Friday, September 30, 2016

பேஸ்ட் வேஸ்ட்

  " உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கியூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம் " உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்வாங்கினேன்..

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்ககூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்இருக்குன்னு கண்டுபிடிச்சிஇருக்காங்க..

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டு பிடிக்கப்பட்டிருக்கு  …
இயற்கை மூலிகைகளில் தயாரிக்கப் பட்டது  என்று விளம்பரம் செய்யப்பட்ட டூத்பேஸ்டுகளும் இதில் அடக்கம் …

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்...!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..?


ம்ம்... என்னங்க பண்றது..?

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..! சரி விட்டுவிடுவோம்.!    

இந்த தொல்லைக்கு தான் நான்எந்த பற்பசை பக்கமும் போறதில்ல.  நாமே தயாரிச்ச மூலிகை பல்பொடி இல்லைனா வேப்பங்குச்சி அட அதுவும் இல்லைனா கொஞ்சம் செங்கத்தூளுல உப்பச்சேத்து வச்ச வச்ச வச்சனு தேச்சிட்டு போய்ட்டே இருப்பேன். பல் மருத்துவம் படித்தவர்கள் பல் போயிரும் எனாமல் போயிரும்னு சொன்னாலும் சொல்லுவாங்க.!
கரிதுண்டை வெச்சி பல்தேச்ச என் பாட்டன் பல்லு  70 வயதிலயும் நல்லாதான் இருந்தது. இப்ப இந்த கெமிக்க பேஸ்ட வெச்சித் தேய்க்கிற என் மக பல்லுல பாதி 35 வயசிலேயே காணாம போயிட்டுது …

இதானய்யா, உங்க விஞ்ஞான வளர்ச்சி

உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் :-

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.

சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
* சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.!

🍑இணையப்பகிர்வு

Thursday, September 29, 2016

இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய 8 உணவு வகைகள்:-

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
1) பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
2) செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
3) முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
4) நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி விருத்தியாகும்.
5) இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
6) தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
7) இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
8) விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.!

🌅இணையப்பகிர்வு

இயற்கை மூலிகை தயாரிப்புகள்


🌿பஞ்சமூலி சூரணம்

உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!

950 கிராம் 500 ரூபாய்

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுதேங்காய்,இயற்கை எள்ளு, வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!

கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய வியாதியையும் இந்த
ஒரே எண்ணையின் மூலம் குணப்படுத்தலாம்.!

விலை: 500 மிலி
750 ரூபாய்

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

950 கிராம் 500 ரூபாய்

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!

950 கிராம் 600 ரூபாய்

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

🍄அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை

100 மாத்திரை 300 ரூபாய்

🔰யோகா புத்தகம் & வீடியோ

சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!

 ❄இன்சுலின் ஆவணப்படம்

சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/-

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

AUM HERBALS தொடர்புக்கு:9629368389
amyogatrust.blogspot.in☘🍀☘🍀🌴☘🍀☘🍀

எண்ணெய் vs சர்க்கரை! அம்பலமான உணவு அரசியல்*

எண்னெய் அதிகம் சேர்த்தா, கொலஸ்ட்ரால் அதிகமாகி இதய நோய்க்கு வழிவகுக்கும்' என்று மருத்துவ உலகம்  அரை நூற்றாண்டுக்கும் மேல் சொல்லி வருகிறது. இந்நிலையில், 'உண்மையில் சர்க்கரைதான் இதய நோய்க்கு முக்கியக் காரணம். ஆனால், உலகளாவிய சர்க்கரைச் சந்தையும் அரசியலும் அந்த உண்மையை மறைக்க, 1960-ஆம் ஆண்டு, பிரபல மருத்துவப் பத்திரிகையில் 'இதய நோய்க்குக் காரணம் எண்ணையே' என்று பெரிய தொகையை 'செலவழித்து' எழுதவைத்து, பயத்தை கொழுப்பின் பக்கம் திருப்பிவிட்டுவிட்டது' என்று சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது, அமெரிக்க மருத்துவ இதழானா ஜாமா (JAMA Journal of American Medical Association).

'ஜாமா' கூறுவது என்ன?

'1960-களில் 'Internal Sugar Industry - Sugar Research Foundation (இன்று இது 'சுகர் அசோஸியேஷன்' என்று அழைக்கப்படுகிறது) அமைப்பு நடத்திய ஆய்வில், எண்ணெயைவிட உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் (CVD Cardio Vascular Disease) ஏற்பட பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான்' என்ற உண்மை, மார்க் ஹெக்ஸ்டட் மற்றும் ராபர்ட் மெக்கண்டி என்ற ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வை வெளியிட்டால், சர்வதேச சர்க்கரை வணிகம் பாதிக்கப்படும், அதன் மூலம் கிடைக்கும் பெருமளவு லாபம் குறையும் என்பதால், இந்த உண்மை மக்களைச் சென்றடையாமல் இருக்க, உலகம் முழுக்க பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டார்கள். மேலும், சர்க்கரை மீதான குற்றச்சாட்டை எண்ணெயின் பக்கம் திருப்ப, நியூ இங்கிலாந்து ஜார்னல் ஆஃப் மெடிசின் என்ற மருத்துவ இதழில், ஆய்வின் உண்மையான முடிவுகள் மாற்றப்பட்டு, 'உடல் பருமனுக்கும் அது சம்பந்த்மான நோய்களுக்கும் பெரிதும் காரணம், எண்ணெய் பொருட்களே' என்று எழுதவைத்தனர். மேலும், இவ்வாறு முடிவுகளை மாற்றி வெளியிட்டதற்கான சம்பந்தப்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் பெரும் தொகை வழங்கப்பட்டது.

இந்த அதிர்ச்சியான ஊழலைத்தான் சமீபத்தில் அம்பலமாக்கியிருக்கிறது 'ஜாமா' இதழ். வேதியலாளர் மற்றும்  'ஜாமா'வின் சர்க்கரை குறித்த அறிவியல் ஆலோசகர் க்ரிஸ் கெரன் என்ற பெண் அந்த இதழில் எழுதியுள்ள இந்த ஆய்வுக் கட்டுரை, உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'சர்வதேச மக்கள் அமெரிக்க ஆய்வு முடிவுகளைச் சார்ந்து இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, பணம் கொடுத்து, சர்க்கரையில் பொதிந்துள்ள ஆபத்தை உலகின் கவனத்துக்குச் சென்றுவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தனை ஆண்டுகளாக சர்க்கரையின் ஆபத்தை மறைத்து, அதை மக்களின் அன்றாட, தவிர்க்கமுடியாத உணவாக வளர்த்துவிட்டிருக்கிறது 'சுகர் அசோசியேஷனின் சர்வதேச சந்தை. சராசரியாக அமெரிக்கர்கள் ஒரு நாளைக்கு 10 சதவிகித சர்க்கரையை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இளவயது மரணங்களுக்கு இந்த உணவுப் பழக்கமே முக்கியக் காரணமாக அமைகிறது. சர்க்கரையால் இத்தனை ஆண்டுகளாக பலியாக்கப்ப்பட்ட உயிர்களுக்கு என்ன பதில்?' என்று கேட்கிறார், கட்டுரையாளர் க்ரிஸ் கெரன்.



மருத்துவர்களின் சர்க்கரையின் ஆபத்து பற்றிச் சொல்லும்போது, 'சர்க்கரை என்பது ஃப்ரக்டோஸ் (FRUCTOSE) மற்றும் குளுக்கோஸ் (GLUCOSE) சமபங்கு கலவை. இதில் குளுக்கோஸ் எளிதில் ஜீரணமாகும். ஆனால், ஃப்ரக்டோஸை ஜீரணிக்க கல்லீரலில் உள்ள நொதியால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்ணும்போது, அதற்கு ஈடுகொடுத்து கல்லீரலால் அந்த நொதியைச் சுரக்கமுடியாத காரணத்தால், ஃபிரக்டோஸ்  கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும்.  இதுவே இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணியாக அமைகிறது.

மேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீங்கும் பிரச்னையான ஆல்கஹால் அல்லாத  ஃபேட்டி லிவர் நோய் (NON ALCHOHOLIC FATTY LIVER DISEASE) ஏற்படுகிறது.
   
சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். இந்த அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகள் ஏற்படும்' என்று சர்க்கரை மீது மருத்துவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் நிறைய.  

சர்வதேச உணவுச் சந்தை, தனிமனிதப் பேராசை, விலைபோகும் ஆராய்ச்சியாளர்கள், குழந்தையைக் கிள்ளி தொட்டிலை ஆட்டும் மருந்துச் சந்தை... இவர்கள் அனைவரும் மக்களைவைத்து ஆடும் ஆடு புலி ஆட்டத்தில், சர்க்கரையில் இருந்து அரிசி, நூடில்ஸ், பிரெட் என நம் தட்டில் விழும் ஒவ்வொரு பொருளும் உணவா விஷமா எனற கேள்வி, தொடர்ந்துகொண்டேதான் இருக்கப்போகிறது!

Tuesday, September 27, 2016

உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.

இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

1. துளசி

துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

2. தூதுவளை

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.

3. சோற்றுக்கற்றாழை

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி

ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

5. பொன்னாங்கண்ணி

வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.

6. நேத்திரப்பூண்டு

இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.

7. நிலவேம்பு

நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.

8. பூலாங்கிழங்கு

கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.

9. ஓமவள்ளி

கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

10. அருகம்புல்

அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

11. ஆடாதொடை

எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி

இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.

13. நொச்சி

நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.

14. தழுதாழை

தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.

15. கழற்ச்சி

இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.!
🍃🌾🍁🎋🍂☘🍂

💥இணையப்பகிர்வு

தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கும் நேச்சுரல் ஹேர் ஆயில்!

தலைமுடியில் பிரச்சனை இல்லாதவர்களைக் காணவே முடியாது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை, முடியின் முனைகளில் வெடிப்பு, முடி வளராமல் இருப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இதற்காக கடைகளில் அல்லது விளம்பரங்களில் விற்கப்படும் எண்ணெய்களை வாங்கிப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் தலைமுடியில் இருந்த பிரச்சனை அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.
ஆனால் தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடி பிரச்சனைக்கான ஓர் எளிமையான நேச்சுரல் ஹேர் ஆயிலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தயாரித்து தினமும் தலைக்கு பயன்படுத்தி வந்தால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
கற்றாழையில் புரோடியோலிடிக் என்னும் நொதி உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கும். மேலும் இது சிறந்த கண்டிஷனர் போன்றும் செயல்படும். அதுமட்டுமின்றி, கற்றாழை முடியின் வளர்ச்சயைத் தூண்ட, பொடுகைக் குறைக்க, உச்சந்தலை அரிப்பைத் தடுக்கவும் செய்யும்.
கறிவேப்பிலையில் மயிர்கால்களை வலிமைப்படுத்தும் ஏராளமான நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இது மயிர்கால்கள் நன்கு சுவாசிக்க உதவும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, முடியின் நிறத்தைத் தக்க வைக்க உதவும்.
வெங்காயத்தில் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான சல்பர் வளமாக நிறைந்துள்ளது. வெங்காயம் முடி உடைவதையும், பாதிக்கப்பட்ட மயிர்கால்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வளரவும் உதவும். ஏனெனில் சல்பரானது முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.
மிளகில் கேப்சைசின் என்னும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சேர்மம் உள்ளது. முக்கியமாக மிளகு தலைச்சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் பெற வழிவகுக்கும்.
கற்றாழை - 1 பெரிய இலை
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகு - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 200 ml
* முதலில் கற்றாழை இலையின் முனைகளில் உள்ள கூர்மையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் கற்றாழைத் துண்டுகளையும், கறிவேப்பிலையையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதனை வடிகட்டியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இக்கலவையை வடிகட்டும் போது சற்று பொறுமை அவசியம்.
* பின்பு ஒரு வாணலியை நன்கு சூடேற்றிக் கொண்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள கற்றாழை சாற்றினை ஊற்றி நன்கு பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்.
* கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெங்காயம் மற்றும் மிளகு சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், எண்ணெய் தயார்.
இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், தலை முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை குறைந்து, முடி நன்கு வளர்வதைக் காணலாம்.!

🍀இணையப்பகிர்வு

``மனோசக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது?`

🍁 எண்ண ஓட்டங்கள் குறைய குறைய மூளையின் செயல்திறன் அதிகரித்து கொண்டே போகும்!_*

🍁 *_```Extra Sensory Perceptionஐ எல்லோராலும் வளர்த்து கொள்ள முடியும் ஆழ்ந்த தியானத்தால்!!_*

🌴 *_```ஆழ்மன பதிவை எப்படி மாற்றுவது!?```_*

🍁 *_```நம் வாழ்வை பெரும்பாலும் வெறும் ஐந்து நிமிடங்களே தீர்மானிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?!```_*

🍁 ```ஆம் நாம் படுத்தபின் உறங்குவதற்கு முன்பு இருக்கும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவை!!```

🍁 ```அப்போது நாம் எதைப்பற்றி சிந்திந்து கொண்டே உறங்குறோமோ அது நம் ஆழ்மனதால் விடிய விடிய பரிசீலிக்கப்பட்டு விரைவில் நம்மை வந்தைடைந்தே தீரும்!!```

🍁 ```தயவுசெய்து இனி படுத்தபிறகு அந்த நேரத்தில் பிரச்சனைகளை பற்றி யோசித்துவிடாதீர்கள். பிறகு அந்த பிரச்சனையே வாழ்கையாகிவிடும்!!```

🍁 ```உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை அடைந்துவிட்டதாக சிந்தித்து கொண்டே உறங்குங்கள். அது பிடித்த உறவு, பொருளாதார சூழல், ஆரோக்கியம் இப்படி எதுவாகவும் இருக்கலாம்.!!```

🍁 ```அந்த நேரத்தில் மூச்சை கவனித்துக் கொண்டே உறங்குபவன் மறுநாள் எழும்வரை ஆழ்ந்த தியான நிலையிலேயே இருந்திருப்பான்!!```

🌴 ```ஆழ்மன சக்தியை எது எதுக்கு பயன்படுத்த முடியும்?!```

🍁 ```நாம் கற்பனை கூட செய்ய முடியாத அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ளது!!```

🍁 ```சாத்தியமாக வாய்ப்பு இல்லாத எதையும் நீங்கள் யோசிக்கவே முடியாது!``` ```அதனால்; நல்லவை அனைத்திற்கும் ஆழ்மன சக்தியை பயன்படுத்தலாம்!!!```

🍁 ```வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் அதிகாலை எழும் பழக்கம் உள்ளவர்களே!!"```

🍁 ```ஆம் நாம், பூமி, இயற்கை என அனைத்தும் அந்த நேரத்தில் உச்சகட்ட ஆற்றலோடு செயல்படும் நேரம் பிரம்ம முகூர்த்தமே
ஆகையால் அந்த நேரத்தில் எழுபவர்கள் பெரும் சாதனையாளர்களாகவும்
உடல் ஆரோக்கியம் மிக்கவர்களாகவும்
இருப்பார்கள்.!

🌅இணையப்பகிர்வு

Monday, September 26, 2016

கர்பப்பை

எளிய வைத்தியம் 🌾

கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கி சுத்தபடுத்தும் கருஞ்சீரகம்

* மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.

*கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கி சுத்தபடுத்தும் என்பதால், குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

*கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும்.

*சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்ப் படுத்தப்படுகிறது.!

🌻இணையப்பகிர்வு

கொள்ளுப்பால்---உணவே மருந்து!

இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.
100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.
முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.
பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.!

☘இணையப்பகிர்வு

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்க

வெந்தயம் ... மூன்று தேக்கரண்டி
ஓமம் . ... மூன்று தேக்கரண்டி
மிளகு ........... ஒரு தேக்கரண்டி
சுக்கு ................ மூன்று துண்டுகள் (சுத்தி செய்தது )
எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து சூரணமாக்கவும்
நூறு மில்லி நீரைக் கொதிக்க வைத்து இறக்கி அதில் கால் தேக்கரண்டி சூரணம் சரத்துக் கலந்து மிதமான சூட்டில் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும்
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த தீநீரைக் குடித்தால் போதுமானது தினமும் குடிக்கத்தேவை இல்லை
இவ்வாறு குடித்து வர உடலில் தங்கியுள நச்சுக்கள் நீங்கி இரத்தம் தூய்மை அடையும் .உடல் பூரிப்படையும்
இது ஒரு அனுபவ எளிய வீட்டு மருத்துவம் ஆகும்.!

❄இணையப்பகிர்வு

Sunday, September 25, 2016

நேற்றைய நாள் நல்லநாள்💐

காலையில் வெளியே கிளம்ப வண்டியை கிளப்பினால் சர்ரென வண்டியில் உள்ள பெட்ரோல் வெளியேறுகிறது …
பெட்ரோல் செல்லும் குழாயில் ஒரு பெரிய ஓட்டை …
சரியென்று ஒரு பசை ஒட்டியை எடுத்து ஒட்டிவிட்டு மீண்டும் வண்டியை எடுத்துக் கொஞ்சம் தூரம் போனதும் ,ஒரு யோகா மாணவர் தொடர்புகொண்டு , இன்று நடக்கும் போட்டியில் என்னால் கலந்துகொள்ள முடியாது, அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்கிறார் …
அடுத்து போட்டிக்காக காரில் சென்றுகொண்டிருக்கும் போது ஒருவர் இருசக்கர வாகனத்தை குறுக்கே திருப்ப முனைந்து விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது …
அதிலிருந்து மீண்டு, நேரே போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று போட்டியில் கலந்து கொள்வதற்கான  படிவத்தை கேட்டால் ஒரு மணிநேரம் காக்க வைக்கிறார்கள் …
அதையும் கடந்து போட்டியில் கலந்துகொண்ட நமது மாணவர்களைப் பார்த்து  பல யோகாசன ஆசிரியர்களே வியந்து பாராட்டுகிறார்கள் …
இந்த வகையில் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை அறிவிக்கிறார்கள், அதில் நமது மாணவர்களின் பெயர்கள் மட்டும் விடுபட்டுள்ளது, கேட்டால் சர்டிபிகெட் பற்றாக்குறை, மதிப்பெண் பட்டியலை வேறு காணவில்லை என்கிறார்கள்,
ஒரு மாணவியின் தந்தை, நிகழ்வு ஏற்பாட்டாளரிடம் இப்படித்தான் ,கேவலமாக போட்டியை நடத்துவதா? எனது மகளிற்கு காய்ச்சல் வேறு அடிக்கிறது என்கிறார், ஏற்பாட்டாளர்களோ, சில நேரத்தில் இப்படி ஆகிவிடுவது இயல்புதான், பெற்றோர்களை நாங்கள் அழைக்கவில்லை, பயிற்சியாளரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்,
ஒரு வழியாக இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும்  ஷீல்டுகளை வழங்கி நிறைவு செய்துவிட்டனர்,
வீட்டில் வந்துப்பார்த்தால்  என் கைப்பேசியை காணவில்லை, யாராவது ஒற்றர்கள்  எடுத்துவிட்டார்களோ, பைக்கில் வரும் வழியில் எங்கேயாவது விழுந்துவிட்டதா?   ஒரே குழப்பம், மீண்டும் 13 கிலோமிட்டர் பயணம் செய்து  பயிற்சிமையம் வந்துப்பார்த்தால்  கைப்பேசி நமக்காக அமைதியாக காத்திருக்கிறது, பிறகு இரவு பயிற்சி மையத்திலேயே  தூங்கி எழுந்தாகி விட்டது,  எப்படியோ நேற்றைய நாள் - நல்லநாள்  என்று நினைக்கும் போது, உள்ளிருந்து ஒருகுரல் நெகட்டிவ் எனர்ஜினா  இதானா சந்தோஷ்?
என்று கேட்கிறது, இப்படித்தான் சிலநேரம்  எதிர்மறை ஆற்றல்  நம்மிடம் தன் இருக்கையை காட்டிக்கொள்ள முனைந்து வரும் வெறுமனே வேடிக்கைப்பார்த்தபடி
கடந்துவிட்டாலோ அல்லது அடுத்தடுத்த வினைபுரியாமல் அமைதியாக இருந்தாலோ வெறுத்து ஓடிவிடும்.! அல்லது நம் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி
சுகம் காணும் இந்த வேடிக்கைவிதி.!
முடிவு நம்கையில்.!
நல்லதையே நினைப்போம்
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன்

amyogatrust.blogspot.in

அத்திப்பழத்தின் பலன்கள் & 40 வகை கீரைகள்

[9/25, 21:42] Am Yoga: அத்திப் பழம்..!

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.!

🌺இணையப்பகிர்வு
[9/25, 21:57] Am Yoga: ➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

எண்ணையைத் தேடி பயணம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு🚴🏿
என்பது பழமொழி இன்று திரவியம் தொலைத்தும்ஆரோக்கியம் தேடு என்பது புதுமொழி.  ஆரோக்கிய வாழ்விற்காக தமிழர்கள் எங்கும் ஓடவோ தேடவோ தேவையேயில்லை.
நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பின்பற்றினாலே போதுமானது.!

அப்படி நாம் பின்பற்றியே தீர வேண்டிய ஒரு முக்கிய ஆரோக்கிய முறைகளில் கல்செக்கு எண்ணை சமையலும்  மிக முக்கியமானது.!
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையே
இன்று மழலைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் காணப்படும் முக்கிய வியாதிகளாய் இருக்கிறது. அல்லது ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம்,புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலின் சீர்குலைவிற்கு ஊட்டச்சத்தின்மையே முக்கியக் காரணமாக விளங்குகிறது. என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இன்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.! உடல் செல்கள் அனைத்தும் கொழுப்புதான், உடல் செல்களை புதுப்பிக்கத் தேவையானப் பொருளும் கொழுப்புதான், உடலில் இறந்த செல்களை உடனுக்குடன் வெளியேற்ற உடலுக்குத் தேவையான முக்கியப் பொருளும் கொழுப்புதான்.! உண்மை இவ்வாறு இருக்க கொழுப்புள்ள உணவுகளே வேண்டாம் என்றுகூறி உலக வர்த்தக நிறுவனங்கள் செய்துவந்த  போலி விளம்பரங்களை நம்பி செக்கெண்ணைய் சாப்பிட்டுவந்த
தமிழர்கள் சுத்திகரித்து கொழுப்பை நீக்கிய சூரியகாந்தி எண்ணைய் பயன்படுத்த ஆரம்பித்ததோடு வேர்க்கடலை,தேங்காய்,பருப்புவகைகளை வேறுவிதமாக உண்பதையும் குறைத்துக் கொண்டோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் இதனால் என்னென்ன சீரழிவுகள் வந்தது என்பதையும் இன்று கண்கூடாக கண்டுவிட்டோம். இதுமட்டுமின்றி மரபணுமாற்றிய விதைகள், இரசாயண உரங்கள் என்று இயற்கையின் அரவணைப்பை இழந்து வந்த நிலையில் அய்யா நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கண மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். இன்று  பல இரசாயண மருத்துவர்களே இயற்கையை நோக்கி திரும்பிவருகிறார்கள். இது ஒரு மகத்தான வெற்றி.  இன்று
விழிப்புணர்வு மிக்க மக்களின் பார்வை முழுவதும் இயற்கையை நோக்கி திரும்பிவிட்டது. இயற்கை விவசாயம், இயற்கை மூலிகை மருத்துவம், இயற்கை மூலிகை உணவுதயாரிப்பு போன்ற வகையில் பல்வேறு தரப்பினர் இன்று  மக்கள் மத்தியில் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களின் ஒருவர்தான் சுத்தமல்லி சீனிவாசன் இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துவிட்ட இயற்கை கல் மரச்செக்கு எண்ணையை உற்பத்தி செய்துவருகிறார். இயற்கையில் விளைந்த எள், வேர்க்கடலை,நாட்டுத்தேங்காய்,  இவற்றை பயன்படுத்தி  100% இயற்கையான முறையில் எண்ணைய் தயாரித்து வழங்கிவருகிறார்.! அதுமட்டுமில்லாமல் எள்,தேங்காய்,வேர்க்கடலை போன்றவற்றில் குறைந்தது 30 கிலோ இவரிடம் காயவைத்து 2 கிலோ கருப்பட்டியும்  கொடுத்தால் நமது கண்முன்னாடியே எண்ணையாக இயற்கை முறையில் செக்கில் ஆட்டிதருகிறார். <ஒரு லிட்டருக்கு 120 ரூபாய் கூலி>  இயற்கை, எள்,தேங்காய் போன்றவற்றை விவசாயிகளிடம் நேரில் வாங்குவதற்கும் உதவுபுரிகிறார்.! இவருக்கு உதவியாக இவரின் 70 வயது பெரியப்பா உடனிருக்கிறார்.! இறையருளால் கடந்தமாதம் இவரிடம் வாங்கிய நல்லெண்ணையை ஒரு நண்பர் நமக்கு வழங்கி இருந்தார் அதில் கொஞ்சம் சுக்கை மட்டும் தட்டிப்போட்டு  காய்ச்சி ஒரு பக்கவாத நோயாளிக்கு தடவிவிட்டேன். செய்த உடனேயே நல்ல மாற்றம் தெரிந்தது. பிறகு தொடர்ந்த பயிற்சியில்  இன்று
அந்த மனிதர் தனியாக நடைப்பயிற்சி செய்யுமளவு தயாராகிவிட்டார்.!
அதற்கு இந்த எண்ணையின் பங்கும் முக்கியமானது.! அதன்பிறகுதான் ஒருநாள் சுத்தமல்லிக்கு நேரில் சென்று இந்த எண்ணையை வாங்கி
பல்வேறு மூலிகை தயாரிப்பிற்கும் வீட்டு சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறேன்.! எனது மனைவி இந்த தேங்காய் எண்ணையை காய்ச்சாமல் தலையில் தேய்த்தாலே நன்றாக முடி வளருகிறது என்கிறார்.!  இயற்கையின் குணம் மகத்தானது.  இதை மறந்து இன்னும் சிலர் அமேசான் காட்டிற்கு பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள் .!
செக்கெண்ணையை ஆட்டிய பின்  வரும் திறை புண்ணாக்குடன் கொஞ்சம் கருப்பட்டியை கலந்து வைத்துள்ளார் . சீனிவாசன்.அதை சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பசியே வரவில்லை. எண்ணைய் வாங்குபவர்களுக்கு கொஞ்சம்
திறையை  இலவசமாகவும்
அதிகம் வேண்டுமானால்
விலைக்கும்  தருகிறார்கள்.
அபாரசுவையுடன் இருக்கும் இதில் பெயருக்குக் கூட மண் கடிக்கவில்லை. அதற்கான காரணத்தை கேட்டபோது எள்ளை
சலிப்பதற்கென்றே  ஒரு இயந்திரம் இருப்பதை காட்டினார். அதில் எள்ளை கொட்டிவிட்டால் மண்,தூசு,சிறிய கற்கள் என்று அனைத்தையும் அது சுத்தமாக்கி, பருவமாக்கி தந்துவிடுகிறது.
பிறகு  ஒரு துணியை விரித்து அதில் எள்ளை காயவைத்து செக்கில் போடுகிறார்கள்.! பலேபலே, சுத்தம் செய்ய இயந்திரம். எண்ணைய் ஆட்ட மாடும் மனிதனும்  ஆகா, இதுவல்லவோ மகத்துவம்..

இங்கு இரண்டு நாட்டுக் காளைகள் உள்ளன இரண்டும் கொழுகொழுனு சிக்குனு இருந்தது. அடடா, இதுபோன்ற மாட்டை நான்ப் பார்த்தில்லையேனு கிட்டப்போகப் போனா … போகாதீங்க  அய்யா.! குழாய் <பேன்ட்> போட்டவங்க கிட்டப் போன மிரளும் ஏன்னா, அது உங்களை அதுக்கு ஊசிபோட வந்த மருத்துவருன்னு நினைக்கும். என்றார்; ஓ.! ஊசின்னா ஒனக்கும் பயமா? சரிசரி என்று தள்ளிவந்தால் இயல்பாக இருக்கிறது கால் நடைகள்.!

எங்கள் குலதொழிலே எண்ணைய் ஆட்டுவதுதான். இன்று இந்த தொழிலே குறைந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இயந்திரத்தை வைத்து எண்ணைய் ஆட்டிக் கொடுக்கிறார்கள்.! ஆனால், நாங்கள் மீண்டும் பாரம்பரிய கல்செக்கில் எண்ணைய் ஆட்டுவது  மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது. மற்றபடி
இதில் பெரிய லாபம் என்று ஒன்றும் கிடையாது. உழைப்பிற்கான
கூலியே  கிடைக்கும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் உதவுகிறோம். என்ற ஆத்மதிருப்தி எனக்கு கிடைக்கிறது. அதுவே நமது குறிக்கோள் என்றதோடு விடைபெறும் போது இரண்டு பொட்டலங்களில் ஒரு பொடியை தந்துவிட்டார்.
அதை தலையில் தேய்த்து குளித்தால்  ரெம்ப வறட்சியாகவும் இல்லாமல் எண்ணைய் பிசுக்கும் இல்லாமல் ஒரு வகையான  சுத்தமான தலைமுடியை
தருகிறது.! தலைகுளிர நல்லெண்ணைய் தேய்த்து விட்டு இந்தப்பொடியை தேய்த்து குளித்தால்  எண்ணைய்  பிசுக்கெல்லாம் போய் கொஞ்சுண்டு மட்டும் எண்ணைய் தேய்த்த அடையாளம் தெரிகிறது.! எல்லாமே ஆச்சரியமாகதான் உள்ளது.!  யாருகண்டா? ஒருவேளை
இதுவே சொரியாஸிஸ்
வியாதிக்கான  மருந்தாய்  கூட இருக்கலாம்.!
மற்றொரு ஆய்வுப்பூர்வமான தகவல் என்னவென்றால்  நல்லெண்ணையை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அதில் ஒரு கருங்கல் துண்டை போட்டு வைத்துவிட்டு ஒரு மாதம் கழித்து அந்தக் கல்லை எடுத்து  உடைத்துப் பார்த்தால்   அதில்   உள்ள ஒவ்வெரு  உள்புற  பக்கத்திலும் எண்ணைய் ஊடுருவிய  அடையாளத்தை பார்க்க முடியும்.! கருங்கல்லுக்குள் கூட ஊடுருவும் தன்மை நல்லெண்ணைய்க்கு உண்டு என்றால் நரம்பும் சதையுமான மனித உடலுக்குள்  எவ்வளவு வேகமாக ஊடுருவி  பிணியை தீர்க்கும்  என்பதை நினைவில் கொள்ளவும்.! தேங்காய் எண்ணையை பற்றி  கூறுவதென்றால்  அது உடலுக்குள் வேகமாக ஊடுருவாது .ஆனால் உடலில் உள்ள வெப்பசக்தி  வெளியேற விடாமல் காக்கும் அற்புத குணம்  அதற்கு உண்டு. அதனால்தான் குளிர்   பிரதேசங்களில் வசிப்பவர்கள் தேங்காய் எண்ணையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.! எதிரெதிர் துருவங்களாக இயங்கும்  இந்த இரண்டு எண்ணைகளுமே மனிதனின் பாதுகாப்பு அரண்கள். இந்த விசயத்தை சீனிவாசன் அவர்கள் கூறும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பதிலுக்கு நாமும் அவருக்கு ஒரு வியப்பை அளித்தோம்.!


🌅டாக்டர்.எலிசபெத்
சாமுவேல் அவர்கள் கொழுப்பைப் பற்றியும்
செக்கெண்ணையின்
 அவசியத்தைப் பற்றியும் கூறிய
ஒளிபடத்தை அவரிடம் எடுத்துக் காட்டினேன். பார்த்து வியந்து, என்னங்க இது.! இயற்கை வழியில் வந்த மருத்துவர்கள் தான் இதுபோன்ற உண்மைகளை கூறி வருகிறார்கள்.! ஆனால், ஆங்கில மருத்துவ நிபுணரான இந்தம்மா இதை கூறுவது அதிசயமாய் தான் இருக்கிறது.! என்றார்; அதானே, ஆனாலும்,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை கூட
மறைக்க முடியாதே.!
பிறகெப்படி, இயற்கை ஞானத்தை மறைக்க முடியும்.! மனசாட்சி உள்ள மருத்துவர்கள் ஒப்புக்கொண்டாலே
போதும்.! மக்கள் ஆரோக்கியமும்
நமது முன்னோர் வாழ்வியலும்
பாதுகாக்கப்படும்.! என்றவாறு.!
பிரியாவிடைப் பெற்றேன்.!

உங்கள்  தேவைக்கு நேரடியாகவோ அல்லது
கூரியர்
 மூலமாகவோ
பெற்றுக் கொள்ளலாம்.!
நல்லெண்ணைய்,
தேங்காய் எண்ணைய்,கடலை எண்ணைய்

லிட்டர் -
300 ரூபாய்/-

தொடர்பிற்கு:9443284469
8124346169

ssss ஆயில் மில்
பாரதியார் நகர்,
சுத்தமல்லி,
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம்.!

இயற்கையோடு
 இயைந்து இன்புற்று
 வாழ்வோம் 🌺

-ஏகப்பிரியன் D.Y.T
amyogatrust.blogspot.in
100% இயற்கையான மூலிகை
தயாரிப்புகளுக்கு
Aum Herbals
Mobile:9629368389

Thursday, September 22, 2016

இலகுவான மருத்துவக் குறிப்புக்கள்

🖥1) பொன்மேனி தரும் குப்பைமேனி:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு:
பிரம்ம தண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை:
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு:
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு:
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி:
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி:
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி:
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு:
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு:
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்:
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை:
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர:
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை:
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்:
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்:
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்:
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ:
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி:
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர:
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு:
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ:
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டை காயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது:
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்:
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர:
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு:
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு:
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு:
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய:
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு:
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற:
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய:
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு:
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக:
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு:
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக:
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு:
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு:
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு:
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர:
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும்:
நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க:
சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக:
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு:
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக:
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி:
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய:
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய:
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய:
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு:
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க:
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு:
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக:
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு:
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்நோய் தீர:
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்நோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு:
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு:
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக:
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக:
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக:
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக:
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய:
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட:
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க:
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய:
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய:
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு:
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க:
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க:
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய:
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க:
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்:
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல:
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் வராது.!
98.கைக்குத்தல் அரிசியில் சுக்கை தட்டிப்போட்டு கஞ்சி காய்த்து குடித்துவர வாய்வுப்பிடிப்பு, வயிற்று உப்புசம் அகலும்.!
99.வெந்தயத்தை அரைத்தேக்கரண்டி அளவெடுத்து இரவில் அரைடம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் குடித்துவர
நீரழிவு கட்டுப்படும்.!
100.நல்லெண்ணைய்
பத்து துளியெடுத்து அதில் 8 துளிநீர்விட்டு விரலால் குளப்ப பசைபோன்று வரும் அதை முகச்சுறுக்கம், கருவளையம் உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் சென்று குளித்துவர அவை மாறும்.!

🍄இணையப்பகிர்வு

மண்ணின் மகத்துவம்

கைகால் வீக்கம், சிறிய அடிப்பட்ட காயம், கைகால் குத்தல், எரிச்சல்,
வலி,கட்டி,தேள்கடி,பாம்புகடி,சூதகக்கட்டி,இரத்தம் விழுதல், மூத்திரபந்தம், காசம்,தீப்பட்ட புண், மேகக்கட்டி, அரைக்கட்டி, பல்வலி, காதுவலி, கண்வலி, வயிற்றுவலி, அண்டவாதம், மூலம்,பகந்தரம்,நெறிகட்டிகள்,
ரணஜன்னி, நகச்சுற்றி, ராஜகட்டி, கண்டமாலை, தூக்கமின்மை, கால்வெடிப்பு,யானைக்கால்
வீக்கம், சிறுநீரக பழுது, மண்ணீரல்வீக்கம்,மண்ணீரல்கட்டி போன்ற வியாதிகளுக்கு மண்பற்று அளவில்லா சுகத்தை தரும்.! பாதிக்கப்பட்ட பகுதியில் அல்லது
வைத்தியன் தேர்ந்தெடுக்கும் பகுதியில் பற்றை ஈரமாகவும், கணமாகவும் போடவேண்டும். பற்றிட்டு திறந்த வெளியில் அரைமணி முதல் ஒரு மணிவரை இருப்பது நலமானது. மண்பற்று சீதள குணத்தை கொண்டது ஆதலால், உடல் அதிக குளிர்சியுடையவர்களுக்கு கொஞ்சம் வேகவைத்த மண்ணை பயன்படுத்தலாம். மண்காயகாய மேல்பற்று போட வேண்டும். அப்பொழுதும் சீதள உடம்புக்கா ரர்களுக்கு வேகவைத்த மண்ணை பயன்படுத்தலாம்.!

களிமண்,செம்மண் இரண்டுமே மண் பற்றிட ஏற்றவை. இரண்டு கிடைக்காவிட்டால் எந்த மண்ணையும்
சுத்திகரித்து மாவுபதமாக்கி பயன்படுத்தலாம்.!🌾

உள்மருந்தாக இரத்தவாந்தி, அதிக உதிரப்போக்கு போன்ற காலங்களில் துணைமருந்தாக பயன்படுத்தலாம். உடல்சுத்தி,தந்தசுத்தி போன்ற வகையிலும் மண்ணை பயன்படுத்தலாம்.!
-பாதர்த்த குணபோதினி

amyogatrust.blogspot.in
100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
Aum Herbals
 Mobile:9629368389

Wednesday, September 21, 2016

தேங்காய்

வான்கொண்ட அமிழ்தம் தேங்காய்
தேங்காய் உண்ட மனிதன் ஞானி
ஞானி சொன்ன வார்த்தை  வேதம்
வேதம் கண்ட மாயை பேதம்❄

உலகிலேயே சிறந்த உணவு தேங்காய் தான் இதை உலகமே ஒப்புக்கொண்டாலும்
இன்னும் சில மருத்துவர்கள்
ஒப்புக்கொள்ள வில்லை.!
"எனது மருத்துவர் என்னை கடந்த
பத்து ஆண்டுகளாகவே சக்கரையும் கொழுப்பும் இருப்பதால் தேங்காய் மட்டுமல்லாது எந்த கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளையும் எடுக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். நானும் கடந்த காலங்களில் அவ்வாறே வாழ்ந்து வந்தேன். ஆனால், சமீப காலங்களில் ஹீலர் பாஸ்கர் போன்ற சிலரின்  பேச்சைக் கேட்டு தேங்காய், வாழைப்பழம்,கருப்பட்டி, அசைவ உணவுகள் என்று அனைத்தையும் எடுத்துவருகிறேன். இன்று மிக ஆரோக்கியமாக உணருகிறேன்.!
பத்தாண்டுகளுக்கு முன்பே ஹார்ட் அட்டாக் வேறு வந்துவிட்டதால்
குடும்ப மருத்துவரின் ஆலோசனையில் பல மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தேன். இன்று அனைத்தையும் நிறுத்திவிட்டேன்.
யோகா செய்கிறேன், நிறைய இயற்கை தலங்களுக்கு  சென்று வருகிறேன், மிக மகிழ்வாக ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரே வருத்தம்தான் கடந்த பத்தாண்டுகளாக எனது மருத்துவர் என்னை ஏமாற்றி இருக்கிறாரே அதைதான் என்னால் தாங்க முடியவில்லை. என்று; ஒரு யோகா மாணவர் என்னிடம் குமுறினார். நான் கூறினேன். "அய்யா அவர் உங்களை ஏமாற்றவில்லை அவரையும் சேர்த்து இந்த வர்த்த உலகம் ஏமாற்றிவருகிறது. தேங்காய் ஏதோ தடை செய்யப்பட்டப் பொருள் போலவும் சூரியகாந்தி எண்ணைதான் உடலை ஒழுங்காக இயங்க வைக்கும் என்றும், இதயத்துடிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் ஆண்டுக்கணக்கில் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும் நாற்பது வயது ஆகிவிட்டாலே  அடிக்கடி மருத்துவசோதனை செய்வது முக்கியம் என்றும் திட்டமிட்டு BBC முதல் தினத்தந்தி வரை அடிக்கடி செய்திகளை பரப்புகிறார்கள். ஒரு பக்கம் எண்ணைய் குளியல் தேவையில்லை, தேங்காய் கெட்டது, இனிப்பு கெட்டது என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் தினமும் குறிப்பிட்ட அளவு பிராந்தி குடித்தால் உடலுக்கு நல்லது, பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி,கோக் குடிப்பதுதான் நாகரீகம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது மனித உரிமை, அவரவர் விருப்பப்படி வாழ்வதே சுதந்திரம் என்றெல்லாம்  செய்திகளை தொடர்ந்து கசிய விட்டுக்கொண்டே  இருக்கிறார்கள். ஒரு பக்கம்  நல்லதை பயன்படுத்த விடாமல் தடுத்து விடுகிறார்கள். இன்னொரு புறம் கெட்டது அத்தனையும் நல்லது என்று புகழ்பெற்ற பல்கலைகழகம், ஊடகங்கள், நடிகர்கள்,  மாடல்கள் என்று அத்தனை  வசதிகளையும் வைத்து அழகாக பரப்புகிறார்கள்.
இந்த உலகம் எதை பேசவேண்டும்
எதை உண்ணவேண்டும்
எந்த மாதிரியான வைத்தியம் பார்க்க வேண்டும் என்று அத்தனை
விசயங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தி வரும்போது அதன் மாயப்பிடியில் இந்த உலகமே தன்னை மறந்து நிற்கும் போது உங்கள் மருத்துவர் மட்டும் எப்படி தான் கற்ற மருத்துவத்தை மறக்காமல் இருப்பார். ஒருவேளை அவரே கொலஸ்ட்ராலுக்கு தேங்காய் நல்லது என்று கூறினாலும் இந்த உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?
அனைத்தும் உண்மையையும் மாயை
மறைத்துக் கொண்டுள்ளதல்லவா?
இத்தகைய கொடிய வர்த்தக காலத்தில் கூட மாயையை கடந்து நீங்கள் மாரடைப்பிற்கு தேங்காவும்
சக்கரைக்கு கருப்பட்டியும் சாப்பிடும்
வரம் பெற்றுள்ளீர்களே அதுதான்
அதேதான் உங்கள் அதிஷ்டம்.!
இதற்காக இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள் " என்றதும்; உண்மைதான் என்று  கூறிவிட்டு நமது பிள்ளைகளுக்கும் இந்த உண்மைகள் விளக்கிக் கூறவேண்டும். என்றபடி விடைப்பெற்றார்.!
மூன்னோர் வழி நம் பெற்றதெல்லாம் அரிய இரத்தினங்கள் அதை நவீன ஆராய்ச்சி என்று கூறப்படும் சாக்கடையில் கொட்டாமல் பாதுகாப்பது

நமதுகடமை.!
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன். மு.இஸ்மாயில் DYT
amyogatrust.blogspot.in
100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு Aum Herbals
Mobile:9629368389

எளிய இயற்கை மருத்துவம்:-

கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.!

🍀இணையப்பகிர்வு

Tuesday, September 20, 2016

மனமெல்லாம் பணத்தின் மணம்

உடுக்க ஒரு வேட்டி
குடிக்கக் கூழு
படுக்க பத்தடி
படிக்க நல்லறம்
பிணிதடுக்க வேப்பமரம்
உயிர் துடிக்க பிராணக்காற்று
உடல் வளர்க்க ஒரு பணி
வாழ்வினிக்க ஒரு கன்னி  இவை
போதும் நம்  உயிர்கடக்க …

காலில்  ஒரு தோல்சுத்தி
கழுத்தில்
 ஒரு நாய்  வளையம்
வெப்பம் கொல்லும்
வேளையிலும்
பகட்டாய் ஒரு மேலங்கி
இதுதான்  
பண உலகின் ஆடை …

மேல் நாட்டுப்பயி்ர் வாங்கி பகலெல்லாம்
விசம் தெளித்து
பகட்டாய் வளர்த்தெடுத்து
பதமாய் பறிமாறும்
நஞ்சே பண உலகின் உணவு …

மூன்று பக்கமும் சுவர் மூடி மூவர்ண  இரசாயணமடித்து
 நடுவினில் ஒரு துளையிட்டு உயிர் எரிய  குளிரூட்டி
இரவெல்லம்
தன் நஞ்சையே சுவாசித்து
பிணம் போல பளப்பளப்பாய்
படுக்கையில் புரளுவதே
பண உலகின் உறக்கம் …

தட்சனை பலலட்சம்
கட்டணம் சிலலட்சம்
வாழ்வின் பாதிகாலம்
வெட்டியான ஏட்டுக்கல்வி
நல்லறங்கள் பேணாமல்
நம்முடலை பங்கு வைத்து
பணம் பண்ணும் பராந்து கூட்டத்தை
உருவாக்குவதே பண உலகின்
கல்விமுறை …

இரசாயண கழிவுகளையும்
தன் வீட்டுக் குப்பைகளையும்
ஊர்நதியில் கொட்டிவிட்டு
சுகம்  காணும் மனிதர்களும்,
தன் வளத்தை கூறுப்போட்டு
உலக வாய்க்கு தாரைவார்த்து
கமிசன் வாங்கும் இடைத்தரகு
அரசியல்வாதிகளும்,
என் தலைவன் மலம் மணக்கும்
என்றலையும் தொண்டர்களும் ,
காதலிற்கும் காமத்திற்கும்
வரிதெரியா பிண்டங்களும்
பண உலகின் மாண்புமிகு மாந்தர்கள் …

அத்தனைக்கும் ஆசைப்படுபவனே
பண உலகின் துறவி
அவன்கூட வான்புரவியில் வந்தால் தான்  ஞானியென்று  நீ கவனி …

உண்மை இவ்வாறு இருக்க
நான் மட்டும் எவ்வாறு வெறும்
கையில் முத்திரைப்பிடிக்க …

எனக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அல்லவா,
அவர்களும்  பண உலகில் கல்லூரிக்கு செல்கிறார்கள்  அல்லவா?
புரிந்துகொள்ளுங்கள் பணவான்களே.!

-ஏகப்பிரியன்
amyogatrust.blogspot.in

கடுக்காய்

தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.

தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.

வேறு பெயர்கள் –: அமுதம்.

வகைகள் –:

ஏழு வகைப்படும்.

அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.

பயன் தரும் பாகங்கள் –:

காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.

வளரியல்பு  –:

கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

 இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும்.

இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும்.

 இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும்.

நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது.

 விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும்.கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன.

மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன.

புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.

கடுக்காயின் மருத்துவப் பயன்கள்–:
கடுக்காயில் ஆறு சுவையில்  உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

 காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

 காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள்.

கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.

கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து,  நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்

கடுக்காய் – மருத்துவ பயன்கள்

கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும். காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.

கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும்.

கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும்.

சமவெளியில் அரிதாக கடுக்காய் மரங்கள் வளர்கின்றன. மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். கடுக்காய் அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது

எச்சரிக்கை

சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதைத் தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.

கடுக்காய்த் தூள் அல்லது கடுக்காய்ச் சூரணம்:

கடுக்காயைக் கொட்டை நீக்கி, மேல் தோலைச் சேகரித்து, காயவைத்து, தூள் செய்து, பருத்தித் துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இருவேளைகள், மோரில் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, இரவில் 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டுவர செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீரும்.

கடுக்காய்த் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பலவகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.

கடுக்காய்த் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து, பல் துலக்கிவர ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.

கடுக்காய்த் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்ய ஈரல் விருத்தியடையும்.

திரிபாலா சூரணம்

விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.

புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான்.

இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும்,

காற்றினால் வாத நோய்களும்,

நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய எளிய வழி:

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

துவர்ப்பு

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இளமை பெற

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்துசாப்பாடிற்க்கு முன் அருந்தலாம்

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌎இணையப்பகிர்வு

கடுக்காய்

தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.

தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.

வேறு பெயர்கள் –: அமுதம்.

வகைகள் –:

ஏழு வகைப்படும்.

அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.

பயன் தரும் பாகங்கள் –:

காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.

வளரியல்பு  –:

கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

 இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும்.

இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும்.

 இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும்.

நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது.

 விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும்.கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன.

மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன.

புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.

கடுக்காயின் மருத்துவப் பயன்கள்–:
கடுக்காயில் ஆறு சுவையில்  உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

 காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

 காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள்.

கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.

கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து,  நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்

கடுக்காய் – மருத்துவ பயன்கள்

கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும். காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.

கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும்.

கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும்.

சமவெளியில் அரிதாக கடுக்காய் மரங்கள் வளர்கின்றன. மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். கடுக்காய் அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது

எச்சரிக்கை

சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதைத் தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.

கடுக்காய்த் தூள் அல்லது கடுக்காய்ச் சூரணம்:

கடுக்காயைக் கொட்டை நீக்கி, மேல் தோலைச் சேகரித்து, காயவைத்து, தூள் செய்து, பருத்தித் துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இருவேளைகள், மோரில் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, இரவில் 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டுவர செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீரும்.

கடுக்காய்த் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பலவகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.

கடுக்காய்த் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து, பல் துலக்கிவர ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.

கடுக்காய்த் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்ய ஈரல் விருத்தியடையும்.

திரிபாலா சூரணம்

விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.

புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான்.

இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும்,

காற்றினால் வாத நோய்களும்,

நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய எளிய வழி:

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

துவர்ப்பு

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இளமை பெற

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்துசாப்பாடிற்க்கு முன் அருந்தலாம்

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌎இணையப்பகிர்வு

கடுக்காய்

தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.

தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.

வேறு பெயர்கள் –: அமுதம்.

வகைகள் –:

ஏழு வகைப்படும்.

அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.

பயன் தரும் பாகங்கள் –:

காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.

வளரியல்பு  –:

கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

 இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும்.

இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும்.

 இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும்.

நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது.

 விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும்.கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன.

மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன.

புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.

கடுக்காயின் மருத்துவப் பயன்கள்–:
கடுக்காயில் ஆறு சுவையில்  உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

 காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

 காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள்.

கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.

கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து,  நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்

கடுக்காய் – மருத்துவ பயன்கள்

கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும். காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.

கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும்.

கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும்.

சமவெளியில் அரிதாக கடுக்காய் மரங்கள் வளர்கின்றன. மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். கடுக்காய் அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது

எச்சரிக்கை

சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதைத் தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.

கடுக்காய்த் தூள் அல்லது கடுக்காய்ச் சூரணம்:

கடுக்காயைக் கொட்டை நீக்கி, மேல் தோலைச் சேகரித்து, காயவைத்து, தூள் செய்து, பருத்தித் துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இருவேளைகள், மோரில் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, இரவில் 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டுவர செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீரும்.

கடுக்காய்த் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பலவகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.

கடுக்காய்த் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து, பல் துலக்கிவர ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.

கடுக்காய்த் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்ய ஈரல் விருத்தியடையும்.

திரிபாலா சூரணம்

விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.

புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான்.

இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும்,

காற்றினால் வாத நோய்களும்,

நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய எளிய வழி:

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

துவர்ப்பு

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இளமை பெற

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்துசாப்பாடிற்க்கு முன் அருந்தலாம்

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌎இணையப்பகிர்வு

கடுக்காய்

தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.

தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.

வேறு பெயர்கள் –: அமுதம்.

வகைகள் –:

ஏழு வகைப்படும்.

அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.

பயன் தரும் பாகங்கள் –:

காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.

வளரியல்பு  –:

கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

 இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும்.

இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும்.

 இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும்.

நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது.

 விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும்.கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன.

மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன.

புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.

கடுக்காயின் மருத்துவப் பயன்கள்–:
கடுக்காயில் ஆறு சுவையில்  உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.

 காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

 காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள்.

கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.

கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.

மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து,  நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்

கடுக்காய் – மருத்துவ பயன்கள்

கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல்நோய், கண்நோய்கள், கோழை, மூலம் இருமல் ஆகியவற்றைப் போக்கும். காயங்களை ஆற்றுவதற்கும் தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

கடுக்காய் பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும் அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.

கடுக்காய் மர வகையைச் சார்ந்தது. 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக்கூடியது. பல ஆண்டுகள் வாழும். கடுக்காய் மரத்தின் இலைகள் பசுமையாகவும,; தனித்தும், 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் இணைகளாகவும் காணப்படும்.

கடுக்காய் பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை, கிளைகளின் நுனியில் காணப்படும். கடுக்காய் முதிரா கனிகள் பசுமையானவை, முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. கடுக்காய் கனிகள் 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காணப்படும்.

சமவெளியில் அரிதாக கடுக்காய் மரங்கள் வளர்கின்றன. மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். கடுக்காய் அதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது

எச்சரிக்கை

சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதைத் தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.

கடுக்காய்த் தூள் அல்லது கடுக்காய்ச் சூரணம்:

கடுக்காயைக் கொட்டை நீக்கி, மேல் தோலைச் சேகரித்து, காயவைத்து, தூள் செய்து, பருத்தித் துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இருவேளைகள், மோரில் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

கடுக்காய்த் தூள் ½ தேக்கரண்டி அளவு, இரவில் 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டுவர செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீரும்.

கடுக்காய்த் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பலவகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.

கடுக்காய்த் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து, பல் துலக்கிவர ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாகும்.

கடுக்காய்த் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்ய ஈரல் விருத்தியடையும்.

திரிபாலா சூரணம்

விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு, கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூரணம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும்.

புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்த வேண்டும். இதை ஒரு மந்திர மருந்தாக உணரலாம்

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான்.

இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும்,

காற்றினால் வாத நோய்களும்,

நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய எளிய வழி:

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

துவர்ப்பு

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இளமை பெற

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்று கூறுவர்.

காலையில் இஞ்சி சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து தெளிவித்து கீழ்தங்கும் வண்டலை தவிர்த்து 15மிலி எடுத்து சமளவு தேன் சேர்த்துசாப்பிடலாம்

மதியம் சிறிது சுக்கு தூளை சுடுநீரில் கலந்துசாப்பாடிற்க்கு முன் அருந்தலாம்

இரவு உணவிற்க்கு பின் கடுக்காய் தூளை சுடு நீரில் கலந்து அருந்தலாம்

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

🌎இணையப்பகிர்வு