[10/16, 05:56] Am Yoga: கவிப்பேரரசு வைரமுத்துவின் மருத்துவ கவிதை...
மருத்துவமுறையை
மாற்றுங்கள்...
டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய்திறப்போம்!
நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்!
முதுகைத்திருப்பி
மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்!
அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!
வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி
காகிதங்கிழிப்பீர்கள்!
மூன்றுவேளை... என்னும்
தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்!
போதாது டாக்டர்!
எங்கள்தேவை
இதில்லை டாக்டர்!
நோயாளி, பாமரன்!
சொல்லிக்கொடுங்கள்!
நோயாளி, மாணவன்!
கற்றுக்கொடுங்கள்!
வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று
சொல்லுங்கள்!
சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு!
எத்துணை பாமரர்
இஃதறிவார்?
சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!
சொல்லிக்கொடுங்கள்!
சாராயம் என்னும்
திரவத்தீயைத்தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!
ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!
இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!
வாயிலென்ன
ஆறாதப்புண்ணா?
மார்பகப்பரப்பில்
கரையாதக்கட்டியா?
ஐம்பதுதொட்டதும்
பசியேயில்லையா?
சோதிக்கச் சொல்லுங்கள்!
அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா வெழுதியிருக்கலாம்!
நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!
நோயொன்றும் துக்கமல்ல!
அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!
சர்க்கரையென்பது
வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!
செரிக்காதவுணவும் எரிக்காதசக்தியும்
சுடுகாட்டுத்தேரின் சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!
ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!
சொல்லிக் கொடுங்கள்!
யோகம் என்பது
வியாதி தீர்க்கும் வித்தையென்று
சொல்லுங்கள்!
உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச் சொல்லுங்கள்!
உணவுமுறை திருத்துங்கள்!
தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில் மிச்சம்வை!
பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!
சொல்லுங்கள் டாக்டர்!
அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!
பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!
மருந்தை யுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!
மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!
கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?
அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!
ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?
அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!
ஆரோக்கிய மனிதனுக்குத் தேவை
அரைகிராம் உப்புதானே!
மனிதா...
உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!
செடிகொடியா நீ?
சிந்திக்கச் சொல்லுங்கள்!
உண்மை இதுதான்!
மனிதனைத்தேடி மரணம் வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!
டாக்டர்...
எல்லாமனிதரையும்
இருகேள்வி கேளுங்கள்!
"பொழுது
மலச் சிக்கலில்லாமல்
விடிகிறதா?
மனச் சிக்கலில்லாமல்
முடிகிறதா?"
-வைரமுத்து.... 🍒
இணையப்பகிர்வு
[10/16, 06:05] Am Yoga: பால் உண்ணியை
நீக்க மூலிகை மருத்துவம்
☘🌿☘🌿☘🌿☘🌿
தோலில் கனத்த சிராய்போன்ற குச்சிகளுடன் முள் போன்று காணப்படும் நாய்முள் என்ற தோலுண்ணிகளும், வெள்ளைநிற அல்லது நிறமற்ற திரவத்தை கொண்ட உருண்டையான வடிவமுடைய பாலுண்ணிகளும், தோலிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட வடிவமான தோற்றத்தையுடைய கொழுப்பு நிறைந்த குருணை உண்ணிகளும் நமக்கு அடிக்கடி பாதிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இந்த உண்ணிகள் உண்டாகின்றன. இவை தோலின் மென்மையான சவ்வை துளைத்து, அதன் கீழ்பாகத்தில் அல்லது நரம்பு முடிச்சுப் பகுதியில் தங்கி, தங்கள் இனத்தை பெருக்கி, தோலின் வியர்வை கோளங்கள், கொழுப்பு கோளங்கள், நிணநீர்க்கோளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி, தோலில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியை உண்டாக்கி, தோலுண்ணிகளாக மாறுகின்றன.
வைரல்வார்ட், மொலஸ்கம் கன்டேஜியேசம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உண்ணிகள் தோலில் வளர்ந்து விகாரமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்ணி வளர்ச்சியை கிள்ளும் பொழுதோ அல்லது அறுத்து எடுக்கும் பொழுதோ இவைகள் அருகிலுள்ள ரத்தக்குழாய்கள் மூலமாக பல இடங்களுக்கு விரைவில் பரவி, எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. ஆகவே தோலில் உண்ணி வளர்ச்சியுள்ள இடங்களை நகத்தால் கிள்ளுவதோ, அறுப்பதோ, சொறிவதோ அல்லது பிய்த்து எடுப்பதோகூடாது. அவ்வாறு செய்வதால் உண்ணி வளர்ச்சி அதிகப்பட ஆரம்பிக்கின்றன.
தோலுண்ணியுள்ள இடங்களில் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஸ்பிரிட்டால் அவ்விடத்தை துடைத்து எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நீக்க முயற்சிக்க கூடாது. ஆரம்ப நிலையில் தோன்றும் பலவகையான தோலுண்ணிகளை நீக்கி, அவற்�ற் பரவ விடாமல், வேதனையின்றி விழச்செய்யும் அற்புத மூலிகை பிரம்மத்தண்டு.
அர்ஜிமோன் மெக்சிகானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாரேசியே குடும்பத்தைச் சார்ந்த பிரம்மத்தண்டு செடிகள் குடியேட்டிப் பூண்டு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் விதைகள் வெடித்து காற்றில் பரவி பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் இது களைச்செடியாக கருதி, அழிக்கப்படுகிறது. ஆனால் இதன் பாலிலுள்ள பெர்பரின், புரோட்டோபின், ஐசோகுவினோலோன் மற்றும் புரத கரைப்பான்கள் தோலில் தங்கி, தோலுண்ணி வளர்ச்சிக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்து, அதிகப்படியான தோல் வளர்ச்சியை நீக்கி, தோலுண்ணிகளை விழச்செய்கின்றன.
பிரம்மத்தண்டு செடிகளின் தண்டை உடைத்து, அதிலிருந்து வடியும் பாலை நாய்முள், மரு, பாலுண்ணி போன்ற தோலுண்ணி உள்ள இடங்களில் மேல் மட்டும் பிற இடங்களில் படாமல் வைத்து வர 10 அல்லது 15நாட்களில் உண்ணிகளின் அளவைப் பொறுத்து காய்ந்துவிடும். இதன் பாலை கண் மையுடன் தடவி மருவுள்ள இடங்களில் தடவி வந்தாலும் மருக்கள் விழும். பிரம்மத்தண்டு பாலை விபூதியுடன் கலந்து பரு, மரு, ஆசனவாயில் தோன்றும் சிறு தோல் வளர்ச்சியில் தடவி வர வளர்ச்சி சுருங்கும். பருக்கள் வெடிக்காமல் மறையும்.!
🌿இணையப்பகிர்வு
மருத்துவமுறையை
மாற்றுங்கள்...
டாக்டர்...
வாயைத்திற என்பீர்கள்!
வயிறு தெரியும்படி
வாய்திறப்போம்!
நாக்கைநீட்டு என்பீர்கள்!
கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்!
முதுகைத்திருப்பி
மூச்சிழு என்பீர்கள்!
அப்போதுதான்
உண்மையாய் சுவாசிப்போம்!
அவ்வளவுதான்!
அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்!
வாசிக்கமுடியாத கையெழுத்தில்
வாயில்வராத பெயரெழுதி
காகிதங்கிழிப்பீர்கள்!
மூன்றுவேளை... என்னும்
தேசியகீதத்தை
இரண்டேவார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்!
போதாது டாக்டர்!
எங்கள்தேவை
இதில்லை டாக்டர்!
நோயாளி, பாமரன்!
சொல்லிக்கொடுங்கள்!
நோயாளி, மாணவன்!
கற்றுக்கொடுங்கள்!
வாய்வழி சுவாசிக்காதே!
காற்றை வடிகட்டும் ஏற்பாடு
வாயிலில்லையென்று
சொல்லுங்கள்!
சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு!
எத்துணை பாமரர்
இஃதறிவார்?
சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொடவேண்டும்!
தரையெங்கேதொடுகிறது?
தலைதானேதொடுகிறது!
சொல்லிக்கொடுங்கள்!
சாராயம் என்னும்
திரவத்தீயைத்தீண்டாதே!
கல்லீரல் எரிந்துவிடும்!
கல்லீரல் என்பது கழுதை!
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது!
பயமுறுத்துங்கள்!
ஒருகால்வீக்கம்?
உடனேகவனி!
யானைக்காலின் அறிகுறி!
இருகால்வீக்கம்?
இப்போதேகவனி!
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்!
வாயிலென்ன
ஆறாதப்புண்ணா?
மார்பகப்பரப்பில்
கரையாதக்கட்டியா?
ஐம்பதுதொட்டதும்
பசியேயில்லையா?
சோதிக்கச் சொல்லுங்கள்!
அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா வெழுதியிருக்கலாம்!
நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்!
நோயொன்றும் துக்கமல்ல!
அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது!
சர்க்கரையென்பது
வியாதியல்ல!
குறைபாடென்று கூறுங்கள்!
செரிக்காதவுணவும் எரிக்காதசக்தியும்
சுடுகாட்டுத்தேரின் சக்கரங்களென்று
சொல்லுங்கள் டாக்டர்!
ஊமை ஜனங்களிவர்
உள்ளொளியற்றவர்!
பிணிவந்து இறப்பினும்
முனிவந்து இறந்ததாய் முணங்குவர்!
சொல்லிக் கொடுங்கள்!
யோகம் என்பது
வியாதி தீர்க்கும் வித்தையென்று
சொல்லுங்கள்!
உயிர்த்தீயை உருட்டியுருட்டி
நெற்றிப்பொட்டில் நிறுத்தச் சொல்லுங்கள்!
உணவுமுறை திருத்துங்கள்!
தட்டில்மிச்சம் வைக்காதே!
வயிற்றில் மிச்சம்வை!
பசியோடு உட்கார்!
பசியோடு எழுந்திரு!
சொல்லுங்கள் டாக்டர்!
அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்!
பச்சையுணவுக்கு
பாடம் நடத்துங்கள்!
மருந்தை யுணவாக்காதே!
உணவை மருந்தாக்கு!
மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா!
கோணாத ஒருவன்
கூனனானான்! ஏனாம்?
அவன் டப்பாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!
ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை! ஏனாம்?
அவன் உப்பில்லாவுணவுகளையே
உட்கொண்டது தானாம்!
ஆரோக்கிய மனிதனுக்குத் தேவை
அரைகிராம் உப்புதானே!
மனிதா...
உப்பைக் கொட்டிக்கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே!
செடிகொடியா நீ?
சிந்திக்கச் சொல்லுங்கள்!
உண்மை இதுதான்!
மனிதனைத்தேடி மரணம் வருவதில்லை!
மரணத்தைத்தேடியே மனிதன் போகிறான்!
டாக்டர்...
எல்லாமனிதரையும்
இருகேள்வி கேளுங்கள்!
"பொழுது
மலச் சிக்கலில்லாமல்
விடிகிறதா?
மனச் சிக்கலில்லாமல்
முடிகிறதா?"
-வைரமுத்து.... 🍒
இணையப்பகிர்வு
[10/16, 06:05] Am Yoga: பால் உண்ணியை
நீக்க மூலிகை மருத்துவம்
☘🌿☘🌿☘🌿☘🌿
தோலில் கனத்த சிராய்போன்ற குச்சிகளுடன் முள் போன்று காணப்படும் நாய்முள் என்ற தோலுண்ணிகளும், வெள்ளைநிற அல்லது நிறமற்ற திரவத்தை கொண்ட உருண்டையான வடிவமுடைய பாலுண்ணிகளும், தோலிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட வடிவமான தோற்றத்தையுடைய கொழுப்பு நிறைந்த குருணை உண்ணிகளும் நமக்கு அடிக்கடி பாதிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இந்த உண்ணிகள் உண்டாகின்றன. இவை தோலின் மென்மையான சவ்வை துளைத்து, அதன் கீழ்பாகத்தில் அல்லது நரம்பு முடிச்சுப் பகுதியில் தங்கி, தங்கள் இனத்தை பெருக்கி, தோலின் வியர்வை கோளங்கள், கொழுப்பு கோளங்கள், நிணநீர்க்கோளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி, தோலில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியை உண்டாக்கி, தோலுண்ணிகளாக மாறுகின்றன.
வைரல்வார்ட், மொலஸ்கம் கன்டேஜியேசம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உண்ணிகள் தோலில் வளர்ந்து விகாரமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்ணி வளர்ச்சியை கிள்ளும் பொழுதோ அல்லது அறுத்து எடுக்கும் பொழுதோ இவைகள் அருகிலுள்ள ரத்தக்குழாய்கள் மூலமாக பல இடங்களுக்கு விரைவில் பரவி, எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. ஆகவே தோலில் உண்ணி வளர்ச்சியுள்ள இடங்களை நகத்தால் கிள்ளுவதோ, அறுப்பதோ, சொறிவதோ அல்லது பிய்த்து எடுப்பதோகூடாது. அவ்வாறு செய்வதால் உண்ணி வளர்ச்சி அதிகப்பட ஆரம்பிக்கின்றன.
தோலுண்ணியுள்ள இடங்களில் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஸ்பிரிட்டால் அவ்விடத்தை துடைத்து எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நீக்க முயற்சிக்க கூடாது. ஆரம்ப நிலையில் தோன்றும் பலவகையான தோலுண்ணிகளை நீக்கி, அவற்�ற் பரவ விடாமல், வேதனையின்றி விழச்செய்யும் அற்புத மூலிகை பிரம்மத்தண்டு.
அர்ஜிமோன் மெக்சிகானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாரேசியே குடும்பத்தைச் சார்ந்த பிரம்மத்தண்டு செடிகள் குடியேட்டிப் பூண்டு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் விதைகள் வெடித்து காற்றில் பரவி பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் இது களைச்செடியாக கருதி, அழிக்கப்படுகிறது. ஆனால் இதன் பாலிலுள்ள பெர்பரின், புரோட்டோபின், ஐசோகுவினோலோன் மற்றும் புரத கரைப்பான்கள் தோலில் தங்கி, தோலுண்ணி வளர்ச்சிக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்து, அதிகப்படியான தோல் வளர்ச்சியை நீக்கி, தோலுண்ணிகளை விழச்செய்கின்றன.
பிரம்மத்தண்டு செடிகளின் தண்டை உடைத்து, அதிலிருந்து வடியும் பாலை நாய்முள், மரு, பாலுண்ணி போன்ற தோலுண்ணி உள்ள இடங்களில் மேல் மட்டும் பிற இடங்களில் படாமல் வைத்து வர 10 அல்லது 15நாட்களில் உண்ணிகளின் அளவைப் பொறுத்து காய்ந்துவிடும். இதன் பாலை கண் மையுடன் தடவி மருவுள்ள இடங்களில் தடவி வந்தாலும் மருக்கள் விழும். பிரம்மத்தண்டு பாலை விபூதியுடன் கலந்து பரு, மரு, ஆசனவாயில் தோன்றும் சிறு தோல் வளர்ச்சியில் தடவி வர வளர்ச்சி சுருங்கும். பருக்கள் வெடிக்காமல் மறையும்.!
🌿இணையப்பகிர்வு
No comments:
Post a Comment