Wednesday, February 1, 2017

*பித்தப்பை கல் கரைய*

மலச்சிக்கலே இந்த நோய்க்கான முதல் காரணம் 0.6mm ஒன்றும் பெரிய உடனடி ஆபரேஷன் தேவையான ஆபத்து நிலை அல்ல நாம் 2.2cm வரை பார்த்துள்ளோம். இதனால் உங்களுக்கு கொஞ்சம்கூட தாங்கமுடியாத வலி இருந்தால் அவசர காலத்திற்கு ஆங்கில மருத்துவத்தை அணுகலாம். ஆனால் தாங்களுக்கு தற்போது பொறுத்துக் கொள்ளக் கூடிய சிறு வலியே இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் எடுக்க வேண்டிய மருந்து: 500மி.லி. விளக்கெண்ணெயில் 200கிராம் பூண்டை பேஸ்ட் ஆக போட்டு அத்துடன் 30கிராம் இந்துப்பு,20கிராம் பெருங்காயம் பொடித்துப் போட்டு நன்கு கொதிக்க விடவும் அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிண்டிவரவும் ஒரு பக்குவத்தில் எண்ணெய் தனியாக பிரிந்து கீழ் உள்ள பேஸ்ட் மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிவைத்து நன்கு ஆறியதும் எண்ணையை மட்டும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மண்டியை தூர எறிந்து விடவும். மேற்கண்ட எண்ணையை தினமும் இரவு உணவுக்குப் பின் 2ஸ்பூன்(தேக வலிவையறிந்து) சாப்பிட்டு வர காலையில் எந்த சிரமமும் இன்றி மலம்கழியும். இதை 2மாதம் தொடர்ந்து அருந்தினால் பித்தப்பை கல் கரைந்து விடும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment