவை ஒழிக்கப்பட்டன. குறிப்பாக, ஈக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிள்ளைப்பூச்சி எனும் அருமையான வகையினம் ஏறத்தாழ அழிந்துவிட்டது.

 தவளைகள் காடுகளுக்குத் துரத்தப்பட்டன. காடுகளும் ஏரிகளும் நகர விரிவாக்கத்தாலும் தொழிற்சாலைகளாலும் அழிக்கப்பட்டன. நத்தைகளுக்கு வயல்களில்கூட வாழ்க்கை இல்லை. எல்லா வயல்களும் பூச்சிக்கொல்லி நஞ்சுக்களால் நிரப்பப்பட்டன. வெறும் ஐம்பது ஆண்டுகளில் இவ்வாறான முற்றுகைப் போர் சக உயிரினங்களின் மீது ஏவப்பட்டது.

இந்தப் போரில் கொசுக்கள் மட்டும் கூடுதல் ஆற்றலோடு போராடத் தொடங்கின. தவளைகள் இல்லாத நகரங்களில் கொசுக்கள் மனித ரத்தம் தேடுகின்றன. படைத்தவரின் விதிகளில் மிக முக்கியமானது, ‘எளியவை அழிக்கப்பட்டால் வலியவை மிகுந்துவிடும்’ என்பது.

பிள்ளைப் பூச்சிகளை அழிந்தால் கொசுக்கள் மிகுந்துவிடும் என்பதும் அந்த விதியின் விளைவுதான். ரசாயன வேளாண்மை, வண்ணத்துப்பூச்சிகளை எளிதில் அழித்தது. இப்போது வலிமையான பச்சைப் புழுக்கள் மிகுந்துவிட்டன. காடுகளைக் கைப்பற்றுவோர் மான்களை எளிதில் வேட்டையாடு கின்றனர். காட்டுப்பன்றிகளும் யானைகளும் இப்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

வீடுகளைச் சுற்றி இருந்த கழிவுநீரைச் சுத்தம் செய்த பல்வேறு உயிரினங்கள் ஒழிந்த நிலையில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.

 ஏனெனில், நவீனச் சமூகம் உயிரினங்களைக் குறைத்தது, கழிவுகளை அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் குப்பைகளும் சாக்கடைகளும் காட்சியளிக்கும் ‘சிங்கார’ நகரங்கள் உருவாகின. இந்தக் கழிவுகளின் வழியாகப் பெருகும் நுண்ணுயிரிகளைப் பற்றி நவீன மனிதர்கள் கவலைப்படவில்லை.

அவர்களது எண்ணமும் செயலும் கொசுக்களை ஒழிப்பதைப் பற்றியது. ஏனெனில், `சிக்கல்களுக்குக் காரணம் நான்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்வது கடினம். எல்லா சிக்கல்களுக்கும் பிறர்தான் காரணம் எனப் பழிபோடுவது சுகமானது’.

`தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற நமது மரபின் கொள்கையை உங்கள் முன் வைக்கிறேன். இப்போதைய நலக் குறைபாடுகளுக்குக் காரணம் கொசுக்கள் அல்ல... மனிதர்கள்.

பெருகும் கழிவுகளின் கிருமிகளை உணவாக உட்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளவை கொசுக்கள் என்பதை மறவாதீர்கள். கொசுக்கள் எல்லாம் சேர்ந்து கிருமிகளை உருவாக்கவில்லை; மனிதர்களுக்கு நோய் தரும் கிருமிகளை உணவாக்கும் கொசுக்கள், மனிதர்களையும் கடிப்பதால் நோய்த் தொற்று உருவாகிறது. இதுதான் நவீன அறிவியல் சொல்லும் செய்தி. இப்போது, ஒழிக்கப்பட வேண்டியவை கொசுக்களா... கழிவுகளா... எனச் சிந்தியுங்கள்.

ஒருவேளை, `கொசுக்களை எல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டால், கழிவுகளில் பெருகும் கோடானு கோடி கிருமிச் செறிவினைக் கட்டுப்படுத்தும் உயிரினம் எது?' என்ற கேள்விக்கு விடை வேண்டும். அப்போதும், நிறுவனங்களும் அவற்றைத் தாங்கும் மேதைகளும் ‘கிருமி கொல்லும் மருந்துகளை’ விற்பனைக்குக் கொண்டுவருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவர்களது அடுத்த இலக்கு அதுதான்.

கொசுக்கள் இல்லாத சூழலில் பல்லிகளும், தவளைகளும், வௌவால்களும் வேறு பல உயிரினங்களும் உணவின்றித் தவிக்கும். தாவரங்களின் மகரந்தச்சேர்க்கையில் கொசுக்கள் பணியாற்றுகின்றன. கொசுக்கள் இல்லை எனில், தாவரங்களின் காய்ப்பும் குறையும்.

எந்த ஓர் உயிரினத்துக்கு எதிராக நஞ்சு பயன்படுத்தப்பட்டாலும் அது மனிதர்களையும் சேர்த்தே அழிக்கும் என்பதை உணர வேண்டும். நாம் சக உயிரினங்களோடு கூடி வாழப் பிறந்தோம்.

உறங்கும்போது, கொசு வலைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிப்பது, இப்போதைய நெருக்கடிக்கான சிறந்த மாற்றாக அமையும். மாலை வேளைகளில் சாம்பிராணிப் புகையை அன்றாடம் பரவவிடுவது கொசுக்களின் வருகையைக் குறைக்க உதவும். காய்ந்த வேப்பிலைகள், தும்பை இலைகள் ஆகிய இரண்டையும் சிறு சட்டியில் இட்டு புகையவிட்டால், கொசுக்கள் வெளியேறும்.

கொசு வலைகளை, குடிசைத் தொழில் செய்வோரிடம் இருந்து வாங்குங்கள். கடந்த 20 ஆண்டுகளில் கொசுவலைகளின் விற்பனை குறைந்து, அந்தத் தொழிலில் இருந்து பல்லாயிரம் குடும்பங்கள் வெளியேறும் நிலை உருவானது. இப்போது சீனத் தயாரிப்புக் கொசு வலைகள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன. கொசு வலைகளை எல்லாம் இறக்குமதி செய்தால், கடைசியில் பிழைப்புக்காக மனிதர்களை ஏற்றுமதி செய்யவேண்டிவரும்.

வேப்பிலைகளையும் தும்பை இலைகளையும் நீங்களே தேடிச் செல்லுங்கள். குறிப்பாக, உங்கள் பிள்ளைகளுக்கு அந்தச் செடிகளை அறிமுகப்படுத்துங்கள்.

முக்கியமான வேண்டுகோள்... கொசுக்களைக் கொல்லும் மின்மட்டைகளை வீசி எறியுங்கள். உணவு எனும் ஒரே ஒரு காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும் சக உயிர்களைக் கொலை செய்யும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு கொலை செய்யவேண்டிய தேவையும் இயற்கையில் உருவாவது இல்லை.

- திரும்புவோம்...
[7/28, 09:37] Am Yoga: தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல் - இயற்கை மருத்துவம்

பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம்.

அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.

பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு  மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.

ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.

அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.🍁🍃🍂 இணையப்பகிர்வு🌾🍁🍂🌾
[7/28, 17:35] Am Yoga: தேன் ஒரு நல்ல இயற்கை உணவு என்று தெரிந்தும் எஙகே கலப்படம் இல்லாதது கிடைக்கும் என்றும் எப்படி உட்கொள்வது என்றும் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.  அத்துடன் எந்த புத்தகத்தில் உள்ளது என்றும் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சி. தேன் ஒரு நல்ல இயற்கை உணவு என்று தெரிந்தும் எஙகே கலப்படம் இல்லாதது கிடைக்கும் என்றும் எப்படி உட்கொள்வது என்றும் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.  அத்துடன் எந்த புத்தகத்த சுத்தமான தேனை அந்தந்த பகுதியில் உள்ள இயற்கை அங்காடியிலோ அல்லது தேன்பண்ணை அமைத்துள்ளவர்களிடமோ நேரில் வாங்கலாம் அய்யா.! தேனை சுக்குடன் சாப்பிட்டால் உடலில் உள்ள திரிதோசங்களும் சீராகும்.! தேனை கடுக்காயுடன் சாப்பிட்டால்  வாதநோய்கள் குணமாகும். தேனை பஞ்சமூலியுடன் சாப்பிட்டால் வசிய சக்தி உண்டாகும் தேனை நெல்லிக்காயுடன் உண்டால் இரத்தவிருத்தி உண்டாகும்  தேனை பேரீச்சம் பழத்தோடு உண்டால் ஆண்மைக்குறைவைபோக்கும் தேனை அத்திப்பழத்துடன் உண்டுவர கர்பப்பைக் கோளாறு அகலும்  தேனை எப்பொழுது வேண்டு மானாலும் சாப்பிடுவதற்கு முன்  உண்ணலாம் ஆனால் ,  மாலை 6 மணிக்கு மேல் உண்பது நல்லதல்ல தனியே உண்டால் உடல்சோர்வு நொடியில் நீங்கும் அளவுக்கு மிஞ்சினால் தேனும் நஞ்சுதான் உடலுழைப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை தேனை உண்ணலாம் மற்றவர்கள் 25 கிராமிற்கு அதிகம் சாப்பிடக்கூடாது.! நலம் பெருகட்டும் …amyoga.blogspot.in
[7/29, 09:58] Am Yoga: தெரிந்த ஆசனமும் தெரியாத இரகசியமும் 🍎 உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஐயிரத்திற்கும் மேற்பட்ட  மருத்துவ மனைகளில் யோகாசன வகுப்புகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள எட்டு மருத்துவ மனைகளும்   அடங்கும். உங்களால் இந்த எட்டு வகுப்புகளையும் ஒரு வார காலத்தில் எடுக்க முடியுமா? என்று; டில்லியை சேர்ந்த Abbott என்ற  மருந்து கம்பெனியிலிருந்து டாக்டர். ஷாலினி என்பவர் நம்மை தொடர்புக்கொண்டிருந்தார். சரியென்று யோகா தினத்தன்று புத்தேரியில் உள்ள CBH மருத்துவமனை அடுத்தநாள் ஹோலிகிராஸ் மருத்துவமனை என்று நாமும்  தொடர்ந்து எட்டுவகுப்புகளை எடுத்து நிறைவுசெய்தோம்🍎  பயிற்சியில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். பல மருத்து வமனையில்  ஏசி ஹாலில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது வேடிக்கையாக இருந்தது👀 இதுதான் உங்க இரகசியமா ,என்று பொருமை இழக்கவேண்டாம்.  இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன் அந்த மருந்துகம்பெனி மூலம் மலச்சிக்கலைப் போக்குவதற்கான ஆசனங்களை வடிவமைத்து அதற்கு🍅🍇 Constipasana   என்று  ஒரு பெயரை சூட்டியுள்ளார்கள். இதை மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் கற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு பரிந்துரைக்க செய்ய வேண்டும் என்பதே திட்டம்.🌶 நான் CBH மருத்துவமனையில் யோகாவை நிறைவு செய்ததும் ஒரு நர்ஸ் ஒடிவந்து கடைசியில் செய்தது என்ன ஆசனம் சார்? அதை செய்து முடித்ததும்  என் உடலெல்லாம் ஒருவித அதிர்வுகளை உணர்ந்தேன், உடலில் இரத்தம் ஒடுவது, இதயம் துடிப்பது என்று எல்லாம் துல்லியமாக தெரிந்தது அதுவும் இறுதியில் வயிற்றில் கைவைத்து படுத்திருந்த போது மன ஓட்டம் முற்றிலும் நின்று உடம்பில் புதிய  சக்தி தோன்றியதுபோல் இருந்தது. உண்மையில் இது என்ன, எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்🎿 நான்கூறினேன் அந்த ஆசனத்தின் பெயர் சாந்தியாசனம் உடலை தளர்த்தவும் அதனோடு தியான நிலையை  உணர்த்தவும் செய்யும் பயிற்சி என்றேன். உடனே,  நல்ல அனுபவம் சார் என்று  நன்றிபெருக்கோடு கூறினார். தினமும் பயிலுங்கள் என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.!   பல ஆண்டுகளாக யோகா செய்தேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பவர்கள்  உணர்வில்லா பிண்டங்கள்.! ஒரே நாளில்  உணர்வின் எல்லையை கண்ட இந்த மங்கையே யோகாசன இரகசியம் தெரிந்த ஞானி என்று எனக்குத் தோன்றியது⛷.amyogatrust.blogspot.in

Sunday, July 24, 2016

ஞானத்தை யாரிடம் கற்பது ?

”குரங்கு சாவதற்கு ஒரே ஒரு புண் போதும்முட்டாள் சாவதற்கு ஒரே ஒரு பிரச்சினை போதும்” என்று கிராமத்தில் ஒரு உவமான வாக்கியம் உண்டு.

காடுகளில் வாழும் குரங்குகள் பெரும்பாலும் நோய் வாய்ப்படுவதில்லை.
ஆனால் அவைகளுக்கு ஒரே ஒரு புண் வந்துவிட்டால் போதும். அதை நோண்டி நோண்டிப் பெரிதாக்கித் தன்னை அழித்துக் கொள்ளும்.

அதுபோலத்தான் மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்வதும்.

அந்தக் குரங்கு கொஞ்சம் பொறுமையாய் புண்ணை நோண்டாமல் இருந்தாலே போதும், புண் விரைவில் ஆறிவிடும்.

இதை குரங்குக்குச் சொன்னாலும் புரியாது. அது புண்ணை நோண்டுவதை நிறுத்தப்போவதில்லை.

ஆனால்,

மனிதன் புரிந்து கொள்ள முடியும் தானே?

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை மனதிற்குள் போட்டு நோண்டி நோண்டிப் அதைப் பெரிதாக்கிக் கொள்ளாமல் வாழமுடியும் தானே?

மனித மனம் வெறும் “மனம்” மட்டுமே… மனித மனம் குரங்கு அல்ல…
என்ற புரிந்து கொள்ளுதல்தான் ”ஞான உதயம்”.

இந்த புரிதல் எப்போதும் இயற்கையில் எதிர்பாராத தருணங்களில் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

இதில் புரிந்து கொள்வது எல்லாமே சீடர்கள். புரிய வைப்பவை எல்லாமே குரு. இந்த மொத்த நிகழ்வும் ”ஆன்மிகம்” எனப்படுகிறது, அவ்வளவுதான்.

தத்தாத்ரேயர் எனும் அவதூதர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, ஒரு நாட்டின் மன்னனைச் சந்தித்தார்.

தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக் கண்ட அரசன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார்? என்பதையும் கேட்டான்.

'எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்...' என்றார் தத்தாத்ரேயர்.

இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட  அரசன், "சுவாமி! ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே...' என்றான்.

அவனிடம், "பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று,

“சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு,

“தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு
ஆகியவையும்,

“நாட்டியக்காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப்பவன்,
சூரியன் ஆகியோரும் என் குருக்கள் ஆவர்...“ என்றார் தத்தாத்ரேயர்.

மன்னன் ஏதும் புரியாமல் நின்றதைக் கண்ட தத்தாத்ரேயர் இதற்கு விளக்கமளித்தார்...

"மன்னா! பொறுமையை பூமியிடம் கற்றேன்;

“தூய்மையை தண்ணீரிடம் தெரிந்து கொண்டேன்.

“பலருடன் பழகினாலும், பட்டும், படாமல் இருக்க வேண்டும் என்பதைக் காற்றிடம் படித்தேன்.

“எதிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதை தீ (நெருப்பு)உணர்த்தியது.

“பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டும் என்பதை ஆகாயம் - தெரிவித்தது.

"ஒரே சூரியன் இருந்தாலும் பல குடங்களில் உள்ள தண்ணீரில் பிரதிபலிப்பது போல மெய்ப்பொருள் ஒன்றாக இருந்தாலும் மனம் பலவாறாக சிந்திப்பதை உணர்ந்தேன்.

"வேடன் ஒருவன் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது.
இதில் இருந்துv பாசமே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தேன்.

"எங்கும் அலையாமல் தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கொள்வது போல, கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன்.

“பல்லாயிரம் நதிகளை ஏற்றுக்கொள்ளும் கடல் போல, எவ்வளவு துன்பம் வந்தாலும் ஏற்கும் பக்குவத்தை கடலிடம் படித்தேன்.

“பார்வையை சிதற விடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்துவதை விட்டில் பூச்சி கற்றுத் தந்தது.

"எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாயிருப்பதை தாயிடம் பால் குடிக்கும் குழந்தையிடம் கற்றேன்.

“பணிப்பெண் ஒருத்தி அரிசி புடைக்கும்போது வளையல்கள் உரசி ஒலி எழுப்பின; இரண்டு வளையல்களில் ஒன்றை அவள் கழற்றியதும், ஒலி அடங்கியது.

“இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் தேவையற்ற விவாதம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொண்டு, தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன்.

"பிங்களா என்ற நாட்டியக்காரி ஏற்கனவே பலரிடம் வருமானம் பார்த்தபின்,
இன்னும் யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருந்தாள்.
யாரும் வராததால், கிடைத்தது போதும் என்று உறங்கி விட்டாள்.
இதில் இருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்தியாகும் என்பதை புரிந்து கொண்டேன்.

"புற்களால் குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்த ஆண் யானை, அதன் மேல் ஆசை கொண்டு அதுவும் வீழ்ந்தது. இதில் இருந்து, பெண்ணாசையும்    துன்பத்துக்கு காரணம் என்பதை உணர்ந்தேன்... "
என்று ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமளித்தார்.

இதைக் கேட்ட அரசன், பூரண அமைதி அடைந்தான்.

தத்தாத்ரேயர் இயற்கையிடம் கற்ற இந்த உயர்ந்த பாடம் நம் எல்லாருக்குமே பொருந்தும் தானே..

தத்தாத்ரேயரின் ”அவதூதகீதை”  பகவான் ராமகிருஷ்ணர், ரமண மகரிஷி போன்ற பல மஹான்களால் சீடர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அத்வைத கிரந்தமாகும்.

நல்ல சீடனுக்கு எல்லாமே குருதான்.! இணையப்பகிர்வு

பழங்கள்

வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல் ;

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு , ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர்,  நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

முதலில் அவர் , அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த
சூரிய சக்தியை பயன்படுத்தினார்.
உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர்.
அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்;

"புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!!
 புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால  வெற்றிவிகிதம் 80%.

புற்றுநோயாளிகள் மரணத்தைத் தழுவக்கூடாது.புற்றுநோயாளிக்கான சிகிச்சை ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது-   அது நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

நீங்கள் நம்புவீர்களோ இல்லியோ, இதுவரை வழக்கமான சிகிச்சை முறையில் இறந்த நூற்றுக்கும் அதிகமான புற்று நோயாளிகளுக்கான நான் வருத்தப்படுகிறேன்.

பழங்கள் சாப்பிடும் முறை;;

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி,  வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.

நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி'  அதுவும் '*எப்போது'* சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?

பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!

பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும்
வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது!!

 பழங்கள் ஒரு முக்கியமான உணவு;

 சாதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.

பழத்துண்டு வயிற்றின் வழியே நேராகக் குடலுக்குள் செல்லத் தயாராக இருக்கிறது. ஆனால் பழத்திற்கு முன்னால் எடுத்துக்கொண்ட
'பிரட்' டினால் பழம் குடல் பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது.

இந்த சராசரி நேரத்தில் முழு உணவான பிரட் மற்றும் பழம் இரண்டும் அழுகி, புளித்து, அமிலமாக மாறுகிறது.

பழம் வயிற்றிலுள்ள உணவு மற்றும் செரிமானத்துக்கு உதவும் சாறுகளுடனும் சேரும் நிமிடத்தில்,  அந்த முழு நிறையான உணவு கெட்டுப் போக ஆரம்பிக்கிறது.

அதனால் தயவு செய்து பழங்களை *வெறும் வயிற்றில்* அல்லது #உணவுக்கு முன்# சாப்பிடுங்கள்.!!

 பலர் புகார் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

""ஒவ்வொரு முறை நான் தர்ப்பூசணி பழம்( Watermelon) எடுக்கும்போதெல்லாம் எனக்கு ஏப்பம் வருகிறது,   எப்போது நான் துரியன் பழம் சாப்பிட்டாலும் வயிறு ஊதிக் கொள்கிறது, எப்போது நான் வாழைப்பழம் சாப்பிட்டாலும், அவசரமாக கழிவறைக்கு ஓட வேண்டியிருக்கிறது, இன்னும் பல .. . . .

உண்மையில் நீங்கள் வெறும் வயிற்றில் பழம் எடுத்துக் கொண்டால், இந்த மாதிரி நிலைமை தோன்றாது!

உணவுக்குப் பின் பழம் எடுக்கும் போது, பழமானது மற்ற உணவுடன் சேர்ந்து அழுகுவதால் , வாயு உற்பத்தியாகி வயிறு ஊதக் காரணமாகிறது!!

நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை யெல்லாமே, வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால்,
 ** நடக்காமல் தடுக்கப்படும்**

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களெல்லாம் அமிலத்தன்மையுடையவை  என்பதெல்லாம் உண்மையில்லை! ஏனென்றால் Dr. Herbert Shelton என்பவர் இந்த. வகையில் ஆராய்ச்சிகள் செய்து. கூறியதன்படி,எல்லாப் பழங்களும், நமது உடலுக்குள் சென்றதும் காரத்தன்மையுடையவையாகின்றன.

சரியான முறையில் பழங்கள் சாப்பிடும் வகையை முழுவதுமாக அறிந்து கொண்டால், நமக்கு, அழகு,நீண்ட ஆயுள்,உடல் ஆரோக்கியம், உடலுக்குத் தேவையான சக்தி, மகிழ்ச்சி, மற்றும் சரியான எடை இவற்றைப் பெறும் **ரகசியம்** கிடைத்து விடும்.

 3)நீங்கள் பழச்சாறு அருந்தும் தேவை ஏற்படும்போது, **புதிதான** பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்**வேண்டாம்**.

சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.

சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப் படுகின்றன.உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது.

ஆனால் பழச்சாறு சாறு அருந்துவதை விட , பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும்.ஏனென்றால், நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின் உள்ளே அனுப்பவும்.

உங்கள் உடல் உறுப்பக்களைச் சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும். ஒரு 3- நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

அந்த 3 நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த டயட்டின் முடிவு நீங்களே ஆச்சரியப் படும்படி, நீங்கள் மிகவும் அழகாய், வனப்புடன் தோற்றமளிப்பதாய் உங்கள் ஃபிரண்ட்ஸ் கூறும்போது உணர்வீர்கள்.

 கிவி பழம்;

 இது ஒரு சிறிய ஆனால் வலிமை மிகுந்த பழம்.
இப்பழம் பொட்டாசியம், மக்னீஷியம், விட்டமின்- ஈ. மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஓர் நல்ல பழம்.
 ஆரஞ்சுப் பழத்தை விட விட்டமின்-சி சத்து கிவி பழத்தில் இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.

ஆப்பிள்;
 ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என எடுத்துக் கொண்டால். நோயின்றி வாழலாம் என்று சொல்வது உண்மையே!

ஆப்பிளில் விட்டமின்-சி சத்து குறைவாக இருப்பினும்,அதில் உள்ள antioxidants ,flavonoids போன்றவை இந்த விட்டமின் - சி சத்துக்களை மேம்படுத்துவதால், பெருங்குடல் புற்று நோய்,மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்களைக் குறைக்கிறது!

ஸ்ட்ராபெர்ரி ;
பாதுகாப்பு தரும் பழம்.
இந்தப் பழத்தில் மற்ற எல்லாப் பழங்களையும் விட. மொத்த Antioxidant சக்தி இருப்பதால்,இது நம் உடலில் சுதந்திரமாய் கட்டுப்பாடற்று பல்கிப் பெருகும் அடிப்படைக் கூறுகளால் ( free radicals)   இரத்த நாளங்களில் அடைப்பு, புற்று நோய்க் காரணிகள் பெருகுதல் முதலியவை ஏற்படாமல்  நம்மைப் பாதுகாக்கிறது.

ஆரஞ்சு;
இனிப்பான மருந்து.

ஒரு நாளைக்கு 2-4 ஆரஞ்சு எடுப்பது ஜலதோஷத்தை விலக்கும்.கொழுப்பைக் குறைக்க உதவும்.மேலும் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதோடு, கற்கள் வராமலும் தடுக்கும்.
அதனுடன் பெருங்குடல் புற்றுநோயின் ஆபத்தினைக் குறைக்கிறது.

தர்பூசணி;

மிகவும் குளிர்ச்சியான ஒரு தாகம் தீர்ப்பான்.
92% தண்ணீர்ச் சத்துக்களையுடையது.
மேலும் இந்தப் பழத்தில் மாபெரும் அளவில் Glutathione இருப்பதால்,அது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது lycopene. என்னும் புற்று நோயை எதிர்த்துப் போராடும் ஒரு oxidant இன் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.
தர்ப்பூசணியில் உள்ள மற்ற சத்துக்கள் விட்டமின் -சி , பொட்டாசியம் ஆகியவை.

 கொய்யா& பப்பாளி

இவை இரண்டுமே விட்டமின் - சி நிறைந்தது.உயர் விட்டமின்-சி கொண்ட பழங்களைத்  தேர்வு செய்தால் சந்தேகத்துக்கிடமின்றி வெற்றி பெறும் தகுதியுடையவை.
கொய்யாப்பழம் நார்ச்சத்து அபரிமிதமாக உள்ளதால், மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளிப்பழம் Carotene சத்துக்கள் நிறைந்தது எனவே கண்களுக்கு மிகவும் நல்லது.
##################
உணவிற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீர்  அல்லது பானங்கள் குடிப்பது =  புற்று நோய்.

ஓர் இதயநோய் நிபுணர் சொல்வது;;
 இந்த தகவலைப் பெறும் ஒவ்வொரு நபரும், 10 நபர்களுக்காவது இத்தகவலை அனுப்பினால்,நிச்சயமாய் ஒரு உயிரையாவது காப்பாற்றலாம்.! இணையப்பகிர்வு

Friday, July 22, 2016

உடல் சுத்திகரிப்பு

ஐந்தே நாட்களில் உங்களின் உட்புற உடலை சுத்தம் செய்ய....
முதல் நாள் எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
இரண்டாவது நாள், நெல்லிச் சாற்றை அருந்தலாம்.
மூன்றாவது நாள், சாத்துகுடிச் சாற்றைக் குடிக்கலாம்.
நான்காவது நாள், திராட்சை சாற்றைக் குடிக்க வேண்டும்.
ஐந்தாவது நாள், அன்னாசிப்பழ சாற்றை அருந்தி, டயட்டை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக இந்த ஐந்து நாட்களுக்கு இந்த ஐந்து சாறுகளை அருந்துவதே டீடாக்ஸ் டிரிங்க் டயட்.
பலன்கள்: கல்லீரல் சுத்தமாகும். சிட்ரஸ் வகை பழங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை முற்றிலுமாக நீக்கிவிடும். கெட்ட கொழுப்பு நீங்கும். உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வு. மாதத்தில் ஒரு முறை இந்த டீடாக்ஸ் டிரிங்க் டயட்டைப் பின்பற்றலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம். ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் கிடைக்கும்.! இணையப்பகிர்வு

சிறுவரகளின் ஜலதோஷம்

'பனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க..
 குழந்தைகளின் இருமலுக்கு..
சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும்.


மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம்.
பல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது!

10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும்.

இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும். இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும்.! இணையப்பகிர்வு

தேவியும் - சாந்தியும்

 இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் இத்தனை வளர்ந்த காலத்திலும் சிலர் உடலை வளைத்து நெளித்து சுருட்டி யோகாசனம் செய்வதைப் பார்க்கும்போது பலருக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், அப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வாடிக்கையாக சக்கரைக்கு மூன்று இரத்த அழுத்தத்திற்கு இரண்டு கொழுப்பிற்கு ஒன்று தைராய்டிற்கு ஒன்று என்று பல மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு இதில் சக்கரை இருக்கு இதில் கொழுப்பிருக்கு இதில் உப்பிருக்கு என்று பல முக்கிய உணவுகளை தவிர்த்து  குற்றுயிராக வாழும்,  நவீன  மருத்துவம் என்று கூறப்படும் அலோபதி மருத்துவத்தின் பாதுகாப்பில் வாழும் நவயுக ஞானிகள் அனைவருக்கும் இக்கட்டுரை சமர்ப்பணம்.!  வினைப்பயன் இருப்பின் இதிலிருந்து தெளிவுபெறுங்கள்.!  இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உணவுகளையும் மனிதன் சாப்பிடலாம்.   உடல் அதன் சக்தியை உறிஞ்சி சக்கையை வெளியேற்றிவிடும்.மனிதனால் உருவாக்கப்பட்ட  அத்தனை நோயையும் உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும். நம்புங்கள் இதுதான் உண்மை.!  தேவை பொறுமையும்  விடமுயற்சியும் தான்.!  அப்படி விடா முயற்சியால் தனது பிணியை வென்ற  இரண்டு சாதனை பெண்களை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.! முதலாமாணவர் தேவி  இவர் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் தனது 23 வது வயதில் இரண்டாவது பிரசவத்தின் போது ஏற்ப்பட்ட கடுமையான உடல் அதிர்ச்சியின் காரணமாக நடக்கவும் எழுந்து நேராக நிற்கவும் முடியாமல்  அவதிப்பட்டதோடு அலோபதி மருத்துவத்தால் என்ன வியாதி என்றுகூட கண்டறிந்து கூறமுடியாமல் ஒருவருடம்  அலைக்கப்பட்டு  இறுதியில் எங்களால் முடியாது யோகாசனம், பிசியோதெரபி போன்ற எதிலாவது தீர்வு கிடைக்கலாம் என்று கைவிடப்பட்ட தேவியை பத்துநாட்களிலேயே அவரின் விடாமுயற்சியுடன் கூடிய யோகாசனப்பயிற்சி    50 சதவீதம் குணப்படுத்தியது.! முதலில் அவரால் ஒருவரின் துணையில்லாமல் நடக்கவோ, உட்காரவோ கூட முடியாது. கழிவறையில் கூட ஒருவர் அருகில் இருந்து பிடித்துக் கொள்ள வேண்டும். பத்துநாள் பயிற்சி மற்றும் வல்லாரைக் கீரையின் உதவியால்  தானே நடக்கவும் தனது குழந்தையை எடுத்துக்கொண்டு மாடிபடியில் ஏறி இறங்கும் அளவிற்கு தேறிவிட்டார். இப்பொழுது மூன்றுவருடம் கடந்தநிலையில் 90 சதவீதம் குணமடைந்து  ஆரோக்கியமாக உள்ளார்.! இந்தப் பெண்ணுக்கு பயிற்சி கொடுத்தது என்னை எனக்கே உணர்த்திய அற்புத நிகழ்வு.! இரண்டாமாணவர் சாந்தி  இவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை.  என்ன அய்யா , ஒருவேளை தூரதிருஷ்டி மூலம் குணமாக்கி விட்டீர்களா?. என்று கேட்டுவிடாதீர்கள் அப்படி இல்லை சமீபத்தில் ஒருநாள் தூர்தர்சன் <பொதிகை> தொலைக்காட்சியில் வட்டு எறிதலில் ஆசிய சாம்பியனாக  முடிசூடி முதலிடம் பிடித்து வெற்றிப்பெற்ற  S.சாந்தி அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அதில் அவர் தான்  மீண்டும் விளையாட வந்ததே   பெரிய விசயம் என்றும் தனது திருமணத்திற்கு பின் கடுமையான முதுகுத்தண்டுவட பாதிப்பு மற்றும்  இருதய வால்வு சுருக்கம் போன்ற  பிரச்சனைகள் அதிக அளவில் இருந்ததால்  டாக்டர்கள் வட்டைக்கையால் கூட தொடக்கூடாது வலி அதிகமாகிவிடும், தொடர்ந்து மருந்து மாத்திரைகள்  எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்க வேண்டும் என்றுகூறிவிட்டனர்.  ஆனால், எனது பயிற்சியாளர் பெருமாள் இராமசாமி அவர்கள் தான் அதெல்லாம் பயப்படாதே சில யோகாசனப் பயிற்சிகள் இருக்கிறது என்று கூறி பத்துவிதமான யோகாசனப் பயிற்சிகளையும் எங்களது விளையாட்டு உடற்பயிற்சியோடு  சேர்த்து வழங்கி வந்தார் அதனால் எனது உடல் வலி மறைந்தது, தண்டுவடக் கோளாறும் இதயவால்வு பிரச்சனையும் என்னை ஒன்றும் செய்யவில்லை அதோடு அவர் அடிக்கடி மனம்தான் எல்லாம் நீ மனது  வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பார் … அந்த வார்த்தைகளும் பயிற்சிகளும் தான் என்னை இன்றைக்கு ஆசிய அளவில் தங்கம் வெல்ல வைத்துள்ளது என்றார் அந்த தங்கமங்கை.!  இதுபோன்ற நிகழ்வுகள் அனைத்தும் இயற்கையின் ஆற்றலை இடைவிடாது மனிதனிடம் பறைசாற்றிக் கொண்டே உள்ளது.! ஆனாலும், தீவினைப்பயனால் மனிதன் தொடர்ந்து  அனைத்தையும் வேடிக்கையாக கடந்துகொண்டே திங்க வேண்டியதை எல்லாம் ஒதுக்கிவிட்டு வாடிக்கையாக இரசாயண மருந்துகளை தின்றுக் கொண்டிருக்கிறான்…! நன்மதியாளர்கள் நலம் பெறட்டும் … amyogatrust.blogspot.in AUM HERBALS Mobile:9629368389

Thursday, July 21, 2016

சர்வ பிணித் தீர்வு

பரஞ்சோதி மகான் வழங்கும் பிணிநீக்கும் இரகசியம்   உடம்பில் நோய் ஏற்ப்பட்டால் மல்லாந்துப் படுத்து இடது கைமேல் வலது கையும் வலது கால்மேல் இடது காலும் வைத்துப் படுத்து புருவமத்தியில் உள்ள சுழுமுனை நாடியில் அரைமணி நேரம் நினைவு வைத்தால் உடனே தூக்கம் வந்து நோய்தீரும்.! இரவு ஒன்பது மணிமுதல் அதிகாலை நான்கரை மணிவரை தூங்கி எழுந்தால் ஒருவித வியாதியும் இல்லை மிக சுறுசுறுப்பு உண்டாகும்.! பிற்பகல் 4 மணிக்குமேல் எந்த தொழிற்சாலையிலும் வேலை இல்லாமலும் அதிக வெளிச்சமுள்ள விளக்குகள் இரவில் இல்லாமலும் இருந்தால் நோய்களே ஏற்படா.! வியாதி இல்லாத சிறுகுழந்தைகள் பசியில்லாது அழுது தூங்காமல் இருந்தால் , காற்றுவசதி இல்லை என்பதேயாகும். உடனே நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில்  தூங்கவைத்தால் நல்லது.! -நான் கடவுள், பரஞ்சோதி மகான்.! amyogatrustblogspot.com

Wednesday, July 20, 2016

உடல் வலி

இயற்கை வழியில் உடல்வலியை குணமாக்கிக் கொள்ளுங்கள்  உடல் வலியில் இரண்டு வகைகள்  உண்டு.ஒன்று கை கால் , மூட்டு, இடுப்பு,கழுத்து பகுதியில் ஏற்படும் வலி இது எலும்பு அடர்த்திக்குறைவு, எலும்பு பிசகிஇருத்தல், இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் கொழுப்புப்படலம் விலகியோ நீர்த்தோ போயிருத்தல் போன்ற காரணங்களால் ஏற்படும். இன்னொன்று உடல் தசைகளுக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைக்காமல் அல்லது சரியான ஊட்டச்சத்து உடல் உறுப்புகளுக்கு கிடைக்காமல் இருந்தாலோ, உள்ளுறுப்புகளின் இயக்கத்திறன் குன்றி இருந்தாலே உடல்வலி  வலி ஏற்படும். இதுபோன்ற திடீரென்று அதிகதூரம் நடத்தல், அதிக பணிகளை செய்தல், அதிகதூக்கம், தூக்கமின்மை,சக்கரைவியாதி, உடற்பயிற்சி, யோகாசனப் பயிற்சிகளை அதிகமாக செய்தால் போன்ற காரணங்களாலும் உடல்வலி ஏற்படும்.! *அனைத்து வலிகளையும் போக்க சில எளிய தீர்வுகள்

1.தினமும் காலையில் குறைந்த ஆடையுடன் சூரிய ஒளி உடலில் படுமாறு பதினைந்து நிமிடம் எளிய யோகாசனங்களை செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது முன், பின், பாக்கவாட்டில் வளைதல், நேர்நிலை, உடல் எடையை தாங்கிநிற்றல் போன்ற வகையான ஆசனங்களை செய்யுங்கள்.! <கடுமையான வலி இருப்பவர்கள் யோகாசன ஆசிரியர்களிடம்  நேரில் கற்பது நல்லது>

2.தினமும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட இரசாயண கலப்பில்லாத சத்துமாவு 50 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி காலை 9 மணிக்குள் தினமும் குடித்துவாருங்கள்.!  <சக்கரை வியாதி இருப்பவர்கள் உட்பட அனைவரும் இதில் கருப்பட்டி, பணங்கற்கண்டு, தேன் அல்லது சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்> அதுபோலவே தினமும் கால்முறி தேங்காவை சமைக்காமல் சாப்பிடுவது மிகநல்லது.! 3.தினமும் அதிகாலையிலேயே காலையில் குளித்துவிடுங்கள். <குளிப்பதற்கு இயற்கையான மூலிகை, பயத்தமாவு கலவையை மட்டும் பயன்படுத்துங்கள்.! போதும் இந்த மூன்று விசயங்களை மட்டும் தொடர்ந்து ஒருமாதம் கடைப்பிடித்துப் பாருங்கள் எத்தகைய உடல் வலியும் பஞ்சாய் பறந்துவிடும்.!  நலம் பெருகட்டும் …amyogatrustblogspot.com AUM HERBALS Mobile:9629368389

Monday, July 18, 2016

ஹீலர் ரங்கராஜின்

 ஹீலர்ரங்கராஜின் திருமூலர்,திருவள்ளுவர் வழியில் ஆரோக்கியம் நிகழ்வு குமரிமாவட்டம் தக்கலையில்  கடந்த ஞாயிறன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.! முதலில்  ஏதோ போய்வருவோம் என்று சிரத்தையில்லாமல் தான் போனேன் என்மகன் வேறு ஏம்ப்பா, சிலநேரம் நீங்க அரைமணிநேரம் பேசினாலே எனக்கு அழுகையா வருது இதுல எட்டு மணிநேரம் எப்படிப்பா? என்று கண்ணில்  கிளிசரினைப் போட்டான்.! ஆரம்பத்துல ஒருநாள் அனடாமிக் தெரபி பாஸ்கரின் நிகழ்விற்கு போய் பாதியிலேயே தலைதெறிக்க ஓடிவந்தது வேறு நினைவிற்கு வந்தது. ரங்கராஜ் அய்யா பாஸ்கரின்  குரு என்று  வேறு கூறுகிறார்கள். சரிதான் போய்ப்பார்ப்போம் ஆனால், தலைவலிச்சா ஓடிவந்து சுக்குக்கசாயம் வச்சிக்குடிக்க வீடுபக்கமாய் இருந்தாலும் பரவாயில்லை. 30 கிலோ தள்ளியல்லாவா இருக்கிறது? என்று யோசித்தவாறே ஒருவழியா  நிகழ்விற்கு போய்ச்சேர்ந்தோம்.!  சரியாக பத்துமணிக்கு நிகழ்வு இரண்டு கெட்டவார்த்தைகளுடன் இனிதே ஆரம்பித்தது,  ஏன் சம்மணமிட்டு சாப்பிடவேண்டும்? உணவை எப்படி சாப்பிட வேண்டும்? ஏதற்காக முன்னோர்கள்  கைகளில் நீரைவிட்டு சுத்தி   பிறகு கைகளில் உள்ள நீரை உறிந்து குடித்துவிட்டு சாப்பிட்டார்கள்? சமையலரை ஒரு கொலைக்களம் எப்படி?  பிராத்தனையின் அவசியம் உணவுக்குழாய், மூச்சுக்குழாய், உணவு ஜீரணமாகும் முறை என்று ஒரு முழுமையான மெய்ஞ்ஞான விஞ்ஞான வகுப்பையே நடத்திவிட்டார். அதுவும் பகவத்கீதையின் சமஸ்கிருதமும் திருவள்ளுவரின் தமிழும் விஞ்ஞான ஆங்கிலமும்  அவரின்   வார்த்தைகளில் பொங்கிப் பிரவாகமெடுத்து ஓடி நம் நாடிநரம்பையெல்லாம் நிறைத்து விடுகிறது …  மனிதனுக்கு ஆயுள் இருப்பது போலவே பிணத்திற்கும் ஆறு மணிநேரம் ஆயுள் உள்ளது,  அந்த நேரத்திற்கு பிறகு அது அழுக ஆரம்பித்துவிடும். பிரிசரில் வைத்தால் அழுகாமல் இருக்காது அழுகும். ஆனால், நாற்றம் தெரியாது அவ்வளவுதான்.! பிரிசரில் வைத்துள்ள பிணத்தை ரெண்டுநாள் கழித்தெடுத்து கண், சிறுநீரகம் என்று எடுத்து அடுத்த உடலில்  வைக்கமுடியாது.! உயிர்போன மனித உடலைப் பார்த்துவந்தால் உடனே குளிக்க வேண்டும் அல்லது இறந்த உடலில் இருந்து வெளியேறிய காற்று நம் உடலை கெடுக்கும் என்பது உண்மை. ஆனால், நாம் பல மணிநேரங்களுக்கு முன்பு வெட்டிய ஆடு,மாடு, கோழி பலநாட்களாக ஐஸில் வைத்தமீன்கள் எல்லாவற்றையும் சப்புக்கொட்டி சாப்பிடுகிறோம். அந்த அழுகிய பிணங்கள் நமது உடம்பை வளர்க்குமா, குலைக்குமா? செத்த மனிதனின் உடலைப்பார்த்தால் குளிக்கவேண்டும், செத்தவீட்டிற்கு பதினாறு நாள் தீட்டு ஓராண்டு விசேசம் இல்லை. ஆனால், செத்து அழுகிய பிணங்களை சமைத்து வீட்டில் விசேசம் செய்கிறோமே.! இதுசரியா, ஆரோக்கியமானதா? சமைக்காத அரைக்காத  வெட்டாத உணவுப் பண்டங்களை மட்டுமே பிரிசரில் வைத்து பயன்படுத்த வேண்டும்.  ஆனால், இட்லிமாவை நான்கு நாள் பிரிசரில் வைத்து பயன்படுத்துவது முறையா? என்று பல்வேறு அர்த்தமுள்ள வினாக்களை எழுப்பிவிட்டுவிட்டு … இப்ப என்ன செய்யலாமுங்க? என்று மக்களை சிந்திக்கத் தூண்டுகிறார்.!  அதோடு அரிசிச்சோறு மிக நல்லது மூன்று வேளையும் சாப்பிடுங்க, பழம், கடலை, இனிப்பு போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு உடனே உணவையும் சாப்பிடலாம். ஆனால், சாப்பிட்ட உடன் இவற்றை சாப்பிடக்கூடாது … தினமும் இரவில் நிறையநீர்விட்டு காய்ச்சி பசும்பால் குடிங்க நான் அப்படி சாப்பிடுவதால்தான் எனக்கு 51 வயதில் பல் முளைக்குது  என்று தன்பல்லைக் காட்ட அதை ஒரு சிறுமி அருகில் சென்றுப் பார்த்து ஆமா  என்று ஆச்சரியமாய் தலையசைக்க  கூட்டத்தில் ஒருவர் இதென்ன அதிசயம் என் மனைவிக்கு 60 வயசுல இப்ப முன்பு விழுந்தபல் முளைச்சிட்டு இருக்கு என்று ஒரேப்போடாகப் போட, அப்ப ஐயாயிரம் ,பத்தாயிரம்னு செலவுப் கேப் போட்டது பல்லைப் பிடுங்கி செயற்கைப் பல் வைத்ததெல்லாம் வீண்தானா? என்று பலரும் வாயைப்பிளந்தனர்.!   நிறைவாக விளக்கேற்றுவதில் உள்ள  நன்மைகளையும் அவசியத்தையும் எத்தனை திரிபோட வேண்டும் என்பதையும் விளக்கேற்றும் நேரத்தில் சரியாகக் கூறி பிரியாவிடை கொடுத்துவிட்டார்.! மிக அற்புதமான வகுப்பு.!  இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவனான  என் மகனிடம்  கேட்டேன்  How was it? he said it  was very usefull and i  gathered sam new.!  அதானே வேண்டும் நமக்கும்.! இந்நிகழ்வில் சில  முரண்ப்பட்ட விசயங்களையும்  கூறி உள்ளார். அதாவது முளைகட்டிய தானியங்களை  நம்மால் ஜீரணிக்க முடியாது என்கிறார் அதுபோலவே திருமூலர் நூலில் உள்ளதாக ஒரு புதிய பிராணாயாமப் பயிற்சியை அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார்.! அதை அனைவரும் தினமும் 30 நிமிடம் செய்தால் எல்லா வியாதியும் குணமாகும் என்கிறார்.! ஆனால், அது கொஞ்சம் முரண்பட்ட முறையாக இருப்பதால் அனைவரும் செய்ய சிரமப்பட்டனர்.! இதுபோன்ற ஒரு மூச்சிப்பயிற்சியை சிறுவயதில் செய்த ஞாபகம் உள்ளது. ஆனால், இதில் கொஞ்சம் மாற்றம்.! அதுவும் சரிதான்.! ஒரேநாளில் ஒம்பது விசயத்தை முழுமையாக கற்றுக்கொள்ள முடியாது.! அப்படி முடியுமானால்  எதற்கு ஒவ்வெரு ஊரிலும் நம்மைப் போன்ற நாலு யோகா ஆசான்கள் ஒரே வியாதியை குணப்படுத்த பல மாதங்கள் வகுப்பெடுத்துக்கிட்டு இருக்கான்.!   ஆனாலும், இவர்கூறிய பயிற்சியை நாம் இரண்டு நாட்களாக செய்து வருகிறோம்.! ஒருவேளை இன்னும் சிலநாளில்  திருமூலரானாலும் ஆகிவிடுவேன்.!  நலம் பெருகட்டும் … ஹீலர் ரங்கராஜ் அவர்களின்  திருமூலர், திருவள்ளுவர் வழியில் ஆச்சாரம் ஆரோக்கியம் DVD தேவைப்படுவோர் இந்த கைப்பேசி எண்ணில் தொடர்புக்கொள்ளுங்கள் 9894106291,9443306291. helar rengaraj  youtube என்று தேடினால் வீடியோவிலும் வந்து ஆரோக்கியத்தை போதிப்பார்! யாம்ப்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் … amyogatrustblogspot.com

Sunday, July 17, 2016

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

*சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448.*
 🌳அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100

ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, *சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.*

🌵 *உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.*

🐲 *கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்*🐾

☘குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

🐌 *கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்*🦂

🌲குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

🍁குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

🐉 *கிருமிகள் உருவாகக் காரணம்*🐛

🐞கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

🌴அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

🎋நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

👁  *கண் நோய்*:

🍃கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

🍀 *பொதுக் காரணங்கள்* :

🐹வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன.
*அவை* : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

🐰 *சிறப்புக் காரணம்* :

👶🏻சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

🌿 *காசநோய்* :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

🌿 *வெள்ளெழுத்து*

🍃கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

🍁முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

🍀கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

😨 *தலைநோய்* :

🍒உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

🍋தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

🍍ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

😨 *கபால நோயின் வகை* :

🕷வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

🍎தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

🍊 *அம்மை நோய்* :

🍏அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

🍇மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

🌽அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

🍒 *இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.*🐉

🎃 அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

🌿 *சித்த மருத்துவம்* கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி
2. பாலம்மை

3. மிளகம்மை
4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை
6. உப்புதரியம்மை

7. கடுகம்மை
8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை
10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை
12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை
14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
🌿🌿🌿 இணையப்பகிர்வு

Saturday, July 16, 2016

Problem in attaining Puberty.

பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா  ?


பெ ரும்பாலும், இந்த காலத்துல பெண்குழந்தைங்க பத்து வயசிலயே ‘பெரியவ’ளாகிடுதுங்க. போஷாக்கான சாப்பாடுனு ஆரம்பிச்சு இதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதேநேரம், பதினாறு வயசு ஆகியும் ‘பெரியவ’ளாகாம இருக்கறவங்களும் உண்டு.

பதினாறு வயசை தாண்டியும் அந்தப் பொண்ணு வயசுக்கு வரலைன்னா, ஏதோ பிரச்னைனு அர்த்தம். கைவைத்தியமா சில விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, அதுக்கும் பலன் கிடைக்கலேன்னா உடனே மகப்பேறு டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறதுதான் உசிதம்.

கைவைத்தியம் என்னனு சொல்றேன், கேட்டுக்குங்க!
பெண்குழந்தை வளர்த்தியில்லாம போய், அதன் காரணமா பருவம் அடையாம இருந்தா, வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. உடனே கைமேல பலன் கிடைக்கும்.

வெந்தய லேகியம் எப்படி பண்றதுனு கேக்கறீங்களா?

ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, ராத்திரி கொஞ்சம் தண்ணில ஊறப் போட்டுடுங்க. மறுநாள் காலைல, ஊறின அந்த வெந்தயத்தை அம்மில (அம்மி இல்லேனா மிக்ஸில அரைச்சுக்கலாம். பாதகமில்லே. ஆனா, கூடுமானவரை மிக்ஸியை தவிர்க்கறது நல்லது. மருந்து இடிக்கற சின்ன சைஸ் கல்லுரலை இப்பல்லாம் வண்டில போட்டுக்கிட்டு வந்து விக்கறாங்களே... அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்களேன்) அரைச்சு, விழுதா எடுத்துக்கணும். இந்த விழுது எவ்வளவு இருக்கோ... அதே எடையளவுக்கு வெண்ணெயும், தித்திப்புக்கு தகுந்த மாதிரி கல்கண்டும் சேர்த்துப் போட்டு வாணலில வச்சு கிளறுங்க. இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் சேர்த்துக்கணும்.
வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்துல லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்க. லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தா, சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
வத்தலும் தொத்தலுமா இருக்கற பெரியவங்ககூட இந்த வெந்தய லேகியத்தை சாப்பிடலாம். உடம்பு பூரிக்கும்! இணையப்பகிர்வு

Thursday, July 14, 2016

மருத்திவக் குறி்ப்புகள்

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

Wednesday, July 13, 2016

God...

HEART of INDIA   God is only one and not two. Different people call Him by different names, some as Allah, some as God and others as Krisna,Shiva,and Brahman. It is like the water in a lake. some as drink  it at one place and call it jal, others at another plece and call it pani, and still others  at a third place and call it water. The Hindu call it jal, the Christians  water,and the Mussulmans pani But it is one and the same thing.Opinions are but paths. Each religion is only a path leading to God, as rivers come from different  directions and ultimately become one in the one ocean.! - THE Message of Ramakrishna

இலந்தை

தினசரி மூலிகையில் இன்று 12.07.2016. செவ்வாய்க் கிழமை

இலந்தை   -    பயன்கள்

1. மூலிகையின் பெயர் :-
இலந்தை.

2. தாவரப்பெயர் :-
 ZIZYPHUS JUJUBA.

3. தாவரக்குடும்பம் :-
RHAMANACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :-
இலை, பட்டை. வேர்பட்டை பழம்ஆகியவை

5. வளரியல்பு :-

இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.

 வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.

 தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.

இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது.

அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை.

இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :-

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.

இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள்.

 தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்

மரு.கிருஷ்ணன்

Tuesday, July 12, 2016

எலும்புத் தேய்மானம்

எலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்!

வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.

எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.

கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.

இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.

எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.

எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.

இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.

எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.

பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.

எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.

ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

ரெசிபி

பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.

ஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

பிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.

டயட்

பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.

சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.

அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.

அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.

மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.

ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.

உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.

இணையப்பகிர்வு

Friday, July 8, 2016

கை வைத்தியம்

எல்லாத்துக்கும் டாக்டரா, கைவசம் இருக்குது வைத்தியம்..!!!
     
எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:

* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

* உலர் திராட்சைப் பழத்தை, வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, காலையில் அருந்தினால், மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும்.

* வல்லாரைக் கீரையை நிழலில் காய வைத்து, பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால், நினைவாற்றல் பெருகும்
.
* வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி, நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால், முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடியுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால், பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

* எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால், உஷ்ணம் குறையும்.

* நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக, வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து, குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* பூச்சி கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விஷம் பரவாது. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

* தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்; தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்க சுவையாக இருக்கும்.

* கொப்பரைத் தேங்காயை கசகசா வுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

* பச்சை கொத்தமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

* வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் பூசணிக்காய் கட்டுப்படுத்தும்.

* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால், இடுப்பு வலி நீங்கும்
.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து, கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.! -இணையப்பகிர்வு

Thursday, July 7, 2016

இரத்தம் அழுத்தம் குறைக்க கைகண்ட மருந்து

சீரகம் - 200 கிராம்
அமுக்கரா கிழங்கு - 100 கிராம்
கொத்தமல்லி - 100 கிராம்
ஏல அரிசி - 100 கிராம்
சுக்கு - 35 கிராம்
மிளகு - 35 கிராம்
திப்பிலி - 35 கிராம்
கற்கண்டு - 1210 கிராம்

அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித்தனியாக சூரணம் செய்து ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

அளவு : 1/2 தேக்கரண்டி

தீரும் நோய்கள் : இரத்த அழுத்தம் (BP), கொழுப்புகளை கரைக்கும், இரத்த ஓட்டம் சீராகும், இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள்

அனுபானம் : 1/2 தேக்கரண்டி மேலுள்ள சூரணம்,
1/2 எலுமிச்சை பழம் சாறு,
1/2 டம்பளர் தண்ணீர்,
2 தேக்கரண்டி தேன்

அனைத்தையும் ஒன்றாங்க கலந்து காலை / மாலை குடிக்க வேண்டும்.

இதில் சிருங்கி பற்பம் கிடைத்தால் வேளைக்கு 200 மில்லி கிராம் கலந்து கொடுக்க இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக அற்புதமாக வேலை செய்யும். இந்த மருந்தை எடுப்பவர்கள் படிப்படியாக இரத்த அழுத்தத்திற்காக எடுக்கப்படும் மாத்திரை கைவிட்டு விடலாம்.

இரத்த அழுத்தத்திற்கு குருநாதர் கொடுக்கும் முறை.

மேலும் பயணிப்போம். . .