முக்கடல் மட்டுமல்ல முந்நூறு மொழிக ளும், எண்ணில்லா உணர்வுகளும் சங்கமிக்கும் இடம் கன்னியா குமரி; கடற்கரை.!கொளுத்தும் வெயிலில் கூட சில்லென்ற உணர்வை தரும் அதிசய பூமி கன்னியாகுமரி கடற்கறை.!எனது சிறுவயதில் இந்தப் பகுதியிலேயே பல மாதங்கள் படுத்து, புரண்டு, ஒடி, விளையாடியஅனுபவங்கள் உண்டு என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று நான் பார்த்த இந்தக் கடற்கரைஎன்னுள் புதிய அலைகளை உருவாக்கி, எனதுபால்யமதிப்பீடுகளான மணல்கோட்டையை இடித்து சுவடின்றி ஆக்கியது.!
நான் ஒரு யோகா வகுப்பெடுப்பதற்காக
இப்ப ஒரு வாரமாக கன்னியாகுமரி வருகிறேன்.! காலை பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை வகுப்பு சில நாள் வகுப்புமுடிந்ததும், சிலநாள்முன்னாடியே வந்து கடலை தரிசித்துவிட்டு பிறகுவகுப் பிற்கு செல்வேன்.இன்றைக்கு அப்படித் தான் காலை எட்டு மணிக்கே கடற்கறை வந்துவிட்டேன்; எனென்றால் எட்டு மணிமுதல் ஒன்பது மணிவரை இருந்த இன்னொரு வகுப்பு இன்று இல்லை. இது சுற்றுலா பருவகாலம் என்பதால் நிறைய வண்டிகளிலும், நடந்தவாறும் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டிக் கொண்டிருந்தது … நான் எனது சைக்கை <பைக்> காந்தி மண்டபம் நோக்கி செலுத்த முனைந் தேன்; ஆனால் அங்கு ஒரு தற்காலிக தடையை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அருகே ஒரு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மட்டும் நின்றிருந்தார். நமது வண்டி போக இடமிருந்த தால் நாம் செல்ல முயன்றோம். உடனே ஆய்வாளர் நம்மை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினார்.!சைக்கை காந்தி மண்டபத்தின் அருகே நிறுத்திவிட்டு கடற்கரை நோக்கி நடந்தேன் … நிறைய தற்காலிக கடைகள் களைகட்டியிருந்தது, சட்டை, பனியன், நவீன முக்<கால்> காசட்டை, என்று எங்கும் துணிகள் பளபளவென்று மின்னலடித்தது.ஆனால் அதை வாங்க யாரும் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
கடற்கரையில் இருக்கும் ஒவ்வொரு வரும் ஆளுக்கு பத்துஜோடி எடுத்தாலும் இதெல்லாம் தீராது போல.!
நான் போனவாரம் என் மகனுக்கு
ஒரு முக்கா கால்ச்சட்டை எடுத்தேன். அடுத்த நாளே தையல் விட்டுவிட்டது.! ஆனாலும் 100 ரூபாய்க்கு அது மலிவுதான்.! இந்தக் கடற்கரையில் துணி விற்கும் பலரும் இந்தி வாலாக்களே; ஆனாலும், கொஞ்சம் கொஞ்சும் தமிழ் பேசுவார்கள்.! விலையை கால்வாசியாக குறைத்துக்கேட்டால் காசில்லா கஸ்மாலம். என்று மோனையாய் திட்டுகிறார்கள்.!
ஒன்றிரண்டு குதிரைகள் ஒரமாய் சவாரிக்காக காத்திருந்தன. மக்கள் கடலைப் பார்த்தவாறும், சில இளசுகள் கடலை போட்டவாறும் சென்று கொண்டி ருந்தனர். … என் எதிரே வந்த ஒரு கண்ணாடி வியாபாரி பாபா, கிளாஸ் வேணுமா? என்றார்; தலையை வல, இடமாக ஆட்டிக் கொண்டே வந்து ஒரு இளநீர் கடையில் இளநீர் வாங்கிக் குடித்துக்கொண்டே விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்த்தேன் எனக்கென் னவோ, திருவள்ளுவரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் வைத்திருக் கலாமோ என்று தோன்றியது. ஏனென் றால் திருவள்ளுவர்; விவேகானந்தர் மண்டபத்தின் அழகை தனது பிரமாண்ட த்தால் மறைத்து விடுகிறார். அந்தப் பகுதியில் சில வாலிபர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர் சின்னச்சின்ன குட்டி நண்டுகள் பாறை இடுக்குகளில் அங்குமிங்கும் தாவி ஒடிக்கொண்டிருந்தன , அதைப்பிடித்து தன் கையில் உள்ளச் சிறிய நெகுழிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். அவனுக்கு உதவியாக இன்னும் இரண்டுபேர் பாறை மேடெல்லாம் ஏறி அவனைத் தொடர ஒருவன் ஓரமாக நின்று , இவர்களை அழைத்துக் கொண்டிருந்தான்; அந்த நேரம் பார்த்து வந்த ஒரு சிறு அலை நண்டுப்பிடுத்துக் கொண்டிருந்தவனை தடுமாறச் செய்யவே பை நழுவி கடலில் விழுந்தது. நெகிழியில் இருந்த நாலைந்து நண்டுகளும் பையோடு கீழே விழுந்து குதித்து ஓடியது. இதை சற்றுத் தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் நண்பரும் ,இன்னும் சிலரும் பார்த்து ஊளையிட , அமைதியாய் தொப்பலாய் நனைந்த சுரங்கத்துணி கால்ச்சட்டையை உதறிக்கொண்டே அவனும் மற்ற நண்பர்களும் காரையை நோக்கி நகர்ந்தார்கள்.! நெகிழிப்பை; நண்டை விடுவித்த மகிழ்ச்சியோடு கடலில் இறுமாப்பாய் மிதந்து கொண்டிருந்தது.!
எம்மீனுக்கு எமனாகுமே?
எதுக்கு இந்தப் பிள்ளைக , நண்டைப் பிடிச்சாங்க, இப்ப ஏன் பேசாம போறாங்க?.என்று சிந்தித்தவாறே திருவள்ளுவர் சிலையை பார்த்தவாறு இருக்கும் சுற்றுச் சுவரில் அவரைப் பார்க்காமல், முக்கடலும் சந்திக்கும் இடத்தில் குளிக்கும் மக்களை பார்த்தவாறு ஒரு துண்டை விரித்து அமர்ந்தேன் …நமது காலத்தில் பஞ்சி மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பது போல் ஒரு தாயிடம் அடம்பிடித்து இரண்டு மொட்டையடித்த சிறுவர்கள் பனியனோடும் கால் சட்டையோடும்
கடலில் குதித்து கும்மாள மிட்டார்கள்.! நீரைப் பார்த்தவுடன் மனித மனமும் உடலும் எப்படித்தான் இவ்வளவு மகிச்சியடைகிறதே தெரியவில்லை, சிறுவர்கள் மட்டுமில்லை இளைஞர்கள், முதியவர்கள் கூட குழந்தையைப் போலவே உற்சாக மிகுதியில் அலையில் மிதந்து மிதந்து குதுகலித்தனர். இந்த நேரத்தில் ஆந்திரா காரத்தில் இருந்த சில நடுத்தர வயது பெண்கள் - கிராமத்து சிறுவர்கள் டவுசரை கழற்றி விட்டு ஆற்றில் குதிக்கப் போகும் வேகத்தில் உடையை அவசர அவசரமாக கழற்றிவிட்டு பாவாடையோடு கடலில் இறங்க இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் என்று
அவர்களை பல டில்லி பார்வைகள் துளைத்தெடுத்த வாறே பின்தொடர ,
இதையெல்லாம் காவல் காக்கத்தனே நாங்க இருக்கோம்னு, காவல் துறையினர் தங்கள் குடிலில் இருந்து மக்களை கவனித்த படியே இருக்க; நான் எழுந்து வேறு இடத்தில் அமரலாம் என்று எழ எத்தனித்த நேரம், ஒரு வயதான அம்மா வந்து, " குறிக்கேளு இராசா சரியாய் இருந்தா காசுகொடு இல்லைனா காசு வேண்டாம் என்றார். நாம் வேண்டாம் என்று மறுத்தும் , உன் முகத்தில் ஒரு ஒளி தெரியுது, உனக்கு நல்ல காலம் பெறக்கப் போகுது; என்றெல்லாம் துண்டிலைப் போட சரியென்று தலையை அசைத்து வைத்தேன்.
" மாடா உழைச்சே, மழையா ஊருக்கெல்லாம் உதவின, சொந்தமின்னு இருந்த தெல்லாம்
தேவைக்கு மட்டும்தான். உன் மனைவி சிலநேரம் பாலும் தேனும்
தருவாள், சிலநேரம் பத்ரகாளியா நிப்பாள். இப்ப உனக்கிருக்கிற தெளிவு முப்பது வருசத்துக்கு முந்தி இருந்திருந்தால் நீ ராஜாவா
இருந்திருப்ப. அதாவது 12 வயசுல.ஒருவேளை நமது தல தாடியப் பார்த்து வயசை கூட்டீட்டாங்க போல> இப்படி தளர்ந்து கடலை வெறிச்சிட்டு உட்காரமாட்ட.!தர்மம் தலைகாக்கும், தர்மம் பண்ணு, அல்லா துணை யிருப் பான் , ஆபத்தெல்லாம் ஓடிப்போகும்.
வெற எதுவும் கேட்கணுனா கேளு இராசா "அப்டினு சொல்லிட்டு, 20 ரூபானு சொன்னாங்க, சட்டைப்பையில் இருந்துநூறு ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தேன். சில்லறை இல்ல நாப்பது ரூவாதான் இருக்குனு அதைகொடுத் துட்டு இங்கேயே இரு, நூறு நோட்டுக்கு சில்லறை வாங்கியாறேனு நோட்டை வாங்கிட்டு போயிட்டாங்க.! அநேகமா மீதி வராதுனு தோணுச்சு; ஏன்னா, அந்தம்மா சொன்னதுல ஒன்னுமே உண்மை இல்லையே.!மனிதனுக்கான வாழ்வியல் தந்திரத்தில் இதுவும் ஒன்னுதான்.!" வாழ்க வளமுடன் " மெதுவா சூரியன் சூட ஆரம்பித்தது, துண்டை உதறி தோளில்போட்டு விட்டுஅங்கிருந்து எழுந்து பக்கத்தில் உள்ள மண்டபத்தின் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தேன்.!
நடுமண்டபத்தில் ஒரு துணியை விரித்து பத்துபேர் கொண்ட ஒரு குழிவினர் உணவருந்திக் கொண்டிருந்தனர் … புளியோதரையும் ஊறுகாயும், உணவருந்தி முடிந்த உடன் அந்த இடத்தில் ஒரு சிறுவன் சாப்பிடும் அளவுக்கு உணவு சிதறி கிடந்தது. அட.! பாவமே உங்கள் பசியைத் தீர்த்த பாவத்திற்காக எஞ்சிய பருக்கைகள் போவோர் வருவோர் காலில் மிதிப்பட்டு சாகத்தான் வேண்டுமா? என்று நான் சிந்தித்த வாறிருக்க, நாலைந்து துளி தண்ணீர் என் மேல் தெரித்தது, நிமிர்ந்து பார்த்தேன்; சாப்பிட்டவர்களில் ஒருவர் கையை கழுவிவிட்டு சென்றார். கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.இவர்களைப் போன்றவர்கள் வராவிட்டால் இந்த இடம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?
காந்தி மண்டபத்தை சுற்றியும் நிறைய குப்பைகளும் நெகுழி பைகளும், மனித கழிவுகளும் கொட்டிக் கிடக்கின்றன.!
காந்தியை கண்ட பின்னும், அவரின் தூய்மை யையும் உண்மையையும் உணராமல் இப்படி செய்கிறார்களே? ஒருவேளை அவர் இருந்தால்
அவரையே வாந்தியெடுக்க வைக்கும் படி நடக்கும் இந்த மனிதர்களை நினைத்தால் மனம் சாந்தியற்று துடிக்கிறதே மகாத்மா காந்தியே.!
என்று சிந்தித்தபடி அமர்ந்திருக்க … கடலை, கடலை, கப்பலண்டி என்றவாறு ஒருவர் கடலை விற்றபடி வந்தார்; என்ன விலை? "பத்து ரூபாய்" அட! சிறிய பத்து முழு வேர்க்கடலை உடைத்தால் மொத்தம் 20 கிராம் கூட இருக்காது. அடுத்து ஒருவர் பாசி விற்றவாறு வந்தார். வேண்டுமா? "வேண்டாம் அய்யா"
ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன்?
"வேண்டாம் எனக்கு உபயோகப் படாது"
என்று நான் கூற உடனே அவர்; ஒன்றாவது வாங்குங்கள் பசிக்கிறது என்றார்.! அவர் முகத்தை கூர்ந்து கவனித்தேன், ஆம் பலநாட்கள் நான் அனுபவித்த அதே பசியின் கொடுரம் , அந்த மனிதரின் நாடி, நரம்பெல்லாம் ஓடி ஒளிர்ந்ததை என்னால் உணர முடிந்தது … ஐந்து மாலைகளை
வாங்கிவிட்டு குறிகூறிய அம்மா கொடுத்த நாற்பது ரூபாயோடு எனது கைப்பையில் துழாவி இரண்டு ஐந்து ரூபாய் துட்டையும் எடுத்து 50 ரூபாயாக கொடுத்து விட்டேன்.! உணவில்லா மனிதன் குமரியில் உண்டெனில் இனியும் சுனாமி வருமா.?
இன்னொருவன் ரேஃபான் கண்ணாடி வேண்டுமா? என்றான் 100 ரூபாய் கண்ணாடியை வைத்துக் கொண்டு. ஆளைவிடப்பா என்று திரும்பினால் ஒரு பெரியவர் கையில் அறிப்போடு வந்து முத்து வேண்டுமா? என்றார் கையில் கிளிஞ்சல்களை வைத்துக்கொண்டு, அடடா! நான் மணியை பார்த்தேன் 10 மணி 20 நிமிடம் என்று காட்டியது மாதக்கோவில் அருகே தான்வகுப் பெடுக்க செல்ல வேண்டும். 5 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று நினைத்தவாறே எழுந்தேன் … அய்யா, இராசா என்று யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தால், குறிகூறிய அம்மா நின்றிருந்தார், எங்கெல்லாம் தேடுறது?.இந்தா என்று முதலில் தந்த 40 ரூபாய் போக மீதி 30 கொடுத்தார். இன்னும் பத்துரூபாய் உன்னைத் தேடியதற்கு எடுத்துக்கட்டுமா?எடுத்துக் கங்க அம்மா.! வணங்கி விடைபெற்றார்.!
நலம் பெருகட்டும் …
வாழ்க்கை கடலை கடக்க இன்னும் கொஞ்சம் அன்பு.!
இன்னும் கொஞ்சம் தூய்மை.!
இன்னும் கொஞ்சம் ஒழுக்கமும்
இன்னும் கொஞ்சம் வாய்ப்பையும்
தந்தருள் இறைவா …!
மனிதப் பிணியெல்லாம்
மறைந்து வாழ்வு அனைவருக்கும் ஆரோக்கியமாய் ஒளிரட்டும் …!
என்று பிராத்தித்தவாறே எனது பணியை நோக்கிக் கிளம்பினேன்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com
நான் ஒரு யோகா வகுப்பெடுப்பதற்காக
இப்ப ஒரு வாரமாக கன்னியாகுமரி வருகிறேன்.! காலை பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை வகுப்பு சில நாள் வகுப்புமுடிந்ததும், சிலநாள்முன்னாடியே வந்து கடலை தரிசித்துவிட்டு பிறகுவகுப் பிற்கு செல்வேன்.இன்றைக்கு அப்படித் தான் காலை எட்டு மணிக்கே கடற்கறை வந்துவிட்டேன்; எனென்றால் எட்டு மணிமுதல் ஒன்பது மணிவரை இருந்த இன்னொரு வகுப்பு இன்று இல்லை. இது சுற்றுலா பருவகாலம் என்பதால் நிறைய வண்டிகளிலும், நடந்தவாறும் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டிக் கொண்டிருந்தது … நான் எனது சைக்கை <பைக்> காந்தி மண்டபம் நோக்கி செலுத்த முனைந் தேன்; ஆனால் அங்கு ஒரு தற்காலிக தடையை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அருகே ஒரு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மட்டும் நின்றிருந்தார். நமது வண்டி போக இடமிருந்த தால் நாம் செல்ல முயன்றோம். உடனே ஆய்வாளர் நம்மை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினார்.!சைக்கை காந்தி மண்டபத்தின் அருகே நிறுத்திவிட்டு கடற்கரை நோக்கி நடந்தேன் … நிறைய தற்காலிக கடைகள் களைகட்டியிருந்தது, சட்டை, பனியன், நவீன முக்<கால்> காசட்டை, என்று எங்கும் துணிகள் பளபளவென்று மின்னலடித்தது.ஆனால் அதை வாங்க யாரும் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
கடற்கரையில் இருக்கும் ஒவ்வொரு வரும் ஆளுக்கு பத்துஜோடி எடுத்தாலும் இதெல்லாம் தீராது போல.!
நான் போனவாரம் என் மகனுக்கு
ஒரு முக்கா கால்ச்சட்டை எடுத்தேன். அடுத்த நாளே தையல் விட்டுவிட்டது.! ஆனாலும் 100 ரூபாய்க்கு அது மலிவுதான்.! இந்தக் கடற்கரையில் துணி விற்கும் பலரும் இந்தி வாலாக்களே; ஆனாலும், கொஞ்சம் கொஞ்சும் தமிழ் பேசுவார்கள்.! விலையை கால்வாசியாக குறைத்துக்கேட்டால் காசில்லா கஸ்மாலம். என்று மோனையாய் திட்டுகிறார்கள்.!
ஒன்றிரண்டு குதிரைகள் ஒரமாய் சவாரிக்காக காத்திருந்தன. மக்கள் கடலைப் பார்த்தவாறும், சில இளசுகள் கடலை போட்டவாறும் சென்று கொண்டி ருந்தனர். … என் எதிரே வந்த ஒரு கண்ணாடி வியாபாரி பாபா, கிளாஸ் வேணுமா? என்றார்; தலையை வல, இடமாக ஆட்டிக் கொண்டே வந்து ஒரு இளநீர் கடையில் இளநீர் வாங்கிக் குடித்துக்கொண்டே விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்த்தேன் எனக்கென் னவோ, திருவள்ளுவரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் வைத்திருக் கலாமோ என்று தோன்றியது. ஏனென் றால் திருவள்ளுவர்; விவேகானந்தர் மண்டபத்தின் அழகை தனது பிரமாண்ட த்தால் மறைத்து விடுகிறார். அந்தப் பகுதியில் சில வாலிபர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர் சின்னச்சின்ன குட்டி நண்டுகள் பாறை இடுக்குகளில் அங்குமிங்கும் தாவி ஒடிக்கொண்டிருந்தன , அதைப்பிடித்து தன் கையில் உள்ளச் சிறிய நெகுழிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். அவனுக்கு உதவியாக இன்னும் இரண்டுபேர் பாறை மேடெல்லாம் ஏறி அவனைத் தொடர ஒருவன் ஓரமாக நின்று , இவர்களை அழைத்துக் கொண்டிருந்தான்; அந்த நேரம் பார்த்து வந்த ஒரு சிறு அலை நண்டுப்பிடுத்துக் கொண்டிருந்தவனை தடுமாறச் செய்யவே பை நழுவி கடலில் விழுந்தது. நெகிழியில் இருந்த நாலைந்து நண்டுகளும் பையோடு கீழே விழுந்து குதித்து ஓடியது. இதை சற்றுத் தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் நண்பரும் ,இன்னும் சிலரும் பார்த்து ஊளையிட , அமைதியாய் தொப்பலாய் நனைந்த சுரங்கத்துணி கால்ச்சட்டையை உதறிக்கொண்டே அவனும் மற்ற நண்பர்களும் காரையை நோக்கி நகர்ந்தார்கள்.! நெகிழிப்பை; நண்டை விடுவித்த மகிழ்ச்சியோடு கடலில் இறுமாப்பாய் மிதந்து கொண்டிருந்தது.!
எம்மீனுக்கு எமனாகுமே?
எதுக்கு இந்தப் பிள்ளைக , நண்டைப் பிடிச்சாங்க, இப்ப ஏன் பேசாம போறாங்க?.என்று சிந்தித்தவாறே திருவள்ளுவர் சிலையை பார்த்தவாறு இருக்கும் சுற்றுச் சுவரில் அவரைப் பார்க்காமல், முக்கடலும் சந்திக்கும் இடத்தில் குளிக்கும் மக்களை பார்த்தவாறு ஒரு துண்டை விரித்து அமர்ந்தேன் …நமது காலத்தில் பஞ்சி மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பது போல் ஒரு தாயிடம் அடம்பிடித்து இரண்டு மொட்டையடித்த சிறுவர்கள் பனியனோடும் கால் சட்டையோடும்
கடலில் குதித்து கும்மாள மிட்டார்கள்.! நீரைப் பார்த்தவுடன் மனித மனமும் உடலும் எப்படித்தான் இவ்வளவு மகிச்சியடைகிறதே தெரியவில்லை, சிறுவர்கள் மட்டுமில்லை இளைஞர்கள், முதியவர்கள் கூட குழந்தையைப் போலவே உற்சாக மிகுதியில் அலையில் மிதந்து மிதந்து குதுகலித்தனர். இந்த நேரத்தில் ஆந்திரா காரத்தில் இருந்த சில நடுத்தர வயது பெண்கள் - கிராமத்து சிறுவர்கள் டவுசரை கழற்றி விட்டு ஆற்றில் குதிக்கப் போகும் வேகத்தில் உடையை அவசர அவசரமாக கழற்றிவிட்டு பாவாடையோடு கடலில் இறங்க இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் என்று
அவர்களை பல டில்லி பார்வைகள் துளைத்தெடுத்த வாறே பின்தொடர ,
இதையெல்லாம் காவல் காக்கத்தனே நாங்க இருக்கோம்னு, காவல் துறையினர் தங்கள் குடிலில் இருந்து மக்களை கவனித்த படியே இருக்க; நான் எழுந்து வேறு இடத்தில் அமரலாம் என்று எழ எத்தனித்த நேரம், ஒரு வயதான அம்மா வந்து, " குறிக்கேளு இராசா சரியாய் இருந்தா காசுகொடு இல்லைனா காசு வேண்டாம் என்றார். நாம் வேண்டாம் என்று மறுத்தும் , உன் முகத்தில் ஒரு ஒளி தெரியுது, உனக்கு நல்ல காலம் பெறக்கப் போகுது; என்றெல்லாம் துண்டிலைப் போட சரியென்று தலையை அசைத்து வைத்தேன்.
" மாடா உழைச்சே, மழையா ஊருக்கெல்லாம் உதவின, சொந்தமின்னு இருந்த தெல்லாம்
தேவைக்கு மட்டும்தான். உன் மனைவி சிலநேரம் பாலும் தேனும்
தருவாள், சிலநேரம் பத்ரகாளியா நிப்பாள். இப்ப உனக்கிருக்கிற தெளிவு முப்பது வருசத்துக்கு முந்தி இருந்திருந்தால் நீ ராஜாவா
இருந்திருப்ப. அதாவது 12 வயசுல.ஒருவேளை நமது தல தாடியப் பார்த்து வயசை கூட்டீட்டாங்க போல> இப்படி தளர்ந்து கடலை வெறிச்சிட்டு உட்காரமாட்ட.!தர்மம் தலைகாக்கும், தர்மம் பண்ணு, அல்லா துணை யிருப் பான் , ஆபத்தெல்லாம் ஓடிப்போகும்.
வெற எதுவும் கேட்கணுனா கேளு இராசா "அப்டினு சொல்லிட்டு, 20 ரூபானு சொன்னாங்க, சட்டைப்பையில் இருந்துநூறு ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தேன். சில்லறை இல்ல நாப்பது ரூவாதான் இருக்குனு அதைகொடுத் துட்டு இங்கேயே இரு, நூறு நோட்டுக்கு சில்லறை வாங்கியாறேனு நோட்டை வாங்கிட்டு போயிட்டாங்க.! அநேகமா மீதி வராதுனு தோணுச்சு; ஏன்னா, அந்தம்மா சொன்னதுல ஒன்னுமே உண்மை இல்லையே.!மனிதனுக்கான வாழ்வியல் தந்திரத்தில் இதுவும் ஒன்னுதான்.!" வாழ்க வளமுடன் " மெதுவா சூரியன் சூட ஆரம்பித்தது, துண்டை உதறி தோளில்போட்டு விட்டுஅங்கிருந்து எழுந்து பக்கத்தில் உள்ள மண்டபத்தின் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தேன்.!
நடுமண்டபத்தில் ஒரு துணியை விரித்து பத்துபேர் கொண்ட ஒரு குழிவினர் உணவருந்திக் கொண்டிருந்தனர் … புளியோதரையும் ஊறுகாயும், உணவருந்தி முடிந்த உடன் அந்த இடத்தில் ஒரு சிறுவன் சாப்பிடும் அளவுக்கு உணவு சிதறி கிடந்தது. அட.! பாவமே உங்கள் பசியைத் தீர்த்த பாவத்திற்காக எஞ்சிய பருக்கைகள் போவோர் வருவோர் காலில் மிதிப்பட்டு சாகத்தான் வேண்டுமா? என்று நான் சிந்தித்த வாறிருக்க, நாலைந்து துளி தண்ணீர் என் மேல் தெரித்தது, நிமிர்ந்து பார்த்தேன்; சாப்பிட்டவர்களில் ஒருவர் கையை கழுவிவிட்டு சென்றார். கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.இவர்களைப் போன்றவர்கள் வராவிட்டால் இந்த இடம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?
காந்தி மண்டபத்தை சுற்றியும் நிறைய குப்பைகளும் நெகுழி பைகளும், மனித கழிவுகளும் கொட்டிக் கிடக்கின்றன.!
காந்தியை கண்ட பின்னும், அவரின் தூய்மை யையும் உண்மையையும் உணராமல் இப்படி செய்கிறார்களே? ஒருவேளை அவர் இருந்தால்
அவரையே வாந்தியெடுக்க வைக்கும் படி நடக்கும் இந்த மனிதர்களை நினைத்தால் மனம் சாந்தியற்று துடிக்கிறதே மகாத்மா காந்தியே.!
என்று சிந்தித்தபடி அமர்ந்திருக்க … கடலை, கடலை, கப்பலண்டி என்றவாறு ஒருவர் கடலை விற்றபடி வந்தார்; என்ன விலை? "பத்து ரூபாய்" அட! சிறிய பத்து முழு வேர்க்கடலை உடைத்தால் மொத்தம் 20 கிராம் கூட இருக்காது. அடுத்து ஒருவர் பாசி விற்றவாறு வந்தார். வேண்டுமா? "வேண்டாம் அய்யா"
ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன்?
"வேண்டாம் எனக்கு உபயோகப் படாது"
என்று நான் கூற உடனே அவர்; ஒன்றாவது வாங்குங்கள் பசிக்கிறது என்றார்.! அவர் முகத்தை கூர்ந்து கவனித்தேன், ஆம் பலநாட்கள் நான் அனுபவித்த அதே பசியின் கொடுரம் , அந்த மனிதரின் நாடி, நரம்பெல்லாம் ஓடி ஒளிர்ந்ததை என்னால் உணர முடிந்தது … ஐந்து மாலைகளை
வாங்கிவிட்டு குறிகூறிய அம்மா கொடுத்த நாற்பது ரூபாயோடு எனது கைப்பையில் துழாவி இரண்டு ஐந்து ரூபாய் துட்டையும் எடுத்து 50 ரூபாயாக கொடுத்து விட்டேன்.! உணவில்லா மனிதன் குமரியில் உண்டெனில் இனியும் சுனாமி வருமா.?
இன்னொருவன் ரேஃபான் கண்ணாடி வேண்டுமா? என்றான் 100 ரூபாய் கண்ணாடியை வைத்துக் கொண்டு. ஆளைவிடப்பா என்று திரும்பினால் ஒரு பெரியவர் கையில் அறிப்போடு வந்து முத்து வேண்டுமா? என்றார் கையில் கிளிஞ்சல்களை வைத்துக்கொண்டு, அடடா! நான் மணியை பார்த்தேன் 10 மணி 20 நிமிடம் என்று காட்டியது மாதக்கோவில் அருகே தான்வகுப் பெடுக்க செல்ல வேண்டும். 5 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று நினைத்தவாறே எழுந்தேன் … அய்யா, இராசா என்று யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தால், குறிகூறிய அம்மா நின்றிருந்தார், எங்கெல்லாம் தேடுறது?.இந்தா என்று முதலில் தந்த 40 ரூபாய் போக மீதி 30 கொடுத்தார். இன்னும் பத்துரூபாய் உன்னைத் தேடியதற்கு எடுத்துக்கட்டுமா?எடுத்துக் கங்க அம்மா.! வணங்கி விடைபெற்றார்.!
நலம் பெருகட்டும் …
வாழ்க்கை கடலை கடக்க இன்னும் கொஞ்சம் அன்பு.!
இன்னும் கொஞ்சம் தூய்மை.!
இன்னும் கொஞ்சம் ஒழுக்கமும்
இன்னும் கொஞ்சம் வாய்ப்பையும்
தந்தருள் இறைவா …!
மனிதப் பிணியெல்லாம்
மறைந்து வாழ்வு அனைவருக்கும் ஆரோக்கியமாய் ஒளிரட்டும் …!
என்று பிராத்தித்தவாறே எனது பணியை நோக்கிக் கிளம்பினேன்.!
நலம் பெருகட்டும் …
amyogatrust.blogspot.com