Saturday, December 31, 2016

*பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாடுவோம்*

புத்தாண்டு பிறக்கும் அன்று  இரவு
12 மணிக்கு கத்தி கூச்சலிட்டு
ஆண், பெண் நண்பர்களோடு
கடற்கரையில் வட்டமிட்டு  மேல்நாட்டு பாணியிலான பார்ட்டிகளில் கலந்து கொண்டுதான் புத்தாண்டை வரவேற்க வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை.!
அப்படி செய்வது  ஒரு சிறுபிள்ளை தனம்.ஆனால், ஏமாந்த பல பிள்ளைகள் முதல் முறை குடிப்பழக்கத்திற்கும், பாலியல் பலாத்கார விவகாரத்திலும்
சிக்கிக்கொள்ள இந்த
நாள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.!
என்பதை மறக்க வேண்டாம்.!
புத்தாண்டு அன்று நடுஇரவு பிராத்தனைக்கு கோவில்களுக்கு போவதும் தேவையற்ற வேலை.!
ஏனெனில் , இந்த இரவில் அதிக ஆர்வக்கோளாறுகள் போதையில் வாகனத்தை
ஒட்டி வருவது இயல்பு.
நாம் பிராத்தனை செய்து வந்தாலும்
கூட போதை ஆசாமிகளிடம் இருந்து நமது உயிரை காப்பாற்ற கடவுள் வரமாட்டார்; என்பதே கடந்தகால அனுபவங்கள்.!
புத்தாண்டு அன்று பூஜை செய்ய
நினைப்பவர்கள்  அதிகாலை கோவிலுக்கு போவதே நல்லது. அந்த நேரத்தில் பெரும்பாலான ஆர்வக்கோளாறுகள் உறங்கிக்கொண்டிருக்கும்.!
அன்பு இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில்  புத்தாண்டை கொண்டாட விரும்புபவர்கள்
பகலில் கொண்டாடுவதே நல்லது.!
முதல் வாழ்த்தை கூறுகிறேன் பேர்வழி என்று இரவு நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்
நண்பர்களை எழுப்பி
கைப்பேசியில் வாழ்த்தை தெரிவித்து அவர்களின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்.!
தேவையானால் வாட்ஸ்அப்பிலோ
முகநூலிலோ வாழ்த்தை கூறுங்கள்
எழுந்ததும் படித்து பதில் வாழ்த்து அனுப்புவார்கள்.
இளவயதில் படிக்கும் பிள்ளைகள்  உள்ளவர்கள் பிள்ளைகளை குரூப் ஸ்டெடி, வெளியூர் சுற்றுலா, பத்து மணிக்குள்ள வந்துருவேன் போன்ற வேண்டுகோளின் படி எங்கும் அனுப்பாதீர்கள்.!
நான் வழக்கமாகவே 12 மணிக்கு மேலதான் உறங்குவேன் என்பவர்கள்  இந்த புத்தாண்டு முதலாவது நான் 10 மணிக்கு தூங்கிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். உடல் நலம் மேம்படும்.!
இல்லை இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை கொண்டாடியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள்
உங்கள் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்களேன்.!
யாருக்கும் தொல்லையில்லை.!
ஒருவேளை  இரவு 12 மணிக்கு நான் ஆன்லைனில் இருப்பதாக தெரிந்தாலும்  யாரும் உடனே வாழ்த்து சொல்ல வந்துவிடாதீர்கள்.
ஏன்னா,என் புத்திரர்கள் கள்ளச்
சாவிப்போட்டு திறந்து என் கைப்பேசியை
சில இரவில் பயன்படுத்துகிறார்கள்.!
சுருக்கமா என்ன சொல்ல வர்றேன்னா, புத்தாண்டு உண்மையிலேயே உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஆண்டாய் மலர வேண்டுமானால் கொஞ்சம் அமைதியாய் கொண்டாடுங்கள்.!
ஓவரா சீனைப்போட்டு ஓவர் நைட்டோடு காலாவதி ஆயிராதீங்க கன்மணிகளா …

*அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்*

*உங்கள் அன்பு நண்பன்*
----ஏகப்பிரியன்------

Friday, December 30, 2016

நெரி கட்டுதல்

ஐயா நெரி கட்டுதல் குணமாக என்ன செய்ய வேண்டும்
அது எதனால் வருகிறது?

தொடைப்பகுதியில் வரும் ஒருவித அலர்ஜி மற்றும் உடல்சூட்டால் நெறிகட்டிக் கொள்ளலாம். துளசி எண்ணைய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணையை தொடர்ந்து தடவி வருவதோடு நிறைய நீர் குடித்தால் சரியாகிவிடும்.!
வலது பக்கம் என்றால் நமது இடது குதிகாலாலும் இடது பக்கம் என்றால் வலது குதிகாலாலும் நெறிகட்டிய இடத்தை அழுத்தி இரண்டு மூன்று முறை தேய்த்து கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.!

☘இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

அசிடிட்டி

*அசிடிட்டி பிரச்சனை எல்லோருக்கும் ஏற்படும் சகஜமான ஒன்று. வயிற்றில் சுரக்கும் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது அவை உணவுக்குழாய் வரை மேலே வருகிறது.*

*அதனால்தான் அங்கே எரிச்சல் உண்டாகும், இதை தான் அசிடிட்டி என்று சொல்வோம். அசிடிட்டி வர பல காரணங்கள் உண்டு. அடிக்கடி வந்தால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிடும்.*

*அதனால் ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டியது அவசியம். அசிடிட்டியை போக்க ஜீரண மருந்துகளை வாங்குவதற்கு பதில் இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு மருந்து நம் வீட்டிலேயே இருக்கு.*

*அப்படி என்ன மருந்து இருக்குனுதான கேட்குறீங்க…….?*

*துளசி: துளசி இலையை பறித்து நன்றாக மென்று அதன் சாறினை விழுங்குங்கள் அல்லது துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடியுங்கள். இதனால் ஆசிட் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.*

*சோம்பு :சோம்பு எந்த வகை உணவையும் எளிதில் ஜீரணப்படுத்திவிடும். நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தி, நிவாரணம் அளிக்கும். இந்த சோம்பினை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்.*

*பட்டை : பட்டை ஜீரண சக்தியை தூண்டும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. பட்டைப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம் , அல்லது தேநீரில் பட்டையை கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் அசிடிட்டி குறையும்.*

*மோர் :மோர் மிகவும் குளிர்ச்சியானது. அதிக அமிலம் சுரப்பதை உடனடியாக கட்டுப்படுத்தும். வயிற்றிற்கு இதம் தரும். குளிர்ந்த மோரில் இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்து குடியுங்கள். உடனடியாக பலன் கிடைக்கும்.*

*கிராம்பு :கிராம்பு கிருமி நாசினி மட்டுமல்ல , அதிலுள்ள குணங்கள் ஜீரண சக்தியை தூண்டும். வாயுவை போக்கும். இதனால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும்.!*
*சுக்கு,மிளகு,திப்பிலி, சீரகம்,*
*பெருஞ்சீரகம் சம அளவாய் எடுத்து*
*மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொண்டு காலை,இரவு உணவிற்கு முன் கால் தேக்கரண்டி*
*அளவு உண்டுவர* *அசிடிட்டி,வயிற்று உப்புசம், வாய்வுத்தொல்லை குணமாகும்.!*

*நலம் பெருகட்டும் …*

Wednesday, December 28, 2016

பற்களை பாதுகாக்க எளிமையான பற்பொடி!

பற்களை பாதுகாக்க எளிமையான மருந்து

இன்றைய நவீன பற்பசை மற்றும் பற்பொடிகளில் சுவைக்காக அதிகமாக இரசாயனத்தை கலப்பதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மிகவும் மோசமான நோய்களுக்கு நாம் உள்ளாகலாம்.

*நம் முன்னோர்கள் நமக்காக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து பல அறிய மருந்துகளை அளித்து சென்றுள்ளனர்.*

அந்த வகையில் பற்களை பாதுகாக்க சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைவைத்து ஒரு தரமான பற்பொடியை எப்படி நம் வீட்டிலேயே தயாரிப்பது என்று பார்போம்.

*கடுக்காய் பொடி 100 கிராம் – நாட்டு மருந்து கடைகளில் பவுடராக வாங்கி கொள்ளவும்*

*கிராம்பு 50 கிராம்*

*இந்துப்பு 25 கிராம்*

இந்த கலைவையை அளவில் கூறவேண்டுமானால்

*ஒரு பங்கு கடுக்காய்*

*அரை பங்கு கிராம்பு* மற்றும்

*கால் பங்கு இந்துப்பு.*

மேற் சொன்ன பொருட்களில் கிராம்பு மற்றும் உப்பை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு அதில் கடுக்காய் பவுடரையும் கலந்து கொள்ளவும்.

 இப்பொழுது உங்களுக்கான தரமான பற்பொடி தயாராகிவிட்டது.

*பல் சொத்தை உள்ளவர்கள் இதை பற்பொடியாக தினந்தோறும் பயன்படுத்தினால் பல் சொத்தை இருப்பதையே மறந்துவிடுவார்கள்.*

இதை அனுபவத்தில் பலரிடம் நான் கண்ட உண்மை.

தயவு செய்து பல்லை பிடுங்காதீர்கள்...

குறிப்பு : இந்த பற்பொடி துவர்ப்பு சுவையாக இருக்கும்...

அப்படி துவர்ப்பு சுவை பிடிக்கவில்லை என்றால் 25கி அல்லது 50கி *அதிமதுரம்* சேர்த்து கொள்ளுங்கள்....

2. இவற்றை எங்கு போய் வாங்கி நாங்கள் பற்பொடி செய்வது என்று எண்ணங்கள் கொண்டவர்களுக்கு

கிராம்பு - 25 கிராம்
இந்துப்பு/ கல் உப்பு - 10 கிராம்

கிராம்பு + கல் உப்பை சட்டியில் போட்டு சிறுதீயில் வறுத்து இரண்டும் வெடிக்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு...

இரண்டையும் அரைத்து பொடி செய்யவும்...

 *இது தான் பெப்சோடன்ட் பற்பசையின் கலவை*

*நாம் ஏன் ரசாயனம் கலந்த பற்பசையை பயன்படுத்தி நம் வருங்கால சந்ததியினரை பல பிரச்சினைகளை சந்திக்க வைக்க நாம் ஏன் மூல காரணமாக இருக்க வேண்டும்*

தேவை என்றால் விதை நீக்கிய ஏலக்காயை 5 சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ளலாம்...

*குறிப்பு* இந்துப்பை சேர்த்தால் வறுக்க வேண்டாம்... கல் உப்பை மட்டுமே வறுக்க வேண்டும்...

*பற்கூச்சம் குணமாக*

அவர் கூறிய பதிலில் இருக்கிறது...

ஓம உப்பு

புதினா உப்பு

பச்சை கற்பூரம்

இவை அனைத்தும் சம எடை...

10 கிராம் வீதம் 30கி வாங்கி ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு 5 நிமிடங்கள் குழுக்கவும்...

மின்சார தைலம் தயார்...

பல் தேய்க்க ஒரு சொட்டுக்கு 5 சொட்டு தண்ணீர் கலந்து உபயோகிக்கவும்...

நேரடியாக பயன்படுத்தினால் எரியும்...

அதிக காரத்தன்மை உடையது...

இது ஒரு சிறந்த வெளிப்பிரயோக வலி நிவாரணியும் ஆகும்...

*பற்கள் வெண்மையாக*

புதினாவை உலர்த்தி பொடி செய்து அதனுடன் இந்துப்பை சேர்த்து பல் தேய்கலாம்...

கருவேலம்பட்டையை பொடி செய்து பல் தேய்த்தால் பற்கள் வலிமையாகி உறுதியாகும்.!

*இணையப்பகிர்வு*

Tuesday, December 27, 2016

உடல் எடை குறைய, கல்யாண முருங்கை இலை*

கல்யாண முருங்கை இலையை அரைத்துச் சாறாக்கி, காலை ஃப்ரெஷ் ஜூஸாகக் குடிக்கலாம். கேழ்வரகு மாவு, அரிசிமாவுடன் இந்த இலையின் சாறைச் சேர்த்து அரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்தத் தீர்வாக அமைகிறது. கர்ப்பக்காலத்தில் பெண்களுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இதில் அடங்கி உள்ளன.!

*இணையப்பகிர்வு*

Monday, December 26, 2016

ஆரோக்கியம் தரும் வில்வம்

நான்கு வில்வம் இலையை தினந்தோறும் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் , அல்சர் குணமாகும்.

4 வில்வம் இலையுடன் ,மிளகு  5 சேர்த்துப் பொடி செய்து காலையில் மட்டும்  சாப்பிட்டுவந்தால் சளி , இருமல் குணமாகும்.

வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.

வில்வ இலை , வேர் , பட்டை - ஆகியவற்றுடன் மஞ்சள் தூள் ( ஓரு ஸ்பூன் ) சேர்த்துக் அரைத்து குளித்துவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.

வில்வ இலையைக் காயவைத்துப் பொடி செய்து , வெந்தயம் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். கண்பார்வை தெளிவாக இருக்கும்.

வில்வ மரத்தின் பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து , தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்..

வில்வ இலை ( 10 ),சீரகம் ( ஒரு ஸ்பூன் ) -இரண்டையும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் குடல் புண் , சொரி , சிரங்கு , கரப்பான் மற்றும் தொழுநோய் குணமாகும்.

வில்வ இலையைக் காயவைத்துந் பொடி செய்து  காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.!

*இணையப்பகிர்வு*

Sunday, December 25, 2016

பிரண்டை – மருத்துவ பயன்கள்

பிரண்டை உடலைத் தேற்றும்; பசியைத் தூண்டும்; மாதவிலக்கைத் தூண்டும்; மந்தம், குன்மம், இரத்தக் கழிச்சல், அஜீரணம் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பிரண்டை சதைப் பற்றான நாற்கோண வடிவமான தண்டுகள் கொண்ட, பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம்.  மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் நிறமானவை. கனிகள் சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவமானவை; விதை வழவழப்பானவை; வஜ்ரவல்லி என்கிற மாற்றுப் பெயரும் உண்டு.

பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும். வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.

பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.

பிரண்டைத் தண்டுகளைச் சேகரித்து, மேல் தோலைச் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தேவையான அளவு நெய்யில் வதக்கி, தேவையான அளவு புளி, உப்பு, காரம் சேர்த்து அரைக்க வேண்டும். பின்பு கடுகு, உளுந்து சேர்த்து தாளித்து துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்து வர இரத்த மூலம் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.

பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும்.

பிரண்டையில் இருந்து சாறு எடுத்து 6 தேக்கரண்டி அளவு சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து காலையில் மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டு வர மாதவிடாய் ஒழுங்காக வரும்.

பிரண்டைத் துவையலைக் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வர எலும்புகள் உறுதியாக வளரும். மேலும், எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் இது உதவுகிறது.

மேலும் பிரண்டையை நன்கு காய வைத்து தூளாக்கி வைத்துக் கொண்டு நீரில் குழைத்து எலும்பு முறிவுள்ள பகுதியில் பூசி வரலாம்.பிரண்டையின் வேரை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிராம் அளவு சாப்பிட்டு வரவேண்டும். வஜ்ரவல்லி என்கிற பெயர்க் காரணம் உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பிரண்டையின் குணத்தினாலேயே ஏற்பட்டது.

அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.!

*இணையப்பகிர்வு*

ஆசனங்கள்


மூட்டு வலி தீர...

மூட்டுகளில் பசைதன்மை குறைவதால் ஏற்படும் சத்தம் , வலி இவைகளிலிருந்து நிவாரணம் பெற முடக்கத்தான் பொடி , முளைகட்டிய உளுந்து, பன வெல்லம், அமுக்கரா சூரணம் இவைகளை ஒவ்வொன்றிலும்  ஒவ்வொரு டீ ஸ்பூன் எடுத்து 200 மி்ல்லி பாலுடன் அல்லது சுடுநீரில் கலந்து காலை மாலை உணவுக்கு முன் அருந்திவரவும். மற்றும் தினசரி மனவளக்கலை மன்றங்களில் சொல்லிதரும் கால்பயிற்சியை செய்து வரவேண்டும்.

இரவு உணவுக்கு பின் திரிபலா சூரணம் சாப்பிட வேண்டும்.

உடல் எடை அதிகமாக இருந்தால்
ஒரு வேளை இயற்கை உணவை எடுத்துகொண்டு எடையை கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்.

இவைகளை எவ்வளவு ஆர்வத்துடன்
கடைபிடிக்கிறோமோ அவ்வளவு விரைவில் மூட்டுவலி தீரும்.!

*இணையப்பகிர்வு*

Saturday, December 24, 2016

கல்லிரலின் வேலையும் அதனைப் பாதுகாக்கும் முறைகளும்

நமது உடலின் பெரிய உறுப்பு கல்லிரல். ராஜ உறுப்புகளில் ஒன்று. நமது உடல் நலம் ஈரலின் நலனை ஒட்டியே அமைகிறது. எனவே ஈரலின் வேலைதான் என்ன? அது எவ்விதங்களில் பாதிக்கப்படுகிறது? பாதிக்கப்பட்ட ஈரலை  மீண்டும் சரி செய்வது எப்படி என்பது குறித்துப் பாப்போம்..

Every person’s health and well-being is dependent on how their body removes and purges toxins from the body. With all the environmental pollution, toxic body care products and processed foods, most people are in desperate need of a serious detox! A liver cleanse is a great way to do this.

One of the main ways that the body rids itself of toxins is through the liver. In fact, the liver is one of the hardest working organs in the body. It works tirelessly to detoxify our blood, produce the bile needed to digest fat, break down hormones, and store essential vitamins, minerals and iron.  And when the liver is not functioning optimally, we cannot digest our food properly, especially fats!

Some of the essential functions of the liver include: 

·      Processing nutrients absorbed by the intestines so they are more efficiently       
        absorbed.

·         Regulating blood composition to balance protein, fat and sugar.
·         Destroying old red blood cells
·         Producing essential chemicals to help blood clot properly.
·         Breaking down and metabolizing of alcohol and medications.
·         Producing essential proteins and cholesterol.

·         Removing toxins from the blood stream including bilirubin, ammonia and 
           others.

·         Storing of minerals, iron and Vitamin A.

For the liver to take care of the body, it must be able to perform optimally
When most people think of liver disease, they think only of alcohol-induced cirrhosis. Cirrhosis is a serious health condition, but contrary to popular thought, alcoholism is not the only cause.
In fact, there are a number of factors that can lead to cirrhosis of the liver and liver damage including eating uncooked shellfish, some medications (including acetaminophen), chronic malnutrition, eating poisonous wild mushrooms, and exposure to chemicals.

Cirrhosis occurs when scar tissue replaces the healthy cells in the liver. As the scar tissue continues to grow, the liver’s ability to function is diminished. Liver failure is the next biological step and occurs when the scar tissue has created so much damage, it no longer functions.
 Liver Cleanse Effectively Removes Toxins

Today, we are faced with so many environmental toxins occurring in our homes, places of work and in our food supply. It is essential for our general health and well-being to keep our livers functioning properly. Below are some of the risk factors associated with impaired liver function. 


·         Low potassium levels. 
·         Heavy alcohol abuse.
·         Intravenous drug use.
·         Blood transfusions prior to 1992.
·         Exposure to certain industrial chemicals and environmental toxins.
·         Unprotected sex.
·         Obesity, and a diet high in saturated fats, and processed foods.
·         Tattoos or body piercings.
·         High levels of triglycerides in the blood.
·         Prescription medications including acetaminophen.
·         Viral infections.
·         Autoimmune diseases.

Signs and Symptoms Your Liver Isn’t Functioning Optimally

If you have recently noticed any of the symptoms listed below, you could be suffering from impaired liver function. It is particularly important to consider these symptoms if you identify with one or more of the risk factors mentioned above.
·         Bloating and gas
·         Acid reflux and heartburn
·         Constipation
·         Skin and/or eyes that are yellowish (a symptom of jaundice)
·         Inability to lose weight
·         High blood pressure
·         Moodiness, anxiousness, or depression
·         Dark urine
·         Rosacea 
·         Chronic fatigue
·         Excessive sweating
·         Bruise easily
·         Poor appetite

Fortunately, you can improve your liver’s functioning. Through a thorough liver cleanse, you can start to feel better in a matter of a couple of weeks.

Some tips for  Liver Cleanse

Here are the 6 steps for my liver cleanse:

 

Remove Toxic Foods From Your Diet


If you are eating a diet high in processed foods, you are putting the health of your liver at risk.Hydrogenated oils, refined sugar, convenience foods and lunch meats are notoriously toxic to your system. Simply Stay away from smoking, Alcohol , all Sodas and processed food. For example, added nitrates and nitrites, commonly found in convenience foods, fast foods and lunch meats, have been linked to serious health conditions.
These chemicals are used to preserve foods to make them last longer, inhibit bacteria growth and preserve color. Replace these foods immediately with healthy choices. Healthy foods taste great, and with a bit of creativity, you can create healthful meals for your family.

Replace chips and other processed snacks with fresh fruit, carrot sticks, nuts and homemade nuts  bars.
Hydrogenated oils, also known as ‘trans fats,’ have higher levels of saturated fat. The chemical structure of the oil itself has been altered to increase shelf life. Consumption of trans fats dramatically increases the risk for heart disease by 25% or more. In addition, it is believed that trans fats cause problems with our immune system and can lead to inflammation throughout the body. Use organic coconut oil, Ghee or organic Gingili oil.

 

Drink Raw Vegetable Juice


It can be nearly impossible to eat all of the raw vegetables you need to make your liver cleanse effective. However, by juicing a variety of raw vegetables, you can easily get the 4-5 servings of fresh, organic vegetables you need. Even vegetables that aren’t your favorites can be disguised and enjoyed in a fresh vegetable juice.
With impaired liver function, juicing vegetables has the added benefit of making the vegetables easier to digest, and more readily available for absorption.

Vegetables ideal for a liver cleanse include cabbage, cauliflower, and Brussels sprouts. While that combination may not sound very enjoyable, you can add other vegetables that you enjoy to the mix including carrots, cucumber, beets and greens.
All of these vegetables help to reduce acid levels in the body, helping to create a more friendly pH balance. Experiment with your favorite flavor combinations; you can add fresh herbs including parsley, mint and others to make the juices more enjoyable.
Try my kid-friendly Orange Carrot Ginger Juice. Fresh, organic carrots are essential to any liver cleanse (5). In the liver, the beta-carotene is converted into Vitamin A to help flush out the toxins in the body while reducing fat in the liver.

The high fiber content helps support a healthy digestive tract, hastening the elimination of toxins in your body. The ginger root helps to soothe the digestive tract, reduce intestinal gas, and has strong anti-inflammatory compounds. The fresh oranges in this recipe not only add tangy sweetness, but also add significant Vitamin C, additional Vitamin A and Vitamin B-6.

Load Up On Potassium Rich Foods


Are you getting the recommended 4,700 milligrams per day of potassium? Chances are, you aren’t. Potassium-rich foods help to lower systolic blood pressure, lower cholesterol and support a healthy cardiovascular system, in addition to helping cleanse your liver. If you have been tempted to take potassium supplements, instead add these healthful foods to your diet.

Sweet Potatoes


Surprisingly, it is not the banana that is the richest in potassium. It is the sweet potato. A single medium sweet potato contains nearly 700 milligrams of potassium, not to mention the high fiber and beta-carotene content.
A sweet potato only has 131 calories, yet is rich with Vitamins B-6, C, D, magnesium and iron. While naturally sweet, the sugars actually are slowly released into the bloodstream through the liver, without causing a spike in blood sugar.

Tomato Sauces


Potassium, and the other beneficial nutrients in tomatoes, is significantly concentrated as a sauce, puree or as a paste. As an example, 1 cup of tomato puree contains 1065 milligrams of potassium, where 1 cup of fresh tomatoes, contains only 400 milligrams. When selecting tomato sauce, paste or puree, be sure to choose those made only from organic tomatoes.
To make your own concentrated tomato sauce, slice organic tomatoes in half and roast face down in the oven for 30 minutes at 425 degrees, until the skin has shriveled. Remove from oven, and let cool. Slide the skins off and gently crush in your food processor or blender. Strain to remove seeds, if you desire. Pour into a Dutch oven, and let simmer until thick 1 to 2 hours.
Beet Greens and Spinach
Rich in anti-oxidants, beet greens contain over 1300 milligrams of potassium per cup. Add beets and beet greens to your fresh vegetable juice recipe, finely chop and add raw to salads, or sauté lightly, like other greens. Beets also naturally cleanse the gallbladder and improve bile flow. Fresh organic spinach is easily added to your diet, and is a good source of potassium, containing 840 milligrams per serving.

Beans

White beans, kidney beans and lima beans are all rich with potassium, protein and fiber. Swap out one of these potassium rich beans for garbanzo beans in your favorite hummus recipe, and eat with carrot sticks and celery sticks.
Incorporate blackstrap molasses into your diet by replacing other natural sweeteners with it, to create barbeque sauces, and to top oatmeal or quinoa porridge in the mornings. 2 teaspoons added to coffee intensifies the richness of the coffee, while lowering the acidic taste.

Bananas


And finally, add a banana to your favorite smoothie. While in comparison to the other high potassium foods on this list, the banana’s 470 milligrams of potassium 


Turmeric

Turmeric reduces joint pain, is an effective anti-depressant, aids in digestion, helps to restore a healthy blood sugar balance, and supports healthy liver tissue and liver metabolism (7).
Currently, researchers are studying turmeric for a variety of health benefits for diseases and conditions including Alzheimer’s disease, cancer, depression, osteoarthritis, breast health, prostate health and chronic pain.
Eat Real Liver or  liver friendly herbs.

Liver from young, healthy, grass-fed cattle or chicken liver is rich with Vitamins A and B, folic acid, choline, iron, copper, zinc, chromium and CoQ10. Liver is one of the most nutrient-dense foods we can eat.
If you can’t stomach eating liver,  use appropriate herbs.  For example கிழாநெல்லி, கரிசலாங்கண்ணி, வெள்ளரி, கொத்துமல்லி தழை, இஞ்சி, ஆர்கானிக் மஞ்சள் பொடி with இயற்கைத் தேன்.



புகை - மது  ஆகியவற்றிலிருந்து முழுமையாக வெளியேறுங்கள்.

இஞ்சி, எலுமிச்சை, தூய மஞ்சள் பொடி, கிடைத்தால் செலரி  கீரை அல்லது நாட்டு கொத்து மல்லித்தழை இவற்றை காலையில் ஜூஸாகவோ salad ஆகவோ எடுத்துக் கொள்ளுங்கள். சுத்தமான தேனில்  கலந்து குடிக்கவும். 

வெள்ளைச் சர்க்கரையை கூடுமானவரை  தவிர்த்து விடுங்கள்.

காலையில் பல் விளக்கும் போது, கண்களை கழுவுங்கள். இதற்காக விற்கும் குப்பிகளைப் பயன் படுத்தலாம்.

கரிசலாங்கன்னி கீரை, கீழா நெல்லிக்கீரை ஆகியவற்றை  பச்சையம் போகாத அளவிற்கு வேகவைத்து கூட்டு செய்து சாப்பிடுங்கள்.

இது தவிர மோர் பயன் படுத்துங்கள். அது ஈரலுக்கு மிக  நல்லது..

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்

நெல்லிக்காய், மாதுளை, கருப்புத்திராட்சை, ஆப்பிள், அருகம்புல், துளசி,திரிபலா,கீழாநெல்லி,மணத்தக்காளி, தேன்,கருப்பட்டி. மோர், நிஜ பசும்பால், கேழ்வரகு,பாதாம்பருப்பு, கைக்குத்தல் அரிசி, கேரட், அத்திக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு  மஞ்சள் காமாளை,கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் சுருக்கம் போன்ற எத்தகைய கல்லீரல் நோயும் குணமாகும்.! மேற்கண்ட அனைத்தையும் பயன்படுத்த முடியாதவர்கள் கீழாநெல்லி, நெல்லிக்காய், மோர், கேரட், திராட்சை, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை மட்டுமாவது உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டு உப்பு,புளி, அசைவ உணவுகள், இரசாயண கலவைகள் உள்ள உணவுகளை தவிர்த்துவந்தால் கல்லீரல் பலப்படும்.!

 *amyogatrust.blogspot.in*

Friday, December 23, 2016

மருத்துவக் குறிப்புகள் 21/12/2016

[12/23, 11:52] Am Yoga: *வயிற்று வலிக்கு_இயற்கை மருத்துவம் தரும் அருமையான நிவாரணம்*

வலி என்று பொதுவாக எடுத்துக் கொண்டால் உடல் வலி, முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால்வலி, வயிற்றுவலி, கண்வலி, காதுவலி என்ற எல்லா வலிகளையும் வலிகள் என்றுதான் கூறுவார்கள்.

அதில் வயிற்றுவலி என்பது வயிறு அல்லது உணவுக் குழலில் ஏற்படும் வலியைக் குறிக்கும். வயிற்றுவலி வந்தவுடன் கிராமப் புறத்தில் இருப்பவர்கள் உடனே டாக்டரிடம் ஓடமாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்த மண்வாசனை மருத்துவத்தை செய்து பார்ப்பார்கள். சாதாரண வலி என்றால் இந்த மருத்துவத்திற்கே கட்டுப்பட்டு விடும். கிராமப்புறத்தில் வயிற்று வலிக்கு என்னென்ன மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டால் உங்களுக்கும் அவசர காலத்தில் உதவும்தானே.

அதற்கு முன் எத்தனை வகையான வயிற்றுவலி உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்:

1. வயிற்றில் குடல்புண் இருந்தால் வயிறுவலிக்கும்.
2. உணவு செரிக்கவில்லை என்றால் வயிறுவலிக்கும்
3. காரம், புளி போன்றவை அதிகரித்தாலும் வயிறுவலிக்கும்.
4. அடிக்கடி தலைவலி வருகின்றவர்கள் அனாசின், சாரிடான் போன்ற மாத்திரைகளை உட்கொள்வதால் வயிறு வலிக்கும்.
5. கெட்டுப்போன உணவை உண்டதால் சிலருக்கு வலி ஏற்படும். இவற்றில் எது சரியான காரணம் என்பதைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்ய வேண்டும். காரணத்தைக் கண்டு பிடித்தவுடன் வயிற்றுப் புண் என்றால் புண்ணுக்குரிய மருந்து முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

*மருத்துவம்*

மருந்து_1
நற்சீரகம் _ 100கிராம், ஓமம் _ 100கிராம், இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு _ 100கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும். வயிற்று வலி பூரண குணமாகி விடும்.

மருந்து _ 2
அதிமதுரம் _ 50கிராம், இந்துப்பு _ 50கிராம், நவாச்சாரம் _ 50கிராம் மூன்றையும் பொடியாக்கி 3கிராம் அளவு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட குணமாகும்.

மருந்து _ 3
முருங்கையிலைச்சாறு _ 50 கிராம், நற்சீரகம் _ 50 கிராம் இரண்டும் கலக்கும் வரையில் அரைத்துக் குடிக்கத் தீராத வயிற்று வலிகள் தீரும். சில நாட்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால் நாள்பட்ட வயிற்றுவலி குணமாகும்.

மருந்து _ 4
அருகம்புல் _ 100 கிராம், முற்றிய வேப்பிலை _ 100 கிராம் எடுத்து நன்கு இடித்து ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி சாறு எடுத்துப் பருகினால் வயிற்றுவலி நாட்பட்டதாக இருந்தாலும் 15_20 நாட்கள் குடித்து வந்தால் கண்டிப்பாகக் குணம் ஏற்படும்.

மருந்து _ 5
சுத்தமான களிமண்ணை மாவுபோல் பிசைந்து அடையைப் போல் தட்டி அடி வயிற்றின் மேல் கட்டி வைத்து சுமார் 3 மணி நேரம் கழித்து எடுத்துப் போட்டுவிடவேண்டும். வெயிலில் வேலை செய்து திரும்பியவர்கள் வயிற்று வலி நீர் இறங்கவில்லை என்று கூறினால் மல்லாந்து படுக்கவைத்து வயிறு முழுவதும் விளக்கெண்ணெய் பூசி வைத்தால் வயிற்றுவலி குறையும்.

அதிகமான கவலை, மனஉளச்சல், உணர்ச்சிவேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின் தாக்கத்தால் தான் பெரும்பாலும் வயிற்றில் புண்ணுண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகின்றது.

வயிற்றுவலியை நிரந்தரமாகப் போக்குவதற்கு முற்றிய அத்தியிலை _ 100 கி, வேப்பிலை _ 100 கி, கீழாநெல்லி இலை _ 100 கி, குப்பைமேனி இலை _ 100 கி, ஆகியவற்றைச் சேகரித்து, நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளையும், (உணவிற்கு முன்னால்) 5 கிராம் தூளை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்து வந்தால் வயிற்றுப்புண் ஆறி பூரண குணம் பெறலாம்.!

*இணையப்பகிர்வு*
[12/23, 11:58] Am Yoga: *சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!*

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* முடி நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. * சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.!

*இணையப்பகிர்வு*
[12/23, 17:19] Am Yoga: ஆறாத புண்ணை ஆற்றும் மருந்துகள் :

1.   மத்தன் தைலம்

2.   புங்கத்தைலம்

3.   செந்தூராதி களிம்பு

4.   சதெளத கிருதம்

புண்ணை தினமும் சுத்தம் செய்து மேற்கண்ட  மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து மேற்பூச்சாக
பூசிவர ஆறாத புண்களும் விரைவில் ஆறும்.!

*இணையப்பகிர்வு*

Thursday, December 22, 2016

தயாரிப்புகள்


மூலிகை தயாரிப்புகள்

[12/22, 07:34] Am Yoga: *இயற்கை மூலிகை மருத்துவம்*

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

*இணையப்பகிர்வு*
[12/22, 14:51] Am Yoga: *இயற்கை
***********************


🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!

*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும்  சமன்படுத்தும்.!*

🌿பஞ்சமூலி சூரணம்

*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து  முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

🌅மூலிகை தேனீர்

ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!

*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*

950 கிராம் 500 ரூபாய்

🏺அதிசய மூலிகை எண்ணைய்

நாட்டுதேங்காய்,இயற்கை எள்ளு, வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில்  சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை   கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!

*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும்  அற்புத எண்ணைய்.!*
*கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால்  பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*

விலை: 500 மிலி
750 ரூபாய்

🎿மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*

950 கிராம் 500 ரூபாய்

🌹மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*

950 கிராம் 600 ரூபாய்

🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு

கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு

*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*

6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!

விலை:950 கிராம்
300 ரூபாய்/-

🎨சக்கரை வியாதி சூரணம்

*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

🍄அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
*ஆரோக்ய மாத்திரை*

100 மாத்திரை 300 ரூபாய்

🔰யோகா புத்தகம் & வீடியோ

*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
 
 ❄இன்சுலின் ஆவணப்படம்

*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.!  விலை: ரூ 250/*

💐இயற்கை வழியில் அனைவரும் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம் …


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

*AUM HERBALS* தொடர்புக்கு:
*MOBILE & WHATSAPP* 9629368389
amyogatrust.blogspot.in☘🍀☘🍀🌴☘🍀☘🍀

Wednesday, December 21, 2016

நோய்கள்என்றால்என்ன ?

முழுமையாகப்படிக்கவும்.

நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68%  ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி  அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.இதுவே பெருவாரியான
சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான்

"கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்"

என்று கூறுகிறோம். இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சிமேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy)எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்குஇருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்(Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும் போதுதான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகுநமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும். காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma),புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற  எந்த தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.!

*இணையப்பகிர்வு*

Sunday, December 18, 2016

வேப்பங்குச்சி


நாய்க்கடி!

அரைலிட்டர் நல்லெண்ணெயை வாங்கி  அதில் 25 கிராம்  அளவு கீழாநெல்லி வேரை போட்டு  கொதிக்க வைத்து உடனே கொதிக்கும் எண்ணெய்  சிறிது ஆறியதும் பட்ஸ் மூலம்  எடுத்து நாய் கடித்த காயத்தில் சுற்றி மூன்று முறை போட்டு வந்தால் விஷம் முறிந்து விடும்.!  மீதி எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து தேவையான போது பயன்படுத்தலாம்.!இதை என் தாத்தா அப்பா நான் செய்து வருகிறேன் எந்த நாய் கடித்தால் கூட விஷமில்லை.!
உள் மருந்தாக ஒரு வெற்றிலை 5 நல்லமிளகை அப்படியே மென்று  உணவிற்கு முன் காலை, மாலை  இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எத்தகைய நாய் விசமும் முறிந்துவிடும்.!

*இணையப்பகிர்வு*