இயற்கை வழியில் கோபத்தை குணப்படுத்துங்கள்
கோபம் என்பது நமது ஏமாற்றம் பிறரின் கவனக் குறைவான செயல்
நமது அதிக எதிர்ப்பார்ப்பு நரம்பு மண்டலத்தின் ஓய்வில்லாத செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் டக்கென்றோ அல்லது நீண்ட காலமாகவோ ஒருவருக்கு கோபம் வரும்!
கோபம் வந்தவுடன் அதற்கு உடனடியான எதிர்வினை ஆற்றாமல் மூன்றுமுறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு வெறுமனே கோபத்தை கவனிக்க ஆரம்பித்தால் 30 விநாடிகளில் கோபம் காணாமல் போய்விடும்.!
இது சாதாரண கோபத்திற்கு சரி ஒருவர் தவறுதலாக காலை மிதித்துவிட்டார் நமது பொருளை தெரியாமல் எடுத்துவிட்டார், மனைவி கவனக்குறைவாக சட்டையில் சாம்பாரை கொட்டிவிட்டார் என்றால் சரி.!
அற்புதமாக இது வேலை செய்யும். ஆனால், நாட்டில் நடக்கும் அரசியல் பித்தலாட்டம், கல்விகொள்ளை, வியாபார மோசடி, இயற்கை வளத்தை சூரையாடுதல், நமது சொத்தையும் ஆரோக்கியத்தையும் அபகரித்தல் போன்றவற்றினால் சிலருக்கு பெரும்கோபம் வரும்!
புத்தரும், இயேசுவும்,காந்தியும், நேதாஜியும், பாரதியும், விவேகானந்தரும் ,
காமராஜரும், அய்யா நம்மாழ்வாரும் இப்படிப்பட்ட சமூக கோபங்களில் தன்னை உணர்ந்தவர்கள் தான் அதன் பாதிப்பால் தான் நல்லறத்திற்கான பாதையையும் இந்திய சுதந்திரத்திற்கான வழியையும் ஆரம்பக் கல்விக்கான விதையையும் இயற்கையின் மலர்ச்சிக்கான வழியையும் அவர்கள் காட்டிச் சென்றனர்.!
ஆதலால் பெருங்கோபம் இருப்பவர்கள் ஒன்று மாற்றத்திற்கான முயற்சிகளில் இறங்கி தங்கள் கோபத்திற்காண காரணங்களை அழிக்க வேண்டும்.! அல்லது பிறரைப்போலவே உங்களாலும் முடிந்தவரை ஊழல்
செய்து இயற்கையை சுரண்டி என்று இந்த நேரம் மகிழ்ச்சியாக வாழுங்கள். அல்லது எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாக இருங்கள்.! கோபம் பறந்துவிடும்.!
இதுதான் இன்றைய தந்திரமாக இருக்கிறது! எதற்கும் என் பிள்ளைகள், என்தேசம் என்றெல்லாம் எண்ணாமல் என்சுகம், என் வருமானம், என் உயர்வு என்றெல்லாம் எண்ணி இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக கடத்துங்கள்.! நாளை என்பது வர வாய்ப்பு குறைவு என்று எண்ணினால் போதும் கோபம் காணாமல் போய்விடும்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
கோபம் என்பது நமது ஏமாற்றம் பிறரின் கவனக் குறைவான செயல்
நமது அதிக எதிர்ப்பார்ப்பு நரம்பு மண்டலத்தின் ஓய்வில்லாத செயல்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் டக்கென்றோ அல்லது நீண்ட காலமாகவோ ஒருவருக்கு கோபம் வரும்!
கோபம் வந்தவுடன் அதற்கு உடனடியான எதிர்வினை ஆற்றாமல் மூன்றுமுறை மூச்சை இழுத்து விட்டுவிட்டு வெறுமனே கோபத்தை கவனிக்க ஆரம்பித்தால் 30 விநாடிகளில் கோபம் காணாமல் போய்விடும்.!
இது சாதாரண கோபத்திற்கு சரி ஒருவர் தவறுதலாக காலை மிதித்துவிட்டார் நமது பொருளை தெரியாமல் எடுத்துவிட்டார், மனைவி கவனக்குறைவாக சட்டையில் சாம்பாரை கொட்டிவிட்டார் என்றால் சரி.!
அற்புதமாக இது வேலை செய்யும். ஆனால், நாட்டில் நடக்கும் அரசியல் பித்தலாட்டம், கல்விகொள்ளை, வியாபார மோசடி, இயற்கை வளத்தை சூரையாடுதல், நமது சொத்தையும் ஆரோக்கியத்தையும் அபகரித்தல் போன்றவற்றினால் சிலருக்கு பெரும்கோபம் வரும்!
புத்தரும், இயேசுவும்,காந்தியும், நேதாஜியும், பாரதியும், விவேகானந்தரும் ,
காமராஜரும், அய்யா நம்மாழ்வாரும் இப்படிப்பட்ட சமூக கோபங்களில் தன்னை உணர்ந்தவர்கள் தான் அதன் பாதிப்பால் தான் நல்லறத்திற்கான பாதையையும் இந்திய சுதந்திரத்திற்கான வழியையும் ஆரம்பக் கல்விக்கான விதையையும் இயற்கையின் மலர்ச்சிக்கான வழியையும் அவர்கள் காட்டிச் சென்றனர்.!
ஆதலால் பெருங்கோபம் இருப்பவர்கள் ஒன்று மாற்றத்திற்கான முயற்சிகளில் இறங்கி தங்கள் கோபத்திற்காண காரணங்களை அழிக்க வேண்டும்.! அல்லது பிறரைப்போலவே உங்களாலும் முடிந்தவரை ஊழல்
செய்து இயற்கையை சுரண்டி என்று இந்த நேரம் மகிழ்ச்சியாக வாழுங்கள். அல்லது எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அமைதியாக இருங்கள்.! கோபம் பறந்துவிடும்.!
இதுதான் இன்றைய தந்திரமாக இருக்கிறது! எதற்கும் என் பிள்ளைகள், என்தேசம் என்றெல்லாம் எண்ணாமல் என்சுகம், என் வருமானம், என் உயர்வு என்றெல்லாம் எண்ணி இருக்கும் நாட்களை மகிழ்ச்சியாக கடத்துங்கள்.! நாளை என்பது வர வாய்ப்பு குறைவு என்று எண்ணினால் போதும் கோபம் காணாமல் போய்விடும்.!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
No comments:
Post a Comment