Friday, April 15, 2016

சகல விஷங்களுக்கும் மேல் ஒத்தட மருந்து!!

குப்பைமேனி இலை
நத்தைச்சூரி
நஞ்சறுத்தான்
சிறியநங்கை
பெரியநங்கை
வெள்ளைப்பூண்டு
கருநொச்சி இலை
தைவாளை
கருடக்கொடி
அருகம்புல்
வெற்றிலை
வேப்பிலை
முருங்கைப்பட்டை
மாவிலங்குப்பட்டை
வகைக்கு 30 கிராம்

காயம், ஓமம், சாம்பிராணி, சுக்கு, மிளகு திப்பிலி, கடுகு, மஞ்சள், சூடம் எலிப்புழுக்கை, புறா எச்சம்ஆகிய வற்றை, வகைக்கு 10 கிராம்
சேகரித்துக் கொண்டு,

பச்சிலைகளை பொடியாக அறிந்து மருந்து சரக்குகளை  பொடித்து வெள்ளைத்துணியில்  இரண்டு முடிப்பாக தனித்தனியாக  கட்டி ஒருலிட்டர் வெப்பெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் துணிமுடிப்பை எடுத்து சற்றுபிழிந்து உச்சிமுதல் உள்ளங்கால் வரை ஒத்தடம் கொடுத்துவர விசத்தினால் ஏற்படும் ஜன்னி, மயக்கம், கைகால் குளிர்ச்சி, வாய்ப்புலம்புதல்,கைகால் முதுகு வளைந்து நிற்றல் , உடம்பு நிறமாற்றம்,வலி, உளைச்சல், விசங்கள் ஆங்காங்கே தங்கிநிற்றல், வீக்கம் உடனே நீங்கும். நான்கைந்து முறை ஒத்தடம் கொடுத்ததும் எண்ணைய் தீர்ந்துவிட்டால் மீண்டும் எண்ணைய் மட்டும் ஊற்றி சூடாக்கி  ஆறுநாட்கள் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.!

சமயோசிதம் போல் நாளைக்கு ஒருவேளையோ இருவேளையோ ஒத்தடம் கொடுக்கலாம்.!

உள்மருந்தாக பத்து நல்ல மிளகு இரண்டு வெற்றிலை இரண்டையும் சேர்த்து இடித்துக் கொடுக்கவும் < காலை, இரவு உணவாக பொடியரிசி கஞ்சி மட்டுமே அருந்தவேண்டும்

புளிப்புள்ள எந்தப் பொருளையும் தொடாமல் இருக்க வேண்டும். தேகம் உலராமல்,  ஈரத்தில் புழங்காமல் இருப்பது முக்கியம்.!

விஷ ஜந்துக்கள் கடியை முறிக்கும்
                    " மந்திரம் "

"ஓம் குருவே உமையார் தவித்து வந்து நிற்கிறாள் ஏறின நஞ்சைக் கொண்டு
இறங்காஇந்தவரனான இறங்
உன்னையும் எண்ணையும்  படைத்த பரமசிவன் பார்வதிதன்னணைசகல விசமும் இறங் இறங் நசி-மசி-நமச்சிவாயா இறங் இறங்"
நாலவது  வரியில் வரும் சகலவிசமும் என்ற வார்த்தைக்கு பதிலாக கடித்த ஜந்தின் பெயர் தெரிந்தால் குறிப்பிடலாம்.! இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து காலையில் தண்ணீரில் நின்று கொஞ்சம் கொஞ்சமாக லட்ச உரு ஜெபித்து
வசியப் படுத்த வேண்டும்.!
நஞ்சறுத்தான் இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து உச்சந்தலையில் தேய்த்து வருவதோடு கடிவாயில் நஞ்சறுத்தான் இலையை கசக்கிவிட்டு கட்டுப்போட வேண்டும்.!
நஞ்சறுத்தான் இலையும் மிளகும் சேர்த்து அரைத்து  நெல்லிக்காய் அளவு உள் மருந்தாக வெற்றிலை மிளகுக்கு பதிலாக கொடுக்கலாம்.!
நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:

Post a Comment