Thursday, March 31, 2016

உடல் எடையை அதிகரிக்க

உடல் எடையை அதிகரிக்க

300 கிராம் அளவு வெள்ளரிக்காயை  தோல்நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி  எடுத்துக் கொண்டு அதனுடன் 10 பேரிச்சம் பழங்களையும் சிறியதாக வெட்டி இரண்டையும் இரவில் ஒரு பாத்திரத்தில் மூடிவைத்து விட்டு
அடுத்தநாள்  காலையில் இவற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் உண்டுவந்தால் எடை அதிகரிக்கும். !

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
amyogatrustfacebook
Mobile:9629368389

Our Products

இயற்கை மூலிகை தயாரிப்புகள்
***********************

பஞ்சமூலி சூரணம்

உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.

நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
 100% இயற்கையானது.!

950 கிராம் 400 ரூபாய்

மூலிகை தேனீர்

ஆவரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்ப மூலிகை தேனீர் பொடி

உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை பல்பொடி

வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.

பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை  குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

950 கிராம் 500 ரூபாய்

மூலிகை குளியல் பொடி

ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!

உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின்  சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!

950 கிராம் 600 ரூபாய்

சக்கரை வியாதி சூரணம்

உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!

சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

அமுக்ரா மாத்திரை

அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய்,  போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை

நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை

100 மாத்திரை 300 ரூபாய்

யோகா புத்தகம் & வீடியோ

சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!

நமது அறக்கட்டளையின் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு நிதி திரட்டவே நமது தரமான 100% இயற்கையான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ  அன்போடு வேண்டுகிறோம்.!


வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் … தொடர்புக்கு:9629368389
www.amyogatrust.blogspot.com

மூலிகை நீர்



சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

Wednesday, March 30, 2016

எச்சரிக்கை

மூலிகை ஆபத்துகள்
---------------------------

சமீப காலத்தில் இயற்கை மீதும் மூலிகை மருந்துகளின் மீதும்
மக்களுக்கு அப்படியே  அக்கறையும் அன்பும் பொத்துக்
கொண்டு வந்துவிட்டது.!
இதன் விளைவால் பல திடீர் மூலிகை கம்பெனிகளும்  மூலிகை மருத்துவர்களும் வெளிநாட்டு மூலிகைகளை விற்பவர்களும் பெருகி வருகிறார்கள்.! இது உண்மையில் வரவேற்க தக்க விசயம்.!

ஆனால் ஒவ்வெரு மூலிகைகளுக்கும் சுத்திகரிப்பு முறை பயன்படுத்தும் முறை ஒத்த குணமுள்ள மூலிகை  ஆற்றலை முறிக்கும் குணமுள்ள மூலிகை என்றும் எடுக்க வேண்டிய அளவு, காலம், சேர்த்து பயன்படுத்த வேண்டிய பொருட்கள் என்றும்  பல பட்டியலே இருக்கிறது.! இவற்றை கடைப் பிடிக்காமல் சும்மா

கடுக்காய் கொடுத்தால் பேதிபோகும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதை நமது மடத்தில் உள்ள நாய்களுக்கு கூட கொடுக்க வேண்டும்.! என்று நித்யானந்தா போன்ற அறிவாளிகளே உளறி வருவது கவலை அளிக்கும் விசயமாய்  இருக்கிறது.!

சமீபத்தில் கர்பப்பையில் ஒருகிலோ அளவில் ஒரு கட்டியோடு ஒரு அம்மா நமது மையத்திற்கு வந்திருந்தார்.!  இரண்டு வருடத்திற்கு முன்பு சிறுசிறு கட்டிகளாகத்தான் இருந்தது. பிறகு அதைக் கரைக்க ஆறுமாதமாக DXN என்ற வெளிநாட்டு மூலிகை மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டேன். பிறகு விட்டுவிட்டேன் சமீபத்தில் வலி வந்ததால் ஸ்கேன் செய்து பார்த்தபோது தான் கட்டி இப்படி பெருத்திருப்பது தெரிந்தது என்றார்.

பொதுவாக வெளிநாட்டு மூலிகை என்று டப்பா ஆறாயிரம் பத்தாயிரம் என்று விற்பவை எல்லாம் போலியானவை அவற்றில் நிறைய செயற்கை விட்டமினும் புரோட்டினுமே கலந்துள்ளது.! அதனால், அவை உடலுக்கு உடனடி தெம்பை கொடுக்கும்  புரோட்டின் எப்படி உடலை வளர்க்குமோ அப்படியே உடலில் உள்ள கட்டியையும் வளர்க்கவே செய்யும்.!


இது தெரியாமல் மல்டிலெவல் மார்க்கெட்டின் மூலம் இதை விற்பவர்கள் அனைவரும் இது கேன்சர் செல்லை அழிக்கும், சிறுநீரக செயலிழப்பை சீராக்கும் என்றெல்லாம் கூறி தங்கள் லாபத்திற்காக வெளிநாட்டு மோகம் கொண்ட முட்டாள் நோயாளிகளிடம் விற்றுவருகிறார்கள்.!


நோயில்லாமல் கடுக்காயை தொடர்ந்து தினமும் தின்றுவந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும், பெருங்குடல் பலவீனம் ஏற்படும், கல்லீரல் வீக்கம் உருவாகும், உடல் சோம்பல், உடல்வலி உருவாகும்.! கடினமான மலச்சிக்கல் உள்ள வயதான நோயாளிகள் மட்டும் தினமும் இரவில் அரைத்தேக்கரண்டி கடுக்காய்பொடியை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.! தினமும் வளமையாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் சேர்ந்த திரிபலாவையோ அல்லது இவற்றுடன் ஆடாதோடை , சுக்கு சேர்ந்த பஞ்சமூலி சூரணத்தையோ குறிப்பிட்ட மாதங்கள் வரை தொடர்ந்து எடுக்கலாம்.!

திரிபலாவும் பஞ்சமூலி சூரணமும் இரத்தத்தை சுத்திகரிக்கும், உடல் எடையை குறைக்கும், சக்கரையை கட்டுக்குள் வைக்கும், உடல் எடையை கூட்டும், உடலில் உள்ள உப்புச்சத்தை குறைக்கும், வாத, பித்த, கப நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், வாய்ப்புண்ணை குணமாக்கும் எல்லாம்  உண்மைதான் ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

வெளிநாட்டு மூலிகைகள் முழுவதும் நஞ்சு.!


அதுபோலவே ஒரு மாத மருந்திற்கு 6000, 7000 என்று கட்டணம் வசூலிக்கும் அனைத்து மருத்துவர்களும் அதில் ஸ்டீராய்டு மருந்துகளை கலந்தே கொடுக்கிறார்கள். முன்னோர்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்றார்கள் சித்தர்களோ எல்லா வியாதிக்கும் 48 நாட்கள் போதும் என்றார்கள் ஆனால் இந்த நவீன வியாபாரிகளோ குறைந்தது ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை அவர்களிடம் இரசாயணம் கலந்த மூலிகைகளை  வாங்கி உண்ணுங்கள் என்கிறார்கள்.! ஆறு மாதத்தில் நோயை கட்டுப்படுத்த எந்த மருத்துவ சிகாமணியும் வேண்டாம், சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும் எந்த மூலிகை மருந்தும் இல்லாமல் உடம்பு தன்னைத் தானே குணமாக்கிக் கொள்ளும்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
MObiLe:9629368389

இரத்த சோகை நீங்க..

இரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

சமையல் பாத்திரம்.

பாரம்பரியப் பாத்திரங்களுக்கு மாறுவோமே!

“மண் பாண்ட சமையல்”, ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.
வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது. இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும்போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Monday, March 28, 2016

எலுமிச்சை

எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும். எலுமிச்சம் பழங்களை ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி மற்றும் நார்த்தங்காய் போன்ற எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும். எலுமிச்சம் பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும் தேமல் என்ற சரும நோய்க்கு இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின் மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல் மறையும்.

மகளிர் பிரச்சினை

கருத்தடை காரணங்கள்

வங்கியில் பணிபுரியும் நமது மாணவி ஒருவர் திடீரென்று
கடந்தவாரம் கைப்பேசியில் அழைத்து ஈஸ்டர் விடுமுறையில்
இரண்டுநாள் காலை யோகா வகுப்புக்கு வருகிறேன் என்று கூறி இருந்தார்.! அதன்படி வெள்ளிக்கிழமை காலை வகுப்பிற்கு வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் சட்டென்று அடையாளம் காண முடியாத அளவிற்கு குண்டாக காணப்பட்டார்.
என்னாச்சு மேடம்? என்று கேட்டதற்கு "குழந்தை யின்மைக்காக மருத்துவம் செய்துகொண்டதில் வந்த பக்க விளைவால் இவ்வாறு ஆகிவிட்டது. சரி அதில் என்னப் பிரச்சனை என்று கேட்டதற்கு  எங்கள் இருவருக்கும் அனைத்து  பரிசோதனை முடிவுகளும் நார்மலாகவே இருக்கிறது. ஆனாலும் அலோபதியில்   சத்துமாத்திரை , ஊசி என்று பல்வேறு தனிசிகிட்சை செய்தேன் அதில்தான் இப்படி ஆகிவிட்டது.
"ஏனம்மா, நீங்களே முன்பு யோகா கற்றவர்தானே? திருமணத்திற்கு முன்பே யோகாவின் மூலம் பதினைந்து கிலோவரை எடையை குறைத்தவராயிற்றே நீங்கள், உங்களை தான் நானே பலருக்கு முன்மாதிரியாக கூறுவேன்,  உங்கள் வெற்றிகரமான பயிற்சியை தொடர்ந்து உங்கள் வங்கியில் பணிபுரியும் பலரும்
நமது பயிற்சி முறைகளை கற்று பயனடைந்தார்களே.!
என்று கேட்டதும் ஆமாம் சார், திருமணத்திற்கு முன்பு யோகா செய்தே 76 கிலோவில் இருந்து 60 கிலோவாக எடையை குறைத்தேன்.! ஆனால், திருமணம் நடந்தபிறகு என்னால் ஒருநாள் கூட யோகா செய்ய முடியவில்லை. வங்கிவேலை, வீட்டுவேலை என்று பிசியாக இருந்துவிட்டேன். அதோடு சிகிட்சையும் சேர்ந்துவிட்டதால்  இப்ப 93 கிலோ இருக்கிறேன் என்றார்.! இப்படித்தான் பலரும் கையில் வெண்ணையை வைத்துக்  கொண்டே நெய்க்கு அலைந்து
உருக்குலைந்து போகிறார்கள்.! அவருக்கு தற்போது வயதும் 38 ஆகிவிட்டது.! இயற்கை உணவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் ஒழுங்காக கடைப்பிடித்து தொடர்ந்து யோகாவையும் செய்து வந்திருந்தாலே  உங்கள் நிலை சரியாகி இருக்கும். அதைவிடுத்து தேவையில்லாமல்  இல்லாத பிரச்சனைக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து கிட்டத்தட்ட 25 கிலோ எடையை கூட்டி வந்துள்ளீர்களே அம்மா.! என்று கடிந்து விட்டு இரண்டு நாட்கள் சில எளிய பயிற்சிகளையும் வாழ்வியல் முறைகளையும் மீண்டும் கடைப்பிடிக்க கற்றுக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.! 20 வயதில் பெண்ணுக்கு திருமணமானால் அவள் தாயாகும் வாய்ப்பு 90 சதவீதம் அதுவே 30 என்றால் 60 %  என்றும் 35 என்றால்  40 சதவீதம் என்றும் குறைந்துகொண்டே வரும் 35 வயதுக்கு மேல் என்றால் தாயாகும் வாய்ப்பு மிகமிக குறைவு.! இன்றைய அவசர யுகத்தில் ஆண்களோடு போட்டிப்போட்டு பல்வேறு துறைகளில் பணியைப் பொறுவதற்கே பல பெண்களுக்கு 25 வயதாகிவிடுகிறது. பிறகு அதில் தங்கள் நிலையை வலுவாக்கி பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொண்டு தகுந்த வரனை தேடி திருமணம் செய்யவே 30 வயதை தாண்டி விடுகிறார்கள். இதில்  இரசாயண உணவு, பயிற்சி செய்ய நேரமின்மை, குடும்ப அலுவலகப் பிரச்சனை என்று 35 வயதை கடந்துவிட்டு பலரும் லட்சங்களை கொட்டியாவது குழந்தையை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.!
இப்படிப்பட்ட தம்பதிகளின் எண்ணிக்கை இன்று பெருகி வருகிறது, அதோடு பல இளம் வயது தம்பதிகளும் கர்பபை நீர்க்கட்டி, கர்பப்பை பலவீனம், விந்தணுக் குறைபாடு, அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றின்  காரணமாக தாய்தந்தை ஆகும் வாய்ப்பை பல தம்பதிகள் இழந்து வருகிறார்கள்.!
இதற்கு முற்றிலும் இயற்கை முறையில் எளியத் தீர்வுகள் நிறைந்திருந்தாலும் அது அவர்களின் கண்களுக்கு புலப்படுவதில்லை.! இப்பொழுதெல்லாம் கருத்தடை விளம்பரங்கள் கண்ணில் படுவதே இல்லை.! மாறாக இதுபோன்ற தம்பதிகள் பலரையும் பரவலாக காணமுடிகிறது.! மரபணுவையை சிதைத்து நஞ்சையே உணவாக உண்ண வைத்த நவீன விவசாயம் செய்தே மகத்தான பணிகளில் இதுவும் ஒன்று. அரசுக்கு இதனால் இரண்டு நன்மை  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ஒன்று டம்மியான மனிதர்கள், இரண்டு ஜனத்தொகையும் குறையும்.! சரி இவ்வளவு வியாக்கியானமா பதிவிடுவதற்கு பதிலா  நீரோ ஒரு தீர்வையும் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அங்கலாய்ப்பது புரிகிறது. முடிந்தவரை மரபணுமாற்றம் செய்யாத இயற்கையான உணவுகளை உண்ணுங்கள், வாழையிலை குளியல், எண்ணைய் குளியல்,  இடுப்புக்குளியல், இயற்கை பல்பொடி, குளியல்பொடி,  மண்பாண்ட சமையல் போன்றவற்றை  கடைப்பிடிப்பதோடு தினமும் அரைமணி நேரம் யோகாவும் செய்துவந்தால் நிச்சயம் தவம் செய்யாமலே அழகான மழலைகளைப் பெறலாம், முக்கியமானது என்னவெனில் நமது மாணவியைப் போலவே எல்லா வழிகளையும் முயன்று விட்டு பிறகு இயற்கைக்கு வராதீர்கள் முதலில் ஒரு வருடமாவது இயற்கையை முயன்று விட்டு மற்ற முறைகளுக்கு போங்கள்.  அல்லது 60 சதவீதமாவது இயற்கை முறைகளை கடைப்பிடித்துக் கொண்டே மற்ற முறைகளையும்  கடைப்பிடியுங்கள்.!
அதுவே சரியான வழி.!

மேலதிக ஆலோசனைகளுக்கு
இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம் :9629368389

amyogatrust.blogspot.in
FACEBOOK AMYOGA TRUST

நலம் பெருகட்டும்

Sunday, March 27, 2016

கருவேப்பிலை

1. மூலிகையின் பெயர் :- கறிவேம்பு.

2. தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH.

3. தாவரக்குடும்பம் :- RETACEAE.

4. வேறு பெயர்கள் :- கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை.

5. பயன்தரும் பாகங்கள் :- இலை ஈர்க்கு, பட்டை மற்றும் வேர் ஆகியன.

6. வளரியல்பு :- கறிவேம்பு வீட்டுக் கொல்லைகளிலும் தோட்டங்களிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகிறது. இதன் பூர்வீகம் இந்தியா. பின் இலங்கையில் பரவிற்று. இது ஒரு உஷ்ணப் பிரதேச மரமாகும். இது பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. இது 12 அடி மூதல் 18 அடி வரை வளரக் கூடியது. மரத்தின் சுற்றளவு சுமார் 40 செ.மீ. கொண்டது. ஒரு இணுக்கில் 11 முதல் 21 சிறு இலைகள் இருக்கும். நேர் அடுக்கில் அமைந்துள்ள இலைகளைக் கொண்டது. இலை மணமுடையது. வெள்ளை நிறப்பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். காய்கள் பச்சை நிறமாக உருண்டையாக இருக்கும். பழுத்த பின்னர் கருமை நிறமாக மாறும். விதைகள் விசத்தன்மையுடையது. 100 கிராம் இலையில் ஈரப்பதம் 66.3% கொழுப்பு 1.0% புரதசத்து 6.1% கார்போஹைட்ரேட்டுகள் 16.00% நார்சத்து 6.4% தாதுப்பொருள் 4.2% சி வைட்டமின் உட்பட அடங்கும். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப்பயன்கள் :- கறிவேம்பு மருந்தாகப் பயன் படுத்துவதால் பசி மிகும், தாது பலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாக்கி வாயுவைத் தொலைக்கும்.

கறிவேம்பு இலை சிறுதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் கவளத்தில் பிசைந்து உண்ணக் குமட்டல், வாந்தி, அஜீரண பேதி, சீதபேதி, செரியா மாந்தம், வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.

கறிவேம்பு இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.

கறிவேம்பு இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.

கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.

கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும்.

கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது.

கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பகற்றியாகச் செயல்பட்டு, சுரத்தைக் குணப்படுத்தும்.

கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.

பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டை அருகே சந்தோஸ் பாமில் உள்ள திரு.மதுராமகிருட்டினன் (கோவை மாவட்ட மூலிகை வளர்ப்போர் சங்க பொருளாளர்) தனது உரவினர் பெண்ணுக்கு உடம்பில் வெள்ளைத்தழும்புகள் இருப்பதற்கு தினமும் 10-12 கருவேப்பு இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு உடல் முழுதும் கோமையம் பூசி சிறிது நேரம் கழித்து குழித்து வருவதால் வெண் தழும்புகள் மறைய ஆரம்பிப்பதாகச் சொன்னார்.

இது mugaputhagam.in என்ற பதிவில் உள்ளது. எங்கும் கருவேப்பிலையை துணைபொருளாக பயன்படுத்தினால் தான் பயன் இருக்கிறது என்ற செய்தி தான் இருக்கிறது.எனவே உணவு  மூலிகைகளை பற்றிய தவறான தகவல்களை பெரிதுபடுத்தவேண்டாம்.இன்னொன்று மூலிகைகள் நீங்கள் கூறியவிதமாகத்தான் இருக்கும் என்றால் நம்உடல் தானாகவே வெளியேற்றும் சக்தி படைத்தது. அதாவது தேவைக்குத் தகுந்தாற்போல உடலில் மருந்துகளை இருத்தி மீதம் வெளியேறிவிடும். பயப்படவேண்டாம்.

Saturday, March 26, 2016

நிகழ்வுகள் 2














நிகழ்வுகள்

இது இலவச யோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பு 2013 ஆண்டு எடுக்கப்பட்டது














எங்களைப் பற்றி ஒரு அறிமுகம்

அம் யோகா டிரஸ்ட்
யோகா, இயற்கை வாழ்வியல் நிபுணர் ஏகப்பிரியன் மு. இஸ்மாயில் அவர்களால் 2012 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் பாரதி, ஆறுமுகம், ராஜேஷ் போன்றவர்கள்  நிர்வாகிகளாக இருக்கிறார்கள்.!
அம் யோகா டிரஸ்டின் மூலம் இதுவரை இரண்டாயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும்
பயனடைந்துள்ளனர்.!
பொது ஆரோக்கியம், ஆஸ்துமா,  அடுக்குத்தும்மல்,சக்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி, கீல்வாதம், பக்கவாதம் போன்ற நோயாளிகளுக்கு  ஒருநாள் மற்றும் ஒரு மாதகால இலவச யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சி உணவு முறை திட்டம், மூலிகை மருந்துகளின் மூலம் பல்வேறு நோயாளிகளை மீட்டு ஆவணப்படுத்தி வருகிறது.! குறிப்பாக சக்கரை முற்றிய நிலையில் இன்சுலின் எடுத்துக்கொண்டிருந்தவர்கள் பலரின் பிணியை இயற்கை வழியில் கட்டுப்படுத்தி  ஆங்கில மருந்துகளை படிப்படியாக முற்றிலும் நீக்கியும் சக்கரையை கட்டுப்பாட்டில் வைத்தும் பலருக்கு சக்கரையை இயல்பு நிலைக்கே கொண்டு வந்தும்  இயற்கையின் ஆற்றலை பறைசாற்றி வருவதோடு நோயாளிகள் அடைந்த பயனை ஆவணப் படமாக தயாரித்தும் வெளியிட்டுள்ளது.!
அம் யோகா டிரஸ்ட் நிறுவனர் ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் அவர்கள் 40 வயது நிரம்பியவர். இவர் தனது 15 வயது முதல் சூரியச் சித்தர் சுவாமி வெங்கட் இரமணன் என்ற குருவிடமும் பின் நாகர்கோவில் கிருஷ்ண மூர்த்தி பண்டிதரிடமும் ஹடயோகா, இராஜயோகா, இயற்கை மூலிகை மருத்துவம் போன்றவற்றை திறம்பட கற்றுத் தேர்ந்தவர்.! அதன் பிறகு விவேகானந்தா கேந்திரா, வேதாத்ரி மகரிசி யோகா, ஈசா யோகா போன்ற அமைப்புகளிலும் பல்வேறு  யோகா நூட்பங்களை கற்றுணர்ந்தார்.! நிறைவாக  2010 ஆண்டு இந்தியன் ஸ்கூல் ஆப் யோகா டாக்டர். அசோக்குமார் அவர்களிடம் யோகா  ஆசிரியர், யோகா சிகிட்சையாளர் பட்டயமும் பெற்றார்.! அது முதல் தான்பெற்ற இந்த உன்னத கலையின் மேன்மையை பறைசாற்றும் விதத்தில் பலருக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்கி சிறப்பித்து வருகிறார்.!

இவரின் சாதனைகளில் சில

முதல்  உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் 32 நிமிடங்கள் தலைகீழாக <சிரசாசன நிலையில்> நின்றுகொண்டே யோகா வகுப்பெடுத்து  உலகின் அவ்வாறு வகுப்பெடுத்த முதல் யோகா ஆசிரியர் என்று  புகழ்பெற்றார்.!

*2011 ஆண்டு மஹாயோகா   என்ற 268 பக்க முழுமையான யோகா பயிற்சி புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.!
*ஆழ்நிலை யோகா டிவிடி மற்றும் சக்கரை ஆய்வு நிகழ்வை
*இன்சுலின் என்ற ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டார்.!

*பல்வேறு நோயாளிகளுக்கு யோகா, மூலிகை மருந்துகளை மாதம் முழுவதும் இலவசமாக வழங்கி ஆய்வு செய்யும் முன்மாதிரி  வகுப்புகளை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்திவருகிறர்.!

*இதுபோன்றே பல மாநில, தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டிகளிலும்
கலந்துகொண்டு முதல் இடங்களை பிடித்துள்ளார்.!

* முற்றிலும் இயற்கை வாழ்வியல் முறைகளையே கடைப்பிடிக்கும் ஆசிரியர்  அது போன்றே பிறரும் வாழ்ந்து உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள பேஸ்ட், பவுடர், சீனி, மைதா, ஆங்கில மருந்துகளின் தீங்கிலிருந்து விடுபட பல்பொடி, குளியல் பொடி, சத்துமாவு, மூலிகை தேனீர்பொடி, அமுக்ரா மாத்திரை , சிறுகுறிஞ்சான் மாத்திரை, போன்ற அத்தியாவசியமான மூலிகைப் பொருட்களையும் முற்றிலும் இயற்கை முறையில் தானே தயாரித்து வழங்கி வருகிறார்.!

குடும்ப வாழ்க்கை

இவரின் மனைவி பெயர் மைதீன்பீவி
இரண்டு மகன்கள் மூத்தவர் முகமது இஜாஸ்   மாநில  யோகாசன சேம்பியன் <2015>
தற்போது இராமகிருஷ்ணா இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு B.N.Y.S படித்து வருகிறார்.!
இளையவர் முகமது இக்லாஸ் +1 படித்து வருகிறார்.!

இயற்கை வாழ்வியல் இரகசியங்களை அறிந்துகொள்ளவும் இயற்கை வழியில் என்றும் இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழவும்
உலக மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.!

AM YOGA TRUST
461/2012 தொடர்பிற்கு:9629368389
amyogatrust.blogspot.com

நலம் பெருகட்டும் …

நீர் சிகிச்சை

நீர் சிகிச்சை

1. காலையில் எழுந்தவுடன் காலை டீ, காபியை தவிர்த்து, மறுத்து மாற்றாக சுத்தமான குடிநீ¢ர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் அருந்திட இரவு மிச்சமீதி மன அழுத்தம், மன உளைச்சல் அந்நீரில கரைந்திடும். சரியாகிவிடும். மலச்சிக்கல் நீங்கும்.

2. அடிக்கடி நீரில் முகம் கழுவ மன அழுத்தம் விலகும். புதிய சுறுசுறுப்பு வரும். முகம் கழுவிய பின் துணயால் துடைக்கக்கூடாது. அப்படியே விட வேண்டும்.

3. ஈரத்துணி பட்டி நெற்றியில் அடிக்கடி போடலாம். அதனால் தலை பாரம், மூளைச்சுடு, மனஉளைச்சல், மனசோர்வு கணிசமாகக் குறையும். புத்துணர்ச்சி தோன்றும். இது உறுதி. வயிற்றிலும் போடலாம்.

4. காலை மாலை இருநேரம் குளியல் எடுக்கலாம். சாதாக்குளியலை விட ஷவர்பாத், அருவி, மழைக்குளியல் மிக நல்லது. மன அழுத்தம் உடன் சீர்படும்.

5. இடுப்புக் குளியல் தொட்டியிலும், முதுகுத் தண்டு தொட்டியிலும், ஜெட் குளியலிலும் தினமும் அல்லது வாரம் இருமுறை குளித்திடலாம். இத்தொட்டிகளை வாங்கி வீடுகளில் அல்லது இயற்கை மருத்துவ முகாம்களில், இயற்கை மருத்துவ மனைகளில் இத்தொட்டிகள் கிடைக்கும். 20 முதல் 30 நிமிடம் குளித்திட வேண்டும்.

6. கடல் குளியல், குளக் குளியல், நீச்சல் குளியல்கள் அனைத்தும் மன அழுத்தம் சீர்பட எளிய குளியல் முறைகள்.

7. மன அழுத்தம், மன உளைச்சல், மன குழப்பம், கோபம், சினம், எரிச்சல், மன பொருமல், நிலையற்ற மனம் உள்ளவர்கள் தம்மிடம் எப்போதும் எங்கும் குடிநீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
சினம், கோபம் தொடங்கும் சமயமே குடிநீர் குடித்து மட்டுப்படுத்தலாம்.

குடிதண்ணீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்தும மாயமாக்கும். இது உண்மை.

நமது உடலில் அச்சமயம் அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் ஏற்படும். உருவாகும் அமிலங்களையும் உடம்பில், இரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே நீரை நாம் சிறப்பாக, சரியாக, நன்றாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.

8. மலச்சிக்கல்: பல மணி நேரம் பஸ், ரயில் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள சூழல், பணி, தவறான அமில உணவுகள் மிகுதல் மூலம் மலச்சிக்கல், மலக்கட்டு, மலம் கெட்டிப்படுதல் இறுகுதல் உண்டாகும் சமயம் உடல் இரத்தம் அமிலமாகி, அசுத்தமாகி உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திசுக்கள், காந்தசக்தி தறி கெடும் சமயம் மன அழுத்தம் மாறுபாடு அடைகிறது. வேறுபாடு அடைகிறது. எரிச்சல், கோபம், சினம் உச்சநிலையை எட்டுகிறது. அச்சமயம்.

1. காலையில் குடிநீர் ஒன்று முதல் மூன்று டம்ளர் நீர் குடிக்கலாம்.
2. இரவில் கனி உணவுகள் மட்டும் சாப்பிடலாம். தோலுடன் சாப்பிட்டுப் பழக வேண்டும்.
3. சில உடற்பயிற்சிகள், யோகா செய்யலாம்.
4. இடுப்புக் குளியல், வயிற்றில் மண்பட்டி, வயிற்று ஈரத்துணி பட்டி எடுக்கலாம்.
5. இரவில் 5 கிராம் ( 1 டீஸ்பூன்) அளவில் திரிபலா பொடி, அல்லது கடுக்காய் பொடி, அல்லது நிலவாரைப் பாடி,அல்லது முருங்கைக்கீரைப் பொடியை நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிட இருவேளையில் மலக்கட்டு விலகும்.
6. இவை ஐந்தும் செய்ய இயலாமல் செய்தும் பலன் இல்லாதவர்கள் மட்டும் அஹிம்சை எனிமா எனப்படும் கருவி மூலம் 200 முதல் 300 மி.லிவரை நல்ல சுத்த நீரை மலவாய், குடல் மூலம் ஏற்றினால் இரு நிமிடங்களில் திரும்ப நீருடன் கெட்டி மலம் இளகி வெளியேறும். தேவைப்படும் சமயம் மட்டும் எனிமாக் கருவியை பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எனவே நீரை சரியாகப் பயன்படுத்தும் கலையை அறிந்தாலே நமது மன அழுத்தம் பாதி குறைந்துவிடும். விலகி விடும்.

அதுபோல் உண்மைப் பசியை அறிவதற்கும் நீர் நல்ல நண்பனாக வழிகாட்டியாக, டெஸ்டராக உள்ளது.
உடலில் பசி ஏற்படும் சமயம், பசி நரம்புகள் சுண்டப்படும் சமயம் 50 முதல் 60 மி.லிட்டர். அரை டம்ளர் நீர் அருந்திடும் சமயம் குறைந்தது 15 நிமிடமாவது உச்சப் பசி ஏற்படவில்லை எனில் அது பொய் பசியே. நீர் அருந்திய ஐந்து நிமிடத்திற்குள் உச்சப் பசி தோன்றிய அது உண்மைப் பசி எனலாம். உணவிற்கு முன் ஆசமனம் எனப்படும் ஒரு மடக்கு நீரை கையில் ஊற்றி உறிஞ்சிட பசியின் தன்மை, உடலின் காந்தை சமப்பட்டு ஜீரணம் மேம்படும் தன் மயமாதல் சிறப்படையும். உணவுடன், உணவு முடித்தவுடன் நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். உணவு முடித்து 30 நிமிடம் கழித்தக் குடிக்கும் நீர் நல்ல பலனைத் தரும்.

இட்லி மாவு

கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது. மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசைமாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த மாவு ஒரு ஸ்லோ பாய்ஸன் மாதிரி என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை. இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் பயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது.

1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும், புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக செய்திகள் வருகின்றன.

2. ஒரு நாளைக்கு 3–6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12-18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால், அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு, மாவுடன் கலந்து விட வாய்ப்புகள் அதிகம். இதனால் சிறுநீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும், நல்ல தண்ணீரை ஊற்றித்தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை பயன்படுத்தினால் திண்டாட்டம் தான்.

4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி (ஆண்டிபயாடிக்); இது உடம்பு உஷ்ணம், வாய்துர்நாற்றம், குடல்புண் போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. கடைமாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை என செய்தி.
மேலும் ஈகோலை (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது, (–24 ) மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுப்படும்; அவ்வகை பாக்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
எனவே சென்னை மாநகராட்சி மற்றும் அரசு நிர்வாகம், கடைகள், மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி, அபராதமும் விதித்து வருகின்றது.
எனவே, நமக்கு நன்கு தெரிந்த, கலப்படம் செய்யாத, நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி, தோசை மாவுகளை மட்டும் வாங்குங்கள். முன்பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் பாக்கெட் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்.

நாயுருவி

நாயுருவி (Achyranthes aspera)
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் - சித்தர் கூற்று.
கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.
எல்லா இடங்களிலும் தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.
நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும். இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த வழிதான் இது.
இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி என மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி ("கரு"நாயுருவி) தான் கிடைத்தற்கரியது. கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில் மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள்.
சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம் என்று பல பெயர்களில் இந்த மூலிகை சித்தர்களின் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.
மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு.
இந்த செடியின் வேரை வாயினுள் சில மணி நேரங்கள் வைத்து இருந்தால் நா வன்மை பெருகுமாம். நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி நாயுருவி ஆகி இருக்கலாம்..
நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும்.
நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன் கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச் சேர்த்து பற்பொடியும் தயாரிக்கலாம்.)
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால் கறைகள் இல்லாமல், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும், நீக்குவதுடன் பற்களை பளபளவென மின்னச் செய்யும்.
நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம் அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு வசிய மூலிகை என்றும் கூறலாம்.
மேலும் நாயுருவி செடியின் இலை முதல் வேர் வரை மருத்துவ மகிமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இம் மூலிகையைக் கொண்டு நம் சித்தர்கள், முன்னோர்கள் அதீத பசி, மூலம், கண் நோய்கள், பல், ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள், காதில் சீழ் வடிதல், இருமல், அனைத்து வகையான காய்ச்சல்கள், இருமல், பேதி , மலசிக்கல், மூலம், நீர்கட்டுபோன்ற வியாதிகளில் இருந்து எளிய முறையில் தீர்வும் கண்டுள்ளனர்.
சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், இரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்ற மனிதர்களை மிரட்டும் வியாதிகளில் இருந்தும் முழுவதுமாய் குணமாக்கும் ஆற்றல் மிக்கது இந்த நாயுருவி.
மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும்.
மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு போன்ற மனம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் அதிசயத்தக்க வகையில் பூரண குணம் பெறலாம்.
இதன் விந்தையான குணத்தால் சித்தர்கள் இரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளனர். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டு, பசியையும், உணவையும் தவிர்த்து, காட்டிலேயே மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட எளிய வழிகளில் இதுவும் ஒன்றாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.
நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.
நாயுருவி இலையை வதக்கி மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து வைக்கும் குழம்பு மிகவும் அருமையான ருசியில் இருக்கும். யார் வைத்தாலும் அம்மாவின் கைமணம் கட்டாயம் இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதை உட்கொண்டு வந்தால், இம் மூலிகை தன்னுள்ளே கொண்டுள்ள மருத்துவ குணத்தால் உடல்நலனை பாதுக்காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
உட்கொண்டாலும் மருந்து, அரைத்து பூசிக்கொண்டாலும் மருந்து.
அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.
இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.
ஃபார் எக்ஸ்டெர்னல் யூஸ் ஒன்லி என்று எச்சரிக்கை தாங்கிவரும் இரசாயண மருந்துகளை தவிர்த்து நாயுருவி போன்ற இயற்கை கொடுத்த சீதனங்களை உபயோகிப்பதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்த்தும், உடலுக்கு வலுவூட்டியும் ஆரோக்கியம் காக்கலாமே!!!
ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை.
மக்கள் நலனிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கும் இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.

வாய்ப்புண்

பொரிகாரத்தை வாங்கி அடுப்பில் வைத்துள்ள இரும்புச்சட்டியில் போட்டால் பொரிந்து வரும். அதில் 10 கிராமும் தேன் 50 மில்லியும் கலந்து குளப்பி வாய்ப்புண்களுக்கு போட்டு வர புண் குணமாகும்.!
தாய்ப்பால் கொடுக்கும் இடத்தில் புண் ஏற்ப்பட்டால் பொரித்த வெண்காரம் 20 கிராம் வெண்ணெய் நூறுமில்லி கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி போட்டுவர புண்மாறும்.!
மூலக்காந்தல் மூலப்புண்களுக்கு 5 கிராம் வெண்காரத்தை 50 கிராம் பன்றிநெய்/பசுநெய்யுடன் அரைத்து பஞ்சில் வைத்து போட்டுவர புண், காந்தல், மூலமுளை மாறும்.!
வெங்காரம், காசிக்கட்டி, கந்தகம் 10 கிராம் விதம் சேகரித்து 100 கிராம் வெண்ணையுடன் அரைத்துப்போட்டு வர சொறி, சிரங்கு, புண்கள் குணமாகும்.!
பொரிகாரம் பொரித்து கொஞ்சம் தேனில் குழைத்து நாக்கில் தடவி வந்தால் குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பூப்பு மாறும்.!

பித்த வெடிப்பை போக்க எளிய வழிகள்....!!!


குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வறட்சி மற்றும் சுத்தமின்மை தான். பாதத்திற்கு அவ்வப்போது முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கொடுக்கா விட்டால் குதிகாலில் வெடிப்புகள் ஏற்பட ஆரம்பித்து, அது அழகை கெடுப்பதோடு, கடுமையான வேதனையையும் தரும். இந்த குதிகால் வெடிப்பைப் போக்க எத்தனை க்ரீம்கள் வந்தாலும், அவற்றால் முழுமையான தீர்வைப் பெற முடியாது. ஆனால், இயற்கை வழிகளைப் பின்பற்றினால் குதிகால் வெடிப்பைப் போக்குவதோடு, குதிகாலை அழகாகவும் பராமரிக்கலாம்.
ரோஸ்வாட்டர் மற்றும் கிளிசரின் : கிளிசரின் மற்றும் ரோஸ்வாட்டரை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரில் 15-20 நிமிடம் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, இறுதியில் அந்த கிளிசரின் கலவையை பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி, அன்றாடம் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், குதிகால் வெடிப்புகள் மறையும்.
ஆயில் மசாஜ் : குதிகால் வெடிப்பு அதிகப்படியான வறட்சியினால் வருவதாகும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். வேப்பிலை : வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த கலவையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும். எனவே, தவறாமல் அன்றாடம் ஒரு முறையாவது செய்து வர வேண்டும். குதிகால் வெடிப்பு மிகவும் மோசமாக இருந்தால், இதனை தினமும் இரண்டு முறை செய்து வர வேண்டும்.
அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் :
அரிசி மாவு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, வெடிப்பு அதிகம் இருப்பவர்கள், இத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பாதங்களை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் இந்த கலவையைக் கொண்டு குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். வாழைப்பழ பேக் : வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, குதிகால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வினிகர் : வெள்ளை வினிகரில் அசிடிக் ஆசிட், அதிக அளவில் நிறைந்துள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும் தன்மை கொண்டது. எனவே 1/4 ப் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து 10 நிமிடம் அந்த கலவையில் பாதங்களை ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல் கொண்டு பாதங்களை தேய்த்து கழுவி, உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் ஜோஜோபா ஆயில் : 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் சிறிது ஜோஜோபா ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை குதிகால் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்க வேண்டும்.
துளசி மற்றும் கற்றாழை :
துளசியில் குதிகால் வெடிப்பைப் போக்கும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. ஆகவே துளசியை அரைத்து, பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மற்றும் சூடம் சேர்த்து நன்கு பேட்ஸ் செய்து, பாதங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் குதிகால் வெடிப்புகள் மறையும்.
தேன் : 1/2 வாளி வெதுவெதுப்பான நீரில், 1 கப் தேன் சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, மெருகேற்ற உதவும் கல் பயன்படுத்தி ஸ்கரப் செய்து வர வேண்டும். இதன் மூலமும் குதிகால் வெடிப்பைத் தடுக்கலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் பப்பாளி : எலுமிச்சை சாறு இறந்த செல்களை போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றுடன் பப்பாளியை மசித்து சேர்த்து நன்கு கலந்து, பாதங்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் பாதங்கள் மென்மையாக, வெடிப்புகளின்றி இருக்கும்.


தேன்.

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன்
கிடைக்கும்?.

👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்
👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.


👉
நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
👉தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
👉

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

👉


சுரம்

சுரம் பல மருந்து ஒன்று
------------------------------
சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்தோடு,நெல்லி
வேர் ,நிலவேம்பு,ஆடாதோடை,
லவங்கம், கோஷ்டம்
கற்பூரவல்லி, கோரைக்கிழங்கு
சம அளவு இதோடு சிறுகாஞ்சொறி வேர்,வட்டத்திருப்பி வேர், சீந்தில் தட்டு,அக்கரகாரம், சிறுதேக்கு பாதியளவு சேகரித்து
பொடித்து வைத்துக்கொண்டு ஒருத்தேக்கரண்டி பொடியை ஒன்னறை டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வத்த வைத்து காலை, மதியம், இரவு உணவிற்கு முன் குடித்து வந்தால் பன்றிக் காய்ச்சல் உட்பட சித்தர்களால் வகுக்கப்பட்ட சுரம் 64 ம் குணமாகும்.!
எந்த வித காய்ச்சலோ, தொண்டை வலியோ, வாந்தியோ ஏற்ப்பட்டாலும்
கூட உடனே உணவை நிறுத்தி விட்டு
மேற்கண்ட கசாயத்தை
செய்து கொடுக்க நல்ல குணம் கிடைக்கும்.!
‪#‎சிறுவர்களுக்கு‬ பாதியளவு கசாயம் போதுமானது.
குழந்தைகளுக்கு ஒரு சங்களவு கொடுத்து வந்தால் எத்தகைய
சுரமும் தணியும். பிஸ்கெட், பிரட், டீ போன்ற
எதையும் குழந்தைகளுக்கு
தராமல் வடிநீரில் பனங்கற்கண்டை கரைத்தும் சாத்துக்குடியை
சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வைத்திருந்து
பிழிந்து தேன்கலந்தும் கொடுக்கலாம்.!
உணவாக
அரிசி கஞ்சி,சாத்துக்குடி ஜூஸ், மட்டுமே அளவாக உண்ண வேண்டும்.

நலம் பெருகட்டும் 

வாத வேங்கை வர்ம ஜோதி தைலம்.


1. தேங்காய் எண்ணெய் 1 1/2.லிட்டர்
2. சீனம் 100 gm
3. நவசாரம் 100 gm
4. வெள்ளை பூண்டு 100 gm
5. மிளகாய் வத்தல் 10 gm
6. வெற்றிலை 5 no's
7. டர்பன் ஆயில் 30 ml
8. தேன்மெழுகு 10 gm
9. கட்டி கற்பூரம் 10 gm
10. வேம்பாடம் பட்டை 25 gm
11. பச்சை கற்பூரம் 5 gm
12. புகையிலை 10 gm
செய்முறை :
சீனம்,சாரம் ,தனித்தனியே பொடித்து கொள்ளவும்.பூண்டு தோல் உரித்து சேர்த்து அரைத்து வழித்து இரும்பு சட்டியில் போட்டு,மிளகாய் வற்றல்,வெற்றிலை,புகையிலை கிள்ளி போட்டு எண்ணெய் முழுவதும் ஊற்றி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கற்கம் கறுத்து சட்டியில் ஒட்டும்.தைலம் காய்ச்சும் ஆரம்பம் முதல் முடிவு வரை கரண்டியால் கிண்டி கொண்டே இருக்கவும்.கற்கம் மணல் பதம் வரும் போது சட்டியை கீழ் இறக்கி வடி கலசத்தில் தேன் மெழுகை சீவி போட்டு,கட்டி கற்பூரம்,பச்சை கற்பூரம் பொடித்து சேர்க்கவும்.வடிகலசத்தில் மேல் துணியை சல்லடைபோல் வேடு கட்டி வேம்பாடம் பட்டையை பொடித்து தூவி அதன் மேல் சூடான தைலத்தை வேம்பார் பட்டை தூளின் ஊற்றவும்.எண்ணெய் சிவப்பாக மாறி கீழிறங்கி மெழுகு சூடங்களை தன்னுடைய சூட்டால் கரைத்துசேர்த்துக்கொள்ளும்.பிறகு டர்பன் ஆயில் சேர்க்கவும்.
தீரும் நோய்கள் :
1. மூட்டு வலி
2. கைகால் குடைச்சல்,
3. ரத்தக்கட்டு
4. அடிபட்ட வீக்கம்
5. சுளுக்கு
6. நரம்பு பிசகல்
7. சதைப் பிடிப்பு
8. மத மதப்பு
9. குதிங்கால் வலி
10. கழுத்துப் பிடிப்பு
11. மூச்சுப் பிடிப்பு
12. தோள்பட்டை வலி
13. உடம்புவலி
14. பக்க வாதம் முதலியவை தீரும்.
உபயோகிக்கும் முறை :
தூங்குவதற்கு முன்பாக 5 முதல் 10 சொட்டு வர்ம தைலம் எடுத்து சூடு உண்டாகும்படி கையினால் பாதித்த பகுதியில் தேய்க்கவும்.மறுநாள் காலை சுடு தண்ணீரில் குளிக்கவும்.or உப்பை சட்டியில் தெறிப்பு அடங்க வறுத்து துணியில் முடிந்து இளஞ்சூட்டில்ஒத்தடம் கொடுக்கவும்.
நலம் பெருகட்டும் 

தேனும் லவங்கப் பட்டையும் ..........

 உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான்!
அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், உறைந்து கிறிஸ்டல் கற்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும்.

**தேனை சூடு படுத்தக்கூடாது**
தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன். தேனின் அற்புத உணவு தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது. நாம் இதனை அறிந்து, நமது அன்றாட வாழ்வில் தேனை உபயோகிக்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

**தேனும் லவங்கப் பட்டையும்**
இதய நோய்: இன்று எல்லா வயதினரையும் தாக்கும் நோய் இதய நோய். இந்த நோய் ஏற்பட மன உளைச்சல், பரம்பரை, கொழுப்பு சத்து கூடுதல் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இதயத்தின் ரத்த குழாய்களில், நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால், போதிய ரத்தம் கிடைக்காமல் இருதயம் செயல் இழக்கிறது.

**அற்புத மருந்து இதோ!**
தினமும் காலையில் லவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து குழைத்து சிற்றுண்டியுடன் சேர்த்து சாப்பிடுங்கள். 2 கரண்டி தேன், 1 கரண்டி பொடி என்ற கணக்கில் ரொட்டியுடன் அல்லது நீங்கள் சாப்பிடும் சிற்றுண்டியுடன் சாப்பிட்டு வாருங்கள்.
இதய நோய் உங்களை மீண்டும் அனுகாது. ஏற்கெனவே உங்களுக்கு மாரடைப்பு வந்திருந்தால், மீண்டும் நிச்சயம் வராது.
இதய நோய் உள்ளவர்களுக்கு சுவாசம் மற்றும் இதய துடிப்பு பலவீனமாக இருக்கும். அவர்களுக்கு இந்த தேனும் லவங்கப்பட்டை பொடியும் ஒரு வசப்பிரசாதம். 1 மாதத்தில் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும்.
அமெரிக்கா, கனடா நாடுகளில் மருத்துவமனைகளில் இந்த உணவை கொடுத்து வருகிறார்க்ள.அதிசயத்தக்க மாற்றங்களை பதவு செய்துள்ளார்கள். அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூச்சு வாங்குவதை குறைத்து, இதய துடிப்பை பலப்படுத்தி, இதய நோயை விரட்டி அடிக்கும் அற்புத சக்தி கொண்டது தேனும் லவங்கமும்.
செலவு குறைச்சல் தானே! முயற்சி செய்யுங்களேன்!

**ஆர்த்ரிரைட்டீஸ் என்கின்ற முடக்குவாதம்.**
மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு தித்திக்கும் தேன் போன்ற செய்தி.
தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள்.
ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

‘எத்தகைய கடுமையான மூட்டுவலியாக இருந்தாலும் 1 மாதத்தில் குணம் நிச்சயம்’ என்று அடித்து சொல்கிறார்கள் கோபன் ஹேகன் பல்கலைகழக ஆய்வு மையத்தினர்.
200 மூட்டுவலிகாரர்களை கொண்டு ஒரு சோதனை நடத்தினர். தினமும் காலை 1 தேக்கரண்டி தேனும் 1/2 தேக்கரண்டி லவங்க பொடியும் கலந்து கொடுத்து வந்தனர்.
ஒரே வாரத்தில் 73 நோயாளிகள் வலி நிவாரணம் கண்டனர். ஒரு மாதத்தில் அனைவரும் நடக்கத் தொடங்கினர்.
இந்த காலத்தில் மூட்டு வலி இல்லாதவர் யார்? அதனால் இந்த கண்கண்ட மருந்தை இன்றே தொடங்கி வாழ்க்கை பயணத்தின் வலியை குறைத்துக் கொள்வோம்!

**சிறுநீர்குழாய் கிருமிகள்**
2 தேக்கரண்டி லவங்கபொடி, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை இளஞ்சூட்டு தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீர் குழாய்களில் உள்ள கிருமிகள் அழிந்து விடும். கோடைக்கலத்தில் இது அரு மருந்து.

**கொலஸ்ரால் என்னும் கொழுப்பு சத்து**
2 மணி நேரங்களில் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை 10% குறைக்கும் தன்மை கொண்டது தேன்.

2 தேக்கரண்டி தேன், 3 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியையும் 16 அவுன்ஸ் தண்ணியுடன் கலந்து குடியுங்கள். 2 மணி நேரத்தில் உங்கள் கொழுப்பு சத்து அளவு குறையும்.

ஒரு நாளில் 3 முறை 2 கரண்டி தேன், 1 கரண்டி லவங்க பொடியை மிதமான வெந்நீரில் கலந்து குடித்து வர நிச்சயம் கொலஸ்டிரால் கரைந்து விடும்.
சாதாரணமாகவே உங்கள் உணவில் தேனை சேர்த்து கொண்டு வாருங்கள். கொழுப்பு சத்து நோய் வரவே வராது.

**ஜலதோஷம்**
சூடான தண்ணீரில் 1 தேக்கரண்டி தேனை வைத்து இளஞ்சூடாக்கி அதனுடன 1/4 தேக்கரண்டி லவங்க பொடியை குறைத்து 3 நாளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
சைனஸ், சளி, இருமல் என எல்லாமே ஓடி போகும்.

**வயிற்று அல்சர்**2 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கபவுடர் கலந்து உண்டு வர வயிற்றுவலி, வயிற்றில் அல்சர் போன்றவை அடியோடு மறையும்.

**வாயு தொல்லை**இந்தியாவிலும் ஜப்பானிலும் நடந்த ஆய்வின் முடிவில் தேனுடன் லவங்க பொடியை சேர்த்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை தீருமாம்!

**எதிர்ப்பு சக்தி வளரும்**
தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் உள்ளது. இதை நாம் தொடர்ந்து லவங்க பொடியுடன் கலந்து உண்டு வந்தால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. இதனால் அடிக்கடி வைரஸ் ஜுரம், ஃபுளு என்று படுக்க வேண்டாம்.
ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானி ஒருவர் தேனில் உள்ள இயற்கை ரசாயனங்கள் ஃப்ளூ ஜூரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை அழிக்கிறது என்று நிருபித்துள்ளார்.

**அஜீரணம் **
சிலருக்கு சாப்பிட்ட உடன் வயிறு பெருத்து, வயிறு அடைத்து சிரமபடுவார்கள். இவர்கள் உணவு உண்பதற்கு முன் 2 தேக்கரண்டி தேனில் சிறிது லவங்க பொடியை தூவி சாப்பிட வேண்டும். பிறகு இவர்கள் சாப்பிட்டால் இவர்களுக்கு உணவு சுலபமாக வலியில்லாமல் ஜீரணமாகும்.

**நீண்ட ஆயுள்**
நீண்ட ஆயுளுக்கு 3 கப் மிதமான சூடில் உள்ள நீரில் 4 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்க பட்டை பொடியை கலந்து வைத்துக்கொண்டு ஒரு நாளில் 3 அல்லது 2 முறையாக பருக இளமை ததும்பும்.
வயதான தோற்றம் மறைந்தே போகும். 100 வயதில் 20 வயதிற்கான சுறுசுறுப்பை காணலாம். சருமம் மிருதுவாக இருக்கும் ஆயுள் நீடிக்கும்.

**தொண்டையில் கிச் கிச்!**
1 தேக்கரண்டி தேனை எடுத்து மெதுவாக உண்ணுங்கள். 3 மணிக்கு ஒரு தரம் இப்படி செய்து வாருங்கள். தொண்டையில் கிச்கிச் முதல் அல்லது 2 தேக்கரண்டியில் போய்விடும்.
**முகப்படுக்கள் அடியோடு மறைய!**
3 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி லவங்கப் பொடி இரவு படுக்கும் போது இதை குழைத்து பருக்களின் மேல் தடவுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அலம்புங்கள். தொடர்ந்து 2 வாரம் இதை செய்து வர பருக்களை வேரோடு இது அழித்துவிடும்.

**சரும நோய் தீர**சொறி, படை போன்ற பல சரும நோய்களை குணப்படுத்தும் தேன், லவங்க பொடி இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு குழைத்து இந்த சரும நோய்களின் மேல் தடவி வர இந்த சரும் நோய்கள் குணமாகும்.

**எடை குறைய வேண்டுமா?**
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் மிதமான சூட்டில் உள்ள நீரில் தேனையும், லவங்க பொடியையும் கலந்து குடிக்கவும். அதே போல இரவில் படுக்க போகும் முன்னர் தேனையும், லவங்க பொடியையும் மிதமான வெந்நீரில் கலந்து குடிக்கவும். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் எத்தனை குண்டாக இருந்தாலும் உடல் எடை குறைவது உறுதி.
அதிசயம் ஆனால் உண்மை. இதை நீங்கள் குடித்து வரும் போது உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுத்து விடும். அதாவது நீங்கள் சாதாரண உணவை சாப்பிட்டு வந்தாலும் கூட எடை கூடாமல் தடை செய்யும்.

**புற்று நோய்க்கு அருமருந்து**
ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘வயிறு மற்றும் எலும்பில் வரும் புற்று நோய்களை குணப்படுத்தலாம்’ என்று தெரியவந்துள்ளது.
ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி லவங்க பொடி என்ற கணக்கில் குழைத்து, தினமும் 3 வேளை உண்ண ஒரே மாதத்தில் இந்த புற்று நோய் குறைந்து விடுமாம்.

**அயர்ச்சி**
‘உடம்பில் சக்தியை அதிகரிக்க தேனை விட சிறந்தது இல்லை’ என்கிறார் ஆராய்ச்சியாளர் டாக்டர் மில்டன். இதில் உள்ள சர்க்கரை அபாயகரமானது இல்லை. உடலுக்கு உதவ கூடியது.
வயதானவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள், சக்தி குறைவதால் தினமும் காலை ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி தேனில் லவங்க பொடியை நன்று தூவி குடிக்க வேண்டும்.
அதே போல மதியம் 3 மணிக்கும் குடித்து வர, இழந்த சக்தியை பெறுவார்கள்.

**வாய் துர்நாற்றத்தை போக்க!**
தெற்கு அமெரிக்கா மக்கள் தினமும் காலையில் தேனையும் லவங்க பொடியையும் கலந்து சுடுநீரில் வாய் கொப்பளிப்பார்கள். இதனால் வாய் துர்நாற்றம் போய் விடும். நாள் முழுவதும் வாய் மணக்கும்.
**காது கேளாதவர்களுக்கு நற்செய்தி**
தேனையும், லவங்க பொடியையும் சம அளவில் கலந்து காலை மாலை என 2 வேளையிலும் எடுத்து காமந்தம் போய்விடுமாம்.
தேன் லவங்கப்பட்டை கலவை 
மூலிகை பல்பொடி குளியல் பொடி இயற்கை சத்துமாவு பஞ்சமூலி சூரணம் சிறுகுறிஞ்சான் மாத்திரை
சக்கரை சூரணம் அமுக்ரா மாத்திரை போன்ற 100 % இயற்கையான நமது மூலிகை தயாரிப்புகள் தேவைக்கு
தொடர்புகொள்க :9629368389
நலம் பெருகட்டும் …

இயற்கை மூலிகை தயாரிப்புகள்

1. பஞ்சமூலி சூரணம்
உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.
நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
100% இயற்கையானது.!
950 கிராம் 400 ரூபாய்

2. மூலிகை தேனீர்
ஆவரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்ப மூலிகை தேனீர் பொடி
உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!
950 கிராம் 500 ரூபாய்


3. மூலிகை பல்பொடி
 வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.
பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

4. 950 கிராம் 500 ரூபாய்
மூலிகை குளியல் பொடி
ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!
உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!
950 கிராம் 600 ரூபாய்


6. சர்க்கரை வியாதி சூரணம்
உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!
சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

7.  அமுக்ரா மாத்திரை
அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை
நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை
100 மாத்திரை 300 ரூபாய்

8.  யோகா புத்தகம் & வீடியோ
சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!
இன்சுலின் <DVD>
<இயற்கை வழியில் சக்கரை நோயை வென்றவர்களின் உண்மை நிகழ்வு>
*சக்கரை நோய் விளக்கம்
*குணப்படுத்தும் யோகா நுட்பங்கள்
*வாழ்வியல் வழிமுறைகள்
*பயணடைந்தோர் பேட்டி
அடங்கிய முழுமையான படைப்பு
நன்கொடை 250/-
நமது அறக்கட்டளையின் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு நிதி திரட்டவே நமது தரமான 100% இயற்கையான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ அன்போடு வேண்டுகிறோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் … தொடர்புக்கு:9629368389

(விலைகள்  மாறக்கூடியவை  - பதிவிட்ட தேதியில்  இந்த  விலை. மேல் விபரங்களுக்கு  மேற்கண்ட அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் ​)