Wednesday, April 13, 2016

சிட்டுக்குருவி லேகியம்

சாதிக்காய்
சாதிப்பத்திரி
தக்கோலம்
மதுரம்
மாயக்காய்
அதிவிடயம்
குரோசணி
திரிபலா
தாளிசபத்திரி
தகரவிதை
பூனைக்காலி விதை
திரிகடுகு
செம்பகமொட்டு
கொட்டம்
வால்மிளகு
கஞ்சா
முந்திரிப்பழம்
அபின்
தாறவிதை

வகைக்கு 15 கிராம் சேகரித்துக்கொண்டு 300 கிராம் சுத்தம் செய்த சிட்டுக்குருவி.

செய்முறை:-

முதலில் மருந்துகள் அனைத்தையும்நன்றாக சுத்தம் செய்துஉரலில் இடித்து வைத்துக்கொண்டு குருவியின் தூவல்பின்னி, குடல் எல்லாவற்றையும்எடுத்து சுத்தம் செய்துகொண்டு  குருவின் வயிற்றில் இடித்த  மூலிகை சரக்குகளை அடைத்து ஊசிநூல் கொண்டு சுத்திதைத்து வைத்து விட்டு ஒரு சட்டியில் தேவை யான அளவு பசுநெய் விட்டு குருவியை சிவக்க பொறித்து எடுக்கவும். பிறகு குருவி களை எடுத்து நூலைப்பிரித்து விட்டு அனைத்தையும் உரலில் போட்டு நன்றாக இடித்து எடுத்துவிட்டு  இதன் எடைக்கு பாதியளவு நாட்டுவெல்லமும் பாதியளவு பனங்கற்கண்டும் சேர்த்து வைத்துக்கொண்டு  ஒரு சட்டியை அடுப்பில் வைத்து  அரைலிட்டர் பசும்பாலை ஊற்றி வைத்துவிட்டு பால் சூடானதும் அதில் மருந்து சரக்குக ளைப்போட்டு சிறிய தீயில் நன்றாக கிளறி வரவும் பாகுபதம் வந்ததும் குருவி பொறித்த மீதி நெய்யையும் 200 மில்லி தேனையும் விட்டுத் தொடர்ந்து  எல்லா வற்றையும்   கிளறிக் கொண்டே வரவும் அனைத்தும் இறுகி கம்பிபதம் வந்ததும் இறக்கி ஆறியபின் பரணியில்பத்துரப்படுத்துக.!


தினமும் காலை, இரவு உணவிற்கு ஒருமணி முன்பு நெல்லிக்காய் அளவு லேகியத்தை சுவைத்து சாப்பிட்டு கால்டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீர் குடித்து வர,

போக சக்தி அதிகரிக்கும், விந்தணுக்குறைபாடு சரியாகும், கைகால் கடுப்பு,
மந்தம்,
சோர்வு,
கடும்விக்கல்,
இடுப்புளைவு,
கைநடுக்கம்,
உடல் இளைப்பு தண்டுவடக்கோளாறுகள்

ஆகியவை சரியாவதுடன் வெள்ளைப் படுதல், அதீத உதிரப்போக்கு, விந்தொழுக்கு போன்ற மேகவியாதிகள் இருபத்தொன்றும் போகும்.!

கிடைக்காத மூலிகைகளை தவிர்த்து அல்லது அதே குணமுள்ள மூலிகையை சேர்த்து லேகியம் கிண்டலாம். சிட்டுக் குருவி இல்லையெனில் நாட்டு கோழிக் குஞ்சுகளை பயன்படுத்தலாம்.!


amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:

Post a Comment