Saturday, November 19, 2016

சுக்குக்கு மிஞ்சின மருந்தில்லை

சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு குணமாகும்.

சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நாவறட்சி குணமாகும்.

தோல் நீக்கிய சுக்கை ( 2 கிராம் ) பசும்பாலில் (2 லிட்டர் ) போட்டுக் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி , வாயுத் தொல்லை , உடல் அசதி போன்றவை குணமாகும்.

சுக்குத் துண்டை தோல்நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.

சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்தால் தலைவலி , தலைச்சுற்றல்  போன்றவை வராது.

சுக்கு ,  மிளகு , திப்பிலி , அதிமதரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக்கிக் குடித்தால் காய்ச்சல் ,  வாய்ப்புண் , மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் போன்றவை குணமாகும்.

சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் கடுமையான வயிற்றுவலி  குணமாகும்.!

*இணையப்பகிர்வு*
[11/19, 13:16] Am Yoga: *இயற்கை மருத்துவம்*

கண் கருவளையம் மறைய உருளைக் கிழங்கு சோற்றுக்கற்றாளை சதை சம அளவாக  எடுத்து மையாக அரைத்து தினமும் அரை மணி நேரம் கருவளையம், கரும்படலம், கருந்தழும்பு போன்றவற்றின் மீது பூசி காயவைத்து  பின் குளிர்ந்தநீரில் கழுவிவந்தால் 30  நாளில் மேற்கண்ட  சரும நோய்கள் குணமாகும்.!
அதோடு இரவில் நன்றாக தூங்க வேண்டும், கொத்தமல்லி விதையை பொடித்துப்போட்டு காய்ச்சிய தண்ணீரை நாளெல்லாம் குடித்துவந்தால் விரைவான பயன் கிடைக்கும்.!

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
*amyogatrust.blogspot.in

No comments:

Post a Comment