Saturday, February 4, 2017

முக்கிய மருத்துவக்குறிப்புகள் 05/01/17

[2/4, 21:49] Am Yoga: *தூதுவளை லேகியம்*

தேவையான பொருட்கள் :

தூதுவளை சமூலம் (தலை முதல் கால் வரை) – 1 கிலோ
ஆடாதொடை – 200 கிராம்
துளசி – 100 கிராம்
ஓமவல்லி – 100 கிராம்
கண்டங்கத்திரி – 50 கிராம்
இன்பூரல் – 50 கிராம்
(எல்லாம் சேர்த்து 1 கிலோ)

சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
இஞ்சி சாறு – 50 மில்லி
பனைவெல்லம் – 1 கிலோ
தேன், நெய் தேவையான அளவு

மேற்கண்ட மூலிகைகளை பச்சையாக சேகரித்து ஒன்று இரண்டாக உரலில் விட்டு இடித்து 2 லிட்டர் நீர் விட்டு 1 லிட்டர் ஆகும் வரை நன்கு காய்ச்ச வேண்டும். சுக்கு, மிளகு, சித்தரத்தை, அதிமதுரம் ஆகியவைகளை இளம் சூடாக வறுத்து நன்கு இடித்து வஸ்திர காயம் செய்து கொள்ளவும். இஞ்சியை இடித்து 50 மில்லி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். மூலிகை வேகவைத்த சாறு 1 லிட்டர் இஞ்சி சாறு 50 மில்லி இவைகளை ஒன்று சேர்த்து பனை வெல்லம் சேர்த்து அடுப்பில்  வைத்து காய்ச்ச வேண்டும். பனைவெல்லம் கரைந்ததும், சாறை வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து முதிர் பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். முதிர் பாகு பதம் வந்தவுடன் வஸ்திர காயம் செய்து வைத்திருக்கவும். சூரணத்தை அதில் போட்டு நன்றாக கலந்து நெய்விட்டு நன்றாக கிளர வேண்டும். பின்பு ஆறவைத்து சிறிது தேன் கலந்து பயன்படுத்தவும்.

தீர்வு : சளி, இருமல், ஆஸ்துமா
நாள் ஒன்றுக்கு உணவிற்குப்பிறகு 3 வேளை நெல்லிக்காய் அளவு பயன்படுத்தவும்.

*இணையப்பகிர்வு*
[2/4, 21:52] Am Yoga: *கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?*

நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா? அப்படியெனில் உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன் கிடைக்கும்.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இங்கு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. அதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பானம் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி!

அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வந்தால், இந்த பானம் குடலியக்கத்தை மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால், நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, வயிற்றில் உள்ள அமிலத்தின் தீவிரத்தைக் குறைத்து, அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள், வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

மஞ்சள் கலந்த துளசி நீரை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதற்கு அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தான் காரணம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் துளசி நீரில் மஞ்சள் கலந்து அதிகாலையில் எழுந்ததும் குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும்.!

*இணையப்பகிர்வு*
[2/4, 21:56] Am Yoga: *இரத்தக் பேதி குறைய*

சீரகம், கொட்டைக்கரந்தை, கடுக்காய் பூ ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மைபோல அரைத்துக் கால் ரூபாய் அளவு வில்லைகளாகத் தட்டிக் கொள்ள வேண்டும். வில்லைகளை பசு நெய்யில் வறுத்து சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை ஒரு வில்லை வீதம் எடுத்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கழிச்சல் கட்டுப்படும்.!

*இணையப்பகிர்வு*
[2/4, 22:07] Am Yoga: எந்த வகையான வாழைப்பழம் சாப்பிடலாம், எப்படி சாப்பிட வேண்டும் என்ற கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம்!
இதை கேட்கவே குளுக்கோஸ் சத்து இல்லாமல் இருப்பவர்களும் உண்டு!

மோரிஸ்  <}பெங்களூர் வாழை >தவிர அனைத்து பழங்களையும் சாப்பிடலாம்!
நன்கு பழுத்து இருக்கவேண்டும்!
காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மட்டுமே உணவாகவும், மருந்தாகவும் சிறந்த முறையில் பணியாற்றும்!
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள்
வாழைப்பழ உணவை சாப்பிட தயங்கினால்
இறுதி வரை, மருத்துவத்தை நம்பி,
நடைபிணமாக, வாழ்க்கை வேதனையாக கழியும்!

இப்பொழுது சாப்பிடுவதுப்போல வேகவேகமாக
சாப்பிட்டால் உணவாகவும் மருந்தாகவும் வேலை செய்யாது!
5 அ 6 பழங்கள் சாப்பிட்டாலும் பசி அடங்காது!
கெட்ட சர்க்கரையாக மாறி சர்க்கரை அளவை தூக்கிவிட்டு,
வீணாக சிறு நீரில் வெளியேற்றப்படும்!

வாழைப்பழத்தை சாப்பிடும் தெய்வீக முறை ஒன்றுள்ளது!
அதன் படி பழக்கப்படுத்திக்கொண்டு,
சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே,
அது "வாழவைக்கும் பழமாக" தன் வேலையை செவ்வன செய்யும்!
இல்லையானால் "மலமிலக்கியாக" மட்டுமே செயல்படும்!

ஒரு கடி வாழைப்பழத்தை,
அதன் சுவை முழுதும் நாவின் சுவை மொட்டுக்களால்
உறிஞ்சும் வரை, சுவைத்து,
சுவையற்றுப்போகும்வரை,
விழுங்காமல் வாயிலேயே வைத்திருந்து,
பின் சிறிது சிறிதாக விழுங்கவேண்டும்!

இப்படி சாப்பிட கற்றுக் கொள்பவருக்கு மட்டுமே முழு பலன் கிட்டும்!
இதற்கு "அக்கரை, கவனம், பொறுமை" தேவை!

முறைப்படி சாப்பிட்டால்
"இரண்டு பழங்களுக்கு மேல்" நம் உடல் கேட்காது!
திகட்டுவதன் மூலம் "போதும்" என சொல்லும்
10 நிமிடங்களே தேவைப்படும்!
அடுத்த நான்கு மணி நேரத்துக்கு பசி எடுக்காது!
தேவையான குளுக்கோஸ், தாவரக் கொழுப்பு, புரதம்,
சமைத்த உணவில் துளியும் கிடைக்காத உயிர் சத்துக்கள் மற்றும்
தாது உப்புக்கள் அனைத்தும்
"ஒருங்கே தரும் தெய்வீக உணவு வாழைப்பழம்!

கடின உழைப்பு உள்ளவர்களுக்கு இன்னுமொறு
பழம் தேவைப்படலாம்!

இப்படி சாப்பிடுபவர்களுக்கு நல்ல சர்க்கைரையாக(குளுக்கோஸ் ) மாறி,
உடல்,  செல்களின் தேவையை பூர்த்தி செய்தபின்,
மீதமிருக்கும் குளுக்கோஸ் சத்தை சேர்த்து வைத்துக்கொள்ளும்,
பிற்கால தேவைக்கு!

சமைத்த உணவில் நல்ல சர்க்கரை கிடைப்பது சிரமம்!
ஏனெனில் செயற்கையுணவில் தரமான சர்க்கரை கிடைக்க வாய்ப்பில்லை!
ஆகவேதான்,  "மூன்று வேளை மூக்குப் பிடிக்க சாப்பிட்டும்",
தரமான குளுக்கோஸ் கிடைக்காமல் கெட்ட சர்க்கரையாக,
சிறுநீரில் வெளியேறும் அவலம் தொடர் கதையாகிறது!

எனவே வாழைப்பழம் ஒரு கடியை,
"70 முதல் 80" முறை மென்றால்தான் சரியான தீர்வு கிடைக்கும்!
முகம் சுளிக்காதீர்கள் 10 நிமிடங்களே இதற்கு போதுமானது!

செய்து பார்க்காமல் எரிச்சலடைய பழகிக்கொண்டோம்!
செய்து பாருங்கள், எளிமையாக இருப்பதை உணர்வீர்கள்!
சர்க்கரை நோயுள்ள ஒருவரையும் இனி காணமுடியாது!
அனைத்து நோய்களிலிருந்தும், வலிகள், வேதனைகளிலிருந்தும்
விடுதலை பெறலாம்!

சளி, வீஸிங், ஆஸ்துமா, வயிற்றுப் பிரச்சினைகள்,
உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து வேதனைகளிலிருந்தும்
விடுதலை தரும் "சகலரோக நிவாரணி"
வாழைப்பழ உணவு!
எனவேதான் கடவுளுக்குப் படைக்கும் தகுதியை பெற்றிருக்கிறது!

பழ உணவு பழகியவர்களுக்கு கிடைக்கும்
"பாக்கியம்" என்ன தெரியுமா?
இரப்பை அழுத்தமின்றி லேசாக இருக்கும்,
ஆனால் நிறைவான சத்துக்கள் கிடைக்கப்பெற்று
சுறுசுறுப்பாகவே இருப்பார்கள்!
சலிப்பில்லாமல் தமது கடைமைகளை செய்வார்கள்!

*இணையப்பகிர்வு*
[2/5, 13:02] Am Yoga: *நீர்க்கட்டி கரைய*

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க சில டிப்ஸ்..

வெப்பம்

சுடுநீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதனைக் கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

விளக்கெண்ணெய்

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.

குறிப்பாக இந்த விளக்கெண்ணெய் பேக்கை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் ஓவுலேசனுக்கு பின் பயன்படுத்தக்கூடாது மற்றும் மாதவிடாய் காலத்தில் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

எப்சம் உப்பு நீர் குளியல்

ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்ட எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.!

*இணையப்பகிர்வு*
[2/5, 13:05] Am Yoga: *துளசி மணப்பாகு*

துளசிச்சாறு – 1 லிட்டர்
பனைவெல்லம் – 1 கிலோ
சீரகம் – 200 கிராம்
இஞ்சி – ¼ கிலோ

ஒரு லிட்டர் துளசிச் சாறுடன் இஞ்சியை கழுவி தோல் நீக்கி 100 மில்லி சாறு கலந்து பனைவெல்லம் 1 கிலோ சேர்த்து, சீரகத்தை லேசாக வறுத்து நீர் விட்டு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் அடுப்பில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து நெல்லிக்காய் அளவு உணவிற்குப்பின் பயன்படுத்த வேண்டும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment