Friday, February 10, 2017

தேனின் குணம்

இருமலுக்கு அதிமதுர பொடியை தேனில் கலந்து சாப்பிட்டேன். வாய் புண்ணாகி விட்டது என்கிறார் நண்பர் ஒருவர்,
ஆம், தேன் உஷண வீர்யம் கொண்டது, வாய்ப்புண்  இருக்கும் போது தேன் எடுப்பது தவறு, இருமலுக்கு அதிமதுரம் சிறிய அளவில் தேனில் கொடுத்தால் தப்பில்லை, அதிமதுரம் கடின செரிமான தன்மை கொண்டது எனவே நோயாளியின் ஜடாக்கினியின் அளவறிந்து கொடுக்கலாம், Deodinitis போன்ற பித்த நோய்களுக்கு தேன் எடுக்க கூடாது, பன்னீர், நன்னாரி கசாயம் அல்லது நெய்யே எடுக்க வேண்டும், தேன் கபம் சார்ந்த நோய்களில் மட்டுமே கொடுக்கவேண்டும், வாதத்திற்கோ பித்ததிற்க்கோ தேன் சேர்க்க வேண்டிய அவசியமில்லை, மது மேகத்தில் பயன்படுத்தலாம், தேனை சூடாக்கி பயன்படுத்த கூடாது, தேனும் நெய்யும் சம அளவில் கலந்து பயன்படுத்த கூடாது, தேன் வறட்சி குணம் கொண்ட து, கபத்திற்க்கு இது சிறந்த அனுபானம், மற்றபடி உடலுக்கு நல்ல பலம் தரும், நினைவாற்றலை பெருக்கும், உடல் சூட்டை சம நிலைப்படுத்தும், கண்களுக்கு இதமானது, சீரணத்தை உண்டாக்கும், இரைப்பை, கல்லீரல், கோளாறைப்போக்கும்
கட்டியிருக்கும் கபத்தை முறித்து வெளியேற்றும், நெஞ்செரிச்சல், தாகம், இருமல், விக்கல், இரத்த பித்தம், தொழு நோய், வாந்தி பேதி, பலவீனம் ஆகியவைகளை போக்கும்,
இரத்த சிகப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த சோகையை போக்கும், நரம்புகளுக்கு வலிமையை கொடுக்கும், கிழிந்துபோன தசைகளையும், உடைந்து போன எலும்புகளையும் இணைக்கும், இதயத்திறக்கு மிகவும் உகந்தது, இதய நோயாளிகள் தினமும் படுக்கப் போகும் போது ஒரு டம்ளர் தண்ணீரில் தேனும், எலுமிச்சை சாறு ம் கலந்து சாப்பிட நன்மையை உண்டாக்கும்,
இதே உடல் பருமனில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் தேனும் எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து அதிகாலையில் பருகி வர வேண்டும்,
ஒரு தேக்கரண்டி தேனை மூன்று பங்கு நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வர இரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கி இரத்தம் சுத்தமாகும்,

ஒரு டம்ளர் தண்ணீரில் தேனைக் கலந்து இரவு படுக்கப் போகும்போது பருகி வர தூக்கமின்மை நீங்கி நல்ல தூக்கம் வரும், நல்ல குரல் வளம் உண்டாகும்,

நாவறட்சியையும், காமாலை, கல்லடைப்பு, நீரடைப்பு நீர்தாரையில் உள்ள புண்கள், தாகத்தையும் வெந்நீரில்  தேன் கலந்து தினமும் இரு வேளை சாப்பிட குணமாகும்,

இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர பித்தம் நீங்கி பெரு வயிறு குறையும், குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதம் தேனை உட்கொண்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும், மலத்தை கட்டும், மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, அதிகமாக சாப்பிட்டால் ருசியின்மை, நெஞ்சுசளியை தோற்றுவிக்கும் பிரசவித்த பெண்களின் அடி வயிற்றில் தேனை தடவி வர பிரசவித்த வலி நீங்கும், உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சாப்பிட கூடாது, பழைய நாள்பட்ட தேனை பயன்படுத்தினால் மருந்தின் தன்மை கொட்டுவிடும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment