Wednesday, November 30, 2016

மண்ணில் நடந்தால் மரணமில்லை*

தினமும் காலையில் 15 முதல்  30 நிமிடங்கள் உங்கள் வீட்டுத் தோட்டப்பகுதியில் உள்ள மண்தரையிலோ அல்லது  ஆத்தோரம் உள்ள மண்சாலையிலேயோ நடைப்பயிற்சி, தோப்புக்காரணம், நமது உடல் தளர்வுப் பயிற்சி,பிரபஞ்சா பிராணாயம் நின்ற நிலை எளிய யோகாசனப் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால் குதிகால், கை எரிச்சல், உடல்சூடு,கால்வலி,வாய்வுத் தொல்லை, அதிக கொழுப்பு, சிறியவர்களுக்கு  வரும் விரைவீக்கம்  போன்றவை எந்த மருந்தும் இல்லாமல் குணமாகும்.!
சென்ற மாதம் வாய்வுத்தொல்லை முற்றிய நிலையில் உள்ள ஒருவருக்கு இந்த பயிற்சி முறைகளை கற்றுக்கொடுத்து அனுப்பினேன். ஒரே வாரத்தில் வாய்வுத்தொல்லை முற்றிலும் அகன்று முழு குணமடைந்தார்.
அதேபோன்று சிலவருடங்களுக்கு முன் எனது மகன் சைக்கிளில் அடிப்பட்டு விதை வீங்கிய நிலையில் இருந்தபோது இதுபோன்றே மண்தரையில் எளிய யோகாசனம் செய்ய வைத்தே குணப்படுத்தினேன். அதோடு களச்சிக்காயை உரைத்து முட்டையின் வெள்ளைக்கருவில் கலந்து வெளிப்பூச்சாக பூசிவந்ததோடு நாவப்பட்டை சுக்கு கசாயமும் வைத்து குடிக்கக் கொடுத்து வந்தேன் மூன்றே நாளில் வீக்கம் முற்றிலும் குறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டன.!
<முன்னதாக இதற்கு ஆங்கில மருத்துவர் ஒருவாரம் வரை ஊசியைப்போட்டு பார்த்துவிட்டு ஒரிரி வாரத்தில் அறுவை சிகிட்சை செய்வது நலம் என்று கூறியிருந்தார்.!>
சென்ற மாதம் எனது பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் யாரோ உள்ளிருந்து தீயை கொளுத்துவது போல் சூடும் எரிச்சலுமாக  இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் அப்படியே விட்டுவிட்டேன். பிறகு எங்கள் வீட்டுத்தோட்டத்தில் நின்று குதிகால் பயிற்சி,தோப்புக்காரணம், ஹூ க்ரியா போன்றப் பயிற்சிகளை செய்தேன். ஆச்சரியப்படும்படியாக பயிற்சி செய்த முதல்நாளே 90% பாத எரிச்சலும் சூடும் குறைந்துவிட்டது.! பிறகு ஓரிரிநாளில் முற்றிலும் குணமாகிவிட்டது.! யோகா ஆசிரியரான நீங்கள் தினமும்  இந்தப் பயிற்சியை செய்வதில்லையா என்று கேட்டால்  செய்கிறேன்.  ஆனால், வீட்டில்  மண்தரையில் பயிற்சி செய்ய நேரம் கிடைக்காது. எங்கும் சிமெண்ட்.,மொசேக்.,கிரணைட் தளங்கள் தானே இருக்கிறது. அதில் யோகா விரிப்பை விரித்து பயிற்சி செய்கிறோம். மண்ணில் பயிலும் போதே யோகா மற்றும் உடல்பயிற்சியின் உண்மை நோக்கம் முழுவதும் நிறைவேறுகிறது என்பதே நம் அனுபவம்.! அதோடு மண் என்பது  பஞ்சபூதங்களையும் தன்னுள் ஈர்க்கும் ஆற்றல் பெற்றது அதனால் மண் நமது உடலில் உள்ள தேவையில்லாத சூடு,வாய்வு,கொழுப்பு போன்றவற்றை நமது பாதங்களின் மூலம் உறிந்து கொண்டு நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கி நம்மை குணப்படுத்துகிறது. என்று; உணர்கிறேன்.!
மேற்கூரிய பிணியால் பாதிக்கப்பட்டவர் யாராவது இருந்தால் நமது இந்த முறையை இரண்டு வார காலங்கள் பயிற்சி செய்துப் பார்த்துவிட்டு தங்கள் அனுபவங்களையும் கூறுங்களேன்.!

*இயற்கை மருத்துவ தகவல்களுக்கு*
*amyogatrust.blogspot.in*

🌿100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு

*AUM HERBALS*
Mibile & whatsapp
*9629368389*
நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment