Friday, December 30, 2016

அசிடிட்டி

*அசிடிட்டி பிரச்சனை எல்லோருக்கும் ஏற்படும் சகஜமான ஒன்று. வயிற்றில் சுரக்கும் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது அவை உணவுக்குழாய் வரை மேலே வருகிறது.*

*அதனால்தான் அங்கே எரிச்சல் உண்டாகும், இதை தான் அசிடிட்டி என்று சொல்வோம். அசிடிட்டி வர பல காரணங்கள் உண்டு. அடிக்கடி வந்தால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிடும்.*

*அதனால் ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டியது அவசியம். அசிடிட்டியை போக்க ஜீரண மருந்துகளை வாங்குவதற்கு பதில் இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு மருந்து நம் வீட்டிலேயே இருக்கு.*

*அப்படி என்ன மருந்து இருக்குனுதான கேட்குறீங்க…….?*

*துளசி: துளசி இலையை பறித்து நன்றாக மென்று அதன் சாறினை விழுங்குங்கள் அல்லது துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடியுங்கள். இதனால் ஆசிட் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.*

*சோம்பு :சோம்பு எந்த வகை உணவையும் எளிதில் ஜீரணப்படுத்திவிடும். நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தி, நிவாரணம் அளிக்கும். இந்த சோம்பினை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்.*

*பட்டை : பட்டை ஜீரண சக்தியை தூண்டும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. பட்டைப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம் , அல்லது தேநீரில் பட்டையை கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் அசிடிட்டி குறையும்.*

*மோர் :மோர் மிகவும் குளிர்ச்சியானது. அதிக அமிலம் சுரப்பதை உடனடியாக கட்டுப்படுத்தும். வயிற்றிற்கு இதம் தரும். குளிர்ந்த மோரில் இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்து குடியுங்கள். உடனடியாக பலன் கிடைக்கும்.*

*கிராம்பு :கிராம்பு கிருமி நாசினி மட்டுமல்ல , அதிலுள்ள குணங்கள் ஜீரண சக்தியை தூண்டும். வாயுவை போக்கும். இதனால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும்.!*
*சுக்கு,மிளகு,திப்பிலி, சீரகம்,*
*பெருஞ்சீரகம் சம அளவாய் எடுத்து*
*மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொண்டு காலை,இரவு உணவிற்கு முன் கால் தேக்கரண்டி*
*அளவு உண்டுவர* *அசிடிட்டி,வயிற்று உப்புசம், வாய்வுத்தொல்லை குணமாகும்.!*

*நலம் பெருகட்டும் …*

No comments:

Post a Comment