Friday, November 18, 2016

இயற்கை மூலிகை மருத்துவம்

முடக்கற்றான்இலை,வேலிப்பருத்தி, சூரத்தாவரை ஆகியவற்றின் இலையை  வகைக்கு கைப்பிடியளவு பிச்சுப்போட்டு மண் அல்லது இரும்புச்சட்டியில்  2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளரானதும் வடிகட்டி காலை மாலை உணவிற்கு முன்  20 முதல் 40 நாள் குடித்துவர
*பக்கவாதம், உடல் இறுக்கம், உடல்வலி, வாய்வுத்தொல்லை குணமாகும்.*
அகத்திக்கீரையை பறித்து நிழலில் உலர்த்தி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஒருத்தேக்கரண்டி பொடியை வாயில்போட்டு சிறிது சுடுநீர் அருந்திவர *மார்புவலி, இரத்தசோகையினால் வரும் மயக்கம் குணமாகும்.*
எலுமிச்சை சாறில் நாட்டு வெல்லம் கலந்து தினமும் குடித்துவர *உடல் அரிப்பு,சோர்வு,அஜீரண ஏப்பம் குணமாகும்*
பெரிய வெங்காயத்தை எடுத்து விறகு அடுப்பிலிட்டு சுட்டு,சிறிது மஞ்சள் நெய் சேர்த்துப்பிசைந்து கட்டிகளின் மீது வைத்து  தொடர்ந்து 10 நாட்கள் வரைகட்டிவர *கட்டி பழுத்து உடையும்*
இதே கலவையை இரண்டுவேளையாக உணவோடு சேர்த்து உண்டுவர *சிறுநீரக அடைப்பு, சிறுநீரக தொற்று,இரத்தகுழாய் அடைப்பு, குணமாகும்*
ஆமணக்கு,ஒதியம்,முள்ளங்கி,முருங்கை ஆகியவற்றின் இலையை தனித்தனியாக இடித்து வகைக்கு 100 மில்லி சாறெடுத்து  அதோடு
ஒருலிட்டர் பசும்பால் 100 கிராம் நல்லெண்ணைய் சேர்த்து, அதோடு 30 கிராம் அதிமதுரத்தை அரைத்துச்சேர்த்து  காய்ச்சி தைலப்பக்குவத்தில் வடிகட்டி வைத்துக் கொண்டு காதில் மூன்று துளிகள் விட்டுவர *காதிரைச்சல்,காதுமந்தம், ஆரம்பநிலை காதுகேளாமை குணமாகும்.*
மாசிக்காயை தாய்ப்பாலில் உறைத்து தேன்பக்குவத்தில் எடுத்து
குழந்தைகளின் *வாய்,நாக்கில் உள்ள புண்களில் போட்டுவர புண் விரைவில் ஆறும்.*

🌿இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in*

AUM HERBALS
mobile & whatsapp
*9629368389*

💐நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment