Friday, February 17, 2017

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் …

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக  …

உயிர் நிறைந்த காற்றை பெறுக தாய்மடி அமுதைப்  பெறுக
பலம் தரும் நீரைப் பெறுக
உடல் வளர்க்கும் உணவைப் பெறுக நிலையான கல்வி பெறுக
வளமான வாழ்வை பெறுக
நலமான நட்பை பெறுக
உள்ளத்தில் உண்மை பெறுக
தொடர்கின்ற சுற்றம் பெறுக
உடன் வரும் முற்றம் பெறுக
அழகான இல்லம் பெறுக
இதமான உறக்கம் பெறுக
மனம் நிறைந்த பணியைப் பெறுக
புவி உயர்த்தும் பதவிகள் பெறுக
அன்பான துணையைப் பெறுக
பண்பான பிள்ளைகள் பெறுக
கொடுக்கின்ற இதயம் பெறுக
என்றும் உழைக்கின்ற உடலைப் பெறுக

எல்லோரும் இன்பம் பெறுக
எல்லோரும் அமைதி பெறுக
எல்லோரும் ஆனந்தம் பெறுக
எல்லா உயிர்களும் மேன்மையடைக …

வலம் வர தேரைப் பெறுக
நலம் உரைக்கும் நாவைப் பெறுக
சிந்தையது செம்மை பெறுக
செயலெல்லாம் வெற்றி பெறுக மகிழ்வான மனதைப் பெறுக
ஒளியாகும் தேகம் பெறுக
 அறம் உரைக்கும் குருவைப் பெறுக
உயர் ஞான யோகம் பெறுக
தவம் வழுவா நிலையைப் பெறுக
தரணியாளும் கலையைப் பெறுக
இறைமீது பக்தி பெறுக …
அது போதும் முக்தி பெறுக …!!!

----ஏகப்பிரியன்---

No comments:

Post a Comment