1.இயமம்,
2.நியமம்,
3.ஆஸனம்,
4.ப்ராணாயாமம்,
5.பிரத்யாஹாரம்,
6.தாரணை,
7.தியானம்,
8.ஸமாதி என்பவையே
இவைதான் “அஷ்டாங்க யோகம்” என்ற எட்டு நிலைகளைக் கொண்டதாகும். இந்த நிலைகளை நமக்கெல்லாம் வகுத்துக் கொடுத்தவர் ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியே. அவர்தான் யோகத்திற்கு ஆதிகுரு-மூலகுரு. (இன்று உலகில் பல மக்கள், தாங்களே யோக சாஸ்திரத்தைக் கண்டறிந்தவர்கள் போல தங்களின் பெயரால் யோகப்பயிற்சி மையங்களை நடத்திக் கொண்டு ‘ஆழ்நிலை தியானத்தை’ போதிக்கின்றனர்) ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியை வணங்கிவிட்டு அஷ்டாங்கயோகம் - ஒரு சிறு குறிப்பு எழுதி, விளக்கம் என்ன என்பதையும் நோக்குவோம்.
1.இயமம்:- மனத்தையும், இந்திரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீய செயல்களில் ஈடுபடாமல் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாமல், நன்மைகளைச் செய்ய விரும்புதல். அவை பத்து வகை:- 1.அஹிம்சை, 2.சத்யம், 3.களவாமை, 4.பிரம்மச்சர்யம், 5.தயை(இரக்கம்), 6.நேர்மை, 7.பொறுமை, 8.தைரியம், 9.அளவாக சாப்பிடுதல், 10.சுத்தம்(தேகம்-மனம் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தல்)
2.நியமம்: இயமத்தினால் ஏற்படும் நற்செயல்களை விரிவுபடுத்தி கட்டுப்பட்டு இருத்தல். இதுவும் 10 வகை. 1.தவம், 2.சந்தோஷம் (கிடைப்பதில் திருப்தியடைதல்), 3.ஆஸ்திக்யம் (இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கை), 4.தானம் (இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுதல்), 5.ஈஸ்வரபூஜை (எல்லாமே கடவுளுடையது என்று அர்ப்பணித்தல்), 6.ஸித்தாந்த சிரவணம் (குருமூலமாக தன் மத சம்பதமான விஷயங்களைக் கேட்டறிதல்), 7.லஜ்ஜை (தீய செயல்களை நினைப்பதே வெட்கத்திற்குரியது) 8.நற்புத்தி (மோட்ச சாதனங்களைத் தேடுதல்) 9.ஜபம் (இஷ்டதேவதையை மந்திரதியானம் செய்தல்), 10.விரதம் (பிரம்மசர்யம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்ற ஆசிரம விரதங்களை முறையாக அனுஷ்டித்தல்)
3.ஆஸனம்: கடவுளை தியானிக்கும்போது உடல் வளையாமலும், அசையாமலும் இருக்க கட்டுப்பாட்டுடன் ஓர் இடத்தில் வீற்றிருத்தலே ஆஸனம். இதனை யோகசாஸ்திரங்களில் 108வகையாகக் கூறியுள்ளனர். அவற்றில் 11 முக்கியமானவை: 1.சுகாஸனம், 2.வீராஸனம், 3.பத்மாஸனம், 4.வீரபத்மாஸனம், 5.சிம்மாஸனம், 6.குக்குடாஸனம், 7.மயூராஸனம், 8.ஸ்வஸ்திகாஸனம், 9.கோமுகாஸனம், 10.பத்ராஸனம், 11.முக்தாஸனம்.
(குக்குடம்=கோழி, மயூரம்=மயில், ஸ்வஸ்திக=மங்களமான, கோ=பசு, பத்ர=நன்மையான, முக்தா=விடுபட்ட என்று பொருள்களை அறிக)
4.பிராணாயாமம்: சாஸ்திரமுறைப்படி, சுவாசக் காற்றின் இயற்கையான போக்கு வரத்துகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் பிராணாயாமம். “பிராணவாயுவை அடக்குதல்” என்று பொருள். அந்தப் பயிற்சியை மூன்று பிரிவுகளாகக் கூறியுள்ளனர். 1.ரேசகம்=மூச்சுக்காற்றை வெளியே விடுதல். 2.பூரகம்=முப்பத்திரண்டு மாத்திரை காலம் மூக்குத் துவாரத்தின் வழியாக சுவாசக் காற்றை உள்ளே இழுத்தல். இது ‘நிரப்புதல்’ என்று பொருள் தரும். (மாத்திரை என்றால் ஒரு கணப்பொழுது=நொடிப்பொழுது) 3.கும்பகம்=சுவாசத்தை வெளிவிடாமலும், கிரகித்துக் கொள்ளாமலும் உள்ளேயே நிலைப்பட வைத்தல் கும்பகம். இந்த மூன்றும் சேர்ந்ததே ஒரு பிராணாயாமம்.
இந்தப் பயிற்சியானது வைராக்யம், ஆனந்தம், கவித்வம், வாக்குப்பலிதம், தொலைநோக்குப் பார்வை (எதிர்காலத்திட்டம்) அதிவேக சிந்தனைத் திறன், அஷ்டமா சித்திகள், நவநிதிகள், வேறு உடலுக்குள் புகுந்துவிடும் திறமை (கூடுவிட்டுக் கூடுபாய்தல் பூமியில் சரீர நிழல் விழாமை, ஜனன, மரணமின்மை போன்ற பல உயர்ந்த பலன்களைத் தரவல்லது. பிராணாயாமத்தை ஜபமின்றிச் செய்வது, ஜபத்துடன் செய்வது என்று இரு வகைப்படும். ஜபத்துடன் கூடிய பிராணாயாமமே மேலே கூறிய பலன்களைத் தரக்கூடியது. இது யோக புருஷர்களால் தான் செய்ய முடியும்.
5.பிரத்தியாகாரம்: இந்திரியங்களை அதன் விஷயங்களிலிருந்து பிரித்து விடுவதே பிரத்தியாகாரம். இது பிராணாயாமத்தின் உயர்ந்தநிலை. சமாதியோகம் என்பதில் ஒரு பிரிவுதான்.
6.தாரணை: மனத்திலுள்ள எண்ணங்களை எல்லாம் விலக்கிவிட்டு, அதனை உடலின் சக்தி ரூபமாக விளங்குகின்ற சக்கரம் என்ற சில ஸ்தானங்களில் நிலைபெறச் செய்து இறைவனின் உருவத்தைத் தோன்றும்படி செய்வதே தாரணை.
அந்த ஸ்தானங்கள்: 1.மூலாதாரம்: இடுப்பிற்குக் கீழே முக்கோணவடிவில் உள்ள ஒருசக்கரம். இதுவே காமகூடம் எனவும் சொல்லப்படுகிறது. 2.அடுத்தது ஸ்வாதிஷ்டானம். 3.அதற்குமேல் தொப்புள் பகுதியில் மணிபூரகம் என்ற நாபிச்சக்கரம். 4.அதற்குமேல் இருதயப் பகுதியிலிருப்பது 12கோண வடிவில் ‘பூர்ணகிரி’ என்ற சக்கரம். 5.அதற்குமேல் கழுத்துப் பகுதியில் பதினாறு கோணமுள்ள ‘விசுத்தம்’ என்ற சக்கரம். இதற்கு ‘ஜலந்தரபீடம்’ என்று பெயர். 6.அதற்கும் மேல் இருபுருவங்களுக்கும் மத்தியில் இருகோணவடிவமாக ‘ஆக்ஞா’ சக்கரம் இருக்கிறது. அதற்குமேல் மஹாபீடமென்ற ஒட்டியாண சக்கரம் இருக்கிறது. இந்த சக்கரங்கள் எல்லாமே ஒரு மனிதனின் அன்றாடத் தேவைக்கான பணிகளான சுவாசித்தல், உண்ணும் உணவுப் பொருள்களை ஜீரணித்தல், தன்மயமாதல், கழிவுகளை வெளியேற்றுதல், நடமாடுவதற்குத் தேவையான சக்தியைத் தருதல், ஐந்து உறுப்புகளும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவையறிதல், தொடு உணர்ச்சி) தங்கள் பணிகளைத் திறம்பட செயலாற்ற உதவுகின்றன. உடலுக்குத் தேவையான முக்கியமான சுரப்பிகளை உற்பத்தி செய்வதும் இந்த ஸ்தானங்களே.
7.தியானம்: உலகத்தில் சப்தம், கொடூரம் ஆகியவற்றைக் கேட்கும் காது, காணும் கண் போன்ற இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, அந்த இந்திரியங்களை மனத்துடன் சேர்த்து, இருதயகமலத்தில் வீற்றிருக்கும் பரம்பொருளை இடைவிடாமல் சிந்திப்பதே தியானம். இந்த தியானப் பயிற்சியை ஒரே குருமூலமாக நன்கு அறிந்து கொண்டு பயிற்சி செய்வதே சிறந்த பலனைத்தரும். தியானப் பயிற்சி என்ற விஷயம் மிகவும் பரந்து விரிந்து காணும் விஷயம்.
8.சமாதி: வெகுகாலம் மனத்தில் இறைவனையே தியானம் செய்து கொண்டு, அதிலேயே லயித்துப் போய் இறைவனை மிக அருகில் கண்டு தன்னை மறந்து அமர்ந்த நிலையிலிருப்பதே ஸமாதிநிலை. இவர்களை மழை, வெயில், புயல், பனி, குளிர், காற்று, புயல்காற்று போன்றவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உலகவிஷயங்கள் எதுவுமே இவர்களின் கவனத்தை ஈர்க்காது. மோட்சசித்தியே இவர்களின் ஒரே எண்ணமாகும். இந்தச் சமாதி நிலையை அடைய உறக்கம், உணர்வு, பசி மூன்றும் அகல வேண்டும். யோகத்தின் இறுதியான சமாதிநிலை தான் ஒருவனுக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாத பேரின்ப நிலையைத் தருகிறது.
யோகாசனங்களின் பயன்கள்
1.நோயின்றி வாழ்தல். 2.என்றும் இளமையுடனும், சுறுசுறுப்புடனும் இருத்தல். 3.நல்ல ஞாபக சக்தி. 4.சுரப்பிகளின் (உடலில்)இயக்கம். 5.ரத்த ஓட்டம். 6.நல்ல சுவாசம். 7.நல்ல ஆரோக்கியம். 8.நல்ல சிந்தனையுடன் கூடிய செயலாற்றல் போன்ற பல நல்ல பயன்கள் கிடைக்கும்.!
*இணையப்பகிர்வு*
2.நியமம்,
3.ஆஸனம்,
4.ப்ராணாயாமம்,
5.பிரத்யாஹாரம்,
6.தாரணை,
7.தியானம்,
8.ஸமாதி என்பவையே
இவைதான் “அஷ்டாங்க யோகம்” என்ற எட்டு நிலைகளைக் கொண்டதாகும். இந்த நிலைகளை நமக்கெல்லாம் வகுத்துக் கொடுத்தவர் ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியே. அவர்தான் யோகத்திற்கு ஆதிகுரு-மூலகுரு. (இன்று உலகில் பல மக்கள், தாங்களே யோக சாஸ்திரத்தைக் கண்டறிந்தவர்கள் போல தங்களின் பெயரால் யோகப்பயிற்சி மையங்களை நடத்திக் கொண்டு ‘ஆழ்நிலை தியானத்தை’ போதிக்கின்றனர்) ஸ்ரீபதஞ்சலி மஹரிஷியை வணங்கிவிட்டு அஷ்டாங்கயோகம் - ஒரு சிறு குறிப்பு எழுதி, விளக்கம் என்ன என்பதையும் நோக்குவோம்.
1.இயமம்:- மனத்தையும், இந்திரியங்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீய செயல்களில் ஈடுபடாமல் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாமல், நன்மைகளைச் செய்ய விரும்புதல். அவை பத்து வகை:- 1.அஹிம்சை, 2.சத்யம், 3.களவாமை, 4.பிரம்மச்சர்யம், 5.தயை(இரக்கம்), 6.நேர்மை, 7.பொறுமை, 8.தைரியம், 9.அளவாக சாப்பிடுதல், 10.சுத்தம்(தேகம்-மனம் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தல்)
2.நியமம்: இயமத்தினால் ஏற்படும் நற்செயல்களை விரிவுபடுத்தி கட்டுப்பட்டு இருத்தல். இதுவும் 10 வகை. 1.தவம், 2.சந்தோஷம் (கிடைப்பதில் திருப்தியடைதல்), 3.ஆஸ்திக்யம் (இறைவன் ஒருவன் உண்டு என்ற நம்பிக்கை), 4.தானம் (இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுதல்), 5.ஈஸ்வரபூஜை (எல்லாமே கடவுளுடையது என்று அர்ப்பணித்தல்), 6.ஸித்தாந்த சிரவணம் (குருமூலமாக தன் மத சம்பதமான விஷயங்களைக் கேட்டறிதல்), 7.லஜ்ஜை (தீய செயல்களை நினைப்பதே வெட்கத்திற்குரியது) 8.நற்புத்தி (மோட்ச சாதனங்களைத் தேடுதல்) 9.ஜபம் (இஷ்டதேவதையை மந்திரதியானம் செய்தல்), 10.விரதம் (பிரம்மசர்யம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்ற ஆசிரம விரதங்களை முறையாக அனுஷ்டித்தல்)
3.ஆஸனம்: கடவுளை தியானிக்கும்போது உடல் வளையாமலும், அசையாமலும் இருக்க கட்டுப்பாட்டுடன் ஓர் இடத்தில் வீற்றிருத்தலே ஆஸனம். இதனை யோகசாஸ்திரங்களில் 108வகையாகக் கூறியுள்ளனர். அவற்றில் 11 முக்கியமானவை: 1.சுகாஸனம், 2.வீராஸனம், 3.பத்மாஸனம், 4.வீரபத்மாஸனம், 5.சிம்மாஸனம், 6.குக்குடாஸனம், 7.மயூராஸனம், 8.ஸ்வஸ்திகாஸனம், 9.கோமுகாஸனம், 10.பத்ராஸனம், 11.முக்தாஸனம்.
(குக்குடம்=கோழி, மயூரம்=மயில், ஸ்வஸ்திக=மங்களமான, கோ=பசு, பத்ர=நன்மையான, முக்தா=விடுபட்ட என்று பொருள்களை அறிக)
4.பிராணாயாமம்: சாஸ்திரமுறைப்படி, சுவாசக் காற்றின் இயற்கையான போக்கு வரத்துகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல் பிராணாயாமம். “பிராணவாயுவை அடக்குதல்” என்று பொருள். அந்தப் பயிற்சியை மூன்று பிரிவுகளாகக் கூறியுள்ளனர். 1.ரேசகம்=மூச்சுக்காற்றை வெளியே விடுதல். 2.பூரகம்=முப்பத்திரண்டு மாத்திரை காலம் மூக்குத் துவாரத்தின் வழியாக சுவாசக் காற்றை உள்ளே இழுத்தல். இது ‘நிரப்புதல்’ என்று பொருள் தரும். (மாத்திரை என்றால் ஒரு கணப்பொழுது=நொடிப்பொழுது) 3.கும்பகம்=சுவாசத்தை வெளிவிடாமலும், கிரகித்துக் கொள்ளாமலும் உள்ளேயே நிலைப்பட வைத்தல் கும்பகம். இந்த மூன்றும் சேர்ந்ததே ஒரு பிராணாயாமம்.
இந்தப் பயிற்சியானது வைராக்யம், ஆனந்தம், கவித்வம், வாக்குப்பலிதம், தொலைநோக்குப் பார்வை (எதிர்காலத்திட்டம்) அதிவேக சிந்தனைத் திறன், அஷ்டமா சித்திகள், நவநிதிகள், வேறு உடலுக்குள் புகுந்துவிடும் திறமை (கூடுவிட்டுக் கூடுபாய்தல் பூமியில் சரீர நிழல் விழாமை, ஜனன, மரணமின்மை போன்ற பல உயர்ந்த பலன்களைத் தரவல்லது. பிராணாயாமத்தை ஜபமின்றிச் செய்வது, ஜபத்துடன் செய்வது என்று இரு வகைப்படும். ஜபத்துடன் கூடிய பிராணாயாமமே மேலே கூறிய பலன்களைத் தரக்கூடியது. இது யோக புருஷர்களால் தான் செய்ய முடியும்.
5.பிரத்தியாகாரம்: இந்திரியங்களை அதன் விஷயங்களிலிருந்து பிரித்து விடுவதே பிரத்தியாகாரம். இது பிராணாயாமத்தின் உயர்ந்தநிலை. சமாதியோகம் என்பதில் ஒரு பிரிவுதான்.
6.தாரணை: மனத்திலுள்ள எண்ணங்களை எல்லாம் விலக்கிவிட்டு, அதனை உடலின் சக்தி ரூபமாக விளங்குகின்ற சக்கரம் என்ற சில ஸ்தானங்களில் நிலைபெறச் செய்து இறைவனின் உருவத்தைத் தோன்றும்படி செய்வதே தாரணை.
அந்த ஸ்தானங்கள்: 1.மூலாதாரம்: இடுப்பிற்குக் கீழே முக்கோணவடிவில் உள்ள ஒருசக்கரம். இதுவே காமகூடம் எனவும் சொல்லப்படுகிறது. 2.அடுத்தது ஸ்வாதிஷ்டானம். 3.அதற்குமேல் தொப்புள் பகுதியில் மணிபூரகம் என்ற நாபிச்சக்கரம். 4.அதற்குமேல் இருதயப் பகுதியிலிருப்பது 12கோண வடிவில் ‘பூர்ணகிரி’ என்ற சக்கரம். 5.அதற்குமேல் கழுத்துப் பகுதியில் பதினாறு கோணமுள்ள ‘விசுத்தம்’ என்ற சக்கரம். இதற்கு ‘ஜலந்தரபீடம்’ என்று பெயர். 6.அதற்கும் மேல் இருபுருவங்களுக்கும் மத்தியில் இருகோணவடிவமாக ‘ஆக்ஞா’ சக்கரம் இருக்கிறது. அதற்குமேல் மஹாபீடமென்ற ஒட்டியாண சக்கரம் இருக்கிறது. இந்த சக்கரங்கள் எல்லாமே ஒரு மனிதனின் அன்றாடத் தேவைக்கான பணிகளான சுவாசித்தல், உண்ணும் உணவுப் பொருள்களை ஜீரணித்தல், தன்மயமாதல், கழிவுகளை வெளியேற்றுதல், நடமாடுவதற்குத் தேவையான சக்தியைத் தருதல், ஐந்து உறுப்புகளும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவையறிதல், தொடு உணர்ச்சி) தங்கள் பணிகளைத் திறம்பட செயலாற்ற உதவுகின்றன. உடலுக்குத் தேவையான முக்கியமான சுரப்பிகளை உற்பத்தி செய்வதும் இந்த ஸ்தானங்களே.
7.தியானம்: உலகத்தில் சப்தம், கொடூரம் ஆகியவற்றைக் கேட்கும் காது, காணும் கண் போன்ற இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, அந்த இந்திரியங்களை மனத்துடன் சேர்த்து, இருதயகமலத்தில் வீற்றிருக்கும் பரம்பொருளை இடைவிடாமல் சிந்திப்பதே தியானம். இந்த தியானப் பயிற்சியை ஒரே குருமூலமாக நன்கு அறிந்து கொண்டு பயிற்சி செய்வதே சிறந்த பலனைத்தரும். தியானப் பயிற்சி என்ற விஷயம் மிகவும் பரந்து விரிந்து காணும் விஷயம்.
8.சமாதி: வெகுகாலம் மனத்தில் இறைவனையே தியானம் செய்து கொண்டு, அதிலேயே லயித்துப் போய் இறைவனை மிக அருகில் கண்டு தன்னை மறந்து அமர்ந்த நிலையிலிருப்பதே ஸமாதிநிலை. இவர்களை மழை, வெயில், புயல், பனி, குளிர், காற்று, புயல்காற்று போன்றவை எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உலகவிஷயங்கள் எதுவுமே இவர்களின் கவனத்தை ஈர்க்காது. மோட்சசித்தியே இவர்களின் ஒரே எண்ணமாகும். இந்தச் சமாதி நிலையை அடைய உறக்கம், உணர்வு, பசி மூன்றும் அகல வேண்டும். யோகத்தின் இறுதியான சமாதிநிலை தான் ஒருவனுக்குப் பிறப்பும், இறப்பும் இல்லாத பேரின்ப நிலையைத் தருகிறது.
யோகாசனங்களின் பயன்கள்
1.நோயின்றி வாழ்தல். 2.என்றும் இளமையுடனும், சுறுசுறுப்புடனும் இருத்தல். 3.நல்ல ஞாபக சக்தி. 4.சுரப்பிகளின் (உடலில்)இயக்கம். 5.ரத்த ஓட்டம். 6.நல்ல சுவாசம். 7.நல்ல ஆரோக்கியம். 8.நல்ல சிந்தனையுடன் கூடிய செயலாற்றல் போன்ற பல நல்ல பயன்கள் கிடைக்கும்.!
*இணையப்பகிர்வு*
No comments:
Post a Comment