Friday, October 21, 2016

இன்றைய மருத்துவ குறிப்புகள் 22/10/2016

[10/21, 15:20] Am Yoga: சத்தை சிதைக்கும்
குளிர்சாதனப்பெட்டி

நமது சமையலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது தக்காளி. அடிக்கடி விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட, நமது உணவில் தக்காளி இல்லாமல் இல்லை. பெரும்பாலும் நாம் தேர்வு செய்யும் தக்காளியானது நன்றாக சிவப்பு நிறத்திலும், கருப்பாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலும் விரும்புவோம். அப்படிப் பார்த்து வாங்கிய, அந்த தக்காளியை வாங்கிக்கொண்டு வந்து அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி அந்த தக்காளிகளை  ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதுபற்றிய ஆய்வறிக்கையை கடந்த திங்கட்கிழமை, வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சியானது தக்காளியின் மரபணுவில் நடத்தப்பட்டது.

 தக்காளியைக் கடையில் வாங்குவதில் இருந்து அதை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது வரை தொடர்ச்சியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேர்வுசெய்யப்பட்ட தக்காளியை குளிரூட்டும்போது தக்காளியில் உள்ள என்சைம்கள் செயலிழக்கின்றன. இந்த என்சைம்கள்தான் நொதித்தலுக்கு உதவும். ஆனால், விவசாயிகள் கொண்டுவரும் தக்காளியில் இருந்த என்சைம்கள் அப்படியே இருந்திருக்கிறது. இந்த ஒப்பீடுகளின் முடிவில் அந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் "தக்காளி அறுவடைக்கு முன்னர் வரை அதன் மரபணுக்களில் எந்தவிதமான வித்தியாசமும் தெரிவதில்லை. அறுவடைக்குப் பின்னர் குளிரில் வைக்கப்படுவதால், அதன் சுவை மட்டுமல்லாமல் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகிவிடும். இதனால் தக்காளி கனிவது தாமதமாகும். இந்த தாமதப்படும் நேரத்தில்தான் என்சைம்கள் தங்களின் வேதித்தன்மையை இழக்கின்றன. குளிரின் தன்மை குறைவாக வைக்கும்போது தக்காளிதோல் கெட்டியாவது தடுக்கப்படும். ஆனால் பழத்தின் சுவை குறைவது மட்டும் நிச்சயம். தக்காளியின் சுவையை அதிலுள்ள அமிலம், சர்க்கரை உள்ளிட்ட 15 முதல் 20 விதமான மூலக்கூறுகள்தான் தீர்மானிக்கிறது. மேலும் அந்த ஆராய்ச்சியில் குளிரில் தக்காளிகளை சேமிப்பதால் இனிப்பு மற்றும் அமிலத்தில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது, ஆனால், தக்காளிப் பழத்தின் வாசனை இல்லாமல் போய்விடும். இந்த ஆராய்ச்சிக்கு புளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கைனேஸ்வில்லெ-ல் பசுமைக்குடிலில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு தக்காளி பயிரிடப்பட்டு இந்த ஆராய்ச்சி நடந்தது.

முதல் குழுவினர் தக்காளியை 5 டிகிரி செல்சியஸ், 92 சதவீதம் ஈரப்பதத்தில் ஏழு நாட்கள் வைத்திருந்தனர். அதன் பின்னர் ஒருநாள் மட்டும் 20 டிகிரி செல்சியஸ்க்கு, மாற்றி எட்டாம் நாள் ஆராய்ச்சி செய்தனர்.

இரண்டாவது குழுவினர், தக்காளி சுற்றுப்புற வெப்பநிலை இல்லாமல் எட்டு நாட்கள் 5 டிகிரி செல்சியஸ் அளவில் குளிரூட்டி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

 மூன்றாவது குழுவினர், தக்காளி குளிரூட்டாமல் ஒருநாள் தாமதமாக ஒன்பதாம் நாள் ஆராய்ச்சி செய்தனர். இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குளிரூட்டப்பட்ட தக்காளியின் சுவை, என்சைம்கள் மற்றும் அதன் சத்து மூலக்கூறுகள் 65 சதவிகிதம் குறைகிறது. தக்காளி என்ற பெயரில் வெறும் சக்கையை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறோம். இது தக்காளிக்கு மட்டுமல்ல, மற்ற காய்கறிகளுக்கும்தான். ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரியான் வாயு  பழங்களுடனும், காய்கறிகளுடனும் வேதிவினை புரிவதால் பழத்தின் தன்மை ஏறக்குறைய உடலுக்கு ஏற்ற தன்மையை இழக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.!

🍅இணையப்பகிர்வு
[10/21, 21:04] Am Yoga: சுகமான🎯தியானம்

" உணர்வுநிலை உருவம்
உணர்வற்ற நிலை அருவம்
உணவுர்வு கடந்த உணர்வற்ற
நிலை தியானம் "

எப்பொழுதும் எதையாவது ஒன்றையோ பலதையோ
சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே மனதின் வேலை. மனம் என்பது எண்ணக்குவியல் தோன்றும்
இடத்தின் பெயர்.!
சூரியவெப்பம் விநாடிக்கு ஒரு லட்சத்து எம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமிக்கு வருவதாக
கண்டறிந்து விட்டனர். மனதின் வேகம் என்னவென்று இதுவரை
திட்டவட்டமாக கூற முடியவில்லை.!
மனதின் வேகம் மனிதனிற்கு தகுந்தவாறு மாறிக்கொண்டே
இருப்பதாலேயே  அது
சாத்தியப்படவில்லை.!
நாம் உண்ணும் உணவில் உள்ள மிக நுண்ணிய சத்துப்பகுதிகளை மூளை தனது உணவாக எடுத்துக்கொண்டு எண்ணத்திற்கு தேவையான எரிசக்தியை வழங்கிவருகிறது.!
மனதில் தோன்றும் எண்ணம் ஒரு குரங்கிற்கு ஒப்பானது.! இந்த எண்ண அலைகளை நிறுத்திவிட்டால் இதற்காக உடல் இதுவரை செலவழித்து வந்த சக்தி உடலின் மற்ற பகுதிகளுக்கு சென்று உடலை, உள்ளுறுப்புகளை, நரம்புமண்டலங்களை பலப்படுத்தும்  வேலைக்கு பயன்படும்.!
எண்ணம் மூன்றுவிதமாக இடைவிடாது மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.! கடந்தகால நிகழ்வுகளின் தொடர்ச்சி, நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால
எதிர்ப்பார்ப்புகள் என்று இயங்கிக் கொண்டே இருக்கும்.! இதற்குள் ஏமாற்றம், பயம், அகங்காரம்,
 நம்பிக்கை,  வெற்றி,உற்சாகம், சோர்வு போன்ற எண்ணற்ற உணர்வுகளின்  பதிவுகள் தொடர்ந்து மனதை ஏதோ ஒரு நிலையில் செலுத்திக் கொண்டே இருக்கும்.! விளைவு இரவில் உடல் உறங்கும்போது  ஏன் மனமே உறங்கும் போது கூட எண்ண அலைகள்  உறங்காது இடைவிடாது பணி செய்துகொண்டே இருக்கும்.!
இதனால் தான் தூக்கத்தில் உளறுதல், சிரித்தல். நாம் ஏதாவது பணியில் இருக்கும் போது எங்கோ கேட்ட பாடல் நமக்குள்ளே
ஒலித்துக் கொண்டிருத்தல், காரணமே இல்லாமல் தோன்றும் இனம் புரியாத பய உணர்வு, திடீர் மகிழ்ச்சி போன்ற பல்வேறு  உணர்வுகளும் எண்ணங்களும் நமக்குள் தோன்றுகின்றன.! இது போன்ற எண்ணங்களை முறைப்படுத்தி  எண்ணங்களை ஒரே இலக்கை நோக்கி செலுத்தவும், எண்ணம் கடந்த நிலையான ஒன்றுமில்லா ஒன்றில் நிலைக்க செய்யவும் நமக்கு இருக்கும் ஒரே வலிமையான கருவி தியானம் மட்டும் தான்.! பக்தி,
மந்திர உட்சாடனம்,சேவை செய்தல்,தனது கடமைகளை தவறாது செய்தல் போன்ற இன்னும் எண்ணற்ற வழிகள் மனதை ஒரே நேர்கோட்டில் செலுத்த உள்ளன. ஆனால், அவையாயும் தியானத்தை விட மிக கீழான நிலையில் உள்ள தந்திரங்களே.! ஏனெனில்,
தியானத்தை தவிர மற்றவை அனைத்தும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணக்குவியல்களை மனதில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டே இருக்கும்.!ஆனால், தியானத்தில் நிலைபெற்ற மனதில் எண்ணமே நின்று அதற்கடுத்த நிலையான சமாதிநிலை தோன்றும். சமாதி நிலையை கடக்கும் ஆற்றல் உள்ள மனமே சம்யமா என்னும் மறைபொருளை உணரும் உச்ச ஆற்றலை பெறுகிறது.!
தியானத்திற்கு பிறகு
 சமாதி,சம்யமா என்ற இரண்டு நிலைகள் இருப்பது போலவே
தியானத்திற்கு முன்
 பிரத்தியாகாரம், தாரனை என்ற இரண்டு நிலைகள் உள்ளன.!
அதாவது மனதை புலன்வழி செல்லாமல் தடுத்து அதை உள்முகமாக திருப்புதல் பிரத்தியாகாரம் எனப்படும்.
அப்படி உள்முகமாக திருப்பிய ஆற்றல் அதே நிலையில் 12 விநாடிகள் நிற்பது தாரனை. குறைந்தது 12 தாரனையின் கால அளவு ஒரேப்பொருளை சிந்திப்பது தியானம். ஒரேப்பொருளை சிந்தித்த மனது, சிந்தனை இரண்டும் ஒன்றாகி ,லயித்து அப்படியே நின்றுவிடுவதே சமாதி. அப்படியே நின்றுவிட்ட ஆற்றல் பரம்பொருளான பிரபஞ்ச ஆற்றலுக்குள் நுழைந்து அதன் உண்மை தன்மையை கண்டறிவதே சம்யமம். இதுவே தியானத்தின் உச்சநிலை. இதுவே ஞானம்.! சிலர் இந்தநிலைக்கு செல்வதற்கான முயற்சியில் மனப்பிரழ்வு ஏற்பட்டு மனநோயாளி ஆவதும் உண்டு.!
சரி நாம் அதற்குள் போக வேண்டாம். சிந்தனையை கடந்து
தியான நிலைக்கு போவதை மட்டும் பார்ப்போம்.! எந்த எண்ணம்
மனதில் உதித்தாலும் அதை 12 விநாடி நேரத்திற்குள் கடந்துவிட்டால் எண்ணம் நம்மை விட்டு போய்விடும். 12 விநாடிகள் கடந்தும் ஏமாற்றம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதை நாம் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்தாலும் அந்த எண்ணம் நமக்குள் ஆழமாக ஊடுருவி தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிடும்.!
அதனால் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வெருவரும் வீணான எந்த
சிந்தனைகளையும் பனிரெண்டு
விநாடிகளுக்குள் கடந்து  தங்களுக்கு பிடித்த கடவுள், இயற்கைகாட்சிகள்,மந்திரங்கள் போன்றவற்றையோ அல்லது மூக்கு நுனியையோ தொடர்ந்து  120 விநாடி முதல்  12 நிமிடம் வரை மனக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தால் தியானநிலை உருவாகும்.! இப்படி ஒரேப் பொருளை நாம் நினைக்க
ஆரம்பிக்கும் போது இதுவரை பல எண்ணங்களில் செலவாகி வந்த நமது ஆற்றல் ஒரு முகமாவதால்
பூரண ஓய்வு, உடல் ஆரோக்கியம், நரம்பு மண்டல ஆரோக்கியம், நாள்ப்பட்ட பிணியிலிருந்து விடுதலை எண்ணிய குறிக்கோளில் வெற்றி போன்றவற்றில் நாம்
 விரும்பிய  எதையும் அடையலாம்.!  
இந்த உண்மையை உணர்ந்ததால் தான்  மகாகவி பாரதியார்
"தமிழா பலநாள் சாப்பிடாமல் இருந்தாலும் இரு. ஆனால், ஒருநாள் கூட தியானம் செய்யாமல் இருக்காதே "என்றார்;
வாருங்கள்,எண்ணங்களிலிருந்து விடுதலைப்பெற்று பூரண
அமைதி பெற சுகமாக தியானம்
செய்வோம்.!

---ஏகப்பிரியன் DYT----

யோகா & இயற்கை
மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் 💐
[10/21, 21:09] Am Yoga: காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தேநீர், காபி போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சியை தந்தாலும், காலை நேரத்தில் பழச்சாறுகள் குடிப்பதல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
காலையில் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ,
சத்துக்கள்:
வெள்ளைப் பூசணியில் விட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.
முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும்.
அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
2. தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
3.வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
4.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
5. வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
6. சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.!

💐இணையப்பகிர்வு
[10/21, 21:13] Am Yoga: *சுக்கு மருத்துவம்*
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.!

⚡இணையப்பகிர்வு

No comments:

Post a Comment