Monday, February 6, 2017

சுக வாழ்வுதரும் செம்பருத்தி நெய்

அடுக்கு செம்பருத்திப்பூ அல்லது நாட்டுச்செம்பருத்திப்பூ இடித்த சாறு 250 மிலி, சுத்த ஆமணக்கெண்ணெய் 250 மிலி,தேங்காய்ப்பால் 1 லிட்டர்
சங்குகுப்பி இலை சாறு 125 மிலி

இவற்றுடன்இரசகற்பூரம்,கிராம்பு,ஏலரிசி,மிளகு,கருஞ்சீரகம்,சீரகம்,சுக்கு,சாதிலிங்கம்,கார்போக அரிசி வகைக்கு 2 கிராம். மேற்கண்ட சரக்குகளை பொடித்து  அதோடு கொஞ்சம் தேங்காய்ப்பால்,செம்பருத்திசாறு விட்டரைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்கி அடுப்பேற்றி காய்ச்சி மெழுகு பதத்தில் இறக்கி வடித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துக.!

*பிறந்தது முதல் குழந்தைகளுக்கு வரும் சொறி,சிரங்கு,கரப்பன்,கரப்பன்கெட்டு,சிகப்பு,தடுப்பு,பொக்களம்,தொடை கரப்பான்,காதில் வரும் தடுப்பு,காது சீழ்வடிதல், விசகரப்பான்,தேக ஊறல், மலபந்தம் போன்ற வியாதிகளுக்கு வேளைக்கு 5 துளி  முதல் 20 துளி நெய்யை எடுத்து 3 மடங்கு தாய்ப்பால் அல்லது  சீரக கசாயத்தில் கலந்து நாளைக்கு இரண்டு முறை உணவிற்கு முன் கொடுத்துவர 20 நாளில் பூரண குணம்.*
*பெரியவர்கள் இதே நெய்யை இரண்டுத் தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் நாட்டுப்பசும்பால் அல்லது சீரக கசாயத்தில் கலந்து குடித்து வர  மேற்கண்ட கரப்பான் போன்ற  வியாதிகள் குணமாவதுடன் இதயபடப்படப்பு, மூலச்சூடு,பித்தம்,  கொழுப்படைப்பு,கொழுப்புகட்டி,பசியின்மை,மலச்சிக்கல் போன்ற வியாதிகள் குணமாகி பூரணமான ஆரோக்கியம் கிட்டும்*

பத்தியம்: குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் தாய் அசைவம்,புளி,சேனைக்காய்,எண்ணைய் பலகாரங்கள் இரசாயணம் கலந்த உணவுகளை தவிர்க்கவும். மருந்துண்ணும் பெரியவர்கள் தானே இவற்றை தவிர்த்து அல்லது முடிந்தவரை குறைத்துக்கொள்ள பூரண குணம் கிடைக்கும்.!

🌷இயற்கை மூலிகை
மருத்துவ தகவல்களுக்கு🌿
amyogatrust.blogspot.in

🌾100% இயற்கை மூலிகை பொருட்களுக்கு
AUM HERBALS 🌿
Mobile & Whats app
*9629368389*

No comments:

Post a Comment