உலகில் உள்ள எல்லா தாவரங்களும் கரியமிலா வாய்வை உண்டு அக்ஸிஜனை வெளிவிடுகின்றன. அதில் சுத்தமான பிராணக் காற்றும் கலந்திருக்கும். ஆனால், வாழை இலை மட்டுமே கரியமிலா வாய்வை உண்டு சுத்தமான பிராணக்காற்றை மட்டுமே வெளிவிடுகின்றன.!
இன்றைக்கு சைனா போன்ற நாடுகளிலும் நமது பெருநகரங்களிலும் சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலித்து விட்டு காற்றை விற்கிறார்கள். ஆனால் அதுவும் தூய பிராணாக்காற்று அல்ல.! ஏனெனில் காற்றைப் பிடித்து அதில் உள்ள மாசை வடிகட்டி நமக்கு அளிக்கிறார்கள்.! இதில் உண்மையில் பிரணாக்காற்று இருப்பதில்லை. வெறும் சக்கையான காற்று மட்டுமே உள்ளது. இதனால் உடலுக்கு பெரிய நன்மை எதுவும் கிடைக்காது. ஆனால், இயற்கையான வாழை இலையில் சாப்பிடுவதாலும், வாழையில் உள்ளிருந்து வெளியேறும் காற்றை சுவாசிப்பதலேயும் நமது உடலில் 100% பிராணக்காற்று அதிகரிக்கும்.! அதனால் தான் உடல் எரிந்த நிலையில் பிரணான் அல்லாடிக் கொண்டிருப் பவர்களை வாழையில் படுக்க வைக்கிறார்கள்.!
இது மட்டுமல்லாமல் இலையை சுட்டு புண்களில் தடவுவது, வயிற்றுப் புண்ணுக்கு காய்ந்த இலையோடு தேன் கலந்து சாப்பிடுவது போன்ற பல்வேறு பழக்கங்கங்களை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தனர் அதில் ஒன்றுதான் வாழை இலைக்குளியல் வாழை இலைக்குளியல் செய்வதால் போகுப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்க முடியும் என்கிறார்கள் இயற்கை ஞானிகள்.!
வாசியை சுத்தப்படுத்தும் இரகசியம் தெரிந்து விட்டால் உடலின் சேர்ந்து விட்ட அளவுக்கதிகமான கரியமிலா வாய்வை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றி விடலாமே.!
வாழை இலைக்குளியல்
செய்முறை
1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!
2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.
3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.!
4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.
5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!
6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!
7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.
8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!
9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து
தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!
வாழைகுளியல் பலன்கள்
""''"'''"''"""""""'"'"'"
1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ளக் கொட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!
இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக்குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!
குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!
கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!
வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!
அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
நாகர்கோவிலில் விரைவில் நடக்க இருக்கும் வாழையிலை குளியல் உள்ளிட்ட இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்துகொள்ள நம்மை அனுகலாம் …!
amyogatrust.blogspot.com
mobile:9629368389
No comments:
Post a Comment