Thursday, December 8, 2016

*உளுந்தின் மகத்துவம்*

உளுந்து , சிறுபருப்பு , பச்சரிசி - மூன்றையும் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் , பாலூட்டும் பெண்களுக்கு தாராளமாகப் பால் சுரக்கம்.

உளுந்து , ,கோதுமை , கஸ்தூரி மஞ்சள் - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பற்றுப்போட்டால் , மூட்டு வலி , மூட்டு வீக்கம் உள்ளிட்ட வாத நோய்கள்  குணமாகும்.

உளுந்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து , மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் அனைத்தும் குணமாகும்.

உளுந்து , பார்லி  - தலா 100 கிராம்  , மிளகு , சீரகம் , பூண்டு , மஞ்சள் - தலா 10 கிராம் எடுத்து அரைத்து , கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

உளுந்தை மாவாக்கி , அதனுடன் மிளகு , சீரகம் , கொத்தமல்லி , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.

உளுந்து , சின்ன வெங்காயம் - இரண்டையும் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment