Monday, January 30, 2017

இயற்கை வழியில் வாத நோய்களை குணப்படுத்துங்கள்

முடக்கத்தானை சீராக உணவில் சேர்த்துவந்தால், வாத நோய்கள் நீங்கும், உடல் பலமடையும், மலம் இளகும், பசியைத் தூண்டும், கரப்பான் முதலான தோல் நோய்கள் நீங்கும்.

முடக்கத்தான் கீரையைப் பச்சையாக எடுத்து, ரசமாகச் செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டுவந்தால், கை, கால் குடைச்சல், மூட்டுவலி நீங்கும்.

முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி, மூட்டுகளில் ஏற்படும் கீல்வாதம், வீக்கம், வலி இருக்கும் இடத்தில் கட்டுப்போட்டுவந்தால், வலி, வீக்கம் குறைந்து, நோய் குணமாகும்.

முடக்கத்தான் கீரையைத் தனியாகவோ அதன் வேருடன் சேர்த்தோ நீரில் கலந்து குடித்துவந்தால், மூலநோய், நாள்பட்ட இருமல் நீங்கும்.

முடக்கத்தான் கீரையை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.
 கைப்பிடியளவு முடக்கத்தான் கீரையை பொடியாக நறுக்கி, அரைத்த புழுங்கல் அரிசி மாவுடன் சேர்த்து, உப்பு தேவையான அளவு சேர்த்து, அடையாக சுட்டு காலை, மாலை இரண்டு அடை வீதம் சாப்பிட்டு வர உடல் வலி நீங்கும்.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
 முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும். இந்த நோய்கள் வருவதற்கு முன்பே சாப்பிட்டால் வராமல் தடுக்கலாம். 40 வயது தொடங்கியவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.
இதனைச் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம்.
இரண்டு கைப்பிடி அளவு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய முடக்கத்தான் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும்(தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம்) பூண்டு நான்கு பல், இஞ்சி சின்னத்துண்டு, சிறிய வெங்காயம் ஒன்று, மிளகு அரைத்தேக்கரண்டி, சீரகம் அரை தேக்கரண்டி. இவைகளை ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவேண்டும். பிறகு இரண்டு குவளை நீர் ஊற்றி நல்லா வேக வைக்கவேண்டும். கீரை நல்லா வெந்து அதன் சாரம் நீரில் இறங்கிய பிறகு வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் சாறு தயார். மூட்டுகளில் தங்கிய எல்லா எதிரிகளும் கரைந்து இருந்த இடம் தெரியாமல் ஓடிடும்.!

*இணையப்பகிர்வு*

Sunday, January 29, 2017

*ஒவ்வாமையை போக்க இயற்கை வழிகள்* (Allergy)

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் ஒரு முறையேனும் உபயோகிக்கும் வார்த்தை "ஒவ்வாமை" (Allergy). இது ஏற்படுவதற்கான காரணங்களையும் அதைப் போக்குவதற்கான சில வழிமுறைகளையும் நாம் இங்கு காண்போமா?

எப்படி ஏற்படுகிறது?

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை ஆங்கிலத்தில் allergen (or) antigen என்றழைக்கின்றனர். இந்த அலர்ஜென் தோல் மூலமாக நேரடியாகவோ, இதர உடல் உறுப்புகளின் மூலமாகவோ உடம்பினுள் சென்றடைந்ததும், இரத்த ஓட்டத்தின் மூலமாக திசுக்களைச் சென்றடையும். நம் உடம்பின் எந்த பாகமும் ஒவ்வாமையினால் தாக்கப்படலாம்.

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியப் பொருட்கள் :

தூசு, மகரந்தம், அழகு சாதனப் பொருட்கள், விலங்குகளின் முடி, விஷச் செடிகள், சில மருந்து, மாத்திரை வகைகள், தடுப்பூசிகள் மற்றும் பலவகையான உணவுப் பொருட்கள். உணவுப் பொருட்களில் தோடம் பழங்கள் (oranges), செம்புற்று பழங்கள் (Strawberries), பால், முட்டை, கோதுமை, மீன், கடல் வாழ் உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் தக்காளி அதிக அளவில் பயன்படுத்தினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். வெப்பம், குளிர், சூரிய ஒளி போன்ற இயற்கை் சூழ்நிலைகளில் மிதமிஞ்சிய அளவில் உலாவுவதும்  ஒவ்வாமைக்குக் காரணிகளாக அமைகின்றன.
கல்லீரல் அலர்ஜி, வீக்கம், பித்தப்பை கல், மஞ்சள் காமாளை நோய் இருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும். சுத்திகரிக்கப்பட்ட உணவுவகைகள் அதிகமாக உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அவ்வாறு சுத்திகரிக்கப்படும் பொருட்கள் பலவேறு ரசாயனங்கள் மிகுந்து காணப்படுவதே இதன் காரணமாகும்.

உணர்ச்சி வசப்படுதல் மற்றும் உளவியல் அழுத்தம் காரணங்களாலும் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஒவ்வாமையினால் ஏற்படும் தொல்லைகள் :

தலைவலி, மைக்ரெய்ன் (migraine), தலைசுற்றல், நமைச்சல், மனஅழுத்தம், மனக்கவலை, காய்ச்சல், சளி, வயிற்றுபோக்கு, வாந்தி, முகம் மற்றும் கண்கள் வீங்குதல், ஆஸ்துமா போன்றவை ஒவ்வாமை ஏற்பட்டதற்கான அறிகுறிகள்.

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விதமாக தாக்கும் தன்மை கொண்டவை.

ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள் :

1. 500 ml கேரட் சாறு மட்டுமாக அல்லது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி, இம்மூன்று காய்கறிச் சாறுகளின்கலவை ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த உதவும்
இம்மூன்று காய்கறிச் சாறுக அளவு விகிதம் கீழ்கண்டவாறு அமையவேண்டும் :
500 ml - கேரட் சாறு
100 ml - பீட்ரூட் சாறு
100 ml - வெள்ளரிக்காய் சாறு

தினமும் ஒருமுறை கேரட் சாறோ அல்லது மூன்று காய்கறிகளின் சாறின் கலவையையோ அருந்துவதன் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாம்.

பலவகையான உணவுப் பொருட்கள், அஜீரணக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளை நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் உட்கொள்ளுதல் மூலமாகப் போக்கலாம். வாழைப்பழத்தின் மூலமாக ஒவ்வாமைக்குள்ளாவோர் இதனைத்தவிர்ப்பது நன்று!

2. வைட்டமின்கள் A, C, E சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாமென்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், கேரட், காலிப்ளவர், சோளம், வெள்ளரி, வெங்காயம், பச்சைப்பட்டாணி, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் C நிறைந்துள்ளது.

வைட்டமின் A நிறைந்துள்ளவை தர்பூசணி, மாம்பழம், கேரட், பச்சைப்பட்டாணி, பீட்ருட் மற்றும் பூசணிக்காய் ஆகும்.

3. நிறைய குடிநீர் அருந்துதல் மூலம் மற்றும் ரசாயன முறைகளில் பக்குவப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

4. நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

5. கால்த்தேக்கரண்டி துளசி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில்  உண்பதால் ஒவ்வாமையை கட்டுப்படுத்தலாம்.

6. நம் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் மூலமும் ஒவ்வாமை ஏற்படுதலைத் தவிர்க்கலாம்.

7. பூண்டு ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்தாக உதவுகின்றது. ஆஸ்துமாவின் ஆரம்ப நாட்களில் அவதிப்படுபவர்கள், பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்தப்பின் அருந்துவதால் நல்ல நிவாரணம் பெற முடியும்.

8. பால் அல்லது குடிநீருடனோ அல்லது தனியாகவோ தேனை அருந்துவதால் சுவாசம் சீர்பட்டு ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமா கோளாறு நீங்கும்.

9. வெளியில் சென்று வந்தவுடன் நன்றாக குளிப்பதால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.!

*இணையப்பகிர்வு*

மல்லிகை மருத்துவம்

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்...

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.!

*இணையப்பகிர்வு*

இயற்கை வழியில்கு ழந்தை பாக்கியம்

குழந்தை இல்லாத தம்பதிகள் இன்று அதிகமாக பெருகி வருகிறார்கள்.
இதற்கு இன்றைய வாழ்க்கை முறையும் இரசாயண உணவு முறையும் ஒரு முக்கியக்காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆண், பெண் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்வது கூட குழந்தை பெறும் வாய்ப்பை குறைக்கும். அதன் பிறகு கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்லுதல்
குடும்பப் பிரச்சனைகள் போன்றவை, மன அழுத்தம், சரிவிகித உணவின்மை, உடல் குறைபாடு, கற்பபையில் கோளாறு, விந்தணுக்குறைபாடு போன்ற காரணங்களாலும் குழந்தை உருவாவதில் தாமதம் ஏற்படுகிறது.
திருமணமாகி ஒரு ஆண்டுவரை குழந்தை இல்லாவிட்டால் உடனடியாக ஆண்,பெண் இருவரும்  உடல் பரிசோதனையை செய்து கொண்டு வாழ்க்கை முறையை மாற்றிகொள்ள வேண்டும். முதலில் யோகா, உணவு முறை, இயற்கை வாழ்க்கை முறையை பயின்று உடலை சீர்செய்து கொண்டு
மண்பானையில் சமைத்து சாப்பிடுதல், எந்த இரசாயண உணவையும் சாப்பிடாமல் தவிர்த்தல், தினமும்  ஆண்,பெண் இருவருமோ அல்லது பெண் மட்டுமாவது இரண்டு மணி நேரம் இடுப்புக்குளியல் செய்ய வேண்டும். அதாவது  இடுப்பளவு நீர் நிறைந்த ஒரு பெரிய  டப்பில் தினமும் இரண்டு மணி நேரம் அமர்ந்திருக்க வேண்டும். ஆண் தினமும் இரண்டு வேளை குளிக்கலாம்.!
மாதவிடுமுறை கழிந்து 5 முதல் 25 நாட்களுக்குள்  இல்லறத்தில் ஈடுபடுவது நல்லது. அதிலும் குறிப்பாக மாதவிடுமுறை முடிந்ததும் வரும் மாதத்தில் முதல் பத்து இறுதி பத்து நாட்களை கழித்து நடுவில் உள்ள  நாட்களில் உறவு கொள்வது. மிக நல்ல பயனை கொடுக்கும்.
அசைவ உணவுகளை குறைத்துக்கொண்டு இயற்கை தானியங்கள் பழங்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.

*குழந்தை உருவாவதற்கு ஏற்ற சில உணவுகள்*

15 பேரீச்சம் பழத்தை விதை நீக்கி ஒருமண் சட்டியில் போட்டு  ஒரு லிட்டர் பசும்பாலும் ஊற்றி கிளறி  வரவும் நன்றாக பாலும் பழமும் கலந்து இறுகும் நேரம் இரண்டுத் தேக்கரண்டி தேன்கலந்து  இறக்கி நன்றாக ஆறும் முன் இதமான சூட்டில் வாயகன்ற கண்ணாடிப்பாத்திரத்தில் போட்டுவைத்து தினமும் இரண்டு வேளை வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி விதம் தம்பதிகள் இருவரும் உண்டுவரலாம்.
தினமும் கம்பு, வரகு,குதிரைவாலி,கேழ்வரகு,பாதாம்,பிஸ்தா,முந்திரி,வேர்க்கடலை போன்றவற்றை 100 கிராம் வரை நேரடியாக அல்லது இதையெல்லாம் சேர்த்து இயற்கை ஊட்டச்சத்து மாவாக தயாரித்து தினமும் ஒருவேளை மதியத்திற்குள் உண்டுவருவது மிகுந்த பயனை கொடுக்கும். அதோடு வாழைப்பழம்,சாத்துக்குடி,கறுப்பு விதையுள்ள திராட்சை,அத்திப்பழம்,பீட்ரூட், கொத்தமல்லிகீரை, முருங்கைகீரை,பசலிக்கீரை,கேரட்,நாட்டுத்தக்காளி,பீட்ரூட் போன்றவற்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது அவசியம்.!

இதோடு கர்ப்பபை நீர்க்கட்டி உள்ளவர்கள் கொள்ளு, பப்பாளிக்காய், எள்ளு  போன்றவற்றை வாரத்தில்  மூன்று நாட்கள் நாளுக்கு 50 முதல் 100 கிராம் வரை தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும்.!
ஆண்கள் அமுக்ரா மாத்திரை,சூரணம்,லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மூன்று வேளையும்  நெல்லிக்காயளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.!

பற்பசை,சோப்பு, அதிக உடலுழைப்பு, ஆங்கில மருந்து மாத்திரைகளை முற்றிலும் தவிர்த்து *மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்திட அனைவரும் இயற்கை வழியில் குழந்தை பாக்கியம் பெற்று  மகிழ்வோடு வாழலாம்*
குறிப்பு: கர்பபை மற்றும் விந்தணுக்குறைபாடு எத்தகைய நிலையில் இருந்தாலும் முதலில் இயற்கை,யோகா,மூலிகை, உணவு வழிமுறைகளை பின்பற்றிவிட்டு முடியாத பட்சத்தில் மட்டுமே பல்வேறு விதமான இரசாயண மருந்துகள்.  செயற்கை கருதரித்தல் போன்ற முறைகளுக்கு செல்ல வேண்டும். முதலிலே செயற்கை முறைகளை பார்த்துவிட்டு அங்கு கைவிடப்பட்ட பின் இயற்கை முறைக்கு திரும்பினால் குழந்தை பேறடையும் வாய்ப்பு மிக குறைந்து விடும்.!
*நலம் பெருகட்டும் …*

amyogatrust.blogspot.in
🍁🌿AUM HERBALS
Mobile & whats app
*9629368389
🌾100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

Wednesday, January 25, 2017

மருத்துவக் குறிப்புகள் 25/01/17

[1/24, 17:32] Am Yoga: சுவைத்துக் கூடப் பார்க்காமல் பனங்கருப்பட்டி என்று சொன்னாலே வேண்டாம் எனக் கூறுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்...!

காரணம், அந்த அளவு வெள்ளை சர்க்கரை உள்ளது என்பது தான் உண்மை. சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமுள்ள இந்தச் சூழலில் பனங்கருப்பட்டியை பற்றி பார்ப்போம்...!

இப்போதும் கிராமப்பகுதிகளில் பனங்கருப்பட்டி என்பதை ஒரு மருத்துவ பொருளாகவும், சர்க்கரைக்கு மாற்றாகவும் பயன்படுத்துவதை காணலாம்.

பனைமரத்தின் ஒவ்வொரு அங்குலமும் பயன் கொடுக்கக் கூடியது என்பது நகரத்தில் பிறந்து வளர்ந்த நம் இளைய தலைமுறையினர்க்கு தெரியுமா ?

பனங்கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் தெரியுமா ?

ஒரு பனை மரம் சுனாமியையும் தாங்ககூடிய வலிமை உடையது.

நமது தமிழ் எழுத்துக்களும், காப்பியங்களும் பனை ஓலையில் எழுதப்பட்டது.

பனங்கருப்பட்டி உடம்புக்கு மிகவும் நல்லது.
இப்படி பனையைப் பற்றிய ஒவ்வொரு விஷயமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

சர்க்கரை பல தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது அதில் கரும்பு, பனை, தென்னை முக்கியமானவை. சர்க்கரையை கரும்பினால் செய்கின்றோம், வெல்லம் என்பதில் மூன்று வகை உண்டு. கரும்பு வெல்லம், தென்னை வெல்லம், பனை வெல்லம் ! கருப்பட்டி என்பது பனையில் செய்யப்படும் ஒரு இனிப்பு. இதை பனை வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி என்கிறோம்.

கிராமங்களில் எப்போதுமே பனங்கருப்பட்டி காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது.

பனங்கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு பனங்கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க பனங்கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் பனங்கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை பனங்கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனி கீரையுடன் பனங்கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் பனங்கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபியில் சீனிக்கு பதிலாக பனங் கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட பனங்கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் பனங்கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக பனங்கருப்பட்டி கருதப்படுகிறது.

பனங்கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

பனையை பற்றிய தகவல்கள்...

பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்க படுகின்றன.
பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனையிலிருந்து பெறப்படும் மற்ற பொருள்கள்
கதர் மற்றும் சிற்றூர் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவுப் பொருள்களாகும்.

ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

இத்தனை பயன் தரும் பனையில் இருந்து பதநீர் எடுத்து தயாரிக்கப்பட்ட இவ்வளவு அற்புதமான பனங்கருப்பட்டியை நாள்தோறும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக அனைவரும் பயன்படுத்தினால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்.!

*இணையப்பகிர்வு*
[1/25, 17:03] Am Yoga: உணவிலும் மாற்றம்!!!
                உடலிலும் மாற்றம்!!!!

  இன்றைய மருத்துவ சிந்தனை

அகத்திக் கீரை

அகத்திக் கீரைச் சாற்றை மூக்கில் பிழிந்து விட்டால் அடிக்கடி உண்டாகும் காய்ச்சல் குணமாகும்.

அகதாதிக் கீரைச் சாற்றில் ,ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் தயாரித்து அதை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணி நேரம் ஆசனக் குளியல் செய்து வந்தால் ,மூலக் கிருமிகள் , மூல எரிச்சல் ,மூலச் சூடு , ரத்த மூலம் போன்றவை முழுமையாக குணமாகும்.

அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.

அகத்திக் கீரை ,மருதாணி இலை , மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தடவி வந்தால் கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாகும்.

அகத்திக் கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து ,அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து ,கரும்படை , தேமல் , சொறி , சிரங்கு  போன்றவறாறின் மீது பற்றுப் போட்டு வந்தால் பூரண குணம் கிடைக்கும்.

அகத்திக் கீரை , ஊறவைத்த வெந்தயம் இரண்டையும் சேர்த்து அரைத்து ,அடைதட்டிக் காய வைக்கவும். பிறகு அதை நல்லெண்ணெயில் வடை சுடுவது போலா சுட்டு எடுத்துவிட்டு ,எண்ணெய்யைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு தினமும் அதை உடலில் தடவிக் குளித்து வந்தால் உடல் மிணுமிணுக்கும், கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.

அகத்திக் கீரைச் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்தால் வாந்தி ஏற்பட்டு பித்த நீர் வெளியாகும்.இதனால் உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறையும்.!

*இணையப்பகிர்வு*
[1/25, 18:19] Am Yoga: 🙏உமீழ் நீர்:உயிர் நீர்🙏

 🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_

_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

 _```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

_```இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால், சர்க்கரை நோயை வைத்துப் பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.  அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.  எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

🙏உமிழ் நீர் : உயிர் நீர்.!

*இணையப்பகிர்வு*
[1/25, 19:59] Am Yoga: *ஆண்மையை அதிகரிக்கஅற்புத மருந்து*

உளுந்து, எள், பூனைக்காலி வித்து,நெருஞ்சி வித்து,நீர்முள்ளி வித்து,நிலப்பனைக்கிழங்கு,தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு,மிளகு,திப்பிலி இவை வகைக்கு 75 கிராம் இவற்றோடு ஒரிஜினல்  பனங்கற்கற்கண்டு 750 கிராம்
சேர்த்து இடித்து வைத்துக்கொண்டு தினம் காலை, மாலை இரண்டுத் தேக்கரண்டி அளவு எடுத்து உணவிற்கு முன் ஒரு டம்ளர் நாட்டுப்பசுவின் பாலில் கலந்து  குடித்துவர
இந்த மருந்து தீரும் முன் நீர்ச்சுருக்கு,நீரடைப்பு,வெள்ளை,வெட்டை, தாது உற்பத்தி குறைபாடு நீங்கும்.
ஆண்மை விருத்தி, உடல் புஷ்டி ஏற்படும்.!

மருந்து உண்ணும் காலம் முழுவதும் உப்பு,புளி,காரம் குறைத்துக் கொள்ள வேண்டும்.!
கோழி,கருவாடு,முட்டையை விலக்க வேண்டும்.!
இல்லற வாழ்வில் ஈடுபடக் கூடாது.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌿100%இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🌻
AUM HERBALS
MOBILE & WHATSAPP
*9629368389*

நலம் பெருகட்டும் …

Monday, January 23, 2017

திராட்சை

உலர் திராட்சையை முறைப்படி உண்பதால்
இரத்த சிவப்பணு அதிகரிக்கும் உடல் சோர்வு போகும்.! முதல்நாள் ஒன்று இரண்டாம் நாள்  இரண்டு மூன்றாம் நாள் மூன்று இப்படி பத்துநாள் வரை ஒவ்வென்றாக அதிகமாக்கி இறுதியில் 9, 8,7 என்று குறைத்து ஒன்று  வந்தவுடன் நிறுத்த வேண்டும்.! தினமும் இரவில் சிறிது நீரில் உலர்திராட்சையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.!
இது போன்ற பல முறைகள் இணையம் எங்கும் பரந்து கிடக்கிறது. நமது amyogatrust.blogspot.in
என்ற பகுதியிலும் நிறைய மருத்துவ தகவல்கள் உள்ளன.!

Sunday, January 22, 2017

மருத்துவக்குறிப்புகள் 21/01/17

[1/21, 13:33] Am Yoga: "டூத் பேஸ்ட்டை தொடர்ந்து உபோகிப்பதால் மூளையின் செயல்திறன் குறைந்துவிடும்,

அதற்கு பதிலாக மூலிகை பற்பொடி தயாரிக்கும் எளிமையான முறை

கடுக்காய் தோல்-100 கிராம்
இந்துப்பு -100 கிராம்
சுக்கு-100 கிராம்
காசுக்கட்டி -100 கிராம்

இதையெல்லாம் நாட்டுமருந்து கடையில் வாங்கிவந்து மிக்கியில் நைஸாக அரைத்து வைத்துக்கொண்டு காலையில் பல் மற்றும் ஈறுகளை கைகளால் துலக்கிவிட்டு இளம் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்,
இதன்மூலம்
பல்வலி,பல்கூச்சம் ,பல்சொத்தை , ஈறுகளின் பலவீனம் நீங்கி பல் உறுதியாகும்.!
இதோடு கிராம்பு, மிளகு, புதினா,ஆவாரம்,வேப்பம்குச்சி,   போன்ற 18 இயற்கை மூலிகைகளில் தயாரிக்கப்பட்ட பல்பொடி தேவைக்கு தொடர்புகொள்க🍁🍁
*AUM HERBALS*
*mobile:9629368389*
[1/21, 13:39] Am Yoga: இரத்ததானம் பற்றிய தெளிவான அலசல்

இரத்ததானம் செய்வது உடலுக்கு மிகவும் நல்லது என்றால், மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எவரும் அவ்வளவாக இரத்ததானம் செய்வதில்லையே ஏன்?

சாதாரண மக்கள் இரத்ததானம் செய்தார்கள் என்று மருத்துவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது போல, தாங்களும் இரத்ததானம் செய்ததாக செய்யாமலேயே எத்தனை பாராட்டுப் பத்திரங்களை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எந்த மருத்துவராவது தானும் ஒரு சாதாரண மனிதருக்கு இரத்ததானம் செய்தேன் என்பதற்கு அச்சாதாரண மனிதரின் சான்று ஒன்றையாவது காட்ட முடியுமா?

பெட்ரோலில் இயங்கும் மோட்டார் வாகன இயந்திரத்தின் அதிமுக்கிய பாகங்களை பெட்ரோல் கொண்டுதான் கழுவ முடியும் என்பது போல தொண்ணூறு சதவிகித தான இரத்தம் விபத்தில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது வெளி உபயோகத்திற்காகத்தான் தேவைப்படுகிறது.

மனிதர்கள் எல்லோருமே விபத்தில் சிக்குவதில்லை. அப்படி ஆங்காங்கே சிக்குபவர்களைக் காக்க, ஆங்காங்கே மருத்துவதுறையில் பணிபுரியும் ஊழியர்களின் இரத்ததானமே போதுமானதே! இதனைச் செய்யாமல் ஏன் மக்களிடம் இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என்று கெஞ்சி கூத்தாடுகிறார்கள்?

கோடி கோடியாக செலவு செய்தாலும் உற்பத்தி செய்ய முடியாத இரத்தத்தைச் சாதாரண மனிதர்கள் தானாக மனம் இரங்கி மற்ற மனித உயிரைக் காக்க வேண்டும் என்ற நன்னோக்கில் தானமாக தரும் போது, உயிரைக் காப்பதையே பிரதான நோக்கமாக கொண்ட மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தானமாக கொடுக்கப்பட்ட இரத்தத்தைப் பரிசோதனை செய்தோம் என்று லட்சம் லட்சமான சிகிச்சைக் கட்டணத்திற்கு உள்ளேயே அல்பத்தனமான ஆயிரக்கணக்கான ரூபாய்களைக் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிப்பது ஏன்?

சிலர் தங்களின் சுப தினங்களில் ரத்ததானம் செய்வதைக் கடமையாக கொண்டுள்ளனர். அத்தோடு பல தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அவ்வப்போது ஆங்காங்கே முகாம் நடத்தி இரத்தம் சேகரிகத்தும் கொடுக்கிறார்கள். ஆனால், ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றால், ஒன்றுக்கு இரண்டாக அல்லது மூன்று யூனிட்டாக அவரின் உற்றார், உறவினர், நண்பர்கள் என கட்டாயமாக இரத்ததானம் செய்த பிறகுதான், இரத்த வங்கிகளுடைய மருத்துவமனைகள் பரிசோதனைகள் முடிந்து நிலுவையாக உள்ள தங்களின் கையிருப்பு இரத்தத்தையே எடுத்து உபயோகப்படுத்துகிறார்கள்.

ஒருவேளை இரத்த கொடையாளிகளே விபத்தில் சிக்க நேரிட்டாலும் இதே நிலைதான். இரத்த கொடையாளரிடமே இரத்தகொடையளிக்க எவரையாவது அழைத்து வரும்படி கட்டாயப்படுத்துவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

அப்படியானால், "யாருக்காவது பயன்படும் என்ற நல்ல நோக்கில் கொடையாளிகள் கொடுத்த இரத்தம் எங்கே போகிறது?"

இரத்த சேமிப்பு வங்கிகள் இது குறித்த கணக்குகளை மக்களின் பார்வைக்கு அல்லது தானக் கொடையாளர்களின் பார்வைக்கு கொண்டு சென்றது உண்டா?

இரத்ததான முகாம்கள் மூலம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட இரத்தம் இன்னாரின் பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை கொடையாளருக்கும், இன்னாருடைய இரத்தம்தான் உங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது என்ற தகவலை பயனடைந்தவருக்கும் தெரிவிக்க வேண்டியது மருத்துவத்துறையின் கடமையல்லவா? இவைகளை சம்பந்தப்பட்ட இருவரும் தெரிந்து கொள்வது எந்த வகையில் நியாயமற்றது?

ஆனாலும், மருத்துவத்துறை இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்யப்போவது இல்லை. ஏன் தெரியுமா?

நிச்சயமாக இதில் ஏதோ தில்லுமுல்லுகள் நடைபெறுகிறது. ஆனால், இப்படியொரு சந்தேகம் இரத்த தானம் செய்யும் எவருக்குமே தோன்றாதது ஏன்? ஒருவேளை, எங்காவது அபூர்வமாக தில்லுமுல்லுகள் நடக்கும்; அதற்கு ஏன் நாம் அலட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் அதுவும் நிச்சயமாக தவறு. ஏனெனில், இரத்த தானம் பெறும் எல்லா நிலையங்களிலுமே இத்தகைய தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதே என் குற்றச்சாற்று!

நாம் தானமாக கொடுக்கும் சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே நம் உடல் தானாகவே சுரந்து கொள்ளும் என்று கூறப்படுகின்றது. அதெப்படி சுமார் 400 மில்லி இரத்தம் சில நாட்களிலேயே, ஊட்டச்சத்து இல்லாமல் தானாகவே ஊற கிடைக்கும்?
ஏழை எளிய மக்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை, கோடி கோடியாக கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் உண்ணும் உணவைவிட சராசரி மனிதர்களாகிய நாம் தரமானதொரு உணவை உண்ணுவிடப் போவதில்லை. உண்மை இப்படியிருக்க, மருத்துவர்கள் இரத்ததானம் செய்யாததன் மூலம் அவர்களின் உடல் நலத்தில் அக்கறை இல்லாமலும், மக்களின் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடும் இருக்கிறார்கள் என சொல்ல முடியுமா?

இரத்ததானத்தால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது என்பதும் முதல் நோக்கிலேயே ஏற்கத்தக்கது அல்ல. அதாவது, ஒரு லிட்டர் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் பால் முழுவதும் விஷம்தானே!? இல்லையில்லை, பாலோடு சேர்ந்த விஷம் ஊட்டச்சத்து மிக்க பாலாகி விட்டது என சொல்ல முடியுமா?
நம்மால் தானம் கொடுக்கப்பட்ட 400 மில்லி இரத்தம் மீண்டும் புதிதாக சாதாரணமாக உண்ணும் உணவில் உற்பத்தியாகாது. அதற்காக இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பல மாதங்கள் தொடர்ந்து உண்ண வேண்டியிருக்கிறது. கட்டாய ஓய்வும் எடுக்க வேண்டியிருக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் உடல் நலம் தேற சத்து மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கிறது. இதனாலும் மருத்துவத்துறைக்கே லாபம்.

ஆனால், இதனையெல்லாம் புண்ணியம்தேடி சர்வ சாதாரணமாக இரத்ததானம் செய்பவர்கள் கணித்து விட முடியாது. உடல் தங்களது பணிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், ஓய்வு கொடுத்து விடுவார்களே ஒழிய, இரத்ததானம்தான் காரணமாக இருக்குமோ என அறியக்கூட முற்படுவதில்லை.

மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கு இச்சாதக பாதக விளைவுகளை கணிக்கும் திறன் இருப்பதாலும், உடலுக்கு தேவையில்லாத செலவுடன் கட்டாய ஓய்வளித்து வருமானத்தை இழக்க விரும்பாததாலுமே இரத்ததானம் செய்வதில்லை.

மேலும், தானமாக பெறப்படும் இரத்தத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத வகையில் ஊழலும் நடக்கிறது. ஆனால், அப்படி என்ன நடக்கிறது என்பது எனது அறிவுக்கு இன்னும் விளங்கவில்லை. விளங்கியதும் விளக்குகிறேன்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் சகோதரி ஒருத்தி (கிறித்துவ நண்பனின் மனைவி) விபத்தில் சிக்கி நான் இரத்ததானம் செய்த வகையில் இதில் குறிப்பிட்டுள்ளபடியான தில்லுமுல்லுகளை உணர்ந்து ராமச்சந்திரா மருத்துவமனை இயக்குனருக்கு சட்டப்படியான அறிவிப்பை அனுப்பினேன்.

அதற்கு அம்மருத்துவ அறிவாளிகள் கேட்ட கேள்விகள் எதற்கும் நியாயமான பதிலை சொல்ல முடியாமல், மடத்தனமாக இரத்தம் மரத்தில் காய்க்காது என்பன போன்ற உணர்ச்சியூட்டும் வசனங்களையே திரும்பத்திரும்ப பதிலாக தந்தனர். அவளின் தொடர் சிகிச்சையை காரணம் காட்டி, அவளே என்னிடம் மன்றாடியதால் வழக்கு தொடுக்க இயலாமல் போய் விட்டது. இதுபோன்ற தொடர் சிகிச்சை காரணங்கள்தான் இதில் நடக்கும் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர தடையாய் இருக்கிறது.

மொத்தத்தில், இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.

மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்.

கட்டுரை தொகுப்பு : சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.!

*இணையப்பகிர்வு*
[1/22, 19:28] Am Yoga: நீங்கள் ஆரோக்கியசாலி என்பதை எப்படி உறுதி செய்வது?

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா?
இல்லையா?
எப்படி தெரிந்துக்கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது
"சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது.
நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,
"நீ நோயாளிதான்" என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது.

அல்லது "அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது.
நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்.

இதில் மோசமாக பாதிக்கப்படுபவர்கள்(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்.

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்.
சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120,
சிறுநீரக நோய் ரீடிங் 1.02, கொழுப்பு அளவு,
உப்பு அளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன மருத்துவம்.

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம். இத்தகய
"ரீடிங்குகள்" நவீனவிஞ்ஞானத்தின் "நன்கொடைகள்".
Our Body mechanism is beyond சயின்ஸ்.
நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது.

*உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது.*
*"யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது"* .

உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள *மனிதனும்,வெவ்வேறு தட்பவெப்ப நிலை* ,
*வெவ்வேறு உணவுபழக்கம், வெவ்வேறு உணவு உண்ணும் முறை, வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு "ஜீன்கட்டமைப்பில் இருக்கிறான்*.

*இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே (unique) இருக்கும்*.

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது.

அப்படியானால், "உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம், "அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட "முட்டாள் தனம்". இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை".

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும்
"Master check-up" இந்த நூற்றாண்டின்
"மாபெரும் வியாபார மோசடி".

அப்படியானால்
ஒரு மனிதன் ஆரோக்யமாக இருப்பது, இல்லாதது,
எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?
இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள்.

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.

"தரம்" என்ன என்பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். எனவே மேற்சொன்ன திருப்தியாக இருந்தால், "நீங்கள் ஆரோக்யாமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்து கொள்ளலாம்.

படித்தில் உணர்ந்தது

சிந்திப்பவர் மட்டுமே தெளிவு பெறுவர் ... !!!

Thursday, January 19, 2017

*உடலில் உப்பு அதிகமா ?*


______________________
உடலில் உப்பு அதிகமானால் அதை வெளியேற்றும் வேளையை சிறுநீரகங்களும், வேர்வை சுரப்பிகளும் செய்யும், சிறுநீரகங்கள் ஹைட்ரஜன்,, யூரியா, கிரியேன்டனின் போன்ற உப்புகளை இரத்தித்தில் இருந்து பிரித்து வெளியேற்றும், நாம் மிகுதியாக உண்பது உப்பு சேர்த்த உணவு வகைகளைத்தான், மூன்று வேளையும் சமைத்த உணவுவகைளையே சாப்பிடும்போது உடலில் புளிப்புத் தன்மையும், உப்பும் அதிகமாகி விடுகிறது, இதனால் இரைப்பையிலும் குடலிலும் அமிலத்தன்மை உருவாகிவிடும், அப்புறம் கொலஸ்டிரால் அதிகரிக்கும், உடல் கட்டமைப்பு சிதைவுறும், சிறுநீரகங்கள் பலவீனப்படும், சிறுநீரகத்தில் கிருமித்தொற்று ஏற்படும்.
நம் உடலில் 30மிலி க்கு மேல் யூரியா என்னும் உப்பு சத்து அதிகமாக இருந்தால் சிறுநீரகம் செயல்படுவதில் சிரமம் ஏற்படும், இரத்தத்தில் உப்பு அதிகமாக இருந்தால் இருதயம் இயங்குவதிலும் சிரமம் ஏற்படும், இதை நீக்க ரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் முழுமையான பலனை தராது, நிரந்தர தீர்வையும் தராது,இவர்களுக்கு உணவே மருந்து,

சமைக்காத பச்சைக் காய்கறி, கீரைவகைகள், மூலிகை சாறுகள், இளநீர் வாழைத்தண்டு சாறு, முள்ளங்கி சாறு, வெள்ளரி, தர்பூசணி சாத்துகுடி, ,பழச்சாறுகள் இவைகளை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்,
அருகம் புல்சாறு
கீழாநெல்லிச்சாறு
கொத்தபல்லிச்சாறு,
சோற்றுக்கற்றாழை சாறு,
கரிசாலை ,நீராரை,சதாவரி, அமுக்கரா, பொடுதலை, வல்லாரை, ஆவாரம்பூ இவைகளை உணவாக பயன்படுத்த வேண்டும்,

பார்லியை வறுத்து உடைத்து கஞ்சிகாய்ச்சி தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடலாம், கோதுமை கஞ்சி அரிசி நோய் கஞ்சி, சாப்பிடலாம், நன்னாரி, சீந்தில் கொடி இவைகளும் பெருமளவு உப்பு நீரை குறைக்கும், ,இந்த நோயாளிகள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், சிறுநீர் நன்க சரியாக வெளியேறு கிறதா என்பதை கவனிக்க வேண்டும், அடிவயிற்றில் ஈரதுணியை போடுதல், மண்பட்டி போடுதல், நீர் ஆகாரவகைகள் மட்டும் சில நாட்களுக்கு உணவாக உட்கொண்டு வருதல் இவற்றின் மூலம் சிறுநீரகத்தை நன்கு செயல்பட தூண்ட முடியும், மேலும் வாழை இலைக் குளியல் சிகிச்சையில் வியர்வை துவாரங்கள் வழியாக வியர்வையானது மிக அதிகமாக உடலைவிட்டு வெளியேறும், யோகா பண்ணலாம், காலை மாலை குளிர்ந்த நீரில் குளிக்கவும் இயற்க்கை உணவு, இவைகளால் யூரியா உப்பை குறைத்து குணப்படலாம், பொதுவாக உணவு சரியான நேரத்தில் சாப்பிடதாத து, மாமிச கொழுப்புகள், உப்பு புளி, மசாலா அதிகமாக உண்ணுதல், அதிகமாக உண்ணுதல் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுதல், டீ காபி மது ரசாயன கலவை ஊட்டப்பட்ட குளிர்பானங்கள் இவற்றை தவிர்க்க வேண்டும், இயற்க்கை வாழ்வியலின் மூலம் உப்பு நீர் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.!

*இணையப்பகிர்வு*

Sunday, January 15, 2017

இதயம் பலம்பெற இயற்கை வைத்தியம்

ஐந்தாறு நாட்டு செம்பருத்திப்பூவை பறித்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு சூடாக்கி அதையை தினமும் குடிநீராக குடித்துவர  அனைத்துவகை இதயகோளாறுகளும் அகலும். செம்பருத்தி தினமும் கிடைக்கவில்லை எனில் செம்பருத்தி, சுக்கு, ஆவாரம்பூ,ரோஜாப்பூ,கொத்தமல்லி கலந்த  இயற்கை மூலிகை தேனீர்  தினமும் மூன்று முதல் ஐந்து டம்ளர் அருந்திவர இதயம் பலப்படும்.!
அதோடு தினமும் 10 -15 நிமிடங்கள் சாந்தியாசனம், 10 நிமிடம் ஓம்கார தியானம் போன்றவற்றை தவறாது செய்துவந்தால் மிக அதிகமான பயனைப்பெறலாம்.!
ஒரு வேளை சமைக்காத பழம்,காய்கறி, தானியம் இரண்டு வேளை சமைத்த வேறு வகை உணவுகளை  உண்டு வர இதய சுகம் கிடைக்கும்.!

100 % ☘இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE:9629368389

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

இயற்கை மூலிகை தயாரிப்புகள்

**
***********************
🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!

*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

🌿பஞ்சமூலி சூரணம்

*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

950 கிராம் 500 ரூபாய்

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுதேங்காய்,இயற்கை எள்ளு, வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!*
*கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

விலை: 500 மிலி
750 ரூபாய்

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

950 கிராம் 500 ரூபாய்

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

950 கிராம் 600 ரூபாய்

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

🍄அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
*ஆரோக்ய மாத்திரை*

100 மாத்திரை 300 ரூபாய்

🔰யோகா புத்தகம் & வீடியோ

*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
 
 ❄இன்சுலின் ஆவணப்படம்

*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

*AUM HERBALS* தொடர்புக்கு:
*MOBILE & WHATSAPP* 9629368389
amyogatrust.blogspot.in☘🍀☘🍀🌴☘🍀☘🍀

*பரஞ்சோதி மகான் கூறிய பலமான வைத்தியம்*

பைத்தியம் தெளிய,
சோற்றுக்கற்றாழைஇரண்டும்,   வெந்தயம் ஒரு கைப்பிடி அளவும் சேர்த்து  உரலில் போட்டு இடித்து எடுத்து இரவில் ஊற வைத்து, காலை 4 அல்லது 5 மணியளவில் தலையில் தேய்த்து 3 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீராடினால் 10 நாட்களில் பைத்தியம் தெளியும்.

சளி பிடித்திருந்தால் ஒரு நாள் இடைவெளி விட்டு குளித்தல் நலந்தரும்.

*நீரழிவுக்கு,*

        கருங்குருவை பச்சை அரிசியும் கொட்டைப்பாசியிலையும் நிதானமாக அரைத்து நல்லெண்ணெய் விட்டு கழிக்கிண்டி 3 நாள் சாப்பிட குணமாகும்.

*கண் வியாதிக்கு,*

          கோழி முட்டையை அவித்து சரி பாகமாக துண்டித்து கண்களின் மேல் வைத்துக்கட்டிப் படுக்க, கண் வியாதிகள் குணமாகும்.

*மாலைக்கண்;*

          பூசணி விதைச் சாற்றில் திப்பிலியை உரைத்து அல்லது அரைத்து ஒன்றிரண்டு முறை காலை, மாலை 7 நாட்கள் கண்ணில் விட சுகமாகும்.

*அதி உதிரப்போக்கு;*
       
அரச மரத்துப் பட்டையை  10 கிராம் எடுத்து  சிறிது பசும்பாலில் அரைத்து ஒருடம்ளர் பாலில் கொடுக்க நிற்கும்.!

*மூல நோய்;*

       தொட்டால் சிணுங்கி வேர், தண்டு நன்றாக அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து 1/2 கிளாஸ் பச்சப் பசும்பாலில் கலந்து 20 நாட்கள் உண்டால் மலச்சிக்கல், மூல நோய் குணமாகும்.        
             
*மார்பு குத்தலுக்கு*
     
 வலது மார்பு வலித்தால் இடது மார்புக்கும், இடது மார்பு வலித்தால் இடதுக்கும் வலதுக்கும் சிற்றாமணக்கு இலையை அரைத்து தடவ குணமாகும்.

*காலரா;*

     ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி அதன் சாற்றையும், வித்துகளையும் அரைத்துக் கொடுத்திடுக. ஒன்று இரண்டு மூன்று முறையில் குணமாகும்.

*சீதபேதிக்கு,*

     நல்லெண்ணெயில் இட்லி அல்லது பன்ரொட்டி சேர்த்து சாப்பிட குணமாகும்.

*இதய வலிகள்;*
     
மகிழ்ச்சியான செய்திகளை நினைப்பதன் மூலமாக தவிர்க்கலாம்.

*காய்ச்சல்;*
     ஒரு வெற்றிலைக்குள் ஒரு பாவை இலையை வைத்துக் கடுகளவு நல்லச் சுண்ணாம்பும் வைத்துக் காய்ச்சல் வரும் போது கொடுக்க குணமாகும்.

*சிரங்கு;*
         பத்து சீகக்காயை சுட்டரைத்து அரை வீசம்படி தேங்காயெண்ணெயில் குழப்பி மேலே மூன்று நாள் பூசக்குணமாகும்.!

*இயற்கை மூலிகை மருத்துவ*
*தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

☘100 % இயற்கை மூலிகை மருந்துகளுக்கு🍁

*AUM HERBALS*
*9629368389*

Saturday, January 14, 2017

வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காய் இல்லாமல் மருத்துவமே செய்ய முடியாது என்கிறது இயற்கை மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.

கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.

தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.

தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு..! சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.

காரணங்கள்:
ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம்.

குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம்.

இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.

நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.

முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம்.

நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.

வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.

திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம்.

மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.

நீக்க வேண்டியவை:

இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

*இணையப்பகிர்வு*

Friday, January 13, 2017

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.
மூலிகைகளிலேயே அன்றாடம் சாப்பிட்டாலும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஒன்று தான் நெல்லிக்காய். அதிலும் தேனுடன் சேர்த்து தினமும் ஒன்று சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகளோ அலாதி. சரி, இப்போது நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1 இரத்த சோகை

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

2 இதயம் வலிமையடையும்

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

3 கண் பார்வை மேம்படும்

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

4 பசி தூண்டப்படும்

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

5 சளி மற்றும் தொண்டைப்புண்

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

6 வெள்ளைப்படுதல்

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

7 சிறுநீரக பிரச்சனைகள்

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

8 அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9 பொலிவான சருமம்

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

10 முடி வளரும்

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்.!

*இணையப்பகிர்வு*

காய்ச்சல் மருந்து

[1/13, 07:59] Am Yoga: **

பத்து துளசி இலை பத்து நல்ல மிளகு இரண்டையும் சதைத்து இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டி இரண்டு வேளை உணவிற்கு முன் கொடுத்து வந்தால்  சாதரண இருமலும் காய்ச்சலும் மூன்று நாளில் குணமாகிவிடும்.!

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த கசாயத்தை சங்களவு வீதம் நான்கு வேளையாகவும், சிறுவர்களுக்கு மூன்று வேளையாகவும் பிரித்து கொடுக்கலாம்.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in
[1/13, 09:34] Am Yoga: தொண்டையில் ஏற்படும் கரகப்பு, கட்டு, சதை வளர்ச்சி ஆகியவை நம்மை படுத்தி எடுக்கும்.. லேசில் சரி செய்ய கூடிய எளிய வழிமுறைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் இனிமையான குரலுக்கு எப்பொழுதும் நீங்கள்தான் உரிமையாளர்...!

குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.

தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

தொண்டைக் கட்டு குணமாக:
மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.

தொண்டை சதை வளர்ச்சி குறைய:
வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிஷங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். 10 தினங்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.

தொண்டை சதை குணமாக:
புளியையும், உப்பையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து நாக்கில் தடவிவர குணமாகும். அல்லது துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை கொப்பளித்து வர குணம் தெரியும்.

ஈறுகளில் ரத்தக்கசிவு குணமாக:
இலந்தை மரத்தின் கொழுந்துகளை பறித்து நீரில் காய்ச்சி சிறிது உப்பு சேர்த்து அந்நீரை வாய் கொப்பளிக்க ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு நிற்கும்.!

*இணையப்பகிர்வு*

ஜல்லிக்கட்டு..

Wednesday, January 11, 2017

தலைமுடி

*மாதுளம் பழச்சாற்றை புழுவெட்டு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு மறைந்து புதிய முடி முளைக்கும்.*


*முடி உதிர்ந்த பகுதியில் புதிய முடி முளைக்க பிஞ்சு ஊமத்தங்க்காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.*

*இணையப்பகிர்வு*

மருத்திவக்குறிப்புகள் 11/01/17

[1/11, 12:45] Am Yoga: *அஜீரணம்*

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை,இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
*குடல்புண்*
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.!

*இணையப்பகிர்வு*
[1/11, 12:46] Am Yoga: ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...

பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..

கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..

துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..

பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..

எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..

அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..

சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன.

சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்.
இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்.

நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...

-தியாகி S.T.ஆதித்தனார்.
[1/11, 17:04] Am Yoga: உயர் ரத்த அழுத்தம் தடுப்பது எளிது!


உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் (Hypertension)   உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகை பிடிப்பவரா? மதுப்பழக்கம் உண்டா? தொப்பை உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? நீரிழிவு இருக்கிறதா?

மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ‘ஆம்’ என்று பதில் சொன்னாலும் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கே மருத்துவரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம்   (Blood pressure).   பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால், அது நார்மல்.

இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம்   (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறார்கள். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம்   (Diastolic pressure)..  .

அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.

30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது சுருங்கழுத்தம்... 80 என்பது விரிவழுத்தம். இது எல்லோருக்குமே சொல்லி வைத்தாற்போல 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவது போல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம்.

ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.

* ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்?

ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். சிலருக்கு இது தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கும். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* தற்காலிக உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்.

உதாரணமாக, ரத்த அழுத்தமானது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும்.

இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

* நிரந்தர உயர் ரத்த அழுத்தம்

பொதுவாக, வயது கூடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் ரத்தக்குழாய் பாதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வில்லாமல் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை.

மருத்துவர்கள், ஒருவருக்கு உண்மையான ரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை ரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு  இரத்தம் அழுத்தம் உள்ளது. என்று; முடிவு செய்து சரியான உணவு முறை,  மன அமைதி, யோகா,உடற்பயிற்சி போன்றவற்றை பரிந்துரைப்பார்கள். தற்காலிக நிவாரணத்திற்கு  சில மாத்திரைகளையும் கொடுத்து விடுவார்கள். ஆனால், இதெல்லாம் பழைய கதை. இன்றைக்கு  இரத்த அழுத்தம் என்று கண்டறிந்த உடனேயே தொடர்ந்து மருந்து மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள்.! பிறகு  சில மாதங்களுக்குப் பிறகு மாத்திரை இல்லாமல் வாழ முடியாது. என்ற நிலையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.!
மருந்து கம்பெனிகள் பிழைக்க வேண்டுமே என்ற நல்லெண்ணம் தான் காரணம்.!
நாம் பிழைக்க வேண்டுமானால்  இரசாயன மாத்திரைகள் இல்லாத மற்ற வழிமுறைகளை தெரிந்து கடைப்பிடிப்பது மிக முக்கியம்.
ஏனெனில், இரத்த அழுத்தம் ஒரு வாரம் உயர்ந்து இருந்தால் கூட அடுத்தடுத்த  வாரங்களில் இயல்பாகவே குறையும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால், இரசாயண மருந்துகளை சில மாதம் தொடர்ந்து எடுத்தவர்கள்  அதை நிறுத்தினால் பல மடங்கு இரத்த அழுத்தம் அதிகமாகி விடும்.!

என்ன பண்ணப் போறீங்க …?

*இணையப்பகிர்வு*

வாழை இலைக்குளியல்

நமது வாழையிலை குளியல் வீடியோ பாருங்கள் நாட்பாளர்களே.!

Click here

Tuesday, January 10, 2017

முளை கட்டிய தானிய உணவும் அதன் மருத்துவ பயன்களும்

🌰ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.

🌰பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

🌰இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

🌰இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

🌰முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

🌰முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

🌰முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.

🌰முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

🌰முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

🌰முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.

🌰எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

♻உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் பாா்த்து காெள்ளுங்கள்♻

🍀 *இணையப்பகிர்வு*

Sunday, January 8, 2017

மருத்துவக் குறிப்புகள் 08/01/17

[1/7, 18:32] Am Yoga: *சமய சஞ்சீவி*

சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ முறைகளில் அமிர்தமாகக் கொண்டாடப்படுவது திரிபலா சூரணம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று பொருட்களின் கூட்டமைப்பு. நாட்டு மருந்துக்கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.
திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த ஓட்டம் சீராகும். கல்லீரல், நுரையீரலில் புண்கள் வராமல் பாதுகாக்கும். ஆஸ்துமா, மஞ்சள் காமாலை இருப்பவர்களுக்கு ஏற்றது.
தோலில் அரிப்பு, கருமை, சிவப்புப் புள்ளிகள் இருந்தால், இந்த சூரணத்தைத் தடவிவர, விரைவில் சரியாகும். தொடர்ந்து, திரிபலா சாப்பிட்டு வருபவர்களுக்கு மலச்சிக்கல் இராது, தோல் மினுமினுப்பு அடையும். உடல் வலுவாகும், நோய்கள் அண்டாது.
உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஏற்றது.
காலில் வெடிப்பு இருந்தால், இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, சுடுநீரில் திரிபலா சூரணத்தைக் கலந்து, வெதுவெதுப்பான சூட்டில் பாதத்தை 20 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கலாம்.!
40 வயதிற்கு மேற்பட்டோர் தினமும் சாப்பிடலாம். மற்றவர்கள்  வாரம் இரண்டு நாள் சாப்பிட்டால் போதும்.! சாப்பிடும் முறை- ஒரு ஸ்பூன் பொடி சுடுநீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.!

*இணையப்பகிர்வு*
[1/8, 14:59] Am Yoga: *பப்பாளி பழம்*

*பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்*

🍑எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் ஒரு அருமையான பழம் பப்பாளிப் பழம்..

🍑இது வெப்ப பிரதேசங்களில் நன்றாக விளையக் கூடியது. இது கிராம புறங்கள் அல்லாமல் நகர்ப்புற வீடுகளிலும் இந்த மரத்தை நாம் காணலாம்.

🍑 இதை வளர்க்கும் முறை மிகவும் எளிமையானது

🍑விதைகளை போட்டாலே போதும் இது விரைவில் வளர்ந்து மரமாக நிற்கும்.

🍑இதில் ஆண் மரம் மற்றும் பெண் மரம் என்று இரு வகை உண்டு.

😃ஆண் மரத்தில் கொத்து கொத்தாக பூக்கள் மட்டுமே பூக்கும் பழங்கள் வராது.

😍பெண் மரத்தில் ஒவ்வொரு இலையின் காம்பு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பூ மலரும் அதுவே வளர்ந்து கணியாக மாறும்.
இது பழுத்தவுடன் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக இருக்கும்.

🍑இப்பழம் அதிக சூடுள்ள பழம் என்று நினைத்து பலர் சாப்பிடாமல் இருப்பர் அது தவறான கருத்தாகும்.

🍑இதில் உள்ள சூடு எந்த வித பாதிப்பையும் நமக்கு ஏற்ப்படுத்தாது.
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்க கூடிய இப்பழம் மாம்பழத்திற்கு அடுத்து இதில்தான் அதிக அளவு வைட்டமின்கள் இருக்கின்றன.

இதில் குளுக்கோஸ், இரும்புச் சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம், புரதம், நியாசின்,தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்ளும் எ,எ1,பி1,பி2 மற்றும் சி வைட்டமின்களும் நிறைந்துள்ளன

🍑விலையுயர்ந்த பழத்தை விட பல்வேறு சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன.

🍑இதில் பெப்சின் என்னும் சத்து அதிக அளவில் உள்ளது.

🍑இந்த சத்து குடலில் உள்ள ஏற்படும் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.

🍑நமது இரத்தத்தில் கலக்கும் எந்த விதமான கிருமிகளையும் அழிக்கும் வல்லமையுடைய பழம் இது மற்றும் இரத்தத்தை விருத்தி செய்யும்.

🍑இப்பழத்தை உண்பதால் சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் விரைவிலேயே குணமாகும்.

🍑உடற் சோம்பலை போக்கும். பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும், பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

🍑பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.நரம்புகளில் முறுக்கேற்றும்,தொற்று நோயை அண்ட விடாது.

🍑கண்களுக்கு மிகவும் நல்லது.

🍑குழந்தை பெற்ற பெண்கள் இப்பழச்சாற்றை உட்கொண்டால் அதிக பால் சுரப்பு ஏற்படும்.

🍑குடற் புண்களை ஆற்றும். உதடுகளில் ஏற்படும் வரட்சி, வாய் ஓரங்களில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த கூடியது.
மலச்சிக்கலுக்கு எளிய மருந்தாக பயன்படுகிறது.

🍑இந்த பழத்தை காலை மூன்று துண்டுகளும் மாலை மூன்று துண்டுகளும் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்டுத்தலாம்.

🍑மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயை குணப்படுத்த பதினைந்து நாட்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் மூலமே அற்று விடுமாம்.

🍑வயிறு சரியில்லாதவர்களுக்கு எந்த வேலையும் செய்யவும் தோன்றாது சாப்பிடவும் தோன்றாது. இப்படிபட்டவர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு அன்று முழுவதும் எந்த உணவையும் தொடாமல் இருந்தால். வயிறு சரியாகிவிடும்

🍑இப்பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் வரை உணவு உண்ட பின் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். இரத்தம் விருத்தியாகும் மற்றும் உடல் பளபளக்கும்.

🍑இந்த மலிவான பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. இதை நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்....!

*இணையப்பகிர்வு*
[1/8, 14:59] Am Yoga: 🍀🌹🍀🌹🍀


பித்தப்பை கல் நீங்க !!!

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

#ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழாநெல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

#இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.!

*இணையப்பகிர்வு*

Saturday, January 7, 2017

சித்த குழுமத்தில் உள்ள அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்  என்றென்றும் நின்று நிளவட்டுமாக...

சித்த மருத்துவத்தில் ஓரு கேள்வி?
எனது மாமன் மகனுக்கு வயது 8 அவனுக்கு 10 நாள் முன்பு காய்ச்சல்இ ருந்தது காய்ச்சல் குறையவில்லை பிறகு ரத்தம் சோதித்ததில் மஞ்சள் காமளை என்று மருத்துவர்கள் கூரியுள்ளார்கள் குழந்தை வாந்தி எடுக்கிறான்
எதுவும் சாப்பிடவில்லை நடக்கவும் முடியவில்லை இதற்கு நம் மருத்வத்தில் என்ன செய்யலாம்?

நெல்லிக்காய்  தேனுறால் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி இரண்டு வேளை உணவிற்கு முன்
காலை,மாலை கொடுத்து வருவதோடு உணவிற்கு பின் இரண்டு  கொத்து கீழாநெல்லி இலையை பிச்சிப்போட்டு மண்பானையில் இரண்டு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக சுண்டவைத்து வடிகட்டி இருவேளையாக கொடுங்கள் உணவாக உப்பில்லா கைக்குத்தல் அரிசிக்கஞ்சி, சாத்துக்குடி, ஆப்பிள், கருப்பு விதையுள்ள திராட்சை மட்டுமே கொடுங்கள்.! உப்பு,புளி,காரம், எண்ணைய் பலகாரம், அசைவ உணவுகள்,இரசாயண உணவுகள் விலக்கம்.!
இது 5 முதல் 12 வயதுள்ள சிறுவருக்கு பெரியவர்கள் இதே முறையை இரண்டு மடங்காக கூட்டிக்கொள்ளலாம்.!
கீழநெல்லியை  இடித்து கசாயமாக்கியும் கொடுக்கலாம்.!
கீழநெல்லி சூரணத்தையும் கடையில் வாங்கி கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கலாம்.!
நாம் கூறுவது ஆரம்ப நிலை மஞ்சள் காமாளைக்கு.!  நீர் வெளுத்து கண் ஒளிபெறும் வரை இம்முறையை பயன்படுத்துக.!
நலம் பெருகட்டும் …

*amyogatrust.blogspot.in

Friday, January 6, 2017

கொள்ளு - பிஸ்தா பருப்புகளின்தன்மைகள்

[1/6, 20:16] Am Yoga: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
1)கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக‌ உள்ளது.இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
2)இது பல வகையான நோய்களை உடலில் குணப்படுத்துகிறது.
3)இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.
4)இரவு முழுவதும் ஊறவைத்து கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து அப்படியே வெறும் வயிற்றில் 1 அல்லது 1 1/2 கிளாஸ் குடிங்க.
5)அந்த தண்ணீரிலேயே அந்த கொள்ளை போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து,துவையல் மாதிரியும் சாப்பிடலாம்.
6)ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
7)ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.மிளகு,சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.
8)காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நீரை லேசாக சூடு செய்து குடித்தல் மற்ற வழிகளை விட உடல் இளைக்க அதிகம் உதவும்.
9)உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால்,முதன் முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.
10)என்னதான் இதை சாப்பிட்டாலும் கொஞ்சமாக உடற்பயிற்சியும் தேவை என்பது…எனது உணர்வு பூர்வமான கருத்து.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
அதை விட ராத்திரி  ஒரு ஸ்பூன் கொள்ளு போதும் 1 கிளாஸ் தண்ணீருக்கு. கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.
(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.
பொடியாக்கி வைத்துக்கொள்ள.
துவரம் பருப்பு,2 கப், கொள்ளு 1/2 கப், இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)
கொள்ளு கஞ்சி
கொள்ளு மிகவும் சத்தானதும், மருத்துவக்குணம் கொண்டதாகும். வாரம் ஒருமுறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக் கூடியது. எல்லா வயதினரும் இக்கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.!

*இணையப்பகிர்வு*
[1/6, 20:19] Am Yoga: *பலம்தரும்*
*பிஸ்தா பருப்பு !*

இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக  இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,
நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது.

இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.
இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன்றுதல், முதுமைகால நோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறைந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தினாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒருவிதமான சோர்வு நம்மை ஆட்கொள்கிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது போல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை.

ஹார்மோன்களின் செயல்பாடானது செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முதுமையை கட்டுப்படுத்துகின்றன.

டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், அலித்தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பலஹீனமும் உண்டாகின்றது.

அதே போல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடி உதிர்தல் போன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்களை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்டுயூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுடன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.

தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபட வாய்ப்பில்லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா.

பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன.

பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும்.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.!

*இணையப்பகிர்வு*

Thursday, January 5, 2017

நாடிசுத்தி


மருத்துவக் குறிப்புகள் 04/01/17

[1/5, 16:52] Am Yoga: *00சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்*

*தற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.*

*அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.*

*ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.*

*கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.*

*மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.*

*வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.*

*வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.*

*இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.*

*கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.!*

*இணையப்பகிர்வு*
[1/5, 18:53] Am Yoga: *தோல் நோய்களை குணமாக்க இயற்கை மருத்துவம்*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

*பூவரசு மஞ்சள் நிற பூக்களை உடையது.* பம்பரம் போன்ற உருவம் உடைய காய்களை கொண்டது. ரத்தத்தை  சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.

*மருதாணியை* பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். மருதாணியின் துளிர் இலைகள் ஒருகைப்பிடி அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பல் பூண்டு, 6 மிளகு ஆகியவற்றை லேசாக தட்டிபோடவும். கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு குடித்துவர ரத்தம் தூய்மை பெறும். தோலில் ஏற்படும் அரிப்பு, தொற்று, சிறுகொப்புளங்கள், படர்தாமரை போன்றவை விலகிப்போகும்.

மருதாணி நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை  போக்க கூடியது. நோயை தணிக்கும் தன்மை கொண்டது. நகங்களுக்கு மேல்பற்றாக போடுவதால் நகச்சொத்தை நீங்கும். நகத்துக்கு நல்ல வண்ணம், பாதுகாப்பு, அழகை கொடுக்க கூடியதாகிறது. உடல் குளிர்ச்சி பெறும். தோல்நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. வெள்ளைப்போக்கு பிரச்னைக்கு மருந்தாகிறது.

*அருகம்புல்லை* பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு பங்கு அருகம்புல் பொடி, கால் பங்கு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து பசையாக்கி உடலில் அரிப்பு இருக்கும் இடத்தில் தேய்து குளித்தால் தோலில் ஏற்படும் அரிப்பு குணமாகும். தோல் மென்மை பெறும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அருகம்புல் நோய் நீக்கியாகிறது. ஒவ்வாமையை போக்குகின்ற உன்னதமான மருந்தாக விளங்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்துவர ரத்தம் சுத்தமாகும். சர்க்கரை நோயை தணிக்க கூடியதாக உள்ளது. இதில் உள்ள புரதச்சத்து உடலுக்கு பலம் தரும்.
பூவரசம் இலையை பயன்படுத்தில் தோல் அரிப்பு, தொற்றுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூவரசம் இலை பசையை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை ஆறவைத்து மேல்பூச்சாக பயன்படுத்தும்போது தோலில் ஏற்படும் அரிப்பு, தேமல், படை, சொரி, சிரங்கு, வெண்புள்ளிகள் சரியாகும்.

*பூவரசம்* மரத்தின் பழுப்பு இலைகளை எடுத்து தீயில் இட்டு சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தோலில் அரிப்பு இருக்கும் இடத்தில் பூசினால் பிரச்னை சரியாகும். பூவரசு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை அழிக்க கூடியது. ஒவ்வாமையை போக்கவல்லது. பூவரசம் பட்டையை தேனீராக்கி குடிப்பதால் ரத்தம் சுத்தமாகும். வெண்குஷ்டம் விலகிப்போகும்.

முகத்தில் உண்டாகும் எண்ணெய் பசையை போக்கி முகப்பரு வராமல் தடுப்பதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வியர்வை நாளங்கள் அடைபடுவதால் முகப்பரு ஏற்படுகிறது. எண்ணெய் சுரப்பியில் ஏற்படும் வீக்கம் முகப்பருக்களுக்கு காரணமாகிறது. திருநீற்று பச்சை இலையை நசுக்கி, இதனுடன் சந்தன விழுது சேர்த்து கலந்து முகத்தில் சிறிது நேரம் பூசிவைத்து கழுவினால் முகப்பரு மறையும். மீண்டும் முகப்பரு வராது. முகம் பொலிவு பெறும்.


🌿 *இணையப்பகிர்வு*

புகைபிடிக்கும் பழக்கம் மறக்க....

*கிராம்பு 1 எண்ணிக்கை*
*நெல்லிவற்றல் 2* *எண்ணிக்கை*
*வாயில் போட்டு* *சுவைத்துக்கொண்டு வர புகை பழக்கம்* *நீங்கும்.!*

*இணையப்பகிர்வு*

உடல் பருமனாக இயற்கை வழி

*இரவில் வெள்ளரிக்காய் 150 கிராம்*

*பேரிச்சம்பழம் 50 கிராம்*

*இரண்டையும் சிறிதுசிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில்* *வைத்துக் கொண்டு* *தினமும் காலையில்*
*வெறும் வயிற்றில் தொடர்ந்து 45 நாட்கள் உண்டுவந்தால் உடல் எடைகூடும்.!*
*இதற்கு  காரணம் உடல் எரிசக்தியை சீரான அளவில் பராமரிக்க வெள்ளரிக்காயும் பேரிச்சம்பழமும் உதவுவதால் எடையை கூட்டும் பேரீச்சை உஷ்ணம், வெள்ளரிக்காய் குளிர்ச்சி.  <இதுவே 150 பேரீச்சம் பழமும் 50 கிராம் வெள்ளரிக்காயும் சாப்பிட்டால் எடைகுறையும்.>அதோடு சர்வாங்காசனம், ஹலாசனம், மட்ச்யாசனம் இந்த மூன்று ஆசனங்களையும் ஒவ்வென்றையும் 5 நிமிடம் செய்துவந்தால்* *உடலுக்கு விரிந்த தோற்றம் கிடைக்கும்.!*
*நம் உடல் சீராக இயங்கவும் நிறைவான தோற்றம் கிடைக்கவும் நாம்  தினமும் செய்யும் பணி,*
*உடற்பயிற்சி, சிந்தனை போன்றவற்றுக்கு தேவையான எரிசக்தியை விட குறைந்தது 500 கலோரிகள் வரை அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உதாரணமாக ஒரு* *தட்டு சோற்றில் 500 எரிசக்தி கிடைத்தது, நான்கு சப்பாத்தியில் 500 எரிசக்தி கிடைத்தது,*
*நான்கு வாழைப்பழத்தில் 500 எரிசக்தி கிடைத்தது என்று வைத்துக்கொள்வோம் இன்றைய நமது உடல், மனம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும்* *சேர்த்து 2000 கலோரி செலவாயிற்று என்றால் உடல் மெலியும். அதுவே* *1000 கலோரி மட்டுமே உழைப்புக்கு செலவானது* *என்றால் உடல் கொஞ்சம் வனப்பாக வளரும். எப்பொழுதாவது  சாப்பிட உணவு கிடைக்காமல் இருந்தால் ஏற்கனவே உடலில்  உபரியாக சேர்ந்துவந்த கலோரிகள் சக்தியாக மாறுவதோடு எடையும் குறையும்.!* *உணவைப் போன்றே நீரும் உடல் எடையை கூட்ட ஒரு முக்கியக்காரணமாக இருக்கிறது.!*
*தினமும்  சராசரியாக ஒருவருக்கு 2500 கலோரிகள் வேண்டும்.* *சாப்பிடுவது மற்றும் பருகுவது மூலம் உடலுக்கு நாம் 2000 கலோரிகளை மட்டுமே கொடுத்து வந்தால் நிச்சயமாக எடை குறையும்.  3000 கலோரிகளை* *எடுத்தால்  எடை கூடும். 2500 எடுத்தால் எடை அப்படியே இருக்கும்.! எனினும் ஆளுக்கேற்ப உடல் சக்தியை கிரகிக்கும் திறனில் பல மாறுபாடுகள் இருப்பதாலும், மரபு ரீதியாக சிலருக்கு எரிசக்தியை* *செலவழிப்பதில் சில மாற்றங்கள் இருப்பதாலும்*
*சிறிய வித்தியாசங்கள் இருக்கவே செய்யும்.!*
*ஆகவே உடல் எடையை கூட்டவோ,குறைக்கவோ விரும்புபவர்கள்* *மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதோடு தினமும் பசிக்கும் போதெல்லாம் அதிகமாக  உண்பது, சரியான உறக்கம்,சீரான மனநிலையையும் கைகொண்டால்*
*நிச்சயம் எடை கூடி வனப்பாக காட்சியளிப்பார்கள்.!*
🍁இயற்கை மருத்துவ தகவல்களுக்கு💐
*amyogatrust.blogspot.in*

🍀100 % இயற்கை
மூலிகை தயாரிப்புகளுக்கு

*AUM HERBALS*
MOBILE & WHATSAPP
*9629368389*

Wednesday, January 4, 2017

கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.!

*இணையப்பகிர்வு*

Tuesday, January 3, 2017

கூந்தல் செழிக்க....

தேவையான பொருட்கள்

1. செம்பருத்தி பூ - சாறு 300 மில்லி
2. மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 300    மில்லி

செய்முறை

1. செம்பருத்தி பூக்களை மிக்ஸியில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் நன்றாக அரைத்து சாறு பிழிந்துவைத்துக்கொள்ளவும்.

2.அதே சம அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இத்துடன் சிறிதளவு கூட தண்ணீர் சேர்க்காமல்

3.  இவைகளை ஒன்றாக வடச்சட்டியில் சேர்த்து நீர் சத்துசுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு இத்தைலத்தை
தினமும் தலைக்கு தேய்த்து வர..
பொடுகு நீங்கும், முடி கொட்டுதல் நின்று தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும்
வளரும்.!

*இணையப்பகிர்வு*

Sunday, January 1, 2017

தொப்பை வருவதைத் தடுக்கும் உணவுகள்!

ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு 3 ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், பசி கட்டுப்பட்டு, உடல் எடை நாம் நினைப்பதை விட அதிகமாக குறையும்.!


பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்ப தோடு, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் மிகவும் குறைவு என்பதால், இரத்த சர்க்கரை சீரான அளவில் பராமரிக்கப்படும்.


முட்டைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் பசியைத் தூண்டும் ஹார்மோனைக் கட்டுப்படுத்தும். ஆகவே தான் காலை உணவின் போது முட்டையை சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடிகிறது.

பீட்ரூட் கலோரி குறைவான ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், பசி கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சீராக இருக்கும்.

காளான்களில் கலோரிகள் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களான செலினியம் மற்றும் நியாசின் அதிகம் உள்ளதால், இது உடலின் மெட்டபாலிச அளவை அதிகரித்து, நீண்ட நேரம் பசியெடுக்காமல் செய்யும்.

எடையைக் குறைக்க மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைப்பதுடன், தொப்பை வருவதையும் தடுக்கும்.!

*இணையப்பகிர்வு*

ஊமத்தையின் மருத்துவ குணங்கள்

1)வேறுபெயர்கள்-:

ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.


2) தாவரப்பெயர் -: DATURA METEL.


3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.


4) வகைகள் -:
 வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கருஊமத்தை எனும் வகைப்படும்.


5) வளரும் தன்மை -:

எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வளர்ச்சியைத் தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்றஇலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல் வடிவ மவர்களையும் முள்நிறைந்த காயையும் உடைய குறுஞ்செடிகள்.

மலர்கள் வெள்ளை, மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிரங்களில் இருக்கும். இவை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.


6) பயன்தரும் பாகங்கள் -:
செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை.


7) பயன்கள் -:
பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்கு மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.


இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.


இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.


இலையை நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில் தயிர் சோறும் இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.


இலைச்சாற்றைச் சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.


ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.


இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய் அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.


ஊமத்தை மயக்கத்தை உண்டாக்கும். நஞ்சுத்தன்மையுடையது. இதன் நஞ்சு முறிய தாமரைக் கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம். இக்காய் பில்லி, சூன்யம் ஆகியவற்றை அகற்றும், முறிக்கும்.


சித்தம் பிரமை -:

ஊமத்தம் பூவை இரவு தண்ணீரில்போட்டு ஊறவைக்கவும். மறு நாள் காலை தலைக்குத் தேய்த்துக் குளிக்க வைக்கவும். 5-7 நாள் இவ்வாறு குளிக்க வைத்தால் இந்தப் பிரமை உன்மத்தம், பைத்தியம் குணமாகி விடும்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். - ஊமத்தம் இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில் துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண், நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.


பேய்குணம் -

:இதன் காய்,விதையும், மருதாணிப் பூவும், உலர்த்திய தூள் புகைக்க பேய் குணம் விலகும்.

காய் :
வாதநோய், கரப்பான், கிரந்தி, சொறி நீக்கும். பித்த மயக்கத்தை உண்டாக்கும்.

பிஞ்சு :
இதன் பிஞ்சை எச்சிலில் அரைத்துத் தடவி வர புழுவெட்டு தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில் மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும், புழு இறந்து முடி வளரும்.

விதை :
இதன் விதையை நெய்யில் அரைத்து மூல முளையில் பூசி வந்தால் குணமாகும்.

50 கிராம் அளவு விதையை ஒன்றிரண்டாய் இடித்து சுமார் 400 மிலி அளவு நல்லெண்ணெயில் இட்டு 7 நாட்கள் பொறுத்து அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி வைத்திருந்து, அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலியும், நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கன்னம், முகம், காது என அனைத்து பகுதிகளிலும் ஏற்படும் குடைச்சல் நோய்க்கு தடவி வந்தால் குணமாகும்.

வேர் :

விதை மற்றும் வேர் வயிற்றுப் போக்கை தடுக்கிறது. காய்ச்சலைப் போக்கி, கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. தனது நிலையை மறந்தவர்களுக்கு மருந்தாகிறது. தோல் வியாதிகளைப் போக்குகிறது

ஆச்சார்யர் சரகர் இந்த ஊமத்தையை விஷ சிகிச்சையிலும் தோல் வியாதி சிகிச்சையிலும் கூறுகிறார் .  ஆசார்யர் சுஸ்ருதர் முக்கியமாக அலர்க விஷம் என்னும் -நாயகடியால் ஏற்படும் ரேபிஸ் நோயில் கூறுகிறார் . ஹிரித சம்ஹிதையில் மூல நோய்க்கான சிகிச்சையில் கூறுகிறார் .

பயன்பாடுகளில் -
ஜ்வரம், தோல் நோய்கள், புண், அரிப்பு, கிருமி, விஷ ரோகம், நீர் கடுப்பு.

நாய் கடிகளில் (அலர்க்க விஷம் ) – ஊமத்தை , வெள்ளை சாரணை வேர் இரண்டும் சேர்ந்து நாய்கடி விஷத்தை போக்கும்.

கிருமி – ஊமத்தை இலை சாறு சூடேற்றி தேய்க்கும் போது பேன், ஈறு தொல்லை நீங்கும்.

பிடக ஆமாய –

வேனல் கட்டிகளில் – வல்லாரை இலை சாறு+ஊமத்தை வேர் -வேனல் கட்டிகளுக்கு, கட்டிகளை கரைக்க வெளிப் பிரயோகமாக உதவும்.

மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளில் – கனகாசவம், சூத சேகர ரசம், மகா விஷ கர்ப்ப தைலம், உன்மத்த ரசம்.

ஆஸ்மா குணமாக -கனகாசவம் உதவும்.

அட்ரோபின் என்னும் ஆங்கில மருந்துக்கு இது தாய்- தற்கொலைக்கு விஷம் சாபிட்டவர்களின் உயிர்களை இந்த அட்ரோபின் காப்பாற்றியுள்ளது எனவே -ஆயுர்வேத சித்த மருந்தில் குறிப்பிட்டது போல் விஷ வைத்தியத்தில் உதவுகிறது.

அட்ரோபின் கண்ணின் விழிபார்வையை விரிக்க உதவும். இந்த கண் சொட்டு மருந்து இல்லாமல் கண் விழித்திரையை எந்த கண் மருத்துவரும் பார்க்கமுடியாது


பொன்னூமத்தை மூலிகை மருத்துவம் – ரசவாதமும் -மிருக வசியம்.

சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளிலும், வனங்களிலும் குடில் அமைத்தும், குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர்பாடுகளில் இருந்து காத்துக் கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.

அவைகளில் ஒன்றுதான் “பொன் ஊமத்தை” என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்…

காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே

தங்கமா மூலியது தழைதானாகும்
சாங்கமுடன் சொர்ணமென்ற பீசமாகும்
சிங்கமதைத் தான்மயக்குந் தழை தானாகும்
புகழான காயாதி இதற்கொவ்வாது
எங்கேனுந் தேடியுழைந் தலைந்திட்டாலும்
என்மகனே விதியாளி காண்பான் தானே

காண்பானே தழையினது மகிமையாலே
காவனத்தில் வசிக்கின்ற மிருகமெல்லாம்
ஆண்பான மதமடங்கி தன்முன்னாக
அப்பனே எதிர் வணங்கி பணியும் பாரு
சாண் பாம்பே யானாலு முந்தனுக்கு
சட்டமுடன் ஏவலுக்கு முன்னாய் நின்று
வீண்பாக முறையாம லடிவணங்கி
வித்தகனே முறைபாடாய் நடக்கும் பாரே

இந்த அதிசய பொன்னூமத்தை மூலிகை கந்தர் முருகனின் மூலிகை ஆகும். இம்மூலிகையால் ரசவாதம் செய்யலாம். இம்மூலிகையை இடித்து பிழிந்து சாறெடுத்து ரவி என்ற வெயிலில் காயவிடவும். பின்பு தாமிரம் என்ற செம்பை உருக்கி இதில் சாய்க்க வேண்டும்.

இந்த செம்பை மீண்டும் உருக்கி சாய்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுச்சாறு ஊற்ற வேண்டும். இதுபோல் பதினொரு முறை உருக்கி சாய்க்க பசுமையான தங்கமாகும்.

இம் மூலிகையின் வாசனையால் சிங்கம் மயங்கும், யானை முதல் அனைத்து மிருகங்களும் வசியமாகும். எதிர் வந்தாலும் அடிவணங்கி பணியும். பாம்பு போன்ற ஜந்துக்கள் நம் சொல்லுக்கு கட்டுப்படும்.!

*இணையப்பகிர்வு*