Monday, October 31, 2016

மருத்துவக் குறிப்புகள் 31/10/2016

[10/31, 16:19] Am Yoga: *இப்படி சாப்பிட்டால்*
*இதமாய்வாழலாம்*🍒
🌿🧀🍎🍏🌻🍒🌹🍎

அடிப்படையிலேயே சமைத்த உணவுகளில்
சத்துக்கள் மிககுறைந்துவிடும்.
அதுவும் மூன்று வேளையும் அரிசி சார்ந்த  உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல.!
மூன்றுவேளையுமோ அரிசி சார்ந்த உணவுதான் பிடிக்கும் அல்லது அதுதான் கிடைக்கும். என்பவர்கள் சோறு, தோசை, இட்லி போன்றவற்றை 20% எடுத்துக்கொண்டு கூட்டு,பொரியல், குழம்பு போன்றவற்றை 80%
எடுத்துக்கொண்டால்  ஆரோக்கியம் பெருகும்.!
அதுவும் மேல்தோல் தீட்டாத அரிசியாய் இருந்தால் நல்லது.!
தினமும் ஒருவேளை மட்டுமாவது முளைகட்டிய தானியம்,தேங்காய், பழம் ,காய்கறிகளை சமைக்காமல் உண்டுவந்தால் உள் உறுப்புகள் பலம் பெறுவதோடு இரத்தமும் சுத்தமாகும்.! இதன் மூலம் எத்தகைய வியாதி இருந்தாலும்  கட்டுப்பாட்டிற்கு வரும். ஆயுள் பெருகும்.!
மூன்றுவேளையுமே அவல்,முளைகாட்டிய தானியம், தேங்காய், எள்ளுருண்டை,பழம், காய்கறி,பழச்சாறு, மூலிகைச்சாறு  போன்றவற்றை உண்ணும் பக்குவம் நமது உடலுக்கும் மனதிற்கும்  வந்துவிட்டால் எத்தகைய நோயையும் எளிதாய் குணப்படுத்தலாம்.!
கடையில் வாங்கும் சாதாரண பழம், காய்கறி,தானியங்களில் உரமாகவும், பூச்சிவிரட்டியாகவும், நல்ல தோற்றத்துடன் நிறைய நாட்கள் கெடாமல் இருப்பதற்காகவும் பல்வேறு விதமான இரசாயணத்தை  பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அவற்றை குறைந்தது அரைமணி நேரம் உப்பு மற்றும் மஞ்சள் கலந்தநீரில் ஊறவைத்து பின் கழுவி பயன்படுத்த வேண்டும்.!
எந்தவகை உணவாய் இருந்தாலும் தினமும் இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துக் கொண்டு இரவு 10 க்குள் தூங்குவதை  வழக்கமாக்கிக் கொண்டால் அதிகாலையில் எழுவது மிகவும் எளிதாய் இருப்பதோடு உடல் எடையும் என்றும் ஒரே சீரான நிலையில் இருக்கும்.!
நொறுக்குத்தீனி எண்ணைய் பலகாரம் சாப்பிடுவதை நிறுத்த முடியாதவர்கள். இவற்றை தின்பதற்கு என்று தனிநேரத்தை ஒதுக்காமல் உணவோடு சேர்த்து அதையும் உண்டுவிட்டால்  ஆரோக்கியம் ஓரளவிற்கு பாதுகாக்கப்படும்.!
அரிசிசாதத்தோடு இரண்டுத் தேக்கரண்டி செக்கு நல்லெண்ணையை  சேர்த்து உண்டுவந்தால்  என்றும் மலச்சிக்கல் என்றப் பேச்சே வராது.!
சமைத்த உணவு எதுவாய் இருந்தாலும் அரைவயிறு உணவு அரைவயிறு காலி என்ற நிலையில் வைத்துக்கொள்வதோடு அடுத்தவேளை பசித்தால் மட்டுமே சாப்பிட்டால் போதும்.!
சமைக்காத உணவை உண்பவர்கள் முக்கால் வயிறு சாப்பிடலாம்.!
அப்படியும் வயிறு நிறைந்த உணர்வு இல்லையெனில் இரண்டு டம்ளர் பசுமோர் அருந்தினால்  சமைத்த உணவை உண்டதைப்போன்ற
*நிறைவுவரும்*
 எந்த வகையான உணவாய் இருந்தாலும்  சாப்பாட்டுடன் தண்ணீர் அருந்தாமல், குறைந்தது அரைமணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை கழித்தே நீரருந்த வேண்டும்.! இதனால் என்றும் அஜீரணக்கோளாறு வராமல் இருப்பதோடு *உடல்சீராகஇயங்கும்*
எல்லா வகையான உணவையும் நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து உண்டுவந்தால் சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் வராமல் காக்கும்.!
அரிசி,சிறுதானியம்,பழங்களில் இயற்கையாகவே உப்பு உள்ளது. சுவைக்காக மட்டுமே உப்பை சேர்க்கிறோம்.!
அதனால், இந்துப்பு என்றழைக்கப்படும் இயற்கை பாறைஉப்பை குறைந்த அளவு மட்டும் தேவையெனில்  சேர்த்துக்கொண்டால் உடலில் எந்த நோய்களும் வரமால் இருப்பதோடு  என்றும் *சுறுசுறுப்பாக இயங்கும்*
மூன்றுநாள் தொடர்ந்து இயற்கை உணவை எடுத்துக்கொண்டு பிறகு வாரம் ஒரு நாள் இயற்கை உணவை கடைப்பிடித்துவந்தால்
*எத்தகைய* *ஆரோக்கியகுறைபாடும்* *எளிதில்நீங்கும்*


*இயற்கைமருத்துவதகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*

*AUMHERBALS*
Mobile & whatsapp
*9629368389*

*நலம்பெருகட்டும்…*
[10/31, 17:16] Am Yoga: 🍀🌹🍀🌹🍀

பெண்கள் முகத்தில் முடிவளர்வதை நீக்க இயற்கையான எளிய வழி
_________________________
கசகசா ,கஸ்தூரி மஞ்சள் ,கள்ளமாவு இவைகளை அரைத்து பசைபோன்று எடுத்து இதை தயிரில் குழைத்து முடி உள்ள இடத்தில் பூசி நன்கு காய்ந்த பின் முகம் கழுவி வரவும்.

 மேலும்
நிணநீர் சுரப்பிகள் சிறப்பாக செயல் பட சக்கர தியானம் கற்று
தினசரி செய்துவர முடிநீங்கிநிரந்தர தீர்வு கிடைக்கும்.!

இணையப்பகிர்வு
[10/31, 17:28] Am Yoga: மூச்சு பிடிப்பு நீங்க....
********************,*,**
சங்கன் இலை __5 எண்ணிக்கை
நிலாவரை கீரை _3 கிராம்
சுக்கு_____________ 2 கிராம்
வாய்விளங்கம் ___ 2 கிராம்
பெருங்காயம்_____ 2 கிராம்
 இவற்றை பொடி செய்த கலவையை சுடுநீரில் கலந்து அருந்த மூச்சு பிடிப்பு தீரும்.
நாக/பெங்
[10/31, 21:16] Am Yoga: ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,''

தேவையான பொருட்கள்:

ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25 கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.

செய்முறை:

நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.

மருத்துவ பயன்கள்:

வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள்!அதிகரிக்கும்.!

*இணையப்பகிர்வு*

முதுகு வலிக்கு மருந்து- பெரியவா தரும் health tips

[10/31, 07:54] Am Yoga:

பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு எழுந்தார் ஒரு பக்தர்!

நடு முதுகுத்தண்டில் தாங்க முடியாத வலி!

"நடு முதுகுல... பயங்கர வலி பெரியவா..! அத்தனை வகை...  வைத்யமும் பாத்தாச்சு! ஒண்ணும் கேக்கல! பணம் கரைஞ்சதுதான் மிச்சம்! வலி போகல!...பெரியவாதான் இத.. ஸொஸ்தப்படுத்தணும்"

முகத்தில் வேதனை தெரிந்தது.

" முன்னெல்லாம்.....செக்குல ஆட்டின நல்லெண்ணெய் தேச்சு, கொஞ்சம் ஊறி, வெந்நீர்ல... சீக்காயோ, அரப்போ தேச்சு குளிப்பா!. இப்போ அவஸர யுகம் ! எண்ணெய் தேச்சு குளிக்கவே டைம் இல்ல.! "ஸனி நீராடு"ன்னு... ஸ்கூல்ல படிக்கறதோட ஸெரி. [இப்போ அந்த படிப்பும் இல்லை]

அத... follow பண்ணணுங்கறது மறந்து போச்சு.! அரப்பு, சீயக்கா பொடிக்கு பதிலா, தலைக்கு தேச்சுக்க என்னென்னமோ வந்திருக்காம்....! எல்லாம் கெமிக்கல்ஸ் சேந்தது.! பின்னால.... கெடுதி-ன்னு தெரிஞ்சாலும், அதையேதான் வாங்கறா...! போட்டும் போ! நீ இனிமே.... ரெகுலரா.... எண்ணெய் தேச்சுண்டு, வெந்நீர்ல குளி! மொளகு ரஸம், பெரண்ட தொகையல் பண்ணி ஸாப்டு..! என்ன?"

"கட்டாயம் பெரியவா சொன்னபடியே பண்றேன்"

மூணு மாஸம் கழித்து வந்தார் முதுகுவலிக்காரர்.

வலி போய்விட்டதாம்.!

எண்ணெய் தேச்சு வெந்நீர்ல குளியல், மிளகு ரஸம், பெரண்டை துவையல் இந்த மூன்றின் சேர்க்கை பற்றி யார் ஆராய்ச்சி பண்ணினால் என்ன, பெரியவா சொன்ன ஸிம்பிள் வைத்யம் கை மேல் பலன்!

பெரியவா திருவாக்கிலிருந்து சில health tips...

வீடுகள்ள, மூணு எண்ணெய் எப்பவும் இருக்கணும்......

1. நல்லெண்ணெய் - வெளக்கேத்த, ஸமையல் பண்ண, எண்ணெய் தேச்சு குளிக்க;

2. வெளக்கெண்ணெய் - வர்ஷத்ல ரெண்டு தரம், காலேல வெறும் வயத்துல குடிச்சா..... வயறு ஸெரியா இருக்கும். வயத்துவலி இருந்தா, கொஞ்சம் வெளக்கெண்ணெய் எடுத்து தொப்புளை சுத்தி நன்னாத் தடவிண்டா ஸெரியாப் போய்டும். சூடு தணியும். பாதத்ல வெடிப்பு-கிடிப்பு, புண்ணு இதெல்லாம் வராது.

3. வேப்பெண்ணெய் - வேப்பெண்ணையை தெனோமும் கை,கால், முட்டிகள்ள தடவிண்டா, முட்டி வலி வரவே வராது.

[பெரியவாளும் தினமும் கை, கால் முட்டியில், வேப்பெண்ணெய் தடவிக்கொண்டு குளிப்பாராம்]

தெனோமும் குளிச்சதும், ரெண்டு காலையும், பாதத்தையும் நன்னாத் தொடச்சுக்கணும். நம்ம ஒடம்புல, காலுதான் முக்யமான பாகம். பாதத்தை நன்னா கவனிச்சுண்டா, ஒடம்பும் நன்னா இருக்கும். ராத்ரி படுத்துக்கறதுக்கு முன்னாடி, பாதத்தை நன்னா அலம்பிண்டு, ஈரம் போகத் தொடச்சிண்டு படுத்துக்கணும்.

அந்த காலங்கள்ள, வெளிலேர்ந்து வந்தா... குடிசைவாஸிகள் கூட, வாய் கொப்பளிச்சுட்டு, கை-கால், குதிகால்.... அலம்பிக்கிண்டுதான் வீட்டுக்குள்ளியே நொழைவா!

இப்போ...? செருப்பே.... வீட்டுக்குள்ளதான் கெடக்கு!

*இணையப்பகிர்வு*
[10/31, 12:48] Am Yoga: *வெள்ளையனே வெளியேறு* இயக்கத்தை கடைபிடியுங்கள்...

*வெள்ளை(sulphur) சர்க்கரை*
*வெள்ளை(processed) மைதா*
*வெள்ளை(polished)அரிசி*
*வெள்ளை (adulterated) பால்*
*வெள்ளை (iodised) உப்பு*
இந்த வெள்ளையர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுங்கள்...நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழுங்கள்.!

*இணையப்பகிர்வு*

Saturday, October 29, 2016

கோதுமை மருத்துவக் குணங்கள்

*                                ~~~~~~~~

*முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.*

*வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.*

*கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.*

*கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.*

*வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.*

*கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.*      

🌷*இணையப்பகிர்வு*

இனிமையானவைத்தியம்

வெயில்வரும்நேரத்தில்நிமிர்ந்துகதிரவனை பார்த்துக்கொண்டேநின்றால்
பத்துநாட்களில்அடுக்குத்தும்மல்குணமாகும்

குளித்துமுடித்ததும்ஒருசிலவிநாடி*
வானத்தைநிமிர்ந்து பார்த்துக்கொண்டேநின்றால்
மண்டையில்அடைத்துள்ளசளிவெளியேறும்

வயிறுவலிக்கும்போதுநீரிலும்சுடுநீரிலும்மாற்றிமாற்றிவயிற்றில்ஒத்தடம்கொடுத்தால்வலிநின்றுவிடும்

கண்ணைச்சுருக்கிகருத்தாய்கேட்டால்
எதுவும்மனதில்எளிதாய்பதியும்*

பேருந்தில்இரயிலில்நின்றேவந்தால்உடல்எடைஎளிதாய்குறையும்*

துள்ளிக்கொண்டேகைகளைதட்டினால்
இதயஅடைப்புஎளிதில்நீங்கும்*

இறையைதுதித்துதினமும்*
பாடினால்குரலில்இனிமைநிதமும்கூடும்

விழுந்ததும்எழுந்து துள்ளியே அமர்ந்தால்இரத்தக்கட்டுஉடனேநீங்கும்*

கடலில்குளித்து களைத்துஉறங்க
தீராத்துயரும்தீர்ந்துபோகும்*

செயலைஎங்கும்எதிலும்விதைக்க*
மனதின்ஆட்டம்மறைந்துபோகும்*

*💐இயற்கை*
*மருத்துவதகவல்களுக்கு*
*am yoga trust.blogspot.in*

*AumHerbals*
*Moblile&whatsapp*
*9629368389*

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்:

‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்.

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது ‘பழனிமலை பாதுகாப்புக் குழு’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.

‘‘தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு சார்.

ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள்.

மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருக்கு.

ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு மரம் இருந்துச்சா?ன்னு கேட்கற மாதிரி ஆகிருச்சு.

மரங்களை இழந்து நாம மழையையும் இழந்துட்டோம்’’ – வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.

‘‘தமிழ்நாட்டுல இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பத்தி ஒரு அகராதியே போடலாம்.

அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது.

‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி.

‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர்,

 ‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம்,

‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்…

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு.

ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.

அதுக்கெல்லாம் பதிலா, ‘தைல’ மரம், ‘சீமைக் கருவேலம்’, ‘யூஃபோடீரியம்’, ‘தூங்குமூஞ்சி’ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்க ஆக்கிரமிச்சிடுச்சு.

இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்துரும்.

அதிகளவு நீரையும்' உறிஞ்சும்.

இதனால, புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிடுச்சு.

பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழிச்சிருச்சு.

இப்படி வளர்ற மரங்கள்ல காய்கள், பழங்கள்னு எதுவுமே வராது.

அதனால பறவைகளும் இல்லாம போயிருச்சு’’ என ஆதங்கப்படுகிறவர், நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

‘‘ உசில்" மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.

எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

"வேங்கை" மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு.

இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும்.

இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.

"இலுப்பை" மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு.

இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

"தோதகத்தி" மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது.

குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க.

அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு.

4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.

ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.

இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் குறுஞ்செடிகள்னு நம்ம ஊர்ல நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. இதுல ‘துத்தி’ன்னு ஒரு செடி…

மருத்துவ குணமுள்ளது.

அதை பார்த்தீனியம் வளர்ற இடத்துல வச்சா, தொடர்ந்து பார்த்தீனியம் வளராது’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க.

1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.

‘‘ஆரம்பத்துல அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்னுதான் இதையெல்லாம் நினைச்சோம்.

அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம்.

அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரியம்னு தெரிய வந்துச்சு.

அதனால இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி வனங்களுக்குப் போனோம்.

இன்னைக்கு எங்க நாற்றங்காலில் 65 வகையான மரக் கன்றுகள் இருக்கு.

எல்லாமே பழமையான அரிதான மர வகைகள்.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம சந்திச்சுக்கிட்டு இருக்கோம்.

வீட்டுக்கு ஏ.சியைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியா வச்சிக்க நினைக்கறவங்க, ஒரு பாரம்பரிய மரம் நட்டா இந்த பூமியும் குளிர்ச்சியாகும்னு நினைக்கணும்.

மழையை அதிகப்படுத்தி, நீர்வளத்தை தக்க வச்சு, இந்த பூமியை வளப்படுத்தவும் இது மாதிரி மரங்களைத்தான் நாம நம்பியாகணும்!’’

என்கிறார் அவர் அழுத்தமான குரலில்.

மரங்கள் தருதே ஷாம்பு:

* உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.

* ‘வழுக்கை மரம்’ எனப்படுகிற ‘தடசு’ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால், வழுவழு ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புக்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.

* மருத மரத்தின் பட்டையைக் காய வைத்து, கஷாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும்.

* தாண்டி மரத்தில் காய்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

"மரபை மீட்டெடுப்போம்"

"தமிழக மண்ணின் பாரம்பரிய மரங்களை பாதுகாப்போம்"

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை பாதுகாப்பு அவசியம்"

*💐இணையப்பகிர்வு*

Friday, October 28, 2016

இன்றைய குறிப்புகள்.. 28/09/16

[10/27, 22:00] Am Yoga: *தீப்புண் (Fire Sore)*

தீக்காயமா... மருந்தை தேடி அலையாதீர்கள்..!

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.

சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும். தொடர்ந்து செய்து வந்தால், அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.!

🌻இணையப்பகிர்வு
[10/28, 11:52] Am Yoga: பக்ரீத்துக்கு மாட்டை வெட்டதேன்னா பாய்க்கு
பிடிக்காது.
தீபாவளிக்கு பட்டாசு
வெடிக்காதேன்னா
அண்ணன்களுக்கு பிடிக்காது.
ஹோலிக்கு வண்ணம் பூசாதேன்னா சேட்டுக்கு புடிக்காது.
சாயக்கழிவை நதியில
கலக்காதேன்னா
முதலாளிக்கு பிடிக்காது.!
போகிக்கு பழச கொளுத்தாதேன்னா
தமிழனுக்கு பிடிக்காது.
உன் கழிவை என் நாட்ல கொட்டாதேன்னா
சேட்டனுக்கு பிடிக்காது.
அனுஉலை வேண்டாம்னா மத்தியஅரசுக்குப்
பிடிக்காது.
கோலாக்கு தண்ணி இல்லைனா
மாநில அரசுக்குப்பிடிக்காது.
பிற உயிர்களை கழுத்தறுப்பது எல்லாருக்கும் பிடிக்குது.
இயற்கை கதறவைத்து
வெடித்து சிரிப்பது
எல்லாருக்கும் பிடிக்குது.
பன்னாட்டு கும்பலுக்கு
நாட்டையே கொடுப்பது
எல்லா அரசுக்கும் பிடிக்குது.
அவரவர் ஆசையில் ஆயிரம் நியாயம்
அனைத்தையும் துறந்தால்
நிலைப்பது தர்மம்.!

-ஏகப்பிரியன்--

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Thursday, October 27, 2016

சின்ன சின்ன கை வைத்தியங்கள்

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. * சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.!

🍓இணையப்பகிர்வு🍓 !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxigen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது...
நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்...
அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு
சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும்
வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,
முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி
சிறிது சுண்ணாம்பு கலந்து
கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
*முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

10. * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

11. * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

14* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

15. * மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. * சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. * பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா? அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. * சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

* சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

* சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

* சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

* எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

* தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

* சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.!

🍓இணையப்பகிர்வு🍓

Wednesday, October 26, 2016

[10/26, 19:23] Am Yoga: மரணம் தந்தது மூலிகையா?

🌿சில நாளைக்கு முன்னாடி தென்காசில  ஒரு வைத்தியர் சக்கரை வியாதிக்காக ஒரு மூலிகை மருந்தை தயார் பண்ணி தானும் குடிச்சிட்டு நாடி வந்தவங்களுக்கும்
குடுத்திருக்காரு.!  இதுல வைத்தியர் உள்பட 3 பேர் இறந்துட்டாங்க.!
நம்மிடம் மூலிகை மருந்துகள் வாங்குற ஒரு நண்பர் மூலிகை மருந்துகள் கூட ஆபத்துதான் போலயேனு அங்கலாய்த்தார்.!
நான் கூறினேன் சக்கரை
நோயாளிக்கு  ஆபத்து மூலிகை மருந்துகளில் இல்லை☘ உண்மையில் மூலிகை மருந்து வீரியம் மிக்கது. ஆனால்  சக்கரையை வேகமாக குறைத்து மரணம் வரை கொண்டு செல்லாது.!   உண்மையில் சக்கரை வியாதிகாரர்களுக்கு ஆபத்து எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால், என்றைக்கு இரத்தத்திலும் சிறுநீரிலும் போகும் சக்கரையை பரிசோதித்து உங்களுக்கு சக்கரை அதிகமாக இருக்கிறது. இனி எந்த  இனிப்பையும்  சாப்பிடக்கூடாது என்கிறார்களோ, அப்பொழுதே சக்கரை வியாதிகாரர்கள் மரணத்தை நோக்கி, ஆபத்தை நோக்கி பயணப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.! சரி இந்த இடத்தில் சக்கரை வியாதி என்று எதை குறிப்பிடுகிறார்கள்  என்பதை பார்ப்போம்.
நாம் சாப்பிடும் உணவில் உள்ள அத்தனை சத்துப்பொருட்களும் உள்ளுறுப்புகளின் பயன்பாட்டிற்காக இரத்தத்தில் உட்புற செல்களுக்குள் நேரடியாக
 கலந்துவிடும். ஆனால், சக்கரை மட்டும் அப்படி கலக்க முடியாது. ஏனெனில் உடலில் உள்ள பாங்கிரியாஸ் என்ற பகுதியில்  சாப்பிட்ட இனிப்பின் தரத்தை  ஆராய்ந்து  இன்சுலின் என்ற தரச்சான்றை வழங்குகிறது. நாம் தொடர்ந்து தரமான இனிப்புகளை சாப்பிடாவிட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் பாங்கிரியாஸின் ஆற்றல் குன்றியிருந்தாலோ இன்சுலின் சுரக்காது.!  இன்சுலின் இல்லையென்றால்  உடலால் இயல்பாக இயங்க முடியாமல் போகும்.! இதற்காகவே  இன்சுலினை ஊசியாகவும் மாத்திரையாகவும் எடுத்துக் கொள்கிறோம்.!  அப்படி எடுத்துக்கொள்ளாவிட்டால் இன்சுலின் இல்லாததால் உடலின்  எரிசக்தி பாதிக்கப்படும்.! உண்மையில் இன்சுலின் இல்லாவிட்டால்  உடலால் சீராக இயங்க முடியாது.  இன்சுலின் என்பது நாம் சாப்பிடும் தரமான இனிப்பு மற்றும் மாவுப்பொருள் மூலமாக  உடலுக்கு கிடைப்பது. நாம் சாப்பிடும் உணவில் தரமான சக்கரை ஒருவேளை அதிகமாக இருந்தால் உடல் தன் தேவைக்குப் போக மீதியை கிளைகோஜன் என்றப் பொருளாக மாற்றி கல்லீரல், நரம்பு மண்டலம், மூளையின் ஒரு பகுதியில் சேமித்து வைத்துக்கொள்ளும்.! நாம் ஒரு நாள் உணவே எடுக்காமல் இருந்தாலோ அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தால்  உணவு உண்ணாமல் இருந்தாலோ உடலுக்கு இயங்க இன்சுலின் கிடைக்காது. அந்த நேரத்தில் உடலில் உள்ள அட்ரீனல், மற்றும் பிட்யூட்ரி சுரபி  கல்லீரலிலும் மூளையிலும்  சேமிக்கப்பட்ட கிளைகோஜனை இன்சுலினாக மாற்றி நாம் இயங்குவதற்கு  தேவையான ஆற்றலை தரும்.! இது சாதாரண மனிதர்களுக்கு ஆனால், சக்கரை நோயாளிகளுக்கு  உடலில் இன்சுலின் சுரப்பதிலேயே  கோளாறு இருப்பதால் கிளைகோஜன் என்ற சேமிக்கப்பட்ட சக்கரையே இருக்காது. அதனால்,  ஒரிருவேளை சரியான உணவு எடுக்கவில்லை என்றாலும்  உடலில் சக்கரை குறைந்து மயக்கமாகும் நிலைக்கு வந்துவிடுவார். பிறகு இனிப்பை தின்றாலோ, அல்லது குளுக்கோஸ் ஏற்றிய பிறகோதான் நார்மலுக்கு  வருவார்.!  இது உண்மை என்பது அனைத்து சக்கரைவியாதி காரர்களுக்கும் நன்றாகவே தெரியும்.!  சக்கரையும் அக்சிஜனும் தான் எல்லா மனிதனுக்கும் தேவையான ஆற்றலை வழங்கும் சக்தி ஆனால், சக்கரையை தரம்பிரிக்க  முடியாத சூழலில் கணையம் இருந்தாலும். உடலுக்குத் தேவையான முக்கியப் எரிபொருள்  சக்கரைதான்.!   அலோபதி மருத்துவர்களும் படித்த சித்த மருத்துவர்களும்   சக்கரை வியாதி இருப்பவர்கள் எந்தவிதமான இனிப்பையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. என்று தடைபோடுவதோடு   தப்பித்தவறி வேறு மாவுப்பண்டங்களில் இருந்து உடல் பெறும் சக்கரையை எரிப்பதற்கு செயற்கை இன்சுலினை மாத்திரையாகவும் ஊசிமூலமும் செலுத்துகிறார்கள்.! சக்கரை நோயாளியின் உடலில் என்றைக்கு செயற்கை மருந்துகளை கொடுக்கிறார்களோ அன்றைக்கே கணையம் இன்சுலினை இயல்பாக சுரக்க எஞ்சியுள்ள மிச்ச ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் இழக்கும்.!
அலோபதி மருத்துவர்கள் கூறுவது போல சாப்பிடும் முன் 110வரை சாப்பிட்டபின் 140 வரை என்ற அளவிற்கு மேல் இருந்தால் சக்கரைக்கு மாத்திரை போடவேண்டும் என்று கூறுவது மிகதவறு.  இது முதல் நிலை இதற்கு உணவு முறை,  உடற்பயிற்சியே போதுமானது.
சாப்பிடும் முன்னும் பின்னும் 200 க்கு மேல் இரத்த சக்கரை அளவு இருந்தால் மட்டுமே  அதுவும் பாதிக்கப்பட்டவருக்கு   50 வயதிற்கு மேலாக இருந்தால்தான் ஆபத்து. எனென்றால்,  50 வயதிற்கு மேல்தான் உடலில் இறந்த செல்கள் மீண்டும் புதுப்பிக்க தாமதமாகும்.! யாராக இருந்தாலும் இரத்த சக்கரையின் அளவு 300 க்கு மேல் இருந்தால் ஆபத்துதான்.! 500 க்கு மேல் சிலருக்கு இருக்கும் இதுவும் ஆபத்தான நிலைதான்.! ஒன்றும் பயப்படாதீர்கள் இப்பொழுது  மருத்துவமனையிலோ அல்லது நம்  வீட்டிலோ வாங்கி வைத்துள்ள சக்கரை பரிசோதனை செய்யும் கருவியில் நாம் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவைப் பார்க்க முடியாது. இரத்த பிளஸ்மா சக்கரை அளவைதான் நாம் பார்க்கிறோம்.  Plasma Glucose Leval என்பது வேறு. Blood Glucose Leval என்பது வேறு. பிளஸ்மா குளுகோஸ் லெவல் இவ்வளவு இருந்தால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் லெவலும் அதிகமாக தான் இருக்கும் என்ற அனுமானத்தில் தான் வைத்தியம் செய்கிறார்கள்.!
உண்மையில் இரத்தத்தில் உள்ள எந்த செல்களில் எவ்வளவு குளுகோஸ் உள்ளது, இதில் எந்த வகையான செல்லில் எந்தவிதமான குளுகோஸ் உள்ளது,  அதில் சரியாக ஜீரணமாகாத சக்கரையால் வந்த தரம் குறைந்த சக்கரை எவ்வளவு, ஜீரணமான தரமான, இன்சுலின் பெற்ற சக்கரை எவ்வளவு, சக்கரை போதாத நிலையில் உடலில் சேகரிக்கப்பட்ட கிளைகோஜனால் தற்போது இரத்த செல்கள் பெற்றுள்ள இன்சுலின் எவ்வளவு?
என்பதை துல்லியமாக அறிய  ஒரு கருவி உள்ளது;
அந்தக் கருவியின் பெயர் IR Study and UV Spectrum Study. இந்த Study  உள்ள மிசின்களில் மட்டுமே  இரத்த செல்களில் உள்ள சக்கரையையின் அளவை துல்லியமாக   கண்டுபிடிக்க முடியும். இந்தக் கருவி பெரியபெரிய ஆராய்ச்சிகூடங்கள், லேப்களில் மட்டுமே உள்ளது.! நாம் பார்க்கும் மிசின்கள் குத்துமதிப்பான ஒப்பீட்டையே தரும்.!
சக்கரைக்கு இன்சுலினையும் போடுவார்கள், இனிப்பை தவிர்க்க வேண்டும் என்பார்கள், உணவுமுறை, உடற்பயிற்சியையும் கைகொள்ள சொல்லுவார்கள். ஆனால், சில நேரம் இன்சுலின் போட்டவுடன் ஒரு மிட்டாயை சாப்பிடுங்கள் அப்பொழுதுதான் இன்சுலினால் குறைந்த சக்கரை சரியாகும் என்பார்கள். லோ சுகரில் மயக்கம் வந்து மருத்துவமனை தூக்கிச்சென்றால் சக்கரைநீரான குளுகோஸைதான் ஏற்றுவார்கள்.!  இதிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள்  சக்கரைதான்  உடலின் இயங்கு சக்தி என்பதையும் சக்கரைதான் உயிரை காப்பாற்றுகிறது என்பதையும்.!
எல்லா விதமான சக்கரை வியாதி இருப்பவர்களும் எல்லா விதமான இயற்கை இனிப்புகளையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். பழங்கள்,🍒 காய்கறிகள், கருப்பட்டி,தேன், பருப்பு,  சமைக்காத சிறுதானியங்களில் இருந்து கிடைப்பது இயற்கை இனிப்பு  இதை உமிழ்நீரோடு கலந்து  மெதுவாக உண்ணுவதோடு, தினமும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்துவருவதோடு சரியான மூலிகை மருந்துகளையும் எடுத்துவந்தால் எத்தகைய முற்றிய நிலையில் உள்ள சக்கரை நோயாளிக்கும் இன்சுலின் சுரக்கும்.!
சக்கரை நோய்க்கு முக்கிய மருந்தே இதுதான்.! இயற்கை இனிப்பை துறந்துவிட்டு மூலிகை மருந்து மட்டுமல்ல, ஆங்கில மருந்து, யோகா, உடற்பயிற்சி என்று எதை செய்தாலும் ஆபத்துதான்.!
அதுபோலவே; சீனி,மைதா, சீனிப்பலகாரங்கள், பேக்கரி பலகாரங்கள், அதிக ஓய்வு, அதிக உடலுழைப்பு, தூக்கமின்மை, அதிககலவி, அதிகசிந்தனை,  ஆங்கில மருந்துகள் போன்றவையே உடலில்  கெட்ட சக்கரையை அதிகப்படுத்தி வாழ்நாளை குறைக்கிறது.!
சக்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் சிலர் திடீர் என்று  மயங்கி விழுந்து மரணத்தை தழுவிவிடுவார்கள். சமீபத்தில் தென்காசியில்  ஒரு மருத்துவர் உட்பட மூன்றுபேர் மூலிகை மருந்தை குடித்து உயிரிழந்ததாக செய்தி வெளியானது. உண்மையில்  அவர்கள் மூலிகை மருந்தால்  மரணமடையவில்லை.! பல நாட்களாக அவர்கள் தேவையான அளவு எந்த இனிப்பு உணவுகளையும் சாப்பிடாமல்   இருந்ததோடு உடலில்  சேமிக்கப்பட்ட  கிளைகோஜனும்  இல்லாத நிலையில் மூலிகை மருந்தையும் உட்கொண்டதால்  மரணமடைய வாய்ப்புண்டு.!  மூலிகை மருந்தை எடுப்பவர்கள்  அனைவரும் இயற்கை  வாழ்வியல் வழி முறைகளை பின்பற்றுவதோடு   இயற்கையான இனிப்பு பழங்களை தேவையான அளவு எடுத்துக்கொள்வதும் மிக முக்கியமானதாகும்.!

💐இது எதோ போறப்போக்கில் கூறிவிட்டு செல்கின்ற கருத்து என்று நினைத்து விடாதீர்கள். நமது யோகா & இயற்கை வாழ்வியல் மையத்தில் பல்வேறு முற்றிய சக்கரை நோயாளிகளுக்கு பயிற்சியளித்து இன்சுலின் மாத்திரைகளை நிறுத்தி ஆரோக்கியமாக வாழவைத்த அனுபவத்தில் தான் கூறுகிறோம்.!

சக்கரை நோயை குணப்படுத்தும் உணவு முறை,யோகாப்பயிற்சி உள்ளிட்ட உண்மைகள் அடங்கிய " இன்சுலின் " என்ற ஆவணப்பட குறுந்தகடு தேவைப்படுவோர் நம்மை அணுகலாம்.!

----ஏகப்பிரியன் DYT

🍇இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

🌱Aum Herbals
Mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் …
[10/26, 19:37] Am Yoga: முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர வீட்டிலேயே செய்யலாம் செம்பருத்தி எண்ணெய்
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ - 5 (புதியப் பூ அல்லது காய்ந்த பூ)
செம்பருத்தி இலை - 3 முதல் 5 இலைகள்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
துளசி - 5 இலைகள்
வெந்தயம் - சிறிதளவு
செய்முறை:
1. செம்பருத்தி பூ மற்றும் இலைகளை ச்ச்சிறுசிறு துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை போட்டு மிதமான தீயில் வைத்து இதனுடன் வெந்தயம் மற்றும் துளசி இலைகளை சேர்த்த உடனேயே அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
3. பிறகு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.
குளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.!

💐இணையப்பகிர்வு
[10/26, 19:38] Am Yoga: 👆குரல் வளம் கூடி திக்குவாய் நீங்க சங்கு முத்திரை

சங்குமுத்திரை

நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் சங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங் காலத்திலிருந்தே சங்கு வடிவத்தை மக்கள் தங்களது அரண்மனை வாசலில் வடிவமைத்து வைத்தனர். பழங்காலத்திலிருந்தே சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்தது.

காலையில் எழுந்த உடன் குளித்து முடித்து விட்டு சங்கு முத்திரையை செய்தபடி ஒரு நாளுக்கு 16 நிமிடங்கள் வீதம் மூன்று வேளைகள் செய்தல் வேண்டும். 3x16=48 நிமிடங்கள் சங்கு முத்திரையின் விகிதப்படி ஒரு நாளுக்கு 48 நிமிடங்களுக்கு மேல் செய்தல் வேண்டாம். இப்படி 48 தினங்கள் செய்து வந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.

சங் என்ற வடமொழிச் சொல்லுக்கு `நன்மை யைத் தருவது' என்றும், `கு' என்பதற்கு அதிகமாக அருள்வது என்றும் பொருள்.

செய்முறை:

இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும். (படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)

பயன்கள்...

மேலும் இதைச் செய்வதால் கூடுதல் பலன்களாக, மணிபூரகச் சக்கரம் வலுவடைந்து குரல் வளம் கூடி திக்குவாய் நீங்கி, சரளமாகப் பேசுகின்ற திறமையும் கூடிவிடும்.

இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரையானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும். மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.

தினமும் 5 மிளகு சுவைத்து சாப்பிட்டால் திக்குவாய் குணமாகும்

திக்குவாய் குணமாக: தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும்.!




🌱இணையப்பகிர்வு

Tuesday, October 25, 2016

இன்றைய குறிப்புகள் 25/10/2016

[10/24, 11:34] Am Yoga: ⛈நிறைவான ஆரோக்கியம்
தரும் நீர் சிகிட்சை❄

காலையில் எழுந்ததும் வாய்க்கொப்பளித்துவிட்டு ஒன்றே கால் லிட்டர் சுத்தமான மண்பானை நீரை குடிக்கவேண்டும்.!
சுத்தமான நீர் என்பது - மழைநீர் ,ஊற்றுநீர், அருவிநீர் ,வேறுவழி இல்லையென்றால் மாநகராட்சி குழாயில் வரும் குளோரின் கலக்காத நீரை குறிக்கிறது.! நகராட்சி குழாய் நீரை மண்பானை, செம்புபாத்திரம், பித்தளைகுடம் போன்றவற்றில் குறைந்தது இரண்டு மணிநேரம் வைத்து, பின் பயன்படுத்தினால்  அதில் கலக்கப்பட்ட செயற்கை இரசாயண மருந்தின் தாக்கம் குறைந்துவிடும். பின் இந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.!
எதற்காக இவ்வளவு விளக்கமாக கூறுகிறோம் என்றால் சுத்தமான நீர் என்றேன் என்பதற்காக மினரல் வாட்டர், சுத்திகரித்த குடிநீர், அருவிநீர் என்று விற்கப்படும்
 ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட  போலி நீர்கள் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த உயிர்ச்சத்து இறந்த நீர்களை கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள். இன்றைய நோய் பெருக்கத்திற்கு இந்த இறந்த நீரும் ஒரு முக்கியக் காரணம்.!
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். இப்படி சிலருக்கு ஒன்றரை லிட்டர்  மண்பானை நீரை மொத்தமாக குடிக்க சிரமமாக இருந்தால் 5 முதல் 10 நிமிட நேர
 இடைவெளியில் இரண்டுமுறையாக  குடிக்கலாம். பிறகு பல்தேய்த்தல் காலைகடன்
கழித்தல்  போன்றவற்றை செய்துவிட்டு கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அரைமணி நேரம் செய்துவிட்டு, பிறகு குளித்த பின் வழக்கமான உணவருந்தலாம். காப்பி,தேனீர்,பால் கண்டிப்பாக அருந்தக்கூடாது.
உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு
எந்தவிதமான உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.!

அடுத்து மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும் இதுபோல் மீண்டும் ஒன்றேகால் லிட்டர் மண்பானை நீரை குடிக்க வேண்டும். உணவிற்கு பின்  இரண்டு மணிநேரத்திற்கு எந்தவிதமான நீரூம் பழச்சாறுகளும் உணவும் எடுத்துக்கக் கூடாது.!

மற்றபடி உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இயற்கையான  உணவுகளையும் பானங்களையும் தேவையான அளவு உண்ணலாம்.!

இப்படி மூன்றுவேளையும் நீர் சிகிட்சை எடுப்பதை மாதம் ஒருவாரம் கடைப்பிடித்துக் கொண்டு பிறகு மூன்று வாரம் காலையில் ஒன்றேகால் லிட்டர் நீரருந்தினால் போதும். மதியமும் இரவும் உணவிற்கு ஒருமணி முன்பு நீரருந்த வேண்டாம். ஆனால், சாப்பிட்டபின் இரண்டு மணிநேரம் சென்றபின் தான் நீர் அருந்த வேண்டும்.!
இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் …

நாள்ப்பட்ட மூட்டுவலி, சோர்வு, ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு,சிறுநீரககோளாறுகள்,சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூளைச்சூடு, அனைத்துவிதமான புற்றுநோய்கள், மனஅழுத்தம்,கீல்வாதம், கொழுப்படைப்பு, இரத்தத்தில் கிருமி, சிறுநீரகக்கற்கள் போன்ற அனைத்து வியாதிகளும் குணமாகும்.!

பிறகென்ன முழுவதும் சமைக்காத உணவுகளை உண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள், இந்த
நீர்சிகிட்சையை மட்டுமாவது  பயன்படுத்தி பிணிநீங்கி ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …

---ஏகப்பிரியன் DYT

🌻இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals🌿
mobile & whatsapp
9629368389
[10/24, 18:34] Am Yoga: என் பையன் படிக்கிற இயற்கை மருத்துவக்கல்லூரி சேர்மனை பார்த்து கட்டணத்தை குறைக்கச் சொல்லி முறையிடப் போனேன்.
அவர் எங்கிட்ட அவர் குறைகளைச் சொல்லி முறையிட்டார்.!
அவர் கதை நம்மைவிட  மோசமா இருந்ததால வேணும்னா கூட பத்தாயிரம் சேர்த்து கட்டுறேன் கவலைப்படாதீங்கனு  சொல்லிட்டு வந்துட்டேன்.!

* உங்கள் பிள்ளைகளை தனியார்  கல்லூரியில் கலந்தாய்வு மூலமா சேர்த்து  இயற்கை,
 சித்தா, ஆயுர்வேதா படிக்க வைக்க ஆசைப்படுறீங்களா?
அப்டின்னா, தயவு செய்து என்னிடம் ஒருஆலோசனை கேட்டுட்டு போங்களேன்.!

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

AM HERBALS
mobile & whatsapp
9629368389
[10/24, 20:40] Am Yoga: 🍀🌹🍀🌹🍀

விபத்து கால இயற்கை மருத்துவம்


    இயற்கை மருத்துவம் என்றால் சாதாரண காய்ச்சல் தலைவலிக்கான பாட்டி வைத்தியம் என பலரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது நமது தவறான புரிதல் ஆகும். நமது உடலுக்கு ஏற்படும் நோய் மற்றும் விபத்துக் காலங்களில் நமது உயிரானது மருத்துவராக வேலை செய்கிறது.  நமது வேலை உயிர் செய்யும் மருத்துவத்திற்கு உதவி செய்வது மட்டுமே.

   விபத்துக் காலங்களில் உடலில் உயிர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள செயல்படும் மருத்துவத்தைப் பார்ப்போம்.

   விபத்து நடந்த வினாடியில் இருந்து உயிரானது உயிர்சக்தியின் வீண் விரயத்தை தடுத்து நிறுத்தி உயிர்சக்தியை சேமித்து அதை விபத்தினால் ஏற்பட்ட சக்தி இழப்பை ஈடுகட்டுவதோடு விரைவில் குணமடைய அதிக சக்தியை அளிக்கிறது.
   அதற்காகவே மயக்கம், பசியின்மை, வலியுணர்வு, வீக்கம், வாந்தி, பேதி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதன் காரணத்தை பார்ப்போம்.

    மயக்கம் வந்து நினைவின்மை ஏற்படும் போது சித்தர்கள் கூறிய '' நான் '' என்ற அஹங்காரமாகிய நம்மை உயிரானது உடலிலிருந்து தனியாக பிரித்து வைக்கிறது. அதாவது நம்மையும் உடலையும் பிரித்து வைக்கிறது. இதனால் பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடு உணர்வு ஆகிய ஞானேந்திரியங்களின் வேலைகள் தடைபட்டு சக்தி செலவழிக்கப்படுவது நிறுத்தப்பட்டு சக்தி சேமிக்கப்படுகிறது.

அதேபோல் உண்ணுதல், உடல் வேலைகள், கழிவு வெளியேற்றும் வேலைகள் ஆகிய கர்மேந்திரியங்களின் வேலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதனால் செலவழிக்கப்படும் சக்தி சேமிக்கப்படுகிறது. பசி, தாகம், வலி, பயம், கவலை போன்றவை மூலம் செலவழிக்கப்படும் உயிர் சக்தி தடுத்து நிறுத்தப்பட்டு உயிர்சக்தி சேமிக்கப்படுகிறது.

    இவ்வாறு மயக்கத்தின் மூலம் உயிர் சக்தி செலவழிக்கப்படுவது நிறுத்தப்பட்டு சேமிக்கப்பட்ட உயிர் சக்தி விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய ஆரம்பிக்கிறது.

      அவ்வாறு இருக்கையில் ஊசிகள் மூலம் இரசாயன மருந்துகளை உடலில் செலுத்துவது  இயற்கையானது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட முயற்சிக்கு இடையூறு மட்டுமே ஆகும். உயிரானது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஊசிகள் மூலம் செலுத்தப்பட்ட இரசாயன விசகழிவுகள் மூலம் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள தற்போது கூடுதல் உயிர்சக்தி தேவைப்படுகிறது. அவ்வாறு கூடுதலான உயிர் சக்தி இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அம்மருந்துகள் மரணத்தைக் கொடுக்கிறது.

   அம்மருந்துகளையும் தாண்டி உயிர் பிழைத்தால் அது உயிரின் செயல்பாடு ஆகும்.
   இதேபோல்தான் செயற்கை சுவாசமும் உயிர் சக்தியை வீண் விரயம் செய்ய வைத்து மரணத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    விபத்துக் காலங்களில் ஒரு மருத்துவரின் வேலை உடைந்து போன எலும்புகளை சரியாக பொருத்தி கட்டு போடுவது, உடலில் உள்ள கண்ணாடி, கல், இரும்பு போன்ற பொருட்களை அகற்றுவது , கிழிந்து போன தசை தோல்களை சேர்த்து வைத்து தையல் போடுதல் போன்றவைகள் மட்டுமே . இதுவும் உயிர் சக்திக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.
     இரசாயன விச மருந்துகள் உயிர் போக காரணமாக அமையுமே அல்லாது உயிரைக் காப்பாற்றாது.

   மேற்சொன்னவற்றை நம்புவதற்கு கடினமாகவே இருக்கும். ஆனால் சில அடிப்படையான உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் உண்மை புரியும்.
    உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொண்டு செயல்பட அனுமதிப்பது மட்டுமே விபத்துக் கால மருத்துவம் ஆகும்.

   இது அனைவரும் அடிப்படை மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டது ஆகும்.!

🌷இணையப்பகிர்வு

Monday, October 24, 2016

நிறைவான ஆரோக்கியம் தரும் நீர் சிகிட்சை

காலையில் எழுந்ததும் வாய்க்கொப்ப ளித்து விட்டு ஒன்றே கால் லிட்டர் சுத்தமான மண்பானை நீரை குடிக்கவேண்டும்.!
சுத்தமான நீர் என்பது - மழைநீர் ,ஊற்றுநீர், அருவிநீர் ,வேறுவழி இல்லையென்றால் மாநகராட்சி குழாயில் வரும் குளோரின் கலக்காத நீரை குறிக்கிறது.! நகராட்சி குழாய் நீரை மண்பானை, செம்புபாத்திரம், பித்தளைகுடம் போன்றவற்றில் குறைந்தது இரண்டு மணிநேரம் வைத்து, பின் பயன்படுத்தினால்  அதில் கலக்கப்பட்ட செயற்கை இரசாயண மருந்தின் தாக்கம் குறைந்துவிடும். பின் இந்த நீரை குடிநீராக பயன்படுத்தலாம்.!
எதற்காக இவ்வளவு விளக்கமாக கூறுகிறோம் என்றால் சுத்தமான நீர் என்றேன் என்பதற்காக மினரல் வாட்டர், சுத்திகரித்த குடிநீர், அருவிநீர் என்று விற்கப்படும்
 ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட  போலி நீர்கள் மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த உயிர்ச்சத்து இறந்த நீர்களை கண்டிப்பாக பயன் படுத்தாதீர்கள். இன்றைய நோய் பெருக்கத்திற்கு இந்த இறந்த நீரும் ஒரு முக்கியக் காரணம்.!
சரி இப்ப விசயத்திற்கு வருவோம். இப்படி சிலருக்கு ஒன்றரை லிட்டர்  மண்பானை நீரை மொத்தமாக குடிக்க சிரமமாக இருந்தால் 5 முதல் 10 நிமிட நேர
 இடைவெளியில் இரண்டுமுறையாக  குடிக்கலாம். பிறகு பல்தேய்த்தல் காலைகடன்
கழித்தல்  போன்றவற்றை செய்துவிட்டு கண்டிப்பாக யோகா அல்லது உடற்பயிற்சி ஒரு அரைமணி நேரம் செய்துவிட்டு, பிறகு குளித்த பின் வழக்கமான உணவருந்தலாம். காப்பி,தேனீர்,பால் கண்டிப்பாக அருந்தக்கூடாது.
உணவிற்கு பின் இரண்டு மணிநேரத்திற்கு
எந்தவிதமான உணவும் நீரும் எடுத்துக்கொள்ளக் கூடாது.!

அடுத்து மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும் இதுபோல் மீண்டும் ஒன்றேகால் லிட்டர் மண்பானை நீரை குடிக்க வேண்டும். உணவிற்கு பின்  இரண்டு மணிநேரத்திற்கு எந்தவிதமான நீரூம் பழச்சாறுகளும் உணவும் எடுத்துக்கக் கூடாது.!

மற்றபடி உங்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இயற்கையான  உணவுகளையும் பானங்களையும் தேவையான அளவு உண்ணலாம்.!

இப்படி மூன்றுவேளையும் நீர் சிகிட்சை எடுப்பதை மாதம் ஒருவாரம் கடைப்பிடித்துக் கொண்டு பிறகு மூன்று வாரம் காலையில் ஒன்றேகால் லிட்டர் நீரருந்தினால் போதும். மதியமும் இரவும் உணவிற்கு ஒருமணி முன்பு நீரருந்த வேண்டாம். ஆனால், சாப்பிட்டபின் இரண்டு மணிநேரம் சென்றபின் தான் நீர் அருந்த வேண்டும்.!
இந்த முறையை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் …

நாள்ப்பட்ட மூட்டுவலி, சோர்வு, ஆஸ்துமா, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், தைராய்டு,சிறுநீரககோளாறுகள்,சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம், உடல்பருமன், மூளைச்சூடு, அனைத்துவிதமான புற்றுநோய்கள், மனஅழுத்தம்,கீல்வாதம், கொழுப்படைப்பு, இரத்தத்தில் கிருமி, சிறுநீரகக்கற்கள் போன்ற அனைத்து வியாதிகளும் குணமாகும்.!

பிறகென்ன முழுவதும் சமைக்காத உணவுகளை உண்டு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள், இந்த
நீர்சிகிட்சையை மட்டுமாவது  பயன்படுத்தி பிணிநீங்கி ஆரோக்கியமாக வாழுங்களேன்.!
நலம் பெருகட்டும் …

---ஏகப்பிரியன் DYT

🌻இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals🌿
mobile & whatsapp
9629368389

Saturday, October 22, 2016

ஆயிரம் நோய் தரும் அபூர்வ இயந்திரம் ⛹

[10/22, 12:05] Am Yoga:

மலச்சிக்கல் என்பது பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கிய சீர்கேட்டு சிக்கலாகும்.! பொதுவாக பெருங்குடலில் நீர் சத்து குறைவதாலும் பெருங்குடல் பலவீனத்தினாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. அது மட்டும் அல்லாமல் Mucin என்ற வலுவலுப்பு தன்மையுடைய திரவம் பெருங்குடலில் சுரக்காமல் போவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.!  ஆதலால் நாம் நமது உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் எடுத்துக் கொள்ளுதல்,  பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல்,  தினமும் யோகாசனம், உடற்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்களை கடைப்பிடித்தால்  போதும், Mucin என்ற திரவம் சுரப்பதோடு பெருங்குடல் பலவீனமும் நீங்கி  மலச்சிக்கல்  சரியாகிவிடும்.! தினமும் திராட்சை பழம், பேரிச்சம் பழம், பப்பாளிப்பழம், வாழை பழம் மற்றும் கொய்யாப்பழம் முதலியன எடுத்துக் கொண்டாலும் மலச்சிக்கல் ஏற்படாது.! அதை விடுத்து தினமும் மாத்திரைகளை போடுதல், கடுக்காய் சூரணங்களை சாப்பிடுவது, எனிமா எடுத்தல் போன்றவை அந்த நாளில் கழிவை வெளியேற்ற உதவுமே தவிர Regular-ராக மலச்சிக்கல் சரியாக உதவாது.!  தினமும் எனிமா எடுக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது ஏதேனும் முற்றிய நோய் இருப்பவர்களுக்கு நோய் தீர்க்கும் ஒரு வழியாக அமையும். ஆனால், மலச்சிக்கலுக்காக மட்டுமே தினமும் எனிமா எடுத்துக்கொள்வது என்பது பெருங்குடலின் இயல்பான ஆற்றலை சிதைத்து பின் எப்பொழுதும் கழிவு முழுமையாக  எனிமா இல்லாமல் வெளியேறாத  அவஸ்தை  ஏற்படும்.!மலச்சிக்கல் ஏற்படுவதற்கும் மூலநோய்,பவுத்திரம் போன்றவை ஏற்படுவதற்கும்  இன்னொரு முக்கிய காரணம் வயிறு மலத்தை வெளியேற்ற வேண்டும் என்ற சமிக்ஞையை வழங்கும் போது அதை அலட்சியம் செய்து வேறு பணிகளை கவனித்துவிட்டு, பிறகு மேலும் ஒன்றிரண்டு வேளை உணவையும் உண்டு விட்டு பிறகு  அடுத்த வேளையோ அடுத்தநாளோ மலம் கழிக்க சென்றால்  கண்டிப்பாக கழிவு வெளியேற சிரமாகிவிடுவதோடு ஆசனவாயில் எரிச்சல், கட்டி, மூலமுளை தோன்றுதல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, சொரியாஸிஸ், தேமல், அரிப்பு  போன்ற பல்வேறு தோல் நோய்களும் ஏற்படும். இதற்கு காரணம் நாம் சாப்பிடும்  உணவு 3 முதல் 5 மணிநேரத்தில் பெருங்குடலின் இறுதிப்பகுதியான மலவாயின் மேற்பகுதியில்  Cecum  என்ற கழிவை தேக்கி வைக்கும் பகுதிக்கு வருகிறது. இங்கு பல்வேறு இரசாயண மாற்றம்  நடைபெற்று கழிவு முறையாக வெளியேறும். இந்த நேரத்தில் சீகத்தில் உள்ள கழிவுகள் உறுப்பின் பலவீனம் அல்லது மலம் கழிக்க சோம்பல் போன்ற காரணங்களால் கழிவு வெளியேறாது போனால் சீகம் மலத்தில் உள்ள கழிவுநீர்த்தன்மையை வெளியேற்றிவிட்டு மலத்தை சாறுபிழிந்த பழச்சக்கையைப் போல  தன்னுள் சேமித்து வைத்து விடும். மலத்தில் இருந்து பிழியப்பட்ட கெட்ட விசமான நீர் மலவாயோடு வெளியேற வாய்ப்பு இல்லாததால் மீண்டும் இரத்த சுழற்சியோடு சேர்ந்து கலக்க ஆரம்பிக்கும். இந்தநிலையில் இதனால் இரத்தம் மாசுப்பட்டு உடலுக்குள் உள்ள எல்லா உறுப்புகளையும் கெடுக்கிறது. மேலும் வயிற்றில் கெட்டக்காற்று , இரத்தத்தில் கிருமி, கட்டி, புற்றுநோய், மஞ்சள்காமாலை,தோல்நோய்கள்  போன்ற பல்வேறு  நோய்கள் உருவாக இதுவும் ஒரு முக்கிய காரணமாகி உடல் ஆரோக்கியத்தை முழுவதும் சிதைத்துவிடும்.!
தானாக தினமும் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும் ஒவ்வெரு மனிதனும் வருங்காலத்தில் பெரும் பெரும்  நோய்களால் அவதிப்படுவது உறுதி.! ஆகவே குழந்தைப் பருவம் முதலே சரியான முறையில் உடல் கழிவை வெளியேற்ற அனைவரையும் பழக்கவேண்டும்.!  
அதற்கு முறையான யோகாசனப்பயிற்சி, உடற்பயிற்சி, இயற்கை உணவு முறை போன்றவையே  முழுமையான தீர்வாக
 அமைகிறது.!

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
Mobile & whatsapp
9629368389
[10/22, 12:41] Am Yoga: *கற்பூரவள்ளி மருத்துவக் குணம் பற்றிய தகவல் !!!! ( ஓமவல்லி )*
☘🍃🌿🍀☘🍃🌿🍀🌳
கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .

கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

கற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.

*பயன்கள:*

கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.

இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.

கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த:

குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.!

🌷இணையப்பகிர்வு🌷

Friday, October 21, 2016

இன்றைய மருத்துவ குறிப்புகள் 22/10/2016

[10/21, 15:20] Am Yoga: சத்தை சிதைக்கும்
குளிர்சாதனப்பெட்டி

நமது சமையலில் முக்கியமான இடத்தைப் பிடிப்பது தக்காளி. அடிக்கடி விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட, நமது உணவில் தக்காளி இல்லாமல் இல்லை. பெரும்பாலும் நாம் தேர்வு செய்யும் தக்காளியானது நன்றாக சிவப்பு நிறத்திலும், கருப்பாக இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதையே பெரும்பாலும் விரும்புவோம். அப்படிப் பார்த்து வாங்கிய, அந்த தக்காளியை வாங்கிக்கொண்டு வந்து அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விடுவோம். அப்படி அந்த தக்காளிகளை  ஃப்ரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஆராய்ச்சி ஒன்றை ஃபுளோரிடா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இதுபற்றிய ஆய்வறிக்கையை கடந்த திங்கட்கிழமை, வெளியிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சியானது தக்காளியின் மரபணுவில் நடத்தப்பட்டது.

 தக்காளியைக் கடையில் வாங்குவதில் இருந்து அதை பிரிட்ஜில் வைத்து உபயோகிப்பது வரை தொடர்ச்சியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேர்வுசெய்யப்பட்ட தக்காளியை குளிரூட்டும்போது தக்காளியில் உள்ள என்சைம்கள் செயலிழக்கின்றன. இந்த என்சைம்கள்தான் நொதித்தலுக்கு உதவும். ஆனால், விவசாயிகள் கொண்டுவரும் தக்காளியில் இருந்த என்சைம்கள் அப்படியே இருந்திருக்கிறது. இந்த ஒப்பீடுகளின் முடிவில் அந்த ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் "தக்காளி அறுவடைக்கு முன்னர் வரை அதன் மரபணுக்களில் எந்தவிதமான வித்தியாசமும் தெரிவதில்லை. அறுவடைக்குப் பின்னர் குளிரில் வைக்கப்படுவதால், அதன் சுவை மட்டுமல்லாமல் பழத்தின் தன்மை மாறி, தோல் இறுகிவிடும். இதனால் தக்காளி கனிவது தாமதமாகும். இந்த தாமதப்படும் நேரத்தில்தான் என்சைம்கள் தங்களின் வேதித்தன்மையை இழக்கின்றன. குளிரின் தன்மை குறைவாக வைக்கும்போது தக்காளிதோல் கெட்டியாவது தடுக்கப்படும். ஆனால் பழத்தின் சுவை குறைவது மட்டும் நிச்சயம். தக்காளியின் சுவையை அதிலுள்ள அமிலம், சர்க்கரை உள்ளிட்ட 15 முதல் 20 விதமான மூலக்கூறுகள்தான் தீர்மானிக்கிறது. மேலும் அந்த ஆராய்ச்சியில் குளிரில் தக்காளிகளை சேமிப்பதால் இனிப்பு மற்றும் அமிலத்தில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது, ஆனால், தக்காளிப் பழத்தின் வாசனை இல்லாமல் போய்விடும். இந்த ஆராய்ச்சிக்கு புளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கைனேஸ்வில்லெ-ல் பசுமைக்குடிலில் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு தக்காளி பயிரிடப்பட்டு இந்த ஆராய்ச்சி நடந்தது.

முதல் குழுவினர் தக்காளியை 5 டிகிரி செல்சியஸ், 92 சதவீதம் ஈரப்பதத்தில் ஏழு நாட்கள் வைத்திருந்தனர். அதன் பின்னர் ஒருநாள் மட்டும் 20 டிகிரி செல்சியஸ்க்கு, மாற்றி எட்டாம் நாள் ஆராய்ச்சி செய்தனர்.

இரண்டாவது குழுவினர், தக்காளி சுற்றுப்புற வெப்பநிலை இல்லாமல் எட்டு நாட்கள் 5 டிகிரி செல்சியஸ் அளவில் குளிரூட்டி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

 மூன்றாவது குழுவினர், தக்காளி குளிரூட்டாமல் ஒருநாள் தாமதமாக ஒன்பதாம் நாள் ஆராய்ச்சி செய்தனர். இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குளிரூட்டப்பட்ட தக்காளியின் சுவை, என்சைம்கள் மற்றும் அதன் சத்து மூலக்கூறுகள் 65 சதவிகிதம் குறைகிறது. தக்காளி என்ற பெயரில் வெறும் சக்கையை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறோம். இது தக்காளிக்கு மட்டுமல்ல, மற்ற காய்கறிகளுக்கும்தான். ஃப்ரிட்ஜிலுள்ள ஃப்ரியான் வாயு  பழங்களுடனும், காய்கறிகளுடனும் வேதிவினை புரிவதால் பழத்தின் தன்மை ஏறக்குறைய உடலுக்கு ஏற்ற தன்மையை இழக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.!

🍅இணையப்பகிர்வு
[10/21, 21:04] Am Yoga: சுகமான🎯தியானம்

" உணர்வுநிலை உருவம்
உணர்வற்ற நிலை அருவம்
உணவுர்வு கடந்த உணர்வற்ற
நிலை தியானம் "

எப்பொழுதும் எதையாவது ஒன்றையோ பலதையோ
சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பதே மனதின் வேலை. மனம் என்பது எண்ணக்குவியல் தோன்றும்
இடத்தின் பெயர்.!
சூரியவெப்பம் விநாடிக்கு ஒரு லட்சத்து எம்பதாயிரம் மைல் வேகத்தில் பூமிக்கு வருவதாக
கண்டறிந்து விட்டனர். மனதின் வேகம் என்னவென்று இதுவரை
திட்டவட்டமாக கூற முடியவில்லை.!
மனதின் வேகம் மனிதனிற்கு தகுந்தவாறு மாறிக்கொண்டே
இருப்பதாலேயே  அது
சாத்தியப்படவில்லை.!
நாம் உண்ணும் உணவில் உள்ள மிக நுண்ணிய சத்துப்பகுதிகளை மூளை தனது உணவாக எடுத்துக்கொண்டு எண்ணத்திற்கு தேவையான எரிசக்தியை வழங்கிவருகிறது.!
மனதில் தோன்றும் எண்ணம் ஒரு குரங்கிற்கு ஒப்பானது.! இந்த எண்ண அலைகளை நிறுத்திவிட்டால் இதற்காக உடல் இதுவரை செலவழித்து வந்த சக்தி உடலின் மற்ற பகுதிகளுக்கு சென்று உடலை, உள்ளுறுப்புகளை, நரம்புமண்டலங்களை பலப்படுத்தும்  வேலைக்கு பயன்படும்.!
எண்ணம் மூன்றுவிதமாக இடைவிடாது மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும்.! கடந்தகால நிகழ்வுகளின் தொடர்ச்சி, நிகழ்கால நிகழ்வுகள், எதிர்கால
எதிர்ப்பார்ப்புகள் என்று இயங்கிக் கொண்டே இருக்கும்.! இதற்குள் ஏமாற்றம், பயம், அகங்காரம்,
 நம்பிக்கை,  வெற்றி,உற்சாகம், சோர்வு போன்ற எண்ணற்ற உணர்வுகளின்  பதிவுகள் தொடர்ந்து மனதை ஏதோ ஒரு நிலையில் செலுத்திக் கொண்டே இருக்கும்.! விளைவு இரவில் உடல் உறங்கும்போது  ஏன் மனமே உறங்கும் போது கூட எண்ண அலைகள்  உறங்காது இடைவிடாது பணி செய்துகொண்டே இருக்கும்.!
இதனால் தான் தூக்கத்தில் உளறுதல், சிரித்தல். நாம் ஏதாவது பணியில் இருக்கும் போது எங்கோ கேட்ட பாடல் நமக்குள்ளே
ஒலித்துக் கொண்டிருத்தல், காரணமே இல்லாமல் தோன்றும் இனம் புரியாத பய உணர்வு, திடீர் மகிழ்ச்சி போன்ற பல்வேறு  உணர்வுகளும் எண்ணங்களும் நமக்குள் தோன்றுகின்றன.! இது போன்ற எண்ணங்களை முறைப்படுத்தி  எண்ணங்களை ஒரே இலக்கை நோக்கி செலுத்தவும், எண்ணம் கடந்த நிலையான ஒன்றுமில்லா ஒன்றில் நிலைக்க செய்யவும் நமக்கு இருக்கும் ஒரே வலிமையான கருவி தியானம் மட்டும் தான்.! பக்தி,
மந்திர உட்சாடனம்,சேவை செய்தல்,தனது கடமைகளை தவறாது செய்தல் போன்ற இன்னும் எண்ணற்ற வழிகள் மனதை ஒரே நேர்கோட்டில் செலுத்த உள்ளன. ஆனால், அவையாயும் தியானத்தை விட மிக கீழான நிலையில் உள்ள தந்திரங்களே.! ஏனெனில்,
தியானத்தை தவிர மற்றவை அனைத்தும் மீண்டும் மீண்டும் புதிய எண்ணக்குவியல்களை மனதில் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டே இருக்கும்.!ஆனால், தியானத்தில் நிலைபெற்ற மனதில் எண்ணமே நின்று அதற்கடுத்த நிலையான சமாதிநிலை தோன்றும். சமாதி நிலையை கடக்கும் ஆற்றல் உள்ள மனமே சம்யமா என்னும் மறைபொருளை உணரும் உச்ச ஆற்றலை பெறுகிறது.!
தியானத்திற்கு பிறகு
 சமாதி,சம்யமா என்ற இரண்டு நிலைகள் இருப்பது போலவே
தியானத்திற்கு முன்
 பிரத்தியாகாரம், தாரனை என்ற இரண்டு நிலைகள் உள்ளன.!
அதாவது மனதை புலன்வழி செல்லாமல் தடுத்து அதை உள்முகமாக திருப்புதல் பிரத்தியாகாரம் எனப்படும்.
அப்படி உள்முகமாக திருப்பிய ஆற்றல் அதே நிலையில் 12 விநாடிகள் நிற்பது தாரனை. குறைந்தது 12 தாரனையின் கால அளவு ஒரேப்பொருளை சிந்திப்பது தியானம். ஒரேப்பொருளை சிந்தித்த மனது, சிந்தனை இரண்டும் ஒன்றாகி ,லயித்து அப்படியே நின்றுவிடுவதே சமாதி. அப்படியே நின்றுவிட்ட ஆற்றல் பரம்பொருளான பிரபஞ்ச ஆற்றலுக்குள் நுழைந்து அதன் உண்மை தன்மையை கண்டறிவதே சம்யமம். இதுவே தியானத்தின் உச்சநிலை. இதுவே ஞானம்.! சிலர் இந்தநிலைக்கு செல்வதற்கான முயற்சியில் மனப்பிரழ்வு ஏற்பட்டு மனநோயாளி ஆவதும் உண்டு.!
சரி நாம் அதற்குள் போக வேண்டாம். சிந்தனையை கடந்து
தியான நிலைக்கு போவதை மட்டும் பார்ப்போம்.! எந்த எண்ணம்
மனதில் உதித்தாலும் அதை 12 விநாடி நேரத்திற்குள் கடந்துவிட்டால் எண்ணம் நம்மை விட்டு போய்விடும். 12 விநாடிகள் கடந்தும் ஏமாற்றம், மகிழ்ச்சி, எரிச்சல் என்று எதை நாம் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருந்தாலும் அந்த எண்ணம் நமக்குள் ஆழமாக ஊடுருவி தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிடும்.!
அதனால் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒவ்வெருவரும் வீணான எந்த
சிந்தனைகளையும் பனிரெண்டு
விநாடிகளுக்குள் கடந்து  தங்களுக்கு பிடித்த கடவுள், இயற்கைகாட்சிகள்,மந்திரங்கள் போன்றவற்றையோ அல்லது மூக்கு நுனியையோ தொடர்ந்து  120 விநாடி முதல்  12 நிமிடம் வரை மனக்கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தால் தியானநிலை உருவாகும்.! இப்படி ஒரேப் பொருளை நாம் நினைக்க
ஆரம்பிக்கும் போது இதுவரை பல எண்ணங்களில் செலவாகி வந்த நமது ஆற்றல் ஒரு முகமாவதால்
பூரண ஓய்வு, உடல் ஆரோக்கியம், நரம்பு மண்டல ஆரோக்கியம், நாள்ப்பட்ட பிணியிலிருந்து விடுதலை எண்ணிய குறிக்கோளில் வெற்றி போன்றவற்றில் நாம்
 விரும்பிய  எதையும் அடையலாம்.!  
இந்த உண்மையை உணர்ந்ததால் தான்  மகாகவி பாரதியார்
"தமிழா பலநாள் சாப்பிடாமல் இருந்தாலும் இரு. ஆனால், ஒருநாள் கூட தியானம் செய்யாமல் இருக்காதே "என்றார்;
வாருங்கள்,எண்ணங்களிலிருந்து விடுதலைப்பெற்று பூரண
அமைதி பெற சுகமாக தியானம்
செய்வோம்.!

---ஏகப்பிரியன் DYT----

யோகா & இயற்கை
மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் 💐
[10/21, 21:09] Am Yoga: காலையில் வெள்ளை பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தேநீர், காபி போன்றவை உடலுக்கு புத்துணர்ச்சியை தந்தாலும், காலை நேரத்தில் பழச்சாறுகள் குடிப்பதல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
காலையில் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ,
சத்துக்கள்:
வெள்ளைப் பூசணியில் விட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது.
முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும்.
அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
2. தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
3.வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
4.உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
5. வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
6. சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.!

💐இணையப்பகிர்வு
[10/21, 21:13] Am Yoga: *சுக்கு மருத்துவம்*
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, “சுக்கு நீர்” காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.!

⚡இணையப்பகிர்வு

Thursday, October 20, 2016

ஒரு வெற்றிச் சரித்திரம்💐

" நான் தெற்கிலிருந்து வடக்காக எங்கவீட்டுக்கு ஹோண்டா பைக்ல  வந்துட்டிருந்தேன்.
ஒரு பாதிரியார்  கிழக்கிலிருந்து மேற்காக ஹீரோ கோண்டால வந்திட்டுருந்துருக்காரு … ஒரு நான்கு சாலை சந்திப்பில் பாதிரியர் தனக்கு குறுக்காக சென்று கொண்டிருந்த என் வண்டியில் வேகமாக இடித்து சாலையிலேயே  சிலுவையைப் போட்டு விழுந்தார். "

இருவருக்கும் பெரிதாக அடி ஒன்றும் படவில்லை. பாதிரியாரின் வெள்ளை அங்கி கிழிந்து தொங்கியது. எனது வலது கை முட்டியின் கீழே கொஞ்சம் ஆழமாக என் அங்கம் உறைந்து இரத்தம் கசிந்தது.
அக்கம் பக்கத்தில் இருந்த மனிதாபிமானிகள் ஓடி வந்து இருவரையும் தூக்கிவிட்டார்கள்.!

நீங்கதான்குறுக்க வந்துட்டிங்க,நீங்கதான்  வேகமா வந்து போயிட்டிருந்த வண்டில இடிச்சிட்டீங்க போன்ற வழக்கமான பஞ்சாயத்துகள்  முடிந்து. அவரவர் வண்டியை தள்ளிக்கொண்டு போய் சேருங்கள் என்று ஒரு விஞ்ஞானப் பூர்வமான தீர்ப்பு  பாதசாரிகளால் வழங்கப்பட்டது.!

இதற்கிடையில் பாதிரியர் தனது கைப்பேசியில்  தொடர்புகொண்டு நண்பர்களை காரில் வரவைத்து அதில் ஏறப்போன நேரத்தில் அவரை கூப்பிட்டு  எனது வண்டியின் வலது முன் கால் வைக்கும் கம்பி அப்படியே வளைந்து என் வண்டியை உதைத்து இயக்க முடியாத அளவிற்கு அது  பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இதை பாருங்கள் அய்யா, இதுவே காலில் பட்டிருந்தால் காலே உடைந்து போவதற்கான வாய்ப்புண்டு, ஆகையால் பிற உயிர்களோடு விளையாடாதீர்கள் அய்யா என்று நான் கூறியதும்  , அவர் உடனே எதோ பணம் எதிர்ப்பார்ப்பான் போல என்பதுபோல் நினைத்து என் வண்டியும் முன்பக்கம் முழுவதும்  பாதிக்கப்பட்டுள்ளது  நான் என்ன செய்வது?  என்று கேட்டார்.!
" எதிர்பாராதவிதமாக எதேனும் வாகனமோ, மனிதர்களோ, நாய்களோ குறுக்கே  பாய்ந்தால் உடனே வண்டியை நிறுத்தும் அளவிற்கு  நிதானமாக, கவனமாக வண்டியை ஓட்ட வேண்டும் அய்யா.!  அதுவே உமக்கும் பிற உயிர்களுக்கும் பாதுகாப்பானது "
என்று கூறி  கொஞ்சம் சிரமப்பட்டு வண்டியை உதைத்து இயக்கிக் கிளம்பினேன் …

இன்றோடு ஒன்பது நாள் ஆகிவிட்டது கையில் பட்ட சிராய்ப்பு காயம் இன்னும் ஆறாததோடு  லேசாக பழுப்பும் வருகிறது.!
முதலில் இருந்தே ஊசியை போடுங்க, ஊசியை போடுங்கனு சொல்லிட்டிருந்த என்மனைவி  இப்ப இன்னும் கத்துகிறார்.!
நான் சிறிது மூலிகை எண்ணையை மட்டுமே தடவிவந்தேன், அதோடு தினமும் குளிக்கும் போது மட்டுமல்லாமல் பல நேரங்களிலும் காயத்தில் நீர் வேறுபடுவதால் கொஞ்சம் படுத்துகிறது போல. அதோடு சில நண்பர்கள் வலது கை முட்டிப்பகுதியில் அடிப்பட்டால் கை அதிகமாக அசைந்து கொண்டே இருப்பதால் மெதுவாகதான் ஆறும்.! என்கிறார்கள்.!

இன்றைக்கு தான் முதன்முதலாக  காயத்தை சுடுநீரில் கழுவி சித்தா புண் கழிம்பை போட்டுள்ளேன்.!
இனியாவது வேகமாக காய்கிறதா பார்ப்போம்.!

இதுக்கு ஏம்யா, ஒரு வெற்றிச் சரித்திரம்னு தலைப்பு வெச்சனு கேக்குறியளா?
இப்படி வெற்றி,மகிழ்ச்சி, கொண்டாட்டம், கட்டுக்கட்டா பணம், நடிகையின் நாய்க்குட்டி என்றெல்லாம்  தலைப்பு வெக்கிறதுதான்  தற்கால தமிழர்மரபு.!
கோவிச்சுக்காதியா …

*இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவெனில் வாகன விபத்தில்  இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தொடர்ந்து  முதலிடத்தில் இருக்கிறதாம்.< நம்மை போன்று கணக்கில் வராத சிறு விபத்துகள் எத்தனையோ தெரியவில்லை>
வாகனம் ஓட்டுவதை அனைவரும் ஒரு தியானம் போல் செய்தால் மட்டுமே  ஆர்வக்கோளாறாய் விபத்து ஏற்படுத்தி பலரை அநாதைகளாக  ஆக்கிவரும் தமிழக சாதனையை தடுக்க முடியும்.!
அட, உண்மையில் இது ஒரு தமிழக வெற்றிச்சரித்திரம் தான்.!
இந்த வெற்றியை அனைத்து அதிவேக,
ஆர்வக்கோளாறு ஓட்டுனர்களுக்கும் சமர்ப்பிப்போம்.💐

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
 Mobile & whatsapp 9629368389

நலம்பெருகட்டும் …

இன்றைய குறிப்புகள் 20/10/16

[10/20, 13:04] Am Yoga: ஆஸ்துமாவை போக்கும் ஆடாதோடை மணப்பாகு☘

ஆடாதோடை இலை 200 கிராம்
சிற்றரத்தை  20 கிராம்
அதிமதுரம்  20 கிராம்
அக்கராகாரம் 20 கிராம்
சுக்கு 10 கிராம்
மிளகு  10 கிராம்
திப்பிலி 10 கிராம்
இலவங்கம்  10 கிராம்
ஏலக்காய்  10 கிராம்
நாட்டுப்பசு நெய் 20 கிராம்
பனங்கற்கண்டு 1 கிலோ

ஆடாதோடை இலையை பொடிப்பொடியாக அரிந்துகொள்ளவும்.
நெய், கற்கண்டு தவிர மற்ற மருந்து சரக்குகளை  ஒன்றாக கலந்து சூரணபதத்தில்  நன்கு பொடித்து  வைத்துக்கொள்ளவும்.
ஒரு பழகிய மண்சட்டியில் நெய்விட்டு இலையை வதக்கவேண்டும். பிறகு இடித்த மருந்து சரக்குகளையும் கொட்டி அவை பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஒரு லிட்டர் நீரை  ஊற்றி  கிளறி வரவேண்டும்.நீர் கொதிவரும் நேரம் பனங்கற்கண்டை பொடித்துப் போட்டு
தொடர்ந்து கிளறிவர வேண்டும்.
பாகு தேன் பதத்தில் குழைந்து வரும்போது இறக்கி ஆறியபின் கண்ணாடிப் புட்டியில்  அடைத்து வைத்துக்கொண்டு
வேளைக்கு இரண்டு தேக்கரண்டி மணப்பாகில் அதே அளவு நீர்கலந்து உணவிற்கு பின் மூன்றுவேளையும் தொடர்ந்து உண்டுவர ஆஸ்துமா,இரைப்பு,சைனஸ்,
நுரையீரல் பலவீனம், நரம்புத்தளர்ச்சி,சோர்வு, இரும்புச்சத்துக் குறைபாடு,  நாவறட்சி, உடல்வீக்கம், வறட்டு இருமல் போன்ற நோய்கள் குணமாகும்.☘
ஒரு வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு சங்களவு பாகை தாய்ப்பால் அல்லது தேங்காய்ப்பாலில் கலந்து  ஏதேனும் ஒருவேளை கொடுத்து வந்தால் மூச்சுவிட சிரமப்படும் அளவிற்கு அடைத்துள்ள சளி வெளியேறி சுகமாகும்.!
மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒருத்தேக்கரண்டி பாகில் அதே அளவு நீர் சேர்த்து கொடுக்கலாம்.!
நோய் இல்லாமல் இருந்தாலும் அடிக்கடி சோர்வாக உணரும் யாரும் இந்தப்பாகை தினமும்  ஒருவேளை குடித்துவந்தால் உற்சாகமாக வலம் வரலாம்🍀☘🌿

🍇இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
Mobile & whatsapp
9629368389

🍒நலம்பெருகட்டும் …







🌱மேற்கண்ட நோய் இருப்பவர்கள் இந்த மருந்தை செய்து குடித்து என்றும் ஆரோக்கியமாக வாழவாழ்த்துகள்.!
[10/20, 20:27] Am Yoga: மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

மூட்டழற்சி:

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்:

இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டழற்சியின் அறிகுறிகள்:

நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்:

இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்:

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்:

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.!

🌽இணையப்பகிர்வு
[10/20, 20:28] Am Yoga: 👆உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?

முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது. உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.

இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும் காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent) அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப் பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி விடுகின்றன. அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை (capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள் இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல் போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும் பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்.!

🍎🍓🍇இணையப்பகிர்வு

Tuesday, October 18, 2016

இ்ன்றைய குறிப்புகள் 19/10/16

[10/18, 19:05] Am Yoga: ஆரோக்கியம்  தரும் தூக்கம்
🕸🕸🕸🕸🕸🕸🕸

கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும்நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித் திருக்கிறீர்களா?8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம்.அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள். இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது... என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது...நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை? இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல.உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.அதிகரித்துவரும்`காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும். மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு,வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள். அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள். முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங் களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள்.தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள்.இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ், வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச்சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன? தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான். நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது.இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள்:நமது உடலுக்குள் மனசுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு. ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான் மெலட்டோனின் முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும். முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்திசெய்யப்படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம்.ஒழுங்கற்ற தூக்கத்தால் பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம். இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம்போக்காகத் தூங்கு வதாலும் மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவைவருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம்தான். இருள்தான் மனிதர்களுக்குத்தூக்கத்தைத் தூண்டும். அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத்தூங்குகிறோம். சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம். பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன. அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது.மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக்கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்; தூக்கத்தைத் தாமதப்படுத்தும். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல்முறையைஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால்பிரச்னை வராது.பொதுவாக இரவு 9 முதல் 11 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது. அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சரியான நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். தூங்க செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பே டிவி, மற்றும் இணையதளம் பார்ப்பதை நிறுத்தி விட்டு கைப்பேசியை கைப்பேசியை சுமார் நூறடி தூரத்தில் வைத்துவிட்டு தூங்குங்கள்.! இதுவே உண்மையான உறக்கத்திற்கான
வழியாகும்.!

🌹இணையப்பகிர்வு🌷
[10/19, 10:47] Am Yoga: தினமும் ஓகம் செய்வதால்
ஏற்படும் நன்மைகள் …

*மலச்சிக்கல் நீங்குகிறது
*குடல்வாய்வு உடனுக்குடன்
 வெளியேறுகிறது
*நுரையீரல் உள்ள கழிவு காற்று முழுவதும் வெளியேறுகிறது
*சிறுநீரகம்,கல்லீரல்,
இதயம் போன்ற இராஜ உறுப்புகளின் செயல் திறன் அதிகரிக்கிறது
*நரம்பு மண்டலம் முழுவதும் பலமடைகிறது
*உடல் வளர்ச்சி சீரான நிலையில் இருக்கிறது
*உடல் வளைவுத்தன்மை அதிகரிக்கிறது
*எலும்புகளின் அடர்த்தி மேம்படுகிறது
*உடல்பருமன், இரத்தஅழுத்தம், மனஅழுத்தம்,சக்கரை, புற்றுநோய், தொழுநோய்,  சிறுநீரக செயலிழப்பு, மனப்பிரழ்வு போன்ற எத்தகைய வியாதியையும் 50% வரை வேகமாக குணப்படுத்துகிறது
*என்றும் இளமையான தோற்றத்தையும் நீண்ட ஆயுளையும்
அதிகமாக உழைப்பதற்கு ஏற்ற
உடல் மன வலிமையையும் தருகிறது
*கண்திருஷ்டி,செய்வினை, சூன்யம் போன்ற எதிர்மறை ஆற்றலின் செயல்பாடுகளை முடக்குகிறது
*விதிவழியில் நடைபெற இருக்கும்
தீங்குகளை கட்டுப்படுத்துகிறது
*என்றும் அமைதியான வாழ்க்கையும் ஆரோக்கியமான மனநிலையையும் ஒருங்கே தருகிறது

மேலே கூறியவைகளை உடற்பயிற்சி நடனம், தற்காப்புகலை கற்றல் இன்று புதிதுபுதிதாக கிளம்பி வரும் ஏரோபிக்ஸ் ரிதமிக் தெரபி போன்ற எவற்றாலும் முழுமையாக தரவே முடியாது.! ஏனெனில் ஓகத்தில் மட்டுமே உடலில் உள்ள ஒவ்வெரு அங்கங்களையும் நரம்புகளையும் கட்டுப்படுத்தும் பயிற்சி முறைகளும் உடல் உள்ளுறுப்புகள் ஒவ்வென்றையும் சுத்திகரிக்கும் பயிற்சி முறைகளும் உள்ளன.!
அதென்னங்க ஓகம் நான் உடனே கற்றுக்கொள்ள வேண்டுமே
என்கிறீர்களா? ஒருவேளை அதை நீங்கள் ஓகத்தை ஏற்கனவே செய்து வரலாம்.! ஆமாங்க, யோகா என்பதன் தமிழ்ப் பெயர் தான் ஓகம்.! ஒரு தமிழ் முனிவரான பதஞ்சலியின்  கண்டுப்பிடிப்பான யோகத்தை ஏன் இன்னும் சமஸ்கிருதத்திலேயே  கூற வேண்டும் என்று சிலர் யோகா என்பதை ஓகம் என்று மாற்றியதுடன் அத்தனை பயிற்சி முறையின் பெயர்களையும்  தமிழ்படுத்தி உள்ளனர்.! பதஞ்சலி முனிவர் இது இந்தியா முழுவதிலும்  பிரபலமாக வேண்டும் என்பதற்காகாவே  சமஸ்கிருதத்தில் தனது யோகச்சூத்திரத்தை சமஸ்கிருதத்தில்  எழுதி இருக்க வேண்டும்.! <இன்று உலகில் 200 கேடிக்கும் மேலானவர்கள் பயிலும் ஒரே கலையாக யோகா விளங்குகிறது>
 ஒருவேளை இத்தனை பயன்களையும் நான் பெறவில்லையே என்று நீங்கள் கூறுவீர்களேயானால் நீங்கள் இன்னும் யோகாவை சரியாக பயிலவில்லை என்பதே உண்மை.!

*அனைவரும் நமது ஓகத்தை முறையாக கற்று ஆரோக்கிய வாழ்வில் நிலைபெற வாழ்த்துகள்.!

---ஏகப்பிரியன் DYT

 இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

ஸர்வே பவந்து ஸூகின …!

முளை கட்டிய தானிய உணவு :*

[10/18, 10:29] Am Yoga: *

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும் ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கறுப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவதுதான் முளைதானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.

இந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால் 8 – 10 மணிக்குள் தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும்.

இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.

முளைவிட்ட கோதுமை சாப்பிட்டால் புற்றுநோய் மட்டுப்படும்.

முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உடல் போடும் கண்பார்வை மேம்படும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் அதிகம் சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முளைவிட்ட கறுப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.. மூட்டுவலி தீரும்.

எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.!

🍏இணையப்பகிர்வு
[10/18, 13:33] Am Yoga: பேறுகால  இரகசியங்கள்🌿

*மாத விடுமுறைகழிந்து முதல்  5  நாட்களுக்குபின் 20 நாள்  வரை இல்லறத்தில் ஈடுபட்டால் மழலைப்பேறு ஏற்படும்.முதல் 5 நாள் மற்றும் இறுதி பத்து நாள் இல்லறத்தில் ஈடுபட்டால் மழலை உருவாகாது.!

 *பெண் கர்ப்பமான 40 நாளில் இருந்து சிலருக்கு வாந்தி, அடிக்கடி சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படலாம் இதற்கு கொஞ்சம் இந்துப்பை சுடுநீரில் போட்டு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை வாய்க்கொப்பளித்து வந்தால் சரியாகிவிடும் அதோடு சாத்துக்குடிச் சாறுடன்  சிறிது தேன் கலந்து தினமும் ஒருவேளை கொடுத்துவரலாம்.!

மூன்று மாதம் ஆன நிலையில் சிலருக்கு ஹீமோ குளோபின் குறைபாடு ஏற்படலாம் அதற்கு பாதி ஆப்பிள், ஒரு கேரட்,  கால்துண்டு பீட்ரூட் மூன்றையும் ஒன்றாக்கி ஜூஸாக்கி அதோடு சிறிது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு போட்டு குடித்துவந்தால் இரத்தசோகை குணமாகும்.!

கர்ப்பமான நாள் முதல் சீனி,மைதா, சாக்லேட் போன்ற இரசாயண உணவுகளை தவிர்த்து கருப்பட்டி,தேன். வரகரிசி, கைக்குத்தல்  அரிசி சிறுதானிய உணவுகளையும் பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு,பட்டாணி, கொண்டைக்கடலை, வேர்க்கடலை போன்ற கொட்டை வகை உணவுகளையும் பழங்களையும் அதிகமாக கொடுத்துவந்தால் பிரசவத்திற்கு  தேவையான சக்தி உடலில் அதிகரிக்கும்.!

சில பெண்கள் கர்ப்ப காலத்தில் பல்ப்ப குச்சி,மண்,சாம்பல், மாங்காய் போன்றவற்றை தன்னை யறியாமலேயே  சாப்பிட ஆரம்பிப்பார்கள் இது உடலில் உருவாகும் குழந்தைக்கும் தாய்க்கும் அறுசுவை தேவை  என்பதையே உணர்த்துகிறது. இந்த நேரத்தில் பேரிச்சம் பழம் ,நெல்லிக்காய், நொங்கு, கருவேப்பிலை,வல்லாரை போன்றவற்றை கொடுத்து வருவது நல்லது.!

கரு உருவான முதல் மூன்று மாதங்களுக்கு  உடற்பயிற்சி, யோகாசனம், அதிகவேலை, வாகனப்பயணம்  போன்றவற்றை முழுவதும்  தவிர்ப்பது நல்லது. நான்கு மாதத்திற்கு பிறகு உடலை வருத்தாத எளிய உடற்பயிற்சி, உபவிஷ்ட தண்டாசனம், அர்த்த பத்ராசனம், ஆனந்தாசனம், துவிபாத பீடம் போன்ற எளிய யோகாசனங்களை
7 விநாடி விதம் ஒவ்வெரு ஆசனத்தையும் 4 முறை செய்யலாம். கூடவே நாடிசுத்தி பிராணாயாமம், அஸ்வினி முத்ரா பிராணாயாமம், சுகப்பிராணாயாமம்
போன்றவற்றை தினமும் 20 சுற்றுகள் வரை செய்யலாம்.!
அதோடு ஆனந்த தியானம், பிரபஞ்ச தியானம், தாரனை தியானம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 7 முதல் 12 நிமிடங்கள் வரை செய்துவரலாம்.!

தினமும் மனதிற்கு பிடித்த இசையை கேட்பது, பக்தி, இலக்கியங்களை படிப்பது  போன்றவற்றை மேற்கொள்ளலாம்.!

தாய்மையடைந்துள்ள பெண் வருத்தப்படக்கூடிய எதையும் சொல்லாமல் கனிவாக பார்த்துக்கொள்வதும் வீணான பயத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும்  உறவு மற்றும் சுற்றத்தாரின் பொறுப்பு.!

*வளைகாப்பு போன்ற பாரம்பரிய பழக்கங்களை மேற்கொள்வதால்  தாயாகப்போகும் பெண்ணிற்கு மனதில் மகிழ்சியும் அமைதியும்  பாதுகாப்புணர்வும் அதிகரிக்கும்.!

*கர்ப்பகாலத்தில் பெண்ணிற்கு  சக்கரை, இரத்த அழுத்தம், சத்துக்குறைபாடு போன்றவை  ஏற்படுவது இயல்புதான். அதற்காக ஆங்கில மாத்திரை, மருந்துகள்,  விட்டமின், மாத்திரைகள், டானிக்குகள் போன்றவற்றை எடுக்காமல் தினமும் ஒருவேளை நெல்லிக்காய் தேனுறலில் சிறிது துளசிப்பொடியை கலந்து  சாப்பிடும் முன் கொடுத்து வந்தால் மேற்கண்ட பிணிகள் குணமாகி விடுவதோடு சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும்.!

*சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதே தாய்க்கும் குழந்தைக்கும் மிக ஆரோக்கியமான விசயம். அதனால் கர்ப்பகால பரிசோதனைகளையும் பிரசவத்தையும் முடிந்தவரை அரசு மருத்துவமனையில் நடத்தவே முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அரசு மருத்துவ மனைகளில் 90% சுகப்பிரசவமும் தனியார் மருத்துவமனைகளில் 92% சிசேரியனும் நடைபெறுவதாக ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.!

*அனைவரும் ஆரோக்கியமான முறையில் அழகான குழந்தைகளை பெற்று
மகிழ்வாக வாழ வாழ்த்துகள் …
🌴🌴🌴🌿☘🌴🌴🌴

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in

Aum Herbals
mobile & whatsapp
9629368389

நலம் பெருகட்டும் …

Monday, October 17, 2016

இன்றைய குறிப்புகள் 18/10/16

[10/17, 16:52] Am Yoga: எல்லாவகையான உணவுகளையும் தின்று பார்த்துவிட்டு மிகையூண் நோயாளராகி இறுதியில் கம்பும் கேழ்வரகும் பழஞ்சோறும் நீராகாரமுமே சிறந்தது என்று உணர்ந்தோம்.

எல்லாவகையான உலோகங்களிலும் பண்ட பாத்திரங்கள் செய்துவிட்டு இறுதியில் மண்சட்டியும் மண்பானையுமே பக்க விளைவுகளற்றவை என்ற பக்குவத்திற்கு வந்திருக்கிறோம்.

எல்லாவகையான சொகுசுந்துகளிலும் நோகாது பயணித்துவிட்டு இறுதியில் கைகால் வீசி நடப்பதுதான் உயிராற்றலைக் காப்பது என்று தெரிந்துகொண்டோம்.

எல்லாவகையான செருப்புகளையும் அணிந்து பார்த்துவிட்டு இறுதியில் வெறுங்காலோடு நடப்பதே சுரப்பிகளை ஊக்குவது என்று கண்டுபிடித்திருக்கிறோம்.

எல்லாவகையான ஈருருளிகளையும் வாங்கி ஓட்டிப் பார்த்துவிட்டு இறுதியில் மிதிவண்டிதான் உடலுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்றது என்று புரிந்துகொண்டோம்.

எல்லாவகையான செயற்கை உரங்களையும் வேதிப்பொருள்களையும் பயன்படுத்தி மண்ணைக் கெடுத்துவிட்டு இறுதியில் இலைதழை உரங்களும் பசுஞ்சாணமும் பஞ்சகவ்யமுமே உரமூட்டுவது என்று அறிந்துகொண்டோம்.

எல்லாவகையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்திவிட்ட நாம் புதிதாய் ஒரு விதையை உருவாக்க முடியாது என்பதில் திகைக்கிறோம்.

இப்படி நிறையவே சொல்லலாம். இதில் இன்னும் ஒன்றேயொன்று மீதமிருக்கிறது.

எல்லாவகையான மாட மாளிகைகளையும் ஆடம்பரக் கட்டடங்களையும் கட்டுவதற்காக மலைகளையும் மரங்களையும் விளைநிலங்களையும் ஆற்றையும் காற்றையும் வரம்பின்றி அழித்த நாம், இனி நம் மூதாதையர் வாழ்ந்ததுபோல் கீற்றுவேய்ந்த கூரைவீடுகள்தாம் சிறப்பு என்ற இடத்திற்கும் அவற்றில் வசிப்பதற்கும் வந்தேயாகவேண்டும். எல்லாவற்றுக்கும் இறுதியில் இது நடக்கும் !

🎆இணையப்பகிர்வு
[10/17, 16:55] Am Yoga: உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்படலாம்....
அனைவரும் அனைவருக்கும் பகிரவும்....

எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா??

நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது.
ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாதநோய்களே இல்லை.

நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.

கடிகளைக் கண்டறிதல்:

> இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.
இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்,

*இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..

*புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்…

*வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,
நீர் பிரட்டை போன்றவை என்றும்…

*கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

> தேள் கடி மருந்துகள்:

*எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

*கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.

*கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

*சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

*கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

*பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

*குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத்தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர்.

> நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.

> பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

> வெறி நாய் கடித்து விட்டால்.
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

> பாம்பு கடித்து விட்டால்.
உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழியவேண்டும். சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில்படுக்க வைத்தவன் பல் கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி எழுந்து நடப்பான்.

> எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும்.

உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.

சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை மருத்துவம் இருக்கு...

--இணையப்பகிர்வு_____