Wednesday, May 25, 2016

நாட்டுச் சர்க்கரை

வெள்ளைச் சீனியில் பத்துவகையான இரசாயணங்கள் சேர்க்கப்படுகிறது.! என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் உண்மை என்னன்னா, பத்துவகையான இரசாயணங்களில் தான் போனா போகுதென்று கொஞ்சம் கரும்புச்சாற்றையும் சேர்க்கிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் , நோயாளிகள் என்று அனைவரும் இந்தச் சீனியை ஏதோ ஒரு வகையில் தினமும் நமது உணவில்  சேர்த்துக் கொண்டிருக்கிறோம்.! இதற்கு மாற்றாக கருப்பட்டி, பனங்கற்கண்டு, சக்கரை போன்ற எதை  பயன்படுத்தினாலும் அதிலும் பல்வேறு இரசாயணப் பொருட்களை கலப்படம் செய்வதோடு விலையும் சீனியைவிட பலமடங்கு அதிகமாக  இருக்கிறது.! இந்தப் பிரச்சனைகளிலிருந்து மனித சமூகத்தை மீட்டு ஒரு ஆரோக்கிய உலகத்தை ஒருவாக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தோடு உருவாக்கப்பட்டது தான் Amrit 100% ஒரிஜினல் கரும்பு சக்கரை. முதல் தரம், நியாயமான விலை  <ஒரு கிலோ 60 ரூபாய்>  இனியென்ன கவலை குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் மட்டுமல்லாது விழிப்புணர்வுமிக்க அறிவாளிகளும் இதற்கு மாறிவிடுங்களேன்.! ஆரோக்கிய உலகம் படைப்போம்.! " நாம் இதன் தயாரிப்பாளரோ விநியோகஸ்தரோ இல்லையய்யா " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணத் துடனே இதை பகிர்கிறோம்.!  மேலதிக தகவல்களுக்கு  தயாரிப்பாளரின் இணையம் www.eidparry.com நலம் பெருகட்டும் …   amyogatrust.blogspot.com Mobile:9629368389

Tuesday, May 24, 2016

சர்க்கரை நோய்

சக்கரையை குணப்படுத்தும் என்று பலரும் பலவிதமான மருந்துகளை கூறி வருகிறார்கள்.உண்மையில் கணையத்தை முழுமையாக சீர் செய்வதற்கு  மருந்தால் மட்டும் முடியாது. அதற்கு யோகாசனம், பாரம்பரிய உடற் பயிற்சி, உணவு முறை, வாழ்க்கை முறை இவற்றை கடைபிடிப்பதோடு சிறுகுறிஞ் சான் மாத்திரையையும் பயன்படுத்தி னால்  ஆறுமாதத்தில் கணையம் சீராகி விடும்.! இந்த முறைகளை பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் இன்சுலின் இயல்பாகவே சுரக்க ஆரம் பித்துவிடும் செயற்கை இன்சுலின் ஆங்கில மாத்திரைகளை நிறுத்தி விடலாம்.!

நாம் 30 சக்கரை வியாதியால் பாதிக்கப் பட்டவர்களை வைத்து நடத்திய ஓர் ஆய்வில் மேற்கண்ட உண்மையை கண்டறிந்தோம்.!  இந்த ஆய்வை ஆவணப் படமாக தயாரித்துள்ளோம் அதில் யோகாசனம், உடற்பயிற்சி, உணவு முறை, மூலிகை மருந்து, பயனடைந்தோர் பேட்டி என்று அனைத்து விபரங்களும் உள்ளது.!

AUM HERBALS
amyogatrust.blogspot.com mobile:9629368389

Monday, May 23, 2016

நீர்க்கடுப்பு

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.

காரணங்கள்:
சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.

அறிகுறிகள்
ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.

சேர்க்கவேண்டியவை:
திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.

தவிர்க்க வேண்டியவை:
துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.
http://www.techsatish.com/

உதிரப்போக்கு - மதிமாறாட்டம்.. இயற்கை வழி நிவாரணம்.

 இயற்கை வழியில் உதிரப் போக்கை நிறுத்துங்கள்.!   120 கிராம் படிகாரத்தை வாங்கிப் பொடித்து  அரைலிட்டர் பசும்பாலில் 10 நிமிட நேரம் வேகவைத்து  இறக்கி ஒரு துணியில் வடிகட்டி  ஆறியபின்  <உணவுண்டு10 நிமிடம் கழித்து > 50 மில்லி விதம் மூன்று நேரம் குடித்துவர பெரும்பாடு அதிகமாகி பின் குறையும். இதே முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் என்று 6 நாட்கள் செய்தால்  பெரும்பாடு இரைப்பை புண்,  நுரையீரல் புண், ஆசனவாயில் இரத்தம் வடிதல்  குணமாகும்.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com  mobile:9629368389


இயற்கை வழியில் மதிமாறாட்டம், பைத்தியம், பித்தம் இவைகளை குணமாக்குங்கள்.! காலை மாலை வெறும் வயிற்றில் 50 மில்லி கழுதைப்பாலை   சூடாக்கி தொடர்ந்து மூன்றுநாள்  கொடுத்துவர மேற்கண்ட நோய்கள் தீருவதோடு ஏவல், சூன்ய, செய்வினை  தோசங்கள் நீங்கும்.!நலம் பெருகட்டும் …  amyogatrust.blogspot.com

மூச்சின் இரகசியம்

தலைமேலிருக்கு கற்பம்
அதற்குதானே சிறகுமுண்டு வாலுமுண்டு பிறக்கும் போதடைத்ததப்பா
பின்னிறந்தபோதும் திறப்பதில்லை
புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால்
கள்ளுண்ண வேண்டாம்தானே கனிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பலை தவிர்ப்பிக்கும்
உள்ளதைச் சொன்னோம் உணர்வுடையோருக்கே
காணாமல் அலைந்தோர்கள் கோடாகோடி
வீணாக புலம்பினதால் அறியப்போமோ
வாய்ஞானம் பேசுவது எதுக்காகும்
பதி இன்ன இடமென்று குருசொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலைரெண்டாகும்
விதி இன்ன இடமென்று சொல்லை கேளு
விண்ணான விண்ணுக்குள் செலுத்துவது
உண்ணாக்கில் அண்ணாக்கப்பா
மதிரவியும் பூரணமும் கண்வாய் மூக்கு
மகத்தான செவியொடு பரிசமெட்டும்
பதியுமிடம் சுழிமுனை என்றதற்கு பேராம்
பகருவார் சொர்க்கமென்றும் கைலாசமென்றே.!     _ திருமூலர்

Saturday, May 21, 2016

ஜாதிக்காய்.

எளிய மருத்துவம்
ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு, 10 கிராம் எடுத்து, உரலில் போட்டு தூள் செய்து மாவு சல்லடையில் சலித்து, வைத்துக் கொண்டு, தினசரி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, காய்ச்சிய பசும்பாலில்
கலக்கிக் குடித்து வந்தால், வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, பக்கவாதம், தலைவலி, வயிற்று வலியையும் குணப்படுத்தும்.
ஜாதிக்காய், சீரகம், சுக்கு ஆகியவற்றை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மை போல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேளைக்கு, ஒரு உருண்டை வீதம் ஒரு டம்ளர் பச்சை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.
ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து, இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவு மற்றும் நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். விந்து முந்துதலை தவிர்க்க, மூலிகைகள் பல உள்ளன. அதில் மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்னைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.
எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும், ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து, நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து, கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை என, ஒரு நாளைக்கு மூன்று வேளை வைத்தால் பல் வலி குணமாகும். ஜாதிக்காயை உடைத்து, கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால் விட்டு மை போல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாக பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவினால், கண்பார்வை தெளிவடைந்து விடும். ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசி வந்தால், நாளடைவில் மறையும் என, சித்த மருத்துவம் கூறுகிறது.!

இணையப் பகிர்வு

இயற்கை வழியில் நிவாரணம்

இயற்கை வழியில்  சுவாசகாசம், வாய்வு, குன்மவலி,கடினமான விக்கலை குணமாக்குங்கள்.!        இரண்டு லிட்டர் நீரில் 20 கிராம் பெருங்காயத்தை கொஞ்சம் கொஞ்சமாக உரைத்து அது பால் பக்குவம் வந்தவுடன்  வடிகட்டி வைத்துக்கொண்டு 35 மில்லி விதம்   இரண்டு மணிக்கொரு தரம் குடித்துவர மேற்கண்ட நோய்கள் குணமாகும்.! மருந்து தீரும் வரை பாட்டிலில் அடைத்து நீரில் வைத்து பயன்படுத்தலாம்.!

<ஒரிஜினல் பெருங்காயம் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்! நலம்பெருகட்டும் … amyogatrust.blogspot.com   mobile 9629368389

தூக்கம்

இப்படி தூங்கினால் நல்லது  இரவில் கட்டிலில் படுத்து தூங்குவதை விட தரையில் படுத்து தூங்குவதே நல்லது.! ஏனெனில் கட்டிலில் படுக்கும் போது உடலில் உள்ள பிராண சக்தியோடு ஆகாய பிராண சக்தி அதிகமாக கலந்துவிடுகிறது.! இதனால் வாய்வு சம்மந்தமான பிரச்சனைகள் உருவாகும்.!  காலையில் எழுந்ததும் முதலில் கைகளை  வெறும் தரையில் பதித்து கண்களில் வைத்துவிட்டு.பிறகு கால்களை தரையில் பதிக்க வேண்டும். ஏனெனில் உடலில்  வெப்பத்தை விட பூமியில் வெப்பமோ குளிர்ச்சியோ அதிகமாக இருக்கும் அந்த நிலையில் முதலில் காலை தரையில் பதிப்பதால் இரத்த ஓட்டம் விரைந்து கால்களுக்கு வரும் இதனால் நரம்புத்தளர்ச்சி, தலைசுற்றல் போன்ற வியாதிகள் ஏற்படும். மாறாக கைகளை பதித்து கண்களில்  ஒற்றுவதால்  இரத்த ஓட்டம் மேல்நோக்கி சென்று மூளைக்கு தேவையான பிராணசக்தி அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெருகும்.! தூங்கும் போது எப்பொழுதும் மால்லாந்து ஒருக்களித்து கமுந்து என்று ஒரே நிலையில் தூங்கக் கூடாது. ஏனெனில் ஏதேனும் ஒரே நிலையில் நீண்ட நேரம் தூங்கினால் உடலின் ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாகவும் மற்ற பகுதியில் குறைவாகவும் இருக்கும் இதனால் கைகால் மறத்துப் போதல், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும்.! உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தூங்கக் கூடாது. அப்படி தூங்கினால், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மூட்டுவலி போன்ற கோளாறுகள் தோன்றும்.! இரவு 10 மணிக்கு முன் தூங்க செல்வதும் அதிகாலை 6 மணிக்கும் முன் எழுவதும் மிக நல்லது. இதனால் உடல் சக்தி அதிகரிப்பதோடு உடலில் நல்ல பிராண ஆற்றலும் அதிகமாகும்.! எப்பொழுதும் தெற்கு அல்லது மேற்கு தலைவைத்து படுப்பது நல்லது. இதனால் புவியீர்ப்பு ஆற்றலும் ஜீவகாந்த ஆற்றலும் சமன்பட்டு ஆரோக்கியம் பெருகும்.!  நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com    mobile:9629368389

தேவையில்லாத ஆணிகள் மகாத்மா காந்தி

இங்கிலாந்தில் இருந்தபோது ஒரு பல்பொருள் அங்காடி முழுவதும் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல் வெளியேற எத்தனித்தபோது அங்கிருந்த கடை மேற்பார்வையாளர் எங்கள் கடையில் விதவிதமான துணிகள் அழகுப்பொருட்கள், உணவுப் பொருட்கள் என்று அத்தனையும் இருக்கிறது. ஆனால் நீங்கள் எதையும் வாங்காமல் செல்கிறீர்களே?  இதில் எதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டாராம் அதற்கு மகாத்மா " உண்மையை சொல்வதென்றால் நான் இங்கு எதையும் வாங்க வரவில்லை இந்த கடையில் இருக்கின்ற எத்தனை பொருள்களின் தேவை இல்லாமல் என்னால் வாழமுடியும் என்று பார்க்கவே வந்தேன் இங்குள்ள எந்த பொருளும் எனக்கு தேவைப்படாது என்று சொல்லிவிட்டு வெளியேறினாராம்.!  ஆனால், நாம் இன்றைக்கு அறிந்தும் அறியாமலும்  வாங்கி குவிக்கும் குப்பைகள் ஏராளம்.!  ஒவ்வெரு நடுத்தர வீட்டிலும் சப்பல் முதல் மின்னனு பொருட்கள் வரை எத்தனையோ பொருட்கள் தேவையைவிட அதிகமாக இருக்கிறது.! ஒரே வீட்டில் பலவிதமான சோப்பு, பவுடர், பேஸ்ட் , கிரீம், லோசன், கொசுமருந்து, கழிவறை சுத்திகரிப்பு பொருட்கள், வீட்டை வாசனையாக்கும் திரவங்கள் என்று எத்தனையோ நச்சுக் குப்பைகள் ஒவ்வெரு வீடுகளிலும் நிரம்பி வழிகிறது.! இதுவாவது பரவாயில்லை உடலை கெடுக்கும் ஏசி, கிரைண்டர், ஹார்லிக்ஸ், பூஸ்ட், சீனி,  மைதா,பாக்கெட் பால் , வாசிங் மிசின், பாக்கெட் குப்பை உணவுகள்,பெப்ஸி,கோக், மிராண்டா,மாசா போன்ற  பாட்டில்  ஆசிட்கள் இல்லாத வீடுகளை பார்ப்பது இன்று மிகவும் அரிதாக இருக்கிறது.! சமீபத்தில் ஒரு டீச்சர் வீட்டு விசேசத்திற்கு சென்றிருந்தேன் பந்தி ஆரம்பித்து ஐந்து நிமிடத்தில் இரண்டு முறை சாதம், பருப்பு, மோர், இரண்டு பாயாசம் பழம் என்று அத்தனையும் என்னை கடந்துவிட்டது நான் முதலில் சாப்பிட ஆரம்பித்த சாம்பாரை கூட முடிக்கவில்லை எனது பக்கத்தில் இருந்த  அத்தனை பேரும் பாதி உணவுப் பொருட்களை இலையில் வைத்துவிட்டே எழுந்து விட்டார்கள்.! அங்கு வீணாண உணவை வைத்து இன்னொரு திருமண விருந்தையே முடித்துவிடலாம் அவ்வளவு வீண்.! இப்பொழுது எல்லா திருமண வீட்டிலும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கிறார்கள்.! வசதியான இடம் என்றால் ஐஸ்கிரீம், பாப்கார்ன் என்று அந்த குப்பைகள் வேறு தனியாய் ஓடுகிறது.! இன்னும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத ஒரு தேசத்தில்  விவசாயம் அழிந்து வரும் ஒரு தேசத்தில்  தினமும் பட்டினியாக தூங்குபவர்கள் இருபது கோடிக்கும் மேல் என்று கணக்கிடப் பட்டுள்ள ஒரு தேசத்தில் இதுபோன்ற கேடித்தனங்கள் நடந்தால் மண்மாதா நம்மை மண்ணிப்பாளா, நீ வீண் விரயம் செய்த ஒவ்வெரு துளி நீருக்கும்  கூட மறுமையில்  கேள்விகேட்கப் படுவாய் என்ற இறைவன் தான்  இதைப் பார்த்து பொறுத்துக் கொள்வானா?  இப்பொழுதெல்லாம் நிறைய இளம் வயது பிள்ளைகள் 28 அளவுள்ள இடுப்பிற்கு 34 அளவுள்ள பேன்ட் வாங்கிப் போட்டுக் கொண்டு பின்னகத்தை திறந்து போட்டுக் கொண்டே நடக்கிறார்கள். பேருந்திலோ இரயிலிலோ  கையை தூக்கினால் ஜட்டியில் சக்கரை வரை தெரிகிறது.! என்ன ஒரு கோமாளித்தனம்?  இவ்வளவு துணியை விரயம் செய்தும் மறைக்க வேண்டியதை மறைக்காத நவநாகரீம் என்ற காட்டு மீராண்டித் தனத்தை எந்த  அறிவாளி முதலில் செய்தான்? அதைப் பார்த்து யூத் என்றால் இப்படித்தான் --த்தை காட்டி நடக்க வேண்டும் என்று எந்தப் பள்ளி கல்லூரியில் படித்தார்கள்.! லூசாக இருப்பது இவர்களின் உடை மட்டுமல்ல மண்டையும் அல்லவா.! என்ன மாதிரியான மோகம் இது.! தேவை இல்லாத பொருளை வாங்குபவன் தேவையான பொருளை விற்க வேண்டிய நிலமைக்கு வருவான்.! கண்டகண்ட இரசாயண குப்பைகளையும் உள்ளே தள்ளுவதற்கு  நமது வயிறொன்றும் நாற்றெமெடுக்கும் குப்பை தொட்டி இல்லை.! தேவையில்லாத பொருட்களை சேகரிப்பதற்கு நமது இல்லம் ஒன்றும் காயலான் கடையில்லை.! உலகில் உள்ள அனைத்து வாசனைப் பொருட்களையும் போட்டு மணப்பதற்கு நமது உடல் பிணமில்லை.!    பூமியை அதிரவைத்து மாசுபடுத்தி ஆடம்பர நாகரீக வலையில் மாட்டி எதிர்கால சந்ததிக்கு சொர்க்கமாக ஒப்படைக்க வேண்டிய பூமியை வர்த்தக நரகமாய் மாற்றாமல்  மனிதனாய் வாழ்வோம்.! மகாத்மாவாக வாழாவிட்டாலும் பரவாயில்லை.!         நலம் பெருகட்டும் …     amyogatrust.blogspot.com    mobile:9629368389

Sunday, May 15, 2016

எப்படித் தூங்கனும்?

முன்னோர்கள் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள்.
காரணம் இதோ படியுங்கள்.........

வடக்கே தலை வைத்து படுப்பது நல்லதல்ல

“அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது” பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலை செய்துவருகிறது. ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச்செல்லும், ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வடக்கே தலை வைத்துபடுத்தால், நம் உடலின் வடக்கு திசையும், பூமியின் வடக்கு திசையும் இணையும்போது ஓட்டுவது இல்லை. எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது, எனவே நிம்மதியாகத் தூங்கமுடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

தெற்கு தலை வைத்துப்படுத்தால் நம் வடதிசையும் பூமியின் தெற்கு திசையும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எனவே நிம்மதியான தூக்கம் வரும். எனவே தெற்கில் தலை வைத்துப்படுப்பது மிகவும் நல்லது.

“புது மாப்பிள்ளை தெற்கே தலைவைத்து படுக்கவேண்டும்” என கேரளாவில் பாட்டிமார்கள் கூறுவார்கள். ஏனென்றால் புது மாப்பிள்ளைகள் குறைந்த நேரமே தூங்குவார்கள், இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் அல்லவா?அதனால். கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும்பொழுது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காவும், தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும்.

ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும், தொப்புளுக்கு கீழ் பகுதி வடக்காவும் இருக்கும்.இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல்நோக்கி இருக்க முடியும்.
பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காவும், கிழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத்திசை, அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி திரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது.

எனவே தயவுசெய்து வடக்கே தலைவைத்துப் படுக்ககூடாது. தெற்குத்திசை மிகவும் நல்லது.!

இணையப் பகிர்வு

கேழ்வரகு

கால்சியம், இரும்பு, புரதம் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு
Health Cure--9791177117
கேழ்வரகு ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும்.
இதன் வேறு பெயர்கள் ராகி மற்றும் கேப்பை. எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது.
கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.
மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும்.
மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம்.
பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களே, தினமும் உண்ணும் உணவாக இருந்து வந்துள்ளது மற்றும் இன்று நாம் தினமும் உண்டு வரும் அரிசி வகை உணவுகள், பண்டைய காலத்தில் பண்டிகை நேரத்தில் தமிழர்கள் உண்டு வந்துள்ளனர்.
ஆகவே அரிசியைக் காட்டிலும் சிறு தானியங்களிலேயே சத்து அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொண்டு, இனி அடிக்கடி உணவில் சிறுதானியம் சேர்த்து ஆரோக்கியம் பெற வேண்டும்.
பரவலாக கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பொதுவாக தென் இந்தியாவின் அனைத்து பகுதியினர் அடுப்பங்கரையிலும் இருக்கும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும்.
இந்தியா முழுவதும் பல கிராமங்களின் பிரதான உணவும் கூட இது தான். அதிலும் கேழ்வரகில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் இன்ன பிற தாதுக்களும் உள்ளன.
இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு என்று சொல்லப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
இந்த வகை தானியம் செரிமானமாவதில் எளிதானது மற்றும் கோதுமையில் இருக்கும் க்ளுட்டன் என்னும் பசை வகை புரதம் போல இந்த தானியத்தில் இல்லை. ஆகவே க்ளுட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் கேழ்வரகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கேழ் வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். இது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவிகரமாக இருக்கும்.
அதிக அளவில் கேழ்வரகு உட்கொள்ளுதல், உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எனவே சிறுநீரககல் இருக்கும் நோயாளிகள் இந்த தானியங்களை உட்கொள்ள கூடாது.
இப்போது கேழ்வரகு சாப்பிடுவதால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
எடை இழக்க:-
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம்.
அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வை அளிக்கிறது.
இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடியும்.
ஆரோக்கியமான எலும்புகளைப் பெற :-
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
நீரிழிவு நோயைக் குணப்படுத்த :-
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன.
இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
ரத்தத்தில் கொழுப்பை குறைக்க :-
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்த :
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.
சோர்வைப் போக்க :-
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.
அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.!

இணையப் பகிர்வு

Saturday, May 14, 2016

முகச் சுருக்கம்

இயற்கை வழியில் முகச் சுருக்கத்தை போக்குங்கள்

பத்து சொட்டு நல்லெண்ணைய் ஐந்து சொட்டு நீர் இரண்டையும்
ஒரு  சிறிய எண்ணெய் கிண்ணத்தில் விட்டு ஆள்காட்டி விரலால்  வட்டமாக சுற்றினால்  வெள்ளையாக   திரண்டு வரும் அதை எடுத்து சுருக்கம் உள்ள இடத்தில் தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு  தேய்த்து வந்தால் 30 நாளில் முகசுருக்கம் மறையும்.! நல்லெண்ணைய் பிடிக்காதவர்கள் தேங்காய் எண்ணையையும் தோல் நோய் உள்ளவர்கள் வேப்பெண்ணெயையும்  இதே முறையில் பயன்படுத்தலாம்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

Friday, May 13, 2016

இதய நோயாளிகளுக்கு முதலுதவி

இயற்கை வழியில் அவசர சிகிட்சை
CPR cardio Pulmonary Resuscitation
உங்கள் வீட்டில் உள்ளவர்களோ அல்லது பொது இடங்களில் யாரேனும் திடீரெனெ மயங்கி விழுந்து  சுவாசம் தடைப்பட்டிருந்தால் செய்ய வேண்டிய அவசரசிகிட்சை

1.முதலில்  பாதிக்கப்பட்டவரின் உடைகளை தளர்த்தி காற்றோட்டமாக படுக்க வைக்கவும்

2.அடுத்து அவரின் இடது பக்கமாக நின்றுகொண்டு  பாதிக்கப்பட்டவரின் இதயத்தின் மேல் இடதுகையையும் அதற்கு மேலே வலது கையையும் வைத்து  விநாடிக்கு இரண்டு முறை என்ற வேகத்தில் 30 முறைகள் போதிய அளவு பலமாக அழுத்தம் கொடுங்கள்

3.பிறகு பாதிக்கப்பட்டவரின் மூக்கை  நமது விரல்கள் பிடித்துக் கொண்டு வாயோடு வாய் வைத்து இரண்டு முறை வேகமாக ஊதுங்கள்

4.மீண்டும் இரண்டு கைகளையும் இதயத்தில் வைத்து வேகமாக 30 முறை அழுத்துங்கள்

5.மீண்டும்  இரண்டு முறை  பாதிக்கப்பட்டவரின் நாசியை அடைத்துக் கொண்டு வாயோடு வாய்வைத்து காற்றை வேகமாக
உள்ளே ஊதுங்கள்.!
இப்படியே  தொடர்ந்து  இதயத்துடிப்பு வரும்வரை செய்யுங்கள்.!
இது செய்வதற்கு மிக எளிய வழிமுறையாய் இருந்தாலும் இருதய பலவீனம், மாரடைப்பு, மூளை திசுக்களுக்கு இரத்த செல்லாமை போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கொடுக்கும்.!
இந்த CPR சிகிட்சை உடனடியாக செய்வதால் 100/ 90 சதவீதத்தினர் மருத்துவமனைக்கு போகும் முன்பே நார்மல் நிலைக்கு வருவதாகவும்  மருத்துவமனையில் சேர்த்தும் இதை உடனடியாக செய்யாத பட்சத்தில் அதன்பிறகு எத்தனை உயர் சிகிட்சை அளித்தாலும் அது பலருக்கு  போதிய பலன் அளிப்பதில்லை என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.!
இதை செய்வதற்கு மருத்துவம் கற்றவர்கள் தான் வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறைந்த பட்ச அறிவுள்ள உயிரை காக்க வேண்டும் என்ற துடிப்புள்ள யாரும் செய்யலாம்.!
இதன் உடனடி பலனாக சுவாச மீட்பு, இருதய தசைகளுக்கு இரத்தம் செல்வது, மூளை திசுக்களுக்கு உடனடியாக ஆக்ஸிஜனும் இரத்த ஓட்டமும் செல்வது போன்றவை நடைபெறு வதாலேயே உயிர் மீட்கப் படுகிறது.!
நலம் பெருகட்டும் …

AM HERBALS
amyogatryst.blogspot.com
mobile:9629368389

AUM HERBALS இயற்கை மூலிகை தயாரிப்புகள்


*****************

பஞ்சமூலி சூரணம்

உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப் பட்ட மூலிகை தேனீர் பொடி

உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!

950 கிராம் 600 ரூபாய்

சக்கரை வியாதி சூரணம்

உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை

100 மாத்திரை 300 ரூபாய்

யோகா புத்தகம் & வீடியோ

சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!

இன்சுலின்
<ஆவணப்படம்>
இயற்கை மூலிகைகள் மற்றும் யோகாவின் மூலம் சக்கரை நோயை வெற்றிகொண்டு இன்சுலின், மாத்திரைகளை நிறுத்தியவர்களின் உண்மை பதிவு.!

முழு பயிற்சியும் வாழ்வியல் முறையும் அடங்கியது.!

நன்கொடை 250/-


நமது அறக்கட்டளையின் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு நிதி திரட்டவே நமது தரமான 100% இயற்கையான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம்.!


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் … தொடர்புக்கு:9629368389 amyogatrust.blogspot.com

Thursday, May 12, 2016

வாங்க வெத்தல போடுவோம்

40 – வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும். ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும்.
நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும்.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது..
வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.
அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம்
இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.
வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும்.
வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.!

இணையப் பகிர்வு

Tuesday, May 10, 2016

பெருவயிறு கரைய மருந்து

தேவையான பொருள்கள்:

கடுக்காய் பிஞ்சி  - 20 கிராம்
கண்டத்திப்பிலி  - 20 கிராம்
கருஞ்சீரகம்  - 20 கிராம்
சித்திரமூலம் வேர்ப்பட்டை - 20 கிராம்
சிவதை வேர்  - 20 கிராம்

செய்முறை:

முதல் நான்கு மருந்துகளை ஒவ்வொன்றாக தனித்தனியாக பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். தனித்தனியாக தூள் செய்து சலித்து கலந்து கொள்ளவும். சிவதை வேரை பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி தூள் செய்து மருந்துகளோடு கலந்து கொள்ளவும்.

அளவு : 1 கிராம்

வேளை : காலை மற்றும் இரவு

தீரும் நோய்கள்: பெருத்த வயிறு, பெரும்பாடு, சூதகக்கட்டு முதலிய பிணிகள் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

Monday, May 9, 2016

ஏன்?

நான்கூட இதெல்லாம் சும்மா 'ஃபார்மாலிட்டி'க்காக தான் பண்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஞ்ஞானம் இருப்பது ஆச்சரியப்படவைத்தது:

வாழை இலை சாப்பாடு ஏன்?

வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.

தோப்புக்கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடும்போடு இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது, மூளையில் நியூரான்களின் (மூளைச் செல்கள்) செயல்பாடுகள் அதிகரிக்கிறது. மேலும் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன. மூளைக்கு தகவல் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன. 'ஆட்டிஸம்' போன்ற மன இறுக்கம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக்கூட தோப்புக்கரணத்தை அமெரிக்க டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தக்காலத்தில் ஆசிரியர்கள், படிக்காத மாணவர்களை தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத்திறன் அதிகரிக்கச் செய்யும் உத்தியை அறிந்து வைத்திருந்தார்கள்.

விபூதி பூசுவதன் ஏன்?

தலைக்கு குளித்து விட்டு விபூதியை நெற்றி நிறைய பூசினால் தலையில் கோர்த்துக் கொண்டிருக்கும் தண்ணீரை விபூதி உறிஞ்சி விடும்.

விசேஷ நாட்களில் மாவிலை தோரணம் கட்டுவது ஏன்?

மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி, மாவிலைகளுக்கு உண்டு. விழாக்களின் போது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. இந்த நேரத்தில் மாவிலைகள் ஒரு கிருமிநாசினி போல் செயல்பட்டு, காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் தடுத்து நிறுத்துகிறது. மேலும் 'மாவிலை' கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடச் செய்கின்றன.

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?

சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

Sunday, May 8, 2016

பித்தம்.

மாலிக், [08.05.16 23:50]
பித்தம் என்றால் என்ன ?

மனிதனின் உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம்(கபம் ) என்று 3 விதமான நாடிகள் உண்டு.

உடலில் உள்ள பித்தபை எனப்படும் சுரபி வேலை செய்தால் மட்டுமே நல்ல பசி, உண்ட உணவுகள் செறிக்கும் தன்மை அடைகிறது. இதை அக்னி, சூடு என்று சொல்வதுண்டு . இது அதிகமாக சுரக்கும் உணவுகளை ( எண்ணை உணவுகள் ) எடுத்தாலும், நீர் தன்மை உடலில் குறைந்தாலும் பித்தம் சமநிலை தவறும்.

இன்று உள்ள அல்லோபதி மருத்துவத்தில் தரப்படும் மாத்திரைகள் பித்தசுரபிகளை தொல்லை படுத்துகிறது.

சித்த வைத்திய முறையில்:

உணவின் ரசத்தை பிரிப்பது கபம் அதாவது உண்டபின் கபமும், குருதியில் இருந்து சதைக்கு சேர்ப்பது பித்தம் (ஜீரணம் நடக்கும் பொழுது பித்தம்).

குடலில் இருந்து காற்றை பிரிப்பது ,கழிவு பொருளை வெளியேற்றுவது வாதம் என்றும் (ஜீரணம் நடந்த முடிந்த பின்) சொல்ல படுகிறது .

⭕அதிகாலை கபமும்
⭕சூரிய சக்தி அதிகமானதும் பித்தம் என்றும்
⭕சூரிய சக்தி தணியும் பொழுது வாதமும் வேலை செய்கிறது என்றும் சொல்ல படுகிறது .

🌀 இந்த பித்தம் சளியின் நண்பன். பித்தம் அதிகம் உண்டாகும் பொழுது சளி உண்டாகும். இப்படியும் சொல்லலாம் சளி உண்டாகும் பொழுது பித்தம் உண்டாகும்.

🌀 இந்த சளி எனப்படும் eosinophilia மிகுந்த தொல்லை தரும் செயல் என்று நாம் அறிவோம்.

🌀 இந்த பித்தம் உடல் சூட்டை உண்டாக்கும் , மேலும் பித்த தேகம் உடையவர்கள் ஒல்லியாக இருப்பர்.

🌀 உடலில் பித்தத்தினால் ஏற்படும் சூடு என்னும் உஷ்ணம் மலம், மூத்திரம் மற்றும் விந்து வழியாகவெளி ஏறி உடலை சமநிலை அடைய செய்யும் .

🎯 இந்த பித்தம் நம்மில் சம நிலை அடைய இஞ்சி சிறிதளவு, எலுமிச்சை பழத்தின் அரை பாதி, இத்துடன் சமளவு தேன் கலந்து காலை எழுந்தவுடன் பருக வேண்டும். அதாவது முதல் நாள் இஞ்சியை சிறிதளவு நசுக்கி அதில் சிறிது நீர் சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை இந்த நீரை வடிகட்டி இந்த நீரின் அளவு தேன், இதன் அளவு எலுமிச்சைசாறு சேர்த்து பருக வேண்டும். 60 நாட்கள் 3 முறை செய்ய பித்தம் சமப்படும் .
இவைகள்தான் நம் உடலில் உள்ள பித்தத்தின் செயல்.

இந்த பித்தம் சிலரின் உடலில் சமநிலை அடைவதும் அடையாமல் இருப்பதும் என்று தெரிந்து கொள்ள உடலில் சில அடையாளம் மற்றும் சில மாற்றங்கள் வெளிபடுத்தும் .

✔ பித்தம் அதிகமாக உற்பத்தியாகி சிலருக்கு வாய்களில் கசப்பு உற்பத்தியாகி மஞ்சள் நிறத்துடன் வாந்தியாக வெளியே வரும்.இதுவே சிலருக்கு பச்சை நிறமாகவும் வெளியே வரும். சிலருக்கு தலை சுற்றல் வரும். உடலில் பித்தம் மிகவும் அதிகம் சேர்ந்து பிறகு இப்படி வெளிபடும் .

1⃣ பித்தத்தின் முதல் நிலை மஞ்சள்
2⃣ இரண்டாம் நிலை பச்சை
3⃣ முன்றாம் நிலை கருமை ....

⭕ முதல் இரண்டு நிலைகளை தான் பெருபான்மையோர் அனுபவித்து வருகின்றனர் .

⭕ இரண்டாம் நிலை உடலில் தாக்கியவுடன் தலையில் உள்ள மூடிகள் வெண்மை நிறமாக மாறிவிடும். இதை பித்த நரை என்று சொல்வது உண்டு. இது இளமையில் வருவது கொடுமை .

நமக்கு காலம் செல்ல செல்ல (வயது கூட) பித்தப்பை தன் செயலை குறைப்பதினால் மற்றும் எண்ணை உணவுகளை செரிக்கும் தன்மை குறைவதால் நமக்கு பித்தம் தலைக்கு ஏறி நரை வருகிறது. இப்படி சொல்வது சித்த நூல்கள் .

அலோபதி மருத்துவர்கள் விட்டமின்ஸ் இல்லை என்பார்கள். உடல் கூறுகளை அருமையாக காரணத்துடன் விளக்கி சொல்லியது நம்முடைய
சித்த நூல்கள் மட்டுமே .

⭕ மூன்றாம் நிலை பைத்தியம். இதை சித்த நூலகள் பித்தம் தலைக்கு ஏறி பித்து பிடித்து விட்டது என்பார்கள். வாய்க்கு வந்த பித்தம் மஞ்சளாக மாறி பச்சையாக மாறி பிறகு கருப்பாக மாறி தலைக்கு ஏறி சித்தத்தை குழப்பி கெடுத்து விட்டது என்பார்கள் .

இதை சித்த மருத்துவர்கள் சில பச்சை இலைகளை கொடுத்ததும், முலீகை இலைகளை கலந்து, ஊறி, அலசி வரும் நீரினாலும் இதை குடிப்பதாலும்,  தலைக்கு குளிப்பதினாலும், சித்தம் திரும்ப பெறவும், பித்தம் குறைந்து போகும் என்று மருத்துவம் செய்தார்கள்.

இந்த மருத்துவத்திற்காக விளைந்த முலிகைகளை கொண்ட திரிகூடமலை (சித்திர சபை )
வனத்தில் சித்தர்கள் தங்கி மருந்து செய்தார்கள் .

இந்த மலையில் அசையும் சக்தி நீராகவும், அசையாத மலை சிவனாகவும் இருந்து இதில் குளிப்பவர்களுக்கு பித்தம் சமநிலை அடைய செய்வார்கள் என்று நம்பிகை உள்ளது .

இப்படி பித்தம் என்பது சித்தத்தை குழப்பும் சக்திகளை கொண்டது .

பித்தம் ஏறினால் எப்படி பித்து பிடிக்கும் என்று புரிந்து கொண்டோம் .!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு

மூக்குத்திப் பூ

அதிசய மூலிகை..!

எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்த அம்மையாருக்கு கணுக்காலுக்கு மேல் புண் ஏற்ப்பட்டு பெரிதாகி அழுகி இருபுறமும் ஓட்டை தெரியும் அளவு வளர்ந்து படுத்த படுக்கையாகி விட்டார். மருத்துவர்கள் முழங்காலிற்கு கீழ் காலை அகற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் மேலே ஏறி ஆபத்தாகி விடும்.என்று கூறிவிட்டார்கள். அந்த அம்மையாருக்கு சர்கரை நோய் இருந்திருக்கும் போல.அந்த அம்மையார் கதறிவிட்டார்.

பக்கத்து வீடாகையால் எங்களுடன் சண்டையில் பேசாமல் இருந்தார்கள்.என் தந்தை அந்த அம்மையாரின் மகனைக்கூப்பிட்டு விபரம் கேட்டார்.அவர் விவரத்தைக் கூறியதும் என் தந்தையுடன் நானும் (எனக்கு 12 வயதிருக்கும் அப்போது.) அவர்கள் வீட்டிற்குச் சென்றோம். என் தந்தை அந்த அம்மையாரின் காலைப் பார்த்து விட்டு கவலைப்படாதே உன்னை பழைய ஆள்மாதிரி நடக்கவைக்கிறேன் என்றார்.

எனக்கோ கடும் அதிர்ச்சி அவர் காலிலிருந்து சீழுடன் கடும் நாற்றம் வேறு எட்டியே நின்று கொண்டேன். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் மற்றும் நான் உட்பட ஏதோ ஆறுதலாக கூறுகிறார் என்றுதான் நினைத்தோம்.மறுநாள் காலை 6 மணிக்கு ஏதோ பச்சிலையுடன் வந்து அந்த அம்மையாரின் காலில் மூலிகையைக் கசக்கி சாறை வடியவிட்டு மூலிகையையும் உள்ளே வைத்து வெள்ளைத் துணியால் கட்டுப்போட்டார்.அவ்வப்பொழுது தண்ணீரை அள்ளி கட்டில் நனைத்துக் கொள்ளச் சொன்னார்.காலை, மாலை இதேபோல் செய்தார்.என்ன ஆச்சரியம் 25 நாட்களில் அந்த அம்மையார் முழு குணமாகி நீண்டகாலம் வாழ்ந்தார்.இதற்கு பத்துபைசா வாங்கவில்லை என் தந்தை. அது இன்னும் என் நினைவில் உள்ளது.

அந்த மூலிகை மூக்குத்திப்பூ, காயப்பச்சிலை, கிணற்றடிப் பூண்டு, என பல பெயர்களில் அழைக்கப்படும். மூலிகை இது. புற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.!
நலம் பெருகட்டும் …

இணையப் பகிர்வு.!

Saturday, May 7, 2016

இயற்கை வழியில் நலம் பெறுங்கள்

ஒரு விரிப்பில் ஆண்கள் வலது காலை முதலிலிலும் பெண்கள் இடது காலை முதலிலும் வைத்து பிறகு அடுத்த காலையும் மடக்கி சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.!
கையை மடியில் வெறுமனே மடித்துவைத்துக் கொள்ளுங்கள்.!
கண்களை மூடி வைத்துக் கொண்டு
மூச்சை நிதனமாகவும் ஒரே சீராகவும் உள்ளே இழுங்கள் இழுக்கும் போது சுத்தமான பிராணக் காற்று உங்கள் நாடி நரம்பெல்லாம் பெருகுவதாக நினைத்துக் கொள்ளுங்கள் பிறகு மெதுவாக ஒரே சீராக மூச்சை வெளியேற்றுங்கள் அப்படி வெளியேற்றும் உங்கள் உடலிலிருந்து நாம் பயன்படுத்திய காற்றின் கழிவு காற்று வெளியேறுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.! மூச்சை இழுத்தது முதல் வெளியே விடுவது வரை ஒரு சுற்று இப்படி 10 முதல் 20 சுற்றுகள் தினமும் காலையும் மாலையும் இயற்கையான சூழலில் அமர்ந்து செய்து பாருங்கள்.!
இரத்த அழுத்தம், கவலை, உடல்சோர்வு, ஆரம்பகட்ட இழுப்பு, நெஞ்செரிச்சல் போன்றவை ஒரே மாதத்தில் காணாமல் போய்விடுவதோடு உடல் புதிய லயத்தில் இயங்க ஆரம்பித்து ஆரோக்கியம் பெருகும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Friday, May 6, 2016

நீர்க்கடுப்பு - வெட்டுக் காயம் - பல்வலி

இயற்கை வழியில் குடல்காந்தல், பித்தம், நீர்க்கடுப்பை குணமாக்குங்கள்

மூன்று இளநீரை ஒரே நேரத்தில் குடித்துவிட்டு ஒரு மணிநேரம் வரை வெறெதுவும் உண்ணாமல் இருந்தால் நீர்க்கடுப்பு தேகச்சூடு குணமாகும்.!
பாதம் பிசின் ஐந்து கிராம் அளவு எடுத்து இரவில் அரைடம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, தானே விந்துவெளியேறல், பித்தச்சூடு குணமாகும்.!
சுப்ஜா என்றழைக்கப்படும் துளசிவிதையை   ஒருதேக்கரண்டி அளவு எடுத்து பழைய சாதநீரில் மூன்று மணிநேரம் ஊறவைத்து தினமும் ஒருவேளை பத்துநாட்கள்  உண்டுவர உடல் எரிச்சல் , குடல்காந்தல் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

இயற்கை வழியில் வெட்டுக் காயங்களை குணப்படுத்துங்கள்

உண்ணிச்செடியின் இலையை பறித்து அதனோடு சிறிதளவு சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து வெட்டுக்காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவிட காயம் ஆறிய பின்தான் கட்டே அவிழும்.!
<உண்ணிச் செடியென்பது வேலிகளில் வளர்ந்து நல்லமிளகு போல பழம் கறுப்பாக காய் பச்சையாக கொத்தாக வளரும் செடி> இது கிடைக்காத போது தொட்டாவாடி இலையையும் இதுபோல் கட்டலாம்.!நலம் பெருகட்டும் …

அதிக  அனுபவ மருத்துவ   தகவல்களுக்கு

இயற்கை வழியில் பல் வலியை குணமாக்குங்கள்

சித்திமூலமும் சுக்கும் சம அளவெடுத்துபொடித்து வைத்துக் கொண்டு சிறிதுநீர் சேர்த்து வலது உள்ளங்காலில் சிறிது தடவ இடது பக்க பல்வலியும் இடது உள்ளங்காலில் தடவ வலதுபக்க பல்வலியும் தீரும்.!
இதை தேங்காய் எண்ணையில் குழப்பி தேமல் மேல் போட தேமல் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

மேலதிக அனுபவ மருத்துவங்களுக்கு
amyogatrust.blogspot.com
mobile:9629368389

Tuesday, May 3, 2016

இசைந்த உள்ளங்கள்.

இயற்கை வழியில் இதயங்களை வெல்லுங்கள்

பிறரிடம் இருக்கும் நல்ல விசயங்களை பலருக்கு முன்னும் தனியாக இருக்கும் போதும் பாராட்டுங்கள்.ஆனால், பிறரிடம் தென்படும்  நலமில்லா விசயங்களை தனியாக  இருக்கும் போது மட்டுமே எடுத்துக் கூறுங்கள்.! உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ உதவி தேவையாக இருக்கும் பட்சத்தில்  நீங்கள் உதவும் நிலையிலிருந்தால் அவர்களாகவே கேட்கட்டும்  என்று தாமதிக்காமல் உங்களால் முடிந்த உதவியை உடனே செய்து விடுங்கள்.!
நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள், உடன் பணிபுரிபவர்களை வெளி இடங்களில் காணும்போது வலியசென்று பேசுங்கள். குறைந்தது சிறு புன்னகையாவது செய்யுங்கள்.! உங்களுக்கு ஒதுக்கப்பட்ட  பணி எவ்வளவு கடினமாக இருந்தாலும்  அதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மையை கருதி உடனுக்குடன் செய்து முடித்துவிடுங்கள்.!
பெற்றோர் மீதும் பிள்ளைகள் மீதும் அதிக எதிர்ப்பார்ப்பை கொண்டு அன்பு செலுத்தாதீர்கள்.!
பிறர் பேசுவதை காதுகொடுத்து கேளுங்கள்.!  எப்பொழுதும் சிடுசிடுப்பாகவோ அல்லது எப்பொழுதும் நகைச்சுவை உணர்வோடு நைய்யாண்டி செய்பவராகவோ இருக்காதீர்கள்.!
வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளுங்கள்.!   பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு செய்யும் சிறிய உதவிகளுக்கும்  உங்கள்  வாழ்க்கை துணையின்  அனுமதி  இருந்தால்தான்  செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.!
எதிர்பாலின நட்பை அளவாக  வெளிப்படையாக  வைத்துக் கொள்ளுங்கள்.!
உங்கள் பணி, தேவைகளுக்கு தகுந்த சரியான எளிய உடைகளையே  எப்பொழுதும் அணிந்து கொள்ளுங்கள்.!
ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை அனைத்து விசயங்களிலும் பிறருக்கு ஆலோசனை வழங்கும் அளவிற்கு  குறிப்பிடும் படியான  ஞானத்தோடு விளங்குங்கள்.! இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும், அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

தலைவலி - காய்ச்சல்

இயற்கை வழியில் தலைவலியை குணமாக்குங்கள்

வலது மூக்கில் மூச்சை இழுத்து இடது மூக்கில் தொடர்ந்து வெளியேற்றி வர  <10 முதல் இருபது சுற்றுகள்> தலைவலி குணமாகும்.!
இதுபோல் இடது மூக்கில் மூச்சை இழுத்து வலது மூக்கில் விட காய்ச்சல் குணமாகும்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

உடல் எடை அதிகரிக்க..

இயற்கை வழியில்  உடல் எடையை அதிகமாக்குங்கள்

இரவில் பாதி வெள்ளரிக்காய், 5 பேரிச்சம் பழம் இவற்றை சிறிதாக வெட்டி   குலுக்கி ஒரு தூக்கு பாத்திரத்தில்  மூடி வைத்துவிட்டு காலையில்   பார்த்தால் இரண்டும் சேர்ந்து கொழகொழப்பாக இருக்கும். இவற்றை வெறும் வயிற்றில்  சாப்பிட்டு விட்டு  பிறகு ஒரு மணிநேரம் கழித்து வழக்கமான உணவை சாப்பிட ஒரு மாதத்தில் 5 கிலோ வரை எடை அதிகமாகும். இதுபோல் உணவில் பூசணிக்காய், முளைகட்டிய கொண்டைக்கடலை, கானம், தேங்காய், உருளைகிழங்கு  போன்றவற்றையும் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

பூத சுத்தி

பூதங்களை வசியப்படுத்துங்கள்

இயற்கை வாழ்வியல் முகாம் வெகு சிறப்பாக நிறைவுபெற்றது.! நமது ஒவ்வெரு முகாமிலும்
என்னிடம்  பயில வரும் ஒவ்வெருவரிடமும் நான் புதிதாக சில விசயங்களை கற்றுக் கொள்வது என்னுடைய வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் முகாமில் கலந்துகொண்ட ஏழுபேரிடமும்  பல நுட்பமான விசயங்களை கற்றுகொண்டேன். அதுவும் நமது முகநூல் நட்பாளர் பலராமன் அய்யாவிடம் நான்  சில விசயங்களை  கற்றுகொண்டேன்.
சார், பூதசுத்தி எப்படி செய்வது? என்று அவர் ஒரு கேள்வியை கேட்டார்; நான் உடனே  அப்படி ஒரு தலைப்பில் நாம் ஒரு பயிற்சியும் கற்கவில்லை, ஒரு வேளை உடலில் உள்ள பஞ்சபூதங்களை சுத்திகரிப்பதை தான் அப்படி கூறுகிறார்கள் என்று நினைக்கிறேன். என்று கூறி முடித்துவிட்டேன்.! அதாவது கபாலபதி காற்றால் சுத்திகரித்தல், வாமணதௌதி நீரால் சுத்திகரித்தல், திராட்டகா நெருப்பால் சுத்திகரித்தல், சந்திர தியானம் ஆகாயத்தால் சுத்திகரித்தல், சாந்தியாசனம் பூமியால் சுத்திகரித்தல்  என்பதைப் போலவே ஏதேனும் ஒரு சில பயிற்சிகளை சேர்த்து பூதசுத்தி என்று சில அமைப்புகளில் வழங்குவார்கள் என்று  நினைத்தேன்.!
ஏனெனில் யோகம் பெருங்கடல் இதில் ஒவ்வெரு யோகா ஆசிரியரும் அமைப்பினரும் தங்கள் அறிந்தவற்றோடு பல புதிய யுக்திகளை புகுத்தி இன்னும் அதை மகா சமுத்திரமாக மாற்றி வைத்துள்ளனர்.! அடிப்படை விசயம் ஒன்றாய் இருக்கும் சொல்லும் வழிமுறைகளில்  சில மாற்றம் பெயர் குளறுபடி போன்றவை தவிர்க்க முடியாததாகி விட்டது.!  பிறகு இதுபோன்ற ஒரு பயிற்சியை நாம் இதுவரை கற்ற அமைப்புகளில் எங்காவது கற்றுள்ளோமா …? என்று சிந்தித்தேன்  அப்பொழுதுதான் பூதவசியம் என்று யோகரத்னா டாக்டர். அசோக்குமார் அவர்கள் வழங்கிய பயிற்சி நினைவிற்கு வந்தது. அதாவது காலை எழுந்ததும் மூன்று முறை மூச்சை இழுத்து விட்டு பூமியில்  மூன்றடி தூரம் வெறும் காலோடு நடந்து பின் ஆகாயத்தை மூன்று முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு , மூன்று மடக்கு நீரை நன்றாக கொப்பளித்து உமிழ்நீரோடு சேர்த்து குடித்துவிட்டு வீட்டில் உள்ள குத்துவிளக்கு அல்லது அகல்விளக்கை ஏற்றிவைத்து மூன்று நிமிடம் அந்த ஒளியையே தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் 48 நாளில் நமக்கு பஞ்சபூதங்களும் வசியமாகிவிடும்.! இதன் மூலம் நமது உடலின் அதிர்வுநிலை மேம்படுவதோடு உடல், மன, பணப்பிரச்சனை, குடும்ப உறவில் வேறுபாடு போன்றவை நீங்குவதோடு நாம் நினைக்கும் அத்தனை விசயங்களையும் இதன் மூலம் சீரமைத்து விடலாம் என்றது நினைவிற்கு வந்தது.! இந்தப் பயிற்சியை காலை எழுந்து குளித்துவிட்டு அல்லது குளிக்காமல் கூட செய்யலாம்.! இதன் உட் பொருள் என்னவெனில் நமக்குள்ளும் இந்த பிரபஞ்சம் முழுவதும் இயங்கும் சக்தியான ஐம்பெரும் ஆற்றல்களை நாம் முறையாக விழிப்புணர்வுடன் பயன்படுத்தினால் நமக்கு தேவை முக்தியோ சித்தியோ எது வேண்டுமோ பெறலாம் என்பதுதான்.!
இந்திய வழிபாட்டு முறையில் இது இயல்பாக கலந்துள்ளது.! இது போலவே பலராமன் அய்யா  அவர்கள் கழுத்து எலும்பு பலவீனத்தை சீர்செய்ய அவரே தனது கழுத்துவலிக்கு செய்து வெற்றியடைந்த  ஒரு முறையையும், கண்பயிற்சியில் நாம் அறியாத ஒரு நுட்பத்தையும் பகிர்ந்து சென்றார்கள்! இதை நாம் இன்னும் பலருக்கு கற்பிப்போம்.!
உங்களுக்கும் பிறகு பகிர்கிறோம்.!
அறிந்ததை பகிர்ந்துகொள்ளவும் அறியாததை அறிந்து கொள்ளவுமே இதுபோன்ற இயற்கை வாழ்வியல்
முகாம்கள் அனைவருக்கும் தேவையான ஒன்றாய் இருக்கிறது!
அதோடு மண்குளியல், வாழை குளியல், பழ உணவுகள், யோகா நுட்பம் போன்றவை உடல் மன ஆரோக்கியத்தை புதிய பரிமாணத்தில்
இயங்க வைக்கிறது.எந்த கற்பனையும் இல்லாமல் உடலை உன்னதமாக உணர செய்கிறது.!
இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றியும் பிராத்தனைகளும் …¡¡¡
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

இளமையில் முதுமைத் தோற்றம்

இயற்கை வழியில் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துங்கள்

சிலர் இளமையிலேயே வயதான வர்களைப் போல காட்சியளிப்பார்கள். இதற்கு கவலை, தூக்கமின்மை, அடிக்கடி மேக்கப் போடுவது போன்றவை காரணமாக இருக்கும்.விரலி மஞ்சளை வாங்கி அதன் தோலை மட்டும் சீவி பொடித்து தேனில் ஊறவைத்து அரைத்தேக்கரண்டி கலவையை தினமும் அரைடம்ளர் பசும்பாலில் இரவில் படுப்பதற்கு அரைமணி  முன் குடித்து வந்தால் இளமையான தோற்றமும் ஊற்சகமும் அதிகமாவதோடு தோல் நோய் எதுவும் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

தொண்டை வீக்கம்

இயற்கை வழியில் தொண்டை வீக்கத்தை குணப்படுத்துங்கள்

“குழந்தைகளின் தொண்டை சதை வளர்ச்சி சரியாக அனுபவ வைத்தியம்”
சில குழந்தைகளுக்கு தொண்டையில் சதை அதிகமாக வளர்ந்து தொண்டையையே மூடிவிடும் மூச்சு விட கூட சிரமப்படுவர் தயவுசெய்து அறுவை சிகிச்சை செய்யாதீர்கள் ,
இதற்கு அமுக்கராங் கிழங்கு, சுக்கு, இரண்டும் 50 கிராம் அளவு எடுத்து பொடித்து சிறிதளவு பால் விட்டு அரைத்து 250மி.லி பாலில் போட்டு கொதிக்க வைத்து குழம்பு பருவத்தில் எடுத்து காதின் அடிபாகத்தில் தொண்டையின் இருபாகங்களிலும் மேல் பூச்சாக தப்பளம் இளஞ்சூடுடன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை போட்டு வர சதை வற்றும்.

நன்றி!
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்

தனுராசனம்