Thursday, February 9, 2017

மருத்துவக் குறிப்புகள் 10/02/17

[2/9, 15:41] Am Yoga: 🌿 *வாதம் போக்கும் எளிய மருத்துவம்*🌴

*கீல்வாதம் நீங்க*

*2 கைப்பிடியளவு பேய்மிரட்டி இலையை எடுத்து மண்சட்டியில் போட்டு வதக்கி ஒரு மெல்லிய  வெள்ளைத்துணியில் போட்டு  கட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து சில நாட்கள் ஒத்தடம் கொடுத்துவர கீல்வாதம் நீங்கும்*

*பாத எரிச்சல்*

*கையளவு மருதோன்றி இலையை எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைவிட்டு அரைத்து பாத எரிச்சல் உள்ள பகுதியில்  வைத்து சுற்றி துணியால் கட்டி 9 மணியளவில்  படுத்துக் கொண்டு பனிரெண்டு மணிவாக்கில்  எழுந்து காலை கழுவி படுத்துவர மூன்று நாட்களில் பாத எரிச்சல் முற்றிலும் அகலும்*

*ஊமத்தம் இலைச்சாறு அரைலிட்டர் நல்லெண்ணைய் அரைக்கிலோ இரண்டையும் அடுப்பேற்றி காய்ச்சி நீர் வற்றிய வேளையில் 5 கிராம் கட்டிகற்பூரம் தட்டிப்போட்டு இறக்கி வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக்கொண்டு வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி அளவு எண்ணையை காலை,மாலை உணவிற்கு முன் உண்டுவர எவ்வளவு கடினமான கீல்வாதமும் மூன்று நாளில் மறையும்*

🌿இயற்கை மூலிகை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in

☘100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு🌾
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*
[2/9, 15:50] Am Yoga: *நமது மஹாயோகா நூலிற்கு ஒரு யோகாசன மாணவி வழங்கிய மதிப்புரை*

புத்தகங்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்ணு அறிஞர்கள் சொல்லிருக்காங்க. ஆனா ஐயாவோட புத்தகம் எனக்கு குருவாகவே இருக்குங்கறது எனக்கு பெருமையா இருக்கு. அவ்வளவு அற்புதமா சொல்லிருக்காங்க. யோகானா என்ன எப்ப எங்க எப்படி செய்யணும் எவ்வளவு செய்யணும் எல்லாம் சொல்லிருக்காங்க.நிறைய சந்தேகத்திற்கு பதிலும் இருக்கு.யோகால ஆர்வம் உள்ள எல்லோரும் கண்டிப்பாக படிக்க கூடிய ஒரு புத்தகம்.பயிற்சியாளர் இல்லாமலே யோகா செய்யலாம் அந்த அளவுக்கு தெளிவா சொல்லிருக்காங்க. எல்லோரும் கண்டிப்பா படிங்க. இந்த குரூப்ல இருக்கறத பெருமையா நினைக்கிறேன்.!

*விஜயா நாகர்கோவில்*
[2/10, 05:12] Am Yoga: *கட்டி கரைய வைத்தியம்*

உடல் மேல் உண்டாகும் கட்டியை  கரைக்கும்...
         " திருநீற்றுப் பச்சிலை "
இதன் இலையை அரைத்து கட்டியில்
மேல்பூச்சாக செய்துவர கட்டி கரையும்.!
மேலும் இந்த மூலிகை சாறுடன் சிறிது நாட்டுசர்க்கரை சேர்த்து
உள்ளுக்கு அருந்திவர மார்பு படபடப்பு
குறையும், இருமல்,கேஸ்ட்ரபுள்க்கு
நிவாரணம் கிடைக்கும்.!

*இணையப்பகிர்வு*
[2/10, 12:58] Am Yoga: *யோகனே சித்தஸ்ய …*

நமது மையத்தில் யோகம் பயின்று பிறவிப்பிணிகளை வென்ற எனது   மாணவர்களை பற்றிய உண்மை பதிவு

இளமையில் வறுமை கொடிது என்று அவ்வை கூறுவார். அதனிலும் கொடுமை இளமையில் பிணி என்பதை நான் உணர்ந்த தருணம் அது. ஆஸ்துமா,இழுப்பு,அலர்ஜிக்கான இலவச வகுப்பு ஒன்று நமது செட்டிகுளம் யோகா மையத்தில் 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்றுக்கொண்டிருந்த போதுதான் நான் முதன்முதலாக அந்த மாணவரை சந்தித்தேன். ஒரு 24 வயது மதிக்கலாம். கறுப்பு என்றாலும் களையானவர் என்பார்களே அப்படி ஒரு ஒளிபொருந்திய முகம். நுரையீரலில் உள்ள ஒருபக்க அறை முழுவதும் வீங்கி உள்ளதால் நடக்கும் போது மட்டுமல்ல சும்மா படுத்திருக்கும் போது கூட அவரால் இயல்பாக சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். நவீன மருத்துவ முறையில் அத்தனை பரிசோதனைகளையும் செய்து பார்த்ததோடு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவம் பார்த்தும் எந்தவித ஆரோக்கிய முன்னேற்றமும் இல்லாமல் இருந்தவர். ஒருநாள் ஹீலர் பாஸ்கரின் பேச்சை கேட்டு ஆங்கில மருந்துகளை முக்கால்வாசி நிறுத்திவிட்டு சில வாழ்வியல் முறைகளை கடைப்பிடித்து  கொஞ்சம் முன்னேற்றம் கண்டவர் முழுவதும் இயற்கை வாழ்வியலை கடைப்பிடிக்கும் ஆவலுடன் நமது மையத்திற்கு என்னை காணவந்திருந்தார். பேசிக்கொண்டே இருக்கும் போது திடீரென்று நெஞ்சை அழுத்திக் கொடுப்பார் பிறகு சில ஏப்பங்களை விட்டுவிட்டு பேச ஆரம்பித்தால்  மீண்டும் மூச்சு அடைக்கிறது என்பது போல சற்றுநேரம் குனிந்து அமர்ந்துகொள்வார்.
ஒருவேளை உணவு சாப்பிட்டால் மூன்றுவேளையும் நெஞ்சு எரிகிறது என்றும் , இரவில் உறங்கும் போது கூட நெஞ்சில் யாரோ கட்டையை வைத்து நெறுக்குவதுபோல் இருக்கு  என்றும் தனது பிணித்துயரை பட்டியலிடுவார்.
இலவச ஆஸ்துமா வகுப்பில் கலந்துகொண்டவர், பத்திரிகைகளுக்கு கொடுப்பதற்காக நாம் புகைப்படம் எடுக்கும் போது வேண்டாம் அய்யா,என்னை படம்பிடிக்க வேண்டாம். நான் நோயாளியாக அடையாளம் காணப்படுவதை விரும்பவில்லை.   என்றார்; அவர் பெயர் மோகன்  பாலிடெக்னிக் படித்துக்கொண்டு பொறியியல் துறையில் சுயவேலையின் மூலம் கைநிறைய பணம் சம்பாதிப்பவராய் இருந்தார்.  நமது பயிற்சி மையத்தில் தொடர்ந்து அவருக்கு சில மாதங்கள் பவன முத்தாசனம்,உஷ்ட்ராசனம்,சிரசாசனம்,பஸ்திரிகா பிராணாயாமம்  போன்ற பல யோக நுட்பங்களை கற்றுதேர்ந்ததோடு முற்றிலும் இயற்கை வாழ்வியல் முறைக்கு திரும்பி இரசாயண உணவு, இரசாயண அழகுப்பொருட்கள், பற்பசை,பவுடர் என்று அனைத்தையும் துறந்து ஆரோக்கிய வாழ்வை தமதாக்கிக் கொண்டார். முன்பெல்லாம் ஒருவேளை உணவைகூட என்னால் இயல்பாக ஜீரணம் செய்ய முடியாது. ஆனால் இப்பொழுது பசித்தபோதெல்லாம் உண்கிறேன். மாத்திரை மருந்துகளை முழுவதும் நிறுத்திவிட்டு நீங்கள் கொடுத்த மூலிகை சூரணத்தை சாப்பிட்டு வருகிறேன். தினமும் வீட்டிலும் ஒருநேரம் உஷ்ட்ராசனம்,சிரசாசனம், ஹூ க்ரியா, ஓம்கார தியானம் போன்றவற்றை செய்கிறேன். என் வீட்டில் இருப்பவர்களே அசந்துதான் பார்க்கிறார்கள்.  சாதாரணமாக  இயல்பாக சுவாசிக்கவே முடியாதவன் எப்படி தலைகீழாக நின்று சுவாசிக்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கும் வியப்பாகதான் உள்ளது. 80% நான் குணமாகிவிட்டேன். மிகமிக  நன்றி அய்யா, ஹீலர் பாஸ்கரையும் யோகாவையும் நான் அறியாமல் போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் ஒரு நோயாளியாக நவீன  மருத்துவத்தோடு  போராடிக்கொண்டிருந்திருப்பேன் என்று கூறி எனது சார்பில் இன்னொரு யோகா இயற்கை வாழ்வியல் முகாம் நடத்த உதவுகிறேன் என்றெல்லாம்  கூறி என்னை ஒரு யோகா ஆசானாய் பெருமை கொள்ள வைத்து சென்றார்.!  பிறகு ஒருவருடம் கழித்து மீண்டும் ஒருநாள் கைப்பேசியில் அழைத்து ஒரு முக்கியமான விசயம் சார் ,உங்களிடம் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் சொல்வதை வைத்துதான் இனி எனது வாழ்க்கையே உள்ளது.  என்றெல்லாம் கூறினார்.  சொல்லுங்க, உடல் நிலை நன்றாகத்தானே உள்ளது? என்றேன்;
"ஆமாம் அய்யா, அதுவல்ல பிரச்சனை இன்னொரு முக்கியமான விசயம் நேரில் வருகிறேன்." என்று; அவர் என்னைப்பார்க்க வந்தார்.

என்ன விசயம் மோகன்?
"அய்யா,இப்ப என்னைப்பொருத்தவரை உடல்நிலை நன்றாக உள்ளது. எங்கள் வீட்டில் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள்"
நல்ல விசயம் செய்து கொள்ள வேண்டியதுதானே?
"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.பிறகு, எதற்கும் இருக்கட்டும் என்று நான் முதலில் மருத்துவம் செய்த ஆங்கில மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்தேன்.அந்த ரிப்போர்டுகளை பார்த்த மருத்துவர், இப்பொழுதும் உன் உடல்நிலை பழையதுபோல் தான் உள்ளது. நீ திருமணமே  செய்யக்கூடாது, ஒருவேளை நீ  திருமணம் செய்தால் இல்லற வாழ்க்கையில் உன்னால் ஈடுபடவே முடியாது. அதோடு நுரையீரல் இயக்கம் முற்றிலும் சீரழிந்து உயிருக்கே ஆபத்தாகி விடும். என்கிறார்கள்"
என்றார்;
உங்களுக்கு என்ன தோன்றுகிறது மோகன்?
"நான் நன்றாக இருக்கிறேன்.  ஆனால்,எனக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் இல்லை.
முன்பிருந்ததை விட பலமடங்கு முழு ஆரோக்கியமாக உணர்கிறேன்.ஆனாலும் ,மருத்துவ அறிக்கையின் படி  நான் இன்னும் முழு நோயாளியாகத்தான் இருக்கிறேன் என்கிறார்கள். நீங்களே பாருங்களேன்" என்று; தனது ஸ்கேன் ரிப்போர்டை எனது கைகளில் கொடுத்தார்.
நான் அதை  என் கைகளில் வாங்கி மேசையில் விசிரியெறிந்தேன்.என்ன அய்யா, உங்களுக்கு நம்பிக்கை இல்லையா என்றார். எனக்கு மனித உடல் இயங்கு சக்தியில் முழு நம்பிக்கை உண்டு. இதுபோன்ற மருத்துவ அறிக்கையில் முழு நம்பிக்கை இல்லை. ஏனெனில், மருத்துவ அறிக்கையின் படி மிக ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ள பலர் நடக்கவே முடியாமல் படுக்கையில் கிடப்பதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.
அதனால் இது பொய், நீங்கள் உணரும் ஆரோக்கியம் மட்டுமே மெய் என்றதும். அவர் ஆர்வமாக
அப்ப நான் திருமணம் செய்து கொள்ளலாமா?
என்னால் இல்லறத்தில் ஈடுபட முடியுமா?
எனக்கும் ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பார்களா? என்று பல கேள்விகளை முச்சுவிடாமல் கேட்டார்;

"100%  உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக  அமையும் நீங்கள் ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெறுவீர்கள்.! நலம் பெருகட்டும் …  என்று என்னையும் அறியாமல் ஆசி கூறி அனுப்பி வைத்தேன்.!
பின்பு சில மாதத்திலேயே அவரின் இனிய திருமண நாள் வந்தது … அங்கு என்னையும் எனது மனைவியையும்  பார்த்ததும்  தனது துணைவியோடு ஓடி வந்து  பணிந்து  ஆசி வேண்டினார். வாழ்க வளமுடன், பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க, நலம் பெருகட்டும் …என்று வாழ்த்தி வந்தேன்.!
என்னுள் அமர்ந்து வாழ்த்திய இறைநிலையின் ஆசி பலித்தது … இன்று மோகன் பெண்ணும் ஆணுமாக இரண்டுபிள்ளைகளை பெற்று ஆரோக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்து வருகிறார் …¡¡¡¡
*இயற்கையின் சக்தியில் இதுவும் ஒன்று*

----ஏகப்பிரியன் DYT

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
aumyogatrust.blogspot.in

🌿 *100% இயற்கை மூலிகை மருந்துகளுக்கு🌹
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*

No comments:

Post a Comment