ஒன்றே குலம்
ஒருவனே தேவன் …
ஒன்றே பிறப்பும்
ஒன்றே நிறைவும்,
என்றான பின்னே …
பிணி பலவென்றும் அதற்கு மருந்து பலவென்றும் அலைவது ஞானமாகுமா…
கண்ணுக்கான உணவை
கண்கள் திண்ணுமா,
அருமை மூக்கிற்கான
உணவை மூக்கில்
திணிப்பியா,
கெண்டை காலுக்கான
உணவை காலில் தடவ வா,
வாயில் விசம் வைத்தால்
வாய் மட்டும் சாகுமா?
எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்த
நரம்புகள் ஒன்றை தொட்டால் உடலே அதிருமே …
ஆதியில் பிரபஞ்சம் ஒன்றாய் இருந்தன,
பின்பு அது கொண்ட
வெம்மையால் மலராய் வெடித்தன
பலவிதழ் பலவாய்
மலர்ந்து சிரித்தன …
பின்பு ஒன்றாய் இரண்டாய்
காய்ந்து வீழுமே,
மீண்டும் ஒன்றாய் மண்ணில் புதைந்து போகுமே …!
பேதமும் பீதியும் மனிதனின் சிந்தைகள்,
அதனில் வந்தது வியாபார சந்தைகள் …
விந்தையாய் இருக்குது உலகமே
மயங்குது ,ஒன்றை தின்று ஒன்று
பீதியில் அலையுது …
சங்கடம் தீர்ந்திட , காதை நீ பொத்திடு
வசிவசியென்று உள்முகம் சென்றிடு
ஒளியாய் தோன்றிடும் ஆதியின் இருளது
உன் பிணி தீர்த்திட
உண்டான மருந்தது.!
----ஏகப்பிரியன்____
amyogatrust.blogspot.in
ஒருவனே தேவன் …
ஒன்றே பிறப்பும்
ஒன்றே நிறைவும்,
என்றான பின்னே …
பிணி பலவென்றும் அதற்கு மருந்து பலவென்றும் அலைவது ஞானமாகுமா…
கண்ணுக்கான உணவை
கண்கள் திண்ணுமா,
அருமை மூக்கிற்கான
உணவை மூக்கில்
திணிப்பியா,
கெண்டை காலுக்கான
உணவை காலில் தடவ வா,
வாயில் விசம் வைத்தால்
வாய் மட்டும் சாகுமா?
எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று பிணைந்த
நரம்புகள் ஒன்றை தொட்டால் உடலே அதிருமே …
ஆதியில் பிரபஞ்சம் ஒன்றாய் இருந்தன,
பின்பு அது கொண்ட
வெம்மையால் மலராய் வெடித்தன
பலவிதழ் பலவாய்
மலர்ந்து சிரித்தன …
பின்பு ஒன்றாய் இரண்டாய்
காய்ந்து வீழுமே,
மீண்டும் ஒன்றாய் மண்ணில் புதைந்து போகுமே …!
பேதமும் பீதியும் மனிதனின் சிந்தைகள்,
அதனில் வந்தது வியாபார சந்தைகள் …
விந்தையாய் இருக்குது உலகமே
மயங்குது ,ஒன்றை தின்று ஒன்று
பீதியில் அலையுது …
சங்கடம் தீர்ந்திட , காதை நீ பொத்திடு
வசிவசியென்று உள்முகம் சென்றிடு
ஒளியாய் தோன்றிடும் ஆதியின் இருளது
உன் பிணி தீர்த்திட
உண்டான மருந்தது.!
----ஏகப்பிரியன்____
amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment