Tuesday, April 12, 2016

பழைய சோற்றின் பெருமை

1. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.

3.உடல் சோர்வை போக்குகிறது.

4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை தடுக்கிறது.

5.உடல் சூட்டை தணிக்கிறது.

6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து வெளியேற்றுகிறது.

7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.

8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

பலவிதமான நன்மைகளைத் தரும் பழைய  சோறு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும் "HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்காவிலும் கேட்க ஆரம்பித்தனர்


ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும் என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு "பழையதை" பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…!!


சரி..."பழைய சோற்றை" எப்படி செய்வது?


1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்………..!!


2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் மோர் கலந்து சின்னவெங்காயம், சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப் பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….!!


ஆகா….!!! இதுதான் தேவாமிர்தம் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள் இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.


பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர் கள்!

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டா வையும் தேடி அலைவதை நிறுத்து வோம். உடல் நலத்தை பேணுவோம்.!

அதிகம் பதிவர்களால் காப்யடிக்கப்பட்ட நமது பழைய பதிவு இது!

amyogatrust.blogspot.com
Mobile:9629368389

No comments:

Post a Comment