[7/26, 13:42] Am Yoga: பிள்ளைகள் படுத்தும்பாடு பதின்பருவத்தில் பிள்ளைகளின் முக்கிய நோக்கமும் உழைப்பும் கல்விக்கானதாக இருந்தால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மிக சிறப்பானதாக அமையும்.! எனது பள்ளிப்பருவத்தில் நான் டாக்டர், இன்ஜினியர், நான் கலெக்டர் என்று கூறியவர்களெல்லாம் இப்பொழுது வியாபாரம், அரசியல், ஒட்டுனர் பணி, துப்புரவுபணி, கொத்தனார் வேலை என்று தனது கனவல்லாத வேறுபணிகளில் இருக்கிறார்கள். நான்கூட டாக்டர் என்றுதான் கனவு கண்டேன். பிறகு ஆரம்பக் கல்வியிலேயே பல இடையூறுகள் தென்பட்டதால் இன்று ஒரு யோகா தெரபிஸ்ட், இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர் என்ற அளவில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது. <டாக்டர் வேலையை விட இப்பொழுது உள்ள எனது பணியை மிகவும் நேசிக்கிறேன் என்பது வேறுவிசயம்> ஆனால், இன்றைக்கு டாக்டர், விஞ்ஞானி, இன்ஜினியர், கலெக்டர் என்று தங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு பலப்பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. பத்தாவது, பணிரெண்டாவது தேர்வில் தோல்வி அடைந்தால் கூட உடனடியாக அடுத்த தேர்வை எழுதி அதே ஆண்டு தங்கள் விரும்பிய படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தந்துள்ளது. எம்.பி.பி.எஸ் படிக்க மதிப்பெண் போதவில்லை என்றாலோ அல்லது விருப்பமில்லை என்றாலோ சித்தா, இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் என்று அதே ஐந்தரை வருட கால அளவில் வேறு பல டாக்டர் டிகிரி படிப்புகளும் உள்ளன. அதுவும் வேண்டாமெனில் அக்குப்பஞ்சர், பிசியோதெரபி, யோகாதெரபி போன்ற மருந்தில்லா மருத்துவ படிப்புகளும் உள்ளன.! மருத்துவத்துறையை ஒரு உதாரணத்திற்கு கூறினேன். இன்ஜினியரிங் போன்ற மற்ற துறைகளில் பயில இதைவிட அதிக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. <படித்தவனுக்கு வேலை இல்லை என்பது வேறுவிசயம்> இன்றைக்கு தெருவிற்கு பத்து இன்ஜினியர் இருக்கிறார் ஆனால், அவசரத்திற்கு ஒரு கொத்தனார் தான் கிடைக்க மாட்டேங்கிறார் என்று பலரும் தேடுகிறார்கள். இதுபோலவே தேங்காய் பறிக்க ஆளில்லை, ஓட்டல் வேலைக்கு ஆளில்லை என்று பலரும் தவித்தாலும் கூட எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இதுபோன்ற சாதாரணமான வேலைகளுக்கு அனுப்ப முன்வருவதில்லை. ஒருவேளை தாங்கள் ஒரு எளிய பணியை மேற்கொள்பவராய் இருந்தாலும் கூட தங்கள் பிள்ளைகள் அதுபோன்று இல்லாமல் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தயும், மரியாதையையும், நிறைய வருமானத்தையும் தருகின்ற பெரிய பணிகளுக்கு செல்ல வேண்டும் என்றே கனவு காண்கிறார்கள். இதற்காகவே ஆங்கில மீடிய வாசலிலும், டியூசன் சென்டர் வாசலிலும் தங்கள் ஓய்வு நேரத்தையும் தங்கள் மொத்த வருமானத்தையும் கொட்டுகிறார்கள். எளிய, நடுத்தர மக்களின் நிலை இதுவெனில் ஏற்கனவே சமூக அந்தஸ்துடன் புகழ்பெற்ற டாக்டராகவோ, அரசுப் பணியாளர்களாகவோ இருப்பவர்களின் நிலமையோ இன்னும் மோசம் தங்கள் பிள்ளைகளை தன்னைவிட ஒருபடி முன்னே செல்ல வழிகாட்ட வேண்டும் என்றே இவர்கள் முனைகிறார்கள் அதற்காகவே அதிக டோனேசன் கேட்கும் பள்ளி, இடையறாது பல்வேறு பயிற்சி என்று தங்கள் பிள்ளைகளை நினைத்தே உருகுகிறார்கள். அப்படியும் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை எனில் மருத்துவக்கல்லூரி வாசலிலும் அரசியல்வாதிகளின் இல்லத்திலும் தவம் கிடந்து அதுவரை தாங்கள் பல்வேறு வழிகளில் சம்பாதித்த செல்வத்தையும் கொட்டிக் கொடுக்கிறார்கள்.! இப்படி பெற்றோர்களின் நினைவெல்லாம் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீதே மையம் கொண்டிருக்க பல பதின்பருவ பிள்ளைகளோ அதிக நண்பர்களின் சகவாசம், அதிகநேரம் தொலைக்காட்சி பார்ப்பது, பெற்றோர்கள், ஆசிரியர்களின் சொல்கேளாமை, உடைகளையும், தலைமுடியையும் வித்தியாசமாய் செய்து பிறரை கவனிக்க வைப்பதற்கு முயற்சி செய்தல், சமூக ஊடகங்களில் வெட்டியாக பலமணி நேரங்களைப் போக்குவது,சிகரெட், மது, சினிமா, பார்ட்டி என்று அலைவது.எதிர்பாலின ஈர்ப்பில் தகாத செயல்களை செய்து தங்கள் எதிர்கால கல்வியை கேள்விக் குறியாக்குதல் போன்ற பல்வேறு செயல்களை செய்து பெற்றோர்களின் அருமையையும் தங்கள் எதிர்காலத்தையும் ஒருசேர இழக்கிறார்கள்.! இதற்கு காரணம் பிள்ளைகள் மட்டும் இல்லை. சில பிள்ளைகளுக்கு படிப்பே வராது. ஆனாலும் பெற்றோர் விருப்பத்திற்காக படிக்க சென்று பிறகு நமக்கு இது லாயக்குப் படாது என்று புரிந்து எதோ கடமைக்கு படித்துக் கொண்டே தனக்குப் பிடித்த சமூக ஊடகங்களில் அலைவது, அடிக்கடி கட் அடித்து சினிமா,பீச் என்று சுற்றுவது, எதிர்பாலின மயக்கத்தில் திளைப்பது போன்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்துவார்கள். இதன்மூலம் இவர்கள் ஓரளவு படிக்கும் இவர்களின் நட்புவட்டத்தில் உள்ள மற்ற மாணவர்களின் எதிர்காலத்தையும் சேர்த்துக் கேள்விக் குறியாக்குகிறார்கள்.! நுங்கம்பாக்கம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் போன்றவர்களோ படித்தும் தனக்குரிய ஆங்கீகாரம் கிடைக்காத காரணத்தினாலேயே இதுபோன்ற விசயங்களில் மாட்டுகிறார்கள். சுவாதி போன்றவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையும், உரிமையையும், அங்கீகாரத்தையும் முறையாக பயன்படுத்தத் தெரியாத காரணத்தினாலேயே பலியாகிறார்கள்.! படிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து நல்லப் படிப்பினைகள் பெறவேண்டும். இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் எனது மகன்கள் தான். எனக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் +2 வரை ஒழுங்காகப் படித்ததால் அவரை இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தேன், இளையவர் லெவன்த் எக்ஸாமே எழுதவில்லை. ஏனெனில் சேர்க்கை சரியில்லை. ஊரில் உள்ள கசாப்புக்கடக்காரன் பையன், குடிகாரன் பையன், அப்பன் வெளிநாட்ல நிக்றவன் பையன் இவங்க கூட சேந்து ஊரைச்சுத்தி எல்லாம் மொத்தமா தறுதலையாப் போச்சிது.! உருப்பட இன்னும் வழியிருக்கானு பார்ப்போம்னு அவங்கம்மா அடம்பிடிச்சி அரசு பாலிடெக்னிக்ல சேர்த்து விட்டிருக்காங்க.! எப்படியோ உருப்பட்டவன் டாக்டர், உருப்படாதவன் இன்ஜினியர் அப்படினு கொஞ்சம் தெம்பா இருந்தேன். அப்பதான் என் உற்சாகத்தை கெடுக்க ஒரு பொம்பளப் புள்ளை போன் போட்டுது. என் பையன் பேரைச் சொல்லி நீ ஏன்கிட்ட பேச மாட்டியானு கேட்டுது. யாரும்மா நீனு பதறிப்போய் கேட்டால் என் மூத்தப் பையனோட கல்லூரில படிக்கிறதா சொல்லிச்சு. சரியாப் போச்சு அவன் கல்லூரில இருக்கான்மா, நான் அவங்கப்பானு சொன்னா அந்தப் புள்ளைக்கு ஒன்னும் புரியலை. மறுபடியும் ரெண்டு மூனுதரம் போன் போட்டுது, என்னடா இது புதிய குழப்பம் … கல்லூரில சேர்ந்து முளுசா ஒருவருசம் கூட ஆகலை. இன்னும் நாலரை வருசம் கடக்க வேண்டி இருக்கு. அதுக்குள்ள இப்படியானு நினைச்சிட்டே என் மனைவிகிட்டே விசயத்தை சொன்னா வாங்க நாம கல்லூரிக்குப் போயி இந்த நம்பர் யாரோடதுனு கேட்டு புகார் கொடுப்போம்னு சொன்னா, அட நீ வேறம்மா இது எதோ ஆர்வக்கோளாறு பொண்ணு அப்பன்காரன் டாக்டராகும்னு இயற்கை மருத்துவக் கல்லூரில சேத்துட்டு வீட்ல இருக்கான்.! இது தேவையில்லாமா ஆடு கசாப்புக் கடைக்காரன்ட்ட பக்ரீத் எப்பனு கேட்டது மாதிரி - பாய்வீட்டு பையனுக்கு போனை போட்டிருக்கு. சனிக்கிழமை பையன் வருவான் விசாரிக்கலாம்னு சொல்லி சமாதானப் படுத்தி வைச்சேன்.! பையன் வந்தவுடனே அந்தப் பொண்ணோட வாட்ஸ் போட்டோவைப் பார்த்து எங்க கல்லூரில படிக்கிற பொண்ணுதான், எங்கூட பேசினதே இல்லையே ,எதற்கு போன் பண்ணிச்சுனு ஆச்சரியப்பட்டான். அது உண்மையா நடிப்பானு தெரியலை. <உண்மைனு நம்புவோம் வேறவழி> அட மவனே கவனம் கவனம்.! என் பையனை மருத்துவக் கல்லூரில சேர்ப்பதற்கான அப்ளிகேசன் வாங்குவதற்கு 500 ரூபாய் செலவாகியது. அது மட்டும் தான் என்னால் உடனே கொடுத்து வாங்கித் தர முடிந்தது. பிறகு கலந்தாய்வு வரும்போது 5000 ரூபாய்க்கான டிடி எடுத்துவர வேண்டும் என்றார்கள். அதற்கே அப்பொழுது நான் யோகா வகுப்பெடுத்துக் கொண்டிருந்த டாக்டர் இராமலிங்கம் அவர்களிடம் வழக்கமாக முதல்தேதி கொடுக் கும் பணத்தை முன்கூட்டியே வாங்கினதால் தான் முடிந்தது. பிறகு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்ததால் வருடம் ஒன்றரை லட்சம் கட்ட வேண்டும் என்றார்கள் அதற்கும் இராமலிங்கம் அய்யாதான் முதலில் இதை கட்டிச் சேருங்கள் என்று 25000 ரூபாய்க்கு செக்கை கொடுத்தார்கள்.! பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து 65000 கடன்வாங்கி கொடுத்துதான் அவன் படிக்கிறான். இன்னும் கல்லூரிக்கு பணம் செலுத்த வேண்டி உள்ளது. புத்தகம், உடைகள் எல்லாம் எனது நண்பர்களின் உபயம் தான். இந்த தந்தையிடம் இருந்தது வெறும் நம்பிக்கையும் பல நல்ல ஆத்மாக்களின் பிராத்தனையும் மட்டும் தான்.! இது எனது நிலமை அதற்காக ஒருவேளை வசதியாக தங்கள் பணத்தை கட்டியப் பெற்றோர்களின் பிள்ளைகள் அசிரத்தையாக இருக்கலாம் என்பது பொருளல்ல. ஒவ்வெரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக பல தியாகங்களை செய்துகொண்டே தான் இருக்கிறார்கள். பிள்ளைகள் அதை புரிந்துகொண்டு செயல்படுவது மிக அவசியம். மாணவப் பருவம் என்பது தன் அறிவை விரித்துக்கொள்ளவும், தன்னிலையை உயர்த்திக் கொள்வதற்குமான களம். இங்கு கவனம் வேறு திசைகளில் பயணம் செய்தால் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேர்வதோடு பலரின் லட்சியங்களின் மரணமாகவும் அது ஆகிவிடும்.! பறவைகள், ஆடு,மாடு, கோழி, பன்றி, யானை போன்ற மிருகங்கள் எல்லாவற்றிற்கும் நட்புறவு கொள்ளவும் , நேசம் கொள்ளவும், தன் இனத்தை விருத்திச் செய்துகொள்ளவும் இயற்கை வாய்ப்புகளை வழங்கி உள்ளது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இறைவன், தன் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் இந்த உலகத்தையே உயர்த்தவும் வாய்ப்பை வழங்கி உள்ளான்.! அதை இந்த பருவத்தில் உணர்ந்துகொண்ட எல்லாப் பிள்ளைகளுமே சாதனையாளர்கள் ஆகிவிடுவார்கள்.!ஆண், பெண் நட்பால் ஒரு குடியும் முழுகாது. ஆனால், அது தெளிந்த நல்லறிவோடு கூடியதாக நம்மை முன்னேற்றப் பாதையில் செலுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.எதிர் பாலினக் கவர்ச்சி எது, தொழில் ரீதியான நட்பு எது, காதல் எது என்று எல்லாவற்றையும் பகுத்தாராய்ந்து நட்புகொள்வதே அறிவுப் பெற்றதின் அடையாளமாகும்.! இது ஒரு எதிர்பாலின ஈர்ப்பு தான், எதோ ஒரு விசயம் அந்தப் பொண்ணுக்கு இந்தப் பையன்ட்ட பேசனும், பழகனும்னு சொல்லுது. இதை புரிஞ்சிகிட்டு கல்லூரி நிர்வாகமே மாணவ, மாணவிகளின் நட்பு ரீதியான தேவைகளுக்கான வாய்ப்புகளை ஏற்ப்படுத்தித் தரனும்.! அதுபோலவே பதின்பருவ பிள்ளைகளும் தங்கள் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் நம்பிக்கையையும் கருத்தில் கொண்டு முறையாக நடந்துகொண்டு தங்கள் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்து இந்த சமுதாயம் மேன்மையடைய வழிகாட்ட வேண்டும்.! இதுவே என்னைப் போன்ற பல பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பாய் உள்ளது.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.in
[7/26, 18:21] Am Yoga: *சத்துக்கள் நிறைந்த பச்சை வாழைப்பழம்*
வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது. விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ- யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும். முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது. நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.
நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.
சத்துக்கள்
எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது. இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், திஷீறீஷீநீவீஸீ 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் கி, ஙி, சி வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
மருத்துவக் குணங்கள் :
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம். வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை.! குறிப்பு: பச்சை வாழையில் நாட்டு இரகம் மட்டுமே நல்லது. பெங்களூர் வாழை என்று கூறப்படும் மஞ்சள் நிறப்பழமும் விதையில்லாத மரபணு மாற்றப்பட்ட இரகமும் ஆபத்தானவை.! இணையப்பகிர்வு
[7/27, 04:48] Am Yoga: இயற்கை மூலிகை தயாரிப்புகள்
***********************
பஞ்சமூலி சூரணம்
உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.
நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
100% இயற்கையானது.!
950 கிராம் 400 ரூபாய்
மூலிகை தேனீர்
ஆவரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்ப மூலிகை தேனீர் பொடி
உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!
950 கிராம் 500 ரூபாய்
மூலிகை பல்பொடி
வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.
பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!
950 கிராம் 500 ரூபாய்
மூலிகை குளியல் பொடி
ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!
உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!
950 கிராம் 600 ரூபாய்
சக்கரை வியாதி சூரணம்
உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!
சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!
அமுக்ரா மாத்திரை
அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை
நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை
100 மாத்திரை 300 ரூபாய்
யோகா புத்தகம் & வீடியோ
சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!
இன்சுலின் ஆவணப்படம் சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்தும் சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.! விலை: ரூ 250/-நமது அறக்கட்டளையின் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு நிதி திரட்டவே நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ அன்போடு வேண்டுகிறோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் … AUM HERBALS தொடர்புக்கு:9629368389
amyogatrust.blogspot.in
[7/27, 09:39] Am Yoga: யோகா ஆசிரியருக்கு வந்த சக்கரைவியாதி இரண்டு மாதங்களுக்கு முன் நாகர்கோவிலில் புகழ்ப்பெற்ற ஒரு யோகா ஆசிரியர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறி , எப்ப வரலாம் என்று கேட்டார் நானும் காலை 11 மணிக்குள் என்றால் நமது பார்வதிபுரம் பயிற்சியகத்தில் சந்திக்கலாம் என்று கூறினேன். சரியென்று அடுத்தநாளே காலை ஒம்பது மணிக்கு வந்துவிட்டார். அவர் வந்தநேரம் ஓய்வுப்பெற்ற ஒரு ஆசிரியருக்கு சக்கரை நோயை குணப்படுத்தும் ஆசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் சற்றுநேரம் காத்திருங்கள் வந்துவிடுகிறேன் என்றேன்.! <அது என்னவோ தெரியலை பொதுவாக ஆசிரியப்பணி செய்பவர்களுக்கே சக்கரை நோய் அதிகமாக வருகிறது> நண்பர் உடனே இதோ வந்துவிடுகிறேன் என்று கிளம்பிவிட்டு பிறகு அடுத்த நாள் அதே நேரம் வந்து பள்ளி ஆசிரியருக்கு அளிக்கும் பயிற்சியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவர் பயிற்சி முடிந்து போனதும். நேற்று ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் சென்றுவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது எடுத்துப் பேசியவர் தன்னால் இன்று வரமுடியாது. வேண்டுமானால் வேறு ஒரு யோகா ஆசிரியரை அனுப்புகிறேன் என்றார் எதிர்முனையில் என்ன சொன்னார்களோ தெரியல கைப்பேசியை வைத்துவிட்டு பேச்சை தொடர்ந்தார் … சக்கரைவியாதியை நீங்கள் யோகாவின் மூலம் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்துள்ளீர்கள், இது எந்த அளவிற்கு சாத்தியம்? எனென்றால் எனக்கும் மூன்று ஆண்டுகளாக சக்கரை உள்ளது.நானும் சக்கரைக்காக பரிந்துரைக் கப்பட்டுள்ள வக்ராசனம், சலபாசனம், மயூராசனம் போன்றவற்றை தினமும் செய்துவருகிறேன். ஆனாலும், எந்த இனிப்பை சாப்பிட்டாலும் சக்கரை ஏறிவிடுகிறது, தினமும் இரண்டு அலோபதி மாத்திரைகளை போட்டால் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க முடிகிறது என்று அவர் கூறவும் மீண்டும் கைப்பேசி ஒலித்தது. நான் அவரிடம் கூறினேன் நண்பரே தயவாய் இப்பொழுது சென்றுவிட்டு உங்களுக்கு கைப்பேசி அழைப்பு வராத நேரத்தில் வாருங்கள் அல்லது கைப்பேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் என்றதும் கைப்பேசியை அதிர்வு நிலையில் போட்டு கொஞ்சம் தூரமாக வைத்துவிட்டு என்னைப் பார்த்தார் நான் கூறினேன்; " சக்கரை என்பது ஒரு வியாதியே அல்ல, அது உடலியல் இயங்குத் திறனில் ஏற்ப்பட்ட ஒரு தடுமாற்றம் மட்டுமே ஆறுமாதம் வரை தொடர்ந்து நாம் வரையறுத்துக் கூறும் யோகா நுட்பங்களுடன், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டால் சக்கரை குணமாகிவிடும். நம்மிடம் பயிற்சி ஆரம்பித்த பத்தே நாட்களில் நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில மாத்திரை அல்லது இன்சுலினை ஒருவேளையாக இருந்தால் முற்றிலும் நிறுத்திவிடலாம். இரண்டு வேளையாக இருந்தால் அதிகப்பட்சம் ஒரு மாதத்தில் நிறுத்தி ஆரோக்கியமாக வாழலாம். பயிற்சி ஆரம்பித்த சிலநாட்களிலேயே நாவறட்சி, அதிமூத்திரம், உடல்சோர்வு, எடைகுறைதல், பசியின்மை, படப்படப்பு போன்ற அனைத்தும் கட்டுப்பாட்டில் வந்துவிடும், எல்லா வகையான இயற்கை இனிப்புகளையும் தராளமாக சாப்பிடலாம் நீங்கள் நம்மிடமோ அல்லது வேறு எந்த ஆய்வகத்திலேயோ சக்கரை பரிசோதனை செய்துபார்த்தாலும் சக்கரை அளவு முன்பை விட குறைந்துகொண்டே வந்து ஆறுமாதத்தில் முழு குணம் கிடைக்கும் " ' அய்யா கோபித்துக் கொள்ள வேண்டாம் பிறகெதற்கு இதை குணப்படுத்தவே முடியாது என்று கூறுகிறார்கள்? " அது அறியாமை அல்லது வியாபர யுத்தியாக இருக்கலாம் " நீங்கள் கூறுவதை எப்படி நம்புவது? என்று அவர் கேட்டதும் நமது இன்சுலின் ஆவணப்பட குறுந்தகட்டை கொடுத்து இதைப்பாருங்கள் சகோதரரே.! ஒரு மாதத்திலேயே ஆங்கில மருந்துகளை நிறுத்தி யோகாவால் தங்கள் சக்கரையை சீரமைத்துக் கொண்டவர்களின் முழு விபரமும் இதில் உள்ளது. என்று நாம் கூறியதும் மிக நல்லது என்று கூறி டிவிடியை வாங்கிவிட்டு எழுந்து இதைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று விடைபெற முயன்றார். குறுந்தகடின் விலை 250 ரூபாய் " என்று நான் கூறினேன்; உடனே அவர் இலவசம் என்று கேள்விப்பட்டேனே என்று புருவத்தை உயர்த்தினார்; கூறினேன்; "நண்பரே எளிய ஆலோசனைகளுக்கு நாம் கட்டணம் வாங்குவதில்லை, அதுபோலவே வருடத்தில் பாதிநாட்கள் ஒவ்வெரு வியாதிக்கும் தனித்தனியாக ஆராய்ச்சிப் பூர்வமாக இலவச வகுப்புகளுடன் மூலிகை மருந்துகளும் இலவசமாக வழங்குகிறோம். ஆனால், நமது டிவிடி, புத்தகம், பல்வேறு நோய்தீர்க்கும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை கட்டணத்திற்கே கொடுக்கிறோம்" என்றதும் எவ்வளவு என்று கேட்டுக் கொண்டு பிறகு நமது புத்தகம், சிறுகுறிஞ்சான் மாத்திரை போன்றவற்றையும் பணம் செலுத்தி வாங்கிசென்றார். ஆனால், இதுவரை பயிற்சிக்கு வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்று மதியம் போன் செய்து அய்யா, சக்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் எனது வழக்கமான ஆசனப் பயிற்சிகளோடு உங்கள் டிவிடியில் கூறப்பட்டுள்ள கிரியை, பிராணாயாமப் பயிற்சியையும் சேர்த்து செய்துவருகிறேன். சக்கரை கட்டுக்குள் இருக்கிறது. முன்பிருந்த அடிக்கடி நாவறட்சி ஏற்படுதல், இரவில் இரண்டு மூன்றுமுறை எழுந்து சிறுநீர் கழிப்பது இப்போது இல்லை. அதோடு முன்பு அடிக்கடி ஏற்படும் வயிற்று உப்புச குறைபாடுகளும் சரியாகி விட்டன என்று மகிழ்வாக கூறியதோடு நானும் இப்பொழுது யோகாவுடன் இயற்கை வாழ்வியல் முறைகளையும் உணவு முறையையும் சேர்த்து எனது மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். இப்பொழுதுதான் என்னால் குற்ற உணர்வில்லாமல் பிறருக்கு பயிற்சி கொடுக்க முடிகிறது. என்றார். அதானே; யோகா சக்கரையை கட்டுப்படுத்தும் என்று சொல்லிக் கொண்டே ஆசிரியர் மாத்திரையை போட்டுக் கொண்டு வகுப்பெடுத்தால் அது கேலிக் குறியதாகத்தான் இருக்கும். இயற்கை இன்னும் யாருக்கெல்லாம் தன் அருளாசியை வழங்கி தூய்மைப்படுத்த முனைகிறதோ அவர்களெல்லாம் பாக்கியவான்களே.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.in AM HERBALS Mobile:9629368389
[7/28, 05:14] Am Yoga: இயற்கை பற்றிய புரிதல் இல்லாமல் தயாரிக்கப்படும் ஒரே ஒரு பொருள்கூட, மனித வாழ்க்கையை மட்டும் அல்ல... ஒட்டுமொத்த சூழலையும் சீரழித்துவிடும்.
கொசுக்கொல்லிகளின் வருகை இந்த விதமான சீரழிவுகளைக் கொண்டுவந்துள்ளது. குழந்தைகளைக் கொசு கடித்தால் உருவாகும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் வழியாகத் தான், கொசுக்கொல்லிகள் வீடுகளுக்குள் நுழைந்தன. நச்சுப் புகை பரப்பும் கருவிகளை, படுக்கை அறைக்குள் வைத்துக்கொண்டு உறங்கும் வழக்கம் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது.
கொசுக்களைக் கொலைசெய்வதாக நம்பிக் கொண்டு உறங்கும் மனிதர்கள், தம்மைத்தாமே சீரழித்துக்கொள்வதை அறியாதிருக்கிறார்கள். `கொசு விரட்டி’ என்ற சொல் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டாலும், அவை `விரட்டிகள்’ அல்ல `கொல்லிகள்’. கொசுக்களைக் கொலைசெய்யும் அளவுக்கு நஞ்சு அந்தக் கருவிகளில் உள்ளது.
மிக எளிமையான கேள்வி ஒன்றைக் கேட்டுப் பாருங்கள். கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், காய்ச்சல்களின் தீவிரம் குறைந்துள்ளதா... அதிகரித்துள்ளதா?
ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின்போதும் சிலவகை காய்ச்சல்களைப் பற்றிய பதற்றம் உருவாக்கப் படுகிறது. இதன் ஊடாக, கொசுக்களின் மீதான அச்சம் தூண்டப்படுகிறது. விளைவாக, வீட்டு மளிகைப் பொருட்களின் பட்டியலில் கொசுக்கொல்லிகளும் இணைக்கப்பட்டுவிட்டன.
கடந்த 20 ஆண்டுகளாக கொசுக்களை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பெருவணிகத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதை `கொசுப் பொருளாதாரம்' என்றே அழைக்கலாம்.
கொசுக்கொல்லிகளின் வருகைக்குப் பின்னர் நிகழ்ந்த மிக முக்கிய மாற்றம் நுரையீரல் நோய்களின் பெருக்கம். இதைப் புரிந்துகொள்ள எந்தப் புள்ளிவிவரங்களையும் தேடாதீர்கள். எல்லா புள்ளிவிவரங்களும் நிறுவனங்களின் தயாரிப்புகள்தான்.
உங்கள் சுற்றத்தாரைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களைச் சுற்றிலும் எத்தனை மூச்சிரைப்பு நோயாளிகள் இருந்தனர், இப்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் எனக் கணக்கிடுங்கள்.
உங்கள் குழந்தை களின் நுரையீரலை சளி, எவ்வளவு மோசமாகப் பற்றிக்கொண்டுள்ளது எனப் பாருங்கள். சளி தொடர்பான தொல்லைகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மருத்துவ முயற்சிகள் எவ்வளவு தீவிரம் அடைந்துள்ளன எனக் கவனியுங்கள்.
சீராக மூச்சு விடுவதற்குக்கூட, மருந்துகளை நம்பி இருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகுவதை உற்று நோக்குங்கள். சுவாசத்தைச் சீராக்குவதற்கான பொருட்களின் விளம்பரங்கள் எவ்வளவு அதிகரித்துள்ளன எனப் பாருங்கள்.
நமது மரபு மருத்துவக் கொள்கைகளின்படி தோல் நோய்களுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் உறவு உண்டு. கடந்த 20 ஆண்டுகளாக, தோல் நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிவிட்டதை நீங்களே உணர்ந்து புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் சிந்தனைக்கு ஒரு திறவுகோலை நான் தருகிறேன். இனி நீங்களே சிந்தித்து, நிலைமையின் தீவிரத்தை உணர வேண்டும்.
மூடிய அறைக்குள் நச்சுப் புகையைப் படரவிட்டால், கொசுக்கள் மட்டும் செத்து விழும், மனிதர்கள் நலமாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
நிறுவனங்களின் நச்சுத் தயாரிப்புகள் எல்லாவற்றிலும் ஓர் ‘எச்சரிக்கை’ அறிவிப்பு இருக்கும். கொசுக்கொல்லிகளிலும் அந்த அறிவிப்பு உண்டு. மனதாரச் சொல்லுங்கள் நீங்கள் அந்த அறிவிப்புகளைப் படித்தது உண்டா? ஒருவேளை படித்தாலும் அவற்றை உங்களால் கடைப்பிடிக்க முடியுமா?
`கொசுக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது, எல்லா கதவுகளையும் மூடி வைக்கக் கூடாது’ என்பது ஓர் அறிவிப்பு. இதை உங்களால் செயல்படுத்த முடிகிறதா?
`கதவுகளைத் திறந்தாலே கொசுக்கள் உள்ளே புகுந்துவிடும்’ என்ற அச்சத்திலும் அருவருப்பிலும் அல்லவா நீங்கள் வாழ்கிறீர்கள். நிறுவனங்களும் அவற்றைத் தாங்கிப்பிடிக்கும் மேதைகளும் எல்லா சட்டங்களில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஏனெனில், அவர்கள் ‘சட்டப்படி’ நஞ்சு தயாரிக்கிறார்கள். நீங்கள்தான் ‘சட்டத்தைப் புரிந்துகொள்ளாமல்’ நஞ்சுக்கு இரையாகிறீர்கள்.
மீண்டும் எனது முதல் கேள்வியை நினைவூட்டுகிறேன். கொசுக் கொல்லிகளின் வருகைக்குப் பின்னர், அச்சுறுத்தும் காய்ச்சல் களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா... உயர்ந்துள்ளதா?
ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்திலும் காய்ச்சல்களின் மீதான அச்சமும், அவற்றின் தாக்குதலும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் நீங்கள் கொசுக்களுக்கு எதிராகப் போர் தொடுக்கிறீர்கள்.
மறுபக்கம் காய்ச்சல்கள் உங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கின்றன. இந்தப் போரில், மருந்து நிறுவனங்களும், கொசுக்கொல்லி நிறுவனங்களும் மாபெரும் வெற்றி பெறுகின்றன. சமூகத்தின் நலனும் பூமியின் உயிர்ச் சூழலும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
கொசுக்களின் உணவு, மனித ரத்தம் அல்ல... மனிதக் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளும் தாவரச் சுரப்புகளும்தான் அவற்றின் முதன்மை உணவுகள். சக உயிரினங்களின் ரத்தமும் அவற்றின் உணவுதான். அந்தச் சக உயிரினங்களில் மனிதர்கள், கடைசி இடத்தில் இருக்கிறார்கள்.
ஒருகாலத்தில் வீடுகளைச் சுற்றிலும் தவளைகளும் பிள்ளைப்பூச்சிகளும் மரவட்டைகளும் நத்தைகளும் வாழ்ந்தன. இவை எல்லாம் வாழ்வதற்கு ஏற்றவகையில் செடிகளும் புதர்களும் அப்போது இருந்தன. வீட்டில் இருந்து வெளியேறிய கழிவுநீர்தான் இந்த எல்லா உயிரினங்களுக்கும் உணவு ஆதாரம். கொசுக்களும் இவற்றோடு இணைந்து வாழ்ந்தன. அப்போது கொசுக்கள் மனிதர்களைத் தேடி வரவில்லை.
படைப்பின் ஒழுங்குவிதிகள் குலையாத காலம் அது. கழிவுநீரிலும் அழுகிய உணவுகளிலும் உருவாகும் நுண்ணுயிரிகளை உணவாக உட்கொண்டு சூழலைச் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு பல உயிரினங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
கொசுக்கள் அவற்றில் முதன்மை யானவை. ஆடு, மாடு, நாய், பூனை, எலி போன்ற விலங்குகளும் பரவலாக வாழ்ந்த காலம் அது என்பதால், கொசுக்களின் உலகம் பெரியதாக இருந்தது.
நுண்ணுயிரிகளின் பெருக்கம் கட்டுப்பாட்டில் இல்லை எனில், பெரிய உயிரிகளின் உயிர் வாழ்க்கை சிக்கலாகிவிடும். நுண்ணுயிரிப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தவளை, நத்தை, கரப்பான் போன்ற எண்ணற்ற பூச்சி இனங்கள் செயலாற்றுகின்றன. கொசுக்களும் ஈக்களும் அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.
நவீனச் சமூகக் கட்டமைப்பில் மேற்கண்ட உயிரினங்களில் பெரும்பாலானவை ஒழிக்கப்பட்டன. குறிப்பாக, ஈக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. பிள்ளைப்பூச்சி எனும் அருமையான வகையினம் ஏறத்தாழ அழிந்துவிட்டது.
தவளைகள் காடுகளுக்குத் துரத்தப்பட்டன. காடுகளும் ஏரிகளும் நகர விரிவாக்கத்தாலும் தொழிற்சாலைகளாலும் அழிக்கப்பட்டன. நத்தைகளுக்கு வயல்களில்கூட வாழ்க்கை இல்லை. எல்லா வயல்களும் பூச்சிக்கொல்லி நஞ்சுக்களால் நிரப்பப்பட்டன. வெறும் ஐம்பது ஆண்டுகளில் இவ்வாறான முற்றுகைப் போர் சக உயிரினங்களின் மீது ஏவப்பட்டது.
இந்தப் போரில் கொசுக்கள் மட்டும் கூடுதல் ஆற்றலோடு போராடத் தொடங்கின. தவளைகள் இல்லாத நகரங்களில் கொசுக்கள் மனித ரத்தம் தேடுகின்றன. படைத்தவரின் விதிகளில் மிக முக்கியமானது, ‘எளியவை அழிக்கப்பட்டால் வலியவை மிகுந்துவிடும்’ என்பது.
பிள்ளைப் பூச்சிகளை அழிந்தால் கொசுக்கள் மிகுந்துவிடும் என்பதும் அந்த விதியின் விளைவுதான். ரசாயன வேளாண்மை, வண்ணத்துப்பூச்சிகளை எளிதில் அழித்தது. இப்போது வலிமையான பச்சைப் புழுக்கள் மிகுந்துவிட்டன. காடுகளைக் கைப்பற்றுவோர் மான்களை எளிதில் வேட்டையாடு கின்றனர். காட்டுப்பன்றிகளும் யானைகளும் இப்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
வீடுகளைச் சுற்றி இருந்த கழிவுநீரைச் சுத்தம் செய்த பல்வேறு உயிரினங்கள் ஒழிந்த நிலையில் கொசுக்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது.
ஏனெனில், நவீனச் சமூகம் உயிரினங்களைக் குறைத்தது, கழிவுகளை அதிகரித்தது. எங்கு பார்த்தாலும் குப்பைகளும் சாக்கடைகளும் காட்சியளிக்கும் ‘சிங்கார’ நகரங்கள் உருவாகின. இந்தக் கழிவுகளின் வழியாகப் பெருகும் நுண்ணுயிரிகளைப் பற்றி நவீன மனிதர்கள் கவலைப்படவில்லை.
அவர்களது எண்ணமும் செயலும் கொசுக்களை ஒழிப்பதைப் பற்றியது. ஏனெனில், `சிக்கல்களுக்குக் காரணம் நான்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்வது கடினம். எல்லா சிக்கல்களுக்கும் பிறர்தான் காரணம் எனப் பழிபோடுவது சுகமானது’.
`தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற நமது மரபின் கொள்கையை உங்கள் முன் வைக்கிறேன். இப்போதைய நலக் குறைபாடுகளுக்குக் காரணம் கொசுக்கள் அல்ல... மனிதர்கள்.
பெருகும் கழிவுகளின் கிருமிகளை உணவாக உட்கொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளவை கொசுக்கள் என்பதை மறவாதீர்கள். கொசுக்கள் எல்லாம் சேர்ந்து கிருமிகளை உருவாக்கவில்லை; மனிதர்களுக்கு நோய் தரும் கிருமிகளை உணவாக்கும் கொசுக்கள், மனிதர்களையும் கடிப்பதால் நோய்த் தொற்று உருவாகிறது. இதுதான் நவீன அறிவியல் சொல்லும் செய்தி. இப்போது, ஒழிக்கப்பட வேண்டியவை கொசுக்களா... கழிவுகளா... எனச் சிந்தியுங்கள்.
ஒருவேளை, `கொசுக்களை எல்லாம் முற்றிலும் ஒழித்துவிட்டால், கழிவுகளில் பெருகும் கோடானு கோடி கிருமிச் செறிவினைக் கட்டுப்படுத்தும் உயிரினம் எது?' என்ற கேள்விக்கு விடை வேண்டும். அப்போதும், நிறுவனங்களும் அவற்றைத் தாங்கும் மேதைகளும் ‘கிருமி கொல்லும் மருந்துகளை’ விற்பனைக்குக் கொண்டுவருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அவர்களது அடுத்த இலக்கு அதுதான்.
கொசுக்கள் இல்லாத சூழலில் பல்லிகளும், தவளைகளும், வௌவால்களும் வேறு பல உயிரினங்களும் உணவின்றித் தவிக்கும். தாவரங்களின் மகரந்தச்சேர்க்கையில் கொசுக்கள் பணியாற்றுகின்றன. கொசுக்கள் இல்லை எனில், தாவரங்களின் காய்ப்பும் குறையும்.
எந்த ஓர் உயிரினத்துக்கு எதிராக நஞ்சு பயன்படுத்தப்பட்டாலும் அது மனிதர்களையும் சேர்த்தே அழிக்கும் என்பதை உணர வேண்டும். நாம் சக உயிரினங்களோடு கூடி வாழப் பிறந்தோம்.
உறங்கும்போது, கொசு வலைகளைப் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிப்பது, இப்போதைய நெருக்கடிக்கான சிறந்த மாற்றாக அமையும். மாலை வேளைகளில் சாம்பிராணிப் புகையை அன்றாடம் பரவவிடுவது கொசுக்களின் வருகையைக் குறைக்க உதவும். காய்ந்த வேப்பிலைகள், தும்பை இலைகள் ஆகிய இரண்டையும் சிறு சட்டியில் இட்டு புகையவிட்டால், கொசுக்கள் வெளியேறும்.
கொசு வலைகளை, குடிசைத் தொழில் செய்வோரிடம் இருந்து வாங்குங்கள். கடந்த 20 ஆண்டுகளில் கொசுவலைகளின் விற்பனை குறைந்து, அந்தத் தொழிலில் இருந்து பல்லாயிரம் குடும்பங்கள் வெளியேறும் நிலை உருவானது. இப்போது சீனத் தயாரிப்புக் கொசு வலைகள் சந்தையில் மலிந்து கிடக்கின்றன. கொசு வலைகளை எல்லாம் இறக்குமதி செய்தால், கடைசியில் பிழைப்புக்காக மனிதர்களை ஏற்றுமதி செய்யவேண்டிவரும்.
வேப்பிலைகளையும் தும்பை இலைகளையும் நீங்களே தேடிச் செல்லுங்கள். குறிப்பாக, உங்கள் பிள்ளைகளுக்கு அந்தச் செடிகளை அறிமுகப்படுத்துங்கள்.
முக்கியமான வேண்டுகோள்... கொசுக்களைக் கொல்லும் மின்மட்டைகளை வீசி எறியுங்கள். உணவு எனும் ஒரே ஒரு காரணத்தைத் தவிர, வேறு எதற்காகவும் சக உயிர்களைக் கொலை செய்யும் உரிமை நமக்கு வழங்கப்படவில்லை. அவ்வாறு கொலை செய்யவேண்டிய தேவையும் இயற்கையில் உருவாவது இல்லை.
- திரும்புவோம்...
[7/28, 09:37] Am Yoga: தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல் - இயற்கை மருத்துவம்
பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில் வினாயகர் முதற்கடவுள். அவருக்கு அருகம்புல்லை சாற்றி வழிபாடு செய்கிறோம்.
அருகம்புல் திரிதோஷம், கோழை, கண்ணோய், சிரங்கு, சிரஸ்தாபம், ரத்த பித்தம், மருந்துசுடு, வயிற்றுபுண், வெள்ளை இப்படிபட்ட வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் தாவரம் முழுவதும் காணப்படும். தண்டு குட்டையானது, நேரானது. ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மிகுதியாகக் காணப்படும். வெப்பமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மையை அருகம்புல் கொண்டுள்ளது.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்
முழுத்தாவரமும் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டதாகும். உடல் வெப்பத்தை அகற்றும்; சிறுநீர் பெருக்கும்; உடலைப் பலப்படுத்தும்; குடல் புண்களை ஆற்றும்.
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும். அதனை தொடர்ந்து செய்து வந்தல் வெள்ளைப்படுதல் பிரச்சனை படிப்படியாக தீரும்.
தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும் வரை இவ்வாறு தொடர்ந்து செய்து வரலாம்.
ஒரு கைப்பிடி அளவு பசுமையான அருகம் புல்லைச் சேகரித்துக் கொண்டு, நீரில் கழுவி, அரைத்து, காலையில் மட்டும் காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து குடிக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு செய்யலாம். நரம்புத் தளர்ச்சி கட்டுப்படும்.
அருகம் சாறு 20 மி.லி. அளவு, தண்ணீர் 20 மி.லி., தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.🍁🍃🍂 இணையப்பகிர்வு🌾🍁🍂🌾
[7/28, 17:35] Am Yoga: தேன் ஒரு நல்ல இயற்கை உணவு என்று தெரிந்தும் எஙகே கலப்படம் இல்லாதது கிடைக்கும் என்றும் எப்படி உட்கொள்வது என்றும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். அத்துடன் எந்த புத்தகத்தில் உள்ளது என்றும் தெரிந்தால் மிக்க மகிழ்ச்சி. தேன் ஒரு நல்ல இயற்கை உணவு என்று தெரிந்தும் எஙகே கலப்படம் இல்லாதது கிடைக்கும் என்றும் எப்படி உட்கொள்வது என்றும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தயவு செய்து தெரியப்படுத்துங்கள். அத்துடன் எந்த புத்தகத்த சுத்தமான தேனை அந்தந்த பகுதியில் உள்ள இயற்கை அங்காடியிலோ அல்லது தேன்பண்ணை அமைத்துள்ளவர்களிடமோ நேரில் வாங்கலாம் அய்யா.! தேனை சுக்குடன் சாப்பிட்டால் உடலில் உள்ள திரிதோசங்களும் சீராகும்.! தேனை கடுக்காயுடன் சாப்பிட்டால் வாதநோய்கள் குணமாகும். தேனை பஞ்சமூலியுடன் சாப்பிட்டால் வசிய சக்தி உண்டாகும் தேனை நெல்லிக்காயுடன் உண்டால் இரத்தவிருத்தி உண்டாகும் தேனை பேரீச்சம் பழத்தோடு உண்டால் ஆண்மைக்குறைவைபோக்கும் தேனை அத்திப்பழத்துடன் உண்டுவர கர்பப்பைக் கோளாறு அகலும் தேனை எப்பொழுது வேண்டு மானாலும் சாப்பிடுவதற்கு முன் உண்ணலாம் ஆனால் , மாலை 6 மணிக்கு மேல் உண்பது நல்லதல்ல தனியே உண்டால் உடல்சோர்வு நொடியில் நீங்கும் அளவுக்கு மிஞ்சினால் தேனும் நஞ்சுதான் உடலுழைப்பு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை தேனை உண்ணலாம் மற்றவர்கள் 25 கிராமிற்கு அதிகம் சாப்பிடக்கூடாது.! நலம் பெருகட்டும் …amyoga.blogspot.in
[7/29, 09:58] Am Yoga: தெரிந்த ஆசனமும் தெரியாத இரகசியமும் 🍎 உலக யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஐயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் யோகாசன வகுப்புகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எட்டு மருத்துவ மனைகளும் அடங்கும். உங்களால் இந்த எட்டு வகுப்புகளையும் ஒரு வார காலத்தில் எடுக்க முடியுமா? என்று; டில்லியை சேர்ந்த Abbott என்ற மருந்து கம்பெனியிலிருந்து டாக்டர். ஷாலினி என்பவர் நம்மை தொடர்புக்கொண்டிருந்தார். சரியென்று யோகா தினத்தன்று புத்தேரியில் உள்ள CBH மருத்துவமனை அடுத்தநாள் ஹோலிகிராஸ் மருத்துவமனை என்று நாமும் தொடர்ந்து எட்டுவகுப்புகளை எடுத்து நிறைவுசெய்தோம்🍎 பயிற்சியில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். பல மருத்து வமனையில் ஏசி ஹாலில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது வேடிக்கையாக இருந்தது👀 இதுதான் உங்க இரகசியமா ,என்று பொருமை இழக்கவேண்டாம். இப்பொழுது விசயத்திற்கு வருகிறேன் அந்த மருந்துகம்பெனி மூலம் மலச்சிக்கலைப் போக்குவதற்கான ஆசனங்களை வடிவமைத்து அதற்கு🍅🍇 Constipasana என்று ஒரு பெயரை சூட்டியுள்ளார்கள். இதை மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் கற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு பரிந்துரைக்க செய்ய வேண்டும் என்பதே திட்டம்.🌶 நான் CBH மருத்துவமனையில் யோகாவை நிறைவு செய்ததும் ஒரு நர்ஸ் ஒடிவந்து கடைசியில் செய்தது என்ன ஆசனம் சார்? அதை செய்து முடித்ததும் என் உடலெல்லாம் ஒருவித அதிர்வுகளை உணர்ந்தேன், உடலில் இரத்தம் ஒடுவது, இதயம் துடிப்பது என்று எல்லாம் துல்லியமாக தெரிந்தது அதுவும் இறுதியில் வயிற்றில் கைவைத்து படுத்திருந்த போது மன ஓட்டம் முற்றிலும் நின்று உடம்பில் புதிய சக்தி தோன்றியதுபோல் இருந்தது. உண்மையில் இது என்ன, எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றார்🎿 நான்கூறினேன் அந்த ஆசனத்தின் பெயர் சாந்தியாசனம் உடலை தளர்த்தவும் அதனோடு தியான நிலையை உணர்த்தவும் செய்யும் பயிற்சி என்றேன். உடனே, நல்ல அனுபவம் சார் என்று நன்றிபெருக்கோடு கூறினார். தினமும் பயிலுங்கள் என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.! பல ஆண்டுகளாக யோகா செய்தேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்பவர்கள் உணர்வில்லா பிண்டங்கள்.! ஒரே நாளில் உணர்வின் எல்லையை கண்ட இந்த மங்கையே யோகாசன இரகசியம் தெரிந்த ஞானி என்று எனக்குத் தோன்றியது⛷.amyogatrust.blogspot.in