புத்தாண்டு பிறக்கும் அன்று இரவு
12 மணிக்கு கத்தி கூச்சலிட்டு
ஆண், பெண் நண்பர்களோடு
கடற்கரையில் வட்டமிட்டு மேல்நாட்டு பாணியிலான பார்ட்டிகளில் கலந்து கொண்டுதான் புத்தாண்டை வரவேற்க வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை.!
அப்படி செய்வது ஒரு சிறுபிள்ளை தனம்.ஆனால், ஏமாந்த பல பிள்ளைகள் முதல் முறை குடிப்பழக்கத்திற்கும், பாலியல் பலாத்கார விவகாரத்திலும்
சிக்கிக்கொள்ள இந்த
நாள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.!
என்பதை மறக்க வேண்டாம்.!
புத்தாண்டு அன்று நடுஇரவு பிராத்தனைக்கு கோவில்களுக்கு போவதும் தேவையற்ற வேலை.!
ஏனெனில் , இந்த இரவில் அதிக ஆர்வக்கோளாறுகள் போதையில் வாகனத்தை
ஒட்டி வருவது இயல்பு.
நாம் பிராத்தனை செய்து வந்தாலும்
கூட போதை ஆசாமிகளிடம் இருந்து நமது உயிரை காப்பாற்ற கடவுள் வரமாட்டார்; என்பதே கடந்தகால அனுபவங்கள்.!
புத்தாண்டு அன்று பூஜை செய்ய
நினைப்பவர்கள் அதிகாலை கோவிலுக்கு போவதே நல்லது. அந்த நேரத்தில் பெரும்பாலான ஆர்வக்கோளாறுகள் உறங்கிக்கொண்டிருக்கும்.!
அன்பு இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் புத்தாண்டை கொண்டாட விரும்புபவர்கள்
பகலில் கொண்டாடுவதே நல்லது.!
முதல் வாழ்த்தை கூறுகிறேன் பேர்வழி என்று இரவு நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்
நண்பர்களை எழுப்பி
கைப்பேசியில் வாழ்த்தை தெரிவித்து அவர்களின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்.!
தேவையானால் வாட்ஸ்அப்பிலோ
முகநூலிலோ வாழ்த்தை கூறுங்கள்
எழுந்ததும் படித்து பதில் வாழ்த்து அனுப்புவார்கள்.
இளவயதில் படிக்கும் பிள்ளைகள் உள்ளவர்கள் பிள்ளைகளை குரூப் ஸ்டெடி, வெளியூர் சுற்றுலா, பத்து மணிக்குள்ள வந்துருவேன் போன்ற வேண்டுகோளின் படி எங்கும் அனுப்பாதீர்கள்.!
நான் வழக்கமாகவே 12 மணிக்கு மேலதான் உறங்குவேன் என்பவர்கள் இந்த புத்தாண்டு முதலாவது நான் 10 மணிக்கு தூங்கிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். உடல் நலம் மேம்படும்.!
இல்லை இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை கொண்டாடியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள்
உங்கள் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்களேன்.!
யாருக்கும் தொல்லையில்லை.!
ஒருவேளை இரவு 12 மணிக்கு நான் ஆன்லைனில் இருப்பதாக தெரிந்தாலும் யாரும் உடனே வாழ்த்து சொல்ல வந்துவிடாதீர்கள்.
ஏன்னா,என் புத்திரர்கள் கள்ளச்
சாவிப்போட்டு திறந்து என் கைப்பேசியை
சில இரவில் பயன்படுத்துகிறார்கள்.!
சுருக்கமா என்ன சொல்ல வர்றேன்னா, புத்தாண்டு உண்மையிலேயே உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஆண்டாய் மலர வேண்டுமானால் கொஞ்சம் அமைதியாய் கொண்டாடுங்கள்.!
ஓவரா சீனைப்போட்டு ஓவர் நைட்டோடு காலாவதி ஆயிராதீங்க கன்மணிகளா …
*அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்*
*உங்கள் அன்பு நண்பன்*
----ஏகப்பிரியன்------
12 மணிக்கு கத்தி கூச்சலிட்டு
ஆண், பெண் நண்பர்களோடு
கடற்கரையில் வட்டமிட்டு மேல்நாட்டு பாணியிலான பார்ட்டிகளில் கலந்து கொண்டுதான் புத்தாண்டை வரவேற்க வேண்டும்
என்று எந்த அவசியமும் இல்லை.!
அப்படி செய்வது ஒரு சிறுபிள்ளை தனம்.ஆனால், ஏமாந்த பல பிள்ளைகள் முதல் முறை குடிப்பழக்கத்திற்கும், பாலியல் பலாத்கார விவகாரத்திலும்
சிக்கிக்கொள்ள இந்த
நாள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது.!
என்பதை மறக்க வேண்டாம்.!
புத்தாண்டு அன்று நடுஇரவு பிராத்தனைக்கு கோவில்களுக்கு போவதும் தேவையற்ற வேலை.!
ஏனெனில் , இந்த இரவில் அதிக ஆர்வக்கோளாறுகள் போதையில் வாகனத்தை
ஒட்டி வருவது இயல்பு.
நாம் பிராத்தனை செய்து வந்தாலும்
கூட போதை ஆசாமிகளிடம் இருந்து நமது உயிரை காப்பாற்ற கடவுள் வரமாட்டார்; என்பதே கடந்தகால அனுபவங்கள்.!
புத்தாண்டு அன்று பூஜை செய்ய
நினைப்பவர்கள் அதிகாலை கோவிலுக்கு போவதே நல்லது. அந்த நேரத்தில் பெரும்பாலான ஆர்வக்கோளாறுகள் உறங்கிக்கொண்டிருக்கும்.!
அன்பு இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களில் புத்தாண்டை கொண்டாட விரும்புபவர்கள்
பகலில் கொண்டாடுவதே நல்லது.!
முதல் வாழ்த்தை கூறுகிறேன் பேர்வழி என்று இரவு நன்றாக உறங்கிக்கொண்டிருக்கும்
நண்பர்களை எழுப்பி
கைப்பேசியில் வாழ்த்தை தெரிவித்து அவர்களின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள்.!
தேவையானால் வாட்ஸ்அப்பிலோ
முகநூலிலோ வாழ்த்தை கூறுங்கள்
எழுந்ததும் படித்து பதில் வாழ்த்து அனுப்புவார்கள்.
இளவயதில் படிக்கும் பிள்ளைகள் உள்ளவர்கள் பிள்ளைகளை குரூப் ஸ்டெடி, வெளியூர் சுற்றுலா, பத்து மணிக்குள்ள வந்துருவேன் போன்ற வேண்டுகோளின் படி எங்கும் அனுப்பாதீர்கள்.!
நான் வழக்கமாகவே 12 மணிக்கு மேலதான் உறங்குவேன் என்பவர்கள் இந்த புத்தாண்டு முதலாவது நான் 10 மணிக்கு தூங்கிவிடுவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். உடல் நலம் மேம்படும்.!
இல்லை இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை கொண்டாடியே தீருவேன் என்று அடம்பிடிப்பவர்கள்
உங்கள் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்து தியானம் செய்யுங்களேன்.!
யாருக்கும் தொல்லையில்லை.!
ஒருவேளை இரவு 12 மணிக்கு நான் ஆன்லைனில் இருப்பதாக தெரிந்தாலும் யாரும் உடனே வாழ்த்து சொல்ல வந்துவிடாதீர்கள்.
ஏன்னா,என் புத்திரர்கள் கள்ளச்
சாவிப்போட்டு திறந்து என் கைப்பேசியை
சில இரவில் பயன்படுத்துகிறார்கள்.!
சுருக்கமா என்ன சொல்ல வர்றேன்னா, புத்தாண்டு உண்மையிலேயே உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஆண்டாய் மலர வேண்டுமானால் கொஞ்சம் அமைதியாய் கொண்டாடுங்கள்.!
ஓவரா சீனைப்போட்டு ஓவர் நைட்டோடு காலாவதி ஆயிராதீங்க கன்மணிகளா …
*அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்*
*உங்கள் அன்பு நண்பன்*
----ஏகப்பிரியன்------
No comments:
Post a Comment