Tuesday, August 30, 2016

காரட் ஜூஸ்

*அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்*

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது.

அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி அவஸ்தைப்படும் நோய்களில் இருந்து விடுபட முடியும். இங்கு அப்படி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்களில் ஒன்று கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது.

இப்போது இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் இருக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று காண்போம்.

பார்வை மேம்படும் :-

 கண் பிரச்சனை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோய் தடுக்கப்படும் :-

கேரட் இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்

நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் :-

கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

குமட்டல் குறையும் :-

இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.

தசை புண்கள் :-

கேரட் மற்றும் இஞ்சியில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளது. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.

இதய நோய்கள் :-

கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

வாய் ஆரோக்கியம் :-

கேரட் இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:-

 கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி - சிறிது (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
ஆரஞ்சு ஜூஸ் - சிறிது (விருப்பமிருந்தால்)

செய்முறை:-

 மிக்ஸியில் துண்டுகளாக்கப்பட்ட கேரட், துருவிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டினால், ஜூஸ் ரெடி!

உடல் எடையை குறைக்கும் சுக்கு சூப் !!!!



காலையில் காபி, டீ இவற்றுக்குப் பதிலாக சுக்கு சூப்பை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மலச்சிக்கலும் ஏற்படாது. சுக்கு சூப் செய்வது சுலபம்தான். அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.
...
தேவையான பொருட்கள் :
சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பரங்கிக்காய் - சிறிய துண்டு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை :
• வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும்.
• வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
• தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
• தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

வெந்தயம்..

வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

சமையலில் சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அத்தகைய வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? முக்கியமாக இது சர்க்கரை நோய், உடல் பருமன், இதய பிரச்சனைகள், மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்க உதவும்.

சத்துக்கள் :-

வெந்தயத்தை எந்த வடிவத்தில் எடுத்தாலும், அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் உள்ளது.

சர்க்கரை நோய்:-

 சர்க்கரை நோய் உள்ளவர்கள், வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கலாம்.

எடை குறைவு:-

 தினமும் முளைக்கட்டிய வெந்தயம் உட்கொண்டு வந்தால், உடல் எடையை குறைக்கலாம். இதற்கு வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் உட்பொருள் தான் காரணம். இது தான் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கச் செய்கிறது. மேலும் வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உள்ளது. இது வயிற்றை வேகமாக நிரப்பி, எடையைக் குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வைத் தருகிறது.

இதய ஆரோக்கியம் :-

முளைக்கட்டிய வெந்தயத்தை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதய பிரச்சனைகள் வரும் அபாயமும் குறையும்.

ஆன்டி-வைரஸ் :-

முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-வைரல் பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வருபவர்களுக்கு, சளி, இருமல், தொண்டை பிரச்சனைகள் போன்றவை வராமல் இருக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் :-

முளைக்கட்டிய வெந்தயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது.இதனால் ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும்.

செரிமானம்:-

 நம் முன்னோர்கள், தங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனைகளான வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வெந்தயத்தை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவார்கள். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

மாதவிடாய் பிரச்சனைகள் :-

40 வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் நெருங்கிக் கொண்டிருக்கும். அந்நேரத்தில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதோடு, மனநிலையில் ஏற்ற இறக்கம், ஒருவித வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திப்பார்கள். ஆனால் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவதைத் தடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் :-

 வெந்தயத்தில் கேலக்டோகோக் என்னும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உட்பொருள் உள்ளது. எனவே பிரசவம் முடிந்த பெண்கள் முளைக்கட்டிய வெந்தயத்தை உட்கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பாலியல் ஆரோக்கியம் :-

வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும், அவரது பாலுணர்ச்சி அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும் என ஆயுர்வேத  மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
. 🍅🍋🌺 இணையப்பகிர்வு

Monday, August 29, 2016

🎀🎀“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀🎀



💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

*💎 போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* 💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* 💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

*💎 எண்ணை குடத்தை சுற்றிய எறும்பு போல

*💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* 💎வாழை வாழ வைக்கும்

* 💎அவசர சோறு ஆபத்து

* 💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* 💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* 💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

*💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* 💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* 💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* 💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* 💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* 💎சித்தம் தெளிய வில்வம்

*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* 💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* 💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* 💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* 💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* 💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* 💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* 💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* 💎வாத நோய் தடுக்க அரைக் கீரை

* 💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* 💎பருமன் குறைய முட்டைக்கோஸ்

* 💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

🎀🎀நலம் உடன் வாழ்வோம்🎀🎀

மூலிகைபொடிகள் அதன் பயன்பாடுகள்...

☘🌿☘🌿☘🌿☘🌿☘

*அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்து

இயற்கை வாழ்வியல் என்றால் என்னவென்று பல நட்பாளர்கள் கேட்கிறார்கள்🍁

இயற்கையான, சமைக்காத  உணவுகளை உண்பதோடு எந்தவித இரசாயண உணவுகளையும்  உண்ணாமல் பற்பசை முதல்  அழகுப் பொருட்கள்  வரை எதிலும் இரசாயணங்களை தவிர்த்து  பனியில் உலவி, வெயிலில் காய்ந்து, முடிந்தால் மழையிலும்  நனைந்து  வாழ்வதோடு ஏசி, நான்ஸ்டிக், குக்கர் சமையலை விட்டு கொசுமருந்து, சோப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து  மண்பானை சமையல், மரபணு மாற்றம் செய்யாத காய்கறி பழங்களை  உண்டு வாழ்வதோடு உடற்பயிற்சி, மருத்துவம் போன்ற அனைத்திற்கும் இயற்கையை முற்றிலும் சார்ந்து  வாழ்வதே இயற்கை வாழ்வியல் வழிமுறை🌹

இதில் நூற்றுக்கு 70 % கடைப்பிடித்து வந்தால் கூட போதும் உடல் ஒரு புதிய  பரிமாணத்தில் இயங்க ஆரம்பித்துவிடும். இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்த  சில நாட்களிலேயே இரத்த அழுத்தம், சக்கரை,புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, கொழுப்பு, உடல் பருமன், குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு, கர்பப்பைக் கோளாறு போன்ற வியாதிகள் குணமாக ஆரம்பித்துவிடும்.🍒

இது எதோ கதை என்று நினைத்து விடாதீர்கள் இந்த வழிமுறைகளை பயன்படுத்தி சென்னை மேயர் சைதை துரைசாமி தனது சிறுநீரகச் செயலிழப்பை சீராக்கி உள்ளார்🍍
நம்மிடம் பயிற்சிபெற்ற பல சக்கரை நோயாளிகள் செயற்கை இன்சுலின் , மாத்திரைகளை நிறுத்தி இயற்கை இனிப்புகளை உண்டு சக்கரை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதே
வழிமுறைகளை பயன்படுத்தி பல தம்பதிகள் மழலை பாக்கியம் பெற்றுள்ளனர்🍅
எனது சொந்த அனுபவத்தில் எனக்கு வந்த இதயநோய், மன அழுத்தம், முதுகு தண்டுவடப் பிரச்சனை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களை இயற்கை வாழ்வியல் முறை, யோகா, தற்காப்புப் பயிற்சி போன்றவற்றை பயன்படுத்தியே முழுவதும் குணப்படுத்தினோம்🌽🧀

காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை நாம் எந்த இரசாயண உணவையும் உண்ணாமல்  தினமும் ஒருவேளை நாட்டுத் தேங்காய், நாட்டு வாழைப்பழம்
போன்றவற்றை உணவாக உண்டு வருவதோடு, தேநீர், காப்பி, பற்பசை, சோப்பு, நொறுக்குத் தீணிகள் கொசுமருந்து போன்றவற்றை தவிர்த்து  அரைமணி நேரம் வெயிலில் யோகா, உடற்பயிற்சி செய்துவந்தால் கூட போதும். அதிசயிக்கத் தக்க வகையிலான பெரும்பயன்களை அடையலாம்.! இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்🍐🍋🍉

amyogatrust.blogspot.in
Am Herbals
9629368389

நலம் பெருகட்டும் …

Monday, August 22, 2016

ஆழ் மனதின் சக்தி

மனோசக்தியே மந்திரசக்தி.
****************************

எப்படி நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும்,
சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன்
வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.

அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை.
அந்த முக்கியமான விஷயம்தான் தியானம்.

இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள்
இருக்கின்றன.

ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும்
காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல்
அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை
எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி
செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.

பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை
சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது.

பூதக் கண்ணாடி சூரிய சக்தியை
ஒருமுகப்படுத்துகிறது ஒருமுகப்படுத்தும்போது சக்தி
அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.

இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும்
மார்க்கங்களைத்தான் 'ஜெபம்' என்றும் 'தியானம்'
என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'ஜெபம்' என்றும், மனதிற்குள்
எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை
இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

எந்த எண்ணமும்
மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான்
இரகசியமாகச் சொல்வதன் காரணம்.

மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?ஆழ்மனம்
திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர
சக்தி உதவத் தயாராயிருக்கிறது.
"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால்
நமக்கு வழிகாட்டும்.

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன.
ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம்
நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு
நாளும், ஒவ்வொரு வகையிலும?் முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள்
திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம்
அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது
இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும்
பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில்
ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால்
முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு
அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து
பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்;
வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும்.

இதுவே இத்தனை நாள்அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது.

ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம்
எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன்
முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும்.இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்
உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக்
சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர
வேண்டும். இதன் முலம் மிக எளிய முறையில் லட்சியகளை நிறைவேற்ற முடியும்.

லட்சியகள் மாட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்
******************************************

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை.
ஏனெனில் நம் பூமி எவ்வித
பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா?
அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம்
செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும்,
நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும்.

 மாற்றங்களை விரும்பாத எவரும்
மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த
உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான்
ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு
கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத்
தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்
தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர
முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம்
ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”
சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால்
எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த
சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?

சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த
பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும்
சக்தியை அனுதினமும் கொடுத்துக்
கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக
அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம்
ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம்
எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி.

இந்த பூமியை இயக்கிக்கொண்டிர
ுப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம்
கொடுக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும்,
ஒவ்வொரு நொடியும் அளப்பரிய
சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த
உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய
முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம்
வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும்
பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?

இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும்
சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே
ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம்
கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம்
ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த
எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது?
என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.
எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான்
ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம்
வண்ணமாவது திண்ணம்🍁

இணையப்பகிர்வு💐

Sunday, August 21, 2016

Over eating!!

அதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவல்!!

சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மந்த புத்தி என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அது உண்மை தான் என்கிறது, இந்த ஆய்வு.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டார்கள். 600 முதல் 1526 கலோரிகள், 1526 முதல் 2143 கலோரிகள், 2143 முதல் 6000 கலோரிகள் உணவு உட்கொள்பவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 3 பிரிவினரிடமும் ஒரு வினா- விடை கொடுக்கப்பட்டது. இதில் முதல் வகையைச் சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு விடையை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். 2வது வகையினர் அதை விட சற்று குறைவான பதிலையே கொடுத்துள்ளனர். 3வது வகையினர் மிக மிகக்குறைவான கேள்விகளுக்கே பதில் கூறியுள்ளனர். அதனால் அவர்களுக்கு ஞாபக சக்தி குறைவு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் நீரிழிவு நோய், மாரடைப்பு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். இந்த வரிசையில் ஞாபக சக்தி குறைவு, மனச்சிதைவு போன்ற நோய்களும் ஏற்படும் என்று புதிய ஆய்வு சொல்கிறது. வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது கணக்கல்ல. அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது என்பது தான் முக்கியம்.

நாற்பது வயதுக்கு மேல் ஆகி விட்டால் அதிகமான உணவு உட்கொள்வதை தவிர்த்து உணவு சாப்பிடும் வேளைகளை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டாலும் ஆபத்து. சாப்பிடாமல் இருந்தாலும் ஆபத்து. எனவே மிதமான உணவை தினசரி 5 முறைகள் சாப்பிட்டால் நல்லது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவான சாப்பாடே ஆரோக்கியமான வாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது உடலுக்கும்   தீங்கு ஏற்படாது. ஞாபக சக்தியும் குறையாது.🍁 இணையப்பகிர்வு💐🌿

பலமான பம்பளிமாஸ்

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.
உடல் சூடு தணியும்
கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும்.
வைட்டமின் எ, கால்சியம்
இந்த பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். பம்பளிமாஸ் பழத்தில் சுண்ணாம்புச் சத்தும் உள்ளதால் பித்த சூட்டை அகற்றும்.
சக்தி தரும் பம்பளிமாஸ்
நோய் பாதிப்பினால் உடல் இளைத்துப்போனவர்கள் மதிய நேரத்தில் பம்மளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் பலமடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.
இரத்தச் சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும்.🎾

இணையப்பகிர்வு🌺🍁🌿

Saturday, August 20, 2016

மொந்தன் பழம்

[8/20, 22:35] Am Yoga: * உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் செக்கு நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

*கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

*நெருப்பு சுட்ட புண்ணிற்கு வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.

*தேமல் மறைய கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.🌺🌻💐இணையப்பகிர்வு
[8/21, 08:12] Am Yoga: மொந்தன் பழ ஊறல் "

"கர்ப்பிணிபெண்களுக்கு சுகப்பிரசவம்  உண்டாக வழங்கும் பழையமுறை  கைவைத்தியம் "

மொந்தன் வாழைப்பழத்தை சிறிதாக நறுக்கி சுத்தமான ஆமணக்கு எண்ணையில் மூன்று நாள் ஊறவிட்டு காலையில் வெறும் வயிற்றில்  விழுங்கி வர உடல் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி உண்டாகும் சுகப்பிரசவம் உண்டாகும் .

6 மாதத்திற்கு மேல் தொடர்ந்து கொடுத்து வரவும் .

🌻🌺💐இணையப்பகிர்வு

மருத்துவ குறிப்புகள்

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் செக்கு நல்லெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

*கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

*நெருப்பு சுட்ட புண்ணிற்கு வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணி ந்து ஆறும்.

*தேமல் மறைய கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

*எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்னை தீரும்.

*கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.🌺🌻💐இணையப்பகிர்வு

Friday, August 19, 2016

சிறுநீரகம், பித்தப்பையில் கற்கள் கரைய,...

சாப்பிட வேண்டிய காய், பழங்கள்🍎🍀🌠
முளைக்கீரை, சாட்டரணை, யானை நெருஞ்சி, சிறு நெருஞ்சி, கரிசலாங்கண்ணி கீரைகளும், வாழைத்தண்டும் சாப்பிட்டால், சிறுநீரகம், பித்தப்பையில் கற்களை கரைக்கும்.

கீரைகளை வாரம் இரு முறை, தாராளமாக சாப்பிடலாம். தினமும் வாழைத்தண்டு சாறு எடுத்து, பலர் சாப்பிடுகின்றனர்; அது தவறு. உடலில் உள்ள உயிர்சக்தியை உறிஞ்சிவிடும் என்பதால், 15 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.

பூசணிக்காய், நுாக்கல், வெள்ளை முள்ளங்கி, கோவைக்காய், பழங்களில் ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாசிப்பழம், மாதுளம்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், கொய்யா சாப்பிடலாம். கூடவே கரும்புச்சாறு குடிக்க மறக்க வேண்டாம்.

கரிசலாங்கண்ணி கீரையை பச்சையாகவோ, சமையல் செய்தோ, நாள்தோறும் உட்கொண்டால், பித்தப்பை, சிறுநீரக கற்கள் கரைந்து மறைந்தே போய் விடும். இந்த கீரையில் உள்ள பழுப்பு இலைகளை நீக்கி, வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்க்கலாம்.

தவிர, வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய்த்தால், மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அந்நேரமே வெளியாகும். பித்தப்பையில் கற்கள் இருந்தால், அந்நேரமே பித்தம் வெளியேறும்; அதிலுள்ள கற்கள் வாந்தி, மலம் மூலம் வெளியேறும். மேலும், சிறுநீரகம் சுத்தப்படுவதுடன், சிறுநீர்ப் பையில் கற்கள் இருந்தால், அவை சிறுநீரில் கரைந்து வெளியேறும். இது முற்றிலும் உண்மை.

கரிசலாங்கண்ணி கீரையை உண்டால், கபநீர் வெளியேறுவதால், சுவாசப்பையும், நுரையீரலும்; பித்தநீர் வெளியேறுவதால், கல்லீரலும், பித்தப்பையும்; மலம் வெளியேறுவதால், பெருங்குடலும்; நீர் பிரிவதால் சிறுநீர்ப்பையும் சுத்தம் அடைகின்றன.
வெள்ளரிக்காய், முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால், சிறுநீரகம் நன்றாக இயங்க உதவுவதுடன், நீர் நன்றாக குடித்தால் கற்கள் சேர்ந்தாலும், சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.

மேலும், சிறுநீரகம், பித்தப்பையின் கழிவுகளை வெளியேற்ற, உடல் தாகமாக தண்ணீர் கேட்கும். ஆனால், நாம் அந்த உடல் மொழியை அலட்சியப்படுத்துகிறோம்; இது தவறு. தாகம் எடுக்கும்போது, தண்ணீர் குடித்தால், பித்தப்பை, சிறுநீரகப்பை சிறப்பாக இயங்கும்.
அதேபோல், அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு, பித்தப்பையில் நச்சுத்தன்மை உருவாகி, பின் அது கற்களாக மாறும். எனவே, காபி குடிப்பதற்குப் பதில், இஞ்சி டீ குடித்தால், பித்தப்பை சுத்தமாகும். மேற்குறிப்பிட்ட உணவுகளுடன், ஜானு சீராசனத்தையும் செய்தால், பித்தப்பை, சிறுநீரகத்தில் கற்கள் என்ற பேச்சுக்கே இனி இடமிருக்காது.

*இணையப்பகிர்வு

பித்தத்திலிருந்து விடுதலை பெற!

* இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

* இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

* பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

* ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

* பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

* அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

* பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

* கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

* நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

* எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

* அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.!🎄

இணையப்பகிர்வு 🌻🌺

Thursday, August 18, 2016

சுளுக்கு

சுக்கை பசும்பாலில் அரைத்துப் பேட்டு அரை மணி படுத்திருந்தால் சுளுக்கு வாய்வுப் பிடிப்பு குணமாகும்💐 amyogatrust.blogspot.in

Wednesday, August 17, 2016

எமது தயாரிப்புகள் - ஓர் வேண்டுகோள்

அன்பு நட்பாளர்களே🌹 இயற்கை மூலிகைப் பொருட்களுக்கு நமது கணக்கில் பணம் போடுவதற்கு முன்பு நம்மிடம் குறிப்பிட்ட தயாரிப்பு இருப்பு உள்ளதா என்று கேட்டுவிட்டு பணம் செலுத்துங்கள்.! துளசி மாத்திரை தற்போது இருப்பு இல்லை.! தயாராக ஒரு வாரம் ஆகும். நம்மிடம் கேட்காமலேயே பலரும் துளசி மாத்திரைக்கு  பணம் செலுத்தி உள்ளீர்கள் தாமதத்திற்கு வருந்துகிறோம்.! மற்றப் பொருட்கள் குறைந்த அளவில் உள்ளது.!  தேவைப்படுவோர் நம்மை தொடர்புக்  கொள்ளலாம். AM HERBALS MOBILE:9629368389 amyogatrust.blogspot.in நலம் பெருகட்டும் 🍁

Tuesday, August 16, 2016

யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்

AM YOGA TRUST

400 க்கு மேற்பட்ட யோகாசனங்கள் பிராணாயாமம்,
தியானம்,
யோகா சிகிட்சை,
இயற்கை உணவு,
இயற்கை வாழ்வியல் பயிற்சி,
மூலிகை மருந்துகள்,
யோகா புத்தகம்,
DVD

போன்ற அனைத்தும் ஒரே  இடத்தில்.!

குறிப்பு:  இங்கு கட்டாய நன்கொடை, தொடர்ந்து அழைத்து தொல்லை செய்தல் போன்ற எதுவும் இல்லாததால் உங்கள் பிள்ளைகளை நம்பி அனுப்பி நலம் பெறுங்கள்.!

amyogatrust.blogspot.in
🌹AUM  HERBALS MOBILE:9629368389🌠

நில வேம்பு

நில வேம்பு மூலிகை மருத்துவப் பயன்கள்:-

பசியைத் தூண்ட

பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

குடல் பூச்சி நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

மயக்கம் தீர

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்க

பித்தம் பிசகினால் பிராணம் போகும்.

என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்க

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

ஜூரக் காய்ச்சல் குறைய

நிலவேம்பு 15 கிராம்
கிச்சிலித் தோல் 5 கிராம்
கொத்துமல்லி 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும்.

குழந்தைகளுக்கு

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம்
வசம்புத் தூள் 4 கிராம்
சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம்
கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்

நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை

6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.! 🌻🌹 இணையப்பகிர்வு

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!

 நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

பித்தத்தைப் போக்கும்......!

உடலுக்குத் தென்பூட்டும்......!

இதயத்திற்கு நல்லது......!

மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!

கல்லீரலுக்கும் ஏற்றது......!

கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!

சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!

இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்...

மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலி லுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

 உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

 ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

🍁🌻🍁இணையப்பகிர்வு

Monday, August 15, 2016

இதய நோய்கள்

இதய நோய்கள் அனைத்துக்கும் தீர்வு !!!

ஒற்றை சிவப்பு செபருத்திப் பூக்களின் இதழ்கள் .....இருபது கிராம்
சுக்குத் தூள் ..... ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த் தூள் .... ஒரு தேக்கரண்டி
அதிமதுரம் தூள் .. அரைத் தேக்கரண்டி
சாதிக்காய் தூள் .... .. அரைத் தேக்கரண்டி
பனை வெல்லம் .... தேவையான அளவு
நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒற்றை சிவப்பு செபருத்திப் பூக்களின் இதழ்கள் போட்டு நன்கு கொதிக்க வைத்து பூவின் நிறம் மாறிய பின் இதழ்களை தனியாக வெளியே எடுத்து விட்டு கசாயத்தை மீண்டும் கொதிக்க விட்டு அத்துடன் பனை வெல்லம் போட்டுக் கொதிக்க வைத்து கம்பிப் பதம் வருமாறு காய்ச்சி பின் அத்துடன் சுக்குத் தூள் அதிமதுரம் தூள் சாதிக்காய் தூள் ஏலக்காய்த் தூள் போட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடி கட்டாமல் ஆற வைக்கவும்
இந்த செம்பருத்தி மணப் பாகை தினமும் காலை மாலை உணவுக்குப் பின் அரைமணி நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர
இதய அடைப்பு இதய வலி இதய ஓட்டை இதய அழற்சி இதய படபடப்பு கொழுப்பு அடைத்தல் போன்ற இதயம் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும்
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்.

🍁🍁இணையப்பகிர்வு

Sunday, August 14, 2016

நோய்கள் என்றால் என்ன?

கண்டிப்பாக அனைவரும் முழுமையாக படித்துவிட்டு பகிரவும்........
நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
இயங்கு சக்தி. -32 %
செரிமானசக்தி- 32 %
நோய் எதிர்ப்பு சக்தி - 36 %

காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68%  ஆக மாறி விடும்....
மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32%...நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 %
ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.

இப்போ சொலுங்க சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் மருந்து மாத்திரைகள்ஆண்டிபயாடிக் எல்லாம் வேணுமா?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும். இந்த செயல்முறையின் போது (Process)நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல் மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது
சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.இவ்வாறு உடல் தனக்கு தானே செய்துகொள்கின்ற இயற்கை பராமரிப்பை நாம் வியாதி  அல்லது நோய்கள் என புரிந்துக் கொள்ளும்போது,
ஏதாவது மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை வேலை செய்ய விடாமல்
தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /கிருமிகள் நம் சுவாசப்பாதையில்தங்கிவிடுகிறது.இந்த சூழ்நிலையில் நமது உடலில் சளி (Sinus) என்னும் சுரப்பி,நிணநீர் (Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில்ஈடுபடும். இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)ஏற்படும். இதையும் வியாதி என
புரிந்துகொள்ளும் நாம் அவற்றை தடுக்க மருந்துக்களை
உட்கொள்கிறோம்.இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர் (Lympathic Fluid) நமது முகத்திற்குள்
தேங்குகிறது.இவற்றை தான் நமது உடல் கண்ணீர்
மூலமும் வெளியேற்றும். இந்த நீரைத்தான் பலர் கண்களில் நீர்தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.இதையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.இதைத் தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.
இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல் செயல்முறையை நிகழ்த்தும். நாம்
காய்ச்சலையும் வியாதி எனக் கருதி அதையும் தடுக்கவும்
மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid) மூலம் வெளியேற்றமுடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம் வெளியேற்ற முயற்சி செய்யும். இந்த சளியானது நமது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக் கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும். இந்த சளியையும் நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு தடுத்துவிடுகிறோம். அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது தொண்டையில் படியச்செய்யும்.அவ்வாறு படியும் கழிவுகள் தான் நமக்கு வறட்டு இருமல் மற்றும்
குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை உட்கொள்ளுவோம். அப்போது நமது
தொண்டையில் படிந்த காய்ந்த சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும். இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.இந்த நிலையை தான்
மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று அழைக்கிறோம்.இதுவே பெருவாரியான
சிற்றறைகளில் அடைபடும்போது நமது உடலுக்கு
தேவையான காற்றோட்டம் மிகக் குறைந்த அளவே இருக்கும். அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி ஏற்படும். இந்த நிலையை தான் நாம் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படும். அப்போது நம் சுவாசம் முழுமையாக இல்லாமல் வேகமாக இருக்கும். இந்த
நிலையில் குறைவான நேரத்தில் அதிக மூச்சுக் காற்றை
சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு. நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம் தேவைப்படும் நேரங்களில்
குறைவான சிற்றறைகள் மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.
பெரும்பகுதியான சிற்றறைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு அடிப்படை காரணம். இதை தான்

"கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றல் குணம்"

என்று கூறுகிறோம். இப்போதும் ஒருவருக்கு ஏன்
ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக நிவாரணம் பெறுகிறோம். பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை கரைக்க நமது உடலானது முயற்சி
செய்யும், நாம் இந்த முறையும் காய்ச்சலை வியாதி எனக் கருதி.மருத்துகளை உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம். பின்னர். இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை கரைக்க முயற்சிமேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில் வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம். அப்போது பயாஸ்பி (Biospy)எடுத்து புற்றுநோயா (Cancer) என
சோதிப்பார்கள். Biospy என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்குஇருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய் கட்டி என்று கூறிவிடுவர்.
இது தான் நுரையீரல் புற்றுநோய்(Lungs Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு
எங்குதேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத
இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக இன்றைய தினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக
வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும் போதுதான் இந்த கழிவுகள் தேங்கி
இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகுநமது உடலின் எதிர்ப்புசக்தி
அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்த கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும். காய்ச்சலை ஏற்படுத்த போதுமான
சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான்
தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம்.
அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய்
வருவதில்லை.யாரெல்லாம் காய்ச்சலுக்கு
மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,Jaundice, Chicken Guniya, Coma
(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma),புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற  எந்த தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள்
பெருகிவிட்டது என கூறுகிறோம்.நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

🌹இணையப்பகிர்வு

ஆர்கானிக்

ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?




தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு  மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல  சந்தேகங்கள் இருக்கின்றன.

ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்?  இதோ, அதற்கான டிப்ஸ்...

*இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு பருப்பு அடர் நிறத்திலோ, இன்னொரு பருப்பு சற்று மங்கியோதான் இருக்க வேண்டும். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

*பெரிய அளவு பழமோ, காயோ, கிழங்கு வகைகளோ அவற்றை தவிர்த்து, சிறிய அல்லது மீடியம் அளவு உணவுகளையே வாங்குங்கள்.

*ஆப்பிள், மாம்பழம், திராட்சையில் அதிகப்படியான பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன என்பதால், இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். நேர்த்தியான, அழகான கனிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.

*சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.

*ஆர்கானிக் காய்கறிகளாக இருந்தால் அவை சீக்கிரம் வெந்து விடும். நேரம் அதிகமாக தேவைப்படாது.

* புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றில் அவற்றுக்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வர வேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. அதிக ஃபிரெஷ் எனில் சற்று சந்தேகப்படலாம்.



*தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.

*ஒன்றிரண்டு பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. பூச்சிக்கொல்லி அடிக்காத உணவுப்பொருட்கள் என கண்டுபிடித்து விடலாம். பூச்சி முழுவதும் பரவி, அழுகி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

*ஒரு ஆர்கானிக் கடையில், இரண்டு பொருட்கள் மட்டும் வாங்கி சமைத்து பாருங்கள். சுவையை அறிந்து கொள்ளுங்கள். அது போல, மற்ற கடையில் உள்ள பொருட்களை வாங்கி சுவைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும். அதன் பிறகு உங்களின் ஷாப்பிங், இனிமேல் எங்கே என்பதை முடிவு செய்யலாம்.

*சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.

*கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பாரிலோ, கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்து போகாது.

*அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது  எனக் கேட்டால், தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

*பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.

*அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களிலும் கிடைக்கும்.💥 இணையப்பகிர்வு🌺

Saturday, August 13, 2016

மாதவிலக்கு வலி

சூதகம் மற்றும் மாதவிலக்குவலி நீங்க
மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.
முன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன். பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி தொடர்புடைய பாடல்களை தவிர்த்திருக்கிறேன். சூதக வயிற்றுவலி.. பெரும்பாலும் மாதாந்திர சூதகம் வெளிப்படும் முன்னதாக வயிற்றுவலி இருக்கும். இத்தகைய வயிற்றுவலி சூதகம் வெளிவந்தவுடன் நின்றுவிடும். சிலருக்கு சூதகம் வெளிப்படத் தொடங்கியபின் வயிற்றுவலி இருக்கும். இதற்கு பின்வரும் மருந்துகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்கின்றனர்.
மாவிலங்கப் பட்டையைக் அரைத்து அந்த பொடியுடன் 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகுமாம்.
மற்றொரு முறையில் வேலிப்பருத்தி என்னும் உந்தாமணி செடியின் கொழுந்து இலையாக ஐந்து இலையுடன், 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். சூதக வயிற்றுவலி குணமாகும்.
வேப்பம் பட்டை 10கிராம், சீரகம் 2 1/2 கிராம் இரண்டினையும் ஒரு சட்டியில் தட்டிப்போட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அதனை அரை ஆழாக்காக காய்ச்சி எடுத்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க சூதக வயிற்றுவலி குணமாகும் என்கின்றனர். சூதகச் சன்னி அளவு மீறிய நரம்பு தளர்ச்சி , மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், பெரும்பாடு, சூதகக்கட்டு, நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, பிரமேகம் இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும்.
இத்தகைய சூதகச்சன்னி ஏற்பட்டால் வலிப்பு உண்டாகும். அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். அல்லது அழுவார்கள். நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும் இருக்கும். இடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். சன்னி தெளிந்து விடும். சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ பேய், பிசாசு பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்களாம். இதற்கான மருந்தைத் தயாரித்துக் கொடுத்து வந்தால், இந்த நோய்க் குணமாகிவிடும் என்கின்றனர்.
சன்னியின் போது மயக்கமடைந்து விட்டால், துணியை சிறியதாகச் சுருட்டி நெருப்புப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை லேசாக முகரக் கொடுக்க வேண்டும். புகையை அதிகமாக்கி சுவாசத்துடன் அதிக அளவில் உள்ளே போகும்படி கொடுக்கக் கூடாது.சிறிது புகையைக் காண்பித்து விட்டு, ஓரிரண்டு சுவாசம் போய்வர விட்டு மறுபடி லேசாக காண்பிக்க வேண்டும்.
ஒரேடியாக அதிகப் புகையை உள்ளே செல்லும்படிச் செய்தால், புகை உள்ளே பந்தனமாகி அபாயத்தை உண்டு பண்ணும். எனவே, கவனமாக புகை கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிஷத்தில் மயக்கம் லேசாகத் தெளியும். முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்து துடைத்து வீட்டால் மயக்கம் தெளிந்துவிடும். சூதகக் கட்டி 28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும்.
இந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடுமாம்.இதனை சித்த மருத்துவத்தில்உதிரக்கட்டி, சோணிதக்கட்டி, கற்பசூலை, இரத்தக்கட்டி, கர்ப்பசூலை, சூதகக்கட்டி, கற்சூலை, சூல்மகோதரம் என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா குணங்களும் தோன்றும். அதாவது, பசிமந்தம் ஏற்படும். தேகம் வெளுக்கும். ஸ்தனத்தில் கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். மார்பு துடிக்கும். ஆயாசம், வாந்தி உண்டாகும். சிலருக்கு ஸ்தனங்களில் பால் சுரக்கும். வயிறு கர்ப்பஸ்திரீ போல பெருத்துக் கொண்டே வரும். கருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள்.
சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். சிலருக்கு இது சூதகக் கட்டி என்று அறிந்து, தக்க மருந்து கொடுத்தால் வெளியேறும். இதைப் பற்றிய மேலும் சில விபரங்களை "மெய்க்கர்ப்பம், பொய்க்கர்ப்பம்" என்ற பதிவில் காணலாம்..
சூதக கட்டி குணமாக... சீரகம், சக்திசாரம், நவாச்சாரம் வகைக்கு 30 கிராம். கருஞ்சீரகம், வால்மிளகு, பெருங்காயம், வாய்விளங்கம் கோஷ்டம் வகைக்கு 10 கிராம்.கடுகு, ரோகினி, வெடியுப்பு, மிளகு, இந்துப்பு, கறியுப்பு, கடுக்காய், வளையலுப்பு, கல்லுப்பு வகைக்கு 5 கிராம். இவைகளை எல்லாம் சுத்தம் பார்த்து நன்றாகக் காய வைத்து, கல் உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு பெரிய முற்றின தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் திறந்து, அதனுள் இந்தத் தூள்களை எல்லாம் செலுத்தி, துளைக்கு மரக்கட்டையைச் சீவி அடைத்துவிட்டு, 21/2 அடி ஆழம் பூமியைத் தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்து, மண்ணைத் தள்ளி மூடி, புதைத்த இடத்தில் அடையாளம் வைக்க வேண்டும். இதைத் தயாரித்து சூரிய உதயத்தில் புதைக்க வேண்டும். ஏழாம் நாள் காலை சூரிய உதயத்தில் இதைத் தோண்டி எடுக்க வேண்டும். எடுத்த தேங்காயைப் பக்குவமாக தேங்காய் ஓட்டை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு, அதனுள் உள்ள மருந்துத் தூளுடன் தேங்காயையும் நைத்து அம்மியில் வைத்து தேன் விட்டு மைபோல அரைத்து, மெழுகுபதம் வந்தவுடன் எடுத்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக ஏழுநாள் சாப்பிட்டால் சூதகக்கட்டி உடைந்து வெளியேறிவிடும். பிறகு மாதா மாதம் சூதகம் ஒழுங்காக வெளியாகும். பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் ஆண் - பெண் சேர்க்கை கூடாது 🍀. இணையப்பகிர்வு🎄

யோகாசனம்

*யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள்.*

நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது.

கட்டை விரல் - நெருப்பையும், ஆள்காட்டி விரல் - காற்றையும், நடுவிரல் - வானத்தையும், மோதிர விரல் - நிலத்தையும், சிறு விரல் - நீரையும் குறிக்கின்றன. இந்த பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.

இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். தினந்தோறும் 10 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.! 💥🍁 இணையப்பகிர்வு

பொடுகு

இயற்கை வழியில் பொடுகை விரட்ட வேப்பம்பூ🌳

பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.! 💦🌹💥 இணையப்பகிர்வு

தலைவலி

இயற்கை வழியில் தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள் :-

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :-

1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.

5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,

8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.

12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.

14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.

15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.

18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.

19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.

21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .

22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.

23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க
தலைவலி குணமாகும்.

25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.

26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .

28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும். 🍁🍁இணையப்பகிர்வு

Friday, August 12, 2016

🙈மனதிற்கு நூறுமுகம்🐒

 அன்பான அம்மாவின் கனிவான வேண்டுகோளை நிராகரிக்கும் போது  தெரிவது உதாசின முகம்🙉  கண்டிப்பான தந்தையின் கவனமான ஆலோசனையை நிராகரிக்கும் போது தெரிவது அகந்தைமுகம் 🙈 பொருள் பெற்றவன் பின்னே  கழுகாய் நிற்கும் போது தெரிவது ஆசைமுகம்🐧 கற்றவன் முன்னே கைகட்டி நிற்கும் போது தெரிவது அறியாமுகம்🐥  பணி தந்தவன் முன்னே  பணிவாய் நிற்பது பவ்யமுகம்🐤 துணையின் தவறை  துணிவாய்  எதிர்ப்பதில் ருத்ரமுகம்🐣 அரசின்   மெத்தனம் மொத்தமாய் தெரிகையில் ஞானமுகம்🐭 அடிமையின் முன்னே  அம்சமாய் நிற்பது ஆணவமுகம்🐹 காதலின் கையில்  பொம்மையாய் சுழல்வது குழந்தைமுகம்🐇 காமத்தின் பிடியில்  மறைவாய் தெரிவது களங்கமுகம்🐽 கடவுளின் முன்னே உண்மையாய் தெரிவது வேசமுகம்🐶

இயற்கை வழியில் வெண்புள்ளிகளை குணப்படுத்துங்கள்

🧀 ஒரு கைப்பிடி கருவேப்பிலை கொழுந்து ஒரு கைப்பிடி கீழாநெல்லி இலை இவை இரண்டையும் காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவர வெண்புள்ளிகள் மறைந்துவிடும்💦 பத்தியம்:வெள்ளைச்சீனி முற்றிலும் தவிர்த்துவிட்டு உப்பு,புளி,காரம் குறைத்து சாப்பிட்டு வரவேண்டும்🍵 அதோடு முடிந்தவரை இயற்கையான சமைக்காத உணவோடு நிறைய மண்பானை நீரும் குடித்துவருவது நல்லது.☘🍋🌺 amyogatrust.blogspot.in AUM HERBALS Mobile:9629368389🌠

துளசி மாத்திரை தயாரிக்கும் முறை

🌿 🌿 சமீபகாலமாக மக்களிடம் மூலிகை மருந்துகளின் மீது  பரவலான மோகம் ஏற்பட்டுள்ளது🌿🌿  மோகம் என்றாலே அது விரைவில் போகும் ஒர் உணர்வுதானே.!🌿  இதுவும் அப்படித்தான் தரமில்லாப் பொருள்,கட்டுப்படியாகாத விலை, எதிர்ப்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் போய்விடுதல் போன்ற காரணங்களால்  பிறகு இம்மோகம் பலருக்கும் குறைந்துவிடும்☘ இன்னொரு முக்கியக் காரணம் எளிய மூலிகைகளை பற்றிகூட முழுமையான புரிதல் இல்லாமல் துளசியை தொடர்ந்து தின்றால் குழந்தை பிறக்காது, வேப்பிலையை தொடர்ந்து எடுத்தால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும் என்றெல்லாம் பல வைத்தியர்களும் அலோபதி மருந்து கம்பெனி காரர்களும் பல புரளியை வேறு அடிக்கடி கிளப்பி விட்டுவிடுகிறார்கள்🌳 உண்மையில் இவையெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.🐾   துளசியை  தினமும் சுற்றி வணங்கி அதில்  நான்கு இலையை பிய்த்து வாயில் போட்டு வந்த எல்லா ஆரியர்களின் வீட்டிலும் குழந்தைகள் டஜன் கணக்கில் இருந்தன.இன்றைய  செயற்கையான உணவு முறையும் வாழ்க்கை முறையுமே மழலையின்மைக்கு காரணமே தவிர எந்த மூலிகையும் இல்லை🍁🍁🍁   துளசி மாத்திரையை கர்பபைக் கோளாறு , தைராய்டு, இரத்த அழுத்தம், மனஅழுத்தம், தலைவலி, காய்ச்சல், சளி  இரத்தத்தில் கிருமி, ஆரம்பநிலை புற்றுநோய் போன்ற நோயிருப்பவர்கள்  நோய் குணமாகும் வரை தினமும் ஒருவேளை அல்லது இரண்டு வேளை  சாப்பிட்டு வரலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் 24 முதல் 48 நாட்கள் தொடர்ந்து ஒருவேளை மட்டும் எடுத்து வந்தாலே போதும் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பயன்களை பெறலாம்.☘  மாத்திரை தயாரிப்பு கருந்துளசி அல்லது வெண்துளசி இலை 100 கிராம் வால்மிளகு அல்லது நல்லமிளகு 50 கிராம்  இரண்டையும் அம்மி அல்லது மருந்து தயாரிக்கும் அம்மியில் சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும் பிறகு அதோடு ஒருத் தேக்கரண்டி மலைத்தேன் கலந்து பிசைந்து சிறுசிறு மாத்திரையாக பிடித்து ஒருப் பாத்திரத்தில் வைத்து ஒருநாள் நிழலிலும் ஒருநாள் வெயிலிலும் காயவைத்து எடுத்துக் கண்ணாடிப் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்🌿🌿 காய்ச்சலுக்கு நெற்றியில் பற்றைப் போட்டுவிட்டு இரண்டு மாத்திரையை மூன்று வேளை சாப்பிட உடனடி குணம் தலைவலிக்கு இரண்டு மூன்று மாத்திரையை போட உடனடி குணம் கிடைக்கும்.🍁 மற்ற  வியாதிகளுக்கு நின்று நிதானமாக பயனளிக்கும்🍁🍁🍁 amyogatrust.blogspot.in AM HERBALS MOBILE:9629368389💐☘🌴  நலம் பெருகட்டும் …

தேங்காய் எண்ணை.. மற்றும் எள்.

[8/12, 14:09] Am Yoga: தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் – உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும் என்கிறார்கள். அதனால்   வெறும் வயிற்றில் எடுக்காமல் ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.🍏 இணையப்பகிர்வு🌺
[8/12, 14:12] Am Yoga: எள்ளின் மருத்துவக் குணங்கள் !!

• படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.


• காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.

• 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.

• ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும், நெய்யும் கலந்து தடவினால் விரைவில் குணமடையும்.

• நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும்.

பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒரு உருண்டை வீதம் உண்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். நீரிழிவு குறையும். செயற்கை இனிப்புகளை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் பாகற்காய் உணவில் சேர்க்கலாம்.!  🍁🍁 இணையப்பகிர்வு✳

Thursday, August 11, 2016

உடலின் அடிப்படை - உணவு

இயற்கை வழியில் ஆரோக்கியம் பெறுங்கள்💐


உடலின் இயங்கு சக்தி - காற்று
உடலின் புனரமைப்பு - உறக்கம்
உடலின் உற்சாகம் - உழைப்பு
உடலின் இன்பம் - அமைதி
எல்லா நிலையிலும் உணவே மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது ♻

சரியான உணவை எடுத்துக்கொண்டால் மற்றெல்லா இயக்கமும் சீராகிவிடும். அப்படி அற்புதமான  ஆரோக்கியத்தை உணர, நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய இணை உணவுகள் இதோ..

அதாவது நீங்கள் வழக்கமாக உண்ணும் உணவுகளுடன் கூட இணையாக கீழே கொடுக்கப்பட்டிருப்பதை சேர்த்துக்கொண்டு கண்கூடாக பலன் பெறவும்..வாழ்த்துக்கள்!!
==================
முதல்நாள் 🍵
கம்பு, வரகு, மக்காச்சோளம், கொண்டைக்கடலை போன்ற தானியங்களால் செய்த சத்துமாவுக்கஞ்சி

இரண்டாம் நாள்🍲 பாதாம், பிஸ்தா, முந்திரி, பேரிச்சை, உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து அரைத்த  சத்துபானம்

மூன்றாம் நாள்🍋 சாத்துக்குடி, ஆப்பிள், பைனாப்பிள், அத்திப்பழம், திராட்சை,  மாம்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு பழங்களை சேர்த்து அல்லது தனியாக  செய்த  பழச்சாறு

நான்காம் நாள்🍒   நாட்டு வாழைப்பழம், அரைமூடி தேங்காய்

ஐந்தாம் நாள்🍓
கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், மிளகு,  எலுமிச்சை, இந்துப்பு (நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்) கலந்த காய்கறி கலவை

ஆறாம்நாள்🍑 கருப்பட்டி, இஞ்சி, நெல்லிக்காய், தேன், புளி கலந்த பானகம்

ஏழாம் நாள் 🍲 ரோஜாப்பூ, தாமரைப்பூ, ஆவராம் பூ, கொத்தமல்லி, சுக்கு, அதிமதுரம், பனங்கற்கண்டு போன்றவற்றோடு நாட்டுப் பசும்பால் அல்லது நீர் சேர்த்து  செய்யப்படும் மூலிகை தேனீர்

இப்படி ஏழுநாட்களுக்கும் ஏழுவிதமான அல்லது மேற்கண்டவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஏதேனும் மூன்று முறைகளை இணை உணவாக  திரும்பத்திரும்ப கடைப்பிடித்துவர  உடலுக்குத் தேவையான அனைத்து வகை சத்துக்களும் உடலுக்கு கிடைத்து உடல் ஆரோக்கிய மாவதுடன் உடல் சோர்வு, தூக்கமின்மை, அதிக எடை, ஆஸ்துமா, கர்பப்பைக் கோளாறுகள், குழந்தையின்மை , விந்தணுக்குறைபாடு போன்ற அத்தனை நோய்களும் குறைபாடுகளும் குணமாகும்🍊 amyogtrust.blogspot.in AUM HERBALS mobile :9629368389 நலம்பெருகட்டும் 🍁🍁🍁

இயற்கை வழியில் ஆரோக்கியம் பெறுங்கள்💐

உடலின் அடிப்படை உணவு🌼💐  உடலின் இயங்கு சக்தி  காற்று🌹☄  உடலின் புணரமைப்பு உறக்கம்🌀  உடலின் உற்சாகம் உழைப்பு✳ உடலின் இன்பம் அமைதி🌺   எல்லா நிலையிலும் உணவே மனிதனை ஆரோக்கிய மானவனாக்குவதில்  முக்கியப் பங்கு வகிக்கிறது ♻ சரியான உணவை எடுத்துக்கொண்டால் மற்றெல்லா இயக்கமும் சீராகிவிடும்🎋 அப்படி அற்புதமான  ஆரோக்கியத்தை உணர வைக்க நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய இணை உணவுகள்🌽 முதல்நாள் 🍵 கம்பு, வரகு, மக்காச்சோளம்,கொண்டைக்கடலை போன்ற தானியங்களால் செய்த சத்துமாவுக்கஞ்சி🧀 இரண்டாம் நாள்🍟  பாதாம்,பிஸ்தா, முந்திரி, பேரிச்சை, உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து அரைத்த  சத்துபானம்🍗 மூன்றாம் நாள்🍋 சாத்துக்குடி, ஆப்பிள்,பைனாப்பிள், அத்திப்பழம், திராட்சை,  மாம்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு பழங்களை சேர்த்து அல்லது தனியாக  செய்த  பழச்சாறு🍓நான்காம் நாள்🍒   நாட்டு வாழைப்பழம், அரைமுடி தேங்காய்🍏 ஐந்தாம் நாள் 🍓 கேரட், வெள்ளரிக்காய், தக்காளி,பீட்ரூட், மிளகு,  எலுமிச்சை,இந்துப்பு கலந்த காய்கறி கலவை🍐 ஆறாம்நாள்🍜 கருப்பட்டி, இஞ்சி, நெல்லிக்காய் ,தேன், புளி கலந்த பானகம்🍠 ஏழாம் நாள் 🍲 ரோஜாப்பூ, தாமரைப்பூ, ஆவாரம்பூ கொத்தமல்லி, சுக்கு,அதிமதுரம் பனங்கற்கண்டு போன்றவற்றோடு நாட்டுப் பசும்பால் அல்லது நீர் சேர்த்து  செய்யப்படும் மூலிகை தேனீர்🍓🍵🍜🍍🍑🍒🍇 இப்படி ஏழுநாட்களுக்கும் ஏழுவிதமான அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று முறைகளை இணை உணவாக  திரும்பத்திரும்ப கடைப்பிடித்துவர  உடலுக்குத் தேவையான அனைத்து வகை சத்துக்களும் உடலுக்கு கிடைத்து உடல் ஆரோக்கிய மாவதுடன்   உடல் சோர்வு, தூக்கமின்மை, அதிக எடை, ஆஸ்துமா, கர்பப்பைக் கோளாறுகள், குழந்தையின்மை , விந்தணுக்குறைபாடு போன்ற அத்தனை நோய்களும் குறைபாடுகளும் குணமாகும்🍊 amyogtrust.blogspot.in AUM HERBALS mobile :9629368389 நலம்பெருகட்டும் 🍁🍁🍁

சமையல் எண்ணெய்

அதி முக்கிய உடல் நலதிற்க்கான தகவல். வெளிநாடுகளில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட அபாயகரமான சமையல் எண்ணெய் மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்ப்டுகிறது. இந்த மறு சுழற்சி செய்த எண்ணெயை  சிறிதளவு எடுத்து 2 மணி நேரம் குளிர்ப்பதன பெட்டியில் வைத்தபின் அதில் வெள்ளை நிற காற்றுக்குமிழ்கள் அல்லது நுரை உண்டானால் அது உபயோகித்த எதற்கும் உதவாத மறு சுழற்சி செய்யப்பட்ட எண்ணெய். காய்கறிகளை வறுக்கும் போது அதில் பூண்டு ஒரு பல் போட்டு அது சிவப்பாக மாறினால் அது மிக அதிக நச்சுத்தன்மை உடைய மறு சுழற்சி எண்ணெய் இது சுலபமான வழி. சுத்தமான எண்ணெயில் பூண்டுப்பல் போட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும். தயவு செய்து இந்த பதிவை உங்கள் சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அனுப்புங்கள்.🌻☘☘ இணையப்பகிர்வு

Wednesday, August 10, 2016

மழை

*☔மழை நீர் பிராணன் (சக்தி) மூலம்/கிடைக்கும் நன்மைகள்*

மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் (சக்தி) இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. 💦

இது ஏன் வருகிறது?

அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் (சக்தி) இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது💧 என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளி பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை, தைரியமாக இருங்கள். நமது உடல் நன்மை செய்கிறது. ☄அது ஒரு மருத்துவம். எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலை குணப்படுத்த மூடியும். மழைநீரை குடிப்பதின் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த மூடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு பூமியை நோக்கி வரும். எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். ஒருவேளை நமது வீட்டின் கூரை சுத்தமாக இருந்தால் கூரையிலிருந்து வரும் மழைநீரையும் பிடிக்கலாம். இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராணன் (சக்தி) அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்திலோ, ஒரு பாட்டிலிலோ காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது, நமது உடலுக்கு தேவையான அனைத்து பிராணனும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் ஆரோக்கியம் அடைகிறது. எனவே, மழைநீர் பிராணனை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம். மழையில் நனைவது மிகவும் அற்புதமான, அருமையான, சந்தோஷமான மனதிற்கு பிடித்தமான, பெரு நிகழ்ச்சி. மேலும் ஆரோக்கியமானதும் கூட. எனவே இனிமேல் மழை வரும்போது நம்மை ஒரு சினிமா நடிகைப் போல் நினைத்துக்கொண்டு, அதில் ஆட்டம் போடலாம். நல்லது. மழைநீரை குடிக்கலாம் நல்லது. மழைநீர் பிராணன் ஒரு அற்புதமான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் நீர் பிராணனை சேர்த்துக் கொள்வோம். நீர் என்பது சாதாரணம் கிடையாது. உயிர்சக்தி, நீர் பிராணன், நீரில் உள்ள பிராணனை நாம் சரியான முறையில் பயன்படுத்தி ஆரோக்கியமாக, அமைதியாக நிம்மதியாக வாழ்வோம்.

வாழ்வோம் ஆரோக்கியமாக!!

குறிப்பு: நம் தவறான வாழ்க்கை முறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.🌧 இணையப்பகிர்வு☔

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்..!!!



காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.

காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.
கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.🍀☘ 🌺இணையப்பகிர்வு

கொய்யா

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து
நிறைந்தது நம்ம "நாட்டு கொய்யா" தான்
நிரூபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம் !
=========
நாட்டு கொய்யாப்பழம்: இதன் அருமை தெரிந்தோ,
தெரியாமலோ நாம்
இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து
கொண்டால் மிகவும் அக்கறையோடு
உட்கொள்வோம்.
=========
நோய் எதிர்ப்பு சக்தி தரும்
=========
கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு
பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம்.
வைட்டமின் 'சி' சத்து உடலை ஆராக்கியமாக
வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல்
நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.
=========
கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள்
சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய்
உதவுகின்றது. நாளமில்லா சுரப்பிகளின்
செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி
செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.
=========
புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய்
குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின்
'சி' சத்தும், லைகோபேனும் திசுக்களை
பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம்
வெகுவாய் குறைகின்றது.
=========
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு
கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை
அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை
நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.
=========
கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும்
சிறந்ததாகும்.
=========
இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால்
கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண
அறிவுறுத்தப்படுகின்றது. இது குழந்தையின்
நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.
=========
ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த
உற்பத்தியைக் கூட்டுகிறது.
=========
கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள 'மக்னீசியம்'
நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி
விடுவதால் மனச் சோர்வு குறையும்.
=========
கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும்
வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும்
வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு
செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி
இருக்கும்.
=========
இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும்
லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும
சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம்
தள்ளிப் போகின்றது.
=========
கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடலை
சுத்தமாய் வைக்கும்.
=========
எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே
நல்லது.
=========
காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு
கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும்.
வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களு
மே சிறந்ததுதான்.
=========
கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்:
1 கப் கொய்யாப்பழம் சுமார் - 165 கிராம் எடை
கொண்டது
=========
கலோரி சத்து 112
=========
உப்பு - 0 சதவீதம்
=========
மாவுச்சத்து - 8 சதவீதம்
=========
கொழுப்பு சத்து - 2 சதவீதம்
=========
நார்சத்து - 36 சதவீதம்
=========
புரதம் 4 கிராம்
=========
வைட்டமின் ஏ - 21 சதவீதம்
=========
வைட்டமின் சி - 628 சதவீதம்
=========
கால்சியம் - 3 சதவீதம்
=========
இரும்பு சத்து - 2 சதவீதம்
=========
இனி வேண்டாமே மேற்கத்திய மோகம்.💐 இணையப் பகிர்வு

Tuesday, August 9, 2016

வழிபாட்டு முறைகளில் உடல்நலம்.

அர்த்தமுள்ள  வழிபாட்டு முறைகள் 🕌  அனைத்து மத வழிபாடுகளுமே மிக உன்னதமானவை🕌   அவற்றில் பல அற்புதமான வழிமுறைகள் உள்ளன 🌅அவை  மனித சமூகத்தை  உயர்வடைய செய்தன செய்துகொண்டுள்ளன உலக இறுதிவரை செய்துகொண்டே வரும்🎆  ஒரு வழிபாட்டு முறை எந்த நாட்டில் எந்த  பகுதியில் தோற்று விக்கப்பட்டதோ அந்த நாட்டு மக்களுக்கு அது மிகப்பெரிய பொக்கிசம்🌠  மற்ற நாட்டினருக்கும் அவர்களின் தேவைக்கேற்ப பொருளை தரும் அமுதசுரபி🎡  தீண்டாமை, தீவிரவாதம், தன்முனைப்பு போன்றவை உலக வழிபாட்டு முறையில் உள்ள பெரும் பின்னடைவுகள்🗽   அதைப்பற்றி சிந்திந்து தர்க்கம் செய்யாமல்  உள்ளார்ந்த நன்மைகளை  தரும்  அதிசய பழக்கங்களை அனைவரும் பின்பற்றுவோமே☯   ^அதிகாலை எழுதல்^  அதிகாலையில் எழுவதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் தூயகாற்றும் கிடைக்கிறது✅ ^ பஜனை பாடுதல் ^ கைகளை தட்டிக்கொண்டே பஜனை பாடுவதால் இரத்த ஓட்டம் விரைவு பெறுகிறது, இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்குகிறது. கொழுப்பு மற்றும் சிறிய கட்டிகள் கரைவதோடு இதயம் பலம் பெறுகிறது✅ ^கைகளை இணைத்து வணங்குதல்^ இதனால் மன ஒருமை அதிகரிப்பதோடு தானென்ற அகந்தை அழிகிறது மனிதன் தன் கைகளை இணைப்பதன் மூலம் தன்மூலமான பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்புகொள்கிறான்💚 ^தோப்புக்காரணம் போடுவது^ வலது இடது மூளையின் ஆற்றலை சமப்படுத்துகிறது இதன் மூலம் மனிதனின் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்வும் வலிமையும் கிடைக்கிறது✳ ^அங்கப்பிரதட்சனை செய்தல்^ இதன்மூலம் உள்ளுறுப்புகளின் இயங்குதிறன் மேம்படுவதோடு இன்சுலின் சுரப்பு மேம்படுகிறது❇ ^ ஒரே இடத்தை கவனித்தல்^  மனஅமைதி கிடைப்பதுடன் தியான உணர்வும் ஏற்படுகிறது💠  ^முழங்கால் போடுவது^  முதுகுத்தண்டு,  ஜீரண உறுப்புகள், கர்பபை பலம்பெறுவதோடு அடிபணியும் தன்மையும் மன உறுதியும் ஏற்படுகிறது♻ ^சுன்னத் செய்து கொள்ளுதல்^  இதனால் ஜனன உறுப்புகளில் ஏற்படும் தொற்றுகள் தடுக்கப்படுகிறது. அதோடு சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்வதால்  ஜனன உறுப்புகள் பலம் பெறுகிறது💹  ^தொழுகை^    சிறந்த  உடல் பலம், மனநலம் மற்றும் இறையுணர்வை ஒருங்கே வழங்குகிறது🌀 ^விரதம் இருப்பது^ இதனால் ஜீரண உறுப்புகள் பலம் பெறுவதோடு மன உறுதி ஏற்படுகிறது. நாள்ப்பட்ட வியாதிகள் குணமாகிறது🚼  ^பூஜை செய்தல்^ பஞ்ச சக்திகளை  உணரும் தன்மையையும் மன அமைதியையும் தருகிறது🕉  ^பகிர்ந்து உண்ணுதல்^  இதனால் ஒருவருக் கொருவர்  பிணைப்பும் ஒற்றுமையும் ஏற்ப்படுகிறது🚻 ^தானம் ,தர்மம் கொடுத்தல்^  இதனால் மட்டற்ற மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைப்பதோடு பிற உயிர்களின்  இருப்பை அங்கீகரிக்கின்ற பரந்த மனதும் ஏற்படுகிறது✴  ^ஆலயங்களை வலம் வருதல்^ இதனால் உடலை நோக்கி வரும் புவியீர்ப்பு விசை உடலில் வேகமாக ஊடுருவி பக்கவாதம், இரத்த அழுத்தம், கர்பப்பைக் கோளாறு உடல் பருமன், இரத்தம் உரைதல் போன்ற நோய்கள் ஏற்படாமல் உடலை காக்கிறது💮 ☸☪🛐✝🕉☯ 🔯🔔 இதெல்லாம் வழிபாட்டு முறைகளில் உள்ள விஞ்ஞான உண்மைகள்🌻 இன்னும் காது குத்துதல் மூக்கு குத்தல் தீமிதித்தல்  சுரிய நமஸ்காரம் செய்தல், தீபம் ,மெழுகுவர்த்தி ஏற்றல்  பாதயாத்திரை புனித யாத்திரை  செய்தல் போன்ற  ஒவ்வெரு வழிபாட்டு முறையிலும் ஆயிரம் கோடி நன்மைகள் ஒளிந்துள்ளது 💐 அவற்றை கண்டறிந்து என்றும் முன்னோர் வழியில் மகிழ்வாய் வாழ்வோம்🎋🎋🎋  amyogatrust.blogspot.in AM HERBALS mobile:9629368389 💐 நலம் பெருகட்டும் 🌼🌹

கம்பஞ் சோறு

*கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி :-*

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும்
விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

*கேழ்வரகு - கம்பு கூழ் : ஒரு பார்வை*

*```தேவையானவை :```*

கேழ்வரகு மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

*```செய்முறை :```*

* முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து,புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து,பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும்.உப்பு போட வேண்டாம்.

* காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

* அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

* தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் அடியில் பிடிக்காமலும்,கட்டி விழாமலும் கிண்டிவிடவும்.

* சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும்.

* அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றி தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிளர வேண்டும்.

* 5 நிமிடம் கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமிடம் வைக்கவும்.

* இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

* விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம்.🌺 இணையப்பகிர்வு