இரத்த ஓட்டம் விரைவுபெறும்
மனஅழுத்தம் குறையும்
இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும்
ஞாபகசக்தி அதிகரிக்கும்
வலது இடது மூளைகளின் இயக்கம் சீராகும்
திக்குவாய் குணமாகும்
உடல்பருமன் குறையும்
உடலின் எரிசக்தி அதிகரிக்கும்
இழுப்பு,சளி,தொண்டைகட்டு
குணமாகும்
நுரையீரலின் இயங்குதிறன் அதிகரிக்கும்
உடல்வலி,தலைவலி,
எலும்பு பலவீனம் போகும்
இறைபக்தி, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்
இதுமட்டுமில்லீங்க இன்னும் ஆயிரம் பலன்கள் இருக்கு பஜனை பாடுவதில் சுருக்கமாக கூறினால் கலவியைவிட பத்துமடங்கு அதிக நன்மைகள்.
பாட்டு பாடுவதைவிட ஐந்து மடங்கு அதிக நன்மைகள் நடைபயிற்சியைவிட நாலுமடங்கு அதிகநன்மைகள்
சிரிப்பு பயிற்சியை விட இரண்டு மடங்கு அதிக நன்மைகள் கொண்டது பஜனை பாடுவது.!
ஒரே ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் பஜனை பாடும்போது இராகத்தை ஏற்றி இறக்கி பாட வேண்டும். அதாவது ஒரிரு முறை மெதுவாக பாடிவிட்டு அடுத்து சுதியை ஏற்றிபாட வேண்டும். பிறகு இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் பாடவேண்டும்.!
இந்த ஆராய்ச்சியை எந்த ஆராய்ச்சிகழகம் செய்ததுனு
கேக்குறீங்களா? யாரு செய்தா என்னங்க, தம்பிடி செலவில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு வழி கிடைச்சா அதைபிடிச்சிட்டு ஆனந்தமா முன்னேறி போவிங்களேன்.! அதைவிட்டுட்டு இதை யாரு செஞ்சான்,எதுக்கு செஞ்சான், இந்தியாகாரனா? வெளிநாட்டுக்காரனா? இந்துவா? கிறுஸ்தவனா? என்றெல்லம் நீங்க ஒரு ஆராய்ச்சி செய்து குழம்பி நேரத்தை வீணடிக்காமல் தினமும் 15 நிமிடம் பஜனை பாடி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்க …
பொதுவா உலகத்தில் எந்த நாட்டவர்களுக்கும் பஜனைனா இந்தியாதான் ஞாபகம் வரும்.! அதிலும் தமிழ்நாடு பிரபலம். ஹரே ராமா ஹரே கிருஷ்ணானு தொடங்கி ரகுபதி ராகவன் ராஜாராம்னு விரிஞ்சி ஒவ்வெரு தெய்வத்திற்கும் குருமார்களுக்கும் ஒரு பஜனையை உருவாக்கி
வெச்சிருக்கிறது நம்மதேசம் தான்.!
அவரவர்களுக்கு பிடிச்ச பஜனையை பாடுங்க. ஆனா, ஒரு நிபந்தனை கையைத் தட்டிக்கொண்டே ஏற்ற இறக்கமுடன் பாடினால் தான் நாம் கூறிய பயன்கள் கிடைக்கும்.! அதுசரி ஆனால் எனக்கு மத பாடல் பிடிக்காது. இருந்தாலும் எனக்கும் பஜனை பாடி ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆவலாக இருக்கிறது என்கிறீர்களா?
"அப்படினா, உங்களை போன்றவர் களுக்காக நாமே தயார் செய்த கீழ்கண்ட் இந்த " இயற்கை பஜனையை பாடுங்களேன்.!
இயற்கையை உணவர்வோம் வாருங்கள்
மண்ணும் மரமும் மழையும் காற்றும் இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
☘இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2 முறை>
🚣உடலும் மனமும் உலவும் உயிரும் இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
🌵இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
🌄உண்ணும் உணவும் ஒளிரும் கதிரும்
இயற்கையே உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
🌾இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
🎂தீதும் நஞ்சும் திறம்படத் தவிர்த்து
இயற்கையை காப்போம் வாருங்கள்
…
<2முறை>
🌳இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம்
இயற்கையை உணர்வோம் வாருங்கள் …
<2முறை>
☄இந்தப் படாலை முதல் முறை ஒருவரும் அடுத்தமுறை குழுவினரும் சேர்ந்து பாடவேண்டும். அதற்காகவே <2முறை> என்று குறிக்கப்பட்டுள்ளது. தனியாக பாடினால் இரண்டு முறையும் ஒரே நபர் பாட வேண்டும்.!
🐾இதை கையைத்தட்டிக் கொண்டே ஏற்ற இறக்கத்துடன் எப்படி பாடுவது என்று யாருக்காவது தெரியாவிட்டால் கேளுங்கள் நாமே பஜனையாக பாடி பதிந்து உங்கள் உள்ளகத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.!
இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டு
இன்றைய மருத்துவ பலன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது.*
*பஸ்ஸில் பயணம் செய்யும்போது எலுமிச்சை வற்றலை வாயில் அடக்கிக் கொண்டால் வாந்தி வராது.*
*பொன்னாங்கன்னி கீரையை சூப் செய்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். மூல சூடு ஏற்படாது.*
*அரைக்கீரை இலைகள் 5-10 வரை தினமும் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.*
*பிஞ்சு புடலங்காயை பச்சடி செய்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். சொறி, சிரங்கு, அரிப்பு நீங்கும்.*
*பிரண்டையை வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.*
*வேப்பிலைச் சாறுடன் மோர் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் பூச்சிகளே இருக்காது.*
*தினமும் மதியம் சாப்பிட்ட உடன் ஒரு வெற்றிலையை சிறிது பாக்கு, சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.*
*தலையில் நீர் கோர்த்துக் கொண்டு தலைபாரமாக இருந்தால் கருநொச்சி இலைகளைத் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதன் ஆவியைப் பிடித்தால் உடனே குணமாகும்.*
*சீதாப்பழக் கொட்டைகளைக் காயவைத்து தூளாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் பேன்கள் அழிந்துவிடும்.*
*மூட்டு வலியா? சுக்கை இழைத்து மூட்டுக்களில் தடவினால் குணமாகி விடும்.*
*மாதவிலக்கின் போது, இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் ஒரு டம்ளர் மோர்விட்டுப் பருகினால் இரத்தப் போக்குக் கட்டுப்படும்.*
*முகப் பருவை கிள்ளக் கூடாது. பச்சைப்பயறு மாவை அரைத்து வைத்துக் கொண்டு தினமும் இரவில் பருவின்மேல் பூசி வைத்து , காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் முகப்பரு மறையும்.*
*தோல்வியாதிகள் காரணமாக உடம்பின் மேல்பகுதி தடித்து சொரசொரப்பாக இருக்கும்.* *கொத்துமல்லி தழையை நன்றாக அரைத்து சொர சொரப்பாக இருக்கும் இடத்தின் மீது பூசவேண்டும்.* *இவ்வாறு மூன்று நாள்கள் செய்து வர, தடிப்பு மாறி தோல் மிருதுவாகிவிடும்.*
No comments:
Post a Comment