Friday, April 8, 2016

இயற்கையோடு இயைந்து ...

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.!

சமீபத்தில் தினத்தந்தியில்
ஒரு பெண்மணியை பற்றி எழுதி இருந்தார்கள். 104 நாட்கள் நீர் முதல் எந்த உணவையும் சாப்பிடாமல் உயிரோடு இருந்தார்களாம்.!

நமது மாணவர் ஒருவர் இது சாத்தியமா அய்யா என்று கேட்டார்.!

நான் கூறினேன் பல ஆண்டுகளாக விஷத்தை மட்டுமே உண்டு நாம் வாழ்கிறோம். அவர் 104 நாட்கள் விஷத்தை உண்ணாமல் வாழ்ந்துள்ளார், அவ்வளவுதானே என்றதும் நாம் எங்கே விஷத்தை உண்டோம் என்று ஆச்சரியமாக கேட்டார்.

காலையில் எழுந்ததும் என்ன செய்வீர்கள்? கோல்கெட் பேஸ்ட்டில் பல் விளக்குவேன்.

'சரி, அதில் நிக்கோடின் முதல் பல இரசாயண விசம் உள்ளது. அடுத்து?

" இரண்டு டம்ளர் மினரல் வாட்டர் குடிப்பேன்"

சரி, அதில் இயற்கையான ஆக்ஸிஜன் சிதைக்கப்பட்டு செயற்கை இரசாயணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது

அடுத்து? "

'ஒரு கப் டீ குடிப்பேன்'

சரி, பாக்கெட் பாலில் குளோரின் வாஷிங்சோடா போன்ற பலவிதமான  இரசாயணங்கள் சீனியில்  மேற்கண்ட பொருட்களோடு சல்பேட் போன்ற  பத்துவிதமான இரசாயணங்கள் கலந்துள்ளது, தேயிலை 32 விதமான பூச்சி மருந்தால் பராமரிக்கப்பட்ட ஒரு விசப்பொருள்.  அடுத்து?

காலையில் 4 அல்லது 5 இட்லி சட்னி '
பெரும்பாலான வயல்களில் பூச்சி மருந்தை நம்பியே நெல் விதைக் கிறார்கள் எவ்வளவு விலை உயர்ந்த அரிசியை வாங்குவீர்களோ அவ்வளவு நச்சுப்பொருள் அதிகமாக இருக்கும்.

அடுத்து?

'பதினொரு மணிக்கு டீ வடை '

" அருமை, இதில் கெமிக்கல் பாலும் போலியான சத்தில்லாத சக்கை எண்ணையும் சந்தேகத்திற்குரிய பருப்பும். அடுத்து?

' மதியம் மீன்கறி, சோறு, இரசம் '

" சரி, மீனை கடலுக்கு போய் உடனே பிடித்து வருவதில்லை பலநாட்கள் கடலில் தங்கியே மீன்பிடித்து வருகிறார்கள். அப்படி பலநாட்கள் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸ்பெட்டியில் வைத்தால் மட்டும் போதாது, அதற்காகத்தான் மார்ச்சுவரியில் பிணத்தை அழுகாமல் பாதுகாக்க பயண்படுத்தும் பென்சாயின் என்ற ஒரு இரசாயணத்தை பயன்படுத்துகிறார்களாம், கருவாட்டிற்கும் இதையே தேய்த்து காயவைத்தால் போதுமாம் உப்பு தடவ வேண்டாமாம், ஒருவேளை நீங்கள் பிராய்லர் கோழியோ, முட்டையோ சேர்ப்பதாய் இருந்தாலும்  அவை முப்பது நாட்களில் செயற்கை இரசாயண ஊசிகளைப் போட்டு உருவாக்கியது. அடுத்து?

'அப்பப்ப கேன்வாட்டார், சர்பத், மோர், சாயங்காலம் டீ, அல்லது சுக்காப்பி வடை '
"கேன்வாட்டர் என்பது சத்துநீக்கிய சப்பைத்தண்ணீர், பால் விசம்னா அதில் தயாராகும் மோர் அமிர்தமாவா இருக்கும், சர்பத்துனா சாக்ரீனும் கலர்பொடியும் அதில் சேரும் எலுமிச்சையும். சுக்குக்காப்பியும் இரண்டு கெட்டானா இருக்க வாய்ப்புண்டு. உறுதியா சொல்ல முடியாது. அடுத்து?

'இரவு சோறு, புரோட்டா, இல்லைனா சப்பாத்தி '

"அருமை, புரோட்டால சேர்க்குற மைதா வைத்தான் மருந்து ஆராய்ச்சிக் கழகத்தில எலிகளுக்கு சுகரை வரவழைக்கக் கொடுக்கிறார்களாம், மைதாவை தின்று எலிக்கு சுகர்வந்த உடன் அதை இந்த மருந்து குணமாக்குகிறதா என்று சில ஊசி மருந்துகளைப் போட்டு ஆராய்ச்சி   செய்வார்களாம். கோதுமை  கூட இயற்கையாய் விளைந்ததாகவும் தோல்நீக்காததாகவும் இருந்து அதில் மாவு திரித்து சப்பாத்தி போட்டால் தான் நல்லது.  அடுத்து?

'இரவில் இரண்டு வாழைப்பழம் '

பெங்களூர் வாழை என்று மரபணுவிலேயே விஷத்தை சேர்த்து செய்த பளபளப் பழங்களும் உண்டு, பருவத்திற்கேற்ப பலமூட்டை இரசாயணங்களை அள்ளிவீசி மெருகேற்றிய பழங்களும் உண்டு,
வாழைத்தண்டில் ஊசிகுத்திப் பழுக்க வைக்கப்படும் பழங்களும் உண்டு. அருமை அடுத்து?"

' எதாவது கொஞ்சம் சிப்ஸ், மிக்சர் என்றைக்காவது கொஞ்சம், சொவ்வாய் , வெள்ளி சுத்தமான சைவசாப்பாடு மட்டும்தான் '

" ஹஹ் ஹா.! நண்பரே முட்டைக் கோஸை இரசாயணத்தில் முக்கியெடுப்பார்கள், பச்சைப் பட்டணியை கலரில் ஊறவைத்து பேக் செய்வார்கள், கத்தரிக்காய் என்றாலே மரபணு மாற்றியதைதான் அனைவரும் விரும்பி வாங்குகிறார்கள்.! இன்னும் உப்பு, பெருங்காயம், அஜினாமோட்டோ,  ரீபைண்ட் ஆயில் எல்லாம்  முழு நச்சான விசப்பொருள்தான். அடுத்து?
'சும்மா, இருங்கள் அய்யா.! நீங்க சொல்றதைக் கேட்டாலே தலை சுத்துது'

"இதுக்கே இப்படியா? இன்னும் பிஸ்கெட், சாக்லேட், ஐஸ்கிரீம், ஹார்லிக்ஸ், பூஸ்ட்,பெப்ஸி, கோக், பீட்சா, சோப்பு, பவுடர், சென்ட் கதையெல்லாம் கேட்டா மயங்கிருவீங்க போலயே,
சரி இரவு கடைசியா என்னப் பண்ணுவீங்க?

இரவில் ஒருமுறை கோல்கெட்டால பல்விளக்கி விட்டு குட்நைட் மேட்டை வெச்சிட்டு எல்லோரும் தூங்கிருவோம். '

நண்பரே, நம்ம உடம்பில இருக்குற கோடிக்கணக்கான செல்களில் பலதும் கொசுக்களை விட மென்மையானது. வெளியே ஓடுற கொசுக்களை கொல்லும் குட்நைட் உங்களுக்குள்ள இருக்கிற செல்களை கொஞ்சவா செய்யும்?

' புரிஞ்சிருச்சி அய்யா,  ஏதோ.! அந்தம்மா, சாப்பிடாம 104 நாளு வாழ்ந்தது சாதனைனு நினைச்சேன். ஆனா, இவ்வளவு நாளு  இத்தனை விச  உணவுகளை உண்டும் சாக வாழுற மனுசன் ஒவ்வெருத்தரும்  சாதனையார்கள் தான்.! இன்று முதல், நானும் உங்களைப் போல இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி விடுகிறேன்.!

அதுதான், இவ்வளவு இரசாயண விஷங்களை கொடுத்தும் என்னை பாதுகாத்த  என்உடல்  இயற்கைக்கு நான் செய்யும் கைம்மாறு என்று கூறிவிட்டு முதலில் பல்பொடியில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்று கூறி நமது மூலிகைப் பல்பொடியை வாங்கிச் சென்றார் நமது மாணவர் பரமேஸ்வரன்.! "

*நம்மாழ்வார் அய்யா சொன்னதுபோல எவ்வளவு சின்னதாய் இருந்தாலும் பரவாயில்லை இயற்கையை நோக்கி இன்றே முதல் அடியை எடுத்து வையுங்கள்.! அதுவே உங்களையும் உங்கள் தலைமுறைகளையும் பாதுகாக்கும் உயரிய நெறி.!

முழுக்க முழுக்க 100% இயற்கை வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து உங்கள் எத்தகைய ஆரோக்கிய குறைபாடுகளையும் போக்கிக் கொள்ள என்றும் இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ ஏப்ரல் 29,30, மே 1 ஆகிய மூன்று நாட்கள் குமரிமாவட்டம் ஆரல்வாய்மொழியில் யோகா & இயற்கை வாழ்வியல் முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.!

amyogatrust.blogspot.com
mobile:9629368389

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment