Monday, February 13, 2017

*தூக்கமின்மையை போக்கும் ஜாதிக்காய்*

மனிதனுக்கு முக்கியமான ஓய்வுகளில் தூக்கம் ஒரு இறைவனின் கொடை. தூக்கம் இன்மையால் நம்மில் பலர்படும் மனக்கஷ்டம் அதிகம். தூக்கமின்மை ஏற்படுகின்ற போது ஜாதிக்காயைக் கொடுத்தால் பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பான உறக்கம் எழுப்பியாகச் செயல்படும். வாந்தி பேதியில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தண்ணீர் தாகம் அதிகளவில் இருக்கும். இதற்கு ஜாதிக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை பருகினால் தாகம் தணியும். இருமல், ஒற்றைத்தலைவலி, வயிற்று வலி மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி இருப்பவர்கள் ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு மற்றும் சித்திர மூலவேர் போன்றவைகளை அளவாக எடுத்து பொடியாக செய்து குறிப்பிட அளவு சாப்பிட்டால் குணமாகும். பேதி ஏற்பட்டு ஓய்வெடுக்கும் போது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்ய ஜாதிக்காயைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment