Wednesday, November 30, 2016

மண்ணில் நடந்தால் மரணமில்லை*

தினமும் காலையில் 15 முதல்  30 நிமிடங்கள் உங்கள் வீட்டுத் தோட்டப்பகுதியில் உள்ள மண்தரையிலோ அல்லது  ஆத்தோரம் உள்ள மண்சாலையிலேயோ நடைப்பயிற்சி, தோப்புக்காரணம், நமது உடல் தளர்வுப் பயிற்சி,பிரபஞ்சா பிராணாயம் நின்ற நிலை எளிய யோகாசனப் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால் குதிகால், கை எரிச்சல், உடல்சூடு,கால்வலி,வாய்வுத் தொல்லை, அதிக கொழுப்பு, சிறியவர்களுக்கு  வரும் விரைவீக்கம்  போன்றவை எந்த மருந்தும் இல்லாமல் குணமாகும்.!
சென்ற மாதம் வாய்வுத்தொல்லை முற்றிய நிலையில் உள்ள ஒருவருக்கு இந்த பயிற்சி முறைகளை கற்றுக்கொடுத்து அனுப்பினேன். ஒரே வாரத்தில் வாய்வுத்தொல்லை முற்றிலும் அகன்று முழு குணமடைந்தார்.
அதேபோன்று சிலவருடங்களுக்கு முன் எனது மகன் சைக்கிளில் அடிப்பட்டு விதை வீங்கிய நிலையில் இருந்தபோது இதுபோன்றே மண்தரையில் எளிய யோகாசனம் செய்ய வைத்தே குணப்படுத்தினேன். அதோடு களச்சிக்காயை உரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து வெளிப்பூச்சாக பூசிவந்ததோடு நாவப்பட்டை சுக்கு கசாயமும் வைத்து குடிக்கக் கொடுத்து வந்தேன் மூன்றே நாளில் வீக்கம் முற்றிலும் குறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டன.!
<முன்னதாக இதற்கு ஆங்கில மருத்துவர் ஒருவாரம் வரை ஊசியைப்போட்டு பார்த்துவிட்டு ஒரிரி வாரத்தில் அறுவை சிகிட்சை செய்வது நலம் என்று கூறியிருந்தார்.!>
சென்ற மாதம் எனது பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் யாரோ உள்ளிருந்து தீயை கொளுத்துவது போல் சூடும் எரிச்சலுமாக  இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் அப்படியே விட்டுவிட்டேன். பிறகு எங்கள் வீட்டுத்தோட்டத்தில் நின்று குதிகால் பயிற்சி,தோப்புக்காரணம், ஹூ க்ரியா போன்றப் பயிற்சிகளை செய்தேன். ஆச்சரியப்படும்படியாக பயிற்சி செய்த முதல்நாளே 90% பாத எரிச்சலும் சூடும் குறைந்துவிட்டது.! பிறகு ஓரிரிநாளில் முற்றிலும் குணமாகிவிட்டது.! யோகா ஆசிரியரான நீங்கள் தினமும்  இந்தப் பயிற்சியை செய்வதில்லையா என்று கேட்டால்  செய்கிறேன்.  ஆனால், வீட்டில்  மண்தரையில் பயிற்சி செய்ய நேரம் கிடைக்காது. எங்கும் சிமெண்ட்.,மொசேக்.,கிரணைட் தளங்கள் தானே இருக்கிறது. அதில் யோகா விரிப்பை விரித்து பயிற்சி செய்கிறோம். மண்ணில் பயிலும் போதே யோகா மற்றும் உடல்பயிற்சியின் உண்மை நோக்கம் முழுவதும் நிறைவேறுகிறது என்பதே நம் அனுபவம்.! அதோடு மண் என்பது  பஞ்சபூதங்களையும் தன்னுள் ஈர்க்கும் ஆற்றல் பெற்றது அதனால் மண் நமது உடலில் உள்ள தேவையில்லாத சூடு,வாய்வு,கொழுப்பு போன்றவற்றை நமது பாதங்களின் மூலம் உறிந்து கொண்டு நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை குணப்படுத்துகிறது. என்று; உணர்கிறேன்.!
மேற்கூரிய பிணியால் பாதிக்கப்பட்டவர் யாராவது இருந்தால் நமது இந்த முறையை இரண்டு வார காலங்கள் பயிற்சி செய்துப் பார்த்துவிட்டு தங்கள் அனுபவங்களையும் கூறுங்களேன்.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*

🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

*AUM HERBALS*
Mibile & whatsapp
*9629368389*
நலம் பெருகட்டும் …

Tuesday, November 29, 2016

முக்கியக் குறிப்புகள் 29/11/16

[11/27, 15:08] Am Yoga: *இயற்கை வழியில் தாய்ப்பால் பிரச்சனையை சீராக்குங்கள்*

பாதாம் பருப்பு 5 அல்லது  ஒருத்தேக்கரண்டி பாதாம் பிசினை   இரவில் ஊறவைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். தினமும் ஒரு கப் தேங்காய்ப்பாலில் தேவையான அளவு கருப்பட்டி சேர்த்து  குடித்துவந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.!  முருங்கைகீரை,பேரிச்சம் பழம், வாழைப்பழம்,பப்பாளிப்பழம்,கேரட் பீட்ரூட், ஆப்பிள்,மக்காச்சோளம் கைக்குத்தல் அரிசி சிறுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்வாங்காசனம் 2 முறை 15 விநாடிகள் விதம், மட்ச்யாசனம் ஒரு முறை 30 விநாடிகள் செய்துவந்தால் நல்லது.!
அதிகமாக தாய்ப்பால் கட்டிக்கொண்டால் 10 பிச்சிப்பூவை எடுத்து மார்பில் படுமாறு இரண்டு மூன்று நாட்கள் வைத்து வந்தால்
அதிக பால்சுரப்பு நின்றுவிடும்.!
தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் காலையிலும் இரவிலும் பால் கொடுப்பதோடு
இடைநேரத்தில் குழந்தைக்கு கொடுக்க கொஞ்சம் பாலை பாத்திரத்தில் எடுத்துவைத்துவிட்டு செல்வது நல்லது.
பிள்ளைக்கு பால் கொடுத்து முடித்து கொஞ்ச நேரம் சென்றதும்  தோளில் படுக்கவைத்து சிறிது நேரம் மெதுவாக முதுகில் தட்டிக்கொடுக்க குழந்தைக்கு வயிற்று உப்புசம் ஏற்படாமல் இருக்கும்.!
பிறந்து 40 நாள் ஆன குழந்தைகளுக்கு ஒரு சிறுதுண்டு கோரோசனை மாத்திரையை பொடித்து தேனில் குழைத்து தினமும் ஒருவேளை கொடுத்துவர சளி, வயிற்றுப்பெருமல், உடல்வலி மாறுவதோடு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.!

🌿 *இயற்கை, யோகா,*
*மூலிகை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*

Mobile & Whatsapp
*9629368389*

வாழ்க வளமுடன்.!
*நலம் பெருகட்டும் …*
[11/27, 16:48] Am Yoga: *மூலிகைகளும் பலன்களும்*

*சோற்றுக்கற்றாழை:*
     தோலின் பளபளப்புத் தன்மையை தக்க வைக்கும்.
      இறந்த செல்களை உயிர்ப்பிக்கும்.
      உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும், ஊட்டத்தை அளிக்கும்.
       முடி வளர்ச்சியை மேம்படுத்தி, உதிர்வதை தடுக்கும்..

*நாயுருவி:*
       கண் பார்வையை மேம்படுத்தும்..
       மனநோயை குணப்படுத்தும்..
       முகப்பொலிவைத் தரும்.

*கீழாநெல்லி:*
       மஞ்சள் காமாளையை குணப்படுத்தும்.
      கல்லீரல்
 செயல்பாடுகளை மேம்படுத்தும்.
 
*எட்டி இலை:*
      வேனல் கட்டியைக் கரைக்கும்.

*நொச்சி:*
        கை,கால்,உடல் வீக்கம் குறைக்கும்.
        வலி நிவாரணியாக செயல்படுகிறது.

*கையாந்தகரை:*
        உடல் ஊத்தத்தை போக்கும்.
        உடலில் தேங்கியுள்ள துர்நீரை வெளியாக்கும்.

*குப்பைமேனி:*
        கிருமி நாசினியாக செயல்படும்.
        சொறி,சிரங்கினை போக்கும்.

*அசுவகந்தி:*
     உடலினைத் தேற்றும்.
     நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
    பெண்களுக்கு பால் உற்பத்தியை அதிகப்படுத்தும்.

*நீர்முள்ளி:*
          நீர்க்கடுப்பை போக்கும்..
          சிறுநீர் பிரச்சினைகளை போக்கும்.

*ஆவாரை:*
         அரிப்பை போக்கும்.
        உடல் சூட்டை தணிக்கும்.!

 🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🍀100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு💐 *AUM HERBALS*
Mobile & Whatsapp
*9629368389*
[11/28, 11:29] Am Yoga: *🌿காஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு!*🌿

குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.

*துளசி கஷாயம்*

சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.

*பனங்கற்கண்டு பால்*

ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து, அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

*பொட்டுக்கடலை மிக்ஸ்*

புழுங்கல் அரிசி, பொட்டுக்கடலை, பனங்கற்கண்டு தலா இரண்டு ஸ்பூன்கள், சிறிது கல் உப்பு, 5 மிளகு அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது வாயில் எடுத்துப் போட்டுக்கொள்ளவும். இது வறட்டு இருமலுக்கு நல்ல நிவாரணம் தரும்.

மேற்கூறிய கை வைத்தியங்களைச் செய்து பாருங்கள்... சளி, இருமல் கட்டுப்படுவதுடன், வெளியேறிவிடும்!

*இணையப்பகிர்வு*
[11/28, 11:33] Am Yoga: 🎃🎃 *" மனித உடல் பற்றிய சுவாரஸ்யமாll " தகவல்கள் "*  🎃🎃🎃

🔰 *" மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்* .
🔰 *"இதற்கு காரணம் மனிதன் உட்காரும் போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும் .*
🔰 *" நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும் .*
🔰 *" நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும் .*
🔰 *" ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது .*
🔰 *"மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் .*
🔰 *"மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும் .*
🔰 *" மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.*
🔰 *" நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம் .*
🔰 *" கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் .*
🔰 *" மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன .*
🔰 *"காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும் .*
🔰 *" கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும் .*
🔰 *" மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும் .*
🔰 *" நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு .*
🔰 _*" மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன .*_
🔰 _*" நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது .*_
🔰 _*" நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும் .*_
🔰 *" மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம் ,*
🔰கண்கள் - *31 நிமிடங்கள் ,*
🔰மூளை. - *10 நிமிடங்கள் ,*
🔰கால்கள் - *4 மணிநேரம் ,*
🔰தசைகள் - *5 நாட்கள்*
🔰இதயம். - *சில நிமிடங்கள் , , ✔✔✔*

*இணையப்பகிர்வு*
[11/28, 12:30] Am Yoga: Removing Gallbladder stones - பித்தப்பை கல் நீங்க

கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது. இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோளிலிரிந்து உள்ளங்கை வரை வலி பரவும். இதன் அறிகுறி தென்பட்டால் எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது. அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.!

*இணையப்பகிர்வு*
[11/28, 13:03] Am Yoga: நான் பரிசோதனை செய்து வெற்றி கண்ட முறை

குழந்தைகளுக்கு சளியினால் வரும் இருமலை நிறுத்த

கற்பூரவள்ளி இலை - 5 எடுத்துக் கொண்டு அதனுடன் 7 மிளகை உடைத்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டையும் கலந்து நன்றாக கொதிக்க வைத்து கால் பாகமாக வற்றியவுடன் ஆற வைத்து குழந்தைகளுக்கு  கொடுத்தால் 3 நாளில் இருமல் அகன்று விடும்.!

*இணையப்பகிர்வு*
[11/29, 13:00] Am Yoga: *சொரியாஸிஸ் இயற்கை தீர்வு*

வெப்பாலை மூலிகை இந்த மரத்தை அனைவரும்பால மரம் என கூறுவார்கள்
காளாஞ்சப்படை எனும் சொரியாசிஸ் பிரச்சனைக்கு சிரந்த தைலம் மாக தேய்த்துவந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் இதைதான் அனைத்து சித்த வைத்தியர்களும் இது எமது இரகசியம் என்றுகூறுவார்கள் இந்த தைலம் சொய்யும் முறைகள்
இந்த வெப்பாலை இலையை சேகரித்து நீரில் சுத்தம் செய்து நீர் இலையில் இல்லாதவாரு சுத்தம் செய்து தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் வெப்பாலை இலையை போட்டு ஒருவாரம் வெய்யிலில் வைத்துவிடவேண்டும்எண்ணெய்யின் நிரம் திக் ரோஸ்நிரம் வந்துவிடும்
அந்த எண்ணெய் யை திணமும் தேய்த்து வந்தால் பூரண குணம்.!

*இணையப்பகிர்வு*

Sunday, November 27, 2016

கறிவேப்பிலை

 பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம்.

*🍃 ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று பார்ப்போம்.*

🍃 கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

*♻ இதில் இருப்பவை :-*

வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி2,
வைட்டமின் சி,
கால்சியம்
மற்றும்
இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

🍃 கறிவேப்பிலை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெரும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் கீழே  பட்டியலிடப்பட்டுள்ளன.

*🍃 கொழுப்புக்கள் கரையும் :*

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

*🍃 இரத்த சோகை :*

இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

*🍃 சர்க்கரை நோய் :*

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

*🍃 இதய நோய் :*

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

*🍃 செரிமானம் :*

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍃 முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

*🍃 சளித் தேக்கம் :*

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

*🍃 கல்லீரல் பாதிப்பு :*

கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

*🍃 💞 மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.*

🍂 தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.!

*இணையப்பகிர்வு*
[11/27, 12:59] Am Yoga: 🌿 *இளநரையைப் போக்கும்*
*மூலிகை மருத்துவம்*

இளநரை என்பது பரம்பரையாக வரும், சத்துக்குறைபாட்டால் வரும். பொதுவாக நாற்பது வயதிற்கு முன்பே தலைமுடி  வெள்ளையாக தோன்றுவதே இளநரையாகும்.!
மேல்தோலைப்போலவே முடியும் கருப்பாக தோன்றுவதற்கு மெலனினே காரணம்.
மெலனின் என்ற திரவம் சூரிய ஒளியிலிருந்தே மனித உடலுக்கு கிடைக்கிறது. இந்திய வம்சவழி மற்றும்  ஆப்ரிக்கா வம்சவழியில் தோன்றியவர்களின் தலைமுடியே அதிகம் கறுப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு அவர்களின் தோலைப்போலவே  முடியும் வெளிர்நிறமாகவே தோன்றும். இதற்கு அந்த நாட்டில் உள்ள சிதேஷ்ண  நிலையே முக்கியக்காரணம். அடுத்து பரம்பரை ரீதியாகவும் ,
விட்டமின் பி 12 , துத்தநாகச் சத்துக் குறைபாடு, இரும்புச்சத்துக்  சத்துக்குறைபாடு  போன்ற காரணங்களும்  இளநரை தோன்றும்.
பரம்பரை ரீதியிலான இளநரையை சீராக்குவது மிக கடினம். சத்துக்குறைபாட்டால்  தோன்றும் இளநரையை
 விட்டமின்  பி 12, இரும்புச்சத்து,  கால்சியம், துத்தநாகச்சத்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால்
எளிதாக சீராகிவிடும்.  
அதோடு இரவு முழுவதும் தூங்குவது, முறையான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையோடு  இருந்தால் இளநரையை கட்டுப்படுத்தலாம்.
உணவில் பேரிச்சம்பழம்,வேர்க்கடலை, நெல்லிக்காய், கருவேப்பிலை,குதிரைவாலி, மக்காச்சோளம்,கைக்குத்தல் அரிசி அதோடு  இயற்கையான அசைவ உணவுகளையும் வாரத்திற்கு இரண்டு நாள் சேர்த்துக் கொண்டால் இளநரை போகும்.!   அசைவ உணவு சாப்பிடாதவர்கள் பால்,தயிர்,மோர்   போன்றவற்றை உணவோடு சோர்த்து உண்டுவந்தால்  இளநரை குணமாகும்.
தினமும் சூரிய நமஸ்காரம்
6 சுற்று மற்றும் இளம் வெயிலில்  பஸ்திமோத்தானாசனம், உஷ்ட்ராசனம், சர்வாங்காசனம், சிரசாசனம்,மட்ச்யாசனம், சாந்தியாசனம், நாடிசுத்தி, பிரபஞ்ச பிராணாயமம்  போன்ற யோகாப் பயிற்சிகளை அரை மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை செய்து வந்தால் விரைந்த பலன் கிடைக்கும்.!
தேங்காய் எண்ணைய்
விளக்கெண்ணையை
நல்லெண்ணைய்
சம அளவெடுத்து  சேர்த்து ஒரு லிட்டருக்கு 20 கிராம் கருவேப்பிலை, 20 கிராம் மருதாணி, 20 கிராம் நெல்லிவற்றல், 50 மில்லி கற்றாளைச்சாறு கலந்து காய்ச்சி நீரடங்கியதும் வடிகட்டி
கண்ணாடிப்பாட்டிலில் வைத்துக் கொண்டு அடிக்கடி தலையில் லேசாக தேய்த்துவருவதோடு வாரம் ஒருநாள் தலை மற்றும் உடல் முழுக்க தேய்த்து குளித்துவந்தால்  இளநரையை குறைப்பதோடு புதிதாக வராமலும் தடுக்கலாம்.!
இது போன்றே நமது தயாரிப்பான ஆரோக்கிய ஆயிலை
 தலையில்  தேய்த்து வெயிலில் நிற்பதோடு உள்ளும் அருந்திவர சத்துக்குறைபாட்டால் தோன்றிய இளநரை விரைவில் மாறும்.!
*சத்துக்குறைப்பாட்டைப் போக்க சத்துமாத்திரை, மற்றும் செயற்கை முறையிலான சத்துணவுகளை உட்கொள்ளுவது உடல் அரிப்பு,மலச்சிக்கல், கைகால் நடுக்கம் போன்ற பல்வேறு விதமான பக்கவிளைவுகளை தரும். என்பதால்; அதை முற்றிலும் தவிர்ப்பது நலம் பயக்கும்.!*

🌿இயற்கை மற்றும் யோகா மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

🌾100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு
*AUM HERBALS*

Mobile & whatsapp
*9629368389*

 வாழ்க வளமுடன்.! *நலம் பெருகட்டும் …*

Friday, November 25, 2016

மருத்துவக் குறிப்புகள் 24/11/2016

[11/21, 19:38] Am Yoga: 🍀🌹🍀🌹🍀

உடல் இளைக்க :-

உடல் இளைக்க கல்யாண முருங்கை இலைச்சாறு , சர்க்கரைச் சேர்த்து பாகுப்பதத்தில் காய்ச்சி வடிககட்டி, இதில் 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.!

*இணையப்பகிர்வு*
[11/21, 19:39] Am Yoga: 🍀🌹🍀🌹🍀

தோல் நோய் நீக்கும் எண்ணெய்
*************************************
நாமே தயாரிக்கும் முறை..

மருதாணி வேர் பட்டை 10  கிராம்.
வசம்பு.   ___________        10 கிராம்.
கற்பூரம் ____________        10 கிராம்.
மஞ்சள் ________________   10 கிராம்.

இவற்றை நன்கு பொடியாக்கி
வைத்ததை
100 மி்ல்லி ஆமணக்கு எண்ணெயில் இட்டு
நன்கு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில்
வைத்துக்கொண்டு தோல் பிரச்சினை
உள்ள இடங்களில் மேல் பூச்சாக தடவிவர தோல் நோய்கள் நீங்கும்.

விரைவில் பலன் தெரிய ..
பேதிமருந்தும்  எடுத்துக்கொள்ளவும்.!

*இணையப்பகிர்வு*
[11/21, 19:43] Am Yoga: 🍀🌹🍀🌹🍀

அதிக இரத்தப்போக்கு குறைய. :-

அதிக இரத்தப்போக்கு குறைய வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.!

*இணையப்பகிர்வு*
[11/23, 12:52] Am Yoga: *கொத்தமல்லியின் குணம்*

கொத்தமல்லியோடு , மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் கொழுப்பு குறையும் . ரத்த அழுத்தமும் சீராகும்.

கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.

கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைபாரம் , தலைவலி குணமாகும்.

கொத்தமல்லி மற்றும் துளசியைக் கஷாயம் வைத்துக் குடித்தால் காய்ச்சல் குணமாகும்.

கொத்தமல்லி , சீரகம் (2 ஸ்பூன் ) - இரண்டையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் தலைவலி குணமாகும்.

கொத்தமல்லியைப் பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை விரைவில் மறையும்.!

*இணையப்பகிர்வு*
[11/24, 11:25] Am Yoga: *வயிற்றுப்பூச்சு ஒழியும்*

சுண்டைக்காய், ஓமம் , கடுக்காய், நெல்லிக்காய், வாய்விழங்கம் சரியளவு எடுத்து பொடிசெய்து காலை மாலை 1 கிராம் சாப்பாட்டிற்கு பின் சுடுதண்ணியில் குடித்துவர சிறியவர் மற்றும் பெரியவர்களை வதைக்கும் வயிற்றுப்பூச்சி ஒழியும்.!

*AUM HERBALS*
[11/24, 16:12] Am Yoga: முல்லைப் பூவின் மருத்துவ பயன்கள்:*

*முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதாவது முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா,                                                         பிறகு முல்லைப் பூவின் மருத்துவ பயன்களை தெளிவாக சொல்கிறேன் …

*முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.*

*முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.*

*முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.*

*ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.*

*உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.*

*முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.!

*இணையப்பகிர்வு*
[11/25, 06:48] Am Yoga: 🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋தலைமுடிப் பிரச்சனைக்கு சித்த மருத்துவம்

தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது தேவையற்றது. ஆனால், தினசரி தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம். இன்றைக்கு சுற்றுப்புறச் சூழல் அளவுக்கதிகமாக மாசடைந்துள்ள காரணத்தினால், தினமும் தலைக்குக் குளிப்பதன் மூலம்தான் அந்த மாசிலிருந்து கூந்தலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க முடியும்.

தினம் தலைக்குக் குளித்தால் கூந்தல் வறண்டு விடுமே என நினைப்பவர்கள், இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் சம அளவு கலந்து தலையில் தடவி, மறுநாள் காலையில் அலசி விடலாம். ஐந்தெண்ணெய் கலவையும் மிகவும் அற்புதமானது. நல்லெண்ணெய், கடுகெண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய்  மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை முதல் நாள் இரவு தலையில் தடவிக் கொண்டு, காலையில் கூந்தலை அலசலாம். கூந்தல் ஆரோக்கியத்துக்கு இது மிகச் சிறந்த  எண்ணெய். வார இறுதி நாட்களில் நிதானமான எண்ணெய் குளியல் எடுப்பது மிகவும் அவசியமானது. அப்படி எடுக்கும்போது அந்த எண்ணெய் கலவையில் ஒரு வாரம் விளக்கெண்ணெய், இன்னொரு வாரம் கடுகெண்ணெய், பிறகு ஐந்தெண்ணெய் இப்படி  இருக்கும்படி மாற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக விளக்கெண்ணெய் உபயோகிப்பவர்களது கூந்தல் அதிகம் உதிராமலும் நரைக்காமலும் இருக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன் படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பொடுகை வளர்க்கக்கூடிய தன்மை உண்டு. அதன் அந்த குணத்தைக் குறைக்க அத்துடன் சிறிது கடுகெண்ணெயோ, நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ சேர்த்துக் கொள்ளலாம்.

தலைமுடி உதிர்வதை நம் வீட்டு சமையலறையில் உள்ள வெங்காயத்தைக் கொண்டே நிறுத்தலாம். முக்கியமாக வெங்காயம் தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். ஏனெனில் வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.

இந்த சல்பர் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில் கொலாஜென் தான் தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமான ஒன்று.

* வெங்காய சாற்றினை பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசுங்கள். பாதாம் எண்ணெய் தலைமுடிக்கு பொலிவைத் தரும் மற்றம் வெங்காயச் சாறு மயிர் கால்களை வலிமைப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும்.

* தலைமுடி உதிர்வதைத் தடுக்க வெங்காய சாறு மற்றும் ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்த கலவை. இந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

* வெங்காய சாற்றினை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, ஒரே மாதத்தில் முடி உதிர்வதை முற்றிலும் தடுக்கலாம்.

* வெங்காய சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, தலையை மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கி, ஸ்கால்ப் சுத்தமாகும்.

வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும்.   சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

* சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும். அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

* பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்.

* சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்.

* சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

உதடு உலர்ந்து விட்டதா?

* உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.

* நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை சீவி அரைத்து, உடல் முழுவதும் தடவிக் கொள்ளவும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு போட்டு உடம்பை தேய்த்துக் குளிக்கவும். தினமும் பப்பாளிப் பழம் சாப்பிடவும். வாழைப் பழத் தோலையும் இது போலத் தேய்த்துக் குளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் பப்பாளி சாப்பிட்டால் சருமத்தில் பளபளப்பை உண்டாக்கும்.

* அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.

* பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

தகவல்: பசுமைப்பாதை

🎋🌾🍁🍂🍃☘🍃🍂🍁🌾🎋
[11/25, 06:50] Am Yoga: இளமையை காக்கும் இஞ்சி-சீரகம் கம்மர்கட்

இஞ்சி - ஒரு பங்கு தோல் நீக்கி பொடியாக அரிந்தது
சீரகம் - இஞ்சியின் இரண்டு பங்கு
ஏலக்காய் - 2 பொடித்தது
பனைவெல்லம் - தேவையான அளவு சுத்தம் செய்து பாகு வடிவில்
பசு நெய் தேவையான அளவு

செய்முறை:

ஒரு நான்ஸ்டிக் வாணலியில் நெய் ஊற்றி சூடாக்கி, பொடியாக அரிந்த இஞ்சியை சேர்த்து இளம் சிவப்பாக இஞ்சியில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி, ஏலக்காய் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.

அதே வாணலியில் சூட்டில் ஜீரகம் இரண்டு பங்கு சேர்த்து வாசனை வரும் வரை லேசாக பிரட்டி விடவும். கருகி விடக்கூடாது. ஆறியவுடன் மிக்ஸியில் பொடி பண்ணிக்கொள்ளவும்.

பனைவெல்லத்தை கரைத்து கல், மண் நீக்கி அதே வாணலியில் இட்டு பாகு பதத்திற்க்கு காய்ச்சவும். பாகு பதம் வந்தவுடன் பொடித்த பொடியை போட்டு அல்வா பதத்தில் இறக்கவும். சிறிது ஆறியவுடன், கை பொறுக்கும் சூட்டில் எடுத்து உருண்டை பிடுக்கவும்.

சாப்பிடும் முறை:

காலையில் ஒரு வேலை மட்டும் சாப்பிடலாம். ஜீரணத்திற்க்கும், குடலுக்கும், உடலில் உள்ள நச்சு கழிவுகளையும் நீக்கவல்லது. தைராயிட் பிரச்சனகளிலிருந்து பாதுகாக்கும். இளமையை நீட்டிக்கும். அஜீரண கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டவுடன் சாப்பிடலாம்.!

*இணையப்பகிர்வு*

Monday, November 21, 2016

மருத்துவக் குறிப்புகள் - 21/11/16

[11/19, 22:11] Am Yoga: மனித உறுப்புகள் :-
1. நரம்பு மண்டலம்
2. எலும்பு மண்டலம்
3. மூட்டுகள்
4. தசைகள்
5. சிறுநீரகம்
6. இதயம்
7. மூளை
8. இரத்தம்
9. பல்
10. கண்
11. காது
12. நாக்கு
13. சுரப்பிகள்
14. மனித உறுப்புகள் பற்றிய படிப்பு

1. நரம்பு மண்டலம்:-
🍭 நரம்பு செல்லின் செயல் அலகு - நியூரான்
🍭 நரம்பு மண்டலம் பற்றிய படிப்பு - நியூராலஜி
🍭 நரம்பு மண்டலம் பிரிவுகள் - 3
1. மைய நரம்பு மண்டலம் (CNS)
2. வெளிச்செல் நரம்பு மண்டலம் (PNS)
3. பரிவு நரம்பு மண்டலம் (ANS)
🍭 நரம்பு பகுதியில் கிளைகள் உள்ள பகுதி - சைட்டான்
🍭 நரம்பு பகுதியில் கிளைகள்  அற்ற பகுதி - ஆக்சான்
🍭 நரம்பு செல்லின் உடலில் புற எல்லையிலிருந்து அநேக கிளைகள் வெளிப்படுகிறது அதற்கு பெயர் - டென்டிரான்கள்
🍭 ஆக்சான் எதனால் சூழப்பட்டுள்ளது - மெடுல்லரி, நியூரிலெம்மா

2. எலும்பு மண்டலம்:-
🛡 புறச்சட்டகம் எலும்பு மண்டலம் கொண்ட உயிரி - நண்டு,  இறால்
🛡 மனித உடலில் மொத்த எலும்புகள் - 206
🛡 எலும்பு தசையின் செயல் அலகு - சார்கோமியர்
🛡மண்டையோட்டில் உள்ள எலும்புகள் - 8
🛡 முகத்தில் உள்ள எலும்புகள் - 14
🛡 ஹயாயிடு எலும்பு வடிவம் - U
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள எலும்புகள் - 33
🛡 முதுகெலும்பு தொடரின் வடிவம் - S
🛡 முதுகெலும்பு தொடரில் உள்ள பகுதிகள் - 5
1. கழுத்து பகுதி
2. மார்பு பகுதி
3. இடுப்பு பகுதி
4. திரிக முள்ளெலும்பு பகுதி
5. வால் பகுதி
🛡 பாலூட்டிகள் கழித்து எலும்பு - 7
🛡 மார்பு முள்ளெலும்பு எண்ணிக்கை - 12
🛡 இடுப்பு முள்ளெலும்பு - 5
🛡 திரிக எலும்புகள் - 5
🛡 வால் எலும்புகள் - 4
🛡 மார்பு பகுதி விலா எலும்புகள் எண்ணிக்கை - 12 இணை
🛡 முதல் 7 இணை விலா எலும்புகள் - உண்மை விலா எலும்புகள்
🛡 8, 9 மற்றும் 10 இணை விலா எலும்புகள் - பொய் விலா எலும்புகள்
🛡 11மற்றும் 12 இணை விலா எலும்புகள் - மிதக்கும் விலா எலும்புகள்
🛡 மனித உடலில் மிக பெரிய எலும்பு - ஃபீமர் (தொடை எலும்பு)
🛡 மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டைப் (காது எலும்பு)
🛡 கணுக்கால் எலும்புகள் மொத்தம் - 7
🛡 எலும்புகளில் அதிகம் உள்ள தனிமம் - கால்சியம்
🛡 எலும்பு மூட்டுகளில் சுரக்கும் திரவம் - சினோவியல் திரவம்
🛡 எலும்பு மஜ்ஜையில் உருவாவது - RBC & WBC இரத்த சிவப்பு அணுக்கள் & இரத்த வெள்ளை அணுக்கள்

3. மூட்டுகள்:-
🍗 இரண்டு எலும்புகள் இணையும் இடத்தின் பெயர் - மூட்டு
🍗 மூட்டுகளின் வகைகள் - 2
1. அசையா மூட்டு
2. அசையும் மூட்டு
🍗 அசையா மூட்டுக்கு உதாரணம் - கபால மூட்டு
🍗 அசையும் மூட்டு வகைகள் - 4
1. முளை மூட்டு
2. பத்து கிண்ண மூட்டு
3. கீல் மூட்டு
4. வழுக்கு மூட்டு
🍗 முளை மூட்டு காணப்படும் இடம் - கழித்து  பகுதி
🍗 முதலாவது முள் எலும்பு - அட்லஸ்
🍗 இரண்டாவது முள் எலும்பு - ஆக்ஸிஸ்ஸி
🍗 இந்த இரண்டு முள் எலும்புகள் பணி - மண்டையோட்டை தாங்கி தலையை திருப்ப
🍗 பந்து கிண்ண மூட்டு காணப்படும் பகுதிகள் - கை, கால்
🍗 கீல் மூட்டு காணப்படும் பகுதி - உள்ளங்கை, உள்ளங்கால்
🍗 எலும்பு மூட்டுக்களில் உள்ள திரவம் - சினோவியல் திரவம்

4. தசைகள்:-
🍖 தசைகளின் வகைகள் - 2
1. இயங்கு தசை
2. இயக்கு தசை
🍖 இயங்கு தசை என்பது - தானாகவே இயங்குவது
🍖 இயங்கு தசைக்கு உதாரணம் - இதய தசை
🍖 இயக்கு தசை என்பது -  நாம் இயக்கினால் இயங்குவது
🍖 மனித உடலில் உள்ள தசைகள் - 600 மேல்
🍖 முதுகு, கழித்து தசைகள் பெயர் - டிரப்பீசியஸ்
🍖 தோள்பட்டை தசைகள் பெயர் - டெல்டாயிடு
🍖 மார்பு தசைகள் பெயர் - பெக்டொரல்
🍖 முதுகின் பின்புறம் அகன்ற தசைகள் பெயர் - லாட்டிஸ்மஸ் டார்சை
🍖 மேற்கையின் முன்புறம் உள்ள தசை - பைசெப்ஸ் (இருதலைத் தசை)
🍖 மேற்கையின் பின்புறம் உள்ள தசை - ட்ரைசெப்ஸ் (முத்தலைத் தசை)
🍖 கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையே காலின் பின்புறம் உள்ள தசை - காஃப் (பின் கால் தசை)

5. சிறுநீரகம்:-
🍤 மனித உடலில் முக்கிய கழிவு நீக்க உறுப்பு - சிறுநீரகம்
🍤 சிறுநீரகம் வடிவம் - அவரை விதை
🍤 சிறுநீரகம்  நீளம்  - 12 செ.மீ.
🍤 சிறுநீரகம் அகலம் - 6 செ.மீ.
🍤 சிறுநீரகம் பருமன் - 3 செ.மீ.
🍤 சிறுநீரகம் எந்த சவ்வினால் மூடப்பட்டது - கேப்சியூல்
🍤 சிறுநீரகத்தின் குழிந்த உட்புறத்தின் மையப் பகுதியின் பெயர் - ஹைலஸ்
🍤 சிறுநீரகத்தின் வெளிப்பகுதியின் பெயர் - புறணி
🍤 புறணி நிறம் - அடர்சிவப்பு
🍤 சிறுநீரகத்தின் உட்புற பகுதியின் பெயர் - மெடுல்லா
🍤 மெடுல்லா நிறம் - வெள்ளை
🍤 மெடுல்லா பகுதியின் பல கூம்பு வடிவ உறுப்பின் பெயர் - ரீனல் பிரமிடுகள்
🍤 சிறுநீரகத்தின் ஏறக்குறைய உள்ள நெஃப்ரான்கள் - ஒரு மில்லியன்
🍤 சிறுநீரகத்தின் அடிப்படை அலகு - நெஃப்ரான்

6. இதயம்:-
❤ இதயத்தின் வடிவம் - கூம்பு
💛 இதயத்தை சூழ்ந்து உள்ள உறை - பெரிகார்டியம்
💚 இதயம் அமைந்துள்ள பகுதி - மீடியாஸ்டினம்
💙 இதய துடிப்பு என்பது - ஒரு நிமிடத்திற்கு 72 முறை
💜 இதயம் சுருங்குவதற்கு பெயர் - சிஸ்டோல்
❤ இதயம் வாரிவடைவதற்கு பெயர் - டயல்ஸ்டோல்
💛 இதயத்தில் அமைந்துள்ள அறைகள் - 4
💚 இதயத்தில் உள்ள இரண்டு வால்வுகள் பெயர் - ஆரிகல், வெண்ரிக்கல்
💙 ஆரிகல், வெண்ரிக்கல் பிரிப்பது - செப்டா
💜 இடது ஆரிகல் இடது வெண்ரிக்கல் பிரிப்பது - ஈரிழல் வால்வு (மிட்ரல் வால்வு)
❤ வலது ஆரிகல் வலது வெண்ரிக்கல் பிரிப்பது - மூவிழல் வால்வு (பிறை சந்திர வால்வு)
💛 சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - தமணி
💚 அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - சிறை
💙 முடக்கு நோயால் பாதிக்கப்படும் உறுப்பு - இதயம்
💜 இதயத்தில் இருந்து அசுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் தமணி
💜 இதயத்தில் இருந்து சுத்த இரத்தத்தை எடுத்து செல்வது - நுரையீரல் சிறை
❤ இதயம் முடக்கு நோய்க்கு மருந்து கண்டறுந்தவர் - வில்லியம் விதரிங்

7. மூளை:-
☁ மூளையின் பகுதிகள் - 3
1. முன் மூளை (அ) புரோசென் செஃபலான்
2. நடு மூளை (அ) மீசென் செஃபலான்
3. பின் மூளை (அ) ராம்பென் செஃபலான்
☁ மூளையின் எடை - 1.36 கிலோ கிராம்
☁ மூளை எத்தனை உறைகளால் பாதுகாக்க படுகிறது - 3
1. வெளியுறை - டியூராமேட்டர்
2. உள்ளுறை - பையாமேட்டர்
3. டியூராமேட்டருக்கும் பையாமேட்டருக்கும் இடையே உள்ள உறை - அரக்னாயிடு உறை
☁ மூளையின் அரைவட்டக் கோளங்களாக பிரிக்கப்படும் அடிப்பகுதியின் பெயர் - கார்பஸ் காலோஸம்
☁ பெருமூளை உள்ள பள்ளங்களுக்கு பெயர் - சல்கஸ்
☁ பெருமூளை உள்ளமேடு்களுக்கு பெயர் - கைரஸ்
☁ முன் மூளையின் பின் பகுதி - டையன் செஃபலான்
☁ டையன் செஃபலானின் அடிப்பகுதியில் உள்ள உறுப்பு - இன்ஃபன்டிபுலம்
☁ இன்ஃபன்டிபுலம் நுனியில் காணப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி
☁ பெருமூளை வடிவம் - அரை கோளம்
☁ பெருமூளை மேல் பகுதி பெயர் - கார்டெக்ஸ் (அ) புறணி
☁ புறணி நிறம் - சாம்பல்
☁ பெருமூளை உட்பகுதி பெயர் - மெடுல்லா
☁ மெடுல்லா நிறம் - வெண்மை
☁ பெருமூளை பகுதிகள் - 4
1. ஃப்ராண்டல்
2. பெரைட்டல்
3. டெம்பொரல்
4. ஆக்ஸிபிட்டல்
☁ உயிர் முடிச்சு என்று அழைக்கப்படுவது - முகுளம்
☁ முகுளம் நீலம் - 3 செ.மீ.
☁ சிறுமூளை (அ) செரிபெல்லம்
☁ ஆல்கஹால் சாப்பிட்டால் தல்லாட காரணம் - சிறுமூளை பாதிப்பு

8. இரத்தம் பற்றிய சில தகவல்கள்:-
🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
🍎  இரத்த வகைகள் - A, B, AB, O
🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது -   Rhesus குரங்கில்
🍎 இரத்தத்தில் Rh  காரணி இருந்தால் - பாசிடிவ்  (Positive)
🍎 இரத்தத்தில் Rh  காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
🍎  அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
🍎  அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை -  O
🍎 120 mmHg என்பது - Systolic Pressure
🍎 80 mmHg என்பது - Diastolic Pressure
🍎 இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை -  5.2 மில்லியன்
🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை - 4.5 மில்லியன்
🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்  வாழ்நாள் - 120 நாட்கள்
🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
🍓  இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
🍉 பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-
🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000

9. பல்:-
▪குழந்தை பருவத்தில் தோன்றும் முதல் தொகுப்பு பற்கள் - பால் பற்கள்
▪ பால் பற்கள் வேறு பெயர் - உதிரிபற்கள்
▪ பால் பற்கள் எண்ணிக்கை - 20
▪ நிலைப் பற்கள் - 32
▪ பற்கள் வகைகள் - 4
1. வெட்டும் பற்கள் - 8
2. கோரைப் பற்கள் - 4
3. முன்கடைவாய் பற்கள் - 8
4. பின் கடைவாய் பற்கள் - 12
▪ பல் சூத்திரம் - 2123/2123 ×2
▪ 20 வயது மேல் தோன்றும் பற்கள் - அறிவுப் பற்கள்
▪ பல்லின் முதல் பொருள் - டென்டைன்
▪ மனித உடலில் மிக கடினமான பகுதி - பல் எனாமல்
▪ பற்களில் ஏற்படும் நோய் - பயோரியா
▪ பற்களில் அதிக அளவு உள்ள தனியம் - கால்சியம்

10. கண்கள்:-
👀 உடலில் ஒளி உணர் உறுப்பு - கண்
👀 இமைகளின் உட்புறம் மிக மெல்லிய இமையடிப் படலம் - கன்ஜன்ங்டிவா
👀 மேல் இமைகளின் உள்விளிம்பில் காணப்படுவது - லாக்ரிமல் சுரப்பிகள்
👀 கண்களில் ஒளி ஊடுருவும் பகுதி - கார்னியா (அல்லது) ஒளி புகும் பகுதி
👀 ஒளிபுக இயலாத வெளிப்புற வெண்மை பகுதி - ஸ்கிளிரா
👀  கண்உறைகளுள் உள்துறை கார்னியாவின் எதிர்புறத்தில் உள்ளது - ரெட்டினா
👀  கண் உறைகளின் நடு உறை பெயர் - கோராய்டு
👀 விழிலென்ஸ் வடிவம் - இருபுறம் குவிந்தது
👀 கார்னியாவிற்கும் லென்சிற்கும் இடையில் உள்ள திரவம் - அகுவஸ் ஹியூமர்
👀  லென்சிற்கும் விழித்திரைக்கும் இடையில் உள்ள திரவம் - விட்ரியஸ் ஹியூமர்
👀 விழித்திரையில் மையத்தில் துல்லியமான பார்வைக்கு காரணமான பகுதி - மாக்குல்லா

11. காது:-
👂🏻 ஒலி உணர் உறுப்பு - காது (செவி)
👂🏻 செவியின் பகுதிகள் - 3
1. புறச்செவி
2. நடுச்செவி
3. உட்செவி
👂🏻 உடலை சமநிலை படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
👂🏻 நடுச்செவி உள்ள எலும்புகள் - 3
1. சுத்தி (மேலியஸ்)
2. பட்டடை (இன்கஸ்)
3. அங்கவடி (ஸ்டேப்பிஸ்)
👂🏻மனித உடலில் மிக சிறிய எலும்பு - ஸ்டேப்பிஸ்
👂🏻 உட்செவியில் உள்ள மெல்லிய படலத்தின் பகுதி - லாபிரிந்த்
👂🏻 லாபிரிந்த் பகுதியில் உள்ள துரவம் நிரம்பி உள்ளது.
👂🏻 உட்செவியின் உள்ள உறுப்புகள் - யூட்ரிகுலஸ், சாக்குலஸ்
👂🏻 சுழல் வடிவில் ஆன உறுப்பு - காக்லியா
👂🏻 காக்கிலியா எந்த உறுப்புடன் இணைந்துள்ளது - சாக்குலஸ்
👂🏻 காதுகள் கேட்கவல்ல ஒலி அதிர்வெண் - 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்
👂🏻 ஒலி அதிர்வெண் அலகு - ஹெர்ட்ஸ்

12. நாக்கு :-
👅 நமது உடலில் சுவையை அறியும் உறுப்பு - நாக்கு
👅 நாக்கில் மேல் பகுதியில் அமைந்துள்ள பொருள் - சுவை அரும்புகள்
👅 சுவை அரும்புகள் வேறு பெயர் - சுவை மொட்டுக்கள்
👅 சுவை அரும்புகள் வடிவம் - கவிழ்த்த கோப்பை வடிவம்
👅 நான்கு எதனுடன் தொடர்பெடையது - நுண்ணிய நரம்புகள்
👅 நாக்கின் அடிப்பகுதியில் உள்ள சுரப்பி - நாவடிச் சுரப்பி
👅 எலும்புகள் இல்லாத உறுப்பு - நாக்கு

13. சுரப்பிகள் :-
💃🏻 சுரப்பிகளின் வகைகள் - 2
1. நாளமுள்ள சுரப்பி
2. நாளமில்லா சுரப்பி
💃🏻நாளமுள்ள சுரப்பிகள்
- உமிழ் நீர் சுரப்பி
- இரைப்பை நீர் சுரப்பி
- கண்ணீர் சுரப்பி
- குடல் நீர் சுரப்பி
- பால் சுரப்பி
- வியர்வை சுரப்பி
💃🏻 நாளமுள்ள சுரப்பிகள் வேறு பெயர் - எக்சோகிரைன் சுரப்பி
💃🏻 உமிழ் நீர் சுப்பிகள் - 3 இணை
1. மேலண்ண சுரப்பி  (பரோட்டிட்)
- உமிழ் நீர் சுரப்பிகளில் மிக பெரியது
2. கீழ் தாடை சுரப்பி (சப்மாஸ்செலாரி)
- தடைக்கு கீழ் புறத்தில் அமைந்துள்ளது
3. நாவடி சுரப்பி (சப்லிங்குவல்)
- மிக சிறிய உமிழ் நீர் சுரப்பி
💃🏻உமிழ் நீர் சுரப்பிகளில் சுரக்கும் நொதி - லைசோசைம்
💃🏻 மிக பெரிய சுரப்பி - கல்லீரல்
💃🏻 கல்லீரலில் சுரப்பது - பித்த நீர்
💃🏻 இலை வடிவ சுரப்பி - கணையம்
💃🏻 கணையத்தில் சுரப்பது - டிரிப்ஸின், கைமோடிரிப்ஸின், அமைலேஸ், லைபேஸ்
💃🏻 நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் - பிட்யூட்டரி சுரப்பி
💃🏻 பிட்யூட்டரி சுரப்பி அமைந்துள்ள இடம் - மூளையின் கீழ் பகுதியில்

14. மனித உறுப்புகள் பற்றிய படிப்புகள்:-
✒  ஆண்கள் - ஆன்ட்ராலஜி
✒ பெண்கள் - கைனகாலஜி
✒ குழந்தைகள் - பீடியாரிக்ஸ்
✒ முதியோர்கள் - ஜீரியாடிரிக்ஸ்
✒ மகப்பேறு - ஆப்ஸடிரிக்ஸ்
✒ தோல் - டெர்மடாலஜி
✒  தசைகள் - மையாலஜி
✒ காது - ஒட்டோலஜி
✒ மூக்கு - ரைனோலஜி
✒ தொண்டை - லரிஞ்சியாலஜி
✒ கண்கள் - ஆப்தமாலஜி
✒ சிறுநீரகம் - நெப்ராலஜி
✒ நரம்புகள் - நியூராலஜி
✒ இரத்தம் - ஹிமடாலஜி
✒ உடற்செயல்பாடுகள் - பிஸியாலஜி
✒ மூளை, மண்டயோடு - பிரினாலஜி
✒ பற்கள் - ஒடன்டாலஜி
✒ புற்றுநோய் - ஆன்காலஜி

*Creat By:-Mohammed Aaqil*
[11/20, 13:30] Am Yoga: பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற கருப்பு உளுந்து லட்டு...

தேவையான பொருட்கள்:

இயற்கை கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பசு நெய் தேவையான அளவு.
சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

1.முதலில் கருப்பு இயற்கை உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக் கொண்டு வர வேண்டும்.

3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்.

இயற்கை உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

தடுமாறி விழும் போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உடல் சூடு தணிய

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

இயற்கை உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தாது விருத்தியாக

இயற்கை உளுந்தை காய வைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு

தடுமாறி விழும் போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு நாட்டு கோழி முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக் கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலு பெற

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக் கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் இயற்கை உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு இயற்கை உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு இயற்கை உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு உள்ளது.இயற்கை உளுந்தை தினமும் பயன் படுத்தி நலம் உடன் வாழ்வோம்.!

*இணையப்பகிர்வு*
[11/20, 13:32] Am Yoga: கொழுப்புக்கட்டிகள் கரைய :
1) ஆளி விதையுடன் சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப் போட்டுவர கொழுப்புக் கட்டிகள் கரையும்.
2) அதிமதுரம், அதிவிடயம், அமுக்கரா, மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக்கொண்டு விழுதாய் அரைத்துத் தடவி வர... கொழுப்புக் கட்டிகள் கரையும்.
3) அத்திக்காயுடன் மஞ்சள் சேர்த்து அவித்து நீரைத்தொடர்ந்து பருகிவர கொழுப்புக் கட்டிகள் கரையும்.

அவுரி இலை  -  ஒரு கைப்பிடி
ஆடுதீண்டாப்பாளை  -  ஒரு கைப்பிடி

மஞ்சள்  -  ஒரு துண்டு

மூன்றையும் விழுதாய் அரைத்து, வேளைக்கு அரை ஸ்பூன் (2 கிராம்) பாலில் காலை, இரவு சாப்பிட்டு வர கொழுப்புக்கட்டிகள் கரையும்.!

*இணையப்பகிர்வு*
[11/20, 13:35] Am Yoga: குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருந்துக் குழம்பு கொடுப்பார்கள்.  தாய்க்கு கர்ப்பப்பை குணமடையவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இருக்க, இந்தக் குழம்பு உதவும்.வாருங்கள் செய்முறையை பார்க்கலாம்.

மருந்துக் குழம்பு

தேவையானவை:
 பூண்டு - 10 பல்
 சீலா கருவாடு (அ) சீலா மீன் -
5 சின்ன துண்டுகள்
 நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
 முட்டை - ஒன்று (நாட்டுக்கோழி முட்டை எனில் மிகவும் நல்லது)
 தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
 உப்பு - தேவையான அளவு

மருந்து குழம்புப் பொடி செய்ய:
 சுக்கு - 100 கிராம்
 மிளகு - 25 கிராம்
 திப்பிலி - 10 கிராம்
 நறுக்கு மூலம் - 25 கிராம்
 ஓமம் - 50 கிராம்
 கருஞ்சீரகம் - 25 கிராம்
 பெருங்காயம் - ஒரு புளியங்கொட்டை அளவு
 கடுகு - 50 கிராம்
 சீரகம் - 25 கிராம்

மருந்து குழம்புப் பொடி செய்யும் முறை:
சுக்கை அம்மியில் நன்கு தட்டி, பின்னர் மிக்ஸில் பொடிக்கவும் (சுக்கு மிகவும் கடினமாக இருக்கும், நேரடியாக அரைத்தால் மிக்ஸி பிளேடு உடைந்துவிடும்). மீதமுள்ள பொருட்களையும் லேசாக அம்மியில் தட்டி பின்னர் மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்து, வேண்டுமானால் சலித்துக்கொள்ளவும். இந்த மருந்து குழம்பு பொடியை சுத்தமான காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு, அவ்வப்போது எடுத்து குழம்பு வைத்துக்கொள்ளலாம்.
குழம்பு வைக்கும் முறை:
கருவாட்டை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்கு கழுவவும். அதில் இருக்கும் அதிக உப்பை இது எடுத்துவிடும். தேங்காயுடன் இரண்டு பூண்டு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். இத்துடன்  2 கப் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் மருந்து குழம்புப் பொடி சேர்த்துக் கரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மீதமிருக்கும் பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை சேர்க்கவும். குழம்பு ஓரளவு கொதித்தவுடன் கழுவி வைத்துள்ள கருவாட்டைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். (கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால், ருசித்துப் பார்த்து தேவையெனில் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.)
குழம்பில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, முட்டையை குழம்பில் உடைத்து ஊற்றி மூடிவைத்து மிதமான தீயில் வேகவிடவும். முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சுடச்சுட சாதத்துடன் சாப்பிடவும். தொட்டுக்கொள்ள குழம்பில் இருக்கும் கருவாடும், முட்டையும் போதுமானது, சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.

குறிப்பு:
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள். மருந்து குழம்பு பொடி, நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கது. வாங்கி, எளிய முறையில் குழம்பு செய்யலாம். தாய்க்கு கர்ப்பப்பை குணமடையவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் வராமலும் இருக்க, இந்தக் குழம்பு உதவும்.  வாரம் இரு முறை வைத்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு சீராகும், தேவையில்லாத கழிவுகள் உடம்பிலிருந்து வெளியேறும். முதல் மாதம் அவசியம் சாப்பிட வேண்டிய குழம்பு இது.
சைவ உணவுக்காரர்களில், இதே குழம்பில் கருவாட்டுக்குப் பதில் மணத்தக்காளி வற்றல் சேர்த்துச் செய்யலாம். பூண்டு வதக்கும்போதே மணத்தக்காளியையும் சேர்த்து வதக்கிவிடவும்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள்.!

*இணையப்பகிர்வு*
[11/20, 17:11] Am Yoga: தும்மல் குறைய

அறிகுறிகள்:
தும்மல்.
தேவையான பொருள்கள்:
ரோஜா இதழ்.
சீரகம்.
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும்.!

*இணையப்பகிர்வு*

Saturday, November 19, 2016

சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை

சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குணமாகும்.

சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நாவறட்சி குணமாகும்.

தோல் நீக்கிய சுக்கை ( 2 கிராம் ) பசும்பாலில் (2 லிட்டர் ) போட்டுக் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி , வாயுத் தொல்லை , உடல் அசதி போன்றவை குணமாகும்.

சுக்குத் துண்டை தோல்நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.

சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்தால் தலைவலி , தலைச்சுற்றல்  போன்றவை வராது.

சுக்கு ,  மிளகு , திப்பிலி , அதிமதரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக்கிக் குடித்தால் காய்ச்சல் ,  வாய்ப்புண் , மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் போன்றவை குணமாகும்.

சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் கடுமையான வயிற்றுவலி  குணமாகும்.!

*இணையப்பகிர்வு*
[11/19, 13:16] Am Yoga: *இயற்கை மருத்துவம்*

கண் கருவளையம் மறைய உருளைக் கிழங்கு சோற்றுக்கற்றாளை சதை சம அளவாக  எடுத்து மையாக அரைத்து தினமும் அரை மணி நேரம் கருவளையம், கரும்படலம், கருந்தழும்பு போன்றவற்றின் மீது பூசி காயவைத்து  பின் குளிர்ந்தநீரில் கழுவிவந்தால் 30  நாளில் மேற்கண்ட  சரும நோய்கள் குணமாகும்.!
அதோடு இரவில் நன்றாக தூங்க வேண்டும், கொத்தமல்லி விதையை பொடித்துப்போட்டு காய்ச்சிய தண்ணீரை நாளெல்லாம் குடித்துவந்தால் விரைவான பயன் கிடைக்கும்.!

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in

தைராய்டு நோய் -பாட்டி வைத்தியம் .!!!


1. பசலைக் கீரைச் சாறு (100 மிலி) மற்றும் இஞ்சிச் சாறு (100 மிலி) ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

2. தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும்.

3. சத்து பவுடர்:

தனியா 100 கிராம், எள் 50 கிராம், மிளகு 10 கிராம், மிளகாய் 10, கறிவேப்பிலை போன்ற சாமான்களை வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். உப்பும் சேர்த்துக் கொள்ளவும். தினமும் 1 பிடி சாதத்தில் 1 ஸ்பூன், நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிடவும். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும். தினமும் சாப்பிட்டு வந்தால் பசி மற்றும் பித்த மயக்கம், தலை சுற்றல், வாந்தி, ருசியின்மை குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கல்லீரல் பிரச்சினை நீக்கி பலப்படுத்துவது உறுதி.

தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்
தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம். தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது.  உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு  நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும்.  சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது. அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.!

*இணையப்பகிர்வு*

Friday, November 18, 2016

நலவாழ்வு ஆசிரமம்

திருநெல்வேலி மாவட்டம் - ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. கடந்த ஆண்டு அய்யா. பழ.நெடுமாறன் அவர்கள் தனது துணைவியார் பார்வதி அம்மையாருடன் சென்று 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியதும் தனது அனுபவத்தை தென்செய்தி இதழில் கட்டுரையாகவும் எழுதினார். இதைப் படித்த எனக்குள் ஆர்வம் அதிகரிக்க மேலும் செய்திகளை அய்யாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். மேலும் மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமனும் அவரது துணைவியார் சித்ரா அம்மையாருடன் சென்று சில நாட்கள் சிவசைலதில் தங்கி சிகிச்சை பெற்ற அனுபவத்தை எளிமையாக எனக்கு விளக்கினார். இதன் பிறகே கடந்த ஏப்ரல் 10 முதல் 19ம் தேதி வரை நானும், எனது மனைவி மங்கையர்க்கரசியும் சிவசைலத்தில் தங்கி சிகிச்சை பெற்றுத் திரும்பினோம்.
சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி என கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இயற்கையான முறையிலேயே சிகிச்சை நடைபெறுகின்றன. இது குறித்து விரிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
ஆசிரமத்தில் காலை 6-00 மணிக்கெல்லாம் சூடான பார்லி கஞ்சி, சுக்குமல்லி காப்பி, கருவேப்பிலைச் சாறு குடிப்பதற்குக் கிடைக்கும். 7-00 மணிமுதல் 8-00 மணிவரை யோகா பயிற்சி தருகிறார்கள். பயிற்சிக்குப்பிறகு மண்பட்டியை வயிற்றில் வைத்துக் கொண்டு 20 நிமிடம் படுத்திருக்க வேண்டும். ஈர மண்ணை குழப்பி துணியில் நிரப்பி அதை செவ்வக வடிவில் மடித்து வயிற்றில் வைத்து விடுவார்கள். இதைத்தான் மண்பட்டி என்று சொல்கிறார்கள். அடிவயிற்றுச்சூட்டை அள்ளிக்கொண்டு சென்று விடும் இந்த மண்பட்டி.
காலை 8-00 மணியளவில் மருத்துவர் நல்வாழ்வு (பெயரே நல்வாழ்வு தான்) உங்கள் எடையை பரிசோதிப்பார். பிறகு உங்கள் உடல் நலம் குறித்து விசாரிப்பார். உடன் செவிலியர்கள் இருப்பார்கள். அன்றைய நாளில் உங்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து மருத்துவர் செவிலியரிடம் தெரிவிப்பார். மண் குளியல், வாழை இலைக் குளியல், ஆயில் மசாஜ், முதுகுக் குளியல், முழுத் தொட்டிக்குளியல், இடுப்புக் குளியல், நீராவிக் குளியல் என்று நாள் தோறும் சிகிச்சைகள் மாறிமாறி தொடர்ந்த வண்ணம் இருக்கும்.
மண் குளியல் என்பது ஈர மண்ணை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் பூசி விடுவது. பிறகு 1 மணிநேரம் வெயிலில் நிற்பது. இப்படி நிற்கும் போது உடலில் உள்ள சேறு கொஞ்சம் கொஞ்மாக காய்ந்து விடும். பிறகு உடல் இருக்கும் இந்த மண் குளியலால் உடலில் உள்ள இரத்த ஓட்டம் சரிசெய்யப்படும் தோல் நோய் குணமடையும். உடலில் வெப்பம் குறையும். தோலில் உள்ள வியர்வை அடைப்புகள் அகற்றப்பட்டு வியர்வை தடையின்றி வெளிப்படும். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அழகான இதமான ஒரு குளியல் காத்திருக்கும். குளிப்பதற்கு மின் மோட்டார் போட்டு விடுவார்கள். காய்ந்த மண் உடலில் இருந்து சுலபமாக வெளியேறும் விதமாக அருவியில் குளிப்பது போன்று உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும்படி அமைத்துள்ள முறை உங்களை நீண்டநேரம் நீராடத் தூண்டும்.
வாழை இலைக்குளியல் என்பது நண்பகல் மொட்டை மாடி வெயிலில் பாய் விரித்து அதன்மேல் வாழைஇலையை பரப்பி, அதன்மேல் படுக்க வைத்து, வாழைஇலை கொண்டு நம்மை மூடி மூச்சுக்காற்றுக்கு தடை ஏற்படாதவாறு கட்டிவிடுவார்கள். 10-15 நிமிடங்களில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடலில் உள்ள நாட்பட்ட வியர்வைக் கழிவுகள் லிட்டர் கணக்கில் வெளியேறும். இதேபோல வியர்வைக் கழிவுகளை வெளியேற்ற நீராவிக்குளியலும் நடைபெறும்.
இதுபோக சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஆயில் மசாஜ் மற்றும் உடலில் உள்ள வெப்பத்தை எளிதான முறையில் வெளியேற்ற முதுகுக்குளியல், முழுத் தொட்டிக் குளியல், இடுப்புக்குளியல் என்று இயற்கையான இனிமையான தனித்தனி சிகிச்சை முறைகளும் உண்டு.
உணவு முறைகளில் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது உப்பு, புளிப்பு, காரம் தவிர்த்தும் சமைக்காத இயற்கை உணவுகள் மட்டுமே. காலை 11 மணிக்கு வெல்லம் கலந்த அவல், கூடவே தயிர், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, கொஞ்சம் மிளகுதூள் கலந்த அவல் அதுபோக தேங்காய் துருவல் போட்ட அவல், மற்றும் வாழைப்பழம் கிடைக்கும். இதன்பிறகு நண்பகல் 12-30 மணி, 2-00 மணி, 3-30 மணி, மாலை 4-30 மணி, 5-30 மணிகளுக்கு திரவ உணவு வழங்குவார்கள். கேரட் சாறு, தர்பூசணி சாறு, மோர் + கலந்த சாறு, வெந்தயம் + மோர் கலவை, இளநீர், வில்வ இலைச் சாறு, நெல்லிச்சாறு, சாத்துக்குடி சாறு, பார்லி, சுக்குமல்லி, காபி, மோர் மற்றும் வேகவைத்த உப்பிடாத கேழ்வரகு கூழ் கிடைக்கும். உரிய நேரத்தில் அவரவர்களுக்கு என்ன திரவு உணவு உள்ளது என குறிப்பேட்டில் பார்த்து அதன்படி நமக்கு உரியதை எடுத்துச் சுவைக்கலாம்.
மாலை 4-30 மணிமுதல் 5-30 மணிவரை யோகாப்பயிற்சி நடைபெறும். பிறகு இரவு 7-00 மணிக்கு இரவு உணவு தயாராகிவிடும். இரவு உணவு எப்போதும் பழங்கள் மட்டுமே. தேங்காய் பேரிச்சம்பழம், திராட்சை, கொய்யா, தர்பூசணி, மாம்பழம், பலாப்பழம், அண்ணாச்சி, வெள்ளரி, பப்பாளி, வாழைப்பழம் என அந்தந்த பருவத்தில் கிடைக்கக் கூடிய பழங்களும், மலிவு விலையில் சந்தையில் கிடைக்கும். பழங்களுமாக வைத்திருப்பார்கள். தேவையான அளவு பழங்கள் சாப்பிடலாம். நம்முடைய அறைக்கு கொண்டு வந்தும் சாப்பிடலாம். தேங்காய் துருவலுடன் முளைகட்டிய ஏதாவதொரு பயறும் இரவு உணவில் உண்டு.
இதன்பிறகும் இரவில் பசிக்கும் உணர்வு ஏற்பட்டால், இதனால் தூக்கம் தடைபட்டால், சோர்வு ஏற்பட்டால் வெந்நீரில் சிறிதளவு தேன்கலந்து தருவார்கள். அதைக் கலந்து குடித்ததும் பத்தாவது நிமிடத்தில் பசி மறைந்து, சோர்வு களைந்து தூக்கம் உங்களைத் தழுவிச் செல்லும்.
சிகிச்சை பெறும் அனைத்து நாட்களிலும் காலை, மாலை கட்டாயம் எனிமா எடுத்துக் கொள்ள வேண்டும். எனிமா என்பது டியூப் வழியாக ஆசனவாயில் தண்ணீரை செலுத்தி மலக்குடலில் இருகிக் கிடக்கும் நாட்பட்ட மலக்கழிவுகளை வெளியேற்றும் இயற்கையான முறையாகும். இதனால் மலக்குடல் குளிச்சியடைந்து மலச்சிக்கல் தொந்தரவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சிகிச்சை நாட்களில் மூன்று முதல் 5 நாட்கள் வரை உண்ணாநோன்பு (பாஸ்டிங்) இருக்க வேண்டி வரலாம். இந்த நாட்களில் உங்கள் உடலிலிருந்து நிறைய நாட்பட்ட மலக்கழிவுகள் வெளியேறுவதைக் கவனிக்கலாம். இப்படி 10 நாட்கள் சிகிச்சை முடிந்து வெளியேறும்போது உங்கள் உடலில் புதுரத்தம் ஓடும் உணர்வை உங்களால் கவனிக்க முடியும். காலை, மாலை யோகாப் பயிற்சியின் மூலமாக வளையாத உடல் நாணலாய் வளையும் வியப்பைக் காணலாம்.
தங்கும் அறை இருபது உள்ளன. அறை வாடகை ரூ.200, 400, 600 என மூன்று தரத்தில் உள்ளன. 600 ரூபாய் கொண்ட அறையில் இருவர் தங்கினால் முதல் நபருக்கு ரூ.600ம் இரண்டாம் நபருக்கு ரூ.300ம் என 900 ரூபாய் நாளொன்றுக்கு வசூலிக்கிறார்கள். இந்த நடைமுறையைத்தான் மற்ற அறைகளுக்கும் கடைபிடிக்கிறார்கள். ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் இவ்விரு மாதங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே மற்ற மாதங்களில் செல்வது சிறப்பு. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைந்திருந்தாலும் கோடைக் காலங்களில் கடும் வெப்பத்தை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோரைச்சித்தர் வாழ்ந்த மலைக்கு நடந்தே அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயண அனுபவம் மிகவும் சுவையானது என சென்று வந்தவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.
யோகப் பயிற்சியும், இயற்கை உணவும் சாத்தியமாகிவிட்டால் நாம் எப்போதும் இனிமையாக வாழலாம். எனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, ஒருமுறை நல்வாழ்வு ஆசிரமத்திற்கு சென்று தங்கி வருவது நல்லது. 10 நாட்களில் எனக்கும் என் மனைவிக்கும் சிகிச்சைக்கான மொத்த செலவு ரூ.12,500 மட்டுமே. (இதில் அறை வாடகை மட்டும ரூ.9000) தென்னையும், பழமரத்தோப்புகளுமாக பூத்துக்குலுங்கும் இயற்கை அழகில் அமைந்துள்ள காற்றின் தீண்டலும், பறவைகளின் விதவிதமான மொழிகளையும் தவிர வேறெதையும் உணரமுடியாத, கேட்க முடியாத இனிமையான சூழலை கண்டு களித்து வாருங்கள்... சென்னையிலிருந்து தென்காசி சென்று அங்கிருந்து ஆழ்வார்குறிச்சிக்குச் சென்றால் அடுத்த நான்காவது கி.மீ. தூரத்தில் உள்ளது, சிவசைலத்தில் நலவாழ்வு ஆசிரமம்.
முகவரி :
மருத்துவர். இரா.நல்வாழ்வு, பி.என்.ஒய்.எஸ்.,
உலக நல்வாழ்வு ஆசிரமம்,
சிவசைலம் - 627412, ஆழ்வார்குறிச்சி (வழி), திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி : 04634 - 283484, 94430 43074, 9360 869 867

*இணையப்பகிர்வு*

மூலிகை மருத்துவம்

ஜலதோஷத்துக்குஅம்மான் பச்சரிசி இலையைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து, சுத்தமான அம்மியில் வைத்துச் தட்டிச் சாறு எடுத்து, அரை அவுன்ஸ் அளவு சாற்றில் சிறுது தேன் கலந்து  காலை, மாலை  சாப்பிடுவதற்கு முன் மூன்று நாள் சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.!

*இணையப்பகிர்வு*
[11/17, 18:32] Am Yoga: "பூண்டு எண்ணை தயாரிக்கும் முறை"

நூறு கிராம் வெள்ளைப் பூண்டை உடைத்து அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்
நல்லெண்ணை ஒரு லிட்டர், கடுகெண்ணை அரை லிட்டர், வேப்பெண்ணை கால் லிட்டர் எடுத்து அரைத்த பூண்டைக்கலந்து வெயிலில் பத்து நாள் வைத்து எடுத்துக்கொள்ளவும்
கை கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கு தேய்த்து வர குணமாகும்.!

*இணையப்பகிர்வு
[11/17, 18:48] Am Yoga: 🌿*சோம்பின் மகத்துவம்*

சோம்பு , மிளகு , எள்ளு- மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வெண்குஷ்டம் மறையும்.

சோம்பு , சாரணை வேர் , பசலைக்கீரை - மூன்றையும் சம அளவு எடுத்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

சோம்பு , பார்லி , மஞ்சள் - மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்தால்  சிறுநீரக  சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சோம்பு , கருஞ்சீரகம் - இரண்டையும் சம அளவூ எடுத்து தயிர் சேர்த்து அரைத்து , தேமல் , படை , சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் அவை உடனே குணமாகும்.

சோம்பு , அதிமதுரம் - இரண்டையும் சம அளவு  எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

சோம்பு , அசோகப்பட்டை - இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த நோய்கள் குணமாகும்.!

*இணையப்பகிர்வு*

ரசம்

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு சமையல் தான் ரசம். இத்தகைய ரசம் தென்னிந்தியாவில் வடை பாயாசத்துடன் கொடுக்கப்படும் ஒவ்வொரு விருந்திலும் அவசியம் இருக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும் மதிய வேளையில் ரசம் அவசியம் சமைத்து சாப்பிடப்படுகிறது.

சரி, மதிய வேளையில் உண்ணும் உணவில் ரசம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? ஆம், சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான். மேலும் ரசத்திலேயே நிறைய வெரைட்டிகள் உள்ளன.

பலருக்கு மதிய வேளையில் ரசம் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. இங்கு அத்தகைய ரசத்தை அன்றாடம் சிறிது உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வயிற்றுப்போக்கை சரிசெய்யும்

ரசமானது வயிற்றுப்போக்கு, அசிடிட்டி, வாயுத் தொல்லை, செரிமான பிரச்சனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் வழங்கக்கூடியவை. மேலும் இது மிகவும் விலை குறைவில் வேகமாக செய்து சாப்பிடக்கூடிய சமையலாதலால், தவறாமல் சிறிது உணவில் சேர்த்து வாருங்கள்.

புற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கும்

அற்புதமான மற்றொரு நன்மை என்னவெனில், ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான். இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மலச்சிக்கலைத் தடுக்கும்

பெரும்பாலானோருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், உண்மையில் ரசத்தை அன்றாடம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். அதிலும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படும் போது, சூடாக ஒரு கப் ரசம் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு முக்கிய காரணம் ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள புளி தான்.

நோயாளிகளுக்கு நல்லது

நோயாளிகள் ரசத்தை எடுத்துக் கொள்வது நல்லது. உதாரணமாக, காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அத்தகையவர்கள் காய்கறிகள் சேர்க்கப்பட்ட ரசம் சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் சேர்க்கப்பட்டள்ள பொருட்கள், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரோட்டீனை அதிகரித்து, உடலை விரைவில் குணமாக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் நிறைந்தது

ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரசத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் நிறைந்த புளி இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் நல்லது.

பிரசவ காலத்தில் நல்லது

கர்ப்பிணிகள் கூட ரசத்தை உட்கொள்ளலாம். ஏனெனில் அதில் புரோட்டீன், வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ரசம் குடலியக்கத்தை சீராக இயக்கும். இதனால் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகள் குறையும்.

வைட்டமின்கள் நிறைந்தது

ரசத்தில் முக்கியமான வைட்டமின்களான ரிபோப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ மற்றும் சி, ஃபோலிக் ஆசிட் மற்றும் தியாமின் போன்றவைகள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் தான் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

கனிமச்சத்துக்கள் நிறைந்தது

ரசத்தில் கனிமச்சத்துக்களான மக்னீசியம், காப்பர், செலினியம், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. ஆகவே அன்றாடம் இதனை சிறிது உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஒருசில குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குழந்தைகளுக்கும் நல்லது

ரசம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய திட உணவுகளில் முக்கியமானது. குழந்தைகளுக்கு ரசம் சாதம் கொடுப்பதால், அவர்களின் செரிமானம் சீராக நடைபெற்று, அவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும். மேலும் பெரும்பாலான குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கும் திட உணவுகளில் முதன்மையானது ரசம் எனலாம்.

எடையைக் குறைக்க உதவும்

அன்றாடம் ரசத்தை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். எப்படியெனில் ரசம் சேர்ப்பதால், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். அதிலும் அந்த டாக்ஸின்களானது வியர்வையின் மூலமாகவும், சிறுநீரின் வழியாகவும் வெளியேறும்.!

*இணையப்பகிர்வு*

இயற்கை மூலிகை மருத்துவம்

முடக்கற்றான்இலை,வேலிப்பருத்தி, சூரத்தாவரை ஆகியவற்றின் இலையை  வகைக்கு கைப்பிடியளவு பிச்சுப்போட்டு மண் அல்லது இரும்புச்சட்டியில்  2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் வடிகட்டி காலை மாலை உணவிற்கு முன்  20 முதல் 40 நாள் குடித்துவர
*பக்கவாதம், உடல் இறுக்கம், உடல்வலி, வாய்வுத்தொல்லை குணமாகும்.*
அகத்திக்கீரையை பறித்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒருத்தேக்கரண்டி பொடியை வாயில்போட்டு சிறிது சுடுநீர் அருந்திவர *மார்புவலி, இரத்தசோகையினால் வரும் மயக்கம் குணமாகும்.*
எலுமிச்சை சாறில் நாட்டு வெல்லம் கலந்து தினமும் குடித்துவர *உடல் அரிப்பு,சோர்வு,அஜீரண ஏப்பம் குணமாகும்*
பெரிய வெங்காயத்தை எடுத்து விறகு அடுப்பிலிட்டு சுட்டு,சிறிது மஞ்சள் நெய் சேர்த்துப்பிசைந்து கட்டிகளின் மீது வைத்து  தொடர்ந்து 10 நாட்கள் வரைகட்டிவர *கட்டி பழுத்து உடையும்*
இதே கலவையை இரண்டுவேளையாக உணவோடு சேர்த்து உண்டுவர *சிறுநீரக அடைப்பு, சிறுநீரக தொற்று,இரத்தகுழாய் அடைப்பு, குணமாகும்*
ஆமணக்கு,ஒதியம்,முள்ளங்கி,முருங்கை ஆகியவற்றின் இலையை தனித்தனியாக இடித்து வகைக்கு 100 மில்லி சாறெடுத்து  அதோடு
ஒருலிட்டர் பசும்பால் 100 கிராம் நல்லெண்ணைய் சேர்த்து, அதோடு 30 கிராம் அதிமதுரத்தை அரைத்துச்சேர்த்து  காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடிகட்டி வைத்துக் கொண்டு காதில் மூன்று துளிகள் விட்டுவர *காதிரைச்சல்,காதுமந்தம், ஆரம்பநிலை காதுகேளாமை குணமாகும்.*
மாசிக்காயை தாய்ப்பாலில் உறைத்து தேன்பக்குவத்தில் எடுத்து
குழந்தைகளின் *வாய்,நாக்கில் உள்ள புண்களில் போட்டுவர புண் விரைவில் ஆறும்.*

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

AUM HERBALS
mobile & whatsapp
*9629368389*

💐நலம் பெருகட்டும் …

சுகமான நித்திரைக்கு உலர்ந்த திராட்சை*

*

*தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும்.*

*இணையப்பகிர்வு*

Wednesday, November 16, 2016

கொத்தமல்லி

[11/15, 16:13] Am Yoga: 🌿 *இதுதான் வழி*

*கட்டுக்கட்டா பணத்தை தயாரா வெச்சிட்டு நோயை எதிர்ப்பார்த்து கவலையோடு  காத்திருங்க.!*
*இல்லைனா துளசியும் மிளகும் சம அளவெடுத்து தேக்கரண்டி தேன்விட்டு அரைச்சி காயவெச்சி எடுத்து வெச்சிட்டு சந்தோசமா இருங்க காய்ச்சல்,தலைவலி,இருமல், இரத்த அழுத்தம், மன அழுத்தம், தலைசுற்றல், அஜீரணம்,  உடல்வீக்கம் போன்ற  500 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும்.!*

என்னப் பண்ணப்போறீங்க?

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

*AUM HERBALS*
mobile  & whatsapp
*9629368389*
[11/16, 10:54] Am Yoga: கொத்தமல்லி (தனியா )       - 60 கிராம்
வேப்பில்லை துளிர் -   8எண்ணிக்கை
மிளகு         -    5  எண்ணிக்கை
மஞ்சள்.    -  3  சிட்டிகை
சீரகம்.          -    5 கிராம்
தண்ணீர்.      -  200 மி.லி

மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி , தேன் கலந்து சாப்பிடவும் .

பயன்கள்
இதனால் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து , உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும் .முக்கியமாக ரத்தத்தில் அதிக அளவில் காணப்படும்   ' டிரைகிளிசரைட்ஸ் ' என்ற கொழுப்பின் அளவும் குறையும்.!

*இணையப்பகிர்வு*

Tuesday, November 15, 2016

கீரையின் பயன்கள்*

வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முக்கிய பங்குகொள்ளும் முளைக் கீரை!!
முளைக் கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையைக் கூர்மையாக்கக்கூடியது. இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச் சத்து உள்ளது. இதுதவிர, நார்ச் சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும்.

முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள்:


1. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. முளைக் கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.



2. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.


3. முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.



4. முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்ததுக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசிpயன்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.



5. முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.



6. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். 40 நாள்களுக்குத் குழந்தைகளுக்கு; கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.


7. முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.


8. சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.


9. முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு உண்டாகும்.


10. சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக் கீரைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.!

*இணையப்பகிர்வு*

Saturday, November 12, 2016

காலில் உண்டாகும் சுளுக்கை சுலபத்தில் குணமாக்க 3 வழிகள்.*🌿

*

*லேசாக பாதம் பிசகினாலே கணுக்காலில் சுளுக்கு உண்டாகும். அங்கே சதை அதிகம் இல்லாததால் தோலை ஒட்டிய தசை நார்களில் பாதிப்பு உண்டாகி எளிதில் நரம்புகள் இன்றோடொன்று பிணைந்து இறுக்கத்தை உண்டாக்கும். இதனை சுளுக்கு என்று நாம் கூறுவோம்.*

*அது எளிதில் போகாது. அதுவாகவே போனால்தான் உண்டு. மாத்திரை மருந்துகள் பலனைத் தராது. எவ்வாறு அதனை சரிசெய்வது என தெரிந்து கொள்வதில் விருப்பமா? கீழே உள்ள யுக்திகளை முயற்சித்துப் பாருங்கள்*

*அரை கரண்டி நல்லெண்ணெயை பொறுக்கும் அளவில் சூடு படுத்தி அதில் கைப்பிடி கல் உப்பை போட வேண்டும்.*

*இதனை ஒரு நல்ல பருத்தி துணியில் போட்டு இறுக்கமாக கட்டி அதனைக் கொண்டு ஒத்தடம் தர வேண்டும்.*

*அவ்வப்போது அதனை வெதுவெதுப்பாக சூடு படுத்தி ஒத்தடம் தாருங்கள்.*


*பின்னர் இரவில் இந்த கலவையை காலில் படும்படி பற்று போல் கட்டி வைத்துவிடுங்கள். சுளுக்கு விரைவில் மறைந்துவிடும்.*


*இது தசைகளில் உண்டாகும் இறுக்கத்தை தளர்க்கிறது. இதனால் நரம்புகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. சுளுக்கு விரைவில் குணமாகும்.*


*ஐஸ் கட்டியை சுளுக்கு இருக்குமிடத்தில் ஒற்றி எடுங்கள். . 5-10 நிமிடம் இடைவெளிவிட்டு ஒத்தடம் கொடுங்கள். தேய்க்க வேண்டாம்.*

*தினமும் ஒரு மணி நேர இடைவெளியில் இப்படி செய்தால் விரைவில் சுளுக்கு சரியாகிவிடும்.*


*இன்னொரு எளிதான் வழி இது. அரை பக்கெட் நீரை வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.*

*2-3 ஸ்பூன் எப்சம் உப்பை அதில் கலக்குங்கள். இந்த நீரில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள்.*

*15 நிமிடம் கழித்து எடுக்கவும். தினமும் இருவேளை இப்படி செய்தால் சுளுக்கு குணமாகும்.!*

*இணையப்பகிர்வு*

காய்ச்சல் -சளி- இருமல்

*காய்ச்சல், சளி, இருமல் போன்றவைகளுக்கு எளிய முறையில் வீட்டு மருத்துவம் கூறுகிறேன்*

*இதனை மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். இதற்கான டிப்ஸ்*

*ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.*

*உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.*

*அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.*

*பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைகட்டு சரியாகும்.*

*சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.*

*மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.*                          
*துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.*                                  
*மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.*

*வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.*

*பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.*

*வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியும் இருக்காது.*

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.*

*வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.*

*அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.*

*அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.*                                                                  
🍀 *இணையப்பகிர்வு*

என்றும் இளமை

"முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி " - செய்முறை விளக்கம் - "Amirtha Sanjeevi"

"கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்
கொண்டிடில் கோலை ஊன்றி
குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே "...

சித்தர்கள் இது போன்ற பாடல்கள்
வடிவில் எளிய முறையில் நோய்
களைத் தீர்க்கும் வழிமுறைகளை
வடித்துள்ளனர்.

ஆனால் இவைகளின்
உண்மை விளக்கங்களை கண்டறிந்து
அதன் படி உண்டோமானால்
பாடல்களில் கண்டபடி உண்மையான
பலன்களை அடைய முடியும்.

சித்த மருத்துவ முறையின்
தத்துவமே அண்டத்தில்  உள்ளது
பிண்டத்தில் என்பதுதான் அதாவது
அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள
பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான்
பிண்டமாகிய நமது உடலிலும்
இயங்குகின்றது.

நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்,என்ற
ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம்
வாழ்வதற்கு ஆதாரமாகவும்,ஆகாயம்
மேலே சாட்சியாகவும் இருப்பதால்
நடுவில் உள்ள நீர்,நெருப்பு,
காற்று என்ற மூன்று வித
சக்திகளை மட்டும் இயங்கும்
சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவேதான் சித்த மருத்துவ
முறையில் நாடி பிடித்து
நோய்களைக் கணிக்க மூன்று
விரல்களைப் பயன்படுத்து கின்றனர்.

அவை வாதம், பித்தம், கபம்
எனப்படும்.

வாதம் - காற்று - 1,மாத்திரை
அளவு -

பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை
அளவு-

கபம் - நீர் - 1/4- மாத்திரை  அளவு -

இது நாடியின் அளவுகளாகும்
இதன் படி கையில் நாடி துடித்தால்
உடலில் நோய் இல்லை என
அர்த்தம்.இந்த நாடி அளவுகளை
கூடவோ குறையவோ அல்லாமல்
சமன் படுத்தும் மருந்துகள் தான்
மேற்கண்ட பாடலில் உள்ளவை.

வாதம் - காற்று - 1,மாத்திரை
அளவு - -------- சுக்கு

பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை
அளவு--------- இஞ்சி

கபம் - நீர் - 1/4-
மாத்திரை  அளவு -------- கடுக்காய்

இஞ்சி,சுக்கு,கடுக்காய் இந்த
மூன்றும் தான் உடலில் உள்ள
வாத,பித்த, கபம் மூன்றினையும்
சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே
ஒவ்வொரு மருத்துவ
மூலப் பொருட்களிலும் அமிர்தமும் ,நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான்.

எனவேதான் சித்தர்கள்
இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி
மருந்துகளை தயாரிக்க
வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி
முறை எனும் பிரிவு சித்த
மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.

சுக்குக்கு புற நஞ்சு -
கடுக்காய்க்கு அக நஞ்சு எனும்
விளக்கம் உள்ளது அதாவது சுக்கில்
மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு
எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள
கொட்டை  நஞ்சு எனவே இவைகளை
நீக்கினால்தான் அமிர்தமாக வேலை
செய்யும்.

சுக்கு சுத்தி ;

தரமான சுக்கு
தேவையான அளவில் வாங்கி
சுக்கின் மேல் புறம்
வெற்றிலைக்குப் போடும்
சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட்
கணத்தில் பூசி
காயவிடவும்.பின்பு மிதமான
நெருப்பில் வாட்டவும்
சுண்ணாம்பில் நெருப்பு
பிடிக்கும் சமயம் எடுத்து
விடவும்.பிறகு நன்கு ஆரிய பின்
ஒரு கத்தியால் சுண்ணாம்பை
சுரண்ட சுக்கின் மேல் தோலுடன்
வந்து விடும் .இதனை இடித்து
சலித்து பதனம் செய்யவும்.
கடுக்காய் சுத்தி ;கடுக்காயை
உடைத்து மேலே உள்ள சதைப்
பகுதியை மட்டும்
எடுத்துக்கொள்ளவும்.கொட்டை  நஞ்சு
எனவே  நீக்கிவிடவும். சதைப்
பகுதியை இடித்து தூள்
செய்யவும்.

இஞ்சி சுத்தி ;

இஞ்சியை சிறிது
நீர் விட்டு அரைத்து பிழிந்து
சாற்றை வடித்து வைக்கவும் இதை
பத்து நிமிடம் கழித்து பார்க்க
அடியில் சுண்ணாம்பு போல்
வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு
எனவே மேலே உள்ள தெளிவை
மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த
பிறகு அமிர்தமாக வேலை
செய்யும்.

உண்ணும் முறை :

காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து
சுத்தமான தேன் அதே அளவு
கலந்து வெறும் வயிற்றில்
சாப்பிடவும்.இது பித்தத்தை சமன்
செய்யும்.

மதியம் உணவிற்கு முன்
சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு
சுடுநீரில் கலந்து
சாப்பிடவும்.இது வாயுவை சமன்
செய்யும்.

இரவில் படுக்கும் பொது கடுக்காய்
தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ
ரில் கலந்து சாப்பிடவும்.இது கபம்
எனப்படும் சிலேத்துமத்தை சமன்
செய்யும்.மலம் மிதமாக இளகிப்
போகும்.

இதன்படி ஒரு மண்டலம்
உண்ண  உடலில் இளமை
மிடுக்குடன் புத்துணர்ச்சி
கிட்டும்.

பழமொழி :

கடுக்கை உண்டால்
மிடுக்காய்  வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை
சுப்பிரமணியருக்கு
மிஞ்சிய கடவுள் இல்லை.

"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவமுறை அவசியம்"

*இணையப்பகிர்வு*

Friday, November 11, 2016

இன்றைய குறிப்புகள் 12/11/16

[11/7, 20:59] Am Yoga: *நீராவிக் குளியல்*

நன்றாகக் கொதிக்கும் நீரில், யூகலிப்டஸ் எண்ணெயைச் சிறிதுவிட்டு, அதைக் குளியலறை முழுவதும் கொட்டிவிடுங்கள். உள்ளங்கையில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இரண்டு கைகளால் தேய்த்து உடலில் தடவுங்கள்.  இது உடலில் ஈரப்பதத்தைத் தோற்றுவிக்கும்.  உடனடியாக நீராவி சூழ்ந்து இருக்கும் குளியலறைக்குள் சென்று பத்து நிமிடங்கள் இருங்கள்.  நீராவி உடல் முழுவதும் பரவி, அதிக வியர்வையை வெளியேற்றும். சுவாசத்தையும் சீராக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். இதுவும் அனல் குளியலில் ஒருவகைதான்.

பிறகு சிகைக்காய்  போட்டுக் குளிக்கலாம்.!
🍁இணையப்பகிர்வு
[11/7, 21:45] Am Yoga: 🖥*ஐம்பது வகையான* *வீட்டுக்குறிப்புகள்*

*தெரிந்துகொள்வோம்*

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.

8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.

9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.

12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.

19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.

20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக🖥 ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

48. காய்கறிகள்🖥 எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.!

*💐இணையப்பகிர்வு*
[11/8, 18:42] Am Yoga: *புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்*
*எளிய உடற்பயிற்சிகள்*

*மனித உடலில் இரத்த உற்பத்தி எங்கு நடக்கிறதெனில் எலும்பு மஞ்ஞை என்று கூறப்படும் உடல் இணைப்புகளில்  தான் நடைபெறுகிறது.*
*இந்தப் பணி சீராக நடைப்பெற்றால் உள்ளுறுப்புகளும் வெளி உறுப்புகளும் ஒழுங்காக இயங்கும்.*
*உடல் வளைவுத்தன்மை அதிகரிக்கும் எந்தவித நோயும் உடலுக்கு வராது.*
*எந்தவியாதி  இருந்தாலும் குணமாகும்*
*உடலில் 13 இணைப்புகள் உள்ளன கணுக்கால் இணைப்பு 2 மூட்டு இணைப்பு 2 இடுப்பெலும்பு இணைப்புகள் 2  கைமணிக்கட்டு இணைப்பு 2 கை முட்டி இணைப்பு 2.தோள்இணைப்பு 2. மற்றும் கழுத்து இணைப்பு 1 இந்த 13 இணைப்புகளுக்கும் நாம் தினமும் பயிற்சி கொடுத்து வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும் ஆதலால் என்றும் ஆரோக்கியமாக வாழ முடியும்.*
*நான் நிறைய வேலை செய்கிறேன் எனக்கு இது தேவையில்லை என்று நினைப்பது தவறு. ஏனெனில் எத்தனை மணி நேரம் பம்பரமாய் சுழன்றாலும் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க முடியாது.*
*பத்து நிமிடம் திட்டமிட்ட உடற்பயிற்சியால் மட்டுமே அதை சாதிக்க முடியும்*

*முதலில் நேராக நின்று 15 விநாடிகள் இறைநிலையை நினைத்து பிராத்தனை*

*1.HEALS FREE கணுக்காலுக்கானப் பயிற்சி*
*நேராக நிமிர்ந்து நின்று கால்களை சேர்த்து வைத்துக்கொண்டு கால் விரல்கள் மற்றும் குதிகாலை மாற்றிமாற்றி தரையில் ஊன்றி பயிற்சி செய்வது. இந்தப் பயிற்சியை 20 முறைகள் செய்து கொள்ளலாம்.*

*2.KNEE FREE தொடையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்து எழுவது முட்டிகளுக்கானப் பயிற்சி 10 எண்ணிக்கை செய்துகொள்ளலாம்.*
*<இதற்கு பதிலாக தோப்புக்காரணம் போடுவதும் மிக சிறந்தது.>*

*3.HIP Rotating இடுப்பை வலமாக மூன்று சுற்று இடமாக மூன்று மீண்டும் வலமாக மூன்று இடமாக மூன்று என்று 12 எண்ணிக்கைகள் சுற்ற வேண்டும்.*

*4.Finger Exercise*
*இரண்டு கைகளையும் நீட்டி முதலில்*
*பெருவிரல் தொடங்கி  இரண்டு கைகளின்  பத்துவிரலையும் இரண்டு இரண்டாக மடக்கி அதாவது வலது பெருவிரல் இடது பெருவிரல் இரண்டையும் ஒரே நேரத்தில் மடக்கி  இறுதிவிரல்வரை மடக்கிவிட்டு பிறகு அதேபோல இறுதிவிரலில் இருந்து பெருவிரல் வரை வரவேண்டும்.*
*இதுபோல் மூன்று சுற்றுகள் செய்யலாம்.*

*Wrist Rotate*
*இரண்டு கைகளையும் நீட்டி வெளிப்பக்கமாக மூன்று முறை மணிக்கட்டை* *சுற்றவேண்டும்.*
*பிறகு உள்பக்கமாக மூன்று முறை இதுபோல் 12* *எண்ணிக்கை சுற்றவேண்டும்.!*

*1.KNEE FREE*
*மார்புக்கு நேராக கைகளை கோர்த்துக்கொண்டு  கைகளை முன்பக்கமாக திருப்பி நீட்டி பயில்வது.*
*10 முதல் 20 முறை செய்யலாம்.*

*7.SOLDER Rotate*
*கைகளை மடக்கி இரண்டு தோள்களையும்* *முன்பக்கம் 3 முறைகளும்  பின்பக்கம் 3 முறைகளும் சுற்ற* *வேண்டும்*
*இதுபோல்மொத்தம் மாற்றிமாற்றி நாலு சுற்றுகள் செய்யவேண்டும்.*

*8.Neck Exercise*
*பத்து முறை தலையை நிமிர்த்தி தாழ்த்திப்பார்ப்பது.*
*10 முறை தலையை இடவலமாக மெதுவாக திருப்புவது*
*8 முறை மேல்,வலது,கீழ்,இடது,மேல்,இடது,*
*கீழ், வலது*
*என்று திருப்புவது.*

*இந்தப் பயிற்சிகள்*
*மிக அற்புதமாக* *பயனளிக்கும்*
*இது நமது யோகா & இயற்கை வாழ்வியல் மையத்தில் யோகசனப் பயிற்சிகளுக்கு முன் செய்யப்படும் அடிப்படை உடற்பயிற்சி*
*வேறு மையங்களில் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள்*
*அதுபோலவே யோகாசன சாம்பியன்களுக்குரிய உடற்பயிற்சி தனியாக உள்ளது*
*அது இதுபோல் அனைவரும் செய்வதற்கு எளிதாக இருக்காது.*
*யோகா பயிலாமல் தினமும் இந்தப்பயிற்சிகளை மட்டும் காலை மாலை தொடர்ந்து 60 நாள் செய்தால் உடலில் புதிய இரத்தம் ஊறி உடலே புதிய பரிமாணத்தில் இயங்க ஆரம்பித்துவிடும்.*
*எல்லாவகை உடல் வலியும் குணமாகிவிடும்.*
*அனைவரும் பழகி நலம் பெருக.!*

*மேலுள்ள படத்தைப் பார்த்து எளிதாக புரிந்துகொள்ளலாம்.!*

🍀இயற்கை & யோகா மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

*AUM HERBALS*
whatsapp & Mobile
*9629368389.!
[11/8, 20:17] Am Yoga: எங்க வீட்டுக்கு முன்னாடி நாற்பது வயதை கடந்த ஒரு மாங்கா மரம் இருக்குங்க..

வருஷத்தில ஆயிரம் காய்க்கு மேல கொத்துக்கொத்தா பிடிக்கும்..

ஆனா கடந்த ஏழு வருஷமா காயே பிடிக்கல ..
என்னென்னு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சேன்..
ஒரு வேளை எரு பற்றாக்குறையால காய்க்கலையோ,
தென்னை மர நிழல்னால காய்க்கலையோ,
வர்றவங்க போறவங்க எல்லாம் "வீட்டுக்கு முன்னாடி மா மரம் ஆகாது "னு சொன்னதால காய்க்கலையோ,
சத்து குறைபாடினால காய்க்கலையோ னு பலபல சந்தேகங்கள் மனசுல ஓடீட்டே இருந்துச்சு..
ஒருத்தர் சொன்னார் "செத்து போன நாயோ, பூனையோ ஏதாவது ஒன்னை மரத்தடியில புதைச்சிடுங்க கண்டீப்பா அந்த மா மரம் காய்க்கும்னு..

ஒரு நாய் ரோட்ல அடிபட்டு கிடந்ததை எடுத்து வந்து (வீட்டுக்கு தெரியாம) புதைச்சு பார்த்தேன்..
ஒன்னும் பலனில்ல..

சரி வேறு வைத்தியம் பார்க்கலாம்னு
பஞ்சகவ்யாவிலிருந்து பாஸ்போ பேக்டீரியாவரை எல்லா தாக்குதலையும் நடத்தி ஒன்னுமே பலன் கொடுக்கல...
யோசிச்சேன்
யோசிச்சேன்..
நல்லா யோசிச்சேன்..

என்னடா இது வேலி முள் விளைஞ்ச நிலத்தில்கூட விவசாயம் செய்கிறோம்..

நல்லா காய்ச்சிட்டு இருந்த மரம் இப்படி ஆகிடுச்சேனு மண்டையை போடு உடச்சிட்டு இருந்தேன்..
அப்போ ஒன்னு என் ஞாபக்கத்துக்கு வந்தது..
வீட்ல அம்மா கையில் துவைக்கிறது கஷ்டம்னு என் தந்தை "வாசிங் மிஷின் "வாங்கி வச்சது சிறு மூலைக்கு எடுச்சு..

அதுக்கு சோப்பு பவுடர் ரின், பவர் அது இதுனு போட்டு கொட்டீட்டு இருந்ததும் ஞாபகம் வந்தது..

அந்த இயந்திரம் வந்ததிலிருந்துதான் அந்த மாமரம் காய்ப்பதில்லைனும் ஒரு மாசத்துக்கு முன்தான் என்னோட பெரு மூலைக்கும் எட்டுச்சு..

காரணம் என்னனு பார்த்தா அந்த இயந்திரத்திலிருந்து போகிற கழிவு நீரும், சமையல் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் விம் பாரும் நேரா அந்த மாமர ஆனி வேரிலையே போய் ஊத்தீட்டு இருந்த விசயம் மரமண்டைக்கு உரைச்சது..

உடனே அந்த சோப்பு பவுடரும், விம் பாரும் வாங்கிறத நிறுத்தினேன்..

வேப்ப எண்ணெயில் தயாரான காதி சோப்பை வாங்கி அந்த இயந்திரத்தில் போட்டேன்,பாத்திரம் கழுவ அடுப்பு சாம்பலை பயன்படுத்தினோம்..

என்ன ஆச்சரியம் இப்போ அந்த மாமரம் துளிர் விட்டு பச்சை பசேல்னு தளஞ்சிட்டு இருக்கு ..

நல்லா யோசிங்க.

என்னோட ஒரு வீட்டின் கழிவுநீரிலே நாற்பது வயது மாமரத்தை பட்டு போக வைக்கும் அளவுக்கு விஷம் நீரை நான் இத்தனை நாளா பயன்படுத்தி நிலத்தை பால்படுத்தி வந்திருக்கேனா,அப்போ நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவங்க எத்தனை மரத்தத்தையும், மணணையும் போக வச்சிருப்போம்..?

 *🌴இணையப் பகிர்வு*
[11/9, 20:42] Am Yoga: *ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான அடிப்படை யோகாசனங்கள்*

*யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் உடல் தளர்வு பயிற்சியை செய்ய வேண்டும்*
*அதன் பின்*
*சமஸ்திதி  அதாவது சமநிலையில் நின்று மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.*

*ஒவ்வெரு ஆசனப்படத்திலும் முதலில்  நிற்கும்* *பெண் செய்வது*
*ஆரம்ப நிலை* *இரண்டாவது நிற்கும் ஆண் செய்வது ஆசனத்தின் இறுதிநிலை*

*1.Thadasana*
*3x10 count*
*நேராக கால்களை சேர்த்து நின்று மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே பக்கவாட்டில்  கைகளை தலைக்கு மேலே தூக்கி   கும்பிட்டபடி வைத்துக்கொள்ளவும்.*
*அப்படியே மூச்சை உள்ளடக்கிய படியே 10 எண்ணிக்கைகள் நின்று கொண்டு* *பிறகு மூச்சை வெளியேற்றியவாரே மெதுவாக கைகளை*
*கீழே இறக்கி ஆரம்பநிலைக்கு வரவும்.*
*இதுபோல் 3 முறை செய்யவேண்டும்*

*2.Tolasana*
*2 x 10 count*
*நேராக நிமிர்ந்து நின்று குதிகால்களை மேலே தூக்கிக் கொண்டு விரல்களை மட்டும் ஊன்றி நிற்கவும்.*
*பிறகு மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே பக்கவாட்டில் கைகளை உயர்த்தி தலைக்கு மேல் உள்ளங் கைகளை  இணைத்த நிலையில் 10 எண்ணிக்கைகள் நிறுத்திவிட்டு பிறகு மூச்சை வெளியேற்றியவாறே கைகளை மெதுவாக கீழிறக்கவும். இதுபோல் 2 முறை செய்துகொள்ளலாம்.*

*3.Udkattasana*
*3 x count*
*படத்தில் உள்ள முதலா மாணவரைப்போல* *காலைசேர்த்து*
*தலைக்கு மேலே* *கையை கோர்த்து நின்று பிறகு மெதுவாக முடிந்தவரை அதே* *நிலையில் முட்டியை மடக்கி அமரவேண்டும்.*
*அதே நிலையில் 10 எண்ணிக்கை இருந்த பிறகு மெதுவாக எழுந்து கைகளை கீழிறக்கிக் கொள்ளலாம்.* *இதுபோல் மொத்தம் 3 முறை செய்யவேண்டும்.*

*4.Artha catti chakrasana*
*4x 10 count*
*கால்களை சேர்த்து நேராக நிமிர்ந்து நின்று வலது கையை மட்டும் மேலே தூக்கி  புஜம் காதில் தோடுவது போல் வைத்துக்கொண்டு மெதுவாக இடது பக்கவாட்டில் உடலை முடிந்த மட்டும் வளைத்து அப்படியே 10 எண்ணிக்கைகள் நின்றுவிட்டு மெதுவாக நிமிர்ந்து கையை கீழிறக்கவும்.*
*இதுபோல் இடது கையை மேலேதூக்கி ஒருமுறை செய்துவிட்டு மீண்டும் வலது கை, இடது கை என்று மற்றொரு முறை செய்து இந்த ஆசனத்தை நிறைவு செய்யலாம்.*

*5.Virikchasana*
*4 x 15 count*
*வலதுகாலை மடக்கி*
*இடது தொடையின்* *மீது வைத்துவிட்டு பிறகு இரண்டு கைகளையும்* *பக்கவாட்டில் உயர்த்தி*
*தலைக்குமேல்* *சேர்த்து வைத்துக்* *கொண்டு 15* *விநாடிகள் சாதாரண சுவாசத்தில் நின்று* *விட்டு பிறகு மெதுவாக கைகளை கீழிறக்கிக்* *கொள்ளலாம்.*
*இதுபோல் இடது காலை வலது தொடையில் வைத்து ஒருமுறை செய்துவிட்டு இன்னொரு சுற்று இதுபோல் செய்து நிறைவு செய்யலாம்.*

*6.parsuva konasana*
*4 x 10 counts*
*படத்தில் உள்ள  முதலாமானவரைப்போல  கால்களை கொஞ்சம் அகலமாக விரித்து, கைகளை நீட்டி நின்று கொண்டு மெதுவாக வலது காலை மடக்கி வலது கையை காலை ஒட்டி வெளிப்பக்கத்தில் வைத்து இடது கையை இடது காதை ஒட்டி வலது பக்கமாக நீட்டி நேராக பார்க்கவும் இதுபோல் 10 விநாடிகள் இருந்துவிட்டு நிமிர்ந்து இடது பக்கமும் இதுபோல் செய்து விட்டு மீண்டும்  இதுபோல் வலது இடது என்று ஒரு சுற்று செய்து நிறைவு  செய்க*

*7.Ehaphatha hasthasana*
*4X 10 count*
*கால்களை சேர்த்து கைகளை நன்றாக தலைக்கு மேல் தூக்கி  நிமிர்ந்து  மெதுவாக முட்டை மடிக்காமல் முன்னே வளைந்து கைகளை  கால்களின் அருகே வைத்து பின் வலது காலைமட்டும்  முடிந்தவரை பின்னால் உயர்த்தவும்.*
*இதே நிலையில் 10 எண்ணிக்கைகள் இருந்துவிட்டு மெதுவாக காலை மடக்கி கிழே வந்து பிறகு இடது காலை   தூக்கி ஒருமுறை செய்துவிட்டு எழுந்து இன்னொரு சுற்று இதுபோல் செய்ய வேண்டும்.*

*8.Artha cakrasana*
*3x 10 counts*
*இடுப்பில் கையைவைத்து நிமிர்ந்து நின்று பிறகு மெதுவாக இடுப்பை தாங்கிப் பிடித்தவாறு பின்பக்கமாக வளைய  வேண்டும் பிறகு முடிந்தால் கையை இடுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கணுக்காலை தொட முயற்சி செய்து இறுதி நிலையில் 10 விநாடிகள் இருந்து பிறகு மெதுவாக மேலே வரலாம்.!*
*30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இடுப்பிலிருந்து கைகளை நகர்த்தி கீழே கொண்டு செல்ல வேண்டாம்.*
*இடுப்பில் கைவைத்த நிலையிலேயே 10* *விநாடிகள் இருந்து மேலே வந்துவிடலாம்.!*
*இதுபோல் மூன்று சுற்று செய்து நிறைவு செய்யலாம்.*

*நாம் கூறியுள்ள இந்த 8 ஆசனங்களையும்   தினமும் பயின்று வந்தால் குதிகால்வலி மூட்டுவலி இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி,கால்வலி போன்றவை அகலுவதோடு உடல் வில்லாக எல்லாப்பக்கமும் வளையும் ஆற்றல் பெறும். உள்ளுறுப்புகள் பலமாகும்.*
*இரத்த ஓட்டம் விரைவு பெறும்.*
*நோய்கள் எதுவும் 50% குணமாகும்.*
*இளமையானதோற்றமும் நீண்ட ஆயுளும் உண்டாகும்.*!

யோகா & இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

*Aum Herbals*
Mobile&whatsapp
[11/10, 11:48] Am Yoga: பாதம் எவ்வளவுக்கு எவ்வளவு கடினமா இருக்கோ,
அவ்வளவுக்கு அவ்வளவு உங்க உடம்பு ஆரோக்கியமா இருக்குன்னு அர்த்தம்...

ஆரம்ப காலத்து தமிழர்கள்ல,
ஏங்க 50,60 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவுங்க வரை எவ்வளவு பேர் செருப்பு போட்டுருந்தாங்க..?

வயல்ல இறங்கி வேலை பாத்தவுங்க,
வெறுங்கால்ல நடந்தவுங்க,
செருப்பு போட்டே பழக்கமில்லாதவுங்க,
இவுங்களுக்கெல்லாம் ஏன் நோய் எதுவும் வரல.?
இவுங்கள்லாம் சாகுற வரைக்கும் எப்படி ஆரோக்கியமா இருந்தாங்க.??

பாதத்துல இருக்குற நரம்ப தூண்ட வக்கிறதால,
நம்ம உடல் உள்ளுறுப்புக்கள ஆரோக்கியமா வைக்கலாம்.!!!

ஆனா இந்த உண்மைய நம்ம கிட்ட மறைச்சி,
முதல்ல கால்ல செருப்பு போட வச்சான்,
அப்புறம் ஷூ போட வச்சான்,
கூடவே சில ஹாஸ்பிடல் லிஸ்ட்டும் கொடுத்தான்.
இப்ப நம்ம கிட்ட அப்டுடேட் இன்பர்மேஷன் - எந்த நோய்க்கு எந்த ஹாஸ்பிடல்ல போய் அட்மிட் ஆகலாம்'னு.!!!😢

ஆனா நோய் வராம எப்படி பாத்துக்கனும்'ற தகவல் நம்ம யார் கிட்டயும் இல்ல,
ஒருவேளை யாராவது சொன்னா, அவுங்கள நம்ம கேக்குற கேள்வியால அவுங்க இந்த பக்கமே தல வச்சி படுக்க மாட்றாங்க...

சரி விஷயம் இது இல்லீங்க,
நீங்க ஒரு நாளைக்கு கொஞ்ச நேரமாவது செருப்போ இல்ல ஷூவோ இல்லாம வெருங்கால்ல நடந்து உங்க உடம்ப ஆரோக்கியமா வச்சிக்கோங்க...

மறுபடியும் சொல்றேன்..,
பாதம் பலப்பலன்னு சாப்ட்டா இருந்தா,
உடம்பு கொலக்கொலன்னு ரொம்ப சாப்ட்டா இருக்கும், கண்டிப்பா நோய் எதிர்ப்பு சக்தி குறைவா தான் இருக்கும்...

நீங்க உங்க பாதத்த பாத்துக்கோங்க,
உங்க பாதம் உங்க உடம்ப நல்லா பாத்துக்கும்.!!!

*இணையப்பகிர்வு*
[11/10, 17:39] Am Yoga: *முருங்கை தின்றால் நூறுவயது*

முருங்கை மரத்தில் ("Moringa oleifera") இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.

இதன் தாவரவியல் பெயர் "Moringa oleifera". இதில் "muringa" என்ற பெயர் , "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.

உயிரியல் வகைப்பாடு

திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Moringaceae
பேரினம்: Moringa
இனம்: M. oleifera
தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%
வைட்டமின் ஏ : 11300/IU
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம்

முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன.

முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது...

கண்ணுக்கு மிகவும் நல்லது.
மலச் சிக்கலைத் தீர்க்கும்.

தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.

வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

தினமும் கையளவு முருங்கை இலையை ஒரு மண்சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி குடித்துவர இரத்தசோகை, உடல்வலி, கைகால் வீக்கம் குணமாகும்.

முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.

இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.

நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.

கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.

• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை உணவுமுறை அவசியம்"

*🌿இணையப்பகிர்வு*
[11/11, 04:52] Am Yoga: உணவு விழிப்புணர்வு 19

நாம் ஏன் குண்டாகிறோம்??

நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்

நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ??

மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம்.

ஏன் நாம் குண்டாகிறோம்???

நாம் உட்கொள்ளும் உணவு முறை தான்

வேறு என்ன இருக்க முடியும்??

நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா??

நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி இருபது வயதிலேயே தொப்பை தள்ளி இருக்கவில்லையாமே..
நாம் மட்டும் ஏன் வயிற்றை வளர்க்கிறோம்??

நமது முன்னோர்கள்( நமக்கு மின் சென்ற சில தலைமுறைகள்) என்ன உணவு உண்டார்கள்??

திணை, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேப்பை, எள்ளு, கொள்ளு என உண்டார்கள். அரிசியில் இட்லி செய்து சாப்பிடுவது எல்லாம் வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான்.

ஆனால் நாம் தினமும் அரிசியில் செய்யப்பட்ட இட்லி தோசை சாதம் என ஃபுல் கட்டு கட்டுகிறோம்.
அதோடு நில்லாமல் ஸ்நேக்ஸ் என்ற பெயரில் ரீபைன்டு சுகரில் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை, பஜ்ஜிகள், புரோட்டாக்கள், பப்ஸ், சமோசா.

காஸ்ட்லியான ஆட்களாக இருந்தால் பீட்ஸா, பர்கர், சேன்ட்விச், ஐஸ் கிரீம்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.

நம் முன்னோர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??

நம் முன்னோர்கள் வாழ்வதற்காக உணவு உண்டனர் , நாமோ உணவு உண்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவர்கள் காலத்தில் இத்தனை எளியதாக உணவுகள் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் அயராத உழைப்பைச் சிந்தி நாளின் முடிவிலே கிடைக்கும் ஒரு வேளை உணவாயினும் உண்டு உயிர் பிழைத்து வந்தனர்.

நாமோ அனுதினம் மூன்றிலிருந்து ஐந்து வேளை உணவுகளை பசியே எடுக்காமலும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறோம்.

அவர்கள் உண்ட உணவில் மாவுச்சத்தின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தன ஆனால் நமது  உணவில் மாவுச்சத்து மட்டுமே பிரதானமாக நிரம்பியிருக்கிறது.

என்றாவது நாம் யோசித்திருப்போமா??
ஏன் தினமும் மூன்று வேளையும் சதா அரிசியில் செய்த உணவுகளையே தின்று வருகிறோம் என்று??

நமது உடல் குண்டாவதற்கு காரணம் அது தான்..
ஆம் நாம் உண்பது அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை

நம்மை குண்டாக்குவதற்கே படைக்கப்பட்ட ஹார்மோன்
"இன்சுலின்" (insulin)

பசி பஞ்சத்தில் இருந்து நம்மை காக்க நமக்கு அருளப்பட்ட அமிர்தம் இந்த இன்சுலின்.

இந்த இன்சுலின் என்ன செய்கிறது தெரியுமா??

மனிதன் அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டால், அதை வைத்து சிறிதை கல்லீரலில் க்ளைகோஜனாகவும் பெரும்பகுதியை கொழுப்பாகவும்
( triglycerides) சேமிக்கிறது

ஏன் இப்படி கொழுப்பை சேமிக்கிறது??

வரப்போகும் பஞ்சத்தை நாம் தாக்குப்பிடிக்கும் விதமாக இந்த சேமித்த கொழுப்பு பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.

உங்கள் கேள்வி புரிகிறது..

இப்போது தான் பஞ்சமே வருவதில்லையே??

ஆம் நமக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
பிறகும் ஏன்.. பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல மூன்று வேளையும் சதா கார்போஹைட்ரேட்டை தின்று கொண்டே இருக்கிறோம் ??

நமக்கு எதுக்கு இப்போது தேவையில்லாத கொழுப்பு??

சரி விசயத்துக்கு வருவோம்

இந்த தொப்பையில் உள்ள கொழுப்பானது  நமது உடலில் கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைடுகளை ஏற்றிவிடுகிறது.

மாவுச்சத்து திண்ண திண்ண இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கிறது.

இன்சுலினை சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்கள் மூச்சுத் திணறுகின்றன.

நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பான
"ரீபைன்டு சுகர்" எனப்படும் சீனி
கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை ஒரே அடியில் கொலை செய்தேவிடுகின்றன.

ஆம்.. ரீபைன்டு சுகர் சந்தைக்கு வந்ததும் தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது.

இந்த நீரிழிவு நோய்க்கு காரணம்
நமது உடலில் சுரக்கும் இன்சுலின்
வேலை செய்யாமல் போவது தான்
இதைத் தான் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

இன்சுலின் மட்டும் தான் காரணமா??

இல்லை இன்னும் இரு ஹார்மோன்கள் இருக்கின்றன.

முதல் ஹார்மோன்
"க்ரெலின்" (GHRELIN)
இரண்டாவது ஹார்மோன்
" லெப்டின்" (LEPTIN)

இந்த க்ரெலின் இருக்கிறானே இவனது  வேலை
பசியைத் தூண்டிக்கொண்டே இருப்பது
                 |
                \/
 வயிறு காலியானால் உடனே சுரக்கப்பட்டு, மூளைக்கு அலாரம் அடித்து பசிக்கான பகுதி தூண்டப்படும் (appetite center)  , பசி எடுக்கும்
                 |
                \/
நாம் பசி எடுத்ததும் சாப்பிடுவோம்
வயிறு நிறையும்
                 |
                \/
நமக்கு நிறைவு  ஏற்பட்டு பசி அடங்கியதும், லெப்டின் சுரக்கப்படும். அது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டும்( satiety center)
                |
               \/
     பசி அடங்கும்

இதுதான் சரியான நடைமுறை

ஆனால் குண்டாக இருப்பவர்களுக்கு (obese persons) , க்ரெலின் மட்டும் நன்றாக வேலை செய்வான்.

லெப்டின் மக்கர் செய்ய ஆரம்பிப்பான்.

ஏன் என்றால்..
லெப்டின் மூளைக்குச் சென்று திருப்திப் பகுதிக்குச் சென்று தனது வேலையைச் செய்வதை குண்டான மனிதரின் கொழுப்பான ட்ரைகிளசரைட்ஸ் தடுத்து விடுகின்றன. இதை "லெப்டின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.

ஆகவே லெப்டின் வேலை செய்யாத நிலையில் , க்ரெலின் மட்டும் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பதால் நாம் தொடர்ந்து உண்டு கொண்டே இருக்கிறோம் ..
குண்டாகிறோம்.

இதில் இன்னொரு தகவல் யாதெனில்

இந்த க்ரெலின் ,மாவுச்சத்தை உண்போருக்கு அதிகமாகவும்

புரதச்சத்தையும் கொழுப்பையும் அதிகமான அளவு உண்போருக்கு குறைவாகவும் சுரக்கிறது.

கார்ப்ஸ் உண்பவர் அனுதினமும் பசியெடுத்து எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும்,

கொழுப்புணவை உண்பவர் 20 மணிநேரம் விரதம் இருந்தாலும் அகோரப் பசி தோன்றாமல் இருப்பதற்கும்  இது தான் காரணம்.

ஆகவே உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து , புரதத்தை தேவையான அளவு உண்டு, கொழுப்பை நன்றாக எடுத்துக்கொண்டால்
தொப்பை கரையும்

கொழுப்பை கொழுப்பால்தான் கரைக்க முடியும்.!

*இணையப்பகிர்வு*
[11/11, 14:18] Am Yoga: *பதங்களை பின்னும் கிளிஞ்சல்கள்*

*கருத்து கூறுவதை விட அனுபவங்களை பகிர்வதே  மேன்மையானது. ஏனெனில்*
*கருத்து என்பது உலகால் சேகரிக்கப்பட்டு நம்மீது திணிக்கப்பட்ட குப்பை. அனுபவம்* *என்பது நமது ஆன்மாவால்* *உணரப்பட்ட உண்மை.*

என்ன இருந்தால் நாம் மகிழ்ச்சியாக வாழமுடியும் , எந்தப் படிப்பு படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும், எந்த மருத்துவர் இதய அறுவை சிகிட்சையில் வல்லவர், எந்த பசை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உடலை காக்கும், எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நாம் சந்தோசமாக வாழமுடியும்?  கறுப்பு பணத்தை ஒழிக்க என்ன வழி?

போன்ற எல்லா கேள்விகளுக்கும்  நம்மிடம் ஒரு பதிலும் கருத்தும் இருக்கிறது.
செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அரசு, அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்கள்
போன்றவர்களால் உருவாக்கப்பட்டதே  உங்களிடம் உள்ள எல்லாக் கருத்துகளும் பதில்களும். இவை அனைத்தும் வெற்றுக் குப்பைகள். காலாவதியாகிக் கொண்டிருக்கும்  1000 ரூபாய் தாள்களைப் போன்றவை.

இப்போது எனது அனுபவத்தை கூறுகிறேன்.அரசு ஒதுக்கீட்டில் இடம்பெற்று எனது மகனை சேர்ப்பதற்கு ஒரு தனியார் கல்லூரிக்கு  சென்றிருந்தேன். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட நான்கு மடங்கு கட்டணம் கேட்டார்கள். இது நியாயமா? என்றால் இருந்தால் கட்டி படிக்க வை இல்லாவிட்டால் கிளம்பு. எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்கள். நீதிமன்றம் போகலாம் என்றால் அங்கு இதுபோல் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றார்கள். பலநாள் நானே உரம்போட்டு வளர்த்த என் பையனின்  கனவை கலைக்க மனம் இல்லாமல் கையில் இருந்த பணம், வங்கிக்கடன், நண்பர்களின் உதவி என்று எல்லாம் கொடுத்தபின்னும்
பணம் போதவில்லை. இது ஒரு தந்தையின் அனுபவம். ஒரு மாணவனின்  அனுபவம் சொல்கிறேன்  கேளுங்கள். இதை உணரும் இதயம் உள்ள மனிதன்  எவனும் கலங்கிவிடுவான். கருத்துகளை கூறும் வெற்றுப்பிணங்கள் நகைக்கக்கூடும்.
கல்லூரி உணவகத்தில் மத்தியானம் உணவருந்த 100 பேர் அமர்ந்திருக்கும் போது தூரத்தில் இருந்து ஒரு அறிவிப்பு கேட்கும். மெஸ் பில் கட்டாத, பில் பாக்கி உள்ள மாணவர்கள் எல்லாம் எழுந்து போங்க  பிறகு சோறு மீதி இருந்தா கூப்பிடுவாங்க என்று. இதை கேட்டதும்  ஒரு 10, 15 மாணவர்கள் எழுந்து வெளியே செல்வார்கள். பிறகு பசியோடு பட்டினியாய் படித்தாலும் படிப்பார்களே தவிர  இதுபோன்ற அவமானத்தை மீண்டும் பெற்றுவிடக்கூடாது என்று குமுறுவார்கள்.
ஆண்டுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கிவிடுவார்கள். ஆனால், நாலு மடங்கு கட்டணம் அதிகமாய் வாங்கிக்கொள்ளும் இந்த கல்வி சேவையாளர்கள் பத்து சதவீதம்  ஆண்டுக்கட்டணம் பாக்கி இருந்தால் கூட  குறிப்பிட்ட அந்த மாணவ மாணவிகளுக்கு மட்டும்  ஹால் டிக்கெட்டை  தேர்வன்று காலை வரை வழங்காமல் அலை கழிப்பார்கள். அதன்பிறகு பெற்றோர்களை கூப்பிட்டு எழுதிவாங்கிக் கெண்டு தேர்வு நாள் காலையில்  கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட்டை வழங்கி பணம் தான் அனைத்திலும் பிரதானம் என்ற நீதிபோதனையை மாணவர்களுக்கு சொல்லாமல் சொல்வார்கள்.!
வருடம் முழுவதும் படித்துவிட்டு தேர்வு எழுதபோகும் நேரத்தில் இப்படி செய்வதால் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதுவோமா மாட்டோமா என்று கடைசிவரை இறுகிய இதயத்தோடவே கலங்கி நிற்பார்கள்.
இது போன்ற அனுபவத்தை  பெற்ற மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அனுபவத்தின் உண்மை தரிசனம் புரியும். இதே போன்ற விசயங்களை எதிர்த்து கேட்ட மாணவிகளை கொன்று கிணற்றில் போட்டார்கள் சேலத்தில் ஒரு இயற்கை மருத்துவக்கல்லூரியில். இறந்த பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மட்டுமே தெரியும்  அதன் அனுபவ வலி. முதலில் கல்லூரியை மூடி சீல்வைத்த  ஆட்சியர் அலுவலகமே இன்று அதே கல்லூரியை மீண்டும் திறக்க தடையில்லை. என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பணமும் அரசியலும் சேர்ந்தால் எதையெல்லாம் சாதிக்கும் என்பது இப்பொழுது அனைவரும் உணர்ந்து கொண்டு வேறுமனே கருத்து கூறலாமே தவிர வலியை உணர முடியாது. இரண்டு லட்சம் கட்டினால் தான்  உங்கள் தாய்க்கு அறுவை சிகிட்சை செய்ய முடியும் என்று  ஒரு மகனிடமோ மகளிடமோ மருத்துவர் கூறும்போது அவர் எங்களிடம் காப்பீடு அட்டை உள்ளது  என்று கூறினால் அதுபோக ஒருலட்சம் கட்ட வேண்டும்.   என்று கூறும்போது தான் அரசியல் வாதிகளின்  போலி திட்டங்களை  உணரமுடியும். வேடிக்கைப் பார்த்து வெறுமனே கருத்துகூறும் பிண்டங்களுக்கு  என்ன உண்மை தெரியும்.!
ஒரு இயற்கை மருத்துவக் கல்லூரியிலேயே  இத்தகைய  அனுபவங்களை பெற முடியுமென்றால்  தனியார் அலோபதி மருத்துவக்கல்லூரியில் எவ்வளவு உயர்ந்தப் படிப்புகளை உணர்ந்து வருவார்கள் பிள்ளைகள். பிறகு எதன் அடிப்படையில் எப்படியெல்லாம் வைத்தியம் செய்வார்கள். என்று அங்கிருந்து வரும்
மாணவர்களுக்கேத் தெரியும். சரி உங்களுக்கு நல்லது எதுவுமே உணர முடியலியா அனுபவத்தின் மூலம் என்றால் முடிந்தது. கல்வி உதவிக்காக வாட்ஸ் அப் நண்பர்கள் மட்டும் 30000 ரூபாய் வரை தருவதாய் வாக்களித்துள்ளனர் அதில் பாதியளவிற்கு டிடியாகவும் பணமாகவும் அனுப்பி விட்டனர். மற்றவர்களும்  விரைவில் அனுப்புவார்கள்.!
ஆனால்,  அரசு வழங்கும் முதல் தலைமுறை பட்டதாரிக்கான  உதவித்தொகை ஆண்டு முடிந்தும்  இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு  நம்மைப்போன்று கலந்தாய்வில் இருக்கைப் பெற்று தனியார் கல்லூரியில் இருக்கைப் பெற்ற
ஒரு  ஏழை மாணவரின் பெற்றோரிடம் உண்மையை எடுத்துக்கூறி அக்குப்பஞ்சர் அல்லது BSC யோகா  படிக்க வையுங்கள் என்று நமது அனுபவத்தைகூறி உதவினோம்.!
உங்கள் சிரமத்தை அனைத்து நண்பர்களிடம் கூறி உங்கள் மதிப்பை  கெடுத்துக் கொள்ள வேண்டாம்.! என்னைப் போன்ற ஒரு சில நண்பர்களிடம் மட்டும்  இன்பாக்ஸில் உதவி கேட்டால் போதுமே என்றார். அது அவருடைய கருத்து. வெற்று மதிப்பென்பது மாயை. உண்மையை உரைப்பதே நமது சேவை.!
யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக யாம் பெற்ற துன்பம் யாரும் பெறாதிருக்க  என்பதே நமது எண்ணம்.  அதற்காகவே எனது  அனுபவத்தில் ஒரு துளியை பகிர்கிறேன்.  இதுபோன்ற உண்மையான அனுபவங்கள் அனைத்தும் காலத்தின்  அனுபவ புதையல்கள் இது இங்கு ஒரு சிலருக்காவது  பயன்படும்💐.  
கறுப்பணத்தை வேட்டையாடுவதாக் கூறி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தவர்கள் இதுபோன்ற கல்விகொள்ளைக்கு எதிராக ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுவார்களா?

நலம் பெருகட்டும் …  

*இயற்கை மருத்துவ இரகசியங்களுக்கு*
amyogatrust.blogspot.in
*AUM HERBALS*
mobile & whatsopp  9629368389
[11/11, 16:57] Am Yoga: *நெருஞ்சி  மருத்துவம்*

தமிழ் மருத்துவ மூலிகைகளில்  ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.!

🌴 *இணையப்பகிர்வு*