Wednesday, April 27, 2016

கடல் பதிந்த தடங்கள்

முக்கடல் மட்டுமல்ல முந்நூறு மொழிக ளும், எண்ணில்லா உணர்வுகளும் சங்கமிக்கும் இடம் கன்னியா குமரி; கடற்கரை.!கொளுத்தும் வெயிலில் கூட சில்லென்ற உணர்வை தரும்  அதிசய பூமி கன்னியாகுமரி கடற்கறை.!எனது சிறுவயதில் இந்தப் பகுதியிலேயே பல மாதங்கள் படுத்து, புரண்டு, ஒடி, விளையாடியஅனுபவங்கள்  உண்டு என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று  நான் பார்த்த இந்தக் கடற்கரைஎன்னுள் புதிய அலைகளை உருவாக்கி, எனதுபால்யமதிப்பீடுகளான மணல்கோட்டையை இடித்து சுவடின்றி ஆக்கியது.!

நான் ஒரு யோகா வகுப்பெடுப்பதற்காக
இப்ப ஒரு வாரமாக கன்னியாகுமரி வருகிறேன்.! காலை பத்தரையிலிருந்து பதினொன்றரை வரை வகுப்பு  சில நாள் வகுப்புமுடிந்ததும், சிலநாள்முன்னாடியே வந்து கடலை தரிசித்துவிட்டு பிறகுவகுப் பிற்கு செல்வேன்.இன்றைக்கு அப்படித் தான் காலை எட்டு மணிக்கே கடற்கறை வந்துவிட்டேன்; எனென்றால் எட்டு மணிமுதல் ஒன்பது மணிவரை இருந்த இன்னொரு வகுப்பு இன்று இல்லை. இது  சுற்றுலா பருவகாலம் என்பதால் நிறைய வண்டிகளிலும், நடந்தவாறும் சுற்றுலா பயணிகளின் வருகை களைகட்டிக் கொண்டிருந்தது … நான் எனது  சைக்கை <பைக்> காந்தி மண்டபம் நோக்கி செலுத்த முனைந் தேன்; ஆனால் அங்கு ஒரு தற்காலிக தடையை ஏற்படுத்தி இருந்தார்கள்.
அருகே ஒரு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மட்டும் நின்றிருந்தார். நமது வண்டி போக இடமிருந்த தால் நாம் செல்ல முயன்றோம். உடனே ஆய்வாளர் நம்மை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்து அனுப்பினார்.!சைக்கை காந்தி மண்டபத்தின் அருகே நிறுத்திவிட்டு கடற்கரை நோக்கி நடந்தேன் … நிறைய தற்காலிக கடைகள் களைகட்டியிருந்தது, சட்டை, பனியன்,  நவீன முக்<கால்> காசட்டை, என்று  எங்கும் துணிகள் பளபளவென்று மின்னலடித்தது.ஆனால்  அதை வாங்க  யாரும் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
கடற்கரையில் இருக்கும் ஒவ்வொரு வரும் ஆளுக்கு பத்துஜோடி எடுத்தாலும் இதெல்லாம் தீராது போல.!
நான் போனவாரம் என் மகனுக்கு
ஒரு முக்கா கால்ச்சட்டை எடுத்தேன். அடுத்த நாளே தையல் விட்டுவிட்டது.! ஆனாலும் 100 ரூபாய்க்கு அது மலிவுதான்.! இந்தக் கடற்கரையில்  துணி விற்கும் பலரும் இந்தி வாலாக்களே; ஆனாலும், கொஞ்சம் கொஞ்சும் தமிழ் பேசுவார்கள்.!   விலையை கால்வாசியாக குறைத்துக்கேட்டால்  காசில்லா கஸ்மாலம். என்று மோனையாய் திட்டுகிறார்கள்.!

ஒன்றிரண்டு குதிரைகள் ஒரமாய் சவாரிக்காக காத்திருந்தன. மக்கள் கடலைப் பார்த்தவாறும், சில இளசுகள் கடலை போட்டவாறும் சென்று கொண்டி ருந்தனர். … என் எதிரே வந்த ஒரு கண்ணாடி வியாபாரி பாபா, கிளாஸ் வேணுமா? என்றார்; தலையை வல, இடமாக ஆட்டிக் கொண்டே வந்து ஒரு இளநீர் கடையில் இளநீர் வாங்கிக் குடித்துக்கொண்டே விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் பார்த்தேன் எனக்கென் னவோ, திருவள்ளுவரை கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் வைத்திருக் கலாமோ என்று தோன்றியது. ஏனென் றால் திருவள்ளுவர்; விவேகானந்தர் மண்டபத்தின் அழகை தனது பிரமாண்ட த்தால்  மறைத்து விடுகிறார். அந்தப் பகுதியில் சில வாலிபர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர் சின்னச்சின்ன குட்டி நண்டுகள் பாறை இடுக்குகளில்  அங்குமிங்கும் தாவி ஒடிக்கொண்டிருந்தன , அதைப்பிடித்து தன் கையில் உள்ளச் சிறிய நெகுழிப் பையில் போட்டுக் கொண்டே வந்தான் ஒருவன். அவனுக்கு உதவியாக இன்னும் இரண்டுபேர்  பாறை மேடெல்லாம் ஏறி அவனைத் தொடர  ஒருவன் ஓரமாக நின்று , இவர்களை அழைத்துக் கொண்டிருந்தான்; அந்த நேரம் பார்த்து வந்த ஒரு சிறு அலை நண்டுப்பிடுத்துக் கொண்டிருந்தவனை தடுமாறச் செய்யவே  பை நழுவி கடலில் விழுந்தது. நெகிழியில் இருந்த நாலைந்து நண்டுகளும் பையோடு கீழே விழுந்து குதித்து ஓடியது. இதை சற்றுத் தூரத்தில் இருந்துப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் நண்பரும் ,இன்னும் சிலரும் பார்த்து ஊளையிட ,  அமைதியாய் தொப்பலாய் நனைந்த சுரங்கத்துணி கால்ச்சட்டையை உதறிக்கொண்டே அவனும் மற்ற நண்பர்களும்  காரையை நோக்கி நகர்ந்தார்கள்.! நெகிழிப்பை; நண்டை விடுவித்த  மகிழ்ச்சியோடு கடலில் இறுமாப்பாய் மிதந்து கொண்டிருந்தது.!
 எம்மீனுக்கு எமனாகுமே?

எதுக்கு இந்தப் பிள்ளைக , நண்டைப் பிடிச்சாங்க, இப்ப ஏன் பேசாம போறாங்க?.என்று சிந்தித்தவாறே திருவள்ளுவர் சிலையை பார்த்தவாறு இருக்கும் சுற்றுச் சுவரில் அவரைப் பார்க்காமல், முக்கடலும் சந்திக்கும் இடத்தில்  குளிக்கும் மக்களை பார்த்தவாறு ஒரு துண்டை விரித்து அமர்ந்தேன் …நமது காலத்தில் பஞ்சி மிட்டாய் கேட்டு அடம்பிடிப்பது போல் ஒரு தாயிடம் அடம்பிடித்து இரண்டு மொட்டையடித்த சிறுவர்கள் பனியனோடும் கால் சட்டையோடும்
கடலில் குதித்து கும்மாள மிட்டார்கள்.! நீரைப் பார்த்தவுடன் மனித மனமும் உடலும் எப்படித்தான் இவ்வளவு மகிச்சியடைகிறதே தெரியவில்லை, சிறுவர்கள் மட்டுமில்லை இளைஞர்கள், முதியவர்கள் கூட குழந்தையைப் போலவே  உற்சாக மிகுதியில் அலையில் மிதந்து மிதந்து குதுகலித்தனர். இந்த நேரத்தில் ஆந்திரா காரத்தில் இருந்த சில நடுத்தர வயது பெண்கள் - கிராமத்து சிறுவர்கள் டவுசரை கழற்றி விட்டு ஆற்றில் குதிக்கப் போகும் வேகத்தில்  உடையை அவசர அவசரமாக கழற்றிவிட்டு பாவாடையோடு கடலில்  இறங்க இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் என்று
அவர்களை  பல டில்லி பார்வைகள் துளைத்தெடுத்த வாறே பின்தொடர ,
இதையெல்லாம்  காவல் காக்கத்தனே நாங்க இருக்கோம்னு, காவல் துறையினர் தங்கள் குடிலில் இருந்து மக்களை கவனித்த படியே  இருக்க; நான் எழுந்து வேறு இடத்தில் அமரலாம் என்று எழ எத்தனித்த நேரம், ஒரு வயதான அம்மா வந்து, " குறிக்கேளு  இராசா சரியாய் இருந்தா காசுகொடு இல்லைனா காசு வேண்டாம் என்றார். நாம் வேண்டாம் என்று மறுத்தும் , உன் முகத்தில் ஒரு ஒளி தெரியுது, உனக்கு நல்ல காலம் பெறக்கப் போகுது; என்றெல்லாம் துண்டிலைப் போட சரியென்று தலையை அசைத்து வைத்தேன்.

" மாடா உழைச்சே, மழையா ஊருக்கெல்லாம் உதவின, சொந்தமின்னு இருந்த தெல்லாம்
தேவைக்கு மட்டும்தான். உன் மனைவி சிலநேரம் பாலும் தேனும்
தருவாள், சிலநேரம் பத்ரகாளியா நிப்பாள். இப்ப உனக்கிருக்கிற தெளிவு முப்பது வருசத்துக்கு முந்தி இருந்திருந்தால் நீ ராஜாவா
 இருந்திருப்ப.  அதாவது 12 வயசுல.ஒருவேளை நமது தல தாடியப் பார்த்து வயசை கூட்டீட்டாங்க போல> இப்படி தளர்ந்து கடலை வெறிச்சிட்டு உட்காரமாட்ட.!தர்மம் தலைகாக்கும், தர்மம் பண்ணு, அல்லா துணை யிருப் பான் , ஆபத்தெல்லாம் ஓடிப்போகும்.
வெற எதுவும் கேட்கணுனா கேளு இராசா "அப்டினு சொல்லிட்டு, 20 ரூபானு சொன்னாங்க, சட்டைப்பையில் இருந்துநூறு ரூபா நோட்டை எடுத்துக் கொடுத்தேன். சில்லறை இல்ல நாப்பது ரூவாதான் இருக்குனு அதைகொடுத் துட்டு இங்கேயே இரு, நூறு நோட்டுக்கு சில்லறை வாங்கியாறேனு நோட்டை வாங்கிட்டு போயிட்டாங்க.! அநேகமா மீதி வராதுனு தோணுச்சு; ஏன்னா, அந்தம்மா சொன்னதுல ஒன்னுமே உண்மை இல்லையே.!மனிதனுக்கான வாழ்வியல் தந்திரத்தில் இதுவும் ஒன்னுதான்.!" வாழ்க வளமுடன் " மெதுவா சூரியன் சூட ஆரம்பித்தது, துண்டை உதறி தோளில்போட்டு விட்டுஅங்கிருந்து எழுந்து பக்கத்தில் உள்ள மண்டபத்தின் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்தேன்.!

நடுமண்டபத்தில் ஒரு துணியை விரித்து பத்துபேர் கொண்ட ஒரு குழிவினர் உணவருந்திக் கொண்டிருந்தனர் … புளியோதரையும் ஊறுகாயும், உணவருந்தி முடிந்த உடன்  அந்த இடத்தில் ஒரு சிறுவன் சாப்பிடும் அளவுக்கு உணவு சிதறி கிடந்தது. அட.! பாவமே உங்கள் பசியைத் தீர்த்த பாவத்திற்காக எஞ்சிய பருக்கைகள் போவோர் வருவோர் காலில் மிதிப்பட்டு சாகத்தான் வேண்டுமா? என்று நான் சிந்தித்த வாறிருக்க, நாலைந்து துளி தண்ணீர் என் மேல் தெரித்தது,  நிமிர்ந்து பார்த்தேன்; சாப்பிட்டவர்களில் ஒருவர் கையை கழுவிவிட்டு சென்றார். கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து கொண்டேன்.இவர்களைப் போன்றவர்கள்  வராவிட்டால் இந்த இடம் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ?

காந்தி மண்டபத்தை சுற்றியும் நிறைய குப்பைகளும் நெகுழி பைகளும், மனித கழிவுகளும் கொட்டிக் கிடக்கின்றன.!
காந்தியை கண்ட பின்னும், அவரின் தூய்மை யையும் உண்மையையும் உணராமல் இப்படி செய்கிறார்களே? ஒருவேளை அவர் இருந்தால்
அவரையே வாந்தியெடுக்க வைக்கும் படி நடக்கும் இந்த மனிதர்களை நினைத்தால் மனம் சாந்தியற்று துடிக்கிறதே மகாத்மா  காந்தியே.!
என்று சிந்தித்தபடி  அமர்ந்திருக்க … கடலை,  கடலை, கப்பலண்டி என்றவாறு ஒருவர் கடலை விற்றபடி வந்தார்; என்ன  விலை? "பத்து ரூபாய்" அட! சிறிய பத்து முழு வேர்க்கடலை உடைத்தால் மொத்தம் 20 கிராம் கூட இருக்காது. அடுத்து ஒருவர் பாசி விற்றவாறு வந்தார்.  வேண்டுமா? "வேண்டாம் அய்யா"

ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன்?
"வேண்டாம் எனக்கு உபயோகப் படாது"
என்று நான் கூற உடனே அவர்; ஒன்றாவது வாங்குங்கள் பசிக்கிறது  என்றார்.! அவர் முகத்தை கூர்ந்து கவனித்தேன், ஆம் பலநாட்கள் நான் அனுபவித்த அதே பசியின் கொடுரம் ,  அந்த மனிதரின் நாடி, நரம்பெல்லாம் ஓடி ஒளிர்ந்ததை என்னால் உணர முடிந்தது … ஐந்து மாலைகளை
வாங்கிவிட்டு குறிகூறிய அம்மா கொடுத்த நாற்பது ரூபாயோடு எனது கைப்பையில் துழாவி இரண்டு ஐந்து ரூபாய் துட்டையும் எடுத்து 50 ரூபாயாக கொடுத்து விட்டேன்.! உணவில்லா மனிதன் குமரியில் உண்டெனில் இனியும் சுனாமி வருமா.?

இன்னொருவன் ரேஃபான் கண்ணாடி வேண்டுமா? என்றான் 100 ரூபாய் கண்ணாடியை வைத்துக் கொண்டு. ஆளைவிடப்பா என்று திரும்பினால் ஒரு பெரியவர் கையில் அறிப்போடு  வந்து முத்து வேண்டுமா? என்றார் கையில் கிளிஞ்சல்களை வைத்துக்கொண்டு, அடடா!  நான் மணியை பார்த்தேன் 10 மணி 20  நிமிடம் என்று காட்டியது மாதக்கோவில் அருகே தான்வகுப் பெடுக்க செல்ல வேண்டும்.  5 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று நினைத்தவாறே எழுந்தேன் … அய்யா, இராசா என்று யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தால், குறிகூறிய அம்மா நின்றிருந்தார், எங்கெல்லாம் தேடுறது?.இந்தா என்று முதலில் தந்த 40 ரூபாய் போக மீதி 30 கொடுத்தார். இன்னும் பத்துரூபாய் உன்னைத் தேடியதற்கு எடுத்துக்கட்டுமா?எடுத்துக் கங்க அம்மா.! வணங்கி விடைபெற்றார்.!
நலம் பெருகட்டும் …

வாழ்க்கை கடலை கடக்க இன்னும் கொஞ்சம் அன்பு.!

இன்னும் கொஞ்சம் தூய்மை.!
இன்னும் கொஞ்சம் ஒழுக்கமும்
இன்னும் கொஞ்சம் வாய்ப்பையும்
தந்தருள் இறைவா …!
மனிதப் பிணியெல்லாம்
மறைந்து வாழ்வு அனைவருக்கும் ஆரோக்கியமாய் ஒளிரட்டும் …!
என்று பிராத்தித்தவாறே எனது பணியை நோக்கிக் கிளம்பினேன்.!

நலம் பெருகட்டும்  …

amyogatrust.blogspot.com

இயற்கை வழியில் கைகால் வீக்கத்தை சரி செய்யுங்கள்.!

அரை லிட்டர்  வேப்பெண்ணையை சூடாக்கி அதில் பத்து நொச்சி இலை களை பிச்சுப்போட்டு இலை வதங்கி யதும் இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் எண்ணையையை எடுத்து வீக்கம் உள்ள பகுதியில் போட்டு மேலிருந்து கீழாக தடவிவிட்டு,  அரைமணி நேரம் இளம் வெயிலில் அமர்ந்திருந்தால் கைகால் வீக்கம் குணமாகும்!

அடிக்கடி கால் வீங்குபவர்கள் உட்காரும் போது காலை தொங்கப் போடாமல் காலை  இடுப்பளவு உயரத்தில் வைத்து உட்கார வேண்டும். அதோடு படுக்கும் போது காலிற்கும் ஒரு தலையணை வைத்துக் கொள்ளலாம்!

அதிக வீக்கமும் வலியும் இருப்பவர்கள் நொச்சி எண்ணைய் சிகிச்சைக்குப் பின, கொஞ்சம் சுடுநீரில் உப்புப் போட்டு ஒத் தடம் கொடுக்கலாம்! அதுபோலவே எண்ணைய் போட்டபிறகு அதன் மேல் வெற்றிலையை வாட்டி வரிசையாக  வைத்து வீக்கம் உள்ள இடத்தை சுற்றி கட்டி இரவில் தூங்கி விட்டால் ஒரிரு நாட்களில் வீக்கம் முற்றிலும் மாறி விடும்!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Monday, April 25, 2016

வாத எண்ணெய் தயாரிப்பு முறை

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும். இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாதுஅனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற உன்னத நோக்கில்இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை வெளிப் படுத்தி உள்ளோம்.

எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும் வாத எண்ணெய்.

1) எண்ணெய்கள்

நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி

2)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார்

3)மருந்துப் பொருட்கள்
சுக்கு,மிளகு,திப்பிலி,பூண்டு,ஓமம்
பெருங்காயம்,கிராம்பு,வசம்பு,சதகுப்பை

4)மருந்து சாப்பிட, நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை

அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்


இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின், நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்.நன்குகொதிக்க விடவும். நுரை அடங்கி வரும்
நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்இந்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்.

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை:

உள் மருந்தாக நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி குடிக்கும்அளவுக்குஇளஞ்சூட்டில் இருக்கும்போது அந்தப் பாலுடன்
அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து, உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்துகாலை மாலை என தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும். வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்துமறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வரஎண்பதுவகைவாதங்களும்அனைது சூலைநோய்களும்மருத்துவர்களால்கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்.

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம், வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்.
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்!

முகாம்

ஒவ்வெருவரும் காலை எழுந்தது முதல் இரவு தூங்குவதற்குள்
பல்வேறு இரசாயண உணவுகளை உண்டு விடுகிறார்கள். பல இரசாயண பொருட்களை பயன்படுத்தி விடுகிறார்கள். இதற்கு இயற்கை விவசாயிகளும்
இயற்கை ஆர்வலர்களும் கூட விதிவிலக்கில்லை.! ஆனால், நமது இயற்கை மருத்துவ முகாமில் எந்த விதமான இரசாயண உணவு மற்றும் பொருட்களையும் யாரும் பயன்படுத்த முடியாதபடி  கவனமாக இருக்கிறோம்.! பல்பொடி, குளியல் பொடி, மூலிகை மருந்துகளை நாமே  நேரடியாக இயற்கை மூலிகைகளை சேகரித்து தயாரித்துள்ளோம்.!  பழம், காய்கறி, தானியங்களை ஆர்கானிக் கடையில் கவனமாக  தேர்ந்தெடுத்துள்ளோம்.! அதோடு இம்முகாமில் யோகா, தியானம், உடலியக்க நுட்பங்களையும் கற்பிக்கிறோம்.! இந்த மூன்று நாள் முகாமில் கலந்து கொள்ளும் ஒவ்வெருவரின் உடலிலும் இயற்கையின் ஆற்றல் மட்டுமே  செயல்படப் போகிறது, அது உடலில் இன்னொரு பரிமாணத்தை நமக்கு உணர்த்த காத்திருக்கிறது.!

 நாள்: ஏப் 29,30, மே 1

ஏப் 27  க்கு முன் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

சர் கரை நோய்

இயற்கை வழியில் நீரழிவை குணப்படுத்துங்கள்

தினமும் 30 முதல் 1 மணி நேரம் உடற் பயிற்சி ,யோகா, ஒரு வேளை இயற் கையான சமைக்காத உணவு தினமும் இரண்டு சிறுகுறிஞ்சான் மாத்திரையை எடுத்துக் கொண்டால் போதும் ஒரு வாரத்தில் நீரழிவு கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

15 நாட்களில் சக்கரைக்கான அலோபதி மாத்திரை இன்சுலினை நிறுத்தி விட்டு இயற்கை வழியில் ஆரோக்கியமாக வாழலாம்.!


இது நமது பயிற்சியகத்தில் நிரூபிக்கப் பட்ட உண்மை! அனைவருக்கும் பயன ளிக்கும் அற்புத வழிமுறை.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:96293689

Sunday, April 24, 2016

பாட்டில் பானம்

அதிக தீமை தரும் பாட்டில் பானங்கள்.IMA (Indian Medical Association)  அறிவிப்பு

1     Thums up      7.2%

2     Coke              9.4%    

3     7 up              12.5%    

4     Mirinda         20.7%  

5     Pepsi            10.9%    

6     Fanta              29.1%    

7.    Sprite.            5.3%

8.    Frooti.           24.5%

9     Maza.            19.3%

இதில் மனித கல்லீரலுக்கு ஒவ்வாத பல நச்சு இரசாயணங்கள் இருப்பதால் தவிர்ப்பவர்கள் ஆரோக்கியம் பெறுவார்கள்.!

நலம் பெருகட்டும் …

துளசி

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி :
★****★****★****★****★

நீங்கள் மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்கள் !!!

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இருப்பினும் ஓசோன் படலத்தைப் பாதுகாக்க எளிமையாக வீடுகள்தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம்.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும்
காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை அரச மரம், மூங்கில் மற்றும் துளசிச் செடி.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.
துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க
72 கோடி அரச மரங்கள் (அல்லது)

720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது)

7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

🌿pls share all group's.🌿

இணையப்பகிர்வு

Saturday, April 23, 2016

வாழ்வியல் முகாம் நிரல்

இயற்கை  வாழ்வியல் சிகிச்சை
                      நிகழ்வுகள்

காலை 0600 to 0630

இயற்கை வழியில் காலை கடனை எளி தாக முடிப்பதற்கான பயிற்சி.

6.30 7.00 இயற்கை வழியில் பித்தம், கபத்தை வெளியேற்றும் பயிற்சி

7 .10 காலை இயற்கை பானம்

7.15 to  8.30 உடற்பயிற்சி, யோகா
பிரா ணாப் பயிற்சி

8.30 8.40 இயற்கை பானம்

8.40 - 9.30 மண்குளியல், இயற்கை முறை

குளியல்

9.45 இயற்கை காலை உணவு

10 - 1.00 உடலியல் செயல்பாடு, பிராணசிகிட்சை, இயற்கை பானம், தியானம்

1.00 மணி இயற்கை உணவு

1 pm - 4 pm ஓய்வு

4 pm - 5 இயற்கை சிற்றுண்டி
இயற்கை வழியில் நோய்களை குணப்படுத்தும் நுட்பங்கள், மூலிகை மருந்துகளை பயன்படுத்தும் வழி முறை கள்.

5 pm - 7 pm யோகா,பிராணாயாமம்
குண்டலினி, வர்மபுள்ளிகளின் இயக்கம் பயிற்சி.!

7.00 pm   இயற்கை இரவு உணவு. கேள்வி பதில்கள்
அனுபவப் பகிர்வுகள்

29  ஆம்தேதி

மண்குளியல்,  30 எண்ணைய் மசாஜ் குளியல், மே 1 வாழையிலை குளியல்
இதுபோலவே உணவிலும் சிறுமாற்றம் இருக்கும்.!

ஓய்வு நேரத்தில் கணிணி, கைப்பேசி பயன்படுத்திக் கொள்ளலாம்.!

வெளி உணவு, மருந்து, மாத்திரைகளுக்கு அனுமதி இல்லை.!
அருகில் இருப்பவர்கள் வீட்டிற்கு சென்று வந்தும் இயற்கை முகாமில் கலந்து கொள்ளலாம்.!

மூன்று நாட்கள் தங்கும் வசதியுடன்
நன்கொடை  RS.2950/-

வெளியில் தங்குபவர்களுக்கு  நன்கொடை RS 2150/-

ஒருநாள் மட்டும் சிகிச்சையில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கு நன்கொடை 1250/-

இயற்கையோடு இயைந்து வாழ அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.!

முன்பதிவிற்கு: 9629368389
amyogatrust.blogspot.com

இயற்கை உணவுத் திட்டம்

காலை 7 முதல் 9 மணிக்குள்

முதல் நாள்

இரண்டு நாட்டு வாழைப்பழம்
ஒரு இளநீர்
50 கிராம் வேர்க்கடலை

இரண்டாம் நாள்

அரைமூடி தேங்காய்.
50 கிராம் அவல்.
25 கிராம் கருப்பட்டி.

மூன்றாம் நாள்

கோதுமை புட்டு,
கருப்பட்டி,
இரண்டு நாட்டு வாழைப்பழம்

நான்காம் நாள்

கொய்யா 4 துண்டு
ஆப்பிள் 2 துண்டு
பப்பாளி 4 துண்டு
ஆரஞ்ச் 5 துண்டு
மாதுளை பாதியளவு
பாதாம் பருப்பு 10 எண்ணிக்கை.

ஐந்தாம் நாள்

முளைகட்டிய கொண்டைக் கடலை 100 gr
பேரிச்சம் பழம் 50 கிராம்
வெள்ளரிக்காய் ஒன்று

ஆறாம் நாள்

அத்திப்பழம் 3
ஆரஞ்ச் 3
முந்திரிப் பருப்பு 10 எண்ணிக்கை

ஏழாம் நாள்

முளைகட்டிய சிறுபயறு 50 கிராம்
உலர் திராட்சை 50 கிராம்
மரவள்ளிக்கிழங்கு 100 கிராம்

மேற்கூறிய உணவுகளை வாரத்தில் உள்ள ஏழுநாட்களும் ஏழு விதமான காலை உணவாக மாற்றிமாற்றி உண்ணலாம்

இவ்வரிசையை மாற்றியோ அல்லது தேவைக்கு ஏற்ப, கூட்டியோ குறைத்தோ உண்ணலாம். இது தவிர,  கம்பு, வரகு சோளம்,கைக்குத்தல் அரிசி போன்றவற்றை இடித்து வைத்து தேங்காய், கருப்பட்டிப் போட்டு பிசைந்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்!

மதியம் 1 முதல் 2 மணிக்குள்

கேரட் 50 கிராம்
நெல்லிக்காய் 50 கிராம்
பீட்ரூட் 50 கிராம்
பாகற்காய் 50 கிராம்
சக்கரை வள்ளிக் கிழங்கு  50 கிராம்
உருளைக் கிழங்கு 50 கிராம்
வெள்ளரி 100 கிராம்
ஊட்டி மிளகு 1
எலுமிச்சை 1
மிளகுத்தூள் சிறிது இந்துப்பு சிறிது. மேற்கண்ட காய்கறிகளில் நமக்கு பிடித்த  காய்கறிகளில் மூன்று காய்கறிகளை மட்டும் தினமும் வெட்டி துண்டுத்துண்டாக நறுக்கிப் போட்டு அதில் எலுமிச்சையை பிழிந்து மிளகு உப்புத்தூவி  கலந்து உண்ணலாம்.!

மாலை

பட்டாணி,சிறுபயறு,கொண்டைக்கடலை,
கொள்ளு, பெரும்பயறு , வேர்க்கடலை போன்ற தானியங்கள் அல்லது பாதாம் பருப்பு முந்திரி , உலர் திராட்சை போன்றவற்றுடன் வாழைத்தண்டு ஜூஸ் பப்பாளி ஜூஸ்  எலுமிச்சை, கருப்பட்டி கலந்த பானகம் போன்ற ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.!

இரவு

7 முதல் 8 மணிக்குள்

மாம்பழம் 2 துண்டு
அன்னாசி 2 துண்டு
சப்போட்டா 1
இதோடு சாத்துக்குடி ஆப்பிள், மாதுளை, நெல்லிக்காய், பாகற்காய் போன்ற ஏதேனும் ஒரு ஜூஸ் பனங்கற்கண்டு/ தேன் கலந்து அருந்தலாம்.!

இந்தக் குறிப்பில் உள்ள அனைத்துவகை பழம் காய்கறிகளை தவிர அந்தந்த சீசனில் கிடைக்கும் தர்பூஸ், நொங்கு,நாவல், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.!
பொதுவாக காலையில் தேங்காயும் பழமும் மதியம் காய்கறிகளும் தானியமும் இரவில் பழமும் ஜூஸ் வகைகளும் சாப்பிடுவது நல்லது.!
தினமும் ஒரே வகை பழம் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.!

மேற்கண்ட உணவுமுறையை முடிந்தவரை சரியாக பின்பற்றினால் உடல் பருமன்,நீரழிவு,சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மலச்சிக்கல், இரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற எந்த வகையான கோளாறுகளாய் இருந்தாலும் மூன்றுநாளில் கட்டுப்பட்டு 1 முதல் ஆறு மாதத்தில் குணமடையும்.!

(முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளையும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்களையும் தவிர)

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Friday, April 22, 2016

முகாமிற்கு வருபவர்களின் கவனத்திற்கு...

இயற்கை முகாமிற்கு வருபவர்கள் இதை மட்டும் கொண்டுவந்தால் போதுமானது

ஒரு டவ்வல், ஒரு பெட்சீட், இரண்டு தளர்வான மாற்று உடைகள், தேவையான பணம்.!

வியாபாரத் தொடர்பை விட முடியாதவர்கள் லேப்டப், கைப்பேசி போன்றவற்றை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பயன்படுத்த அனுமதி உண்டு.!

ஆங்கில மருந்துகளுக்கும்
அனுமதி இல்லை.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile,wa 9629368389

அரிய வாய்ப்பு

நோய்களை குணப்படுத்தும் 30 முக்கிய யோகாசனம், சூரியநமஸ்காரம், உயிர் சக்தியை அதிகரிக்கும் 5 விதமான பிரா ணப்பயிற்சி இரண்டு முக்கியமான தியானப் பயிற்சி சர்க்கரை, ஆஸ்துமா, கொழுப்பு, சிறுநீரக செயலிழப்பு, ஆரம்ப நிலை புற்றுநோய் போன்ற 50 வியாதி களுக்கு நிருபிக்கப்பட்ட இயற்கைத் தீர்வு!

உடலியல் பற்றிய எளிய விளக்கம் இயற்கை மருத்துவக் கோட்பாடு
வாழையிலைக்குளியல் மண்குளியல்
எண்ணைய் மசாஜ் குளியல்ஆரோக் கியமான சமைக்காத உணவுமூலிகை மருந்துகள், எழுவது முதல் தூங்குவது வரை முற்றிலும் முழு இயற்கை வாழ்வு
கேள்வி-பதில்கள்,இன்சுலின், ஆழ்நிலை யோகா வீடியோ காட்சி, இயற்கை வழியில் பிணிகளை வென்றவர்களின் பேட்டி  தீங்கிழைக்கும் இரசாயண
உணவுப் பட்டியல், யோகா, இயற்கை வாழ்வியல் பயிற்சி புத்தகம் இயற்கை யான சூழலில் தங்கும் வசதி போன்ற இத்தனை அம்சங்களையும்   பல்வேறு நோயாளிகளை குணப்படுத்தி புகழ் பெற்ற  யோகா, இயற்கை வாழ்வியல் நிபுணர் ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் அவர்களிடம் நேரடியாக உடனிருந்து கற்றுக் கொள்ளும் அற்புதமான வாய்ப்பு!

உண்மையில் உலகில் எங்கு சென்றாலும் நமது வாழ்வியல் பயிற்சியை   இதே தரத்தில் 3000 ரூபாயில் பெறவே முடியாது.!
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
ஒருங்கிணைந்த இந்தப் பயிற்சி வகுப்பு நம்மால் நடத்தப்படுகிறது.!இயற்கை யின் ஆசிபெற்றவர்கள் மட்டும் கலந்து கொள்ளுங்கள்!

நாள்:ஏப் 29,30 & மே 1 - 2016.
வெள்ளி,சனி & ஞாயிறு

நேரம்:6 am to 7pm

இடம்:அன்னை ஆஸ்ரமம்,
            சுப்ரமணியபுரம்
            ஆரல்வாய்மொழி

தொலைபேசி: 9629369368



ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.!

தீய பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்....

இயற்கை வழியில் உங்கள் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுங்கள்

தீய பழக்கம் என்பது தன் உடல், மன ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத 
நாட்டின் சட்டத்திட்டம் , அறக்கோட் பாட்டிற்கு  எதிரான செயல்களே தீயப்பழக்கம் எனப்படும். ஒருவன் உண்மையில் மனம் விரும்பி  தீய பழக்கங்களை விடவேண்டும், தன்னால் விட முடியும் என்று எண்ணினால் தீய பழக்கத்தை விட முடியும்! அவ்வாறு தன்னால் தீய பழக்கத்தை அவ்வளவு எளிதாக விடமுடியாது என்று எண்ணி னால் அவன் வாழ்நாள் முழுவதும் அவனால் அதிலிருந்து விடுபட முடியாது! 

ஏனெனில்   எப்பொழுது ஒருவன் தன்னால் நன்மை தரும் நல்ல செயல் களைச்  செய்ய முடியாது என்று முடி வெடுக்கிறானோ அந்த வினாடியே அவன் தீமைகளுக்கு அடி பணிந்து விட் டான். தீமைக்கு உண்மையில் இல்லாத கிரீடத்தை அவன் அதற்கு சூட்டிவிட்டான். கண்டிப்பாக அவன் எந்தக் கடவுளை வணங்குபவனாய் இருந்தாலும் அந்த கடவுளையே செருப்பால் அடித்து விட்டான் என்று தான் பொருள்.! 

கடவுள் என்றாலே மனிதன் நன்மையின் பக்கம் நிலை நிற்பதற்காக  ஏற்ப்படுத்தப் பட்டவை தான்!  

நன்மை தரும் செயல்களின் பக்கம்,நல்ல பழக்க வழக்கங்களின்  பக்கம் என்னால் நின்று உயர்வடைய முடியாது.! டாஸ்மாக் அதிகமாக இருக்கிறது குடிப்பேன், வியா பாரத்தில் கொள்ளை லாபம் வருகிறது கொள்ளையடிப்பேன், லஞ்சம் தர தயாராக பலர் இருக்கிறார்கள் லஞ்சம் வாங்குவேன், கல்விக்காக , தங்கள் வருமானத்திற்காக எத்தகைய இழிவையும் தாங்கிக் கொள்ள இந்த சமுதாயம் தயாராக இருக்கிறது நானும் பிறரை இழிவுபடுத்துவேன்.!  என்று கூறு பவன் உண்மையில் தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும்  இல்லாதவன்.! அந்தந்த நேரத்திற்கு சூழலிற்கு தக்கபடி வாழ்பவன் இயற்கையின் எஜமானும் இல்லை கடவுளின் மகனும் இல்லை மாறாக இவனே தீமையின் எஜமான் சாத்தானின் மகன்! 

துரதிஷ்டவசமாக இன்றைக்கு ஆன்மிக வாதிகள் என்று அறியப்படும் மத சாமி யார்கள் பலரும் தீமையை சகித்துக் கொண்டு வாழ், அல்லது சாமர்த்தியமாக அதையே உனக்கு நன்மை செய்யும் விசயமாக மாற்றிக் கொண்டு வாழு என்று உபதேசம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.! உண்மையில் இந்த ஆன்மீக வாதிகளே தீமைக்கு அடிமையாகி விட்டார்கள். இவர்களே உண்மையான கடவுளை மறுக்கி றார்கள்! கடவுள் தன்மைக்கு எதிராக மக்களை திசைதிருப்பி விட்டுவிட்டனர்.! 

புத்தனோ, இயேசுவோ, முகமதுவோ செய்யாத ரமணரோ, ரமானுஜரோ சொல்லத் துணியாத  தீமையை சகித்துக் கொண்டு நீங்களும் அதோடு இயைந்து வாழுங்கள் என்ற தத்துவத்தை நவீன சாமியர்கள் கூறுவதை கேளுங்கள். உண்மையில் இவர்கள்  கடவுளை உணர்ந்தவர்கள் அல்ல அரசியல்வாதிகளின் ஏஜன்டுகள் என்பதை  புரிந்துகொள்வீர்கள்.! 
இந்த ஏஜன்டுகளின் துணையோடு தான் நமது கனிமவளம் முதல் உடல் நலம் வரை அத்தனையும் கொள்ளையடிக்கப் படுகிறது.! 

எங்கெல்லாம் தப்புகளை சகித்துக் கொண்டு செல்ல கூறப்படுகிறதோ அங்கெல்லாம் நன்மையின் பால் உள்ள நம்பிக்கையை கைவிட்டுவிடு என்ற ஆலோசனை கூறப்படுகிறது.!
ஆதலால்  உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்  கடவுளான உண்மையின் மீது நம்பிக்கை கொள்ளு ங்கள் தொடர்ந்து செயல்படுங்கள் உங் கள் தீய பழக்கங்கள் அத்தனையை விட்டு நீங்களும்  தீய அரசியல் சக்திகளி டமிருந்து நமது தேசமும் கடவுளால் கண்டிப்பாக காப்பாற்றப்படும்.!


நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Thursday, April 21, 2016

கொலஸ்டரால்

இயற்கை வழியில் கொழுப்பை குணப்படுத்துங்கள்

கொழுப்பு என்பது உடலில் உணவின் மூலம் சேமிக்கப்பட்ட  அடர்த்தியான எண்ணைய்  போன்ற ஒரு  ஊட்டச்சத்து பொருள்.! இதில்HDL [ High Density  Lipo Protein ] LDL <Low Density Lipo Protein> என்று இரண்டு வகைகள் உள்ளது.! முதலில் சொன்னது உடலால் நன்றாக சேமிக்கப்பட்டதால் நல்ல கொழுப்புHDL அப்படி இல்லையெனில் LDL அவ்வளவு தான்.! மனிதனின் உடலுக்கு இன்றியமையாத ஒரு உணவுப் பொருள் கொழுப்பு ஒருவருக்கு கொழுப்பு குறைவாக இருந்தாலும் நோய்தான் மூட்டுவலி, தோல் நோய்கள் , உடல்வலி போன்ற பலகோளாறுகள் கொழுப்பு குறைந்தால் வரும்.! கொழுப்பு கூடினால் இரத்த அழுத்தம், மாரடைப்பு, கொழுப்பு கட்டி, அதிக படபடப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பல்வேறு வியாதிகள் வரும்.!
உண்மையில் கொழுப்பால் எந்த நோயும் ஏற்படுவதில்லை.! உடலில் கொழுப்பு கிரகிக்கப்படும் விதத்தில் ஏற்படும் மாற்றத்தினால் தான் வியாதிகள் ஏற்படுகிறது.!  ஒருவர் எந்த நிலையிலான   கொழுப்பு குறைபாடு உள்ளவராக இருந்தாலும் தினமும் காலையில் கால்முறி முதல் அரை முறி தேங்காய்  இரண்டு நாட்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.! ஆனால், அப்படி சாப்பிடும் போது மெதுவாக தேங்காய் வாழைப்பழத்தை மென்று உமிழ்நீரோடு சேர்த்து உண்ண வேண்டும்.! இப்படி செய்வது கொழுப்பை நிச்சயம் குறைக்கும்.! கொழுப்பு குறைவாக இருப்பவர்களுக்கு அதிகமாகும்.!

அதுபோலவே தினமும் 30 முதல் ஒருமணி நேரம் உடற்பயிற்சி, யோகாசனம் தியானம் செய்ய வேண்டும்.! அதோடு பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், மிளகு,தேன், எலுமிச்சை, பப்பாளி போன்ற வற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். மேலும் கைக்குத்தல் அரிசி, மேல் தோல்நீக்காத தானியங்கள். சுத்திகரிக்காத செக்கு எண்ணைய் இயற்கையில் விளைந்த பழம், காய்கறி கீரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டுபாக்கெட் பால், தயிர், நெய், கலப்பின பசுவின் பொருட்கள். ஹார்லிக்ஸ், சீனி, பூஸ்ட், டீ காப்பி, அசைவ உணவுகள், பெருங்காயம் , கலர்பொடி, இரசாயண கலவைகளை முற்றிலும் ஒதுக்கி விட்டு தினமும் ஐந்து துளசி இலையை இரவில் கால் டம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று அந்த நீரை யும் குடித்து வந்தால் போதும் எத்தகைய கொழுப்பு வியாதியும் ஓடிவிடும்.! இந்த முறைகளை  பலரும் பயன்படுத்தி கொழுப்பு கட்டி , மாரடைப்பு போன்ற பல வியாதிகளை இயற்கை வழியில் குணப்படுத்தி உள்ளனர்.! நீங்களும் முயலுங்கள்.!
நலம் பெருகட்டும்…

amyogatrust.blogspot.com
mobile:9629368389

எந்த எண்ணெய் 'நல்ல்' எண்ணெய்?

உங்கள் உயிரை <ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்கா வேண்டாம்.!

நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா, சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெயும் கூட. ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக் கிறார்கள் தெரியுமா?

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெ யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட் ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.
இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்த வேலை கள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான் காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில்,   முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நோய்கள்,  மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது ரீஃபைண்ட் ஆயில்.

யோசிச்சு பாருங்கள்  இவ்வளவு தீமையான ஒரு பொருளை நாம் அன் றாடம் உணவில் பயன்படுத்தி, நம் ஆரோக்கியத்தை நாமே விலை கொடுத்து பாழ்படுத்தி கொள்கிறோம்.

அப்போ என்ன எண்ணெய் தான் வாங்குறது?

ரீபைண்ட் செய்யாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கி பயன் படுத்தலாம். இதைத் தானே நம்ம தாத்தா பாட்டி பயன்படுத்தினார்கள்.

ஒரு வேளை, நீங்க இப்படி கேட்டா : அய்யய்யோ அதுல நிறைய கொழுப்பு இருக்குனு சொல்லு வாங்களே! அது மட்டும் இல்லாம கொழுப்பு உள்ள எண்ணெய் பயன் படுத்தினா ஹார்ட் அட்டேக், B.P. வரும்,ரொம்ப வெய்ட் போடும்னு சொல்லு வாங்களே!

நான் : சரிங்க ரீபைண்ட் ஆயில் தானே இப்போ பெரும்பாலும் பயன்படுத்து கிறோம். யோசிச்சு பாருங்க உங்க ஊர்ல ஹார்ட் வர்றவங்களோட எண்ணிக்கை குறைஞ்சு இருக்கா இல்ல கூடி இருக்கா? என்ன கொடுமைனா முன்னயாவது 60, 70 வயசு ஆனவங்களுக்கு பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் வந்தது. இப்போதெல் லாம் 25,30,35 வயசு உள்ளவங்களுக்கே வருது. அப்போ ரீபைண்ட் ஆயில் உபயோகிச்ச பிறகு நோயின் அளவு ஜாஸ்தி தானே ஆகியிருக்கு?

ஒரு வேளை, நீங்க இப்படி கேட்டா : சரி ரைட்டு, வேற எண்ணெய் வாங்கலாம் னா அதாவது,எள் எண்ணெய் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் வாங்கலாம்னு பார்த்தா விலை பட்ஜெட்ல அடங்காது போல இருக்கே!.

நான்: ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 170 ரூபாய், ஒரு லிட்டர் ரீபைண்ட் ஆயில் 85 ரூபாய், அப்போ ரீபைண்ட் ஆயில் வாங்குனா உங்களுக்கு பாதி பணம் அதாவது 85 ருபாய் மிச்சம். அந்த பணத்தை சேர்த்து வச்சு என்னா செய்வீங்க? நான் சொல்லட்டுமா!!! இப்படி மிச்சம் பிடிச்ச பணத்தை பேங்குல போட்டு வச்சு வட்டியும் முதலுமா டாக்டர் கிட்ட குடுபிங்க..

ஆரோகியத்திர்க்கு கேடு விளைவிக்கும் பொருளை குறைந்த விலையில் கிடைக்குதேன்னு வாங்கி உபயோக படுத்திட்டு பின்னால் நோய் வந்த பிறகு மிச்சம் பிடிச்ச பணத்தை டாக்டர் கிட்ட குடுத்துட்டு, உங்களையும் கஷ்ட படித்திக்கிட்டு இருக்கறதுக்கு, நல்ல தரமான பொருளை வாங்கி பயன் படுத்தி ஆரோக்கியமாக வாழ லாமே!!! ஆரோக்கியம் தானே மிக பெரிய செல்வம்..

எண்ணெய் விலையை நாம் நினைத்தால் குறைக்கலாம்.
அது எப்படி ?

நாம் எந்த பொருளை விரும்புகிறோமோ அதை வியாபாரிகள் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறார்கள். எதை அதிகமாக வாங்குகிறோமோ அதன் தயாரிப்பும் அதிகரிக்கும். தயாரிப்பு அதிகரித்தால் விலை குறையும்.தரமான பொருளை அதிகாமாக வாங்கினால் அதன் தயாரிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் தரமான பொருளை நியாயமான விலையில் வாங்க முடியும். மட்டமான பொருளை விற்கிறார்களே என்று வியாபாரிகளை குறை சொல்லி பயனில்லை. நாம் எதை கேட்கிறோமோ,எதை அதிகம் வாங்குகிறோமோ அதை தானே அவர்கள் விற்ப்பார்கள்.

நீங்கள் விஷம் குடுங்கள் என்று கேட்டால் விஷம் தான் கொடுப்பார்கள்!. அதை விடுத்து அய்யய்யோ விஷத்தை ஏன் வாங்குகிறீர்கள் அதை சாப்பிட்டால் இறந்து விடுவீர்கள் என்று விளக்கம் சொல்லி கொண்டு இருக்க மாட்டார்கள். விஷம் சாபிட்டால் இறந்து விடுவீர்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு.

மேலும் அவர்கள் எதை தயாரிகிறார்களோ, அதை ஆஹா ஓஹோ என்று தான் விளம்பரபடுத்துவார்கள். அது அவர்கள் வியாபாரயுக்தி.ரீபைண்ட் ஆயில் தயாரிப்பாளர்கள்ரீபைண்ட் ஆயில், பயன் படுத்தினால் கேன்சர் வராது என்று சொல்லி தான் விற்பார்கள். அனால் அது உண்மையா பொய்யா என்று நாம் யோசித்து வாங்க வேண்டும்.

நாளைக்கே அந்த நிறுவனம் ரீபைண்ட் ஆயில் தயாரிப்பை நிறுத்திவிட்டு எள்ளெண்ணெய் விற்றால் அப்போது சொல்லுவார்கள் ரீபைண்ட் ஆயில் பயன் படுத்தினால் கேன்சர் வரும் என்று!!!!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.

நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய
நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.

இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.

புதுசா புதுசா எதை எதையோ கண்டுபிடுச்சு அதை குறைந்த விலையில் விற்று நம்மை சோதனை எலிகளை போல் பயன்படுத்துகிறார்கள். இதன் முடிவு பத்து வருஷம் கழித்து தான் தெரியும்.அப்போ தான் சொல்வார்கள் இதை பயன்படுத்தியதால் தான் இப்படி என்று! அனால் அப்போது தெரிந்து என்ன பயன்.யோசிங்க நீங்க சோதனை மனிதராக இருக்க ஆசை படுரிங்களா? இல்லை ஏற்கனவே நம்ம முன்னோர்கள் காலம் காலமாக உபயோக படுத்திய உணவு முறையை பின்பற்றி அவர்கள் போலவே 80, 90 வயது வரை ஆரோக்கியமாக வாழ ஆசை படுறிங்களா?.அட்லீஸ்ட் வாழும் காலம் வரை நோயில்லாமல் வாழ வேண்டும் என்பது தானே அனைவரது விருப்பமும்.

இனிமேலும் நாம் ஏமாறினால் அது நம் வருங்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும். எதை வாங்குகிறோம் என்பதில் தெளிவாக இருப்போம். ஏனெனில் வரும் காலம் இன்று நாம் எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. மிச்சம் பிடிக்கிறேன் பே ர்வழி என்று நம் குழந்தைகளுக்கு மெல்ல சாகும் விசத்தை நாமே கொடுத்துவிட கூடாது......



சிந்திப்போம் செயல்படுவோம்.... 🚸🚸

தொப்பை குறைய..

இயற்கை வழியில் உடல் பருமன், தொப்பையை குறையுங்கள்

தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி 60 நிமிடம் யோகா பயிற்சி
தினமும் ஒருவேளை சமைக்காத பழம், காய்கறி தானிய உணவு அதோடு வழக்கமான உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, தினம் ஒரு கீரை போன்றவற்றை சாப்பிடுவதோடு இடையில் ஸ்நாக்ஸ் டீ, காபிக்கு பதிலாக ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை,பைனாப்பிள் பழச்சாறுகளை குடித்துவந்தால்  எடை குறையும்.!

அதோடு தேவைப்பட்டால்  தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை அரை டம்ளர் நீரில் கரைத்து தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு குடித்து வந்தால் எடையும் தொப்பையும் வேகமாக குறையும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

மூலிகை மருத்துவம்.

சின்ன வெங்காயச் சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒருத்தேக்கரண்டி தேன் இரண்டுத் தேக்கரண்டி கலந்து
காலை, இரவு தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால்  நெஞ்சுசளி அகலும். இரத்த அடத்தி குறையும், ஆழ்ந்த தூக்கம் வரும். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை குறையும்.!

மற்றும் சில மூலிகை மருத்துவங்கள்:

1.பித்த நோய்கள்

கேரட் சாறும், தேனும், கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும். உடல் வலுவாகும்.  பித்த நோய்கள் தீரும்.

2.உடல் தளர்ச்சி

முட்டைக்கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி நீங்கும்.

3.வேர்க்குரு

தயிரை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் வேர்க்குருவை போக்கலாம்.

4.ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலமடைவதுடன் மூளையின் இயக்கம் செம்மைப்படும்.

5.நீரழிவு

அருகம்புல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நீரழிவு குணமாகும்.!


 Mobile: 9629368389 amyogatrust.blogspot.com

நீர் சிகிச்சை

மூலிகை குடிநீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி, அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.

ஒருலிட்டர் தண்ணீரில் அரைதேக்கரண்டி சீரகம் போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு,வயிற்று உப்புசம், உடல்சூடு தணியும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது சுக்கு,மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு, சளித்தொல்லை,
முகத்தில் ஏற்படும் கருவளையம்,
தொண்டைக்கட்டு குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு கடுக்காயை தட்டிப்போட்டு சூடாக்கி குடித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் நாவப்பழக் கொட்டைகளை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி குடித்து வந்தால் அதிக சக்கரை குறையும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால்காயத்தை தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி நேரம் அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுபிடிப்பு, ஏப்பம்,  மூட்டுவலி குணப்படும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, உப்பு போன்றவற்றை கலந்து அப்படியே குடித்துவந்தால் உடல்சோர்வு, அதிகதாகம் அடங்கும்.!

ஒருலிட்டர் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைப்பழம், தேன், சிறிது இந்துப்பு கலந்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும் உடலில் உள்ள நாள்ப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும்.!

*இதுபோன்ற இன்னும் பலவித மூலிகை நீர் சிகிட்சை உண்டு.
*ஒருவர் தொடர்ந்து ஒரேவிதமான நீர்சிகிட்சையை செய்யக்கூடாது.
*ஒருலிட்டர் என்பது ஒரு அளவீடுதான் நமக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவைப்படுமோ அவ்வளவு நீரையுமே இந்த முறையில் தயாரித்து குடித்து வந்தாலும் மிகவும் நல்லதுதான்.
*ஒருமுறை தயாரித்த நீரை
அதிகப்பட்சம் 9 மணிநேரம் வரையில் மட்டுமே வைத்துக்கொள்ளலாம்.
*மூலிகை நீர் தயாரிப்பதற்கு சாதாரண குழாய் குடிநீரையே பயண்படுத்தலாம் அல்லது மண்பானை நீரை பயண்படுத்தலாம்.
சுத்திகரித்த நீரோ/ ஊட்டம் கலந்தநீரே தேவையில்லை.
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com

Wednesday, April 20, 2016

பழங்கள்

பழங்களை உணவாக உண்ண சிறு பருவத்திலிருந்தே பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இரத்தம் சுத்தமாக இருப்பதுடன் பிள்ளைகள் ஆண்மையும் சாமுத்திரிகா லட்சணமும் உள்ளவர்களாக வளருவார்கள்.  அரிசி, இறைச்சி, காய், பருப்பு முதலியவற்றை கொடுத்து பிள்ளைகளை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு தீங்குதான் செய்கிறார்கள். காபி,தேயிலைப் பானம்  பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாதென்று நான் சொல்லத் தேவையில்லை.!

மகாத்மா காந்தி
- ஆரோக்கிய வழி

இன்றைக்கு இவற்றோடு பாட்டில் டிரிங்ஸ், பாக்கெட் உணவுகளையும்
பல பன்னாட்டு குப்பை உணவுகளையும் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம். இதன் கேடுஅளவிட முடியாதது.! பழங்களையும் தேங்காயையும் ஒருவேளை உணவாகவே அனைவரும் உண்ணலாம். உணவோடு ஓரிரு பழங்களை தின்பது அதிக பலனைத் தராது.!
அனைத்து பழங்களையும் காய்கறிகளையும் இயற்கை உப்பு <இந்துப்பு> நீரில் ஊறவைத்து பிறகு சாதாரண நீரில் கழுவி பயன்படுத்துவதே சிறந்தது.!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

இயற்கை மருத்துவ மேதை பீச்சாம்ப்.!

பீச்சாம்ப்  என்ற இயற்கை மருத்துவரும் லூயி பாயிஸ்டர் என்ற  அலோபதி  மருத்துவரும்  ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள்.

நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம்.
அதனால் நோய்க் கிருமிகளை  அழிக்கின்ற ஆண்டிபயோடிக் மருந்தை ஊசி மூலமாக உடலில் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடும். மனிதன் நோயிலிருந்து விடுபடலாம் என்பது லூயி பாயிஸ்டரின் தத்துவம்.!

ஆனால் பீச்சாம்ப்பின் கருத்து என்னவென்றால்  நோய் வருவதற்கு நோய்க்கிருமிகள் முதல் காரணமல்ல. உடலில் உள்ள கழிவுகளின் தேக்கமே நேய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. அதுவும் கிருமிகள் உருவாவதே  கழிவுகளை சுத்தப்படுத்தத்தான்.  அதனால் கிருமிகளை கொல்வதால் மனிதன் இரண்டு விதத்தில்  பாதிக்கப்படுவான்.
ஒன்று அவன் உடலில் இயற்கையாக நடக்கும் சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. இரண்டு இப்பொழுது தரப்பட்ட ஆண்டிபயோடிக் குப்பைகளால்  இயற்கையான நோய் எதிர்ப்பு திறனும் குன்றி விடுகிறது. அதனால் நோயை நீக்க வேண்டுமானால் உடலில் தேங்கியுள்ள, ஜீரணமண்டலத்தில் தேங்கியுள்ள, இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலும் நீக்கிவிட்டால் போதும். எந்த நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்றார் பீச்சாம்ப்.

இது " ஓதுகின்ற மலக்கட்டை யொழித்து விட்டால் உடம்பிலுள்ள வாதையெலாம் ஒடுங்கிப் போகும் தாதுற்ற சிறுநீரை தெளியவைத்தால்  சடலத்திலுள்ள வேகமெல்லாந் தணிந்து
போகும் கோதுற்ற உமிழ் நீரை முறியவைத்தால் கூட்டிலுள்ள பகையெலாம் குலைந்து போகும் கோதடர்ந்த இவை மூன்றும் களங்கமற்றால் கொல்ல வரும் காலனையும் வெல்லலாமே "

என்ற அகத்தியரின் கூற்றை மெய்ப்பிப்பதாய் இருந்தாலும். பீச்சாம்ப்  பல புதுமைகளை  செய்தார் அதாவது சித்தர்கள்
தங்கள் உள்ளுணர்வையும் நோயாளிகளையும் அடிப்படையாக வைத்தே பல நோய்களுக்கு பரிகாரம் கண்டறிந்தனர். ஆங்கில மருத்துவர்களோ எலியையும் குரங்கையும் இன்னும் பல உயிரினங்களையும் இறந்த மனிதனின் உடலையும் வைத்து ஆராய்ந்தே இன்றும் பரிகாரம் காண்கிறார்கள் … பீச்சாம்ப்போ தன் உடலையே தனது ஆராய்ச்சி களமாக பயன்படுத்தினார்.! எனெனில் இயற்கை உணவு நோயாளிக்கு மருந்து மற்றவர்களுக்கு அதுவே விருந்தாய் அமையும்.  என்பதே அவரின் கண்டுப்பிடிப்பாய் இருந்தது.!

பழ உணவுகளில் வாழ்ந்து வந்த பீச்சாம்ப்  கிருமிகளே நோய்களை உருவாக்குகின்றன என்ற ஆங்கில மருத்துவ மேதைகளை சவாலுக்கு அழைத்தார்.!  அவர்களின் முன்னிலையில் நோய்க்கிருமிகளை குடித்து காண்பித்தார். ஊசியின் மூலம் தன் உடலில் செலுத்தச் சொன்னார். ஆனாலும் அவருக்கு எந்தநோயும் வரவில்லை.  அன்றே  கழிவுகளின் தேக்கமில்லாத  தூய்மையான
 உடலில் எந்த நோய்க்கிருமிகள் செலுத்ப்பட்டாலும் கிருமிகளே அழியும். தூய உடலுக்கு அழிவில்லை.! என்று நிருபித்தார் பீச்சாம்ப்.

இது மட்டுமின்றி தன்கையையே கீறி எந்த மருந்தும் போடாமலே குணப்படுத்தினார்! பிறகு மற்றொரு முறை அசைவ உணவுகளையும் ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தி  கொண்டே கைகளை  கீறி சோதனை செய்தார் புண் சீழ்ப்பிடித்து துர் நாற்றம் வீசியது. பிறகு இயற்கைக்கு திரும்பி கையை குணப்படுத்திக் காட்டினார்.!

இதைப்பார்த்த மக்கள் அவரை பின்பற்றி நோய்களிலிருந்து குணமடைந்தார்கள்.

அதனால் லூயிபாயிஸ்டர் போன்ற ஆங்கில மருத்துவ துறையினரும் மருந்து விற்பனையாளர்களும் சேர்ந்து அந்த இயற்கை மாமேதையை மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றார்கள்.!
அவர் மறைந்தாலும் அவரின் தத்துவம் வென்றுவிட்டது …! இந்தியாவின் மகாத்மா காந்தியை போல உலகெங்கிலும் கோடிக்காண மக்கள் பீச்சாம்பை  பின்பற்றினார்கள்.!

இன்றும்  பின்பற்றி வருகிறார்கள்.!

இயற்கைக்கு
அழிவில்லை.!

உடலில் நோயென்று எதுவுமில்லை.!

 தன் உடலை சுத்திகரிக்கத் தெரிந்தவனுக்கு  எந்த பண்ணாட்டு குப்பையும் தேவையே இல்லை.!

வாழ்க பீச்சாம்ப் புகழ் …!

இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!

குறிப்பு: இந்தபதிவு
 DR. A.V.G. ரெட்டியின் பரிபூரண உடல் நலம் என்ற நூல் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

ஜலதோஷம்.

ஜலதோசத்தை இயற்கை வழியில் குணப்படுத்துங்கள்.!

ஜலதோசம் என்பது நுரையீரலில் சேர்ந்துள்ள கெட்டநீர் மற்றும் தலைநீர், அதிகச்சளி போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.!

ஜலதோசத்திற்கு மருந்து சாப்பிடாவிட்டல் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.!
மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணமாகிவிடும் என்று வேடிக்கையாக கூறுவார்கள்.! நமது முறையை பயன்படுத்தினால்  இரண்டே முறையில் கடுமையான ஜலதோசம் கூட காணாமல் போய்விடும்.! கொஞ்சுண்டு மஞ்சள்தூள் அதில் ஐந்தில் ஒருபங்கு சுண்ணாம்பு இவற்றோடு கொஞ்சம் நீர்சேர்த்து குழைத்து நெற்றியில் திருநீர்  பூசுவது போல் நெற்றியில் பூசிவிட்டு பகலிலோ இரவிலோ கொஞ்சம் தூங்கி எழுந்து விடுங்கள் ஜலதோசமாக வெளியேறி வந்த நீர் கட்டிச்சளியாகி வெளியேறிவிடும்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389.!

Tuesday, April 19, 2016

கோபத்தை குணப்படுத்துங்கள் - இயற்கை வழியில்

இயற்கை வழியில் கோபத்தை குணப்படுத்துங்கள்

கோபம் என்பது நமது ஏமாற்றம் பிறரின் கவனக் குறைவான செயல்
நமது அதிக எதிர்ப்பார்ப்பு  நரம்பு மண்டலத்தின் ஓய்வில்லாத செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் டக்கென்றோ அல்லது நீண்ட காலமாகவோ  ஒருவருக்கு கோபம் வரும்!

கோபம் வந்தவுடன் அதற்கு உடனடியான எதிர்வினை ஆற்றாமல்  மூன்றுமுறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு வெறுமனே கோபத்தை கவனிக்க ஆரம்பித்தால் 30 விநாடிகளில் கோபம் காணாமல் போய்விடும்.!

இது சாதாரண கோபத்திற்கு   சரி ஒருவர் தவறுதலாக காலை மிதித்துவிட்டார் நமது பொருளை தெரியாமல் எடுத்துவிட்டார், மனைவி கவனக்குறைவாக சட்டையில் சாம்பாரை கொட்டிவிட்டார் என்றால்  சரி.!
அற்புதமாக இது வேலை செய்யும். ஆனால், நாட்டில் நடக்கும் அரசியல் பித்தலாட்டம், கல்விகொள்ளை, வியாபார மோசடி, இயற்கை வளத்தை சூரையாடுதல், நமது சொத்தையும் ஆரோக்கியத்தையும் அபகரித்தல் போன்றவற்றினால்  சிலருக்கு பெரும்கோபம் வரும்!

புத்தரும், இயேசுவும்,காந்தியும், நேதாஜியும், பாரதியும், விவேகானந்தரும் ,
காமராஜரும், அய்யா நம்மாழ்வாரும் இப்படிப்பட்ட சமூக கோபங்களில் தன்னை உணர்ந்தவர்கள் தான் அதன் பாதிப்பால் தான் நல்லறத்திற்கான பாதையையும்  இந்திய   சுதந்திரத்திற்கான வழியையும் ஆரம்பக் கல்விக்கான விதையையும் இயற்கையின் மலர்ச்சிக்கான வழியையும் அவர்கள் காட்டிச் சென்றனர்.!

ஆதலால் பெருங்கோபம் இருப்பவர்கள் ஒன்று மாற்றத்திற்கான முயற்சிகளில் இறங்கி தங்கள் கோபத்திற்காண காரணங்களை அழிக்க வேண்டும்.! அல்லது பிறரைப்போலவே   உங்களாலும் முடிந்தவரை ஊழல்
செய்து இயற்கையை சுரண்டி என்று இந்த நேரம் மகிழ்ச்சியாக வாழுங்கள். அல்லது எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாக இருங்கள்.! கோபம் பறந்துவிடும்.!

இதுதான் இன்றைய தந்திரமாக இருக்கிறது! எதற்கும் என் பிள்ளைகள், என்தேசம் என்றெல்லாம் எண்ணாமல் என்சுகம், என் வருமானம்,  என் உயர்வு என்றெல்லாம் எண்ணி இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக கடத்துங்கள்.! நாளை என்பது  வர வாய்ப்பு குறைவு என்று எண்ணினால் போதும் கோபம் காணாமல் போய்விடும்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

தலைவலி

இயற்கை வழியில் தலைவலியை குணப்படுத்துங்கள்

தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு.! வழக்கதிற்கு மாறாக அதிகவேலை செய்தாலோ அல்லது பசித்து உடன் உணவு சாப்பிடாவிட்டாலோ  அதிக சிந்தனை, பயம், உடலில் சேர்ந்துவிட்ட அதிக நச்சுக்கழிவு போன்ற காரணங்களினாலோ ஒருவருக்கு தலைவலி வரும். இதற்கு உடனடி நிவாரணமாக நன்றாக ஐந்துமுறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு பிறகு 10 துளசி இலை 5 நல்லமிளகு இரண்டையும் எடுத்து  கழுவி நன்றாக மென்று உமிழ்நீரோடு சேர்த்து முழுங்கிவிட தலைவலி உடனே குணமாகும்.! நாள்ப்பட்ட தலைவலி என்றால் 48 நாட்கள் இதே முறையை தொடர்ந்து பயன்படுத்த குணமாகிவிடும்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

சுளுக்கு

இயற்கை வழியில் சுளுக்கை குணப்படுத்துங்கள்

யோகாசனம், உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது ஏதாவது கடினமான பொருட்களை தூக்கும் போதோ சிலருக்க் சட்டென்று சுளுக்குப் பிடித்துவிடும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் உடலில் உள்ளதசைகளில் ஒரு பகுதி இன்னொரு பகுதியில் அழுத்தம் கொடுப்பதால் அல்லது இயல்புக்கு மாறான வகையில் உடலை திருகுவதால் ஏற்படும்.!
யோகாசனம் செய்யும் போது வயிற்றில் திடீரென்று பிடித்தது போல் இருந்தால்  பிறகு மூச்சை ஆழமாக மூன்று  இழுத்து விட சரியாகிவிடும்.! இதுவே கழுத்து, கால், முதுகில்  சுளுக்கு என்றால் ஒருவாரம் கூட அப்படியே இருக்கும்! இதை தவிர்க்க எளிய நிவாரணமாக ஒரு சிறியத்துண்டு சுக்கை எடுத்து பசும்பால் அல்லது அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரில் சேர்த்து இடித்து பேஸ்ட் வடிவில் எடுத்துக்கொண்டு சுளுக்கிய இடத்தில் போட்டுவிட்டு அதன்மேல் ஒரு வெள்ளைத் துணியை போட்டு  அரைமணி நேரம் அப்படியே படுத்திருந்தால் போதும் வலி குறையும்.! இதுபோல் இரண்டு மூன்றுமுறை செய்தால் போதும் எத்தகைய சுளுக்கும் சரியாகிவிடும்!
நலம் பெருகட்டும்  …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

வெள்ளைப்பூண்டின் பயன்கள்.

பூண்டு என்னும் சொல் பொது வகையால் கிழங்கில் வளரும் புல்லைக் குறிக்கும்.

கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப் பூண்டை மட்டுமே குறிக்கும்.

வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர்.

மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உடவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.

ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

வெள்ளைப்பூண்டை உணவில் அதிகம் சேர்ப்பவர்களுக்கு மலேரியா நோய் வராது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடலில் தேவையற்று சேரும் கொழுப்பு குறையும்.

உடல் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலையில் 4 வெள்ளைப்பூண்டுத் துண்டுகளை சாப்பிடுவது நல்லது. வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் பூண்டு சாறு கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.

இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்குள் சாப்பிட கொடுக்க எளிதில் குணம் கிடைக்கும்.  உள் நாக்கு வளர்ந்திருப்பவர்கள், அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது பூண்டுசாறினை தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.

பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட உடல் கொழுப்பு குறையும். ரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

பூண்டில் பலவித சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம்தான். எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் முலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டின் மாபெரும் சிறப்பு நோய்க்கிருமிகளை உடனுக்குடன் அழிப்பது. 400 விதமான இரசாயனப் பொருட்கள் வெள்ளைப்பூண்டில் கலந்திருப்பதாக ஜீன் கார்பெட் என்பவர் கூறுகிறார். இவர் எழுதிய ‘முதுமை அடைவதை இப்போதே நிறுத்துங்கள்’ என்ற நூலில் இந்த 400 இரசாயனப் பொருட்களில் பெரும்பாலானவை உடல் திசுக்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்து உடலை இளமைத் துடிப்புடன் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் என்கிறார்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முடி நன்கு வளரவும், வெண்புள்ளிகள் மறையவும் தினமும் வெள்ளைப் பூண்டு சாப்பிடச் சொல்கின்றனர். பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்’ ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த, பூண்டில் உள்ள ‘அலிசின்’ என்ற பொருள் உள்ளது.

காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது. மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது.

இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது.

இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது. ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது. பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விசமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது.

அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது.

தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்’ சுரப்பது குறையும்.

வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஒட்சிசனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள். மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக்கொண்டால் அதனை கட்டுபடுத்தலாம் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு பல்கலை. பேராசிரியர் டாக்டர் கரீன்ரீட் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் உள்ள 50 பேரிடம் தொடர்ச்சியாக 12 வாரங்கள் ,நன்கு சமைத்த வெள்øப்பூண்டு, அல்லது. வெள்ளைப்பூண்டு பவுடரினையும் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அவர்களின் ரத்த அழுத்தம் 10.2 மி.மி ஹெச்ஜி அளவுக்கு குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதயம் சம்பந்தமான நோய்களும் 8 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார். வெள்ளைப்பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது ஆங்கிலத்தில் இதற்கு கார்லிக் என்று பெயர். இதற்கு வெங்காயத்தைப் பார்க்கிலும் காரமதிகம் நீலகிரி பூண்டு மிகவும் பெயர் பெற்றது.

மருத்துவ குணங்கள்

1)வெள்ளைப் பூண்டு ஒரு சிறந்த கிருமி நாசினி.

2)நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

3)வெள்ளைப்பூண்டு + மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.

4)வெள்ளைப்பூண்டை அரைத்து கட்டிக்கு போட கட்டி உடையும்.

5)பூண்டில் இரண்டு வித முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன. ஒன்று Sulphur மற்றொன்று Sulphur of Alley இந்த சத்துக்கள் இருப்பதால் வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும்.

6) உடற்சக்தியை அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை, ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.

7)இருமல், இரைப்பு, வயிற்றுப்புழுவை நீக்கும்.

8)வெள்ளைப்பூண்டு சாற்றைக் காதில்விட காது பிரச்சனை தீரும்.

9)தாய்ப்பலை அதிகரிக்கும், சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும் சீரண சக்தியை அதிகரிக்கும்.

10)உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.

11)Cholosterol-ஐ கட்டுப்படுத்தும்.

12)மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.

13)பூண்டு + நெய் + சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.

14)நல்லெண்ணெய்யில் பூண்டைக் காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.

15) .பூண்டுப்பால் உரித்த பூண்டு 15 பற்கள் பால் 1/4 லிட்டர் பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். வாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.

16. பூண்டானது இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.

17. இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியக்கூடியது. வெள்ளைப்பூண்டு.

18. புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில் உற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை எதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.

19. காளான் வகை தொற்று நோய்களான Candida Albicans ஐ வளர விடாமல் தடுக்கிறது.

20. பூண்டுப்பால் + மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் கட்டுப்பட்டு குணமடைகிறது.

21. 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.

22. பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும். வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.

#இணையப்பகிர்வு

Monday, April 18, 2016

மஞ்சள் காமாலை

இயற்கை வழியில் காமாலையை
குணப்படுத்துங்கள்.!

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல்அலர்ஜியால் ஏற்படும்
ஒருநோய்! இதில் பல வகைகள்
இருக்கிறது.! எந்த வகையான கல்லீரல் நோயாக இருந்தாலும் இயற்கையில் முழுதாகக் குணப்படுத்த முடியும்.!  நமது உடலில் உள்ள உள் உறுப்புகளிலேயே வெட்டுப்பட்டோ அழுகியோ போனாலும் கூட மீண்டும் வளரும் ஒரே உள்உறுப்பு கல்லீரல் மட்டும்தான்.!   கல்லீரல் அலர்ஜிக்கு முக்கியக் காரணம் உணவு ஏனெனில் நமது உடலால் சேகரிக்கப் பட்ட அனைத்து உணவின் சாரத்தையும் இரத்தத்திற்கு அனுப்புவது கல்லீரல்தான் அதுபோலவே உடலில் சேகரிக்கப்பட்ட நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுவதும் கல்லீரல் தான்.! கல்லீரலைப் பாதிக்கும் மூன்று முக்கிய விசயம் இரசாயண உணவு,
மது, புகைப்பழக்கம், ஓய்வில்லாத உழைப்பு.! தினமும் பத்து கோக் குடித்தாலோ அல்லது பல வருடங்கள் இரசாயண உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலோ, தினமும் ஒரு ஆப் அடித்துவிட்டு ஆட்டம் போட்டாலோ தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வின்றி உழைத்தாலோ கல்லீரல் கெட்டுவிடும் என்று உறுதியாக கூறமுடியாது.! அதனால் தான் கவிஞர் வைரமுத்து அழகாக கூறினார்.! கல்லீரல் கழுதைப்பாரம் சுமக்கும், இடைவிடாது நடக்கும். ஆனால் படுத்துவிட்ட தென்றால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் என்று.!
ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்தவுடன் யூரின் மஞ்சளாக இருக்கும் அதில் ஒருபிடி சோற்றைப் போட்டுப் பார்த்தால்
சோறு மஞ்சளாகிவிடும்.!
கண் வெள்ளைப்பகுதி மஞ்சளாக ஆகிவிடும், சாப்பிட்ட உடன் வாந்திவரும். உடலை முறுக்கிப் போட்டதுபோல் அசதியாக இருக்கும்!
மஞ்சள் காமாலை வரவேக்கூடாது என்று நிணைப்பவர்கள் மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அடிக்கடி தென்பட்டாலே வாழ்க்கை முறையை இயற்கை சார்ந்து அமைத்துக் கொள்ள வேண்டும்.!
மஞ்சள் காமாலை வந்துவிட்டால் இரண்டடிக்கு மேல் வளர்ந்த கீழாநெல்லி இலையை ஒரு கையளவு பறித்து நன்றாக இடித்து ஒருடம்ளர் மோரில்  கலக்கி உணவிற்கு அரைமணி முன் காலை, மாலை குடிக்க வேண்டும்.!
உணவாக அரிசிக்கஞ்சி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.!
அதோடு ஒரு பாட்டிலில் தேன் அல்லது கருப்பட்டி பாகில்  நெல்லிக்காயை ஊறவைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி தேனோடு நெல்லிக்காயையும் உண்டுவர வேண்டும்.!
<உப்பு,புளி, மிளகாய் நீக்கி ஒருவாரம் ஓய்வெடுக்க வேண்டும்>
பிறகு நாற்பத்தெட்டு நாட்கள் வரை  கஞ்சி, இரசஞ்சோறு, தயிர்சாதம், பழ உணவுகளை அதிகம் பின்பற்றிக் கொண்டே தினமும் தேன்நெல்லியையும் தின்றுவந்தால்  மஞ்சள் காமாலைநோய் பறந்துவிடும்.! தினமும் குளிக்கலாம்.! இது நாம் உட்பட பலரும்  பயன்படுத்தி வெற்றிகண்ட இயற்கை முறை நீங்களும் கடைப்பிடித்து வெற்றி அடையுங்கள்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

Sunday, April 17, 2016

காய்ச்சல்

இயற்கை வழியில்
காய்ச்சலை குணமாக்குங்கள்

காய்ச்சல் என்பது உடலின் உள் கழிவுகளை வெளியேற்றி
உடலை சுத்திகரித்துக் கொள்ள
உடலே செய்யும் வைத்தியம்.!
காய்ச்சலில் முக்கியமான பகுதி மூளைகாய்ச்சல் என்பது தான்.!
மற்றபடி டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்தவர்களுக்கு மட்டுமே வரும்.!
காய்ச்சல் வந்தவுடன் நாம் செய்ய வேண்டிய முதல் உதவி வழக்கமான உணவை நிறுத்துவதுதான். அதற்காக பிஸ்கெட், பிரட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளக் கூடாது.! ஏனென்றால் உடலில் பல நாட்களாக சேகரிக்கப்பட்ட இரசாயண கழிவுகளை எரிக்கத்தான் காய்ச்சலே வருகிறது. மீண்டும் இரசாயணத்தை கொடுத்தால் காய்ச்சல் குணமாக  நீண்ட நாட்கள் பிடிக்கும்.! வெறு என்னதான் சாப்பிடுவது என்றால் வெறும் சுத்தமான சாத்துக்குடியின் சாறு மற்றும் சுத்தமான மண்பானை நீர் மட்டும்தான் மண்பானை நீரை வேண்டுமானால் சற்று சூடாக்கி குடிக்கலாம். ஆனால் கொதிக்க வைக்கவே கூடாது.! கொதிக்க வைத்தால் நீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் தாதுப்பொருள்கள் முற்றிலும் அழிந்துவிடும்.! காய்ச்சல் மூளைகாய்ச்சலாக மாறுவதிலிருந்து பாதுகாக்க ஒரு ஈர வெள்ளைத்துணியை நனைத்து நெற்றியில் மட்டும் துணிக்காயகாய பற்றிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தேவைப்பட்டால் குழைய வேகவைத்த அரிசிக்கஞ்சியை கொஞ்சம் குடித்துக் கொள்ளலாம்.! காய்ச்சலோடு ஜன்னி வந்தால் சுத்தமான மண்ணை குழைத்து நெற்றியிலும் வயிற்றிலும் பற்றிட்டுக் கொள்ள வேண்டும்.!  இதுவே போதும் இரண்டு மூன்றுநாட்களில் உடலில் உள்ள கழிவுகள் தீர்ந்தவுடன், நோயெதிர்ப்பு ஆற்றல் வலுவடைந்தவுடன் காய்ச்சல் விடைப்பெற்று விடும்.! உள்மருந்து கொடுத்தே ஆகவேண்டிய சூழல் இருந்தால் பத்து துளசி இலை பத்து நல்லமிளகு ஐந்து ஜாதிமல்லி இலை அல்லது பூ இவற்றை இடித்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது ஒன்றரை டம்ளர் ஆனதும் எடுத்து வடிகட்டி மூன்று வேளை உணவிற்கு  அரைமணி முன் அல்லது உணவிற்கு அரைமணி நேரம் பின்பு கொடுத்து வந்தால் எத்தகைய காய்ச்சலும் அதிகப்பட்சம் ஒருவாரத்தில் குணமாகிவிடும்.! இது பலபேரால் பயன்படுத்தி முழு வெற்றி அடைந்த அருமையான இயற்கை முறை  அனைவரும்  பயன்ப்படுத்திக் கொள்ளுங்கள்.!
நலம் பெருகட்டும்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389.!

Friday, April 15, 2016

சகல விஷங்களுக்கும் மேல் ஒத்தட மருந்து!!

குப்பைமேனி இலை
நத்தைச்சூரி
நஞ்சறுத்தான்
சிறியநங்கை
பெரியநங்கை
வெள்ளைப்பூண்டு
கருநொச்சி இலை
தைவாளை
கருடக்கொடி
அருகம்புல்
வெற்றிலை
வேப்பிலை
முருங்கைப்பட்டை
மாவிலங்குப்பட்டை
வகைக்கு 30 கிராம்

காயம், ஓமம், சாம்பிராணி, சுக்கு, மிளகு திப்பிலி, கடுகு, மஞ்சள், சூடம் எலிப்புழுக்கை, புறா எச்சம்ஆகிய வற்றை, வகைக்கு 10 கிராம்
சேகரித்துக் கொண்டு,

பச்சிலைகளை பொடியாக அறிந்து மருந்து சரக்குகளை  பொடித்து வெள்ளைத்துணியில்  இரண்டு முடிப்பாக தனித்தனியாக  கட்டி ஒருலிட்டர் வெப்பெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் துணிமுடிப்பை எடுத்து சற்றுபிழிந்து உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒத்தடம் கொடுத்துவர விசத்தினால் ஏற்படும் ஜன்னி, மயக்கம், கைகால் குளிர்ச்சி, வாய்ப்புலம்புதல்,கைகால் முதுகு வளைந்து நிற்றல் , உடம்பு நிறமாற்றம்,வலி, உளைச்சல், விசங்கள் ஆங்காங்கே தங்கிநிற்றல், வீக்கம் உடனே நீங்கும். நான்கைந்து முறை ஒத்தடம் கொடுத்ததும் எண்ணைய் தீர்ந்துவிட்டால் மீண்டும் எண்ணைய் மட்டும் ஊற்றி சூடாக்கி  ஆறுநாட்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.!

சமயோசிதம் போல் நாளைக்கு ஒருவேளையோ இருவேளையோ ஒத்தடம் கொடுக்கலாம்.!

உள்மருந்தாக பத்து நல்ல மிளகு இரண்டு வெற்றிலை இரண்டையும் சேர்த்து இடித்துக் கொடுக்கவும் < காலை, இரவு உணவாக பொடியரிசி கஞ்சி மட்டுமே அருந்தவேண்டும்

புளிப்புள்ள எந்தப் பொருளையும் தொடாமல் இருக்க வேண்டும். தேகம் உலராமல்,  ஈரத்தில் புழங்காமல் இருப்பது முக்கியம்.!

விஷ ஜந்துக்கள் கடியை முறிக்கும்
                    " மந்திரம் "

"ஓம் குருவே உமையார் தவித்து வந்து நிற்கிறாள் ஏறின நஞ்சைக் கொண்டு
இறங்காஇந்தவரனான இறங்
உன்னையும் எண்ணையும்  படைத்த பரமசிவன் பார்வதிதன்னணைசகல விசமும் இறங் இறங் நசி-மசி-நமச்சிவாயா இறங் இறங்"
நாலவது  வரியில் வரும் சகலவிசமும் என்ற வார்த்தைக்கு பதிலாக கடித்த ஜந்தின் பெயர் தெரிந்தால் குறிப்பிடலாம்.! இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து காலையில் தண்ணீரில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக லட்ச உரு ஜெபித்து
வசியப் படுத்த வேண்டும்.!
நஞ்சறுத்தான் இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து உச்சந்தலையில் தேய்த்து வருவதோடு கடிவாயில் நஞ்சறுத்தான் இலையை கசக்கிவிட்டு கட்டுப்போட வேண்டும்.!
நஞ்சறுத்தான் இலையும் மிளகும் சேர்த்து அரைத்து  நெல்லிக்காய் அளவு உள் மருந்தாக வெற்றிலை மிளகுக்கு பதிலாக கொடுக்கலாம்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

தூங்கு தம்பி தூங்கு

இன்றைக்கு மதியம் கொஞ்சம் நேரம் கட்டிலில் படுத்துக்கொண்டே பத்திரிகை களை படித்துக் கொண்டிருந்தேன், அப்ப டியே கையிலிருந்த தினமலர் பேப்பர் நழுவியதை மட்டுமே உணர்ந்தேன், பிறகு சுமார் இரண்டு மணி நேரம் எந்த சலனமும் எனக்கு தென்படவில்லை. சட்டென்று ஏதோ ஒரு ஒளி உடலெல்லாம் பரவுவது போல் உணர்ந்தேன். (பயப்படாதீர்கள்!  நான் அமானுஷ்ய கதை ஒன்றும் கூறப்போவதில்லை)
அது நாம் சாந்தியாசனம் பயிலும் போது செய்யும் கற்பனை. அது இந்த நேரத்தில் அதுவாகவே வந்தது, அதோடு விழிப்பும் வந்துவிட்டது. சில விநாடி நேரத்தில் சார்ஜரில் போட்டிருந்த கைபேசி ஒலிக்கவே  எழுந்து விட்டேன்.

பஞ்சமூலி மாத்திரை உருட்ட வேண்டும் என்று நினைத்திருந்ததை,  மா-நித்திரை தடுத்து விட்டதால்  அந்தப் பணி இன்று தடைப்பட்டுள்ளது. அதனால் என்ன? இன்றைய தூக்கம் என் நாடி நரம்புகளை யெல்லாம் மீட்டி என் உடலில் புதிய உற்சாக இசையை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதிகாலையில் எழும்போது கூட இத்தகைய உற்சாகம் பற்றிக் கொள்வதில்லை.!  உண்மையில் யோகாவைப் போலவே தூக்கமும் ஒரு ஒப்பற்ற உடல் உற்சாக ஊக்கி, பிணிநீக்கும் பொக்கிசம் நல்லுணர்வு தரும் கவிதை.!

சிலர் எப்பொழுதும் பாதிபோதையில் இருப்பார்கள். அதுபோலவே சிலர் பகலில் யோகா செய்யும் பொழுது பாதி தூக்கத்திலேயே யோகா செய்வார்கள், சிலநேரம் நான் உடனே அவர்களை சாந்தியாசனம் பயில சொல்லி தூங்கவிட்டு விடுவோன். பிறகு அவர்களாகவே எழுந்து உற்சாகமாக யோகா செய்வார்கள்.!  பொதுவாக அதிகாலை துயிலெலும் பழக்க முள்ள பலருக்கு மதிய நேரம் சற்று தூக்கம் எட்டிப்பார்க்கும் அவசிய பணிகள் இருந்தால் பிறகு சரியாகிவிடும். அதற்கும் சேர்த்து இரவில் அடர்த்தியான தூக்கம் வரும். அதுவும் இரவில் படுக்கும் முன் தாரணை தியானமும் 4,7,8 பிராணாயாமமும் செய்து படுத்து விட்டால் அதிகாலை வரை காலனே வந்தாலும் எனது கண்திறக்காது. உண்மையில் தூக்கமே நம் உடலில் உள்ள அத்தனை நரம்புகளுக்கும் ஓய்வையும் ஆக்ஸிஜனையும் வழங்குகிறது இதுவே பிணியை நீக்கவும் வாழ்நாளை அதிகரிக்கவும் பேருதவியாக இருக்கிறது.!

அதிகாலையில் பள்ளியில் பாங்கு சொல்லும் போது தூக்கத்தை விட தொழுகை மேலானது என்று கூறுவார்கள், அதை அதிகாலை தூக்கத்தை விட தொழுகை மேலானது என்று எடுத்துக் கொண்டாலும் கூட இரவு 9 அல்லது பத்து மணிக்குள் தூங்குபவர்களுக்கே அது பொருந்தும் பனிரெண்டு ஒரு மணிக்கு படுத்துவிட்டு காலையில் ஐந்து மணிக்கு பாங்கு, தேவாலயப் பாடல், கோயில் மணிகளை கேட்டோ அல்லது அலாரம் வைத்தோ எழுபருக்கு அது மிகப்பெரிய பாதிப்பையே உடலில் ஏற்படுத்தும் எழுவது யோகா செய்வதற்காக என்றாலும் இதே நிலமைதான். மாலை ஆறுமணிக்கு மேல் வானம், சூரியன், நீர்நிலை, பறவைகள், செடிகள் எல்லாமே தூங்கிவிடுகிறது. இவைகளே இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன அதிகாலையில் எழுந்தும் விடுகின்றன ஆனால், மனிதன் நடு இரவில்  உறங்கி அதிகாலையில் எழுந்து ஓடுவது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதைவிட பத்து மணிக்கு மேல் முழித்து வெறுமனே இணையத்தையோ தொலைக் காட்சியையோ பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பகலில் பனிரெண்டு மணிவரை தூங்கினாலும் இழந்த உடல் உற்சாகத்தை பெறமுடியாது.!

இதனால் பல நோய்களின் தாக்கம் 50 சதவீதம் கூடுதலாகும் என்று ஆஸ்திரேலியாவில்  நடந்த  ஓர் ஆய்வு கூறுகிறது.!  ஆதலால் ஜகத்தோரே பின் தூங்கி முன் எழுவது பத்தினிக்கு வேண்டுமானால் நல்லதாய் இருக்கலாம் அனைவருக்கு கேடுதான்.! அது சரி, தாரணை தியானம் என்றால் என்னவென்று தானே கேட்கிறீர்கள்?

1. படுக்கையில் அமர்ந்து கொள்ளவும்.

2. காலை எழுந்தது முதல் இரவுவரை நடந்ததை நினைத்து பார்த்து எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணம் என்று கூறிவிட்டவும்.

3. நாண்கு எண்ணிக்கை நேரம், இரண்டு நாசியிலும் மூச்சை இழுத்து, ஏழு எண்ணிக்கை நேரம் உள் நிறுத்தி, எட்டு எண்ணிக்கை நேரம் இரண்டு மூக்கிலும் வெளிவிட வேண்டும்.

4.இப்படி மொத்தம் மூன்று சுற்றுகள் செய்து படுத்தால் ஆழமான தூக்கம் வரும்.!


amyogatrust.blogspot.com
Mobile:9629368389

நலம் பெருகட்டும் …

பானகம்

முன்னோர்கள் சொன்ன உணவே      
                            மருந்து


வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத் தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.

இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள்.

வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.

நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.

தேவையான பொருட்கள்:

புளி – சிறிய எலுமிச்சை அளவு.
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்

செய்முறை:

வெல்லத்தை தட்டி பொடியாக்கிக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

சூரியக் குளியல்

கதிரவனின் வெப்பம் ஒருலட்சத்து எனபத்தாராயிரம் (3,00,000 km /Sec) வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது.!

உலகின் மலர்ச்சிக்கும் விடியலுக்கும் கதிரவனே காரணமாய் இருக்கிறது.!
மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் இயக்கத்தில் மிக முக்கியமானது பித்தம் என்றழைக்கப் படும் . மனித உடலில் பித்தத்தின் இயக்கம் சீராக இல்லையெனில்
மனிதன் கோழையாவன். பல்வேறு உடல் பிணிகள் ஏற்படும். இவ்வளவும் ஏன் சூடாக இயங்கும் உடலைத்தான் மனிதன் என்கிறோம்.! குளிர்ந்த உடல் பிணத்திற்கு சமம்.!  பித்தத்தை ஒழுங்குபடுதுவது சூரிய சக்தி யே!

சூரியன் மூலம் வரும் வெப்ப சக்திக்கு இத்தனை வல்லமை இருந்தாலும் ஆதிகாலந்தொட்டே அதிக உஷ்ண சக்தியை கண்டு உலக மனிதன் அஞ்சியே வாழ்ந்துவருகிறான்.!
ஆனால் நமது முன்னோர்கள் சூரியநமஸ்காரம் என்ற ஒன்றை கண்டறிந்து சூரியனின் ஆற்றலை உடலுக்குள் கிரகிக்கவும் அதன்மூலம் உடலில் உள்ளத் தேவையற்ற கழிவுகளை எரிக்கவும், கட்டிகளை கரைக்கவும், தோலை மெலனின் பகுதியால்  உறுதியான கவசமாக்கவும் எலும்பை வலிமையான கேடயமாக்கவும் கதிரவனோடு இயைந்து வாழ்ந்துவந்தனர்.!

இதே பலன்களை பிறகு தன் ஆராய்ச்சி களின் மூலம் கண்டறிந்த வெளிநாட்டி னர், சூரிய ஆற்றலை தன் உடலில் கிரகித்துக் கொள்வதற்காகவே சூரியக்குளியல் என்ற ஒன்றை கண்டறிந்து பயன்படுத்தி வருகிறார்கள்.! இன்றைக்கும் உலகில் தட்பவெப்ப மாறுதல்களால் அதிகம் பாதிப்படையாமல் இயங்கும் நாடுகளில் நமது பாரதமே முதன்மையானது அமெரிக்கா, அரேபியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில்  வெயில் என்றால் கொடுர வெயில் பனி என்றால் நடுங்கவைக்கும் பனி வீட்டின் உள்ளேயே கம்பளிகளைப் போட்டுக் கொண்டால்தான் வாழ முடியும் என்ற நிலை ஆனால் நாமோ அதிகமான மார்கழிப் பனியில்  அதிகாலையிலேயே பஜனை  பாடிவிட்டு சித்திரையின் சுட்டெரிக்கும் வெயிலில் தேர்த்திருவிழாவும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.!
கதிரவன், வாயு, வருணன் அனைவரையும் தேவனாக்கி பலரும் பூஜையும் செய்துவருகிறார்கள்.! இது சிலருக்கு பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் இவர்களா கடவுள் என்று  எகத்தாளமாகவும் இருக்கிறது.! ஆனால், நமது நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ள ஒவ்வெரு அசைவிலும் பல ஆயிரம் உடல், மன, இயற்கையின்   இரகசியங்கள் மறைந்திருக்கிறது.!
ஆகையால் கொடை வெப்பத்தை பார்த்து யாரும் பயப்படவே தேவையில்லை. அதிகாலையில் எழும் பழக்கமும் வெயிலில் உலாவும் பழக்கமும்  இருப்பவர்களுக்கு  கோடை நோய்கள் வரவே வராது.!
அதிகாலை இளம்வெயிலில்  குறைந்த ஆடையுடன் தினமும் ஆறு முதல் பனிரெண்டு சுற்றுகள் வரை  சூரியநமஸ்காரம் <யோகாசனம்> செய்பவர்களுக்கு  எந்த கொடை வியாதியும் வரவே வராது.! இதுமட்டுமல்லாமல் சிறுநீரகச் செயலிழப்பு, கிட்னிகல், பித்தப்பைகல், கண்கட்டி, தோல்நோய், புற்றுநோய்,இளநரை, எலும்பு அடர்த்திக்குறைவு போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு  இந்தக் கொடை  ஒரு வரப்பிரசாதம்.! நல்ல மண்பானை நீரை மூன்றுடம்ளர் வரை குடித்துவிட்டு வெறுமனே கடற்கரையில் தினமும் காலை 7 மணிமுதல்  மாலை 5 மணிவரை  உள்ள நேரத்தில் ஏதேனும்  ஒரு 30 முதல் 60 நிமிடம் சூரியக் குளியல் செய்தாலே போதும் உடலின் புதிய பரிமாணம் விளங்கும்.!

அதைவிடுத்து கோடைகாலம் ஏசி யிலேயே இருக்கவேண்டும், முகத்தில் கிரீம் போட்டுக்கொள்ள வேண்டும், வெயிலில் வெளியே போகக்கூடாது  என்று இருப்பவர்க்கு மட்டுமே  அத்தனை வியாதிகளும் வரும்.! இப்பவே கோவா, கோவளம் , கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு பல வெளிநாட்டினர் வந்து குவிகிறார்களாம்.!

நாம் ஏற்கனவே தொடர்ந்து மூன்றுநாள் மொட்டை மாடியில் யோகாசனம் உட்பட சூரியநமஸ்காரம்   தினமும் இரண்டு மணி நேரம் செய்தாயிற்று.!

இனி இந்தக் கொடை முழுவதும் எத்தனை டிகிரி வெப்பம் ஏறினாலும் எனது உடலின் வெப்பம் சீராகவே இருக்கும்.!

யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com

Thursday, April 14, 2016

இரத்தம்

இரத்தம் பற்றிய கேள்வி--பதில்கள் :-

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

இரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

இரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

இரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் இரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

இரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு இரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 – 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

இரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

இரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. “‘O’ பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு “யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.

இரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?
இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் – மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் – மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் (Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி – விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

இரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் இரத்த தானம் செய்யக்கூடாது?
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant – recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு இரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு இரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

இரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

இரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

இரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

by maarslla
இணையப் பகிர்வு

Wednesday, April 13, 2016

சிட்டுக்குருவி லேகியம்

சாதிக்காய்
சாதிப்பத்திரி
தக்கோலம்
மதுரம்
மாயக்காய்
அதிவிடயம்
குரோசணி
திரிபலா
தாளிசபத்திரி
தகரவிதை
பூனைக்காலி விதை
திரிகடுகு
செம்பகமொட்டு
கொட்டம்
வால்மிளகு
கஞ்சா
முந்திரிப்பழம்
அபின்
தாறவிதை

வகைக்கு 15 கிராம் சேகரித்துக்கொண்டு 300 கிராம் சுத்தம் செய்த சிட்டுக்குருவி.

செய்முறை:-

முதலில் மருந்துகள் அனைத்தையும்நன்றாக சுத்தம் செய்துஉரலில் இடித்து வைத்துக்கொண்டு குருவியின் தூவல்பின்னி, குடல் எல்லாவற்றையும்எடுத்து சுத்தம் செய்துகொண்டு  குருவின் வயிற்றில் இடித்த  மூலிகை சரக்குகளை அடைத்து ஊசிநூல் கொண்டு சுத்திதைத்து வைத்து விட்டு ஒரு சட்டியில் தேவை யான அளவு பசுநெய் விட்டு குருவியை சிவக்க பொறித்து எடுக்கவும். பிறகு குருவி களை எடுத்து நூலைப்பிரித்து விட்டு அனைத்தையும் உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துவிட்டு  இதன் எடைக்கு பாதியளவு நாட்டுவெல்லமும் பாதியளவு பனங்கற்கண்டும் சேர்த்து வைத்துக்கொண்டு  ஒரு சட்டியை அடுப்பில் வைத்து  அரைலிட்டர் பசும்பாலை ஊற்றி வைத்துவிட்டு பால் சூடானதும் அதில் மருந்து சரக்குக ளைப்போட்டு சிறிய தீயில் நன்றாக கிளறி வரவும் பாகுபதம் வந்ததும் குருவி பொறித்த மீதி நெய்யையும் 200 மில்லி தேனையும் விட்டுத் தொடர்ந்து  எல்லா வற்றையும்   கிளறிக் கொண்டே வரவும் அனைத்தும் இறுகி கம்பிபதம் வந்ததும் இறக்கி ஆறியபின் பரணியில்பத்துரப்படுத்துக.!


தினமும் காலை, இரவு உணவிற்கு ஒருமணி முன்பு நெல்லிக்காய் அளவு லேகியத்தை சுவைத்து சாப்பிட்டு கால்டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீர் குடித்து வர,

போக சக்தி அதிகரிக்கும், விந்தணுக்குறைபாடு சரியாகும், கைகால் கடுப்பு,
மந்தம்,
சோர்வு,
கடும்விக்கல்,
இடுப்புளைவு,
கைநடுக்கம்,
உடல் இளைப்பு தண்டுவடக்கோளாறுகள்

ஆகியவை சரியாவதுடன் வெள்ளைப் படுதல், அதீத உதிரப்போக்கு, விந்தொழுக்கு போன்ற மேகவியாதிகள் இருபத்தொன்றும் போகும்.!

கிடைக்காத மூலிகைகளை தவிர்த்து அல்லது அதே குணமுள்ள மூலிகையை சேர்த்து லேகியம் கிண்டலாம். சிட்டுக் குருவி இல்லையெனில் நாட்டு கோழிக் குஞ்சுகளை பயன்படுத்தலாம்.!


amyogatrust.blogspot.com
mobile:9629368389

Tuesday, April 12, 2016

இயற்கைச் சிந்தனை

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கருவேப்பிலைச் செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.


இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். - நம்மாழ்வார்

பிரசவ மருந்து.

பிரசவித்த   பெண்களுக்கு
   பிரசவ (பேற்று)  மருந்து

மஞ்சள்,
பூண்டு,
அரத்தை,
நாகப்பூ,
சதகுப்பை,
திரிகடுகு,
திரிபலை,
கருஞ்சீரகம்,
ஆசாளி,
வாய்விளங்கம்,
லவங்கம்,
ஓமம்,
குரோசணி,
கசகசா,
தாளிசம்,
வால்மிளகு,
கடுகு,
வசம்பு,
காயம்,
தக்கோலம்,
தேசாவரம்,
திரிசாதி,
சீரகம்,
பெருஞ்சீரகம்,
கார்கோல்,
கற்கடக சிங்கி, வலம்புரிக்காய்,
மாயக்காய்,
நயம் விடயம் ,
அக்கறா,
கச்சோசலம்,
ஏலம்

ஆகியவற்றை வகைக்கு  10 கிராம்
வாங்கி சுத்தம் செய்து நன்றாக இடித்து தூளாக்கி 330  கிராம்  கருப்பட்டியோடு சேர்த்து நன்கு விரவி வைத்துவிட்டு அடுப்பில் சட்டியை வைத்து அதில் 100  மில்லி  தேனும் கலந்து சிறிய தீயாக எரித்து சற்றுநேரம் கிளறிவிட்டு பிறகு நாட்டுப்பசு நெய் விட்டு   மேலும் கிளறி மெழுகு பதம் வந்ததும் இறக்கி காண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துக.!


நெல்லிக்காய் அளவு காலை இரவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குடல்நீர், குடல்புண், பிரசவ வாய்வு குணமாகும். பிரசவ தொப்பை வற்றும், அதிகபால் சுரக்கும், இடுப்பெலும்பு வலுப் பெறும்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

மண்ணும் மழலைகளும்

இரசாயண மருந்தை நம்பி ஏமாந்த விவசாயிகள்  அதே இரசாயண மருந்தை தின்றே சாகிறார்கள்.
அட, மண்ணுக்கு மருந்தடிக்கனும்
செயற்கை உரம் போடனும்னு
விவசாய கழகமும் அரசும் அறிவுறுத்திய போது அய்யோ, என் மண்ணுக்கு விசம் வைப்பதானு
பதறி துடிச்சிருந்தா இன்று அதே மருந்துக்கு தான் பலியாகும் நிலமை விவசாயிக்கு வந்திருக்காது.! இதே நிலமைதான் இன்றைக்கு குழந்தைகளுக்கும் மழலை உருவான நாள் முதலே  சக்கரை இருக்கு, சத்து இல்லை, இரத்த அழுத்தத்தை குறைக்கனும்னு சொல்லி மருத்துவர் பல இரசாயண மருந்துகளை கொடுக்கும் போது ஏமாந்து மகிழ்ச்சியா சாப்பிடுகிற பெண்கள் அந்த தடுப்பூசி, இந்தத் தடுப்பூசினு பத்துக்கு மேற்பட்ட ஊசிகளை பிள்ளைகளுக்கு போடும் தாய்மார்கள் அந்த பிள்ளைகள் நோஞ்சானாக நோய் எதிர்ப்பின்றி அடிக்கடி நோய்வாய்ப் படுவதாக இருந்தால் கதறுகிறார்கள்.! பிறகும் கண்டகண்ட இரசயாண உணவுகளையும் உண்டு பல குழந்தைகள்  பொசுக்கென்று போய்விட்டால் மருத்துவர் புட்பாய்சன் என்று ஒரே வார்த்தையில் முடித்து ஒதுங்கிவிடுவார்.!  இப்படி எண்ணற்ற குழந்தைகள் சிறுவர்களின் மரணம் இன்று பெருகி வருகிறது. விரைவில் விவசாயிகளின் நிலமை பல பெற்றோருக்கும் வருவது நிதர்சனமான
உண்மை. அதனால் தான் நம்மாழ்வாழ் அய்யா மிக உறுதியாக கூறினார் மண்ணு இரசாயண உரங்களால் மலடாகிறது, மனிதன்  இரசாயண உணவாலும் மருந்தாலும் மலடாகிறான் என்று.!

விழிப்புணர்வு மிக்கவர்கள் விழித்துக் கொள்ளுங்கள்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

பழைய சோற்றின் பெருமை

1. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.

3.உடல் சோர்வை போக்குகிறது.

4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.

5.உடல் சூட்டை தணிக்கிறது.

6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.

7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.

8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

பலவிதமான நன்மைகளைத் தரும் பழைய  சோறு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்காவிலும் கேட்க ஆரம்பித்தனர்


ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!


சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?


1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!


2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் மோர் கலந்து சின்னவெங்காயம், சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப் பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!


ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.


பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர் கள்!

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டா வையும் தேடி அலைவதை நிறுத்து வோம். உடல் நலத்தை பேணுவோம்.!

அதிகம் பதிவர்களால் காப்யடிக்கப்பட்ட நமது பழைய பதிவு இது!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

மண்ணை மலடாக்கிய கதை

நீளவாக்கில் வரும் பெங்களூர் தக்காளி யை கீழே வீசினால், உடையாமல் குதித்துமேலெ ழும்புகிறது. புளிப்பும் இன்றிஇனிப்பும் இன்றி சப்பென்று இருக்கிறது.‘கும்’மென்று பருத்திருக்கும் கத்தரியில் கசப்பைத் தவிர வேறெந்த சுவையும் இல்லை.புடலை, வெண்டை, பாகை என இன்று சந்தைக்கு வரும் 95 சதவீத காய்கறி ரகங்கள் ஹைபிரிடுகள்.
ரசாயன உரங்களையும்பூச்சிக் கொல்லி களையும்கொண்டு வந்து கொட்டிவிவசா யியை கடன்காரனாக நிறுத்தியநிறு வனங்கள், அடுத்து விதைகளின் மீது கண்வைத்து விட்டன.பாரம் பரியமாக விதைகளைச் சேமித்து வைத்துப் பழக்கப்பட்ட விவசாயிகள் இப்போது ஹைபிரிட்விதைகளுக்கு கையேந்தி நிற்கிறார்கள்.

இந்த ஹைபிரிடு விதைகளில் விளையும் காய்கறிகளிலிருந்து விதைகள் எடுக்க முடியாது.
ஒவ்வொரு முறையும் விவசாயி விதையைப் பணம் கொடுத்தே வாங்க வேண்டும். அதுவும், கொள்ளை விலை.
‘‘நம்ம உணவுச்சந்தையை குறிவச்சு பல
வருடங்களாவே ஒரு சர்வதேச அரசியல்
நடந்துக்கிட்டிருக்கு.இன்னைக்கு உலகம் முழுவதுமே நிறுவனங்களின்
ஆட்சிதான் நடக்குது. அரசாங்கம்
நிறுவனங்களுக்குத் துணை போகுது.நிலங்களை
மலடாக்கி, உரம் - பூச்சிக்கொல்லிக்கு
அடிமையாக்கினாங்க.விதை யையும் அபகரிச்சுட்டா ஒட்டுமொத்த உணவுச்சந்தையும் வசமாகிடும். அதுக்கான வேலைகள் முழுமை அடைஞ்சிடுச்சு.

எங்க அப்பா காலத்துல, எந்தச்
செடியில காய் சுரப்பா இருக்கோ, அதை
நல்லா முத்த விட்டு விதையை எடுத்து, சாணியில புதைச்சோ, வைக்கோல்ல முடிஞ்சோ கோட்டை கட்டிவச்சுக்கு வோம். தகுந்த சீசன்ல எடுத்து
விளைவிச்சா காய்ச்சுத் தள்ளும்.
குப்பையும் சாணியும்தான் உரம். அதிகம் பூச்சிதீண்டுனா, வேப்பங்கொட்டையை அரைச்சுஊத்துவோம். மருந்துக்கு மருந்தாவும் ஆயிடும்.பூச்சியை யையும் விரட்டிரும்.நல்லா சாகுபடி பண்ணிக்கிட்டிருந்தவிவசாயி களை சந்திச்சு ‘இன்னும் நீங்க நிறைய
சம்பாதிக்கலாம்ன்னு ஆசை காட்டி இந்த
ஹைபிரிடு விதைகளை இலவசமா
கொடுத்து பரப்பி விட்டாங்க.
வேளாண்மை அதிகாரிகளும் அதுக்கு
உடந்தையா இருந்தாங்க. ஹைபிரிடு ரகங்கள் நல்லாக் காய்ச்சவுடனே விவசாயிங்க அதுக்கு அடிமையாகிட்டாங்க. ஆனா, விதை
எடுக்க முடியலே. முதல்ல இலவசமாக விதையைக் கொடுத்த நிறுவனங்கள்
அதுக்கப்புறம் கொள்ளை விலை
வச்சாங்க. உரம், பூச்சிமருந்தை விடவும்
இன்னைக்கு விதை பெரிய விலையா
மாறிடுச்சு.

தன் நிலத்துல என்ன விதைக்கணும் என
விவசாயிதான் தீர்மானிக்கணும். ஆனா
நம்ம நாட்டுல கம்பெனிக்காரன்
தீர்மானிக்கிறான்.அவங்க என்ன கொடுக்கிறாங்களோ,
அதைத்தான் போட வேண்டியிருக்கு. எந்த விஷத்தையெல்லாம் கொட்டச்
சொல்றாங்களோ,அதையெல்லாம் கொட்ட வேண்டியிருக்கு.
அதைத்தான்நாமதிங்குறோம்.வரக்கூடாதநோயெல்லாம் வருது. அதிக விளைச்சலுக்குஆசைப்பட்டு விவசாயிகளும் கம்பெனிகளோட
சூழ்ச்சியில சிக்கிட்டாங்க.
இந்திய விவசாயத்தை அழிக்கிற ஆயுதமா விதை மாறிடுச்சு. கம்பெனிக்காரங்க விதையை தர மறுத்தா நாம விவசாயமேசெய்ய முடியாது. அந்த நிலையிலதான்
இப்போ நிக்குறோம்...’’
-தமிழக விவசாயி..

Monday, April 11, 2016

கோடைவியாதிகள் - கண்கட்டி

கண்கட்டி வராமல் தடுப்பது எப்படி?

தற்போது வெயில் தகித்து வருகிறது. வெப்பத்தால் தலை முதல் கால் வரை நமது உறுப்புகள் பாதிப்பை சந்திக் கின்றன. கண்களும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் கண்ணில் கட்டி ஏற்பட்டு பாடாய்படுத்தி விடுகிறது. வெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிகள் பற்றி விளக்கு கிறார் கண் மருத்துவர் சித்தார்த்தன்.

கண்கட்டி என்பது கண்ணின் இமைப் பகுதி மற்றும் கீழ்ப்பகுதியில் கொப்புளம் போல உருவாகும். இது வலி மற்றும் கண்ணில் உறுத்தலை உண்டாக்கும். சில நேரம் இந்த கட்டிகள் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் வெயில் காலத்தில் கண்கட்டி பிரச்னை அதிகமாக இருக்கும். வெயிலில் அலையும் போது, உடல் உஷ்ணம் அதிகரிப்பதால் கண்கட்டி உருவாகிறது. அழுக்குகள், தூசுகளாலும் இது ஏற்படலாம். சாலையில் செல்லும் போது தூசு, புழுதி முகத்தில் படிகிறது. கண்களிலும் தூசுகள் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சூழலில் கண்ணில் உடனே கிருமித்தொற்று உருவாகிறது. புழுதி, மண், புகை உள்ளிட்டவைகளுடன் உஷ்ணமும் சேர்ந்து கொண்டால் கண்ணில் கட்டிகள் எட்டி பார்த்து விடுகிறது. வெயில் காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால் உடல் உலர்ந்து போகிறது. கண்ணில் உள்ள கண்ணீர், விழிப்படலத்துக்கான ஈரப்பசையை கொடுக்கிறது. வெயிலில் செல்லும் போது இந்த கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுவதால் கண் உலர்ந்து எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் புறஊதா கதிர்களின் தாக்கம் வெப்ப காலத்தில் அதிகமாக இருக்கும். அவையும் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரமான குளிர்க்கண்ணாடி களை (கூலிங் கிளாஸ்)பயன்படுத் தலாம். வெயில் காலம் மட்டுமல்லாமல், எப்போது வெளியில் சென்றாலும் குளிர் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். பாதுகாப்பு முறை: வெயில் தலையில் பட்டு உடல் உஷ்ணம் அதிகரிக்காமல் தடுக்க தொப்பிகள் அணிவது நல்லது. எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் குடிநீரும் கையில் இருக்கட்டும். வெயிலால் கண் உலர்வு ஏற்படும் போது இந்த தண்ணீ ரால் கண்களை கழுவிக் கொள்ளலாம். அதிக நேரம் வெயிலில் அலைவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு கண் சொட்டுமருந்துகள் உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். வெயிலில் சுற்று பவர்கள் அடிக்கடி முகத்தையும் கண் களையும் குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இது கண்களில் தூசு படிவஎதையும், உலர்வதையும் தடுக்கும். கண்கள், முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும். கண்ணில் பிரச்னை வரும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ரெசிபி பாலக்பனீர்: 200 கிராம் பனீரை பொடியாக நறுக்கி எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். ஒரு கட்டு பாலாக்கீரையை 10 நிமிடம் வேக வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை வதக்கி அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி முந்திரி போட்டு பனீர் சேர்த்து அரைத்த விழுதை சேர்க்கவும். கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாலக்கீரையில் வைட்டமின் ‘ஏÕ சத்து உள்ளது. பனீர் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. ராகிபழ அப்பம்: ராகி மாவு அரை கப், மைதா மாவு அரை கப், பொடியாக வெட்டிய 2 வாழைப்பழம் ஆகியவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தோசை பதத்தில் ஆப்பம் போல் சட்டியில் வார்த்து எடுக்கவும். இந்த இனிப்பு அப்பத்தில் நார்ச்சத்து உள்ளது. வாழைப்பழம் சேர்ப்பதால் உடலுக்கு குளிர்ச்சி. பனீர் பொடிமாஸ்: இரண்டு கப் பனீரை ஆவியில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். அரை கப் நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் அரை கப், கேரட் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 ஆகியவற்றுடன் உதிர்த்து வைத்துள்ள பனீரையும் சேர்த்து தாளித்து வதக்கவும். இறுதியில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கவும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. பாட்டி வைத்தியம் அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு 100 கிராம், தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் தீரும். அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் சூடு குறையும். அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தயாரித்து தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். ஒரு கைப்பிடி ஆதொண்டை இலையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தைலம் தயாரித்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் நோய் குணமாகும். இசப்கோல் விதையை பொடி செய்து தேனில் கலந்து சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சூடு குறையும். வெங்காயத் தாளை அரைத்து அதில் வெந்தயத்தை ஊற வைத்து காய வைக்கவும். பின்னர் பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் சூடு தணியும். வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்கள் குளிர்ச்சி அடையும். முருங்கைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் குளிர்ச்சியடையும். டயட் தொடர்ந்து வெயிலில் அலைவது, கண்களில் தூசுபடுவது போன்றவற்றை தடுப்பது அவசியம். குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள கீரை வகைகளான அகத்திக் கீரை, பாலாக் கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். கீரை, பால், வெண்ணெய், மோர், தயிர் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவும். உணவு தயாரிக்க கடலை எண்ணெய், ரீபைண்டு ஆயிலுக்கு பதிலாக நல் லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். காய்கறிகளில் கேரட், மாங்காய், தக்காளி, மீன் ஆகியவற்றில் இருந்து அதிகளவு வைட்டமின் ‘ஏ‘ சத்து கிடைக்கிறது. சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும். அதற்கு பதிலாக மீன் அல்லது ஆட்டு இறைச்சி சாப்பிடலாம். வெந்தயத்தை பொடியாக்கி மோரில் அரை ஸ்பூன் கலந்து தினமும் இரண்டு முறை குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர்ப்பழங்களும் உஷ்ணத்தை குறைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.!

நலம் பெருகட்டும் …