[11/7, 20:59] Am Yoga: *நீராவிக் குளியல்*
நன்றாகக் கொதிக்கும் நீரில், யூகலிப்டஸ் எண்ணெயைச் சிறிதுவிட்டு, அதைக் குளியலறை முழுவதும் கொட்டிவிடுங்கள். உள்ளங்கையில் ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இரண்டு கைகளால் தேய்த்து உடலில் தடவுங்கள். இது உடலில் ஈரப்பதத்தைத் தோற்றுவிக்கும். உடனடியாக நீராவி சூழ்ந்து இருக்கும் குளியலறைக்குள் சென்று பத்து நிமிடங்கள் இருங்கள். நீராவி உடல் முழுவதும் பரவி, அதிக வியர்வையை வெளியேற்றும். சுவாசத்தையும் சீராக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். இதுவும் அனல் குளியலில் ஒருவகைதான்.
பிறகு சிகைக்காய் போட்டுக் குளிக்கலாம்.!
🍁இணையப்பகிர்வு
[11/7, 21:45] Am Yoga: 🖥*ஐம்பது வகையான* *வீட்டுக்குறிப்புகள்*
*தெரிந்துகொள்வோம்*
1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக🖥 ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
48. காய்கறிகள்🖥 எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.!
*💐இணையப்பகிர்வு*
[11/8, 18:42] Am Yoga: *புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்*
*எளிய உடற்பயிற்சிகள்*
*மனித உடலில் இரத்த உற்பத்தி எங்கு நடக்கிறதெனில் எலும்பு மஞ்ஞை என்று கூறப்படும் உடல் இணைப்புகளில் தான் நடைபெறுகிறது.*
*இந்தப் பணி சீராக நடைப்பெற்றால் உள்ளுறுப்புகளும் வெளி உறுப்புகளும் ஒழுங்காக இயங்கும்.*
*உடல் வளைவுத்தன்மை அதிகரிக்கும் எந்தவித நோயும் உடலுக்கு வராது.*
*எந்தவியாதி இருந்தாலும் குணமாகும்*
*உடலில் 13 இணைப்புகள் உள்ளன கணுக்கால் இணைப்பு 2 மூட்டு இணைப்பு 2 இடுப்பெலும்பு இணைப்புகள் 2 கைமணிக்கட்டு இணைப்பு 2 கை முட்டி இணைப்பு 2.தோள்இணைப்பு 2. மற்றும் கழுத்து இணைப்பு 1 இந்த 13 இணைப்புகளுக்கும் நாம் தினமும் பயிற்சி கொடுத்து வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும் ஆதலால் என்றும் ஆரோக்கியமாக வாழ முடியும்.*
*நான் நிறைய வேலை செய்கிறேன் எனக்கு இது தேவையில்லை என்று நினைப்பது தவறு. ஏனெனில் எத்தனை மணி நேரம் பம்பரமாய் சுழன்றாலும் உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க முடியாது.*
*பத்து நிமிடம் திட்டமிட்ட உடற்பயிற்சியால் மட்டுமே அதை சாதிக்க முடியும்*
*முதலில் நேராக நின்று 15 விநாடிகள் இறைநிலையை நினைத்து பிராத்தனை*
*1.HEALS FREE கணுக்காலுக்கானப் பயிற்சி*
*நேராக நிமிர்ந்து நின்று கால்களை சேர்த்து வைத்துக்கொண்டு கால் விரல்கள் மற்றும் குதிகாலை மாற்றிமாற்றி தரையில் ஊன்றி பயிற்சி செய்வது. இந்தப் பயிற்சியை 20 முறைகள் செய்து கொள்ளலாம்.*
*2.KNEE FREE தொடையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்து எழுவது முட்டிகளுக்கானப் பயிற்சி 10 எண்ணிக்கை செய்துகொள்ளலாம்.*
*<இதற்கு பதிலாக தோப்புக்காரணம் போடுவதும் மிக சிறந்தது.>*
*3.HIP Rotating இடுப்பை வலமாக மூன்று சுற்று இடமாக மூன்று மீண்டும் வலமாக மூன்று இடமாக மூன்று என்று 12 எண்ணிக்கைகள் சுற்ற வேண்டும்.*
*4.Finger Exercise*
*இரண்டு கைகளையும் நீட்டி முதலில்*
*பெருவிரல் தொடங்கி இரண்டு கைகளின் பத்துவிரலையும் இரண்டு இரண்டாக மடக்கி அதாவது வலது பெருவிரல் இடது பெருவிரல் இரண்டையும் ஒரே நேரத்தில் மடக்கி இறுதிவிரல்வரை மடக்கிவிட்டு பிறகு அதேபோல இறுதிவிரலில் இருந்து பெருவிரல் வரை வரவேண்டும்.*
*இதுபோல் மூன்று சுற்றுகள் செய்யலாம்.*
*Wrist Rotate*
*இரண்டு கைகளையும் நீட்டி வெளிப்பக்கமாக மூன்று முறை மணிக்கட்டை* *சுற்றவேண்டும்.*
*பிறகு உள்பக்கமாக மூன்று முறை இதுபோல் 12* *எண்ணிக்கை சுற்றவேண்டும்.!*
*1.KNEE FREE*
*மார்புக்கு நேராக கைகளை கோர்த்துக்கொண்டு கைகளை முன்பக்கமாக திருப்பி நீட்டி பயில்வது.*
*10 முதல் 20 முறை செய்யலாம்.*
*7.SOLDER Rotate*
*கைகளை மடக்கி இரண்டு தோள்களையும்* *முன்பக்கம் 3 முறைகளும் பின்பக்கம் 3 முறைகளும் சுற்ற* *வேண்டும்*
*இதுபோல்மொத்தம் மாற்றிமாற்றி நாலு சுற்றுகள் செய்யவேண்டும்.*
*8.Neck Exercise*
*பத்து முறை தலையை நிமிர்த்தி தாழ்த்திப்பார்ப்பது.*
*10 முறை தலையை இடவலமாக மெதுவாக திருப்புவது*
*8 முறை மேல்,வலது,கீழ்,இடது,மேல்,இடது,*
*கீழ், வலது*
*என்று திருப்புவது.*
*இந்தப் பயிற்சிகள்*
*மிக அற்புதமாக* *பயனளிக்கும்*
*இது நமது யோகா & இயற்கை வாழ்வியல் மையத்தில் யோகசனப் பயிற்சிகளுக்கு முன் செய்யப்படும் அடிப்படை உடற்பயிற்சி*
*வேறு மையங்களில் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள்*
*அதுபோலவே யோகாசன சாம்பியன்களுக்குரிய உடற்பயிற்சி தனியாக உள்ளது*
*அது இதுபோல் அனைவரும் செய்வதற்கு எளிதாக இருக்காது.*
*யோகா பயிலாமல் தினமும் இந்தப்பயிற்சிகளை மட்டும் காலை மாலை தொடர்ந்து 60 நாள் செய்தால் உடலில் புதிய இரத்தம் ஊறி உடலே புதிய பரிமாணத்தில் இயங்க ஆரம்பித்துவிடும்.*
*எல்லாவகை உடல் வலியும் குணமாகிவிடும்.*
*அனைவரும் பழகி நலம் பெருக.!*
*மேலுள்ள படத்தைப் பார்த்து எளிதாக புரிந்துகொள்ளலாம்.!*
🍀இயற்கை & யோகா மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
*AUM HERBALS*
whatsapp & Mobile
*9629368389.!
[11/8, 20:17] Am Yoga: எங்க வீட்டுக்கு முன்னாடி நாற்பது வயதை கடந்த ஒரு மாங்கா மரம் இருக்குங்க..
வருஷத்தில ஆயிரம் காய்க்கு மேல கொத்துக்கொத்தா பிடிக்கும்..
ஆனா கடந்த ஏழு வருஷமா காயே பிடிக்கல ..
என்னென்னு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சேன்..
ஒரு வேளை எரு பற்றாக்குறையால காய்க்கலையோ,
தென்னை மர நிழல்னால காய்க்கலையோ,
வர்றவங்க போறவங்க எல்லாம் "வீட்டுக்கு முன்னாடி மா மரம் ஆகாது "னு சொன்னதால காய்க்கலையோ,
சத்து குறைபாடினால காய்க்கலையோ னு பலபல சந்தேகங்கள் மனசுல ஓடீட்டே இருந்துச்சு..
ஒருத்தர் சொன்னார் "செத்து போன நாயோ, பூனையோ ஏதாவது ஒன்னை மரத்தடியில புதைச்சிடுங்க கண்டீப்பா அந்த மா மரம் காய்க்கும்னு..
ஒரு நாய் ரோட்ல அடிபட்டு கிடந்ததை எடுத்து வந்து (வீட்டுக்கு தெரியாம) புதைச்சு பார்த்தேன்..
ஒன்னும் பலனில்ல..
சரி வேறு வைத்தியம் பார்க்கலாம்னு
பஞ்சகவ்யாவிலிருந்து பாஸ்போ பேக்டீரியாவரை எல்லா தாக்குதலையும் நடத்தி ஒன்னுமே பலன் கொடுக்கல...
யோசிச்சேன்
யோசிச்சேன்..
நல்லா யோசிச்சேன்..
என்னடா இது வேலி முள் விளைஞ்ச நிலத்தில்கூட விவசாயம் செய்கிறோம்..
நல்லா காய்ச்சிட்டு இருந்த மரம் இப்படி ஆகிடுச்சேனு மண்டையை போடு உடச்சிட்டு இருந்தேன்..
அப்போ ஒன்னு என் ஞாபக்கத்துக்கு வந்தது..
வீட்ல அம்மா கையில் துவைக்கிறது கஷ்டம்னு என் தந்தை "வாசிங் மிஷின் "வாங்கி வச்சது சிறு மூலைக்கு எடுச்சு..
அதுக்கு சோப்பு பவுடர் ரின், பவர் அது இதுனு போட்டு கொட்டீட்டு இருந்ததும் ஞாபகம் வந்தது..
அந்த இயந்திரம் வந்ததிலிருந்துதான் அந்த மாமரம் காய்ப்பதில்லைனும் ஒரு மாசத்துக்கு முன்தான் என்னோட பெரு மூலைக்கும் எட்டுச்சு..
காரணம் என்னனு பார்த்தா அந்த இயந்திரத்திலிருந்து போகிற கழிவு நீரும், சமையல் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் விம் பாரும் நேரா அந்த மாமர ஆனி வேரிலையே போய் ஊத்தீட்டு இருந்த விசயம் மரமண்டைக்கு உரைச்சது..
உடனே அந்த சோப்பு பவுடரும், விம் பாரும் வாங்கிறத நிறுத்தினேன்..
வேப்ப எண்ணெயில் தயாரான காதி சோப்பை வாங்கி அந்த இயந்திரத்தில் போட்டேன்,பாத்திரம் கழுவ அடுப்பு சாம்பலை பயன்படுத்தினோம்..
என்ன ஆச்சரியம் இப்போ அந்த மாமரம் துளிர் விட்டு பச்சை பசேல்னு தளஞ்சிட்டு இருக்கு ..
நல்லா யோசிங்க.
என்னோட ஒரு வீட்டின் கழிவுநீரிலே நாற்பது வயது மாமரத்தை பட்டு போக வைக்கும் அளவுக்கு விஷம் நீரை நான் இத்தனை நாளா பயன்படுத்தி நிலத்தை பால்படுத்தி வந்திருக்கேனா,அப்போ நகரத்தில் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவங்க எத்தனை மரத்தத்தையும், மணணையும் போக வச்சிருப்போம்..?
*🌴இணையப் பகிர்வு*
[11/9, 20:42] Am Yoga: *ஆரோக்கிய வாழ்விற்கு தேவையான அடிப்படை யோகாசனங்கள்*
*யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் உடல் தளர்வு பயிற்சியை செய்ய வேண்டும்*
*அதன் பின்*
*சமஸ்திதி அதாவது சமநிலையில் நின்று மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.*
*ஒவ்வெரு ஆசனப்படத்திலும் முதலில் நிற்கும்* *பெண் செய்வது*
*ஆரம்ப நிலை* *இரண்டாவது நிற்கும் ஆண் செய்வது ஆசனத்தின் இறுதிநிலை*
*1.Thadasana*
*3x10 count*
*நேராக கால்களை சேர்த்து நின்று மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டே பக்கவாட்டில் கைகளை தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டபடி வைத்துக்கொள்ளவும்.*
*அப்படியே மூச்சை உள்ளடக்கிய படியே 10 எண்ணிக்கைகள் நின்று கொண்டு* *பிறகு மூச்சை வெளியேற்றியவாரே மெதுவாக கைகளை*
*கீழே இறக்கி ஆரம்பநிலைக்கு வரவும்.*
*இதுபோல் 3 முறை செய்யவேண்டும்*
*2.Tolasana*
*2 x 10 count*
*நேராக நிமிர்ந்து நின்று குதிகால்களை மேலே தூக்கிக் கொண்டு விரல்களை மட்டும் ஊன்றி நிற்கவும்.*
*பிறகு மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே பக்கவாட்டில் கைகளை உயர்த்தி தலைக்கு மேல் உள்ளங் கைகளை இணைத்த நிலையில் 10 எண்ணிக்கைகள் நிறுத்திவிட்டு பிறகு மூச்சை வெளியேற்றியவாறே கைகளை மெதுவாக கீழிறக்கவும். இதுபோல் 2 முறை செய்துகொள்ளலாம்.*
*3.Udkattasana*
*3 x count*
*படத்தில் உள்ள முதலா மாணவரைப்போல* *காலைசேர்த்து*
*தலைக்கு மேலே* *கையை கோர்த்து நின்று பிறகு மெதுவாக முடிந்தவரை அதே* *நிலையில் முட்டியை மடக்கி அமரவேண்டும்.*
*அதே நிலையில் 10 எண்ணிக்கை இருந்த பிறகு மெதுவாக எழுந்து கைகளை கீழிறக்கிக் கொள்ளலாம்.* *இதுபோல் மொத்தம் 3 முறை செய்யவேண்டும்.*
*4.Artha catti chakrasana*
*4x 10 count*
*கால்களை சேர்த்து நேராக நிமிர்ந்து நின்று வலது கையை மட்டும் மேலே தூக்கி புஜம் காதில் தோடுவது போல் வைத்துக்கொண்டு மெதுவாக இடது பக்கவாட்டில் உடலை முடிந்த மட்டும் வளைத்து அப்படியே 10 எண்ணிக்கைகள் நின்றுவிட்டு மெதுவாக நிமிர்ந்து கையை கீழிறக்கவும்.*
*இதுபோல் இடது கையை மேலேதூக்கி ஒருமுறை செய்துவிட்டு மீண்டும் வலது கை, இடது கை என்று மற்றொரு முறை செய்து இந்த ஆசனத்தை நிறைவு செய்யலாம்.*
*5.Virikchasana*
*4 x 15 count*
*வலதுகாலை மடக்கி*
*இடது தொடையின்* *மீது வைத்துவிட்டு பிறகு இரண்டு கைகளையும்* *பக்கவாட்டில் உயர்த்தி*
*தலைக்குமேல்* *சேர்த்து வைத்துக்* *கொண்டு 15* *விநாடிகள் சாதாரண சுவாசத்தில் நின்று* *விட்டு பிறகு மெதுவாக கைகளை கீழிறக்கிக்* *கொள்ளலாம்.*
*இதுபோல் இடது காலை வலது தொடையில் வைத்து ஒருமுறை செய்துவிட்டு இன்னொரு சுற்று இதுபோல் செய்து நிறைவு செய்யலாம்.*
*6.parsuva konasana*
*4 x 10 counts*
*படத்தில் உள்ள முதலாமானவரைப்போல கால்களை கொஞ்சம் அகலமாக விரித்து, கைகளை நீட்டி நின்று கொண்டு மெதுவாக வலது காலை மடக்கி வலது கையை காலை ஒட்டி வெளிப்பக்கத்தில் வைத்து இடது கையை இடது காதை ஒட்டி வலது பக்கமாக நீட்டி நேராக பார்க்கவும் இதுபோல் 10 விநாடிகள் இருந்துவிட்டு நிமிர்ந்து இடது பக்கமும் இதுபோல் செய்து விட்டு மீண்டும் இதுபோல் வலது இடது என்று ஒரு சுற்று செய்து நிறைவு செய்க*
*7.Ehaphatha hasthasana*
*4X 10 count*
*கால்களை சேர்த்து கைகளை நன்றாக தலைக்கு மேல் தூக்கி நிமிர்ந்து மெதுவாக முட்டை மடிக்காமல் முன்னே வளைந்து கைகளை கால்களின் அருகே வைத்து பின் வலது காலைமட்டும் முடிந்தவரை பின்னால் உயர்த்தவும்.*
*இதே நிலையில் 10 எண்ணிக்கைகள் இருந்துவிட்டு மெதுவாக காலை மடக்கி கிழே வந்து பிறகு இடது காலை தூக்கி ஒருமுறை செய்துவிட்டு எழுந்து இன்னொரு சுற்று இதுபோல் செய்ய வேண்டும்.*
*8.Artha cakrasana*
*3x 10 counts*
*இடுப்பில் கையைவைத்து நிமிர்ந்து நின்று பிறகு மெதுவாக இடுப்பை தாங்கிப் பிடித்தவாறு பின்பக்கமாக வளைய வேண்டும் பிறகு முடிந்தால் கையை இடுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி கணுக்காலை தொட முயற்சி செய்து இறுதி நிலையில் 10 விநாடிகள் இருந்து பிறகு மெதுவாக மேலே வரலாம்.!*
*30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இடுப்பிலிருந்து கைகளை நகர்த்தி கீழே கொண்டு செல்ல வேண்டாம்.*
*இடுப்பில் கைவைத்த நிலையிலேயே 10* *விநாடிகள் இருந்து மேலே வந்துவிடலாம்.!*
*இதுபோல் மூன்று சுற்று செய்து நிறைவு செய்யலாம்.*
*நாம் கூறியுள்ள இந்த 8 ஆசனங்களையும் தினமும் பயின்று வந்தால் குதிகால்வலி மூட்டுவலி இடுப்பு வலி, கழுத்துவலி, முதுகுவலி,கால்வலி போன்றவை அகலுவதோடு உடல் வில்லாக எல்லாப்பக்கமும் வளையும் ஆற்றல் பெறும். உள்ளுறுப்புகள் பலமாகும்.*
*இரத்த ஓட்டம் விரைவு பெறும்.*
*நோய்கள் எதுவும் 50% குணமாகும்.*
*இளமையானதோற்றமும் நீண்ட ஆயுளும் உண்டாகும்.*!
யோகா & இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*
*Aum Herbals*
Mobile&whatsapp
[11/10, 11:48] Am Yoga: பாதம் எவ்வளவுக்கு எவ்வளவு கடினமா இருக்கோ,
அவ்வளவுக்கு அவ்வளவு உங்க உடம்பு ஆரோக்கியமா இருக்குன்னு அர்த்தம்...
ஆரம்ப காலத்து தமிழர்கள்ல,
ஏங்க 50,60 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்தவுங்க வரை எவ்வளவு பேர் செருப்பு போட்டுருந்தாங்க..?
வயல்ல இறங்கி வேலை பாத்தவுங்க,
வெறுங்கால்ல நடந்தவுங்க,
செருப்பு போட்டே பழக்கமில்லாதவுங்க,
இவுங்களுக்கெல்லாம் ஏன் நோய் எதுவும் வரல.?
இவுங்கள்லாம் சாகுற வரைக்கும் எப்படி ஆரோக்கியமா இருந்தாங்க.??
பாதத்துல இருக்குற நரம்ப தூண்ட வக்கிறதால,
நம்ம உடல் உள்ளுறுப்புக்கள ஆரோக்கியமா வைக்கலாம்.!!!
ஆனா இந்த உண்மைய நம்ம கிட்ட மறைச்சி,
முதல்ல கால்ல செருப்பு போட வச்சான்,
அப்புறம் ஷூ போட வச்சான்,
கூடவே சில ஹாஸ்பிடல் லிஸ்ட்டும் கொடுத்தான்.
இப்ப நம்ம கிட்ட அப்டுடேட் இன்பர்மேஷன் - எந்த நோய்க்கு எந்த ஹாஸ்பிடல்ல போய் அட்மிட் ஆகலாம்'னு.!!!😢
ஆனா நோய் வராம எப்படி பாத்துக்கனும்'ற தகவல் நம்ம யார் கிட்டயும் இல்ல,
ஒருவேளை யாராவது சொன்னா, அவுங்கள நம்ம கேக்குற கேள்வியால அவுங்க இந்த பக்கமே தல வச்சி படுக்க மாட்றாங்க...
சரி விஷயம் இது இல்லீங்க,
நீங்க ஒரு நாளைக்கு கொஞ்ச நேரமாவது செருப்போ இல்ல ஷூவோ இல்லாம வெருங்கால்ல நடந்து உங்க உடம்ப ஆரோக்கியமா வச்சிக்கோங்க...
மறுபடியும் சொல்றேன்..,
பாதம் பலப்பலன்னு சாப்ட்டா இருந்தா,
உடம்பு கொலக்கொலன்னு ரொம்ப சாப்ட்டா இருக்கும், கண்டிப்பா நோய் எதிர்ப்பு சக்தி குறைவா தான் இருக்கும்...
நீங்க உங்க பாதத்த பாத்துக்கோங்க,
உங்க பாதம் உங்க உடம்ப நல்லா பாத்துக்கும்.!!!
*இணையப்பகிர்வு*
[11/10, 17:39] Am Yoga: *முருங்கை தின்றால் நூறுவயது*
முருங்கை மரத்தில் ("Moringa oleifera") இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கை இலை, முருங்கைப் பூ தமிழர்களால் அதிகம் உண்ணப்படும் ஒரு உணவு ஆகும்.
இதன் தாவரவியல் பெயர் "Moringa oleifera". இதில் "muringa" என்ற பெயர் , "முருங்கை" என்ற தமிழ் வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Brassicales
குடும்பம்: Moringaceae
பேரினம்: Moringa
இனம்: M. oleifera
தண்ணீர் : 63.8%
புரதம் : 6.1%
கொழுப்பு : 10%
தாதுஉப்புக்கள் : 4%
நார்ச்சத்து : 6.4%
மாவுச்சத்து : 18.7%
வைட்டமின் ஏ : 11300/IU
வைட்டமின் பி : 0.06 மில்லி கிராம்
(தயாமின்) (100 மில்லி கிராம் கீரைக்கு)
சுண்ணாம்புச் சத்து : 440 மில்லி கிராம்
குளோரின் : 423 மில்லி கிராம்
இரும்புச் சத்து : 259 மில்லி கிராம்
ரைபோஃபிளேவின் : 0.05 மில்லி கிராம்
கந்தகச் சத்து : 137 மில்லி கிராம்
மாங்கனீஸ் : 110 மில்லி கிராம்
நிகோடினிக் அமிலம்: 0.8 மில்லி கிராம் வைட்டமின் சி : 220 மில்லி கிராம்
முருங்கைக் கீரையில் சிறந்த உயிர்ச்சத்துக்களும், தாதுஉப்புக்களும், மாவு, புரதப் பொருட்களும், சுண்ணாம்பு, மாங்கனிஸ், மணிச்சத்து, இரும்புச் சத்துக்களும் உள்ளன.
முருங்கைக் கீரை 108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது...
கண்ணுக்கு மிகவும் நல்லது.
மலச் சிக்கலைத் தீர்க்கும்.
தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.
வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
தினமும் கையளவு முருங்கை இலையை ஒரு மண்சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி குடித்துவர இரத்தசோகை, உடல்வலி, கைகால் வீக்கம் குணமாகும்.
முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.
இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை உணவுமுறை அவசியம்"
*🌿இணையப்பகிர்வு*
[11/11, 04:52] Am Yoga: உணவு விழிப்புணர்வு 19
நாம் ஏன் குண்டாகிறோம்??
நம்மில் பலர் இதை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்
நான்லாம் காலேஜ் படிக்கும் போது எவ்ளோ சிலிம்மா இருந்தேன் தெரியுமா ??
மேரேஜ்க்கு அப்பறமா தான் தொப்பை போட்டு குண்டாகிட்டேன் என்போம்.
ஏன் நாம் குண்டாகிறோம்???
நாம் உட்கொள்ளும் உணவு முறை தான்
வேறு என்ன இருக்க முடியும்??
நாம் உட்கொள்ளும் உணவில் பிரச்சனை இருக்கிறதா??
நம் தாத்தாக்கள் எல்லாம் இப்படி இருபது வயதிலேயே தொப்பை தள்ளி இருக்கவில்லையாமே..
நாம் மட்டும் ஏன் வயிற்றை வளர்க்கிறோம்??
நமது முன்னோர்கள்( நமக்கு மின் சென்ற சில தலைமுறைகள்) என்ன உணவு உண்டார்கள்??
திணை, கைக்குத்தல் அரிசி, கம்பு, கேப்பை, எள்ளு, கொள்ளு என உண்டார்கள். அரிசியில் இட்லி செய்து சாப்பிடுவது எல்லாம் வருடம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான்.
ஆனால் நாம் தினமும் அரிசியில் செய்யப்பட்ட இட்லி தோசை சாதம் என ஃபுல் கட்டு கட்டுகிறோம்.
அதோடு நில்லாமல் ஸ்நேக்ஸ் என்ற பெயரில் ரீபைன்டு சுகரில் செய்யப்பட்ட ஸ்வீட்ஸ், எண்ணெயில் பொறிக்கப்பட்ட வடை, பஜ்ஜிகள், புரோட்டாக்கள், பப்ஸ், சமோசா.
காஸ்ட்லியான ஆட்களாக இருந்தால் பீட்ஸா, பர்கர், சேன்ட்விச், ஐஸ் கிரீம்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை.
நம் முன்னோர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்??
நம் முன்னோர்கள் வாழ்வதற்காக உணவு உண்டனர் , நாமோ உணவு உண்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அவர்கள் காலத்தில் இத்தனை எளியதாக உணவுகள் கிடைக்கவில்லை. ஒவ்வொன்றுக்கும் அயராத உழைப்பைச் சிந்தி நாளின் முடிவிலே கிடைக்கும் ஒரு வேளை உணவாயினும் உண்டு உயிர் பிழைத்து வந்தனர்.
நாமோ அனுதினம் மூன்றிலிருந்து ஐந்து வேளை உணவுகளை பசியே எடுக்காமலும் சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறோம்.
அவர்கள் உண்ட உணவில் மாவுச்சத்தின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தன ஆனால் நமது உணவில் மாவுச்சத்து மட்டுமே பிரதானமாக நிரம்பியிருக்கிறது.
என்றாவது நாம் யோசித்திருப்போமா??
ஏன் தினமும் மூன்று வேளையும் சதா அரிசியில் செய்த உணவுகளையே தின்று வருகிறோம் என்று??
நமது உடல் குண்டாவதற்கு காரணம் அது தான்..
ஆம் நாம் உண்பது அதிக மாவுச்சத்துள்ள உணவு முறை
நம்மை குண்டாக்குவதற்கே படைக்கப்பட்ட ஹார்மோன்
"இன்சுலின்" (insulin)
பசி பஞ்சத்தில் இருந்து நம்மை காக்க நமக்கு அருளப்பட்ட அமிர்தம் இந்த இன்சுலின்.
இந்த இன்சுலின் என்ன செய்கிறது தெரியுமா??
மனிதன் அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டால், அதை வைத்து சிறிதை கல்லீரலில் க்ளைகோஜனாகவும் பெரும்பகுதியை கொழுப்பாகவும்
( triglycerides) சேமிக்கிறது
ஏன் இப்படி கொழுப்பை சேமிக்கிறது??
வரப்போகும் பஞ்சத்தை நாம் தாக்குப்பிடிக்கும் விதமாக இந்த சேமித்த கொழுப்பு பயன்படும் என்ற நல்ல நோக்கத்தில் தான்.
உங்கள் கேள்வி புரிகிறது..
இப்போது தான் பஞ்சமே வருவதில்லையே??
ஆம் நமக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
பிறகும் ஏன்.. பஞ்சத்தில் அடிபட்டவனைப் போல மூன்று வேளையும் சதா கார்போஹைட்ரேட்டை தின்று கொண்டே இருக்கிறோம் ??
நமக்கு எதுக்கு இப்போது தேவையில்லாத கொழுப்பு??
சரி விசயத்துக்கு வருவோம்
இந்த தொப்பையில் உள்ள கொழுப்பானது நமது உடலில் கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைடுகளை ஏற்றிவிடுகிறது.
மாவுச்சத்து திண்ண திண்ண இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கிறது.
இன்சுலினை சுரக்கும் கணையத்தின் பீட்டா செல்கள் மூச்சுத் திணறுகின்றன.
நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பான
"ரீபைன்டு சுகர்" எனப்படும் சீனி
கணையத்தில் உள்ள இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்களை ஒரே அடியில் கொலை செய்தேவிடுகின்றன.
ஆம்.. ரீபைன்டு சுகர் சந்தைக்கு வந்ததும் தான் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது.
இந்த நீரிழிவு நோய்க்கு காரணம்
நமது உடலில் சுரக்கும் இன்சுலின்
வேலை செய்யாமல் போவது தான்
இதைத் தான் "இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.
இன்சுலின் மட்டும் தான் காரணமா??
இல்லை இன்னும் இரு ஹார்மோன்கள் இருக்கின்றன.
முதல் ஹார்மோன்
"க்ரெலின்" (GHRELIN)
இரண்டாவது ஹார்மோன்
" லெப்டின்" (LEPTIN)
இந்த க்ரெலின் இருக்கிறானே இவனது வேலை
பசியைத் தூண்டிக்கொண்டே இருப்பது
|
\/
வயிறு காலியானால் உடனே சுரக்கப்பட்டு, மூளைக்கு அலாரம் அடித்து பசிக்கான பகுதி தூண்டப்படும் (appetite center) , பசி எடுக்கும்
|
\/
நாம் பசி எடுத்ததும் சாப்பிடுவோம்
வயிறு நிறையும்
|
\/
நமக்கு நிறைவு ஏற்பட்டு பசி அடங்கியதும், லெப்டின் சுரக்கப்படும். அது மூளையின் திருப்திக்கான பகுதியைத் தூண்டும்( satiety center)
|
\/
பசி அடங்கும்
இதுதான் சரியான நடைமுறை
ஆனால் குண்டாக இருப்பவர்களுக்கு (obese persons) , க்ரெலின் மட்டும் நன்றாக வேலை செய்வான்.
லெப்டின் மக்கர் செய்ய ஆரம்பிப்பான்.
ஏன் என்றால்..
லெப்டின் மூளைக்குச் சென்று திருப்திப் பகுதிக்குச் சென்று தனது வேலையைச் செய்வதை குண்டான மனிதரின் கொழுப்பான ட்ரைகிளசரைட்ஸ் தடுத்து விடுகின்றன. இதை "லெப்டின் ரெசிஸ்டெண்ஸ்" என்கிறோம்.
ஆகவே லெப்டின் வேலை செய்யாத நிலையில் , க்ரெலின் மட்டும் கொடுத்த காசுக்கு மேல் வேலை செய்து கொண்டே இருப்பதால் நாம் தொடர்ந்து உண்டு கொண்டே இருக்கிறோம் ..
குண்டாகிறோம்.
இதில் இன்னொரு தகவல் யாதெனில்
இந்த க்ரெலின் ,மாவுச்சத்தை உண்போருக்கு அதிகமாகவும்
புரதச்சத்தையும் கொழுப்பையும் அதிகமான அளவு உண்போருக்கு குறைவாகவும் சுரக்கிறது.
கார்ப்ஸ் உண்பவர் அனுதினமும் பசியெடுத்து எதையாவது கொரித்துக் கொண்டே இருப்பதற்கும்,
கொழுப்புணவை உண்பவர் 20 மணிநேரம் விரதம் இருந்தாலும் அகோரப் பசி தோன்றாமல் இருப்பதற்கும் இது தான் காரணம்.
ஆகவே உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து , புரதத்தை தேவையான அளவு உண்டு, கொழுப்பை நன்றாக எடுத்துக்கொண்டால்
தொப்பை கரையும்
கொழுப்பை கொழுப்பால்தான் கரைக்க முடியும்.!
*இணையப்பகிர்வு*
[11/11, 14:18] Am Yoga: *பதங்களை பின்னும் கிளிஞ்சல்கள்*
*கருத்து கூறுவதை விட அனுபவங்களை பகிர்வதே மேன்மையானது. ஏனெனில்*
*கருத்து என்பது உலகால் சேகரிக்கப்பட்டு நம்மீது திணிக்கப்பட்ட குப்பை. அனுபவம்* *என்பது நமது ஆன்மாவால்* *உணரப்பட்ட உண்மை.*
என்ன இருந்தால் நாம் மகிழ்ச்சியாக வாழமுடியும் , எந்தப் படிப்பு படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும், எந்த மருத்துவர் இதய அறுவை சிகிட்சையில் வல்லவர், எந்த பசை புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உடலை காக்கும், எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தால் நாம் சந்தோசமாக வாழமுடியும்? கறுப்பு பணத்தை ஒழிக்க என்ன வழி?
போன்ற எல்லா கேள்விகளுக்கும் நம்மிடம் ஒரு பதிலும் கருத்தும் இருக்கிறது.
செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அரசு, அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்கள்
போன்றவர்களால் உருவாக்கப்பட்டதே உங்களிடம் உள்ள எல்லாக் கருத்துகளும் பதில்களும். இவை அனைத்தும் வெற்றுக் குப்பைகள். காலாவதியாகிக் கொண்டிருக்கும் 1000 ரூபாய் தாள்களைப் போன்றவை.
இப்போது எனது அனுபவத்தை கூறுகிறேன்.அரசு ஒதுக்கீட்டில் இடம்பெற்று எனது மகனை சேர்ப்பதற்கு ஒரு தனியார் கல்லூரிக்கு சென்றிருந்தேன். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட நான்கு மடங்கு கட்டணம் கேட்டார்கள். இது நியாயமா? என்றால் இருந்தால் கட்டி படிக்க வை இல்லாவிட்டால் கிளம்பு. எங்கு வேண்டுமானாலும் புகார் செய் என்றார்கள். நீதிமன்றம் போகலாம் என்றால் அங்கு இதுபோல் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றார்கள். பலநாள் நானே உரம்போட்டு வளர்த்த என் பையனின் கனவை கலைக்க மனம் இல்லாமல் கையில் இருந்த பணம், வங்கிக்கடன், நண்பர்களின் உதவி என்று எல்லாம் கொடுத்தபின்னும்
பணம் போதவில்லை. இது ஒரு தந்தையின் அனுபவம். ஒரு மாணவனின் அனுபவம் சொல்கிறேன் கேளுங்கள். இதை உணரும் இதயம் உள்ள மனிதன் எவனும் கலங்கிவிடுவான். கருத்துகளை கூறும் வெற்றுப்பிணங்கள் நகைக்கக்கூடும்.
கல்லூரி உணவகத்தில் மத்தியானம் உணவருந்த 100 பேர் அமர்ந்திருக்கும் போது தூரத்தில் இருந்து ஒரு அறிவிப்பு கேட்கும். மெஸ் பில் கட்டாத, பில் பாக்கி உள்ள மாணவர்கள் எல்லாம் எழுந்து போங்க பிறகு சோறு மீதி இருந்தா கூப்பிடுவாங்க என்று. இதை கேட்டதும் ஒரு 10, 15 மாணவர்கள் எழுந்து வெளியே செல்வார்கள். பிறகு பசியோடு பட்டினியாய் படித்தாலும் படிப்பார்களே தவிர இதுபோன்ற அவமானத்தை மீண்டும் பெற்றுவிடக்கூடாது என்று குமுறுவார்கள்.
ஆண்டுத் தேர்விற்கான ஹால் டிக்கெட் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கிவிடுவார்கள். ஆனால், நாலு மடங்கு கட்டணம் அதிகமாய் வாங்கிக்கொள்ளும் இந்த கல்வி சேவையாளர்கள் பத்து சதவீதம் ஆண்டுக்கட்டணம் பாக்கி இருந்தால் கூட குறிப்பிட்ட அந்த மாணவ மாணவிகளுக்கு மட்டும் ஹால் டிக்கெட்டை தேர்வன்று காலை வரை வழங்காமல் அலை கழிப்பார்கள். அதன்பிறகு பெற்றோர்களை கூப்பிட்டு எழுதிவாங்கிக் கெண்டு தேர்வு நாள் காலையில் கடைசி நேரத்தில் ஹால் டிக்கெட்டை வழங்கி பணம் தான் அனைத்திலும் பிரதானம் என்ற நீதிபோதனையை மாணவர்களுக்கு சொல்லாமல் சொல்வார்கள்.!
வருடம் முழுவதும் படித்துவிட்டு தேர்வு எழுதபோகும் நேரத்தில் இப்படி செய்வதால் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதுவோமா மாட்டோமா என்று கடைசிவரை இறுகிய இதயத்தோடவே கலங்கி நிற்பார்கள்.
இது போன்ற அனுபவத்தை பெற்ற மாணவ மாணவிகளுக்கு மட்டுமே அனுபவத்தின் உண்மை தரிசனம் புரியும். இதே போன்ற விசயங்களை எதிர்த்து கேட்ட மாணவிகளை கொன்று கிணற்றில் போட்டார்கள் சேலத்தில் ஒரு இயற்கை மருத்துவக்கல்லூரியில். இறந்த பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மட்டுமே தெரியும் அதன் அனுபவ வலி. முதலில் கல்லூரியை மூடி சீல்வைத்த ஆட்சியர் அலுவலகமே இன்று அதே கல்லூரியை மீண்டும் திறக்க தடையில்லை. என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பணமும் அரசியலும் சேர்ந்தால் எதையெல்லாம் சாதிக்கும் என்பது இப்பொழுது அனைவரும் உணர்ந்து கொண்டு வேறுமனே கருத்து கூறலாமே தவிர வலியை உணர முடியாது. இரண்டு லட்சம் கட்டினால் தான் உங்கள் தாய்க்கு அறுவை சிகிட்சை செய்ய முடியும் என்று ஒரு மகனிடமோ மகளிடமோ மருத்துவர் கூறும்போது அவர் எங்களிடம் காப்பீடு அட்டை உள்ளது என்று கூறினால் அதுபோக ஒருலட்சம் கட்ட வேண்டும். என்று கூறும்போது தான் அரசியல் வாதிகளின் போலி திட்டங்களை உணரமுடியும். வேடிக்கைப் பார்த்து வெறுமனே கருத்துகூறும் பிண்டங்களுக்கு என்ன உண்மை தெரியும்.!
ஒரு இயற்கை மருத்துவக் கல்லூரியிலேயே இத்தகைய அனுபவங்களை பெற முடியுமென்றால் தனியார் அலோபதி மருத்துவக்கல்லூரியில் எவ்வளவு உயர்ந்தப் படிப்புகளை உணர்ந்து வருவார்கள் பிள்ளைகள். பிறகு எதன் அடிப்படையில் எப்படியெல்லாம் வைத்தியம் செய்வார்கள். என்று அங்கிருந்து வரும்
மாணவர்களுக்கேத் தெரியும். சரி உங்களுக்கு நல்லது எதுவுமே உணர முடியலியா அனுபவத்தின் மூலம் என்றால் முடிந்தது. கல்வி உதவிக்காக வாட்ஸ் அப் நண்பர்கள் மட்டும் 30000 ரூபாய் வரை தருவதாய் வாக்களித்துள்ளனர் அதில் பாதியளவிற்கு டிடியாகவும் பணமாகவும் அனுப்பி விட்டனர். மற்றவர்களும் விரைவில் அனுப்புவார்கள்.!
ஆனால், அரசு வழங்கும் முதல் தலைமுறை பட்டதாரிக்கான உதவித்தொகை ஆண்டு முடிந்தும் இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு நம்மைப்போன்று கலந்தாய்வில் இருக்கைப் பெற்று தனியார் கல்லூரியில் இருக்கைப் பெற்ற
ஒரு ஏழை மாணவரின் பெற்றோரிடம் உண்மையை எடுத்துக்கூறி அக்குப்பஞ்சர் அல்லது BSC யோகா படிக்க வையுங்கள் என்று நமது அனுபவத்தைகூறி உதவினோம்.!
உங்கள் சிரமத்தை அனைத்து நண்பர்களிடம் கூறி உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.! என்னைப் போன்ற ஒரு சில நண்பர்களிடம் மட்டும் இன்பாக்ஸில் உதவி கேட்டால் போதுமே என்றார். அது அவருடைய கருத்து. வெற்று மதிப்பென்பது மாயை. உண்மையை உரைப்பதே நமது சேவை.!
யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுக யாம் பெற்ற துன்பம் யாரும் பெறாதிருக்க என்பதே நமது எண்ணம். அதற்காகவே எனது அனுபவத்தில் ஒரு துளியை பகிர்கிறேன். இதுபோன்ற உண்மையான அனுபவங்கள் அனைத்தும் காலத்தின் அனுபவ புதையல்கள் இது இங்கு ஒரு சிலருக்காவது பயன்படும்💐.
கறுப்பணத்தை வேட்டையாடுவதாக் கூறி நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தவர்கள் இதுபோன்ற கல்விகொள்ளைக்கு எதிராக ஒரு துரும்பையாவது எடுத்துப் போடுவார்களா?
நலம் பெருகட்டும் …
*இயற்கை மருத்துவ இரகசியங்களுக்கு*
amyogatrust.blogspot.in
*AUM HERBALS*
mobile & whatsopp 9629368389
[11/11, 16:57] Am Yoga: *நெருஞ்சி மருத்துவம்*
தமிழ் மருத்துவ மூலிகைகளில் ஒன்றான நெருஞ்சி முள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூப்படையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.!
🌴 *இணையப்பகிர்வு*