Monday, April 11, 2016

பிராண சிகிச்சை

பிராண சிகிச்சை என்றால்   பிரபஞ் சத்தில் நிறைந்துள்ள உயிர்க்காற்று உடலில் நிறைந்துள்ள உயிர்க்காற்று  இந்த இரண்டையும் பயன்படுத்தி நோயை குணமாக்கும் முறை.!

இதை ஐந்து விதமாக செய்ய முடியும்

1.எண்ணத்தால்
2.பார்வையால்
3.சுவாசத்தால்
4.கை வீச்சால்
5.தொடுவதால்

எண்ணத்தால் நோய் கொண்டவரின் உடலில் நமது எண்ணத்தை ஒருமைப் படுத்தி  பிணி விலகுவதாக தினமும் பிராத்தித்தல்.

தனது பார்வையால் நோய்கொண்ட இடத்தை பார்த்து தனது பிராணனை அங்கே செலுத்தி பிணியை விரட்டுதல்.
நோய்கொண்ட இடத்தில் பிரபஞ்ச ஆற்றலை கொண்டு வாயால் ஊதுவதாலும் நோயை குணமாக்க முடியும்.

பாதிக்கப்பட்ட இடத்தை தொடாமல் மயிரிழை இடைவெளியில் வலது கையை நிறுத்தி அந்தப் பகுதியின் தீமையை கைகளில்  உறிந்து தரையில் மூன்று முறை உதறிவிட்டு இதுபோல் மேலும் 5 முறைகள் செய்துவிட்டு பிறகு பிரபஞ்ச ஆற்றலை எடுத்து  அதே பகுதியில் விரல் நுனியால் செலுத்துதல்.
பாதித்த இடத்தை மிருதுவாகத் தொட்டு கெட்டவற்றை எடுத்து உயிர்க்காற்றை செலுத்தலாம்.

மேற்கூறிய சிகிட்சையை உபயோகப் படுத்த ஆர்வமுடையவர்கள் நல்லொழுக் கம் முடையவர்களாகவும், எளிமையானவர்களாகவும், இயற்கை யோடு இயைந்து வாழும் தன்மையை கொண்ட ஆரோக்கியமானவராகவும் இருப்பது மிக முக்கியம்.!

இது ஒருவித நம்பிக்கை வைத்தியம். பிரபஞ்ச ஆற்றலை முழுதாக நம்பி வைத்தியம் செய்பவர்களுக்கே இது  ஆச்சரியமான விதத்தில் முழுவதும் பயனளிக்கும். பணத்திற்காக, சுய ஆதாயத்திற்காக மட்டுமே இம்முறைகளை கையாளும் போது சிறிது பலனளிப்பது போல் தோன்றி இல்லாது போகும்.!

ஆதாரம்: சுந்தர யோகசிகிட்சை யோகாச்சார்யா,
பெங்களூர் சுந்தரம்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment