Thursday, February 9, 2017

மருத்துவக் குறிப்புகள் 07/02/2017

[2/7, 12:45] Am Yoga: *நெய்-கடவுள் தந்த அமிர்தம்*

1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.

2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.

3. ஆயுளை நீட்டிக்கும்.

4. ஞாபக சக்தி வளர்க்கும்.

5. ஜீரண சக்தி தரும்.

6. குரல் வளம் தரும்.

7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.

8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.

9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

11. கண் பார்வை தெளிவடையும்.

12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.

13. மூட்டு வலி குறைய உதவும்.

14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.

15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.!

*இணையப்பகிர்வு*
[2/8, 09:20] Am Yoga: *ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை தேவைகள்*

தினமும் பயன்படுத்த வேண்டிய முதல் 10 வகை உணவுப் பொருட்கள்

*1.கைக்குத்தல் அரிசி*
*2.கேழ்வரகு,கம்பு,சோளம்,உளுந்து*
*3.தேங்காய்*
*4.கருப்பட்டி*
*5.மஞ்சள்,மிளகு,சீரகம்,பூண்டு,கொத்தமல்லி*
*6.இந்துப்பு*
*7.வேர்க்கடலை,சுண்டல்,பட்டாணி,எள்*
*8.பீட்ரூட்,கேரட்,வெங்காயம்,முள்ளங்கி*
*9.பசலி,முருங்கை,அகத்திகீரை*
*10.வாழைத்தண்டு,பழம்,இலை*
மேற்கண்ட பத்துவகையான உணவுப்பொருட்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.!

*கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 10 வகையான ஆரோக்கிய எதிரிகள்*

*1.பாட்டில் குளிர்பானங்கள்*
*2.பாக்கெட் பால்*
*3.பிராய்லர் சிக்கன்,பிராய்லர் முட்டை,ஐஸ்மீன்*
*3.வெள்ளைச்சீனி,சீனியில் செய்த பொருட்கள்*
*4.மைதா, மைதாவில் செய்த*
*உணவுப்பொருட்கள்*
*5.சுத்திகரித்த குடிநீர்*
*6.சுத்திகரித்த எண்ணைய்*
*7.ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,காம்ப்ளான் போன்ற செயற்கை ஊட்டச்சத்து பானங்கள்,செயற்கை ஊட்டச்சத்து மாத்திரைகள்*
*8.சோடாப்பு,அயோடின் உப்பு,பெருங்காயம்,எஸன்ஸ்,வண்ணப்பொடி,அஜிணாமோட்டோ*
*9.சாக்லேட்,பஞ்சுமிட்டாய்,ஐஸ்கிரீம் வகைகள்*
*10.பாக்கெட் நொறுக்குத்தீனிகள்.காகித தட்டு,காகித டம்ளர், காகித பிளாஸ்டிக் விரிப்பு குடுவைகளில் பறிமாறப்படும் உணவுகள்*

*முதல் பகுதியில் உள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொண்டு இரண்டாவது பகுதி உணவுகளை முற்றிலும் தவிர்த்து தினமும் 20 நிமிடம் யோகாசனம் 15 நிமிடம் மூச்சிப்பயிற்சி 10 நிமிடம் தியானம் போன்றவற்றையும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆயுள் நீளும்.*
*அதோடுதுளசி,வில்வம்,வேம்பு,கடுக்காய்,ஆடாதோடை,கீழாநெல்லி போன்ற மூலிகைகளையும் தேவைக்கு பயன்படுத்திவர எத்தகைய ஆரோக்கிய குறைபாடும் நீங்கி பூரண ஆயுளும் நிறைவான வாழ்க்கையும் அமையும்*
*நலம் பெருகட்டும் …*

*இயற்கை வாழ்வியல் தகவல்களுக்கு*
amyogatrust.blogspot.in

🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு💐
AUM HERBALS
MOBILE & WHATS APP
*9629368389*
[2/9, 11:30] Am Yoga: மாதுளைப்பழத்தின் நன்மைகள்:-

 வயிற்றில் மாதுளைப்பழத்தின் ஒரு விதைப்பட்டு விடுகிறதோ அதன் காரணம் அவருடைய இதயம் பிகாசிக்கும்.(அதாவது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி நன்கு செயல்படும்)மேலும் நாற்பது நாட்களுக்கு ஷைத்தான் அண்டுவதில்லை. விரன்டோடி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணோய் நீங்கிட

மாதுளை மொட்டை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவிட்டால் ஒரு வருடத்திற்கு கண்வலி, கண்ணில் நீர் வடிதல், பூளை தள்ளுதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றும்,மூன்று மாதுளை வித்தை விழுங்கி விட்டால் ஒரு வருடத்திற்கு கண்ணில் பூளை தள்ளாது என்றும் திப்புன்னபவியில் கூறப்படுகிறது.

இரத்தம் சுத்தமாக

இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கரைபடித்து அடைத்துக் கொண்டால் இரத்த ஓட்டம் தடைபடும். அப்போது இதயபாதிப்பு ஏற்படும். இது அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தைத் நீங்கி விடும். மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நல்ல இரத்தம் நிறைய ஊற உதவும்.

1. வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க மாதுளைப்பழம் சிறந்த உணவாகும்.

2. தாதுபுஷ்டிக்கு இது நிகரற்ற நல்ல மருந்தாகும்.

3. மேனியை மினுமினுப்பாக்கி உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இது உதவுகிறது.

4. நெஞ்சு வலிக்கு இது நல்லது. மேலும் தொண்டை கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும்.  அனைவர்கள் விரும்பி உண்டிருக்கிறார்கள்.!

*இணையப்பகிர்வு*
[2/9, 12:17] Am Yoga: *பத்தியங்கள் பலவகை*

சித்த மருத்துவத்தில் பத்தியம், இச்சா பத்தியம், கடும்பத்தியம், மிகக் கடும் பத்தியம், உப்பில்லா பத்தியம் என பல தரப்படும்.

#இச்சாபத்தியம் : கடுகு, நல்லெண்ணெய் , வெண்பூசணி, பரங்கி, மாங்காய், பலா, தேங்காய், பெருங்காயம், வெ. பூண்டு, அகத்தி, புகைத்தல், போதைப் பொருள், உடலுறவு, பகல் தூக்கம், வெயிலில் திரிதல் ஆகியவற்றை விலக்கி பிறவற்றையும் விரும்பாமல் மிகுதியாக உண்ணாதிருத்தலே இச்சாபத்தியமாம்.

#கடும்பத்தியம் : கடும்பத்தியத்தில் மருந்துண்ணுங்காலம் வரை மேற்கண்ட பொருள்களை விலக்குவதோடு உப்பு, புளி, காரம் நீக்கியும் உணவுண்டு மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள்களுக்குச் சமமான நாள்கள் புளியைச் சுட்டுச் சேர்த்து கத்தரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, ஆகியவற்றால் குழம்பு, கறி முதலியன செய்து மறு பத்தியமாகக் கொள்ளலாம்.

#மிகக்கடும்பத்தியம் : புதிய மட்கலத்தில் (மண்பானை) அரிசியை உப்பின்றிப் பொங்கியுண்ண வேண்டும். பிற எதுவும் ஆகா. சில மருந்துகள் சாப்பிடும் போது வாழையிலையில் உண்ணுதல், நெல்லாவியில் படுதல், கடற்காற்றில் உலாவுதல், புளியமர நிழலில் இருத்தல், புளி, உப்பு, ஆகியவற்றை தொடுதல், உணர்ச்சிவயப்படுத்தல் முதலியவையும் தவிர்க்கவும்.

#உப்பில்லாபத்தியம் : பாதரசத்தை தனித்தோ, பற்ப செந்தூரமாகவோ பிற மருந்துகளுடனோ, உண்ணும் போதும் மருந்து நிறுத்திய பின்னும் மருந்துண்ட நாள் அளவு மறுபத்தியம் காத்தல் வேண்டும். பின்னர் உப்பை வறுத்துச் சேர்த்தும் அதன் பின்னர் ஓமம், மிளகு, முக்கூட்டு நெய், ஆவின் நெய், இவற்றில் ஏதேனும் ஒன்றால் தலை முழுகிய பின்னரே உப்பு சேர்த்து உண்ணலாம். இவ்வாறு கடைப்பிடித்தலே உப்பில்லா பத்தியமாகும்.
இது தவிர அரிப்பு,பித்த, வாத நோய்களுக்கு கத்தரிக்காய்,உருளைகிழங்கு,கருவாடு,முட்டை போன்றவற்றை தவிர்க்க விரைவில் குணம் கிடைக்கும்.!

சில மருந்துகளுக்கு பத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தாலும் இச்சா பத்தியமாகவேனும் இருந்தால் பிணி விரைவில் நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment