Wednesday, April 20, 2016

இயற்கை மருத்துவ மேதை பீச்சாம்ப்.!

பீச்சாம்ப்  என்ற இயற்கை மருத்துவரும் லூயி பாயிஸ்டர் என்ற  அலோபதி  மருத்துவரும்  ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள்.

நோய்கள் வருவதற்கு நோய்க் கிருமிகளே காரணம்.
அதனால் நோய்க் கிருமிகளை  அழிக்கின்ற ஆண்டிபயோடிக் மருந்தை ஊசி மூலமாக உடலில் செலுத்தினால் கிருமிகள் அழிந்துவிடும். மனிதன் நோயிலிருந்து விடுபடலாம் என்பது லூயி பாயிஸ்டரின் தத்துவம்.!

ஆனால் பீச்சாம்ப்பின் கருத்து என்னவென்றால்  நோய் வருவதற்கு நோய்க்கிருமிகள் முதல் காரணமல்ல. உடலில் உள்ள கழிவுகளின் தேக்கமே நேய்க்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. அதுவும் கிருமிகள் உருவாவதே  கழிவுகளை சுத்தப்படுத்தத்தான்.  அதனால் கிருமிகளை கொல்வதால் மனிதன் இரண்டு விதத்தில்  பாதிக்கப்படுவான்.
ஒன்று அவன் உடலில் இயற்கையாக நடக்கும் சுத்திகரிப்பு பாதிக்கப்படுகிறது. இரண்டு இப்பொழுது தரப்பட்ட ஆண்டிபயோடிக் குப்பைகளால்  இயற்கையான நோய் எதிர்ப்பு திறனும் குன்றி விடுகிறது. அதனால் நோயை நீக்க வேண்டுமானால் உடலில் தேங்கியுள்ள, ஜீரணமண்டலத்தில் தேங்கியுள்ள, இரத்த குழாய்களில் தேங்கியுள்ள கழிவுகளை முற்றிலும் நீக்கிவிட்டால் போதும். எந்த நோய்களையும் குணப்படுத்திவிடலாம் என்றார் பீச்சாம்ப்.

இது " ஓதுகின்ற மலக்கட்டை யொழித்து விட்டால் உடம்பிலுள்ள வாதையெலாம் ஒடுங்கிப் போகும் தாதுற்ற சிறுநீரை தெளியவைத்தால்  சடலத்திலுள்ள வேகமெல்லாந் தணிந்து
போகும் கோதுற்ற உமிழ் நீரை முறியவைத்தால் கூட்டிலுள்ள பகையெலாம் குலைந்து போகும் கோதடர்ந்த இவை மூன்றும் களங்கமற்றால் கொல்ல வரும் காலனையும் வெல்லலாமே "

என்ற அகத்தியரின் கூற்றை மெய்ப்பிப்பதாய் இருந்தாலும். பீச்சாம்ப்  பல புதுமைகளை  செய்தார் அதாவது சித்தர்கள்
தங்கள் உள்ளுணர்வையும் நோயாளிகளையும் அடிப்படையாக வைத்தே பல நோய்களுக்கு பரிகாரம் கண்டறிந்தனர். ஆங்கில மருத்துவர்களோ எலியையும் குரங்கையும் இன்னும் பல உயிரினங்களையும் இறந்த மனிதனின் உடலையும் வைத்து ஆராய்ந்தே இன்றும் பரிகாரம் காண்கிறார்கள் … பீச்சாம்ப்போ தன் உடலையே தனது ஆராய்ச்சி களமாக பயன்படுத்தினார்.! எனெனில் இயற்கை உணவு நோயாளிக்கு மருந்து மற்றவர்களுக்கு அதுவே விருந்தாய் அமையும்.  என்பதே அவரின் கண்டுப்பிடிப்பாய் இருந்தது.!

பழ உணவுகளில் வாழ்ந்து வந்த பீச்சாம்ப்  கிருமிகளே நோய்களை உருவாக்குகின்றன என்ற ஆங்கில மருத்துவ மேதைகளை சவாலுக்கு அழைத்தார்.!  அவர்களின் முன்னிலையில் நோய்க்கிருமிகளை குடித்து காண்பித்தார். ஊசியின் மூலம் தன் உடலில் செலுத்தச் சொன்னார். ஆனாலும் அவருக்கு எந்தநோயும் வரவில்லை.  அன்றே  கழிவுகளின் தேக்கமில்லாத  தூய்மையான
 உடலில் எந்த நோய்க்கிருமிகள் செலுத்ப்பட்டாலும் கிருமிகளே அழியும். தூய உடலுக்கு அழிவில்லை.! என்று நிருபித்தார் பீச்சாம்ப்.

இது மட்டுமின்றி தன்கையையே கீறி எந்த மருந்தும் போடாமலே குணப்படுத்தினார்! பிறகு மற்றொரு முறை அசைவ உணவுகளையும் ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தி  கொண்டே கைகளை  கீறி சோதனை செய்தார் புண் சீழ்ப்பிடித்து துர் நாற்றம் வீசியது. பிறகு இயற்கைக்கு திரும்பி கையை குணப்படுத்திக் காட்டினார்.!

இதைப்பார்த்த மக்கள் அவரை பின்பற்றி நோய்களிலிருந்து குணமடைந்தார்கள்.

அதனால் லூயிபாயிஸ்டர் போன்ற ஆங்கில மருத்துவ துறையினரும் மருந்து விற்பனையாளர்களும் சேர்ந்து அந்த இயற்கை மாமேதையை மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொன்றார்கள்.!
அவர் மறைந்தாலும் அவரின் தத்துவம் வென்றுவிட்டது …! இந்தியாவின் மகாத்மா காந்தியை போல உலகெங்கிலும் கோடிக்காண மக்கள் பீச்சாம்பை  பின்பற்றினார்கள்.!

இன்றும்  பின்பற்றி வருகிறார்கள்.!

இயற்கைக்கு
அழிவில்லை.!

உடலில் நோயென்று எதுவுமில்லை.!

 தன் உடலை சுத்திகரிக்கத் தெரிந்தவனுக்கு  எந்த பண்ணாட்டு குப்பையும் தேவையே இல்லை.!

வாழ்க பீச்சாம்ப் புகழ் …!

இயற்கையோடு இயைந்து இன்புற்று வாழ்வோம்.!

குறிப்பு: இந்தபதிவு
 DR. A.V.G. ரெட்டியின் பரிபூரண உடல் நலம் என்ற நூல் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment