Monday, October 10, 2016

கண் கண்ணாடி

[10/10, 15:59] Am Yoga: கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் யங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.
கண் பார்வை குறைபாடு நீங்க

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.
முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்

இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் ....
வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.
1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

🍅இணையப்பகிர்வு
[10/10, 20:53] Am Yoga: ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 15

ம.செந்தமிழன், ஓவியங்கள்: ஹாசிப்கான், எஸ்.ஏ.வி.இளையராஜா

எல்லாவற்றையும் பணத்துக்காகச் செய்யத் தொடங்கினால், பணம் இருக்கும் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எல்லாவற்றையும் பெருமைக்காகச் செய்யத் தொடங்கினால், பெருமை நிலைக்கும் மனித வாழ்வு நிலைக்காது. சின்னஞ்சிறிய செயலையும் அன்புவழிப்பட்டு செய்தால், உடல் அழிந்த பிறகும் பெயர் நிலைக்கும், சந்ததி தழைக்கும்.

நமது பல்லாயிரம் ஆண்டுகால மரபில், வேளாண்மையை முழுத் தொழிலாக நம் முன்னோர் செய்ததே இல்லை. உணவு படைக்கும் துறை என்பதால், வேளாண்மையில் வணிக நோக்கம் மிகக் குறைவாகவும், பொது நோக்கம் கூடுதலாகவும் இருந்தன. இதனால், இயற்கை விதிகளுக்குப் புறம்பான தொழில்நுட்பங்களை நம் முன்னோர் கையாளவில்லை.

நமக்கு ரசவாதம் தெரிந்திருந்தது. நம் சித்தர்கள் தாவரங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தவர்கள்தான். ஒவ்வோர் உயிரினத்திலும் உள்ளீடாக இருக்கக்கூடிய உயிர்வேதி மூலக்கூறுகளைப் பற்றிய பாடம் நமக்கு நிச்சயமாகப் புதியது அல்ல. சுண்ணாம்புக் கீரை என்ற தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) கூடுதலாக இருப்பது கிராமத்து மனிதர்களுக்கு நன்கு தெரியும். எந்த ஆய்வகத்திலும் அமிலங்களை ஊற்றி, நுண்ணோக்கிகளைக் குவித்து, இந்தத் தாவரத்தில் சுண்ணாம்புச் சத்து உள்ளது எனக் கண்டுபிடிக்கப்படவில்லை. நமக்கே உரித்தான மரபுவழிபட்ட மெய்யறிவின் விளைவாகக் கிடைத்த கொடைகள் இவை.

பிரண்டை மற்றும் குப்பைமேனித் தாவரங்களைப் பற்றி, நவீன மருத்துவத் துறை இப்போது பக்கம் பக்கமாக எழுதுகிறது. இவற்றின் உள்ளீடாக உள்ள உலோகங்களையும் வேதிப்பொருட்களையும் பாடல்களில் எழுதிவைத்து, சீடர்களுக்குக் கற்றுத்தந்தவர்கள் நம் முன்னோர்.

தாவரங்களின் உள்ளிருக்கும் வேதிப் பொருட்களையும் உலோகங்களையும் புரிந்துகொண்டு அவற்றின் இயற்கையான குணங்களைச் சிதைத்து விளைச்சலை உயர்த்தும் பொருளாதார நடவடிக்கையில் நம் முன்னோர் இறங்கவில்லை. ஒருவர் கொலை செய்யாமல் இருப்பதால், அவருக்கு வீரம் இல்லை என்று பொருள் அல்ல. நமது மரபில் வேளாண் தொழில்நுட்பங்களில் வேதிப்பொருட்களை ஈடுபடுத்தவில்லை என்பதால், நம் முன்னோர் அறியாமையில் வாழ்ந்தனர் என்று பொருள் அல்ல.

பன்னாட்டுக் குளிர்பானங்களின் நச்சுப் பிடியில் மக்கள் சிக்கத் தொடங்கியபோது, இயற்கை ஆர்வலர்கள் இளநீரை முன்வைத்தனர். இளநீரின் சத்துக்கள் மற்றும் சிறப்புகள் குறித்த பரப்புரைகள் வேகமாக அரங்கேறின. மாநகரங்களில் இளநீர் பருகும் வழக்கம் தேவைக்கு அதிகமாக உயர்ந்தது. நவீனர்களின் சொற்களில் கூறவேண்டுமானால், இளநீர் உற்பத்தியில் பணம் கொழிக்கத் தொடங்கியது. இளநீர் ஏற்றிய வாகனங்கள், நகரங்களிலும் மாநகரங்களிலும் ஆயிரக்கணக்கில் வலம் வந்தன. நம் நாட்டில் இவ்வளவு இளநீர் இயற்கையான முறையில் விளைய வாய்ப்பு இல்லை. இதற்காக உயர் விளைச்சல் தென்னை நாற்றுகள் களம் இறக்கப்பட்டன. இந்த நாற்றுகளால்,  பூச்சிகளை, நோய்களைத் தாக்குப்பிடித்து வளர முடியாமல்போனது. மோசமான நோய்கள், வழக்கத்தைவிட அதிகமான வண்டுகள், பூச்சிகளின் தாக்குதல் போன்றவற்றால் தென்னந்தோப்புகள் நலிவடைந்தன.

பணம் கொட்டும் தொழிலாக ஒருபக்கம் இளநீர் மாறிவிட்டது. மறுபக்கம், தென்னை மரங்கள் நோயுற்று வாடின. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, நம் வேளாண் சமூகம் கையாளும் இரக்கமற்ற செயல்களில் மிகச் சிலவற்றை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.

மோனோகுரோடோபாஸ் (monocrotophos) எனும் நஞ்சு, அமெரிக்காவிலும் வேறு பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. காரணங்களை விளக்கினால், குலைநடுக்கம் வரும். அதன் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறேன். ‘நம் உடலில் நரம்பு மண்டலத்தைச் சிறப்பாக இயக்கும் சுரப்பிகளில் ஒன்று கோலினெஸ்டெரேஸ் (Cholinesterase) என்பது. மோனோ குரோடோபாஸ் நஞ்சுகள் இந்த கோலினெஸ்டெரஸ் சுரப்புகளை முடக்கிவிடுகின்றன. இதன் விளைவாக, நரம்பு மண்டலம் பதற்றமடைகிறது. திடீரென உடல் ஆட்டம்கொள்ளுதல், அதிவேக மாக மூச்சுவாங்குதல், துடித்தல், வெட்டி இழுத்தல், வலிப்பு வந்து துடித்தல், படபடப்பு, கட்டுப்படுத்த இயலாத நடுக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றி துடித்துச் செத்துவிழுதல் நிகழும் வாய்ப்பை மோனோகுரோடோபாஸ் உருவாக்குகிறது. `தாவரங்களில் உள்ள பூச்சிகளும் வண்டுகளும் இவ்வாறு செத்துவிழ வேண்டும்’ என்பது நவீன மேதைகளின் கண்டுபிடிப்பு.

`சின்னஞ்சிறு உயிரினங்களை இவ்வளவு குரூரமாகக் கொலைசெய்வது பாவம் அல்லவா?’ என்ற அறச்சிந்தனை நம்மிடம் இருந்திருந்தால், இந்த நஞ்சு தொடக்கத்திலேயே விரட்டியடிக்கப்பட்டிருக்கும். `உற்பத்தி உயர வேண்டும். பணம் கொழிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு செயல்பட்டதன் விளைவாக, இப்போது தென்னைமரங்களின் உயிர்நாடியாக மோனோகுரோடோபாஸ் கலந்த நஞ்சுகள் மாறிவிட்டன.

தொடக்கத்தில் தென்னைக் குருத்துகள் மீது இந்த நஞ்சைத் தெளித்தார்கள். இப்போது, ஒரு நெகிழிப் பையில் நஞ்சை ஊற்றி நீர் கலந்து, தென்னைமரத்தின் வேர்களைச் சீவிவிட்டு அவற்றில் கட்டிவிடுகிறார்கள். நெகிழிப் பையில் உள்ள நஞ்சு, ஒரு மணி நேரத்தில் முழுதாக தென்னை வேர்களால் உறிஞ்சப் படுகிறது. இந்தச் செயல்முறையின் வழியாக, மரம் முழுவதும் நஞ்சாக மாற்றப்படுகிறது.

வேர்கள், நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இளநீருக்கு வழங்குகின்றன. அந்த இளநீர் நமக்கு அருமருந்தாக இருந்தது. வீடுகளில் கறிவேப்பிலைச் செடி வளர்ப்போர், அந்தச் செடிகளின் வேரில் தயிர் ஊற்றுவது நமது கிராமங்களில் இருந்த வழக்கம். தயிரை வேர்கள் உறிஞ்சினால், கறிவேப் பிலையின் மணம் கூடுதலாக இருக்கும். வேர்களுக்கும் நமக்குமான உறவை நம் சமூகம் புரிந்துகொண்ட விதம் இதுதான். அது நவீனச் சிந்தனை இல்லாத `மூடர்களின்’ காலம். இது பகுத்தறிவும் நவீனக் கல்வியறிவும் செழித்து வளர்ந்துள்ள காலம். அதனால், வேரில் நஞ்சு ஊற்றுகிறார்கள்.

வேர்களில் மோனோகுரோ டோபாஸ் நஞ்சைக் கட்டிய பிறகு, `இரு மாதங்களுக்கு அந்தத் தென்னையில் இருந்து காய், இளநீர் எதையும் பறிக்கக் கூடாது’ என்ற கட்டுப்பாடு வேளாண் துறையினரால் விதிக்கப்பட்டுள்ளது. வேறு பல நஞ்சுகளும் தென்னை வேரிலும் தண்டிலும் செலுத்தப்படுகின்றன. அவற்றைச் செலுத்தினால், ஆறு மாதங்களுக்கு காய் பறிக்கக் கூடாது. கூர்மையான ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு, `வலிக்காமல் குத்த வேண்டும், ரத்தம் சிந்தாமல் அறுக்க வேண்டும்’ என்பது போன்ற உபதேசங்களை அந்த ஆயுதங்களின் மேல் அச்சிட்டு விற்பனைசெய்வது நவீன அறிவாளிகளின் நேர்மை.

தென்னையில் நிகழும் `பசுமைப் புரட்சி’ மோனோ குரோடாபாஸுடன் முடியவில்லை. சல்ஃபோனமைடு (Sulfonamide) எனும் வேதி நஞ்சுக்கான மாத்திரைகளை தென்னைமரத்தில் பதிப்பது, வேளாண் துறையில் அரங்கேறும் மற்றொரு புரட்சிகரத் தொழில்நுட்ப நடவடிக்கை. தென்னையின் குருத்துகளில், பாளைகளில் இருக்கும் வண்டுகளை அழிப்பதற்காக சல்ஃபோனமைடு நஞ்சு வில்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். தென்னைமரத்தின் தண்டுப் பகுதியில் ஒரு துளையிட்டு அதன் உள்ளே மாத்திரைகளைப் பதித்து, அந்தத் துளையை சிமென்டால் அடித்துப் பூசிவிடுவது இந்தத் ‘தொழில்’நுட்பம். இவ்வாறு செய்த சில நிமிடங்களில், தென்னைமரத்தின் உச்சியில் இருந்து வண்டுகள் செத்து விழும் என்று பரவலாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு வீரியமிக்கது சல்ஃபோனமைடு நஞ்சு.
சல்ஃபோனமைடு மாத்திரைகள் பதிக்கப்பட்ட தென்னைமரங்கள் செத்து, இற்று விழத் தொடங்கும் நிலை இப்போது உருவாகிவிட்டது. புரிகிறதா உங்களுக்கு? தன் மீது திணிக்கப்பட்ட நஞ்சுகளின் அளவைத் தாள இயலாமல், அவ்வளவு கம்பீரமான தென்னைகளே செத்துக்கொண்டுள்ளன.

கொப்பரைத் தேங்காய்க் கிடங்குகளிலும் பசுமைப் புரட்சியின் எண்ணற்ற செயல்பாடுகள் நிகழ்கின்றன. அவற்றில் முக்கியமான தொழில்நுட்பம் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கொப்பரைத் தேங்காய் என்றால், எண்ணெய்த் தன்மை யுடன் உள்ள முற்றிய, காய்ந்த தேங்காய். கிடங்குகளில், கொப்பரைத் தேங்காய்கள் குவியல் குவியலாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும். நாளடைவில் ஈரப்பதம் உருவாகி, தேங்காய் மீது கருமை படியத் தொடங்கும். அதாவது, தேங்காய்கள் மீது கறுப்பு வண்ணத்தில் பூஞ்சைகள் வளரும். இந்த நிலையில், தேங்காய்களை வெயிலில் காயவைத்தால், பூஞ்சைகள் கட்டுப்பட்டுவிடும். இந்த நவீனப் புரட்சிக் காலத்தில் வெயிலில் உலர்த்துவது, பழைமையான, முட்டாள்தனமான அல்லது நடைமுறைக்கு ஒவ்வாத தொழில்நுட்பம் அல்லவா! அதனால், கந்தகம் அடங்கிய வேதி நஞ்சுகளை (sulphar) கொப்பரைக் கிடங்குகளில் பயன்படுத்துகிறார்கள்.

பெரிய வட்டமான இரும்புச்சட்டியில் நெருப்புத் துண்டுகளை நிரப்பி, அதில் கந்தக மாத்திரைகளைப் போட்டு, சட்டியை சல்லடை போன்ற இரும்பு மூடியால் மூடினால், மிக அதிக அளவில் புகை வரும். கொப்பரைத் தேங்காய்க் குவியலை ஒரு தார்ப்பாயால் மூடிவைத்து, அதன் உள்ளே கந்தகப் புகைகொண்ட சட்டியை வைத்துவிடுகிறார்கள். தீயுடன் சேர்ந்த கந்தகப் புகை மிக வீரியமான உயிர்க்கொல்லி. இவ்வாறான கந்தகப் புகையில் மூட்டம் போடப்பட்ட தேங்காய்கள் கருமை நிறம் நீங்கி, பளிச்சென்ற வெண்மை நிறத்தில் இருக்கும்.

இந்தக் கால பொதுச் சமூகத்துக்கு, வெண்மை நிறம் மிகவும் பிடித்தமானது அல்லவா? சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதுதானே, நவீன அறிவியல் துறையின் ஒரே ஒரு குறிக்கோள்! கந்தகத் தேங்காய்களில் இருந்து எண்ணெய் பிழிந்த பின்னர், அந்தத் தேங்காய் எண்ணெயும் வெண்மை நிறத்தில் உள்ளது. உண்மையான / இயற்கையான தேங்காய் எண்ணெய், மங்கலான பழுப்பு வண்ணத்தில்தான் இருக்கும்.

`தென்னைமரத்தின் உச்சியில் ஏறிய குரங்குகள், தேங்காய்களைப் பறித்து இளநீர் பருகிவிட்டு, அங்கு இருந்து தாவி அருகே இருந்த பாக்கு மரங்களில் இறங்கின. பாக்குக் கொட்டைகளை மென்றுவிட்டு, கீழே இருந்த பலாமரத்தில் குதித்தன. பலாப்பழங்களைச் சிதைத்து உண்ட அந்தக் குரங்குகள், அருகே இருந்த வாழைமரங்கள் மீது இறங்கின. செழித்துப் பழுத்திருந்த வாழைப்பழங்களைத் தின்றுவிட்டு, அருகே இருந்த குளத்தில் குதித்து நீந்திக் கரையேறின’ என்பது நமது சங்கப் பாடல்களில் உள்ள அந்தக் காலத்துத் தோட்டங்களின் காட்சி. கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகிய தொகுப்புகளில், இவ்வாறான அடுக்குமுறைத் தோட்டங்களின் விவரணைகள் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன.

தென்னையின் வேரில் நெகிழிப் பையுடன் நச்சுநீர், தண்டுப் பகுதியில் சிமென்ட் பூச்சுடன் நச்சு மாத்திரைகள், பாளைகளில் நச்சுக் குருணைகள், தென்னையின் கீழே வெட்டப் பட்டுள்ள குழிகளில் பிராய்லர் கோழிப் பண்ணைக் கழிவுகள். இதுதான் இப்போதைய தோட்டங்களில் காட்சிப் பதிவு. இவ்வளவுக்கும் பிறகு வந்து சேரும் இளநீரையும், தேங்காய்களையும், எண்ணெயையும்தான் இந்தச் சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்கள் உணவாக உட்கொள்கின்றனர்.

தீயுடன் இணையும் கந்தகம் மற்றும் மோனோகுரோடாபாஸ், சல்ஃபோனமைடு  நஞ்சுகள் எல்லாம், தென்னைப் பொருட்கள் வழியாக இந்தச் சமூகத்தில் அன்றாடம் பரவிக்கொண்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க எந்த ஏற்பாடும் இல்லை; கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை; தடுக்கும் சிந்தனையோ துளிகூட இல்லை.

உண்மை என்னவென்றால், இவற்றை இனி கட்டுப்படுத்தவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இயலாது. வேதிப்பொருட்களைத் தடைசெய்தால், இப்போதைய விவசாயிகளில் பெரும்பாலானோர் விவசாயத்தில் இருந்தே விலகிச் செல்வார்களே தவிர, உடனடியாக மரபுமுறைக்குத் திரும்ப மாட்டார்கள். ஏனெனில், கடந்த 60 ஆண்டுகால பசுமைப் புரட்சியின் விளைவாக, அவர்களது மனங்களும் நிலங்களும் பக்குவம் இழந்துவிட்டன.

தென்னைச் செடிகளை, நம் மரபு `தென்னம் பிள்ளை’ என அழைத்தது. பணத்துக்காகவும் வேறு பல போலித்தனங்களுக்காகவும் `பிள்ளைகளை’ப் பலியிடும் காலம்தானே இது!

 🍏இணையப்பகிர்வு

No comments:

Post a Comment