Saturday, November 12, 2016

காலில் உண்டாகும் சுளுக்கை சுலபத்தில் குணமாக்க 3 வழிகள்.*🌿

*

*லேசாக பாதம் பிசகினாலே கணுக்காலில் சுளுக்கு உண்டாகும். அங்கே சதை அதிகம் இல்லாததால் தோலை ஒட்டிய தசை நார்களில் பாதிப்பு உண்டாகி எளிதில் நரம்புகள் இன்றோடொன்று பிணைந்து இறுக்கத்தை உண்டாக்கும். இதனை சுளுக்கு என்று நாம் கூறுவோம்.*

*அது எளிதில் போகாது. அதுவாகவே போனால்தான் உண்டு. மாத்திரை மருந்துகள் பலனைத் தராது. எவ்வாறு அதனை சரிசெய்வது என தெரிந்து கொள்வதில் விருப்பமா? கீழே உள்ள யுக்திகளை முயற்சித்துப் பாருங்கள்*

*அரை கரண்டி நல்லெண்ணெயை பொறுக்கும் அளவில் சூடு படுத்தி அதில் கைப்பிடி கல் உப்பை போட வேண்டும்.*

*இதனை ஒரு நல்ல பருத்தி துணியில் போட்டு இறுக்கமாக கட்டி அதனைக் கொண்டு ஒத்தடம் தர வேண்டும்.*

*அவ்வப்போது அதனை வெதுவெதுப்பாக சூடு படுத்தி ஒத்தடம் தாருங்கள்.*


*பின்னர் இரவில் இந்த கலவையை காலில் படும்படி பற்று போல் கட்டி வைத்துவிடுங்கள். சுளுக்கு விரைவில் மறைந்துவிடும்.*


*இது தசைகளில் உண்டாகும் இறுக்கத்தை தளர்க்கிறது. இதனால் நரம்புகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. சுளுக்கு விரைவில் குணமாகும்.*


*ஐஸ் கட்டியை சுளுக்கு இருக்குமிடத்தில் ஒற்றி எடுங்கள். . 5-10 நிமிடம் இடைவெளிவிட்டு ஒத்தடம் கொடுங்கள். தேய்க்க வேண்டாம்.*

*தினமும் ஒரு மணி நேர இடைவெளியில் இப்படி செய்தால் விரைவில் சுளுக்கு சரியாகிவிடும்.*


*இன்னொரு எளிதான் வழி இது. அரை பக்கெட் நீரை வெதுவெதுப்பான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.*

*2-3 ஸ்பூன் எப்சம் உப்பை அதில் கலக்குங்கள். இந்த நீரில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள்.*

*15 நிமிடம் கழித்து எடுக்கவும். தினமும் இருவேளை இப்படி செய்தால் சுளுக்கு குணமாகும்.!*

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment