Saturday, March 18, 2017

துளசி நீர்:-

துளசி நீர் எப்படி செய்வது?

முதலில் சுத்தமான செம்பு பாத்திரமொன்றை எடுத்துகொண்டு அதனுள் சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போடவும்.

இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், அல்லது இரண்டு டம்ளரோ குடிக்க வேண்டும்.

இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும். அத்துடன் தோல் சுருக்கம் மறையும். நரம்புகள் பலப்படும். பார்வை குணமடையும். இதன் அர்த்தம் யாதெனில் நாம் இளமையுடன் என்றென்றும் வாழலாம்.

மேலும், உடலின் எந்த பகுதியில் புற்று நோய் இருந்தாலும் இந்த துளசி நீர் அருந்தினல் போதும் பூரணமாகக் குணம் ஆகும்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் இந்த துளசி நீ போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை அண்டாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொறிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொறி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.!

*இணையப்பகிர்வு*

சிறுநீர் அடைப்பு தோல் நோய்களைப் போக்குமுஇரணக் கள்ளி

புண்களை ஆற்றக் கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்க வல்லதும், வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியதும், மருக்கள், காலாணிகளை குணமாக்கும் தன்மை கொண்டதுமான ரண கள்ளியை பற்றி இன்று நாம் பார்ப்போம். அழகுக்காக வளர்க்க கூடியது ரண கள்ளி. இது கிருமி நாசினியாக விளங்குகிறது. கொசுக்களை விரட்ட கூடிய தன்மை உடையது. ரண கள்ளியை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. மேல்பூச்சு மருந்தாக போடும்போது விஷக்கடிக்கு மருந்தாகிறது. வலி நிவாரணியாக விளங்கும் ரண கள்ளி வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. காலரா, சீதபேதியை தணிக்க கூடியது. சிறுநீரக கற்களை உடைக்க கூடியது. சிறுநீர் சரியாக போகாமல் அடி வயிற்றில் வீக்கம் இருந்தால் மேல்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வீக்கம் சரியாகும்.
ரண கள்ளி இலையை பயன்படுத்தி சிறுநீரக கற்களுக்கான உள்மருந்து தயாரிக்கலாம். 3 அல்லது 4 இலைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும். சிறுநீர் எரிச்சலை போக்க கூடியது. சிறுநீர் தாரையில் ஏற்படும் அழற்சி சரியாகும். உயர் ரத்த அழுத்தம் சீராகும்.இலைகளை பயன்படுத்தி சிறுநீர் கற்களால் ஏற்படும் வலியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் இலைகளை லேசாக வதக்க வேண்டும். வதக்கிய இலையில் உப்பு தடவி அடிவயிற்றில் பற்றாக போடவும். இவ்வாறு செய்தால் வலி சரியாகும். இலைகளை பயன்படுத்தி வயிற்றுப்போக்குக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இலைசாறு, புளிப்பில்லாத மோர், உப்பு. இலைகளை வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் இலைகளை பிழிந்து சாறு எடுக்கவும். 10 முதல் 20 மி.லி சாறு, அரை டம்ளர் மோருடன் சிறிது உப்பு கலந்து காலை, மாலையில் எடுத்துக்கொள்ளலாம். இதனால் வயிற்றுபோக்கு, ரத்த கழிச்சல் குணமாகும். ரத்த மூலம், தடைப்பட்ட மாதவிடாய் சரியாகும். வாதம், பித்தத்தால் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது. புற்றுக்களை உண்டாகும் நச்சுகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது ரண கள்ளி. புண்களை ஆற்ற கூடியது. கள்ளி வகையை சேர்ந்த இது நோய் கிருமிகளை அழிக்கவல்லது. ரத்த கசிவை கட்டுப்படுத்தும். அதிக மாதவிலக்கை சீராக்கும். சிறுநீரை சீராக வெளியேற்றும்.
இலைகளை பயன்படுத்தி மருக்கள், கால் ஆணிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ரண கள்ளி இலைகளை நசுக்கி பசையாக்கி கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்துவதால் கால் ஆணிகள் குணமாகும். மருக்கள் கரைந்து போகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ரண கள்ளி, காயங்களை ஆற்றக் கூடியது. நாள்பட்ட, அழுகிய மற்றும் சீல் வைத்த புண்களை சீக்கிரம் ஆற்ற கூடியது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.!

இது நீர்மலம் போக்குதல் கோழை அகற்றுதல், தடிப்புண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணம் கொண்டது,
இலையை வாட்டி பின்பு அதன் சாற்றை பொறுக்க கூடிய சூட்டில் காதில் பிழிந்து விட காது வலி தீரும்,

இதன் இலைச்சாற்றைப் பிழிந்து வேப்ப எண்ணெய் உடன் கலந்து மூட்டு பிடிப்பு, வாதக்குடைச்சல் மேகவாய்வு வை போக்க மேல் பூச்சாக பயன்படுத்தலாம்,

இலையை தீயில் வாட்டி சாறு எடுத்து சம அளவு தேன் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர இரைப்பிருமல் நீங்கி குணம் பெறலாம்,

ஒரு 10கி கடுக்காய் தோல் 80கி எடுத்து அதை இதன் இலைப்பாலில் கலந்து 40நாட்கள் ஊற வைத்து பின்பு உலர்த்தி பொடியாக்கி அதில் ஒரு கால் கிராம் வெந்நீரில் சாப்பிட நன்கு பேதியாகும், இதனால் கல்லீரல் வீக்கம், பெருவயிறு,இரைப்பிருமல், ஆறாதபுண்கள் ளகுணமாகும்.!

 *இணையப்பகிர்வு*

Wednesday, March 15, 2017

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டிய 30 தகவல்கள்*

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும்* .

*2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.*

*3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்*

*4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்)*


*5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும்.*

*6. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.*

*7. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.*

*8. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்)*

*9. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது*.

*10. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.*

*11. தாய்மார் குழந்தைகளுடன் இருந்தது சாப்பிடக் கூடாது* .

*12. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.*

*13. கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும்* .

*14. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது*

*15. அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம*்.

*16. தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம*் .

*17. பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.*

*18. காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்*.

*19. இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.*

*20. தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.*

*21. படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.*

*22. உணவு, உறக்கம், உழைப்பு, ஓய்வு, உடற்பயிற்சி, உறவு ஆகியவை சரியாக வைத்திருப்பதே உடல்நலத்திற்கு மிக முக்கிய காரணியாகும்.*

*23. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.*

*24. டி,காபி போன்றவற்றை தவிர்த்து /குறைத்து அதற்கு பதில் சத்துமாவு கஞ்சி, சூப் போன்றவைகளை அருந்தலாம்.*

*25. நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.*

*26. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.*

*27. கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.*

*29.எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்டு இறந்தகாலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்*.

*30.ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மன மகிழ்ச்சி தரும்.!

*இணையப்பகிர்வு*

Saturday, March 11, 2017

குதிகால்வலி மற்றும்மாதவிடாய்பிரச்சினை

[3/11, 12:49] Am Yoga: குதிங்கால் வலிக்கு இயற்கை மருத்துவம்

குதிங்காலில் வலி உள்ளவர்கள்  ஒரு செங்கலை நெருப்பிலிட்டு சூடாக்கி அதன் மீது ஏழு எருக்கன் இலைகளை அடுக்கி , அந்த எருக்கன் இலைகள் மீது குதிங்காலை சிறிது நேரம் அழுத்தி வைப்பார்கள். பதமான அந்த சூட்டில் குதிங்கால் வாதம் அல்லது குதிங்கால் வலி நீங்கும் என்பது கிராமத்து மக்களிடம் ஒரு நம்பிக்கையாக உள்ளது. அனுபவத்தில் பலன் தருவதை காண முடிகிறது.!

இணையப்பகிர்வு
[3/11, 12:51] Am Yoga: மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான இயற்கை வழிமுறை

சில பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வரும். மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்கும். இந்த நேரத்தில் டென்ஷன் ஆகாமல் மாதவிலக்கை தள்ளி போட நான் சொல்லும் இயற்கை வழியை பின்பற்றலாம். இதற்காக கண்ட கண்ட ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் இதை பயன்படுத்தி பாருங்கள்.

இந்தப் பிரச்சனையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’! இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிரில் ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

 வந்தது நிக்கறதுக்கு மருந்தை பார்த்தோம். இப்போது வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு.
இதற்கும் இதே சப்ஜா விதை தான்.
இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிக்க வேண்டும். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!

 தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும்.

அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

 சில சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, , இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் உடனடியாக பலன் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*
[3/11, 17:22] Am Yoga: *அஜீரணம் குணமாக*

சுக்கு,மிளகு,திப்பிலி, பெருஞ்சீரகம், இந்துப்பு இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு மூன்று வேளையும் சாப்பிட்ட உடன்  ஒரு ஐந்து கிராம் அளவு கலவையை எடுத்து வாயில் போட்டு கால் டம்ளர் சுடுநீர் குடித்து வந்தால் அஜீரண வாய்வுத்தொல்லை தீரும்.!

🌿இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு🍁
Aum Herbals
Mobile & Whats app
9629368389
[3/11, 17:22] Am Yoga: இயற்கை வழியில் வாத, பித்த, கப வியாதிகளை குணமாக்குங்கள்         திரிபலா சூரணம் ஒரு எளிய சர்வரோக நிவாரணி. கடுக்காய் ஒருபங்கு  நெல்லிக்காய்  அரைபங்கு  தான்றிக்காய் கால் பங்கு இவற்றின் தோலை மட்டும் சேகரித்து இடித்துவைத்துக் கொண்டால் திரிபலா சூரணம் தயார்.!  வாதத்திற்கு வெந்நீரிலும் பித்தத்திற்கு நெய்யிலும் கபத்திற்கு தேனிலும் ஒருத்தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளையும் கொடுத்துவர பேதியை சுகமாக வெளியேற்றி பித்தச்சூட்டையும் குறைத்து கைகால் உளைச்சலையும் நீக்குவதுடன் கபத்தையும் இதமாக வெளியேற்றிவிடும்.! இந்த சூரணத்தை வெந்நீரில் போட்டு வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும். இதே பொடியை தேங்காய் எண்ணையில்  லிட்டருக்கு 48 கிராம் விதம் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்துவர பித்தச்சூடு குறைந்து முடி உதிருதல் நிற்கும்.! உதட்டு வெடிப்பு மற்றும் புண்களுக்கும் இந்த எண்ணையை பயன்படுத்தலாம்! தவிடு நீக்காத அரிசிக்கஞ்சி நீரில் திரிபலா சூரணத்தை கலந்து குடித்துவர இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிவதோடு காமலை நோயும் குணமாகும். பருத்த உடலை சிறுக்க வைக்க வெந்நீரில் ஒருத்தேக்கரண்டி தினமும் சாப்பிடலாம். மெலிந்த உடலை தேற்ற நாட்டுப்பசும்பால் மற்றும் தேன்கலவையோடு தினமும் இரவில் உண்டுவரலாம்.! மலச்சிக்கல், ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்த அழுத்தவியாதி இருப்பவர்கள் தினமும் இந்தப் பொடியை இரவில் ஒருத்தேக்கரண்டி அளவு கால்டம்ளர் நீரில் சாப்பிட்டபின் உண்டு வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.! நாள்ப்பட்ட நோய்களுக்கு வலிமையான தீர்வாகவும் பருவ  நோய்களுக்கான எளிமையான தீர்வாகவும் விளங்குகிறது திரிபலா சூரணம். திரிபலாவோடு ஆடதோடை மற்றும் சுக்கு சேர்த்து தயாரித்துள்ள பஞ்சமூலி சூரணம் தேவைப்படுவோர் நம்மை அழைக்கவும்.!  AUM HERBALS MOBILE:9629368389! amyogatrustblogspot.com நலம் பெருகட்டும் …

Friday, March 10, 2017

செம்பருத்தி

செம்பருத்தி டீ ..! குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்!

மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.

செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.

அதன் விவரம்:
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பிற மருத்துவக் குணங்கள்:

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால்,மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.) வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

செம்பருத்திபூ தங்கபஸ்பம்:
இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன.
இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்..

இருதய பலம்
இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இருவேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும். 250 கிராம் செம்பருத்திபூவை துண்டாக நறுக்கி ஒரு காண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, அதை காலையில் வெயிலில் வைக்கவும் பின்னர் மாலையில் எடுத்து பிசையவும் சிவப்பான சாறுவரும் அந்த சாறை ஒரு பாத்திரத்தில் உற்றி அதற்கு தேவையான சர்க்க்ரை சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றி வைத்துகொள்ளவும். இதில் இருந்து 2ஸ்புன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகவும்,இது போல தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சிரான முறையில் பரவும் இருதயம் பலம்பெறும்.

உடல் உஷ்ணம் குறைய
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.
இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.

பேன், பொடுகு தொல்லை நீக்கும்
இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

பலகீனமான குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக் குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

தலையில் பேன், பொடுகு நீங்க
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபட முடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்தி தான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்தி டீ போடும் முறை :

செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ்
தண்ணீர் 1 கப் -150 ml
சக்கரை -1 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும் .
ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது .!

இணையப்பகிர்வு

Wednesday, March 8, 2017

மூலிகைக்குடிநீர்


°°°~°~~~°°°°°°

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
*ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.
*ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
*ஒருமுறை தயாரித்த நீரை
அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.
*மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.!

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை💥 தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE & Whats app
9629368389

நலம் பெருகட்டும் …

ஊஞ்சல்

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.

2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது

4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். (This is the reason, when we travel in train, whatever food we have during the journey, is completely digested without any health troubles. Hope many could have experienced this in their life journey)

9. கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

10. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை(நம்பிக்கை மட்டுமே). சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.!

இணையப்பகிர்வு

நாவல் (மரம்)

சாலை ஓரங்களிலும், குளக்கரை, ஆற்றங்கரைகளில் நாவல் மரங்கள் தன்னிச்சையாக வளர்ந்திருப்பதுண்டு சிறுவர்களின் விளையாட்டு தளமாக இருக்கிறது. நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை ((Eugenia Jambos) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல் என்றொரு ரகமும் உண்டு. இதன் பழங்கள் இனிப்பு கலந்த துவர்ப்பாக இருக்கும்.
நாவல் மரத்தின் இலைகள் கரும்பச்சையாக பளபளப்புடன் இருக்கும். ஜனவரி பிப்ரவரி மாதங்களில் இலைகளை உதிர்த்து நிர்வாணமாக வெட்கப்பட்டு நிற்க்கும் நாவல் மரம் சந்திரமுகியின் கண்களாக கருமை நாவல் பழங்களை கொத்துகொத்தாக தாங்கி வனப்புடன் ஜுலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கிறது..

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:
நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:
பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.

சிறுநீர் எரிச்சல்:
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை அழற்சி:
10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:
* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.
* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.
* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.
* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.
 நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

இது ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரைக் கிடைக்கும்.

இதைச் சாப்பிடுவது, உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனாலும், இன்னமும் பெரியோர்கள், இதை குழந்தைகள் சாப்பிடும் பழமாகத்தான் கருதுகிறார்கள். இதன் துவர்ப்பு ருசியும், இதைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் நாவில் படிந்துவிடும் நீல நிறமும் காரணங்களாக இருக்கலாம்.

மூல நோய்க்கு

மூலத் தொந்தரவு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தொந்தரவில் இருந்து விடுபட நாவல் பழம் கைகொடுத்து உதவுகிறது.

பழம் அதிகம் விளையும் காலத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று பழங்களை உப்புச் சேர்த்து அல்லது தேன் சேர்த்து காலையில் சாப்பிட வேண்டும்.

இப்படி தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை சாப்பிட்டால் மூல நோய் முற்றிலும் குணமாகும்.

தொழு நோய்க்கு நல்ல மருந்து

நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும். சிறுநீரகக் கற்கள் கரையவும், இரத்தம் சுத்தமாகி தொழுநோய் முற்றிலும் குணமாகவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரி செய்யவும் நாவற்பழம் உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணிய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

அளவோடு சாப்பிட வேண்டும்

நாவல் பழத்தை குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் அளவுடன்தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கட்டுதல் ஏற்படும்.

பழத்தையோ, பழச்சாற்றையோ வெறும் வயிற்றில் சாப்பிடவேக் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பால் அருந்தக் கூடாது.
பழத்தின் மருத்துவபண்புகள்
நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல சீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும் போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.!

இணையப்பகிர்வு

Tuesday, March 7, 2017

*மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் முகாம்*

#வாழை இலைக்குளியல்
#மண்குளியல்
#எண்ணைகுளியல்
#மூன்றுவேளையும்பழகாய்கறிஇயற்கைஉணவு
#உடலியல்விளக்கம்
#இயற்கைமருத்துவவிளக்கம்
#யோகாசனம்
#சுத்திகரிப்புகிரியைகள்
#பிராணப்பயிற்சி
#மூலிகைமருந்துகள்
#இயற்கையானசூழலில்தங்கும்வசதி

விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது முன்னோர் வாக்கு.!
எத்தகைய ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு
இயற்கைவழியில் குணம்பெறலாம்.!
உங்கள் வாழ்நாள் மருத்துவச் செலவில் 75 % வரை மிச்சப்படுத்தலாம்.!
சக்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, உடல்பருமன், மனஅழுத்தம், அதிககொழுப்பு போன்ற நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு கட்டுப்படுத்தும் அவல நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.!

இடம்: அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி மாவட்டம்.

நாள்: மே 5,6,7
வெள்ளி,சனி,ஞாயிறு
நேரம்:6 am and 7pm
நன்கொடை :2650/-

#முன்பதிவுஅவசியம்
<குறைந்த இடங்களே உள்ளன>

#தொடர்பிற்கு:Mobile & whats app
*9629368389*
#amyogatrust.blogspot.in

மருத்துவக் குறிப்புகள் 7/3/17

[3/6, 13:07] Am Yoga: *பெருங்காய மோசடி*


பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும்  என்று நாம் கேள்விப் பட்டிருப்போம்.  ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

 அந்த கூட்டு பெருங்காயம் ...
 இந்த கூட்டு பெருங்காயம் ...
 அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்  இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு.  ஆனால் இது அந்த கூட்டு அல்ல.  இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக்  கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.

இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை.   என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.

 அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%

இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம்.  இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா?  அது தான் இல்லை.  "பெருங்காய டப்பாக்களின்  மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால்  நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன்.  அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ......
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?

வயிறு புண்ணாகும்....
வயிற்றில்  வாயு அதிகமாகும் ..

நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும் ...
பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தரும்.!

*இணையப்பகிர்வு*
[3/6, 15:09] Am Yoga: கையளவு ஆவாரம்பூவை எடுத்து  இரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் இறக்கி நாளைக்கு இரண்டு முறை உணவிற்கு முன் குடித்துவந்தால் தொண்டை புண்,வாய்ப்புண்  போன்றவை நான்கு நாளில் குணமாகும்.!

amyogatrust.blogspot.in
[3/6, 17:37] Am Yoga: பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.
* இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

* தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

*எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

*கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள் இது ஒரு பாரம்பரிய முறை என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையை அக்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்ன முறையெனில், கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

*பப்பாளி மற்றும் மஞ்சள் பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

*உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.!

இணையப்பகிர்வு
[3/7, 17:33] Am Yoga: *மூன்று நாட்கள் இயற்கை வாழ்வியல் முகாம்*

#வாழை இலைக்குளியல்
#மண்குளியல்
#எண்ணைகுளியல்
#மூன்றுவேளையும்பழகாய்கறிஇயற்கைஉணவு
#உடலியல்விளக்கம்
#இயற்கைமருத்துவவிளக்கம்
#யோகாசனம்
#சுத்திகரிப்புகிரியைகள்
#பிராணப்பயிற்சி
#மூலிகைமருந்துகள்
#இயற்கையானசூழலில்தங்கும்வசதி

விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது முன்னோர் வாக்கு.!
எத்தகைய ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு
இயற்கைவழியில் குணம்பெறலாம்.!
உங்கள் வாழ்நாள் மருத்துவச் செலவில் 75 % வரை மிச்சப்படுத்தலாம்.!
சக்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, உடல்பருமன், மனஅழுத்தம், அதிககொழுப்பு போன்ற நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு கட்டுப்படுத்தும் அவல நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.!

இடம்: அன்னை ஆஸ்ரமம்,
சுப்ரமணியபுரம்,
ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி மாவட்டம்.

நாள்: மே 5,6,7
வெள்ளி,சனி,ஞாயிறு
நேரம்:6 am and 7pm
நன்கொடை :2650/-

#முன்பதிவுஅவசியம்
<குறைந்த இடங்களே உள்ளன>

#தொடர்பிற்கு:Mobile & whats app
*9629368389*
#amyogatrust.blogspot.in
[3/7, 17:39] Am Yoga: மூலிகை குடிநீர்
°°°~°~~~°°°°°°

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
*ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.
*ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
*ஒருமுறை தயாரித்த நீரை
அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.
*மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.!

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை💥 தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
MOBILE & Whats app
9629368389

நலம் பெருகட்டும் …

Saturday, March 4, 2017

..



கண்கள்

கண்களின் எற்படும் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது.

கண்கள் தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

கண்களைக் காக்கும் பயிற்சி

கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்து கொள்கிறோம். பிரச்சனை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும் தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

கண்ணாடி ஏன் அணிகிறோம்?

கண்ணின் முன்பக்கத்தில் இருந்து, பின்பக்கம் வரை அதாவது, கருவிழியில் இருந்து விழித்திரை வரை இருக்கும் விட்டத்தை `ஆக்ஸியல் லென்த்’ (Axial length) என்பார்கள். பிறக்கும்போது 17 mm இருக்கும் விட்டம், பெரியவர்கள் ஆகும்போது 22.5 mm வரை அதிகரிக்கும். சிலருக்கு 24 மி.மீ வரைகூட இருக்கும். 22.5 mm என்ற இந்த சராசரி அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், பார்வை சரியாகத் தெரியாது. ‘ஆக்ஸியல் லென்த்’ குறைவாக இருப்பவர்களுக்குக் கிட்டப் பார்வையிலும், அதிகமாக இருப்பவர்களுக்குத் தூரப் பார்வையிலும் பிரச்சனை இருக்கும். தூரப் பார்வை உள்ளவர்களுக்கு குவிவு வில்லைகளும் Convex lens, கிட்டப் பார்வை உள்ளவர்களுக்கு குழிவு வில்லைகளும் Concave lens பார்வைக் கோளாறைச் சரிசெய்யத் தரப்படும்.

கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?

கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். கருவிழிக்கும் விழித்திரைக்குமான இடைவெளி அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, நாம் பார்க்கும் பிம்பம் சரியாக விழித்திரையில் விழாது.

கண்ணாடி அணிவதன் மூலம், கருவிழி வழியாகச் செல்லும் பிம்பமானது, சரியாக விழித்திரைக்குச் சென்றடைய உதவும். ஆனால், கண்ணின் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் கண்ணாடி குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யாது.

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது. அதில் ஒரு வழிமுறையை இன்று பார்ப்போம்.

கண்களுக்கான பயிற்சி  1

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.

கண்களுக்கன பயிற்சி 2

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, வலது கையைப் பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டை விரலைப் பார்க்க வேண்டும். இப்போது, கையை மேலே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது கருவிழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கட்டை விரலைப் பார்த்தபடி கையைக் கீழே கொண்டுசெல்ல வேண்டும்.

கண்களுக்கான பயிற்சி  3

நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

கண்களுக்கான பயிற்சி 4

நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 time முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

கண் சிமிட்டுதல் மற்றும் மூக்கின் நுனியினை பார்த்தல் புருவமத்தியைப் பார்த்தல் என்பவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளையும் செய்து வந்தால்
கண் சம்பந்தப்பட்ட  நோய்களையும் குணப்படுத்தலாம்.

குணப்படுத்தக்கூடிய நோய்கள்:

கிட்டப்பார்வை,

 தூரப்பார்வை,

குளுக்கோமா Glucoma,
கண்ணில் புரை Cataracts,

 கண்ணுள் அழுத்தம் அதிகரித்தல் Eye Pressure,
 கண் உலர்தல் Dry eyes.!

*இணையப்பகிர்வு*

Thursday, March 2, 2017

குறிப்புகள் 02/03/2017

[2/27, 08:42] Am Yoga: *உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் 😘
*********"****

**முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

** வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---
கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

** கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

** காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

** கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- -
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

** உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

** தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

** கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.!
மேற்கண்ட அறிகுறிகளை காண்பவர்கள் சரியான உணவு முறை, யோகா செய்தல், தேவையான உறக்கம் என்று வாழ்க்கை முறையை சீர்ப்படுத்திக் கொண்டால் நல்லது.
அல்லது பெருநோயாளிகள் ஆகி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வதைப்பதை யாராலும் தடுக்க முடியாது.!      

*இணையப்பகிர்வு*
[2/28, 08:41] Am Yoga: ஆரோக்கியமான வாழ்விற்கு சித்த மருத்துவம்!


* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி:

பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்:
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.!

இணையப்பகிர்வு
[2/28, 18:21] Am Yoga: அதிமதுரம் - மருத்துவப் பயன்கள்:

* அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீரில் கலந்து குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

* திராட்சை, அதிமதுரம் இவற்றின் கஷாயத்துடன் காய்ச்சிய பாலைப் பருகச் செய்தால், சிறுநீரத் தடையால் தோன்றிய வயிறு உப்புசம் நீங்கும்.

* அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலையில் அழுத்தித் தேய்த்து, சிறிது நேரங்கழித்துக் குளிக்க, தலைமுடியின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டுப் போல பிரகாசிக்கும்.

* கரு சுருங்கிய போதும், குழந்தை இளைத்த போதும், குமிழம் வேர், அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய பாலில் சர்க்கரை கலந்து பருகச் செய்யவும். அப்படி ஒரு மண்டலம் செய்தால் விரைவில் தீர்வு கிட்டும்.

* அதிமதுரம், சுக்கு இவற்றைக் கஷாயம் காய்ச்சிப் பருகச் செய்தால் அடிபடுதலால் உண்டாகும் இளைப்பு தீரும்.

* தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும் தன்மை கொண்டது இந்த அதிமதுரப் பொடி.

* அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

* அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது.

* அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.

* அதிமதுரச் சாறு அல்லது கஷாயம் மிதமான பேதி மருந்தாகவும், சிறு நீரகக் கோளாறுகளுக்கும், மார்பு மற்றும் வயிற்றுக்கு கோளாறுகளுக்கும் நல்ல மருந்தாகவும் இருக்கும்.

* அதிமதுரத்தை இஞ்சி மற்றும் பாலுடன் கலந்து சாப்பிட சோர்வு நீங்கும்.

* அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்.

* அதிமதுரத்துடன் சமஅளவு, தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு, கால் டீஸ்பூன் தேனில் குழைத்து, சிறிது சிறிதாக சுவைத்து உண்ண, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

* அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர, உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

* அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், பெண்களின் இயற்கை கோளாறுகள் நீங்கும்.

* அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.

* ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது இந்த அதிமதுரப் பொடி.

* இளமையில் போக சக்தியை இழந்து விட்ட வாலிபர்களுக்கு அதிமதுரம் ஒரு புத்துயிர் அளிக்கும் அரு மருந்தாக பழங்காலத்தில் இருந்தே பயன்பட்டு வருகிறது.

* அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க, இருமல் தணியும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு, 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

* அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

* அதிமதுரத்து பொடியுடன் சிற்றாமணக்கு நெய் தடவி, குன்றி இலையை ஒட்டவைக்க பிடிப்பும், சுளுக்கும் குணமாகும்.

* தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

* கண்கள் ஒளிபெற அதிமதுரத்தை முலைப்பால் விட்டு அரைத்து கண்ணில் விட வேண்டும்.

* போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தை, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களை அதிமதுரம் நிவர்த்தி செய்யும்.

* சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணம் செய்து தேனில் சாப்பிட குணமாகும்.

* சோம்புச் சூரணம், அதிமதுரச் சூரணம் இரண்டையும் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு வெந்நீர் பருகினால் இலகுவாக மலம் வெளியாகும். உள் உறுப்புகள் சூடு தணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

* வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம் போன்றவை தனிய அதிமதுரப்பொடி உதவும்.

* அதிமதுரத்துடன் தேன் கலந்து சாப்பிட சர்க்கரை வியாதி குணமாகும்.!

*இணையப்பகிர்வு*
[3/1, 09:50] Am Yoga: *எண்வகை வாயுவையும்*
 *போக்கும் உப்பு பஸ்பம்*

இந்துப்பு,வெடியுப்பு,கறுப்பு உப்பு,கல்லுப்பு,அட்டுப்பு,வளையலுப்பு, உவர் உப்பு வகைக்கு
50 கிராம் சோற்றுப்பு 400 கிராம்  எலுமிச்சை உப்பு
<சிட்ரிக் ஆசிட்> 10 கிராம்
இவைகளை பொடித்து குமட்டிக்காய் சாறு ஒரு லிட்டர் புளித்தமோர் 2 லிட்டர்  ஊற்றி நன்றாக கலக்கி மூடிவைத்து மறுநாள் அதேநேரம்  தெளிவை மட்டும் இறுத்து புது மண் பாண்டத்தில் விட்டு  சிறுதீயில் மூன்றிலொரு பங்காக வற்றவைத்து  வழித்து நான்கைந்து பீங்கான்  பாத்திரத்தில் அல்லது வாயகன்ற பெரிய ஒரு பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி  கடும் வெயிலில் ஒருநாள் முழுக்க அல்லது  காயும் வரை வைத்து எடுத்து  பொடித்து காற்றுபுகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு  காலை,மாலை வெறும் வயிற்றில் ஒன்றரை கிராம் பஸ்பத்தை  ஒரு டம்ளர் மோர் அல்லது ஒரு டம்ளர் பழைய சோற்றுநீரில் கலந்து கலக்கி   10 முதல் 48 நாட்கள் குடித்துவர  *உடல் வீக்கம்,புளித்த ஏப்பம், வாய்வு உருண்டு உருண்டு உடலில் பல்வேறு இடங்களில் உலாவுதல், அடிக்கடி வாய்வு பிடித்துக்கொள்ளுதல், மூச்சை அடைத்தல், இதயத்திற்கும் செல்லும் இரத்த குழாயை அடைத்தல் போன்ற எட்டுவிதமான வாய்வும் போவதோடு மாதவிடாய் வலி, கல்லீரல் வீக்கம், கல்லீரல் அலர்ஜி, கல்லீரல் கொழுப்பு, வயிற்றுக்கட்டி, கர்பபை நீர்க்கட்டி போன்றவை கரையும்*

உணவில் எளிதில்  ஜீரணமாகும் கஞ்சி,பொங்கல் போன்றவற்றை உண்டு வாயுப்பதார்த்தங்கள்,இரசாயண உணவுகளை முழுவதும் தவிர்க்க வேண்டும்.!

🍁 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*🌿
amyogatrust.blogspot.in

100 % இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whats App
*9629368389*
[3/2, 07:40] Am Yoga: *மருதாணி மருத்துவம்*

மருதாணியின் பயன்கள்:
மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். சேற்றுப் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.
மேலும் மருதாணியின்
பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும்.மருதாணி செடியின் பட்டையை ஊற வைத்த நீரை அரை அவுன்ஸ் காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.
மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித்
தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.
மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை
ஏற்படுத்தும்.மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து
கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.
சிலபெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து
இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடிமருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார்( துணி துவைக்கும்) சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின்
வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தல் போல  மாறிவிடும்.!

*இணையப்பகிர்வு*
[3/2, 17:14] Am Yoga: தோல் நோய் நீக்கும் எண்ணெய்
**********************
நாமே தயாரிக்கும் முறை..

மருதாணி வேர் பட்டை 10  கிராம்.
வசம்பு.   ___________        10 கிராம்.
கற்பூரம் ____________        10 கிராம்.
மஞ்சள் ________________   10 கிராம்.

இவற்றை நன்கு பொடியாக்கி
வைத்ததை
100 மி்ல்லி ஆமணக்கு எண்ணெயில் இட்டு
நன்கு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில்
வைத்துக்கொண்டு தோல் பிரச்சினை
உள்ள இடங்களில் மேல் பூச்சாக தடவிவர தோல் நோய்கள் நீங்கும்.

விரைவில் பலன் தெரிய ..
பேதிமருந்தும்  எடுத்துக்கொள்ளவும்.

Sunday, February 26, 2017

திருடர்கள் ஜாக்கிரதை

நான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.

அது ஒரு கோடைகாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.

நான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.

வறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..

இன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.

அது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.

எப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.

வெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.

என்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.

சாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.

நான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.

அருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.

அது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.

செய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட  நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.

பகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.

இருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.

மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.

வறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.

திடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.

ரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.

கோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.

முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.

ஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.


முதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..

பெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.

அதைத்தான்  அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.

என் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.

நான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.

கேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.

அவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.


ஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது.

அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.

நான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.

அதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.

திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன்.


மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.

அவர்கள் அதிக அளவில் ஒரு துளி  நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.

டிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.

அவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.

இந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.

இதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர்.

மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.


கடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.

இயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.

அவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று
டிக்கெட் செக்கர் சொன்னார்.

அவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.

ரயில் தன் பயணத்தை துவக்கியது.

ஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..

எங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.

ஒரு லிட்டர் பீர் தயாரிக்க
சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

அரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

பீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.

ஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.

ஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.

கடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –

இந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.


சிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால்  நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.

அது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.

இந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.

நமக்கு இந்த நிலை. வேண்டாம். அணைகள் கட்டுவோம், குளங்கள் வெட்டுவோம் என்று எவனாது சொன்னான்?இலவசம் வேன்டாம் நமது  பிள்ளைகளூக்கு நல்ல மருத்துவம் கல்வி தூய்மையான நீர் இவற்றை விட்டுச்செல்வோம்,
தயவு செய்து தண்ணீரை வீணாக்காமல் உபயோகிப்போம், நமது சந்ததிகளின் நல்வாழ்வுக்கு
வழிவகுப்போம்..!!

*இணையப்பகிர்வு*

Friday, February 24, 2017

எலுமிச்சை

🎾  இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
 இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

 🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
      இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

*இணையப்பகிர்வு*

AmYogo article in Magazine


பூசணிச்சாறு வைத்தியம்*

காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி வெண்பூசணிச்சாறுடன் ஒருத்தேக்கரண்டி தேன்கலந்து அருந்திவந்தால் மூளைச்சோர்வு, தூக்கமின்மை, நாவறட்சி நீங்கும்.!
30 மில்லி வெண்பூசணிச்சாற்றில் 90 மிலி இளநீர் சேர்த்து காலையில் குடித்துவந்தால் நரம்புத்தளர்ச்சி,குடல்புண்,உடல்சூடு குணமாகி தேகப்பொலிவு ஏற்படும்.!
அதிகமாக மசாலா செயற்கை  உணவு மற்றும் உணவக உணவுகளை உட்கொள்பவர்களுக்கு உடலில் அமிலத்தன்மை மிகுந்து பல்வேறு வியாதிகள் வர ஏதுவாகும் அதை தவிர்க்க நிணைப்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் 200 மில்லி வெண்பூசணிச்சாற்றை அருந்திவந்தால் காரத்தன்மை அதிகமாகி உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.!

🌴 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in

🐾100% இயற்கை மூலிகை
 தயாரிப்புகளுக்கு💥
*AUM HERBALS*
Mobile & Whats app
*9629368389*

Tuesday, February 21, 2017

துளசி

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி :
★****★****★****★****★

நீங்கள் மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்கள் !!!

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும்
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க
72 கோடி அரச மரங்கள் (அல்லது)

720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது)

7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

*இணையப்பகிர்வு*

Sunday, February 19, 2017

*எளிய வைத்தியம்*

முருங்கை கீரை இடித்து சாறெடுத்து வேளைக்கு 30 மில்லி சாறுடன்
3 கிராம் சீரகத்தூள் சேர்த்து கலந்து காலை மாலை உணவிற்கு முன் குடித்துவர *இரத்தஅழுத்தம்,நரம்புத்தளர்ச்சி,ஒவ்வாமை,வாய்வுத்தொல்லை,ஆண்மைக்குறைவு,உடல்சோர்வு,மனஅழுத்தம்,உடல்வீக்கம்,மலச்சிக்கல் போன்ற வியாதிகள் 24 நாட்களில் குணமாகும்*

குறிப்பு: ஒரு வயது முதல் 5 வயதிற்கு  கீழுள்ள குழந்தைகளுக்கு நான்கில் ஒரு பங்கு மருந்தை மட்டும் கொடுக்கவும்.
உப்பு,புளி,காரம், குறைத்து, இயற்கையான சமைக்காத உணவை அதிகமாக சேர்த்துக்கொள்ள விரைந்த பயன் கிடைக்கும்.!

🍁 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌿
amyogatrust.blogspot.in

*இயற்கை மூலிகை மருந்துகளுக்கு*
AUM HERBAL
Mobile & Whats app
*9629268389*

Friday, February 17, 2017

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் …

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக  …

உயிர் நிறைந்த காற்றை பெறுக தாய்மடி அமுதைப்  பெறுக
பலம் தரும் நீரைப் பெறுக
உடல் வளர்க்கும் உணவைப் பெறுக நிலையான கல்வி பெறுக
வளமான வாழ்வை பெறுக
நலமான நட்பை பெறுக
உள்ளத்தில் உண்மை பெறுக
தொடர்கின்ற சுற்றம் பெறுக
உடன் வரும் முற்றம் பெறுக
அழகான இல்லம் பெறுக
இதமான உறக்கம் பெறுக
மனம் நிறைந்த பணியைப் பெறுக
புவி உயர்த்தும் பதவிகள் பெறுக
அன்பான துணையைப் பெறுக
பண்பான பிள்ளைகள் பெறுக
கொடுக்கின்ற இதயம் பெறுக
என்றும் உழைக்கின்ற உடலைப் பெறுக

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக …

வலம் வர தேரைப் பெறுக
நலம் உரைக்கும் நாவைப் பெறுக
சிந்தையது செம்மை பெறுக
செயலெல்லாம் வெற்றி பெறுக மகிழ்வான மனதைப் பெறுக
ஒளியாகும் தேகம் பெறுக
 அறம் உரைக்கும் குருவைப் பெறுக
உயர் ஞான யோகம் பெறுக
தவம் வழுவா நிலையைப் பெறுக
தரணியாளும் கலையைப் பெறுக
இறைமீது பக்தி பெறுக …
அது போதும் முக்தி பெறுக …!!!

----ஏகப்பிரியன்---

Thursday, February 16, 2017

தென்னம்பூ வைத்தியம்

வாய்ப்புண், குடல் புண் குணமாக 20 கிராம் இளம் தென்னபூவை 10 கிராம் சீரகத்தில் சேர்த்து அம்மியில் அரைத்து 100 மில்லி மோரில் தினமும் உணவிற்கு முன் மூன்று வேளை கொடுத்துவர 6 நாளில் குணம் கிடைக்கும்.!
தென்னையின் இளம்பூ 20 கிராம் எடுத்து பசுந்தயிர் கலந்து அரைத்து சிறிது மோரில் கலந்து நாளைக்கு இரண்டுவேளை உணவிற்கு பின் அருந்திவர பெரும்பாடு, வயிற்றழைச்சல்,இரத்தம், சளி போவது கட்டுப்படும்.!

அதிக உடல் சூடு கொண்டவர்கள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 20 கிராம் இளம் தென்னம்பூவோடு அதே அளவு சோற்றுக்கற்றாளை சேர்த்து அரைத்த விழுதை  அரைடம்ளர் மோரில் கலந்து குடித்துவர  24 நாளில் உடல் சூடு சமனாகி உடல் பருமன் கூடும்.!

🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🌴
amyogatrust.blogspot.in

100% இயற்கை மூலிகை
🍁🍁🍁 மருந்துகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
*9629368389

Wednesday, February 15, 2017

மருத்துவக் குறிப்புகள் 15/02/17

[2/14, 21:34] Am Yoga: *கருஞ் சீரகம் பயன்கள்*

ஆயுர்வேதம், யுனானி மருந்துவங்களில் பயன்படும் கருஞ்சீரகம் ஒரு தொன்மையான உணவுப் பொருள்.

தாவரவியல்:

1. தாவிரவியல் பெயர் - Nigella Sativa Linn.
2. சம்ஸ்கிருத பெயர்கள் - உபகுஞ்சிகா, கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சீரகா,
3. ஆங்கிலம் - - Black Cumin, Nutmeg flower, Small Fennel
4. இந்தி - காலாஜீரா, கலோன்ஜி

தாவர விவரங்கள்:

அழகான செடி, 30லிருந்து 60செ.மீ உயரம் வளரும். இலைகள்: ஈட்டி போல் குவிந்த அமைப்பு, 2.5லிருந்து 5செ.மீ. நீளமுடையவை. பூக்கள்: 2 லிருந்து 2.5 செ.மீ குறுக்களவு, ஒரு தனி நீண்ட காம்பில் (மஞ்சள் தண்டு), வெளி இதழ் கோள வடிவு, தேன்(மது) உடையவை.

சூலுறைகள் 5 (அ) 7, உப்பியவை, விதைகள்: மூன்று மூலை வடிவம், கருநிறம்
கருஞ்சீரகச்செடி காட்டுச்செடியாக
வும் வளரும் விவசாயத்தில் களையாகவும் காணப்படும்.

பயன்படும் பாகம்: விதைகள்

பயிராகும் விவரங்கள்:

இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பயிராகும். உலர்ந்த மண் கருஞ்சீரகம் பயிரிட ஏற்றது. விதைகள் 24 மணி நேரம் நீரில் நனைக்கப்படும். 10 (அ) 15 நாட்கள் விதைகள் முளைத்துவிடும். முளைத்து, உப்பி, உடைத்து, முளை வேர் பூமியில் நுழையும். 2 (அ) 3 செ.மீ வளர்ந்தவுடன் இலைகள் தோன்றும்.

விதைகளின் தன்மை கசப்பு சுவை, வாசனையுடையது.

செயல்பாடு: -

வாய்வகற்றி (Carminative), சிறுநீர் பெருக்கி, பெண்களில் மாதவிடாய் உண்டாக்கும், தாய்ப்பால் சுரக்க தூண்டும், கிருமி, பூச்சி, நாசினி, பசியை தூண்டும்.

பயன்கள்:

• கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து.
• இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணை பாக்டீரியாக்களை அழிக்கும். Micrococcus Pyrogenes, Escherichia Coli இவற்றை நீக்கும்.
• லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
• இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
• ஆயுர்வேத ஆசான் சுஸ்ருதர், இதன் விதைகளை மற்ற மருந்துகளுடன் சேர்த்து, பாம்பு, தேள்கடிகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்.
• யுனானி மருத்துவத்தில், நுரையீரல் கோளாறுகள், இருமல், காமாலை, கண்நோய்கள், ஜூரம், மகளிரை பூப்படைய செய்வதற்கு முதலியவற்றுக்கு, கருஞ்சீரகம் பயன்படுத்தப்படுகிறது.
• குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும்.
• இதன் பொடியை வைத்தியரின் அறிவுரைப்படி 3 (அ) 7 நாட்கள் உபயோகிக்க வெறிநாய் கடியின் நஞ்சு தீரும்.
• உணவுக்கு பயனாகும் எண்ணைகளின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணை ஒரு நிலை நிறுத்தும் பொருளாக (Stabilizing agent) பயனாகிறது.
• பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.

குறிப்பு :

கருஞ்சீரகத்தில், பிரம்ம தண்டு விதைகள் (Argemone mexicana) கலப்படம் செய்யப்படுகிறது. எனவே நம்பகமான கடைகளில் கருஞ்சீரகம் வாங்க வேண்டும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம்.!
[2/15, 08:35] Am Yoga: *இயற்கையின் அதிசயம்*

தலைபாரம்,இழுப்பு,அடுக்குத்தும்மல், சளி,படப்படப்பு,பித்தம், குழப்பமான மனநிலை,  உணவு நஞ்சு,உடல் பருமன், கல்லீரல் வீக்கம், அஜீரணம், வாயுத்தொல்லை,மலச்சிக்கல், இரத்த ஓட்ட மந்தம், பித்தப்பை கல்,அசுத்த இரத்தம் இருப்பவர்கள் வாரம் இருமுறை காலை எழுந்ததும் 10 டம்ளர் நீரை சூடாக்கி அதில் 6 டம்ளர் நீரில் மூன்றுத்தேக்கரண்டி திரிபலா சூரணம் அல்லது பஞ்சமூலி சூரணம் போட்டு கலக்கி பொறுக்கும் சூட்டில்அப்படியே குடித்துவிட்டு ஒரு கால் மணிநேரம் ஏதாவது ஒரு பகுதியை சுற்றிசுற்றி சிறிது நேரம்  நடந்து வந்தால் தானே வாந்தி வரும். அல்லது ஆள்காட்டி மற்றும் நடுவிரலால் உள்நாக்கு பகுதியை அழுத்த வாந்தி வரும்.  முடிந்தவரை குடித்தநீரை வாந்தி எடுத்தபின் மீதி உள்ள நீரில் வாய்க்கொப்பளித்து முகம் கழுவி கொள்ளலாம். ஒருவேளை வாந்தி வராவிட்டால் குடித்த சூரணநீர் பேதியாக போய்விடும் கவலை வேண்டாம்.! மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு இது ஒரு அதிசயத்தக்க நிவரணத்தை உடனடியாக வழங்கும்.!
யோகாவில் இந்தப்பயிற்சிக்கு சூரணதௌதி என்று பெயர். சித்தமருத்துவத்தில் வாந்தியம் என்று கூறுவார்கள். சில தந்திர வைத்தியர்கள் இதுபோன்றே வேறுசில மூலிகைகளை கொடுத்து வாந்திவரவழைத்து மருந்து எடுத்தல் என்று கூறுவார்கள்.! உணவுக்குற்றத்தால் ஏற்படும் வியாதிகள், கழிவுத்தேக்கத்தால் ஏற்படும் நோய்கள் மன அழுத்தத்தால் ஏற்படும் கோளாறுகளுக்கு இந்த வாந்தி வைத்தியம் அதிசயத்தக்க நிவாரணத்தை உடனடியாக வழங்கும் இதற்கு காரணம் வாந்தி எடுக்கும் போது உடலில் உள்ள அத்தனை நரம்பு மண்டலமும் உள்ளுறுப்புகளும் தூண்டப்படுவதோடு அட்ரீனல்,தைராய்டு,பீனியல் சுரப்பிகளும் சீராக பணிபுரிந்து ஹைப்போ தலமஸின் இயக்கமும் மேம்படுவதாலேயே இந்த உடனடி பலன்கள் கிடைப்பதாக இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த நமது யோக,சித்த மருத்துவ மெய்ஞானிகளை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.!

*குறிப்பு: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள்,சமீபத்தில் அறுவை சிகிட்சை செய்து கொண்டவர்கள் இந்தப்பயிற்சியை செய்யக்கூடாது*
பயிற்சிக்கு பின் கஞ்சி,பழங்கள், பொங்கல் போன்ற எளிய உணவுகளை உண்பதே சிறந்தது.!

🌿 *இயற்கை மருத்துவ தகவல்களுக்கு* 🍁
amyogatrust.blogspot.in

🍃இயற்கை மூலிகை
மருந்துகளுக்கு
*AUM HERBAL*
Mobile & Whats App
*9629368389*
[2/15, 13:06] Am Yoga: கண்மை:-

தூய்மையான வெள்ளைத் துணியில் மஞ்சள் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, வெயிலில் காய வைக்கவும் பின்பு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் கலந்து வைத்துகொண்டு கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும். கண் சார்ந்த அனைத்து பிரச்னைகளும் தீரும்.!

இணையப்பகிர்வு
[2/15, 13:14] Am Yoga: மிளகின் மருத்துவ குணங்கள்!

*_ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!! அதன் அரிய மருத்துவ குணங்கள் இன்றும் பலரும் அறியாததே!_*
1. மிச்சிகன் பல்கலைக் கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.



சருமப் புற்று நோய், வயிற்று புற்றுநோய் மற்றும் குடல் கேன்சர் நோய்களையும் மிளகு தடுத்து வருவதையும் பல ஆய்வுகள் கூறியுள்ளன.
நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும்.
2. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது: நாக்கின் ருசி ஆதாரங்களை தூண்டி விட்டு வயிறு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கச் செய்ய மிளகு சிக்னல் கொடுக்கிறது. இந்த அமிலம்தான் ஜீரணமாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது.!

இணையப்பகிர்வு

Tuesday, February 14, 2017

*யோகத்தின் அடிப்படை*

1.இயமம்,
2.நியமம்,
3.ஆஸனம்,
4.ப்ராணாயாமம்,
5.பிரத்யாஹாரம்,
6.தாரணை,
7.தியானம்,
8.ஸமாதி என்பவையே

இவைதான் “அஷ்டாங்க யோகம்” என்ற எட்டு நிலைகளைக் கொண்டதாகும். இந்த நிலைகளை நமக்கெல்லாம் வகுத்துக் கொடுத்தவர் ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியே. அவர்தான் யோகத்திற்கு ஆதிகுரு-மூலகுரு. (இன்று உலகில் பல மக்கள், தாங்களே யோக சாஸ்திரத்தைக் கண்டறிந்தவர்கள் போல தங்களின் பெயரால் யோகப்பயிற்சி மையங்களை நடத்திக் கொண்டு ‘ஆழ்நிலை தியானத்தை’ போதிக்கின்றனர்) ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியை வணங்கிவிட்டு அஷ்டாங்கயோகம் - ஒரு சிறு குறிப்பு எழுதி, விளக்கம் என்ன என்பதையும் நோக்குவோம்.

1.இயமம்:- மனத்தையும், இந்திரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீய செயல்களில் ஈடுபடாமல் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாமல், நன்மைகளைச் செய்ய விரும்புதல். அவை பத்து வகை:- 1.அஹிம்சை, 2.சத்யம், 3.களவாமை, 4.பிரம்மச்சர்யம், 5.தயை(இரக்கம்), 6.நேர்மை, 7.பொறுமை, 8.தைரியம், 9.அளவாக சாப்பிடுதல், 10.சுத்தம்(தேகம்-மனம் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தல்)

2.நியமம்: இயமத்தினால் ஏற்படும் நற்செயல்களை விரிவுபடுத்தி கட்டுப்பட்டு இருத்தல். இதுவும் 10 வகை. 1.தவம், 2.சந்தோஷம் (கிடைப்பதில் திருப்தியடைதல்), 3.ஆஸ்திக்யம் (இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கை), 4.தானம் (இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுதல்), 5.ஈஸ்வரபூஜை (எல்லாமே கடவுளுடையது என்று அர்ப்பணித்தல்), 6.ஸித்தாந்த சிரவணம் (குருமூலமாக தன் மத சம்பதமான விஷயங்களைக் கேட்டறிதல்), 7.லஜ்ஜை (தீய செயல்களை நினைப்பதே வெட்கத்திற்குரியது) 8.நற்புத்தி (மோட்ச சாதனங்களைத் தேடுதல்) 9.ஜபம் (இஷ்டதேவதையை மந்திரதியானம் செய்தல்), 10.விரதம் (பிரம்மசர்யம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்ற ஆசிரம விரதங்களை முறையாக அனுஷ்டித்தல்)

3.ஆஸனம்: கடவுளை தியானிக்கும்போது உடல் வளையாமலும், அசையாமலும் இருக்க கட்டுப்பாட்டுடன் ஓர் இடத்தில் வீற்றிருத்தலே ஆஸனம். இதனை யோகசாஸ்திரங்களில் 108வகையாகக் கூறியுள்ளனர். அவற்றில் 11 முக்கியமானவை: 1.சுகாஸனம், 2.வீராஸனம், 3.பத்மாஸனம், 4.வீரபத்மாஸனம், 5.சிம்மாஸனம், 6.குக்குடாஸனம், 7.மயூராஸனம், 8.ஸ்வஸ்திகாஸனம், 9.கோமுகாஸனம், 10.பத்ராஸனம், 11.முக்தாஸனம்.

(குக்குடம்=கோழி, மயூரம்=மயில், ஸ்வஸ்திக=மங்களமான, கோ=பசு, பத்ர=நன்மையான, முக்தா=விடுபட்ட என்று பொருள்களை அறிக)

4.பிராணாயாமம்: சாஸ்திரமுறைப்படி, சுவாசக் காற்றின் இயற்கையான போக்கு வரத்துகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் பிராணாயாமம். “பிராணவாயுவை அடக்குதல்” என்று பொருள். அந்தப் பயிற்சியை மூன்று பிரிவுகளாகக் கூறியுள்ளனர். 1.ரேசகம்=மூச்சுக்காற்றை வெளியே விடுதல். 2.பூரகம்=முப்பத்திரண்டு மாத்திரை காலம் மூக்குத் துவாரத்தின் வழியாக சுவாசக் காற்றை உள்ளே இழுத்தல். இது ‘நிரப்புதல்’ என்று பொருள் தரும். (மாத்திரை என்றால் ஒரு கணப்பொழுது=நொடிப்பொழுது) 3.கும்பகம்=சுவாசத்தை வெளிவிடாமலும், கிரகித்துக் கொள்ளாமலும் உள்ளேயே நிலைப்பட வைத்தல் கும்பகம். இந்த மூன்றும் சேர்ந்ததே ஒரு பிராணாயாமம்.

இந்தப் பயிற்சியானது வைராக்யம், ஆனந்தம், கவித்வம், வாக்குப்பலிதம், தொலைநோக்குப் பார்வை (எதிர்காலத்திட்டம்) அதிவேக சிந்தனைத் திறன், அஷ்டமா சித்திகள், நவநிதிகள், வேறு உடலுக்குள் புகுந்துவிடும் திறமை (கூடுவிட்டுக் கூடுபாய்தல் பூமியில் சரீர நிழல் விழாமை, ஜனன, மரணமின்மை போன்ற பல உயர்ந்த பலன்களைத் தரவல்லது. பிராணாயாமத்தை ஜபமின்றிச் செய்வது, ஜபத்துடன் செய்வது என்று இரு வகைப்படும். ஜபத்துடன் கூடிய பிராணாயாமமே மேலே கூறிய பலன்களைத் தரக்கூடியது. இது யோக புருஷர்களால் தான் செய்ய முடியும்.

5.பிரத்தியாகாரம்: இந்திரியங்களை அதன் விஷயங்களிலிருந்து பிரித்து விடுவதே பிரத்தியாகாரம். இது பிராணாயாமத்தின் உயர்ந்தநிலை. சமாதியோகம் என்பதில் ஒரு பிரிவுதான்.

6.தாரணை: மனத்திலுள்ள எண்ணங்களை எல்லாம் விலக்கிவிட்டு, அதனை உடலின் சக்தி ரூபமாக விளங்குகின்ற சக்கரம் என்ற சில ஸ்தானங்களில் நிலைபெறச் செய்து இறைவனின் உருவத்தைத் தோன்றும்படி செய்வதே தாரணை.

அந்த ஸ்தானங்கள்: 1.மூலாதாரம்: இடுப்பிற்குக் கீழே முக்கோணவடிவில் உள்ள ஒருசக்கரம். இதுவே காமகூடம் எனவும் சொல்லப்படுகிறது. 2.அடுத்தது ஸ்வாதிஷ்டானம். 3.அதற்குமேல் தொப்புள் பகுதியில் மணிபூரகம் என்ற நாபிச்சக்கரம். 4.அதற்குமேல் இருதயப் பகுதியிலிருப்பது 12கோண வடிவில் ‘பூர்ணகிரி’ என்ற சக்கரம். 5.அதற்குமேல் கழுத்துப் பகுதியில் பதினாறு கோணமுள்ள ‘விசுத்தம்’ என்ற சக்கரம். இதற்கு ‘ஜலந்தரபீடம்’ என்று பெயர். 6.அதற்கும் மேல் இருபுருவங்களுக்கும் மத்தியில் இருகோணவடிவமாக ‘ஆக்ஞா’ சக்கரம் இருக்கிறது. அதற்குமேல் மஹாபீடமென்ற ஒட்டியாண சக்கரம் இருக்கிறது. இந்த சக்கரங்கள் எல்லாமே ஒரு மனிதனின் அன்றாடத் தேவைக்கான பணிகளான சுவாசித்தல், உண்ணும் உணவுப் பொருள்களை ஜீரணித்தல், தன்மயமாதல், கழிவுகளை வெளியேற்றுதல், நடமாடுவதற்குத் தேவையான சக்தியைத் தருதல், ஐந்து உறுப்புகளும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவையறிதல், தொடு உணர்ச்சி) தங்கள் பணிகளைத் திறம்பட செயலாற்ற உதவுகின்றன. உடலுக்குத் தேவையான முக்கியமான சுரப்பிகளை உற்பத்தி செய்வதும் இந்த ஸ்தானங்களே.

7.தியானம்: உலகத்தில் சப்தம், கொடூரம் ஆகியவற்றைக் கேட்கும் காது, காணும் கண் போன்ற இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, அந்த இந்திரியங்களை மனத்துடன் சேர்த்து, இருதயகமலத்தில் வீற்றிருக்கும் பரம்பொருளை இடைவிடாமல் சிந்திப்பதே தியானம். இந்த தியானப் பயிற்சியை ஒரே குருமூலமாக நன்கு அறிந்து கொண்டு பயிற்சி செய்வதே சிறந்த பலனைத்தரும். தியானப் பயிற்சி என்ற விஷயம் மிகவும் பரந்து விரிந்து காணும் விஷயம்.

8.சமாதி: வெகுகாலம் மனத்தில் இறைவனையே தியானம் செய்து கொண்டு, அதிலேயே லயித்துப் போய் இறைவனை மிக அருகில் கண்டு தன்னை மறந்து அமர்ந்த நிலையிலிருப்பதே ஸமாதிநிலை. இவர்களை மழை, வெயில், புயல், பனி, குளிர், காற்று, புயல்காற்று போன்றவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உலகவிஷயங்கள் எதுவுமே இவர்களின் கவனத்தை ஈர்க்காது. மோட்சசித்தியே இவர்களின் ஒரே எண்ணமாகும். இந்தச் சமாதி நிலையை அடைய உறக்கம், உணர்வு, பசி மூன்றும் அகல வேண்டும். யோகத்தின் இறுதியான சமாதிநிலை தான் ஒருவனுக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாத பேரின்ப நிலையைத் தருகிறது.

யோகாசனங்களின் பயன்கள்

1.நோயின்றி வாழ்தல். 2.என்றும் இளமையுடனும், சுறுசுறுப்புடனும் இருத்தல். 3.நல்ல ஞாபக சக்தி. 4.சுரப்பிகளின் (உடலில்)இயக்கம். 5.ரத்த ஓட்டம். 6.நல்ல சுவாசம். 7.நல்ல ஆரோக்கியம். 8.நல்ல சிந்தனையுடன் கூடிய செயலாற்றல் போன்ற பல நல்ல பயன்கள் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*

Monday, February 13, 2017

*தூக்கமின்மையை போக்கும் ஜாதிக்காய்*

மனிதனுக்கு முக்கியமான ஓய்வுகளில் தூக்கம் ஒரு இறைவனின் கொடை. தூக்கம் இன்மையால் நம்மில் பலர்படும் மனக்கஷ்டம் அதிகம். தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு சாப்பிட்டால் குணமாகும். பேதி ஏற்பட்டு ஓய்வெடுக்கும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்ய ஜாதிக்காயைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.!

*இணையப்பகிர்வு*

Saturday, February 11, 2017

தலைவலி குணமாக 28 வகையான பாட்டி வைத்தியங்கள்

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவலி என்ற உடன் பலர்மாத்திரையை சாப்பிடும் பழககம் கொண்டுள்ளனர். முடிந்தவரை தலைவலிக்கு மாத்திரைகளை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

தலைவலி சரியாக சில பாட்டி வைத்தியங்கள் :-
1) கொத்தமல்லி சாறு எடுத்து முன் நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விலகும்.

2) திருநீற்றுப பச்சிலைச் சாறு, தும்பைச்சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து நெற்றியில் தடவ தலைவலி தீரும்.

3) துளசி ,வேப்பிலை போட்டு ஆவி பிடிக்க தலைபாரம் குறையும்.

4) கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட தலைபாரம் குறையும்.

5) நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

6) துளசி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு, லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குறையும்.

7) கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.,

8) வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

9) முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

10) கீழாநெல்லிச்சாறு, குப்பைமேனி இலைச் சாறு இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி நெற்றியில் தடவி வர தலைவலிஎலுமிச்சைப் பழச் சாற்றை இரும்பு சட்டியில் விட்டு காய்ச்சி நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

11) இஞ்சிச் சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர தலைவலி குறையும்.

12) ஓமவல்லி இலைச் சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

13) அகத்தி இலையை அரைத்து நெற்றியில் பற்று போட தலை வலி குறையும்.

14) மிளகாய் , மிளகு, செம்மண் முன்றையும் சம அளவு எடுத்துத் தண்ணீர் விட்டு மைப்போல அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ் சூடாகப் பற்றுப் போட தலைவலி குறையும்.

15) இஞ்சியைத் தட்டி வலி உள்ள இடத்தில் பற்றுப் போட தலை வலி குறையும்.

16) வெற்றிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலை, மிளகு, சுக்கு இவற்றின் சாறை எடுத்து காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்க தலைவலி குணமாகும்.

17) சுக்குப் பொடியை பாலில் குழைத்து நெற்றியில் தடவ தலை வலி குறையும்.

18) மிளகை அரைத்து பாலுடன் கலந்து தலையில் தேய்த்து குளிக்க தலை வலி குறையும்.

19) கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையை நெற்றியில் தடவினால் தலைவலி குறையும்.

20) அகத்தி இலைச் சாறெடுத்து நெற்றியில் தொடர்ந்து தடவி வர தலை வலி குறையும்.

21) எலுமிச்சைப்பழச் சாற்றில் மிளகை மைய அரைத்து நெற்றியில் போட தலைவலி குறையும் .

22) குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.
23) நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

24) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி சீசாவில் வைத்துக் கொள்ளவும். தைலத்தை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பின் குளிக்க தலைவலி குணமாகும்.

25) ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி விலகும்.

26) ஜாதிக்காய் விதைகளை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்தால் தலைவலி நீங்கும்.

27) மிளகு, துளசி இரண்டையும் வாயில் போட்டு கொண்டால் தலை வலி விரைவில் குறையும் .

28) உப்பு,மிளகு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலை வலி விரைவில் நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

Friday, February 10, 2017

தேனின் குணம்

இருமலுக்கு அதிமதுர பொடியை தேனில் கலந்து சாப்பிட்டேன். வாய் புண்ணாகி விட்டது என்கிறார் நண்பர் ஒருவர்,
ஆம், தேன் உஷண வீர்யம் கொண்டது, வாய்ப்புண்  இருக்கும் போது தேன் எடுப்பது தவறு, இருமலுக்கு அதிமதுரம் சிறிய அளவில் தேனில் கொடுத்தால் தப்பில்லை, அதிமதுரம் கடின செரிமான தன்மை கொண்டது எனவே நோயாளியின் ஜடாக்கினியின் அளவறிந்து கொடுக்கலாம், Deodinitis போன்ற பித்த நோய்களுக்கு தேன் எடுக்க கூடாது, பன்னீர், நன்னாரி கசாயம் அல்லது நெய்யே எடுக்க வேண்டும், தேன் கபம் சார்ந்த நோய்களில் மட்டுமே கொடுக்கவேண்டும், வாதத்திற்கோ பித்ததிற்க்கோ தேன் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, மது மேகத்தில் பயன்படுத்தலாம், தேனை சூடாக்கி பயன்படுத்த கூடாது, தேனும் நெய்யும் சம அளவில் கலந்து பயன்படுத்த கூடாது, தேன் வறட்சி குணம் கொண்ட து, கபத்திற்க்கு இது சிறந்த அனுபானம், மற்றபடி உடலுக்கு நல்ல பலம் தரும், நினைவாற்றலை பெருக்கும், உடல் சூட்டை சம நிலைப்படுத்தும், கண்களுக்கு இதமானது, சீரணத்தை உண்டாக்கும், இரைப்பை, கல்லீரல், கோளாறைப்போக்கும்
கட்டியிருக்கும் கபத்தை முறித்து வெளியேற்றும், நெஞ்செரிச்சல், தாகம், இருமல், விக்கல், இரத்த பித்தம், தொழு நோய், வாந்தி பேதி, பலவீனம் ஆகியவைகளை போக்கும்,
இரத்த சிகப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த சோகையை போக்கும், நரம்புகளுக்கு வலிமையை கொடுக்கும், கிழிந்துபோன தசைகளையும், உடைந்து போன எலும்புகளையும் இணைக்கும், இதயத்திறக்கு மிகவும் உகந்தது, இதய நோயாளிகள் தினமும் படுக்கப் போகும் போது ஒரு டம்ளர் தண்ணீரில் தேனும், எலுமிச்சை சாறு ம் கலந்து சாப்பிட நன்மையை உண்டாக்கும்,
இதே உடல் பருமனில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் தேனும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து அதிகாலையில் பருகி வர வேண்டும்,
ஒரு தேக்கரண்டி தேனை மூன்று பங்கு நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வர இரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்,

ஒரு டம்ளர் தண்ணீரில் தேனைக் கலந்து இரவு படுக்கப் போகும்போது பருகி வர தூக்கமின்மை நீங்கி நல்ல தூக்கம் வரும், நல்ல குரல் வளம் உண்டாகும்,

நாவறட்சியையும், காமாலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீர்தாரையில் உள்ள புண்கள், தாகத்தையும் வெந்நீரில்  தேன் கலந்து தினமும் இரு வேளை சாப்பிட குணமாகும்,

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர பித்தம் நீங்கி பெரு வயிறு குறையும், குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதம் தேனை உட்கொண்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும், மலத்தை கட்டும், மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, அதிகமாக சாப்பிட்டால் ருசியின்மை, நெஞ்சுசளியை தோற்றுவிக்கும் பிரசவித்த பெண்களின் அடி வயிற்றில் தேனை தடவி வர பிரசவித்த வலி நீங்கும், உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, பழைய நாள்பட்ட தேனை பயன்படுத்தினால் மருந்தின் தன்மை கொட்டுவிடும்.!

*இணையப்பகிர்வு*

Thursday, February 9, 2017

மருத்துவக் குறிப்புகள் 10/02/17

[2/9, 15:41] Am Yoga: 🌿 *வாதம் போக்கும் எளிய மருத்துவம்*🌴

*கீல்வாதம் நீங்க*

*2 கைப்பிடியளவு பேய்மிரட்டி இலையை எடுத்து மண்சட்டியில் போட்டு வதக்கி ஒரு மெல்லிய  வெள்ளைத்துணியில் போட்டு  கட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து சில நாட்கள் ஒத்தடம் கொடுத்துவர கீல்வாதம் நீங்கும்*

*பாத எரிச்சல்*

*கையளவு மருதோன்றி இலையை எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைவிட்டு அரைத்து பாத எரிச்சல் உள்ள பகுதியில்  வைத்து சுற்றி துணியால் கட்டி 9 மணியளவில்  படுத்துக் கொண்டு பனிரெண்டு மணிவாக்கில்  எழுந்து காலை கழுவி படுத்துவர மூன்று நாட்களில் பாத எரிச்சல் முற்றிலும் அகலும்*

*ஊமத்தம் இலைச்சாறு அரைலிட்டர் நல்லெண்ணைய் அரைக்கிலோ இரண்டையும் அடுப்பேற்றி காய்ச்சி நீர் வற்றிய வேளையில் 5 கிராம் கட்டிகற்பூரம் தட்டிப்போட்டு இறக்கி வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக்கொண்டு வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி அளவு எண்ணையை காலை,மாலை உணவிற்கு முன் உண்டுவர எவ்வளவு கடினமான கீல்வாதமும் மூன்று நாளில் மறையும்*

🌿இயற்கை மூலிகை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

☘100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு🌾
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*
[2/9, 15:50] Am Yoga: *நமது மஹாயோகா நூலிற்கு ஒரு யோகாசன மாணவி வழங்கிய மதிப்புரை*

புத்தகங்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்ணு அறிஞர்கள் சொல்லிருக்காங்க. ஆனா ஐயாவோட புத்தகம் எனக்கு குருவாகவே இருக்குங்கறது எனக்கு பெருமையா இருக்கு. அவ்வளவு அற்புதமா சொல்லிருக்காங்க. யோகானா என்ன எப்ப எங்க எப்படி செய்யணும் எவ்வளவு செய்யணும் எல்லாம் சொல்லிருக்காங்க.நிறைய சந்தேகத்திற்கு பதிலும் இருக்கு.யோகால ஆர்வம் உள்ள எல்லோரும் கண்டிப்பாக படிக்க கூடிய ஒரு புத்தகம்.பயிற்சியாளர் இல்லாமலே யோகா செய்யலாம் அந்த அளவுக்கு தெளிவா சொல்லிருக்காங்க. எல்லோரும் கண்டிப்பா படிங்க. இந்த குரூப்ல இருக்கறத பெருமையா நினைக்கிறேன்.!

*விஜயா நாகர்கோவில்*
[2/10, 05:12] Am Yoga: *கட்டி கரைய வைத்தியம்*

உடல் மேல் உண்டாகும் கட்டியை  கரைக்கும்...
         " திருநீற்றுப் பச்சிலை "
இதன் இலையை அரைத்து கட்டியில்
மேல்பூச்சாக செய்துவர கட்டி கரையும்.!
மேலும் இந்த மூலிகை சாறுடன் சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து
உள்ளுக்கு அருந்திவர மார்பு படபடப்பு
குறையும், இருமல்,கேஸ்ட்ரபுள்க்கு
நிவாரணம் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*
[2/10, 12:58] Am Yoga: *யோகனே சித்தஸ்ய …*

நமது மையத்தில் யோகம் பயின்று பிறவிப்பிணிகளை வென்ற எனது   மாணவர்களை பற்றிய உண்மை பதிவு

இளமையில் வறுமை கொடிது என்று அவ்வை கூறுவார். அதனிலும் கொடுமை இளமையில் பிணி என்பதை நான் உணர்ந்த தருணம் அது. ஆஸ்துமா,இழுப்பு,அலர்ஜிக்கான இலவச வகுப்பு ஒன்று நமது செட்டிகுளம் யோகா மையத்தில் 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதுதான் நான் முதன்முதலாக அந்த மாணவரை சந்தித்தேன். ஒரு 24 வயது மதிக்கலாம். கறுப்பு என்றாலும் களையானவர் என்பார்களே அப்படி ஒரு ஒளிபொருந்திய முகம். நுரையீரலில் உள்ள ஒருபக்க அறை முழுவதும் வீங்கி உள்ளதால் நடக்கும் போது மட்டுமல்ல சும்மா படுத்திருக்கும் போது கூட அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். நவீன மருத்துவ முறையில் அத்தனை பரிசோதனைகளையும் செய்து பார்த்ததோடு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் பார்த்தும் எந்தவித ஆரோக்கிய முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவர். ஒருநாள் ஹீலர் பாஸ்கரின் பேச்சை கேட்டு ஆங்கில மருந்துகளை முக்கால்வாசி நிறுத்திவிட்டு சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து  கொஞ்சம் முன்னேற்றம் கண்டவர் முழுவதும் இயற்கை வாழ்வியலை கடைப்பிடிக்கும் ஆவலுடன் நமது மையத்திற்கு என்னை காணவந்திருந்தார். பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று நெஞ்சை அழுத்திக் கொடுப்பார் பிறகு சில ஏப்பங்களை விட்டுவிட்டு பேச ஆரம்பித்தால்  மீண்டும் மூச்சு அடைக்கிறது என்பது போல சற்றுநேரம் குனிந்து அமர்ந்துகொள்வார்.
ஒருவேளை உணவு சாப்பிட்டால் மூன்றுவேளையும் நெஞ்சு எரிகிறது என்றும் , இரவில் உறங்கும் போது கூட நெஞ்சில் யாரோ கட்டையை வைத்து நெறுக்குவதுபோல் இருக்கு  என்றும் தனது பிணித்துயரை பட்டியலிடுவார்.
இலவச ஆஸ்துமா வகுப்பில் கலந்துகொண்டவர், பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்காக நாம் புகைப்படம் எடுக்கும் போது வேண்டாம் அய்யா,என்னை படம்பிடிக்க வேண்டாம். நான் நோயாளியாக அடையாளம் காணப்படுவதை விரும்பவில்லை.   என்றார்; அவர் பெயர் மோகன்  பாலிடெக்னிக் படித்துக்கொண்டு பொறியியல் துறையில் சுயவேலையின் மூலம் கைநிறைய பணம் சம்பாதிப்பவராய் இருந்தார்.  நமது பயிற்சி மையத்தில் தொடர்ந்து அவருக்கு சில மாதங்கள் பவன முத்தாசனம்,உஷ்ட்ராசனம்,சிரசாசனம்,பஸ்திரிகா பிராணாயாமம்  போன்ற பல யோக நுட்பங்களை கற்றுதேர்ந்ததோடு முற்றிலும் இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி இரசாயண உணவு, இரசாயண அழகுப்பொருட்கள், பற்பசை,பவுடர் என்று அனைத்தையும் துறந்து ஆரோக்கிய வாழ்வை தமதாக்கிக் கொண்டார். முன்பெல்லாம் ஒருவேளை உணவைகூட என்னால் இயல்பாக ஜீரணம் செய்ய முடியாது. ஆனால் இப்பொழுது பசித்தபோதெல்லாம் உண்கிறேன். மாத்திரை மருந்துகளை முழுவதும் நிறுத்திவிட்டு நீங்கள் கொடுத்த மூலிகை சூரணத்தை சாப்பிட்டு வருகிறேன். தினமும் வீட்டிலும் ஒருநேரம் உஷ்ட்ராசனம்,சிரசாசனம், ஹூ க்ரியா, ஓம்கார தியானம் போன்றவற்றை செய்கிறேன். என் வீட்டில் இருப்பவர்களே அசந்துதான் பார்க்கிறார்கள்.  சாதாரணமாக  இயல்பாக சுவாசிக்கவே முடியாதவன் எப்படி தலைகீழாக நின்று சுவாசிக்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கும் வியப்பாகதான் உள்ளது. 80% நான் குணமாகிவிட்டேன். மிகமிக  நன்றி அய்யா, ஹீலர் பாஸ்கரையும் யோகாவையும் நான் அறியாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் ஒரு நோயாளியாக நவீன  மருத்துவத்தோடு  போராடிக்கொண்டிருந்திருப்பேன் என்று கூறி எனது சார்பில் இன்னொரு யோகா இயற்கை வாழ்வியல் முகாம் நடத்த உதவுகிறேன் என்றெல்லாம்  கூறி என்னை ஒரு யோகா ஆசானாய் பெருமை கொள்ள வைத்து சென்றார்.!  பிறகு ஒருவருடம் கழித்து மீண்டும் ஒருநாள் கைப்பேசியில் அழைத்து ஒரு முக்கியமான விசயம் சார் ,உங்களிடம் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதை வைத்துதான் இனி எனது வாழ்க்கையே உள்ளது.  என்றெல்லாம் கூறினார்.  சொல்லுங்க, உடல் நிலை நன்றாகத்தானே உள்ளது? என்றேன்;
"ஆமாம் அய்யா, அதுவல்ல பிரச்சனை இன்னொரு முக்கியமான விசயம் நேரில் வருகிறேன்." என்று; அவர் என்னைப்பார்க்க வந்தார்.

என்ன விசயம் மோகன்?
"அய்யா,இப்ப என்னைப்பொருத்தவரை உடல்நிலை நன்றாக உள்ளது. எங்கள் வீட்டில் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்"
நல்ல விசயம் செய்து கொள்ள வேண்டியதுதானே?
"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.பிறகு, எதற்கும் இருக்கட்டும் என்று நான் முதலில் மருத்துவம் செய்த ஆங்கில மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்தேன்.அந்த ரிப்போர்டுகளை பார்த்த மருத்துவர், இப்பொழுதும் உன் உடல்நிலை பழையதுபோல் தான் உள்ளது. நீ திருமணமே  செய்யக்கூடாது, ஒருவேளை நீ  திருமணம் செய்தால் இல்லற வாழ்க்கையில் உன்னால் ஈடுபடவே முடியாது. அதோடு நுரையீரல் இயக்கம் முற்றிலும் சீரழிந்து உயிருக்கே ஆபத்தாகி விடும். என்கிறார்கள்"
என்றார்;
உங்களுக்கு என்ன தோன்றுகிறது மோகன்?
"நான் நன்றாக இருக்கிறேன்.  ஆனால்,எனக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் இல்லை.
முன்பிருந்ததை விட பலமடங்கு முழு ஆரோக்கியமாக உணர்கிறேன்.ஆனாலும் ,மருத்துவ அறிக்கையின் படி  நான் இன்னும் முழு நோயாளியாகத்தான் இருக்கிறேன் என்கிறார்கள். நீங்களே பாருங்களேன்" என்று; தனது ஸ்கேன் ரிப்போர்டை எனது கைகளில் கொடுத்தார்.
நான் அதை  என் கைகளில் வாங்கி மேசையில் விசிரியெறிந்தேன்.என்ன அய்யா, உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்றார். எனக்கு மனித உடல் இயங்கு சக்தியில் முழு நம்பிக்கை உண்டு. இதுபோன்ற மருத்துவ அறிக்கையில் முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில், மருத்துவ அறிக்கையின் படி மிக ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ள பலர் நடக்கவே முடியாமல் படுக்கையில் கிடப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.
அதனால் இது பொய், நீங்கள் உணரும் ஆரோக்கியம் மட்டுமே மெய் என்றதும். அவர் ஆர்வமாக
அப்ப நான் திருமணம் செய்து கொள்ளலாமா?
என்னால் இல்லறத்தில் ஈடுபட முடியுமா?
எனக்கும் ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்களா? என்று பல கேள்விகளை முச்சுவிடாமல் கேட்டார்;

"100%  உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக  அமையும் நீங்கள் ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெறுவீர்கள்.! நலம் பெருகட்டும் …  என்று என்னையும் அறியாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தேன்.!
பின்பு சில மாதத்திலேயே அவரின் இனிய திருமண நாள் வந்தது … அங்கு என்னையும் எனது மனைவியையும்  பார்த்ததும்  தனது துணைவியோடு ஓடி வந்து  பணிந்து  ஆசி வேண்டினார். வாழ்க வளமுடன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க, நலம் பெருகட்டும் …என்று வாழ்த்தி வந்தேன்.!
என்னுள் அமர்ந்து வாழ்த்திய இறைநிலையின் ஆசி பலித்தது … இன்று மோகன் பெண்ணும் ஆணுமாக இரண்டுபிள்ளைகளை பெற்று ஆரோக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார் …¡¡¡¡
*இயற்கையின் சக்தியில் இதுவும் ஒன்று*

----ஏகப்பிரியன் DYT

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
aumyogatrust.blogspot.in

🌿 *100% இயற்கை மூலிகை மருந்துகளுக்கு🌹
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*