Tuesday, April 19, 2016

சுளுக்கு

இயற்கை வழியில் சுளுக்கை குணப்படுத்துங்கள்

யோகாசனம், உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது ஏதாவது கடினமான பொருட்களை தூக்கும் போதோ சிலருக்க் சட்டென்று சுளுக்குப் பிடித்துவிடும். இது எதனால் ஏற்படுகிறது என்றால் உடலில் உள்ளதசைகளில் ஒரு பகுதி இன்னொரு பகுதியில் அழுத்தம் கொடுப்பதால் அல்லது இயல்புக்கு மாறான வகையில் உடலை திருகுவதால் ஏற்படும்.!
யோகாசனம் செய்யும் போது வயிற்றில் திடீரென்று பிடித்தது போல் இருந்தால்  பிறகு மூச்சை ஆழமாக மூன்று  இழுத்து விட சரியாகிவிடும்.! இதுவே கழுத்து, கால், முதுகில்  சுளுக்கு என்றால் ஒருவாரம் கூட அப்படியே இருக்கும்! இதை தவிர்க்க எளிய நிவாரணமாக ஒரு சிறியத்துண்டு சுக்கை எடுத்து பசும்பால் அல்லது அரிசி வடித்த கஞ்சித் தண்ணீரில் சேர்த்து இடித்து பேஸ்ட் வடிவில் எடுத்துக்கொண்டு சுளுக்கிய இடத்தில் போட்டுவிட்டு அதன்மேல் ஒரு வெள்ளைத் துணியை போட்டு  அரைமணி நேரம் அப்படியே படுத்திருந்தால் போதும் வலி குறையும்.! இதுபோல் இரண்டு மூன்றுமுறை செய்தால் போதும் எத்தகைய சுளுக்கும் சரியாகிவிடும்!
நலம் பெருகட்டும்  …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:

Post a Comment