Thursday, April 7, 2016

யோகா பயிலும் பொழுது.....

             யோகா பயிலும் பொழது
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

*5 வயது முதல் ஆயுள்வரை ஆண்,பெண், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மனிதர்கள் அனைவரும்  யோகா கற்கலாம்.!

*யோகா பயிலும் போது அனைவரும் உள்ளாடை அணிந்து கொள்வதோடு உடலை வதைக்காத எளிய ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.!

*நோய்களை குணப்படுத்த யோகா பயில்பவர்கள் ஒரே விதமான நோய்க்கான தனி வகுப்பாக  பயில்வது சிறந்த பலனைத் தரும்.!

*சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும் சாப்பிட்ட பிறகு என்றால் மூன்று மணிநேரத்திற்கு பின் யோகா பயிலலாம்!

*இதயநோயாளிகள், மூன்று மாதத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்கள், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகள், மாதவிடுமுறை உள்ள பெண்கள்
எளிய மூச்சுப்பயிற்சி தியானம், சாந்தியாசனம் செய்யலாம்.
கடினமானப் பயிற்சிகளை செய்யக்கூடாது.!

*பத்மாசனம், சிரசாசனம் போன்ற எல்லா ஆசனங்களையும்  5 வயதுமுதல் 40 வயதுவரை உள்ள
அனைவரும் புதிதாக கற்றுக்கொள்ளலாம்.!

*நாற்பது வயதிற்கு மேல் கடினமான யோகாசனமான சிரசாசனம், விருச்சிகாசனம் , யோகநித்திரை போன்ற ஆசனங்களை புதிதாக கற்றுக் கொள்ளக் கூடாது.!

*ஏற்கனவே தொடர்ந்து உயர்நிலை ஆசனங்களை பயில்பவர்கள்
ஆயுள்வரை சிரசாசனம்  பூரண சக்ராசனம் போன்ற  ஆசனங்களை செய்யலாம். ஆனால், அப்படி பயிலும்போது முதுகுவலி கழுத்துவலி போன்ற உபாதைகள் தோன்றினால்  படிப்படியாக  ஆசனங்களை எளிய ஆசனங்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.!

* நாள்பட்ட நோய்களுக்கு எந்த வகையான மருத்துவம் செய்து கொண்டிருப்பவர்களும் கூடவே தினமும் ஒரு மணி நேரம் வரை எளிமையான யோகாப் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்யலாம்.!

*காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவை இருக்கும் போது யோகா பயிலக் கூடாது.!

*எந்த மருந்துகளையும் சாப்பிட்டு விட்டு யோகா பயிலக்கூடாது. யோகா முடிந்து சிறிது நேரத்தில் மருந்துகளை சாப்பிடலாம். பிறகு ஒரு மணிநேரம் கழித்தே உணவருந்த வேண்டும். அல்லது யோகா முடித்து சாப்பிட்டு விட்டு பிறகு மாத்திரை மருந்துகளை  எடுத்துக் கொள்ளலாம்.!

*கபாலபதி, சவனக்கிரியா, வாமணதௌதி, நேதி, அக்னிசாரா போன்ற  உள் சுத்திகரிப்பு பயிற்சியான கிரியை பயிற்சிகளை மாதம் இரண்டு முதல் நான்கு முறைகள் மட்டும் செய்தால் போதுமானது. தினமும் பயிலக்கூடாது.!

* பொதுவாக கிரியை செய்யும் நாளில் முதலில் கிரியை பிறகு ஆசனம், பிறகு பிராணாயாமம், பிறகு தியானம் என்று செய்ய வேண்டும்.!

ஆனால்  இதை நமது அனுபவத்தின் அடிப்படையில் சற்று மாற்றிக் கொள்ளலாம்.!

*உடற்பயிற்சி யோகாவை சேர்த்து பயில்வதாய் இருந்தால் முதலில் உடல்பயிற்சி பிறகு யோகாசனம், பிராணாயாமம் செய்யலாம்.!

*உடற்பயிற்சி யோகாவை தனித்தனியாக செய்வதாய் இருந்தால்  காலையில் யோகாவையும் மாலையில் உடற்பயிற்சியும் செய்யலாம்.!

*யோகா பயில்பவர்கள் முடிந்தவரை டீ, காப்பி,  போதை வஸ்துக்கள் அசைவ உணவு, செயற்கை இரசாயண உணவுகளை  தவிர்த்துக் கொள்வதோடு நேர்மையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.!

*கிருத்தவர்கள், இஸ்லாமியர்கள் யோகா செய்யக் கூடாது என்பதும்
அதில் மந்திரம் உள்ளது, யோகா ஒரு வழிபாட்டு  முறை என்று சொல்வதும் முட்டாள்தனமானது. ஏனெனில், யோகாவை மந்திரம் இல்லாமலும் செய்யலாம், வழிபாடாகவும் செய்யலாம், உடல் மனப்பயிற்சி ஆகவும் செய்யலாம்!
இங்கு எந்தக் கட்டாயமும் இல்லை.
ஒருவேளை நாம் செல்லும் வகுப்பில் தினமும் மந்திரம், ஜெபம் செய்யும் வழக்கமிருந்தாலும் பிடிக்காதவர்கள் அவரவர் மத கோட்பாட்டின் படி பிராத்தனை செய்து பயிற்சியை ஆரம்பிக்கலாம்.!

ஆலய வழிபாடு செய்வது, இஸ்லாமிய  தொழுகை, சர்ச் பிராத்தனை என்று எதற்குமேயோகாப் பயிற்சி போட்டி இல்லை.!

யோகா என்பது ஆதியில்  இந்திய முனிவர்கள் கண்டறிந்த இயற்கை வாழ்வியல் மருத்துவ முறை. யோகாவில் உள்ள ஒரு ஆசனத்தையே பலருக்கும் தகுந்தாற் போல் பல வழிமுறையில் கற்பிக்க முடியும்.!

மேற்கண்ட வழிமுறைகளை அனைத் தையும் முடிந்தவரை கடைப்பிடித்து என்றும் ஆரோக்கிய மாகவும்  இளமை யாகவும் நிறைநிலை பெற்றும் வாழ் வோம்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment