Wednesday, April 20, 2016

பழங்கள்

பழங்களை உணவாக உண்ண சிறு பருவத்திலிருந்தே பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இரத்தம் சுத்தமாக இருப்பதுடன் பிள்ளைகள் ஆண்மையும் சாமுத்திரிகா லட்சணமும் உள்ளவர்களாக வளருவார்கள்.  அரிசி, இறைச்சி, காய், பருப்பு முதலியவற்றை கொடுத்து பிள்ளைகளை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு தீங்குதான் செய்கிறார்கள். காபி,தேயிலைப் பானம்  பிள்ளைகளுக்கு கொடுக்கக் கூடாதென்று நான் சொல்லத் தேவையில்லை.!

மகாத்மா காந்தி
- ஆரோக்கிய வழி

இன்றைக்கு இவற்றோடு பாட்டில் டிரிங்ஸ், பாக்கெட் உணவுகளையும்
பல பன்னாட்டு குப்பை உணவுகளையும் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம். இதன் கேடுஅளவிட முடியாதது.! பழங்களையும் தேங்காயையும் ஒருவேளை உணவாகவே அனைவரும் உண்ணலாம். உணவோடு ஓரிரு பழங்களை தின்பது அதிக பலனைத் தராது.!
அனைத்து பழங்களையும் காய்கறிகளையும் இயற்கை உப்பு <இந்துப்பு> நீரில் ஊறவைத்து பிறகு சாதாரண நீரில் கழுவி பயன்படுத்துவதே சிறந்தது.!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

No comments:

Post a Comment