இப்படி தூங்கினால் நல்லது இரவில் கட்டிலில் படுத்து தூங்குவதை விட தரையில் படுத்து தூங்குவதே நல்லது.! ஏனெனில் கட்டிலில் படுக்கும் போது உடலில் உள்ள பிராண சக்தியோடு ஆகாய பிராண சக்தி அதிகமாக கலந்துவிடுகிறது.! இதனால் வாய்வு சம்மந்தமான பிரச்சனைகள் உருவாகும்.! காலையில் எழுந்ததும் முதலில் கைகளை வெறும் தரையில் பதித்து கண்களில் வைத்துவிட்டு.பிறகு கால்களை தரையில் பதிக்க வேண்டும். ஏனெனில் உடலில் வெப்பத்தை விட பூமியில் வெப்பமோ குளிர்ச்சியோ அதிகமாக இருக்கும் அந்த நிலையில் முதலில் காலை தரையில் பதிப்பதால் இரத்த ஓட்டம் விரைந்து கால்களுக்கு வரும் இதனால் நரம்புத்தளர்ச்சி, தலைசுற்றல் போன்ற வியாதிகள் ஏற்படும். மாறாக கைகளை பதித்து கண்களில் ஒற்றுவதால் இரத்த ஓட்டம் மேல்நோக்கி சென்று மூளைக்கு தேவையான பிராணசக்தி அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெருகும்.! தூங்கும் போது எப்பொழுதும் மால்லாந்து ஒருக்களித்து கமுந்து என்று ஒரே நிலையில் தூங்கக் கூடாது. ஏனெனில் ஏதேனும் ஒரே நிலையில் நீண்ட நேரம் தூங்கினால் உடலின் ஒரு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாகவும் மற்ற பகுதியில் குறைவாகவும் இருக்கும் இதனால் கைகால் மறத்துப் போதல், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும்.! உணவு உண்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தூங்கக் கூடாது. அப்படி தூங்கினால், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், மூட்டுவலி போன்ற கோளாறுகள் தோன்றும்.! இரவு 10 மணிக்கு முன் தூங்க செல்வதும் அதிகாலை 6 மணிக்கும் முன் எழுவதும் மிக நல்லது. இதனால் உடல் சக்தி அதிகரிப்பதோடு உடலில் நல்ல பிராண ஆற்றலும் அதிகமாகும்.! எப்பொழுதும் தெற்கு அல்லது மேற்கு தலைவைத்து படுப்பது நல்லது. இதனால் புவியீர்ப்பு ஆற்றலும் ஜீவகாந்த ஆற்றலும் சமன்பட்டு ஆரோக்கியம் பெருகும்.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.com mobile:9629368389
No comments:
Post a Comment