Sunday, February 26, 2017

திருடர்கள் ஜாக்கிரதை

நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.

அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.

நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..

இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.

அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.

எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.

வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.

என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.

சாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.

நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.

அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.

செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட  நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.

பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.

இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.

மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.

வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.

திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.

ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.

கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.

ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.


முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..

பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.

அதைத்தான்  அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.

என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.

நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.

கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.

அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.


ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது.

அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.

நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.

அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.

திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன்.


மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.

அவர்கள் அதிக அளவில் ஒரு துளி  நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.

டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.

அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.

இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.

இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர்.

மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.


கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.

இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று
டிக்கெட் செக்கர் சொன்னார்.

அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.

ரயில் தன் பயணத்தை துவக்கியது.

ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..

எங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.

ஒரு லிட்டர் பீர் தயாரிக்க
சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.

ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.

ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.

கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –

இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.


சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால்  நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.

அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.

இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.

நமக்கு இந்த நிலை. வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம் என்று எவனாது சொன்னான்?இலவசம் வேன்டாம் நமது  பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம் கல்வி தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்,
தயவு செய்து தண்ணீரை வீணாக்காமல் உபயோகிப்போம், நமது சந்ததிகளின் நல்வாழ்வுக்கு
வழிவகுப்போம்..!!

*இணையப்பகிர்வு*

Friday, February 24, 2017

எலுமிச்சை

🎾  இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
 இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

 🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
      இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

*இணையப்பகிர்வு*

AmYogo article in Magazine


பூசணிச்சாறு வைத்தியம்*

காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி வெண்பூசணிச்சாறுடன் ஒருத்தேக்கரண்டி தேன்கலந்து அருந்திவந்தால் மூளைச்சோர்வு, தூக்கமின்மை, நாவறட்சி நீங்கும்.!
30 மில்லி வெண்பூசணிச்சாற்றில் 90 மிலி இளநீர் சேர்த்து காலையில் குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி,குடல்புண்,உடல்சூடு குணமாகி தேகப்பொலிவு ஏற்படும்.!
அதிகமாக மசாலா செயற்கை  உணவு மற்றும் உணவக உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை மிகுந்து பல்வேறு வியாதிகள் வர ஏதுவாகும் அதை தவிர்க்க நிணைப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் 200 மில்லி வெண்பூசணிச்சாற்றை அருந்திவந்தால் காரத்தன்மை அதிகமாகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.!

🌴 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in

🐾100% இயற்கை மூலிகை
 தயாரிப்புகளுக்கு💥
*AUM HERBALS*
Mobile & Whats app
*9629368389*

Tuesday, February 21, 2017

துளசி

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி :
★****★****★****★****★

நீங்கள் மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்கள் !!!

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும்
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க
72 கோடி அரச மரங்கள் (அல்லது)

720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது)

7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

*இணையப்பகிர்வு*

Sunday, February 19, 2017

*எளிய வைத்தியம்*

முருங்கை கீரை இடித்து சாறெடுத்து வேளைக்கு 30 மில்லி சாறுடன்
3 கிராம் சீரகத்தூள் சேர்த்து கலந்து காலை மாலை உணவிற்கு முன் குடித்துவர *இரத்தஅழுத்தம்,நரம்புத்தளர்ச்சி,ஒவ்வாமை,வாய்வுத்தொல்லை,ஆண்மைக்குறைவு,உடல்சோர்வு,மனஅழுத்தம்,உடல்வீக்கம்,மலச்சிக்கல் போன்ற வியாதிகள் 24 நாட்களில் குணமாகும்*

குறிப்பு: ஒரு வயது முதல் 5 வயதிற்கு  கீழுள்ள குழந்தைகளுக்கு நான்கில் ஒரு பங்கு மருந்தை மட்டும் கொடுக்கவும்.
உப்பு,புளி,காரம், குறைத்து, இயற்கையான சமைக்காத உணவை அதிகமாக சேர்த்துக்கொள்ள விரைந்த பயன் கிடைக்கும்.!

🍁 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌿
amyogatrust.blogspot.in

*இயற்கை மூலிகை மருந்துகளுக்கு*
AUM HERBAL
Mobile & Whats app
*9629268389*

Friday, February 17, 2017

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் …

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக  …

உயிர் நிறைந்த காற்றை பெறுக தாய்மடி அமுதைப்  பெறுக
பலம் தரும் நீரைப் பெறுக
உடல் வளர்க்கும் உணவைப் பெறுக நிலையான கல்வி பெறுக
வளமான வாழ்வை பெறுக
நலமான நட்பை பெறுக
உள்ளத்தில் உண்மை பெறுக
தொடர்கின்ற சுற்றம் பெறுக
உடன் வரும் முற்றம் பெறுக
அழகான இல்லம் பெறுக
இதமான உறக்கம் பெறுக
மனம் நிறைந்த பணியைப் பெறுக
புவி உயர்த்தும் பதவிகள் பெறுக
அன்பான துணையைப் பெறுக
பண்பான பிள்ளைகள் பெறுக
கொடுக்கின்ற இதயம் பெறுக
என்றும் உழைக்கின்ற உடலைப் பெறுக

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக …

வலம் வர தேரைப் பெறுக
நலம் உரைக்கும் நாவைப் பெறுக
சிந்தையது செம்மை பெறுக
செயலெல்லாம் வெற்றி பெறுக மகிழ்வான மனதைப் பெறுக
ஒளியாகும் தேகம் பெறுக
 அறம் உரைக்கும் குருவைப் பெறுக
உயர் ஞான யோகம் பெறுக
தவம் வழுவா நிலையைப் பெறுக
தரணியாளும் கலையைப் பெறுக
இறைமீது பக்தி பெறுக …
அது போதும் முக்தி பெறுக …!!!

----ஏகப்பிரியன்---

Thursday, February 16, 2017

தென்னம்பூ வைத்தியம்

வாய்ப்புண், குடல் புண் குணமாக 20 கிராம் இளம் தென்னபூவை 10 கிராம் சீரகத்தில் சேர்த்து அம்மியில் அரைத்து 100 மில்லி மோரில் தினமும் உணவிற்கு முன் மூன்று வேளை கொடுத்துவர 6 நாளில் குணம் கிடைக்கும்.!
தென்னையின் இளம்பூ 20 கிராம் எடுத்து பசுந்தயிர் கலந்து அரைத்து சிறிது மோரில் கலந்து நாளைக்கு இரண்டுவேளை உணவிற்கு பின் அருந்திவர பெரும்பாடு, வயிற்றழைச்சல்,இரத்தம், சளி போவது கட்டுப்படும்.!

அதிக உடல் சூடு கொண்டவர்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 20 கிராம் இளம் தென்னம்பூவோடு அதே அளவு சோற்றுக்கற்றாளை சேர்த்து அரைத்த விழுதை  அரைடம்ளர் மோரில் கலந்து குடித்துவர  24 நாளில் உடல் சூடு சமனாகி உடல் பருமன் கூடும்.!

🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌴
amyogatrust.blogspot.in

100% இயற்கை மூலிகை
🍁🍁🍁 மருந்துகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
*9629368389

Wednesday, February 15, 2017

மருத்துவக் குறிப்புகள் 15/02/17

[2/14, 21:34] Am Yoga: *கருஞ் சீரகம் பயன்கள்*

ஆயுர்வேதம், யுனானி மருந்துவங்களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள்.

தாவரவியல்:

1. தாவிரவியல் பெயர் - Nigella Sativa Linn.
2. சம்ஸ்கிருத பெயர்கள் - உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
3. ஆங்கிலம் - - Black Cumin, Nutmeg flower, Small Fennel
4. இந்தி - காலாஜீரா, கலோன்ஜி

தாவர விவரங்கள்:

அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை.

சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாக
வும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.

பயன்படும் பாகம்: விதைகள்

பயிராகும் விவரங்கள்:

இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும்.

விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.

செயல்பாடு: -

வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், கிருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.

பயன்கள்:

• கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
• இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
• லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
• இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
• ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
• யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
• குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
• இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
• உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது.
• பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.

குறிப்பு :

கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில் கருஞ்சீரகம் வாங்க வேண்டும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்.!
[2/15, 08:35] Am Yoga: *இயற்கையின் அதிசயம்*

தலைபாரம்,இழுப்பு,அடுக்குத்தும்மல், சளி,படப்படப்பு,பித்தம், குழப்பமான மனநிலை,  உணவு நஞ்சு,உடல் பருமன், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத்தொல்லை,மலச்சிக்கல், இரத்த ஓட்ட மந்தம், பித்தப்பை கல்,அசுத்த இரத்தம் இருப்பவர்கள் வாரம் இருமுறை காலை எழுந்ததும் 10 டம்ளர் நீரை சூடாக்கி அதில் 6 டம்ளர் நீரில் மூன்றுத்தேக்கரண்டி திரிபலா சூரணம் அல்லது பஞ்சமூலி சூரணம் போட்டு கலக்கி பொறுக்கும் சூட்டில்அப்படியே குடித்துவிட்டு ஒரு கால் மணிநேரம் ஏதாவது ஒரு பகுதியை சுற்றிசுற்றி சிறிது நேரம்  நடந்து வந்தால் தானே வாந்தி வரும். அல்லது ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் உள்நாக்கு பகுதியை அழுத்த வாந்தி வரும்.  முடிந்தவரை குடித்தநீரை வாந்தி எடுத்தபின் மீதி உள்ள நீரில் வாய்க்கொப்பளித்து முகம் கழுவி கொள்ளலாம். ஒருவேளை வாந்தி வராவிட்டால் குடித்த சூரணநீர் பேதியாக போய்விடும் கவலை வேண்டாம்.! மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு அதிசயத்தக்க நிவரணத்தை உடனடியாக வழங்கும்.!
யோகாவில் இந்தப்பயிற்சிக்கு சூரணதௌதி என்று பெயர். சித்தமருத்துவத்தில் வாந்தியம் என்று கூறுவார்கள். சில தந்திர வைத்தியர்கள் இதுபோன்றே வேறுசில மூலிகைகளை கொடுத்து வாந்திவரவழைத்து மருந்து எடுத்தல் என்று கூறுவார்கள்.! உணவுக்குற்றத்தால் ஏற்படும் வியாதிகள், கழிவுத்தேக்கத்தால் ஏற்படும் நோய்கள் மன அழுத்தத்தால் ஏற்படும் கோளாறுகளுக்கு இந்த வாந்தி வைத்தியம் அதிசயத்தக்க நிவாரணத்தை உடனடியாக வழங்கும் இதற்கு காரணம் வாந்தி எடுக்கும் போது உடலில் உள்ள அத்தனை நரம்பு மண்டலமும் உள்ளுறுப்புகளும் தூண்டப்படுவதோடு அட்ரீனல்,தைராய்டு,பீனியல் சுரப்பிகளும் சீராக பணிபுரிந்து ஹைப்போ தலமஸின் இயக்கமும் மேம்படுவதாலேயே இந்த உடனடி பலன்கள் கிடைப்பதாக இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நமது யோக,சித்த மருத்துவ மெய்ஞானிகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.!

*குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்,சமீபத்தில் அறுவை சிகிட்சை செய்து கொண்டவர்கள் இந்தப்பயிற்சியை செய்யக்கூடாது*
பயிற்சிக்கு பின் கஞ்சி,பழங்கள், பொங்கல் போன்ற எளிய உணவுகளை உண்பதே சிறந்தது.!

🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in

🍃இயற்கை மூலிகை
மருந்துகளுக்கு
*AUM HERBAL*
Mobile & Whats App
*9629368389*
[2/15, 13:06] Am Yoga: கண்மை:-

தூய்மையான வெள்ளைத் துணியில் மஞ்சள் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, வெயிலில் காய வைக்கவும் பின்பு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் கலந்து வைத்துகொண்டு கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும். கண் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்.!

இணையப்பகிர்வு
[2/15, 13:14] Am Yoga: மிளகின் மருத்துவ குணங்கள்!

*_ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!_*
1. மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.



சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
2. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.!

இணையப்பகிர்வு

Tuesday, February 14, 2017

*யோகத்தின் அடிப்படை*

1.இயமம்,
2.நியமம்,
3.ஆஸனம்,
4.ப்ராணாயாமம்,
5.பிரத்யாஹாரம்,
6.தாரணை,
7.தியானம்,
8.ஸமாதி என்பவையே

இவைதான் “அஷ்டாங்க யோகம்” என்ற எட்டு நிலைகளைக் கொண்டதாகும். இந்த நிலைகளை நமக்கெல்லாம் வகுத்துக் கொடுத்தவர் ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியே. அவர்தான் யோகத்திற்கு ஆதிகுரு-மூலகுரு. (இன்று உலகில் பல மக்கள், தாங்களே யோக சாஸ்திரத்தைக் கண்டறிந்தவர்கள் போல தங்களின் பெயரால் யோகப்பயிற்சி மையங்களை நடத்திக் கொண்டு ‘ஆழ்நிலை தியானத்தை’ போதிக்கின்றனர்) ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியை வணங்கிவிட்டு அஷ்டாங்கயோகம் - ஒரு சிறு குறிப்பு எழுதி, விளக்கம் என்ன என்பதையும் நோக்குவோம்.

1.இயமம்:- மனத்தையும், இந்திரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீய செயல்களில் ஈடுபடாமல் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாமல், நன்மைகளைச் செய்ய விரும்புதல். அவை பத்து வகை:- 1.அஹிம்சை, 2.சத்யம், 3.களவாமை, 4.பிரம்மச்சர்யம், 5.தயை(இரக்கம்), 6.நேர்மை, 7.பொறுமை, 8.தைரியம், 9.அளவாக சாப்பிடுதல், 10.சுத்தம்(தேகம்-மனம் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தல்)

2.நியமம்: இயமத்தினால் ஏற்படும் நற்செயல்களை விரிவுபடுத்தி கட்டுப்பட்டு இருத்தல். இதுவும் 10 வகை. 1.தவம், 2.சந்தோஷம் (கிடைப்பதில் திருப்தியடைதல்), 3.ஆஸ்திக்யம் (இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கை), 4.தானம் (இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுதல்), 5.ஈஸ்வரபூஜை (எல்லாமே கடவுளுடையது என்று அர்ப்பணித்தல்), 6.ஸித்தாந்த சிரவணம் (குருமூலமாக தன் மத சம்பதமான விஷயங்களைக் கேட்டறிதல்), 7.லஜ்ஜை (தீய செயல்களை நினைப்பதே வெட்கத்திற்குரியது) 8.நற்புத்தி (மோட்ச சாதனங்களைத் தேடுதல்) 9.ஜபம் (இஷ்டதேவதையை மந்திரதியானம் செய்தல்), 10.விரதம் (பிரம்மசர்யம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்ற ஆசிரம விரதங்களை முறையாக அனுஷ்டித்தல்)

3.ஆஸனம்: கடவுளை தியானிக்கும்போது உடல் வளையாமலும், அசையாமலும் இருக்க கட்டுப்பாட்டுடன் ஓர் இடத்தில் வீற்றிருத்தலே ஆஸனம். இதனை யோகசாஸ்திரங்களில் 108வகையாகக் கூறியுள்ளனர். அவற்றில் 11 முக்கியமானவை: 1.சுகாஸனம், 2.வீராஸனம், 3.பத்மாஸனம், 4.வீரபத்மாஸனம், 5.சிம்மாஸனம், 6.குக்குடாஸனம், 7.மயூராஸனம், 8.ஸ்வஸ்திகாஸனம், 9.கோமுகாஸனம், 10.பத்ராஸனம், 11.முக்தாஸனம்.

(குக்குடம்=கோழி, மயூரம்=மயில், ஸ்வஸ்திக=மங்களமான, கோ=பசு, பத்ர=நன்மையான, முக்தா=விடுபட்ட என்று பொருள்களை அறிக)

4.பிராணாயாமம்: சாஸ்திரமுறைப்படி, சுவாசக் காற்றின் இயற்கையான போக்கு வரத்துகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் பிராணாயாமம். “பிராணவாயுவை அடக்குதல்” என்று பொருள். அந்தப் பயிற்சியை மூன்று பிரிவுகளாகக் கூறியுள்ளனர். 1.ரேசகம்=மூச்சுக்காற்றை வெளியே விடுதல். 2.பூரகம்=முப்பத்திரண்டு மாத்திரை காலம் மூக்குத் துவாரத்தின் வழியாக சுவாசக் காற்றை உள்ளே இழுத்தல். இது ‘நிரப்புதல்’ என்று பொருள் தரும். (மாத்திரை என்றால் ஒரு கணப்பொழுது=நொடிப்பொழுது) 3.கும்பகம்=சுவாசத்தை வெளிவிடாமலும், கிரகித்துக் கொள்ளாமலும் உள்ளேயே நிலைப்பட வைத்தல் கும்பகம். இந்த மூன்றும் சேர்ந்ததே ஒரு பிராணாயாமம்.

இந்தப் பயிற்சியானது வைராக்யம், ஆனந்தம், கவித்வம், வாக்குப்பலிதம், தொலைநோக்குப் பார்வை (எதிர்காலத்திட்டம்) அதிவேக சிந்தனைத் திறன், அஷ்டமா சித்திகள், நவநிதிகள், வேறு உடலுக்குள் புகுந்துவிடும் திறமை (கூடுவிட்டுக் கூடுபாய்தல் பூமியில் சரீர நிழல் விழாமை, ஜனன, மரணமின்மை போன்ற பல உயர்ந்த பலன்களைத் தரவல்லது. பிராணாயாமத்தை ஜபமின்றிச் செய்வது, ஜபத்துடன் செய்வது என்று இரு வகைப்படும். ஜபத்துடன் கூடிய பிராணாயாமமே மேலே கூறிய பலன்களைத் தரக்கூடியது. இது யோக புருஷர்களால் தான் செய்ய முடியும்.

5.பிரத்தியாகாரம்: இந்திரியங்களை அதன் விஷயங்களிலிருந்து பிரித்து விடுவதே பிரத்தியாகாரம். இது பிராணாயாமத்தின் உயர்ந்தநிலை. சமாதியோகம் என்பதில் ஒரு பிரிவுதான்.

6.தாரணை: மனத்திலுள்ள எண்ணங்களை எல்லாம் விலக்கிவிட்டு, அதனை உடலின் சக்தி ரூபமாக விளங்குகின்ற சக்கரம் என்ற சில ஸ்தானங்களில் நிலைபெறச் செய்து இறைவனின் உருவத்தைத் தோன்றும்படி செய்வதே தாரணை.

அந்த ஸ்தானங்கள்: 1.மூலாதாரம்: இடுப்பிற்குக் கீழே முக்கோணவடிவில் உள்ள ஒருசக்கரம். இதுவே காமகூடம் எனவும் சொல்லப்படுகிறது. 2.அடுத்தது ஸ்வாதிஷ்டானம். 3.அதற்குமேல் தொப்புள் பகுதியில் மணிபூரகம் என்ற நாபிச்சக்கரம். 4.அதற்குமேல் இருதயப் பகுதியிலிருப்பது 12கோண வடிவில் ‘பூர்ணகிரி’ என்ற சக்கரம். 5.அதற்குமேல் கழுத்துப் பகுதியில் பதினாறு கோணமுள்ள ‘விசுத்தம்’ என்ற சக்கரம். இதற்கு ‘ஜலந்தரபீடம்’ என்று பெயர். 6.அதற்கும் மேல் இருபுருவங்களுக்கும் மத்தியில் இருகோணவடிவமாக ‘ஆக்ஞா’ சக்கரம் இருக்கிறது. அதற்குமேல் மஹாபீடமென்ற ஒட்டியாண சக்கரம் இருக்கிறது. இந்த சக்கரங்கள் எல்லாமே ஒரு மனிதனின் அன்றாடத் தேவைக்கான பணிகளான சுவாசித்தல், உண்ணும் உணவுப் பொருள்களை ஜீரணித்தல், தன்மயமாதல், கழிவுகளை வெளியேற்றுதல், நடமாடுவதற்குத் தேவையான சக்தியைத் தருதல், ஐந்து உறுப்புகளும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவையறிதல், தொடு உணர்ச்சி) தங்கள் பணிகளைத் திறம்பட செயலாற்ற உதவுகின்றன. உடலுக்குத் தேவையான முக்கியமான சுரப்பிகளை உற்பத்தி செய்வதும் இந்த ஸ்தானங்களே.

7.தியானம்: உலகத்தில் சப்தம், கொடூரம் ஆகியவற்றைக் கேட்கும் காது, காணும் கண் போன்ற இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, அந்த இந்திரியங்களை மனத்துடன் சேர்த்து, இருதயகமலத்தில் வீற்றிருக்கும் பரம்பொருளை இடைவிடாமல் சிந்திப்பதே தியானம். இந்த தியானப் பயிற்சியை ஒரே குருமூலமாக நன்கு அறிந்து கொண்டு பயிற்சி செய்வதே சிறந்த பலனைத்தரும். தியானப் பயிற்சி என்ற விஷயம் மிகவும் பரந்து விரிந்து காணும் விஷயம்.

8.சமாதி: வெகுகாலம் மனத்தில் இறைவனையே தியானம் செய்து கொண்டு, அதிலேயே லயித்துப் போய் இறைவனை மிக அருகில் கண்டு தன்னை மறந்து அமர்ந்த நிலையிலிருப்பதே ஸமாதிநிலை. இவர்களை மழை, வெயில், புயல், பனி, குளிர், காற்று, புயல்காற்று போன்றவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உலகவிஷயங்கள் எதுவுமே இவர்களின் கவனத்தை ஈர்க்காது. மோட்சசித்தியே இவர்களின் ஒரே எண்ணமாகும். இந்தச் சமாதி நிலையை அடைய உறக்கம், உணர்வு, பசி மூன்றும் அகல வேண்டும். யோகத்தின் இறுதியான சமாதிநிலை தான் ஒருவனுக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாத பேரின்ப நிலையைத் தருகிறது.

யோகாசனங்களின் பயன்கள்

1.நோயின்றி வாழ்தல். 2.என்றும் இளமையுடனும், சுறுசுறுப்புடனும் இருத்தல். 3.நல்ல ஞாபக சக்தி. 4.சுரப்பிகளின் (உடலில்)இயக்கம். 5.ரத்த ஓட்டம். 6.நல்ல சுவாசம். 7.நல்ல ஆரோக்கியம். 8.நல்ல சிந்தனையுடன் கூடிய செயலாற்றல் போன்ற பல நல்ல பயன்கள் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*

Monday, February 13, 2017

*தூக்கமின்மையை போக்கும் ஜாதிக்காய்*

மனிதனுக்கு முக்கியமான ஓய்வுகளில் தூக்கம் ஒரு இறைவனின் கொடை. தூக்கம் இன்மையால் நம்மில் பலர்படும் மனக்கஷ்டம் அதிகம். தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு சாப்பிட்டால் குணமாகும். பேதி ஏற்பட்டு ஓய்வெடுக்கும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்ய ஜாதிக்காயைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.!

*இணையப்பகிர்வு*

Saturday, February 11, 2017

தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள்

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :-
1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.

5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,

8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.

12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.

14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.

15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.

18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.

19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.

21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .

22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க தலைவலி குணமாகும்.

25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.

26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .

28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

Friday, February 10, 2017

தேனின் குணம்

இருமலுக்கு அதிமதுர பொடியை தேனில் கலந்து சாப்பிட்டேன். வாய் புண்ணாகி விட்டது என்கிறார் நண்பர் ஒருவர்,
ஆம், தேன் உஷண வீர்யம் கொண்டது, வாய்ப்புண்  இருக்கும் போது தேன் எடுப்பது தவறு, இருமலுக்கு அதிமதுரம் சிறிய அளவில் தேனில் கொடுத்தால் தப்பில்லை, அதிமதுரம் கடின செரிமான தன்மை கொண்டது எனவே நோயாளியின் ஜடாக்கினியின் அளவறிந்து கொடுக்கலாம், Deodinitis போன்ற பித்த நோய்களுக்கு தேன் எடுக்க கூடாது, பன்னீர், நன்னாரி கசாயம் அல்லது நெய்யே எடுக்க வேண்டும், தேன் கபம் சார்ந்த நோய்களில் மட்டுமே கொடுக்கவேண்டும், வாதத்திற்கோ பித்ததிற்க்கோ தேன் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, மது மேகத்தில் பயன்படுத்தலாம், தேனை சூடாக்கி பயன்படுத்த கூடாது, தேனும் நெய்யும் சம அளவில் கலந்து பயன்படுத்த கூடாது, தேன் வறட்சி குணம் கொண்ட து, கபத்திற்க்கு இது சிறந்த அனுபானம், மற்றபடி உடலுக்கு நல்ல பலம் தரும், நினைவாற்றலை பெருக்கும், உடல் சூட்டை சம நிலைப்படுத்தும், கண்களுக்கு இதமானது, சீரணத்தை உண்டாக்கும், இரைப்பை, கல்லீரல், கோளாறைப்போக்கும்
கட்டியிருக்கும் கபத்தை முறித்து வெளியேற்றும், நெஞ்செரிச்சல், தாகம், இருமல், விக்கல், இரத்த பித்தம், தொழு நோய், வாந்தி பேதி, பலவீனம் ஆகியவைகளை போக்கும்,
இரத்த சிகப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த சோகையை போக்கும், நரம்புகளுக்கு வலிமையை கொடுக்கும், கிழிந்துபோன தசைகளையும், உடைந்து போன எலும்புகளையும் இணைக்கும், இதயத்திறக்கு மிகவும் உகந்தது, இதய நோயாளிகள் தினமும் படுக்கப் போகும் போது ஒரு டம்ளர் தண்ணீரில் தேனும், எலுமிச்சை சாறு ம் கலந்து சாப்பிட நன்மையை உண்டாக்கும்,
இதே உடல் பருமனில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் தேனும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து அதிகாலையில் பருகி வர வேண்டும்,
ஒரு தேக்கரண்டி தேனை மூன்று பங்கு நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வர இரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்,

ஒரு டம்ளர் தண்ணீரில் தேனைக் கலந்து இரவு படுக்கப் போகும்போது பருகி வர தூக்கமின்மை நீங்கி நல்ல தூக்கம் வரும், நல்ல குரல் வளம் உண்டாகும்,

நாவறட்சியையும், காமாலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீர்தாரையில் உள்ள புண்கள், தாகத்தையும் வெந்நீரில்  தேன் கலந்து தினமும் இரு வேளை சாப்பிட குணமாகும்,

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர பித்தம் நீங்கி பெரு வயிறு குறையும், குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதம் தேனை உட்கொண்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும், மலத்தை கட்டும், மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, அதிகமாக சாப்பிட்டால் ருசியின்மை, நெஞ்சுசளியை தோற்றுவிக்கும் பிரசவித்த பெண்களின் அடி வயிற்றில் தேனை தடவி வர பிரசவித்த வலி நீங்கும், உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, பழைய நாள்பட்ட தேனை பயன்படுத்தினால் மருந்தின் தன்மை கொட்டுவிடும்.!

*இணையப்பகிர்வு*

Thursday, February 9, 2017

மருத்துவக் குறிப்புகள் 10/02/17

[2/9, 15:41] Am Yoga: 🌿 *வாதம் போக்கும் எளிய மருத்துவம்*🌴

*கீல்வாதம் நீங்க*

*2 கைப்பிடியளவு பேய்மிரட்டி இலையை எடுத்து மண்சட்டியில் போட்டு வதக்கி ஒரு மெல்லிய  வெள்ளைத்துணியில் போட்டு  கட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து சில நாட்கள் ஒத்தடம் கொடுத்துவர கீல்வாதம் நீங்கும்*

*பாத எரிச்சல்*

*கையளவு மருதோன்றி இலையை எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைவிட்டு அரைத்து பாத எரிச்சல் உள்ள பகுதியில்  வைத்து சுற்றி துணியால் கட்டி 9 மணியளவில்  படுத்துக் கொண்டு பனிரெண்டு மணிவாக்கில்  எழுந்து காலை கழுவி படுத்துவர மூன்று நாட்களில் பாத எரிச்சல் முற்றிலும் அகலும்*

*ஊமத்தம் இலைச்சாறு அரைலிட்டர் நல்லெண்ணைய் அரைக்கிலோ இரண்டையும் அடுப்பேற்றி காய்ச்சி நீர் வற்றிய வேளையில் 5 கிராம் கட்டிகற்பூரம் தட்டிப்போட்டு இறக்கி வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக்கொண்டு வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி அளவு எண்ணையை காலை,மாலை உணவிற்கு முன் உண்டுவர எவ்வளவு கடினமான கீல்வாதமும் மூன்று நாளில் மறையும்*

🌿இயற்கை மூலிகை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

☘100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு🌾
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*
[2/9, 15:50] Am Yoga: *நமது மஹாயோகா நூலிற்கு ஒரு யோகாசன மாணவி வழங்கிய மதிப்புரை*

புத்தகங்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்ணு அறிஞர்கள் சொல்லிருக்காங்க. ஆனா ஐயாவோட புத்தகம் எனக்கு குருவாகவே இருக்குங்கறது எனக்கு பெருமையா இருக்கு. அவ்வளவு அற்புதமா சொல்லிருக்காங்க. யோகானா என்ன எப்ப எங்க எப்படி செய்யணும் எவ்வளவு செய்யணும் எல்லாம் சொல்லிருக்காங்க.நிறைய சந்தேகத்திற்கு பதிலும் இருக்கு.யோகால ஆர்வம் உள்ள எல்லோரும் கண்டிப்பாக படிக்க கூடிய ஒரு புத்தகம்.பயிற்சியாளர் இல்லாமலே யோகா செய்யலாம் அந்த அளவுக்கு தெளிவா சொல்லிருக்காங்க. எல்லோரும் கண்டிப்பா படிங்க. இந்த குரூப்ல இருக்கறத பெருமையா நினைக்கிறேன்.!

*விஜயா நாகர்கோவில்*
[2/10, 05:12] Am Yoga: *கட்டி கரைய வைத்தியம்*

உடல் மேல் உண்டாகும் கட்டியை  கரைக்கும்...
         " திருநீற்றுப் பச்சிலை "
இதன் இலையை அரைத்து கட்டியில்
மேல்பூச்சாக செய்துவர கட்டி கரையும்.!
மேலும் இந்த மூலிகை சாறுடன் சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து
உள்ளுக்கு அருந்திவர மார்பு படபடப்பு
குறையும், இருமல்,கேஸ்ட்ரபுள்க்கு
நிவாரணம் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*
[2/10, 12:58] Am Yoga: *யோகனே சித்தஸ்ய …*

நமது மையத்தில் யோகம் பயின்று பிறவிப்பிணிகளை வென்ற எனது   மாணவர்களை பற்றிய உண்மை பதிவு

இளமையில் வறுமை கொடிது என்று அவ்வை கூறுவார். அதனிலும் கொடுமை இளமையில் பிணி என்பதை நான் உணர்ந்த தருணம் அது. ஆஸ்துமா,இழுப்பு,அலர்ஜிக்கான இலவச வகுப்பு ஒன்று நமது செட்டிகுளம் யோகா மையத்தில் 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதுதான் நான் முதன்முதலாக அந்த மாணவரை சந்தித்தேன். ஒரு 24 வயது மதிக்கலாம். கறுப்பு என்றாலும் களையானவர் என்பார்களே அப்படி ஒரு ஒளிபொருந்திய முகம். நுரையீரலில் உள்ள ஒருபக்க அறை முழுவதும் வீங்கி உள்ளதால் நடக்கும் போது மட்டுமல்ல சும்மா படுத்திருக்கும் போது கூட அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். நவீன மருத்துவ முறையில் அத்தனை பரிசோதனைகளையும் செய்து பார்த்ததோடு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் பார்த்தும் எந்தவித ஆரோக்கிய முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவர். ஒருநாள் ஹீலர் பாஸ்கரின் பேச்சை கேட்டு ஆங்கில மருந்துகளை முக்கால்வாசி நிறுத்திவிட்டு சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து  கொஞ்சம் முன்னேற்றம் கண்டவர் முழுவதும் இயற்கை வாழ்வியலை கடைப்பிடிக்கும் ஆவலுடன் நமது மையத்திற்கு என்னை காணவந்திருந்தார். பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று நெஞ்சை அழுத்திக் கொடுப்பார் பிறகு சில ஏப்பங்களை விட்டுவிட்டு பேச ஆரம்பித்தால்  மீண்டும் மூச்சு அடைக்கிறது என்பது போல சற்றுநேரம் குனிந்து அமர்ந்துகொள்வார்.
ஒருவேளை உணவு சாப்பிட்டால் மூன்றுவேளையும் நெஞ்சு எரிகிறது என்றும் , இரவில் உறங்கும் போது கூட நெஞ்சில் யாரோ கட்டையை வைத்து நெறுக்குவதுபோல் இருக்கு  என்றும் தனது பிணித்துயரை பட்டியலிடுவார்.
இலவச ஆஸ்துமா வகுப்பில் கலந்துகொண்டவர், பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்காக நாம் புகைப்படம் எடுக்கும் போது வேண்டாம் அய்யா,என்னை படம்பிடிக்க வேண்டாம். நான் நோயாளியாக அடையாளம் காணப்படுவதை விரும்பவில்லை.   என்றார்; அவர் பெயர் மோகன்  பாலிடெக்னிக் படித்துக்கொண்டு பொறியியல் துறையில் சுயவேலையின் மூலம் கைநிறைய பணம் சம்பாதிப்பவராய் இருந்தார்.  நமது பயிற்சி மையத்தில் தொடர்ந்து அவருக்கு சில மாதங்கள் பவன முத்தாசனம்,உஷ்ட்ராசனம்,சிரசாசனம்,பஸ்திரிகா பிராணாயாமம்  போன்ற பல யோக நுட்பங்களை கற்றுதேர்ந்ததோடு முற்றிலும் இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி இரசாயண உணவு, இரசாயண அழகுப்பொருட்கள், பற்பசை,பவுடர் என்று அனைத்தையும் துறந்து ஆரோக்கிய வாழ்வை தமதாக்கிக் கொண்டார். முன்பெல்லாம் ஒருவேளை உணவைகூட என்னால் இயல்பாக ஜீரணம் செய்ய முடியாது. ஆனால் இப்பொழுது பசித்தபோதெல்லாம் உண்கிறேன். மாத்திரை மருந்துகளை முழுவதும் நிறுத்திவிட்டு நீங்கள் கொடுத்த மூலிகை சூரணத்தை சாப்பிட்டு வருகிறேன். தினமும் வீட்டிலும் ஒருநேரம் உஷ்ட்ராசனம்,சிரசாசனம், ஹூ க்ரியா, ஓம்கார தியானம் போன்றவற்றை செய்கிறேன். என் வீட்டில் இருப்பவர்களே அசந்துதான் பார்க்கிறார்கள்.  சாதாரணமாக  இயல்பாக சுவாசிக்கவே முடியாதவன் எப்படி தலைகீழாக நின்று சுவாசிக்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கும் வியப்பாகதான் உள்ளது. 80% நான் குணமாகிவிட்டேன். மிகமிக  நன்றி அய்யா, ஹீலர் பாஸ்கரையும் யோகாவையும் நான் அறியாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் ஒரு நோயாளியாக நவீன  மருத்துவத்தோடு  போராடிக்கொண்டிருந்திருப்பேன் என்று கூறி எனது சார்பில் இன்னொரு யோகா இயற்கை வாழ்வியல் முகாம் நடத்த உதவுகிறேன் என்றெல்லாம்  கூறி என்னை ஒரு யோகா ஆசானாய் பெருமை கொள்ள வைத்து சென்றார்.!  பிறகு ஒருவருடம் கழித்து மீண்டும் ஒருநாள் கைப்பேசியில் அழைத்து ஒரு முக்கியமான விசயம் சார் ,உங்களிடம் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதை வைத்துதான் இனி எனது வாழ்க்கையே உள்ளது.  என்றெல்லாம் கூறினார்.  சொல்லுங்க, உடல் நிலை நன்றாகத்தானே உள்ளது? என்றேன்;
"ஆமாம் அய்யா, அதுவல்ல பிரச்சனை இன்னொரு முக்கியமான விசயம் நேரில் வருகிறேன்." என்று; அவர் என்னைப்பார்க்க வந்தார்.

என்ன விசயம் மோகன்?
"அய்யா,இப்ப என்னைப்பொருத்தவரை உடல்நிலை நன்றாக உள்ளது. எங்கள் வீட்டில் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்"
நல்ல விசயம் செய்து கொள்ள வேண்டியதுதானே?
"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.பிறகு, எதற்கும் இருக்கட்டும் என்று நான் முதலில் மருத்துவம் செய்த ஆங்கில மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்தேன்.அந்த ரிப்போர்டுகளை பார்த்த மருத்துவர், இப்பொழுதும் உன் உடல்நிலை பழையதுபோல் தான் உள்ளது. நீ திருமணமே  செய்யக்கூடாது, ஒருவேளை நீ  திருமணம் செய்தால் இல்லற வாழ்க்கையில் உன்னால் ஈடுபடவே முடியாது. அதோடு நுரையீரல் இயக்கம் முற்றிலும் சீரழிந்து உயிருக்கே ஆபத்தாகி விடும். என்கிறார்கள்"
என்றார்;
உங்களுக்கு என்ன தோன்றுகிறது மோகன்?
"நான் நன்றாக இருக்கிறேன்.  ஆனால்,எனக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் இல்லை.
முன்பிருந்ததை விட பலமடங்கு முழு ஆரோக்கியமாக உணர்கிறேன்.ஆனாலும் ,மருத்துவ அறிக்கையின் படி  நான் இன்னும் முழு நோயாளியாகத்தான் இருக்கிறேன் என்கிறார்கள். நீங்களே பாருங்களேன்" என்று; தனது ஸ்கேன் ரிப்போர்டை எனது கைகளில் கொடுத்தார்.
நான் அதை  என் கைகளில் வாங்கி மேசையில் விசிரியெறிந்தேன்.என்ன அய்யா, உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்றார். எனக்கு மனித உடல் இயங்கு சக்தியில் முழு நம்பிக்கை உண்டு. இதுபோன்ற மருத்துவ அறிக்கையில் முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில், மருத்துவ அறிக்கையின் படி மிக ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ள பலர் நடக்கவே முடியாமல் படுக்கையில் கிடப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.
அதனால் இது பொய், நீங்கள் உணரும் ஆரோக்கியம் மட்டுமே மெய் என்றதும். அவர் ஆர்வமாக
அப்ப நான் திருமணம் செய்து கொள்ளலாமா?
என்னால் இல்லறத்தில் ஈடுபட முடியுமா?
எனக்கும் ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்களா? என்று பல கேள்விகளை முச்சுவிடாமல் கேட்டார்;

"100%  உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக  அமையும் நீங்கள் ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெறுவீர்கள்.! நலம் பெருகட்டும் …  என்று என்னையும் அறியாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தேன்.!
பின்பு சில மாதத்திலேயே அவரின் இனிய திருமண நாள் வந்தது … அங்கு என்னையும் எனது மனைவியையும்  பார்த்ததும்  தனது துணைவியோடு ஓடி வந்து  பணிந்து  ஆசி வேண்டினார். வாழ்க வளமுடன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க, நலம் பெருகட்டும் …என்று வாழ்த்தி வந்தேன்.!
என்னுள் அமர்ந்து வாழ்த்திய இறைநிலையின் ஆசி பலித்தது … இன்று மோகன் பெண்ணும் ஆணுமாக இரண்டுபிள்ளைகளை பெற்று ஆரோக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார் …¡¡¡¡
*இயற்கையின் சக்தியில் இதுவும் ஒன்று*

----ஏகப்பிரியன் DYT

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
aumyogatrust.blogspot.in

🌿 *100% இயற்கை மூலிகை மருந்துகளுக்கு🌹
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*

மருத்துவக் குறிப்புகள் 07/02/2017

[2/7, 12:45] Am Yoga: *நெய்-கடவுள் தந்த அமிர்தம்*

1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.

2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.

3. ஆயுளை நீட்டிக்கும்.

4. ஞாபக சக்தி வளர்க்கும்.

5. ஜீரண சக்தி தரும்.

6. குரல் வளம் தரும்.

7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.

8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.

9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

11. கண் பார்வை தெளிவடையும்.

12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.

13. மூட்டு வலி குறைய உதவும்.

14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.

15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.!

*இணையப்பகிர்வு*
[2/8, 09:20] Am Yoga: *ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை தேவைகள்*

தினமும் பயன்படுத்த வேண்டிய முதல் 10 வகை உணவுப் பொருட்கள்

*1.கைக்குத்தல் அரிசி*
*2.கேழ்வரகு,கம்பு,சோளம்,உளுந்து*
*3.தேங்காய்*
*4.கருப்பட்டி*
*5.மஞ்சள்,மிளகு,சீரகம்,பூண்டு,கொத்தமல்லி*
*6.இந்துப்பு*
*7.வேர்க்கடலை,சுண்டல்,பட்டாணி,எள்*
*8.பீட்ரூட்,கேரட்,வெங்காயம்,முள்ளங்கி*
*9.பசலி,முருங்கை,அகத்திகீரை*
*10.வாழைத்தண்டு,பழம்,இலை*
மேற்கண்ட பத்துவகையான உணவுப்பொருட்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.!

*கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 10 வகையான ஆரோக்கிய எதிரிகள்*

*1.பாட்டில் குளிர்பானங்கள்*
*2.பாக்கெட் பால்*
*3.பிராய்லர் சிக்கன்,பிராய்லர் முட்டை,ஐஸ்மீன்*
*3.வெள்ளைச்சீனி,சீனியில் செய்த பொருட்கள்*
*4.மைதா, மைதாவில் செய்த*
*உணவுப்பொருட்கள்*
*5.சுத்திகரித்த குடிநீர்*
*6.சுத்திகரித்த எண்ணைய்*
*7.ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,காம்ப்ளான் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்கள்,செயற்கை ஊட்டச்சத்து மாத்திரைகள்*
*8.சோடாப்பு,அயோடின் உப்பு,பெருங்காயம்,எஸன்ஸ்,வண்ணப்பொடி,அஜிணாமோட்டோ*
*9.சாக்லேட்,பஞ்சுமிட்டாய்,ஐஸ்கிரீம் வகைகள்*
*10.பாக்கெட் நொறுக்குத்தீனிகள்.காகித தட்டு,காகித டம்ளர், காகித பிளாஸ்டிக் விரிப்பு குடுவைகளில் பறிமாறப்படும் உணவுகள்*

*முதல் பகுதியில் உள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொண்டு இரண்டாவது பகுதி உணவுகளை முற்றிலும் தவிர்த்து தினமும் 20 நிமிடம் யோகாசனம் 15 நிமிடம் மூச்சிப்பயிற்சி 10 நிமிடம் தியானம் போன்றவற்றையும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆயுள் நீளும்.*
*அதோடுதுளசி,வில்வம்,வேம்பு,கடுக்காய்,ஆடாதோடை,கீழாநெல்லி போன்ற மூலிகைகளையும் தேவைக்கு பயன்படுத்திவர எத்தகைய ஆரோக்கிய குறைபாடும் நீங்கி பூரண ஆயுளும் நிறைவான வாழ்க்கையும் அமையும்*
*நலம் பெருகட்டும் …*

*இயற்கை வாழ்வியல் தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு💐
AUM HERBALS
MOBILE & WHATS APP
*9629368389*
[2/9, 11:30] Am Yoga: மாதுளைப்பழத்தின் நன்மைகள்:-

 வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்)மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணோய் நீங்கிட

மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும்,மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது.

இரத்தம் சுத்தமாக

இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.

1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.

2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.

3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.

4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும்.  அனைவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.!

*இணையப்பகிர்வு*
[2/9, 12:17] Am Yoga: *பத்தியங்கள் பலவகை*

சித்த மருத்துவத்தில் பத்தியம், இச்சா பத்தியம், கடும்பத்தியம், மிகக் கடும் பத்தியம், உப்பில்லா பத்தியம் என பல தரப்படும்.

#இச்சாபத்தியம் : கடுகு, நல்லெண்ணெய் , வெண்பூசணி, பரங்கி, மாங்காய், பலா, தேங்காய், பெருங்காயம், வெ. பூண்டு, அகத்தி, புகைத்தல், போதைப் பொருள், உடலுறவு, பகல் தூக்கம், வெயிலில் திரிதல் ஆகியவற்றை விலக்கி பிறவற்றையும் விரும்பாமல் மிகுதியாக உண்ணாதிருத்தலே இச்சாபத்தியமாம்.

#கடும்பத்தியம் : கடும்பத்தியத்தில் மருந்துண்ணுங்காலம் வரை மேற்கண்ட பொருள்களை விலக்குவதோடு உப்பு, புளி, காரம் நீக்கியும் உணவுண்டு மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள்களுக்குச் சமமான நாள்கள் புளியைச் சுட்டுச் சேர்த்து கத்தரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, ஆகியவற்றால் குழம்பு, கறி முதலியன செய்து மறு பத்தியமாகக் கொள்ளலாம்.

#மிகக்கடும்பத்தியம் : புதிய மட்கலத்தில் (மண்பானை) அரிசியை உப்பின்றிப் பொங்கியுண்ண வேண்டும். பிற எதுவும் ஆகா. சில மருந்துகள் சாப்பிடும் போது வாழையிலையில் உண்ணுதல், நெல்லாவியில் படுதல், கடற்காற்றில் உலாவுதல், புளியமர நிழலில் இருத்தல், புளி, உப்பு, ஆகியவற்றை தொடுதல், உணர்ச்சிவயப்படுத்தல் முதலியவையும் தவிர்க்கவும்.

#உப்பில்லாபத்தியம் : பாதரசத்தை தனித்தோ, பற்ப செந்தூரமாகவோ பிற மருந்துகளுடனோ, உண்ணும் போதும் மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள் அளவு மறுபத்தியம் காத்தல் வேண்டும். பின்னர் உப்பை வறுத்துச் சேர்த்தும் அதன் பின்னர் ஓமம், மிளகு, முக்கூட்டு நெய், ஆவின் நெய், இவற்றில் ஏதேனும் ஒன்றால் தலை முழுகிய பின்னரே உப்பு சேர்த்து உண்ணலாம். இவ்வாறு கடைப்பிடித்தலே உப்பில்லா பத்தியமாகும்.
இது தவிர அரிப்பு,பித்த, வாத நோய்களுக்கு கத்தரிக்காய்,உருளைகிழங்கு,கருவாடு,முட்டை போன்றவற்றை தவிர்க்க விரைவில் குணம் கிடைக்கும்.!

சில மருந்துகளுக்கு பத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தாலும் இச்சா பத்தியமாகவேனும் இருந்தால் பிணி விரைவில் நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

Monday, February 6, 2017

ஆவி பிடிப்பதன் அளப்பறிய நன்மைகள்

முகத்திலுள்ள அழுக்குகள், இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழி - முகத்திற்கு ஆவி பிடித்தல்...

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.!

*இணையப்பகிர்வு*

சுக வாழ்வுதரும் செம்பருத்தி நெய்

அடுக்கு செம்பருத்திப்பூ அல்லது நாட்டுச்செம்பருத்திப்பூ இடித்த சாறு 250 மிலி, சுத்த ஆமணக்கெண்ணெய் 250 மிலி,தேங்காய்ப்பால் 1 லிட்டர்
சங்குகுப்பி இலை சாறு 125 மிலி

இவற்றுடன்இரசகற்பூரம்,கிராம்பு,ஏலரிசி,மிளகு,கருஞ்சீரகம்,சீரகம்,சுக்கு,சாதிலிங்கம்,கார்போக அரிசி வகைக்கு 2 கிராம். மேற்கண்ட சரக்குகளை பொடித்து  அதோடு கொஞ்சம் தேங்காய்ப்பால்,செம்பருத்திசாறு விட்டரைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்கி அடுப்பேற்றி காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி வடித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துக.!

*பிறந்தது முதல் குழந்தைகளுக்கு வரும் சொறி,சிரங்கு,கரப்பன்,கரப்பன்கெட்டு,சிகப்பு,தடுப்பு,பொக்களம்,தொடை கரப்பான்,காதில் வரும் தடுப்பு,காது சீழ்வடிதல், விசகரப்பான்,தேக ஊறல், மலபந்தம் போன்ற வியாதிகளுக்கு வேளைக்கு 5 துளி  முதல் 20 துளி நெய்யை எடுத்து 3 மடங்கு தாய்ப்பால் அல்லது  சீரக கசாயத்தில் கலந்து நாளைக்கு இரண்டு முறை உணவிற்கு முன் கொடுத்துவர 20 நாளில் பூரண குணம்.*
*பெரியவர்கள் இதே நெய்யை இரண்டுத் தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் நாட்டுப்பசும்பால் அல்லது சீரக கசாயத்தில் கலந்து குடித்து வர  மேற்கண்ட கரப்பான் போன்ற  வியாதிகள் குணமாவதுடன் இதயபடப்படப்பு, மூலச்சூடு,பித்தம்,  கொழுப்படைப்பு,கொழுப்புகட்டி,பசியின்மை,மலச்சிக்கல் போன்ற வியாதிகள் குணமாகி பூரணமான ஆரோக்கியம் கிட்டும்*

பத்தியம்: குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் தாய் அசைவம்,புளி,சேனைக்காய்,எண்ணைய் பலகாரங்கள் இரசாயணம் கலந்த உணவுகளை தவிர்க்கவும். மருந்துண்ணும் பெரியவர்கள் தானே இவற்றை தவிர்த்து அல்லது முடிந்தவரை குறைத்துக்கொள்ள பூரண குணம் கிடைக்கும்.!

🌷இயற்கை மூலிகை
மருத்துவ தகவல்களுக்கு🌿
amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை பொருட்களுக்கு
AUM HERBALS 🌿
Mobile & Whats app
*9629368389*

Saturday, February 4, 2017

முக்கிய மருத்துவக்குறிப்புகள் 05/01/17

[2/4, 21:49] Am Yoga: *தூதுவளை லேகியம்*

தேவையான பொருட்கள் :

தூதுவளை சமூலம் (தலை முதல் கால் வரை) – 1 கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில்  வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

*இணையப்பகிர்வு*
[2/4, 21:52] Am Yoga: *கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?*

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பானம் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி!

அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதற்கு அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தான் காரணம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.!

*இணையப்பகிர்வு*
[2/4, 21:56] Am Yoga: *இரத்தக் பேதி குறைய*

சீரகம், கொட்டைக்கரந்தை, கடுக்காய் பூ ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மைபோல அரைத்துக் கால் ரூபாய் அளவு வில்லைகளாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வில்லைகளை பசு நெய்யில் வறுத்து சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு வில்லை வீதம் எடுத்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கழிச்சல் கட்டுப்படும்.!

*இணையப்பகிர்வு*
[2/4, 22:07] Am Yoga: எந்த வகையான வாழைப்பழம் சாப்பிடலாம், எப்படி சாப்பிட வேண்டும் என்ற கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம்!
இதை கேட்கவே குளுக்கோஸ் சத்து இல்லாமல் இருப்பவர்களும் உண்டு!

மோரிஸ்  <}பெங்களூர் வாழை >தவிர அனைத்து பழங்களையும் சாப்பிடலாம்!
நன்கு பழுத்து இருக்கவேண்டும்!
காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மட்டுமே உணவாகவும், மருந்தாகவும் சிறந்த முறையில் பணியாற்றும்!
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள்
வாழைப்பழ உணவை சாப்பிட தயங்கினால்
இறுதி வரை, மருத்துவத்தை நம்பி,
நடைபிணமாக, வாழ்க்கை வேதனையாக கழியும்!

இப்பொழுது சாப்பிடுவதுப்போல வேகவேகமாக
சாப்பிட்டால் உணவாகவும் மருந்தாகவும் வேலை செய்யாது!
5 அ 6 பழங்கள் சாப்பிட்டாலும் பசி அடங்காது!
கெட்ட சர்க்கரையாக மாறி சர்க்கரை அளவை தூக்கிவிட்டு,
வீணாக சிறு நீரில் வெளியேற்றப்படும்!

வாழைப்பழத்தை சாப்பிடும் தெய்வீக முறை ஒன்றுள்ளது!
அதன் படி பழக்கப்படுத்திக்கொண்டு,
சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே,
அது "வாழவைக்கும் பழமாக" தன் வேலையை செவ்வன செய்யும்!
இல்லையானால் "மலமிலக்கியாக" மட்டுமே செயல்படும்!

ஒரு கடி வாழைப்பழத்தை,
அதன் சுவை முழுதும் நாவின் சுவை மொட்டுக்களால்
உறிஞ்சும் வரை, சுவைத்து,
சுவையற்றுப்போகும்வரை,
விழுங்காமல் வாயிலேயே வைத்திருந்து,
பின் சிறிது சிறிதாக விழுங்கவேண்டும்!

இப்படி சாப்பிட கற்றுக் கொள்பவருக்கு மட்டுமே முழு பலன் கிட்டும்!
இதற்கு "அக்கரை, கவனம், பொறுமை" தேவை!

முறைப்படி சாப்பிட்டால்
"இரண்டு பழங்களுக்கு மேல்" நம் உடல் கேட்காது!
திகட்டுவதன் மூலம் "போதும்" என சொல்லும்
10 நிமிடங்களே தேவைப்படும்!
அடுத்த நான்கு மணி நேரத்துக்கு பசி எடுக்காது!
தேவையான குளுக்கோஸ், தாவரக் கொழுப்பு, புரதம்,
சமைத்த உணவில் துளியும் கிடைக்காத உயிர் சத்துக்கள் மற்றும்
தாது உப்புக்கள் அனைத்தும்
"ஒருங்கே தரும் தெய்வீக உணவு வாழைப்பழம்!

கடின உழைப்பு உள்ளவர்களுக்கு இன்னுமொறு
பழம் தேவைப்படலாம்!

இப்படி சாப்பிடுபவர்களுக்கு நல்ல சர்க்கைரையாக(குளுக்கோஸ் ) மாறி,
உடல்,  செல்களின் தேவையை பூர்த்தி செய்தபின்,
மீதமிருக்கும் குளுக்கோஸ் சத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்,
பிற்கால தேவைக்கு!

சமைத்த உணவில் நல்ல சர்க்கரை கிடைப்பது சிரமம்!
ஏனெனில் செயற்கையுணவில் தரமான சர்க்கரை கிடைக்க வாய்ப்பில்லை!
ஆகவேதான்,  "மூன்று வேளை மூக்குப் பிடிக்க சாப்பிட்டும்",
தரமான குளுக்கோஸ் கிடைக்காமல் கெட்ட சர்க்கரையாக,
சிறுநீரில் வெளியேறும் அவலம் தொடர் கதையாகிறது!

எனவே வாழைப்பழம் ஒரு கடியை,
"70 முதல் 80" முறை மென்றால்தான் சரியான தீர்வு கிடைக்கும்!
முகம் சுளிக்காதீர்கள் 10 நிமிடங்களே இதற்கு போதுமானது!

செய்து பார்க்காமல் எரிச்சலடைய பழகிக்கொண்டோம்!
செய்து பாருங்கள், எளிமையாக இருப்பதை உணர்வீர்கள்!
சர்க்கரை நோயுள்ள ஒருவரையும் இனி காணமுடியாது!
அனைத்து நோய்களிலிருந்தும், வலிகள், வேதனைகளிலிருந்தும்
விடுதலை பெறலாம்!

சளி, வீஸிங், ஆஸ்துமா, வயிற்றுப் பிரச்சினைகள்,
உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து வேதனைகளிலிருந்தும்
விடுதலை தரும் "சகலரோக நிவாரணி"
வாழைப்பழ உணவு!
எனவேதான் கடவுளுக்குப் படைக்கும் தகுதியை பெற்றிருக்கிறது!

பழ உணவு பழகியவர்களுக்கு கிடைக்கும்
"பாக்கியம்" என்ன தெரியுமா?
இரப்பை அழுத்தமின்றி லேசாக இருக்கும்,
ஆனால் நிறைவான சத்துக்கள் கிடைக்கப்பெற்று
சுறுசுறுப்பாகவே இருப்பார்கள்!
சலிப்பில்லாமல் தமது கடைமைகளை செய்வார்கள்!

*இணையப்பகிர்வு*
[2/5, 13:02] Am Yoga: *நீர்க்கட்டி கரைய*

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க சில டிப்ஸ்..

வெப்பம்

சுடுநீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதனைக் கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

விளக்கெண்ணெய்

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.

குறிப்பாக இந்த விளக்கெண்ணெய் பேக்கை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் ஓவுலேசனுக்கு பின் பயன்படுத்தக்கூடாது மற்றும் மாதவிடாய் காலத்தில் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

எப்சம் உப்பு நீர் குளியல்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்ட எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.!

*இணையப்பகிர்வு*
[2/5, 13:05] Am Yoga: *துளசி மணப்பாகு*

துளசிச்சாறு – 1 லிட்டர்
பனைவெல்லம் – 1 கிலோ
சீரகம் – 200 கிராம்
இஞ்சி – ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.!

*இணையப்பகிர்வு*

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?*

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

🌞💧 *1. இளஞ்சூடான நீர்* 🍸

இளஞ்சூடான நீர் - காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

🍶 *2. வெந்தயம் நீர்* 🍜

வெந்தயம் நீர் - வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

🍹🐝 *3. தேன்*

தேன் - இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

🍅🍆🌶 *4. காய்கறிகள்*

காய்கறிகள் - கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

🍊🍎 *5.பழங்கள்*🍌🍋

பழங்கள் - வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

🍚 *6. அரிசிக்கஞ்சி*

அரிசிக்கஞ்சி - குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

✨ *7.உளுந்தங்களி*

உளுந்தங்களி - பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

🌱🍵🔅 *8.முளைக்கட்டிய பயறு*

முளைக்கட்டிய பயறு - முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.✔💝👍

*இணையப்பகிர்வு*

Friday, February 3, 2017

முட்டாள்சீடனும் முரட்டு குருவும்

மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் தியானம் கற்று தரவில்லையே என்று கேட்டான் சீடன்.

ஜென்குரு, இன்றில் இருந்து உனக்கு நான் தியானம் சொல்லித் தருகிறேன் என்றார்.

அவர் மிகவும் வேறுபட்ட *வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார்*.

அந்த இளைஞன் புத்தமத சாரங்களை படித்துக் கொணடிருக்கும்போது பின்புறமாக வந்து மரக்கட்டையினால் மிக பலமாக அவனை தாக்கினார்.

அவர் மிகவும் அமைதியான மனிதர்.

அவருடைய காலடி ஒசையை கூட அவனால் கேட்க முடியாது.

திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கட்டை அவன் மீது இறங்கும்.

நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான்.

குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை.
கவனமாயிரு, *தன்ணுணர்வோடு இரு*, அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம்.

அதுதான் ஒரே வழி என்றார்.

தப்பிக்க வேறு வழியில்லை. *அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான்*.

அவன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான்.

மூன்று மாதங்களுக்குள் குருவால் அவனை ஒருமுறை கூட அடிக்க முடியாமல் போய்விட்டது.

*அவன் தூக்கத்தில் கூட கவனமடைந்தான்*. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அவர் எப்போது முயற்சி செய்தாலும் அவன் என்ன செய்துகொண்டு இருந்தாலும் குதித்து தப்பித்து விடுவான்.

பின் குரு, *நீ தியானிப்பவனாக மாறி விட்டாய்*. நாளை காலை நீ புறப்படலாம். என்றார்.

நாளை காலை அவன் புறப்படப் போகிறான்.

அன்று குரு மரத்தடியில் அமர்ந்து புத்தமத சூத்திரத்தை படித்துக் கொண்டிருந்தார்.

அவன் மனதில், நான் போவதற்கு முன் ஒருமுறை இந்த குருவை அடிக்க வேண்டும். என்று தோன்றியது.

இந்த எண்ணம் பலமுறை அவன் மனதில் ஓடியது. இதுதான் கடைசி சந்தர்ப்பம்.என எண்ணினான்.

அதனால் அவன் போய் மரக்கட்டையை எடுத்துவந்து ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். *அப்போது குரு, நிறுத்து எனக் கூறினார்*.

*அவர் அவனை பார்க்கக் கூட இல்லை. இங்கே வா. நான் வயதானவன், என்னை அடிக்க வேண்டுமென்ற எண்ணம் நல்லதல்ல அதிலும் நான் உன் குரு..!* என்றார்.

இளைஞனுக்கு மிகவும் ஆச்சரியமாகி விட்டது. ஆனால் நான் எதையும் சொல்லவில்லையே எனக் கேட்டான்.

குரு, ஒருநாள் உண்மையிலேயே *நீ மிகவும் விழிப்புணர்வு அடையும்போது சொல்லாததும் கேட்கும்*.
முன்பெல்லாம் என்னுடைய காலடி ஓசையை உன்னால் கேட்க முடியாது.

பின் கவனமாக இருந்து அவற்றை கேட்க ஆரம்பித்தாய். அதைப்போல ஒருநாள் உனக்கு தெரியும். உனது *மனது அமைதியாக மெளனத்தில் இருக்கும்போது உச்சரிக்காத வார்த்தைகளையும் உன்னால் கேட்க முடியும்*.
*அப்போது நீ ஒரு கண்ணாடி போல மாறிவிடுவாய். அதனால் பிரதிபலிப்பாய். அவ்வளவே. என்றார்.*

இணையப்பகிர்வு

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

👉 இருதயம் சீராக       இயங்குகிறது.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

👉 கண் பார்வை
தெளிவடைகிறது.

👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

👉மலச்சிக்கல்  நீங்குகிறது.

👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

👉  நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

👍  இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.!

*இணையப்பகிர்வு*

வில்வம்

*வில்வம் தின்று வெல்வோம் வியாதியை*

வில்வப் பழம்... மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.... இதைச் சாப்பிடு பவர்களுக்கு... 40 மனிதர்களின் சக்தி... ஒருவருக்கே கிடைக்கிறது...
‎வில்வம்‬
‎வில்வப்பழம்‬ ‪#‎இருதயத்துக்கு‬ ‪#வலுவூட்டுகிறது‬. சுவாசத்தில் நல்ல வாசனையை உருவாக்குகிறது. நெஞ்சில் பாரத்தைக் குறைக்கும்.
வில்வப் பழத்தை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால் வில்வப்பழம் மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.
இதைச்சாப்பிடு பவர்களுக்கு 40 மனிதர்களின் சக்தி ஒருவருக்கே கிடைக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் வில்வப்பழத்தைச் சாப்பிட்டால் அவர்களின் இருதய நோய் நீங்கும்.
 பிறக்கும் ஆண் குழந்தை அழகாக இருக்கும்.
வில்வப்பழம் பல வியாதிகளுக்கும் சிறந்த மருத்தாகும்

. இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.
 மூத்திரத்தை வெளியாக்குவதுடன் தாய்ப் பாலையும் அதிகரிக்கும்.
 மாதவிடாய்க் கோளாறுகளைக் குணமாக்கும்.
 சிறுநீரகத்தில் உண்டாகும் கற்களைக் கரைக்கவும்,
சுருள்களை அவிழ்க்கவும்
வில்வப்பழம் பயன்தரும்.
இதை ஊறுகாய் போட்டுச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
15 அடி முதல் 25 அடி வரை உயரமுள்ள இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும். ஒவ்வொரு கிளையிலும் 3 இலைகள் இருக்கும். வில்வப் பழம் பார்ப்பதற்கு ஆப்பிள் வடிவில் இருக்கும். அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள். கோடைக்காலத்தில் பழுக்கும் வில்வப்பழங்களின் தோல் வழவழப் பாகவும், கெட்டியாகவும் இருக்கும். அதற்குள் கெட்டியான சதைப்பகுதி இருக்கும். பழமாக மாறும் போது சதைப்பகுதி மெதுவாகவும், இனிப்பாகவும் மாறிவிடும். கோடைக்காலம் ஆரம்பம் ஆகும் முன்பே மரத்தின் அனைத்து இலைகளும் உதிர்ந்து விடும். மீண்டும் தோன்றும் புதிய இலைகள் சிவப்பாக இருக்கும். நாளடைவில் பச்சை நிறத்தில் மாறிவிடும். நம் நாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் காகித வில்வம் என்ற பெயரில் கிடைக்கின்ற வில்வப் பழம்தான் மிகவும் உயர்ரக பழமாகக் கருதப்படுகிறது. இப்பழத்திற்குள் விதைகள் குறைவாக இருக்கும். இதன் பூக்களில் தேனைப்போன்ற வாசனை இருக்கும்.
மருத்துவ விஞ்ஞானிகள் வில்வப்பழத்தை ஆய்வு செய்து பார்த்தனர்.
இதில் டேனிக் ஆசிட், பேக்டீன் மற்றும் வழவழப்பான சத்துக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப்பழத்தில் மார்மெலோசின் என்ற சத்தும் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். வில்வ மரப்பட்டையிலிருந்து பகாரின், பூமாரின் பிஸ்கிமானின் சத்துக்களும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.
 விதைகள், இலைகள் மற்றும் தண்டுகளிலிருந்தும் ஒருவிதமான எண்ணெய்ப் பசையைப் பிரித்தெடுத்திருக்கின்றார்கள்.
இதைப் பூச்சிகள், ஈக்கள், எறும்புகள் மற்றும் விஷ ஜந்துக் களைச் சாகடிப்பதற்குப் பயன் படுத்துவார்கள்.
கிராமங்களில் இம்மரத்தின் இலைகள் மற்றும் தண்டுகளை எரித்துக் கொசுக்கள், எறும்புகள், தேனிக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை விரட்டுவார்கள்.
அடிக்கடி பேதியும், சீதபேதியும் ஆகுதல், இறைச்சி, மீன், முட்டை,பிரியாணி, வடை, எண்ணெய்ப் பலகாரங்கள், ரொட்டி போன்ற தாமதமாக ஜீரணமாகும் உணவுப் பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி-பேதி, கல்லீரல், மண்ணீரல், இரைப்பை மற்றும் குடல் பலவீனத்தால் ஏற்படும் வியாதிகளைக் குணமாக்க வில்வப்பழம் மிகவும் பயன்படுகிறது.
நாட்டு மருந்துக் கடைகளில் உலரவைத்து விற்கப்படும் வில்வப்பழத்தை வாங்கி 5 கிராம் அளவில் ஒரு துண்டை எடுத்துக் கஷாயம் போட்டுக் காலை, மாலை இரண்டு வேளைகள் குடித்தால் அடிக்கடி ஏற்படும் சீதபேதி குணமாகும். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் சக்தி தரும்.
கடந்த கால சம்பவங்களையே நினைத்து நினைத்து வேதனையில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஓர் அமுதம் என்றே வில்வப் பழத்தைச் சொல்லலாம்.
அவர்கள் இரண்டு கிராம் அளவில் கஷாயம் தயாரித்து தினசரி ஒருவேளை குடிக்கலாம்.!

*இணையப்பகிர்வு*

Thursday, February 2, 2017

சிறுநீர் கற்கள் கரைய:-

சிறு பூளை சமூலத்தை 1லிட்டர் நீரில் காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் காலை,மாலை ஆகிய இரு வேலையும் பருகி வர சிறுநீர் கற்கள் கரையும்.


சமூலம் என்றால் குச்சி ,வேர், தண்டு சேர்ந்த பகுதி.

சமூலம் என்று நாட்டு மருந்துகடையில் கிடைக்கும்.

Wednesday, February 1, 2017

தொப்புளில் எண்ணை போடுங்கள்

நமது தொப்புள் (நாபி) கடவுள் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

*முயற்சியுங்கள். இப்படி முயற்சி செய்வதில் எந்த ஒரு கெடுதலும் இல்லை!*

*இணையப்பகிர்வு*

ஆடாதொடை சூரணம் :

தேவையானது : நிழலில் உலர வைத்த ஆடாதொடை
இலை 400 கிராம்
மிளகு 100 கிராம்

மிளகை லேசாக வறுத்து இடித்து தூள் செய்து சளித்துக் கொள்ள வேண்டும்.

ஆடாதொடை இலையையும் தனியாக இடித்து சளித்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து பயன்படுத்த வேண்டும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா

அளவு 1 டீஸ்பூன் தேன் அல்லது வெந்நீர், உணவிற்குப்பின் ஒரு நாளைக்கு 3 வேலை எடுக்கவும்.!

*இணையப்பகிர்வு*

எமது தயாரிப்புகள்

*இயற்கை மூலிகை தயாரிப்புகள்*
***********************
*மூலிகை பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து நமது  மூலிகை தயாரிப்புகளின்  விலை  உயர்ந்துள்ளது*

🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!

*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

950 கிராம் 600 ரூபாய்

🌿பஞ்சமூலி சூரணம்

*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 500 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

950 கிராம் 600 ரூபாய்

*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

950 கிராம் 600 ரூபாய்

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுதேங்காய்,இயற்கை எள்ளு, வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!*
*கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

விலை: 500 மிலி
750 ரூபாய்

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

950 கிராம் 600 ரூபாய்

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

950 கிராம் 700 ரூபாய்

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

950 கிராம் 600 ரூபாய்

🍄அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
*ஆரோக்ய மாத்திரை*

100 மாத்திரை 300 ரூபாய்

🔰யோகா புத்தகம் & வீடியோ

*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
 
 ❄இன்சுலின் ஆவணப்படம்

*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

*AUM HERBALS* தொடர்புக்கு:
*MOBILE & WHATSAPP* 9629368389
amyogatrust.blogspot.in☘🍀☘🍀🌴☘🍀☘🍀

இந்துப்ப

இந்துப்பு என்பது ராக் சால்ட் (Rock Salt).  சின்னச் சின்ன கிரிஸ்டல் அளவில் கிடைக்கும். வெள்ளை, இளச்சிவப்பு நிறத்தில் காணப்படும். 92 டிரேஸ் அத்தியாவசிய தாதுஉப்புக்களில் (Trace minerals) 84  இதில் உள்ளன.

Click here

சிறுதானிய மகிமை

நோய் வராமல் தடுக்கும் சக்தி முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு!!!

ஒரு  நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.
பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.

*இணையப்பகிர்வு*

பல் பராமரிப்பு

என்றைக்கோ ஒருநாள் `சுரீர்’ என பல்லில் வலி. அப்போதுதான் நம் பகுதியில் பல் மருத்துவர் அருகில் எங்கே இருக்கிறார் என நினைவில் தேட ஆரம்பிப்போம். அவரைத் தேடி ஓடுவோம். பல் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது தெரியுமா?... ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்கிறது அழுத்தம் திருத்தமாக! சிசுவுக்கு, தாய் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிக மிக மென்மையாக ஈறுகளைத் துடைத்துவிடுவார் இல்லையா? அப்போது தொடங்குகிறது பல் பராமரிப்பு.

பற்களை பாதுகாப்பது தொடர்பான சில அத்தியாவசியமான விஷயங்கள் இங்கே...

* ஆலும் வேலும் மட்டும் அல்ல... மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி... எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது நம் பாரம்பர்யம். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு... என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தக் குச்சிகள் எல்லாம் அந்தச் சுவையைத்தான் தந்தன. துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணியிரித் தன்மையையும், ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மையையும் தருபவை என்பது தாவரவியலாளர்கள் கண்டறிந்தது. துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் `உகாமரம்.’ வழக்குமொழியில் அதை `குன்னிமரம்’ என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்துவிட்டோம்; பேஸ்ட் தயாரிக்கும் கம்பெனிகள் மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு என தனிச் சந்தை உண்டு. ஆக, பல் பாதுகாப்புக்கு துவர்ப்புச் சுவை நல்லது.

* `திரிபலா சூரணம்’ எனும் மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் எளிதான, மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை.

* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று... போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்கு பலன் அளிக்கும் எளிய மருந்து.

* பற்கள் கிருமித் தொற்றால், அழற்சியால் பாதிப்பு அடையும்போது, அதை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாக பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் `ரூட் கேனால்’. குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால், அந்தச் சிகிச்சையை மேற்கொண்டு பற்களைப் பாதுகாக்கலாம்.

* `Periodontitis’ எனும் அழற்சி பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை அதிகம். ஆனால், வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். இதற்கும் என்ன பிரச்னை எனத் தெரிந்துகொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

பொதுவான பராமரிப்பு...

* நள்ளிரவானாலும், குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு, குழந்தையின் ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது.

* குழந்தைகளுக்கு அனைத்துப் பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், அவர்களுக்கு தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு என தனியாக ஃப்ளூரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். `ஈ... காட்டு’ என குழந்தைகளைப் பயமுறுத்தி, பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகலமான விளையாட்டுப்போல அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

* பற்பசையை, பிரஷ்ஷில் கணிசமான அளவில் பிதுக்கி, பற்களில் அப்பி, சுவரைப் பட்டி பார்க்க உப்புத்தாள் போட்டு தேய்ப்பதுபோல தேய்க்கக் கூடாது. பல் துலக்க, ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே போதுமானது.  நம்மில் பலருக்கு, இன்னமும் பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் Dental Floss (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் தெரியாது. ஒருவருக்கு கல்யாணம் நிச்சயமாகிறதா? உடனே, பல் மருத்துவரிடம் போய், `கல்யாணம்... பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்’ என்று நிற்பார். மருத்துவர், பற்களைச் சுத்தம் செய்து பல அழுக்குகளை வெளியே எடுக்கும்போதுதான், ‘இத்தனை வருஷம் இவ்வளவு அழுக்கா நம்ம வாய்க்குள்ள இருந்துச்சு?’ என வந்தவர் நொந்துபோவார். எனவே அடிக்கடி Dental Floss செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

* பராமரிப்பு என்பதையும் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பற்கள் பாதுகாப்புக்கான முதல் படி.

* சிலர் சாப்பிட்ட பிறகு, உதடுகளை மட்டும் தேய்த்து, துடைத்துக்கொள்வார்கள். நன்றாக வாயைக் கொப்பளிக்கவேண்டியது முக்கியம். ஆரோக்கியம் தரும் வைட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட, வாயைக் கொப்பளிக்காமல்விட்டால், பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; பல் எனாமலைச் சுரண்டிவிடும்.

பற்கள் வெறும் பற்களல்ல... அவை நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆணிவேர் என்கிற அக்கறை இருந்தால், பற்களை யாரும் அலட்சியமாக விட மாட்டார்கள்.!

*இணையப்பகிர்வு*

தழும்பு மறைய

*இயற்கை முறையில்*
*தழும்பை போக்குவோம்*

1 - முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி
    யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
    பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
    மேல் போட்டு வரவும் .

    தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
   புள்ளி மறைந்து விடும்.

2 - முகப் பரு - கரும் புள்ளி -தழும்புகள்  நீங்க :
    1 - கோபி சந்தனம் - ஒரு டீ ஸ்பூன் அளவு
    2 - பாதாம் பருப்பு - மூன்று (நீரில் ஊற வைத்தது)
    3 - தயிர் - 2 - டீ ஸ்பூன்
    4 - எலுமிச்சை சாறு - 2 - டீ ஸ்பூன்
   இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி
   களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

   இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
   பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
   பெரும்.

3 -முகத்தில் தழும்புகள் - தீப்புண் தழும்புகள் மறைய :
    அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி
    யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு
    குழப்பி வைத்துக் கொள்ளவும்.
    இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
    வர தழும்புகள் படிப்படியாக மறையும்.!

*இணையப்பகிர்வு*

*பித்தப்பை கல் கரைய*

மலச்சிக்கலே இந்த நோய்க்கான முதல் காரணம் 0.6mm ஒன்றும் பெரிய உடனடி ஆபரேஷன் தேவையான ஆபத்து நிலை அல்ல நாம் 2.2cm வரை பார்த்துள்ளோம். இதனால் உங்களுக்கு கொஞ்சம்கூட தாங்கமுடியாத வலி இருந்தால் அவசர காலத்திற்கு ஆங்கில மருத்துவத்தை அணுகலாம். ஆனால் தாங்களுக்கு தற்போது பொறுத்துக் கொள்ளக் கூடிய சிறு வலியே இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் எடுக்க வேண்டிய மருந்து: 500மி.லி. விளக்கெண்ணெயில் 200கிராம் பூண்டை பேஸ்ட் ஆக போட்டு அத்துடன் 30கிராம் இந்துப்பு,20கிராம் பெருங்காயம் பொடித்துப் போட்டு நன்கு கொதிக்க விடவும் அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிண்டிவரவும் ஒரு பக்குவத்தில் எண்ணெய் தனியாக பிரிந்து கீழ் உள்ள பேஸ்ட் மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிவைத்து நன்கு ஆறியதும் எண்ணையை மட்டும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மண்டியை தூர எறிந்து விடவும். மேற்கண்ட எண்ணையை தினமும் இரவு உணவுக்குப் பின் 2ஸ்பூன்(தேக வலிவையறிந்து) சாப்பிட்டு வர காலையில் எந்த சிரமமும் இன்றி மலம்கழியும். இதை 2மாதம் தொடர்ந்து அருந்தினால் பித்தப்பை கல் கரைந்து விடும்.!

*இணையப்பகிர்வு*

உடல் பருமன் குறைய...

உடல் பருமன் குறைய சூரணம்

தே.பொருள்கள்:

சுக்கு = 200 கிராம்
மிளகு = 25 கிராம்
திப்பிலி = 25 கிராம்
நிலவேம்பு = 25 கிராம்
அதிமதுரம் = 25 கிராம்
இந்துப்பு = 6 கிராம்

செய்முறை:
சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் போட்டு கழுவி எடுத்து ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி பசும்பாலை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
திப்பிலியை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி எடுத்து நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு 150 மி.லி தூய நீர் விட்டு நீர் பாதியளவு சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக இடித்து சலித்து கொள்ளவும்.
நிலவேம்பை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு புழுங்கலரிசி கழுநீரை ஊற்றி 12 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
இந்துப்பை இடித்து கொள்ளவும்.
இடித்து சலித்து வைத்த அனைத்தையும் ஒரு மண் பானையில் போட்டு நன்கு கலந்து மண் தட்டால் மூடி பானையை 6 மணி நேரம் கடும் வெயிலில் வைத்து எடுத்து மீண்டும் நன்றாக கலந்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

உபயோகிக்கும் முறை:
6 கிராம் அளவு மருந்தை 3 பங்காக பிரித்து காலை, பகல், இரவு என 3 வேளைகள் உணவுக்கு 1 மணி நேரம்முன்னதாக ஒவ்வொறு பங்கை சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
இந்த சூரணத்தை சாப்பிட போகும் ஒரு நாள் முன்னதாக சுகபேதி அருந்தவும். சுகபேதி அன்று மட்டும் பசும்பாலும், சோறும் அல்லது மோரும் சோறும் மட்டும் சாப்பிடவும். அடுத்த நாள் மருந்தை சாப்பிடவும்.

சாப்பிட கூடாதவை:
இந்த சூரணம், சாப்பிட்டு வரும் போது உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கடலை பருப்பு, மொச்சை, அகத்திக்கீரை, பூசணி, பரங்கிக்காய், பச்சரிசி, குளிர்ந்த பானங்கள், இறைச்சி வகைகள், பிஸ்கட் வகைகள், தயிர், இளநீர் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

சாப்பிட கூடியவை:
மிளகு பொங்கல், துவரை,முளைக்கீரை, புளி, மிளகாய், துவரை, புழுங்கலரிசி, சாம்பார், மோர், வத்தக்குழம்பு ஆகியவற்றை சாப்பிடலாம். வெந்நீர் குடித்து வருதல் மற்றும் வெந்நீர்ல் குளித்து வருதல் மிகவும் சிறந்தது.

குறிப்பு:
இந்த மருந்து சாப்பிடும் நாட்களில் 3 முறைகளுக்கு மேல் மலங்கழிந்தால் ஒவ்வொறு வேளை மருந்துடனும் அரை தேக்கரண்டி தேனை கலந்து கொள்ளவும்.
மலச்சிக்கல் ஏற்படாது. அப்படி ஏற்பட்டால் உணவில் சிறிது கீரைகளை கூட்டி சாப்பிடவும்.

*இணையப்பகிர்வு*