Friday, May 6, 2016

நீர்க்கடுப்பு - வெட்டுக் காயம் - பல்வலி

இயற்கை வழியில் குடல்காந்தல், பித்தம், நீர்க்கடுப்பை குணமாக்குங்கள்

மூன்று இளநீரை ஒரே நேரத்தில் குடித்துவிட்டு ஒரு மணிநேரம் வரை வெறெதுவும் உண்ணாமல் இருந்தால் நீர்க்கடுப்பு தேகச்சூடு குணமாகும்.!
பாதம் பிசின் ஐந்து கிராம் அளவு எடுத்து இரவில் அரைடம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, தானே விந்துவெளியேறல், பித்தச்சூடு குணமாகும்.!
சுப்ஜா என்றழைக்கப்படும் துளசிவிதையை   ஒருதேக்கரண்டி அளவு எடுத்து பழைய சாதநீரில் மூன்று மணிநேரம் ஊறவைத்து தினமும் ஒருவேளை பத்துநாட்கள்  உண்டுவர உடல் எரிச்சல் , குடல்காந்தல் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

இயற்கை வழியில் வெட்டுக் காயங்களை குணப்படுத்துங்கள்

உண்ணிச்செடியின் இலையை பறித்து அதனோடு சிறிதளவு சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து வெட்டுக்காயம் பட்ட இடத்தில் வைத்து கட்டிவிட காயம் ஆறிய பின்தான் கட்டே அவிழும்.!
<உண்ணிச் செடியென்பது வேலிகளில் வளர்ந்து நல்லமிளகு போல பழம் கறுப்பாக காய் பச்சையாக கொத்தாக வளரும் செடி> இது கிடைக்காத போது தொட்டாவாடி இலையையும் இதுபோல் கட்டலாம்.!நலம் பெருகட்டும் …

அதிக  அனுபவ மருத்துவ   தகவல்களுக்கு

இயற்கை வழியில் பல் வலியை குணமாக்குங்கள்

சித்திமூலமும் சுக்கும் சம அளவெடுத்துபொடித்து வைத்துக் கொண்டு சிறிதுநீர் சேர்த்து வலது உள்ளங்காலில் சிறிது தடவ இடது பக்க பல்வலியும் இடது உள்ளங்காலில் தடவ வலதுபக்க பல்வலியும் தீரும்.!
இதை தேங்காய் எண்ணையில் குழப்பி தேமல் மேல் போட தேமல் குணமாகும்.!
நலம் பெருகட்டும் …

மேலதிக அனுபவ மருத்துவங்களுக்கு
amyogatrust.blogspot.com
mobile:9629368389

No comments:

Post a Comment