Thursday, November 3, 2016

இயற்கை வழியில் குடிநோயை குணப்படுத்தலாம்

குடிப்பழக்கம் என்பது முதலில்  ஏதேனும் விசேசம், விருந்து,மாதத்தில் ஒருநாள் வாரத்தில் ஒருநாள் என்று சாதாரணமாக ஆரம்பித்து பிறகு சந்தோசம்,துக்கம் என்று ஏதேனும் ஒரு சாக்கை வைத்து தொடரும்.!  ஒரு கட்டத்தில் மதுவை மனிதன் குடித்தநிலை மாறி மனிதன் உயிரை மது குடிக்கும் நிலை உருவாகி தினமும் மதுவை குடிக்க ஆரம்பிப்பார்கள்.! இந்த நிலையில்   தினமும் வேலைநேரம் முடிந்ததும் எப்பொழுதுடா குடிக்கலாம் என்று அலைபாய ஆரம்பிப்பார்கள். இதற்கு அடுத்தக்கட்டமாக பணிநேரத்திலேயே குடித்துவிட்டு இருப்பது. அதிகமாக குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவது, குடும்பத்தினரை கொடுமை படுத்துவது, பணிக்கே போகாமல் குடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடப்பது போன்ற முற்றிய நிலை நோயாக குடிமாறிவிடும்.!
குடியை விடவேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் வழக்கமாக சேர்ந்து குடிக்கும் நண்பர்களின் நட்பை விடவேண்டும்.
ஏனெனில் மது குடிப்பவர்களில் 67% பேர் குடிகார நண்பர்களோடு சேர்ந்து தான் குடிப்பதாக டில்லியில் நடந்த ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.!
 அடுத்து யோகா, உடற்பயிற்சி, தற்காப்புகலை பயிலுதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினால் குடிபழக்கம்,மற்றும் புகை பழக்கத்திலிருந்து விடுபட தேவையான உடல்,மன ஆற்றல் அதிகரிக்கும். குறிப்பாக ஜானு சீராசனம் என்ற யோகாசனத்தை <சரியாக செய்வது கடினம் அதனால் முடிந்த நிலைவரை  செய்யலாம்>
ஒரு தடவைக்கு 10 எண்ணிக்கைகள் விதம் மொத்தம் 5 சுற்றுகள்  வரை செய்துவருவதோடு மட்ச்யாசனம் 30 -50 எண்ணிக்கை ஒரு தடவை செய்து நாடிசுத்தி, 5/5/10 என்ற விகிதத்தில் மொத்தம் 10 சுற்றுகள். விபாசனா தியானம் 5 நிமிடம் செய்துவந்தால் விரைவில் குடியிலிருந்து விடுபடலாம்.!
பொதுவாக உடலில் எது அதிகமாக தேங்கி உள்ளதோ அதையே உடல் மீண்டும் மீண்டும் கேட்கும்.
தினமும் தேநீர் குடிப்பவர்களின் உடலில் தேனீரின் தன்மை இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் அதை குடிக்கத்தோன்றுகிறது. அதுபோல்தான் மதுவும். மதுவை நிறுத்தவேண்டுமானால் மனநிலையை உறுதிப்படுத்துவதோடு உடலில் தேங்கியுள்ள மது கழிவை முழுவதாய் வெளியேற்ற வேண்டும்.! மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் கீழாநெல்லி, அருகம்புல்,திரிபலா போன்ற சூரணங்களை அடிக்கடி கொடுப்பதோடு முறையான உடற்பயிற்சி, மனப்பயிற்சி போன்றவற்றை வழங்கியே குடியிலிருந்து மீட்கிறார்கள்.! மதுவை நிறுத்த வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் காலை வெறும் வயிற்றில் அருகம்புல்சாற்றை தொடர்ந்து 48 நாட்கள் அருந்தினால் நல்ல பயன்கிடைக்கும். அல்லது தினமும் இரவில் சாப்பிட்டபின் திரிபலாசூரணம் அல்லது நமது தயாரிப்பான பஞ்சமூலி சூரணத்தை ஒருத்தேக்கரண்டி அளவு எடுத்து கால்டம்ளர் சுடுநீரில்  கலந்து குடித்தால் குடியை மறக்கடிக்க உதவும்.! குடிகாரருக்குத் தெரியாமல் குளம்பு,இரசம் போன்றவற்றில் இந்தப்பொடியை கலந்தும் கொடுக்கலாம்.!
சங்கம் வைத்து தமிழ்வளர்த்த காலம்போய் இன்று அரசே தனிஇலாகா வைத்து மதுவளர்க்கும் கொடிய காலம் வந்துவிட்டது.!
அவர் இவர் என்ற பாகுபாடு இல்லாமல் எளிய தொழிலாளிகள், அரசுஊழியர்கள், வியாபாரிகள் ஏன் மாணவர்கள் கூட இன்று மதுவை குடித்து சாலையில் மயங்கிக்கிடக்கும் காட்சிகளைக் காணமுடிகிறது.!
அனைவருக்கும் கல்வி இயக்கத்தைவிட அனைவருக்கும் மது இயக்கம் வெகு வேகமாக பரவிவருகிறது.! எனது நண்பர்களிலும் உறவினர்களிலும் பலர் மொடாக்குடியானாகி தன் குடும்ப வாழ்வை சிதைத்துவருவதை  பார்க்கும்போது குடிக்காமலேயே எனது கண்கள் சிவப்பாகி விடுகிறது! ஒவ்வெரு தெருவிலும் பல  குடிகாரர்கள்  தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் எரித்துவருகிறார்கள்.!
இன்று குடிக்கு எதிராக சமூகமே கிளர்ந்து எழவேண்டிய முக்கியமான காலகட்டத்தில் வசிக்கிறோம்.!குடியிலிருந்து விடுபட மேற்கண்ட  வழிமுறை பயன்படுத்தி அனைவரும் மீண்டு தங்களை சார்ந்தவர்களின் வாழ்வை அர்த்தமுள்ளதாய் ஆக்கினால் உலகமே மகிழும்.!

🍀☘இயற்கை மருத்துவ தகவலுக்கு
*amyogatrust.blogspot.in*

*AUM*
*HERBALS*
Whatsapp & Mobile
*9629368389*

No comments:

Post a Comment