🌿 🌿 சமீபகாலமாக மக்களிடம் மூலிகை மருந்துகளின் மீது பரவலான மோகம் ஏற்பட்டுள்ளது🌿🌿 மோகம் என்றாலே அது விரைவில் போகும் ஒர் உணர்வுதானே.!🌿 இதுவும் அப்படித்தான் தரமில்லாப் பொருள்,கட்டுப்படியாகாத விலை, எதிர்ப்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் போய்விடுதல் போன்ற காரணங்களால் பிறகு இம்மோகம் பலருக்கும் குறைந்துவிடும்☘ இன்னொரு முக்கியக் காரணம் எளிய மூலிகைகளை பற்றிகூட முழுமையான புரிதல் இல்லாமல் துளசியை தொடர்ந்து தின்றால் குழந்தை பிறக்காது, வேப்பிலையை தொடர்ந்து எடுத்தால் நரம்புத்தளர்ச்சி ஏற்படும் என்றெல்லாம் பல வைத்தியர்களும் அலோபதி மருந்து கம்பெனி காரர்களும் பல புரளியை வேறு அடிக்கடி கிளப்பி விட்டுவிடுகிறார்கள்🌳 உண்மையில் இவையெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.🐾 துளசியை தினமும் சுற்றி வணங்கி அதில் நான்கு இலையை பிய்த்து வாயில் போட்டு வந்த எல்லா ஆரியர்களின் வீட்டிலும் குழந்தைகள் டஜன் கணக்கில் இருந்தன.இன்றைய செயற்கையான உணவு முறையும் வாழ்க்கை முறையுமே மழலையின்மைக்கு காரணமே தவிர எந்த மூலிகையும் இல்லை🍁🍁🍁 துளசி மாத்திரையை கர்பபைக் கோளாறு , தைராய்டு, இரத்த அழுத்தம், மனஅழுத்தம், தலைவலி, காய்ச்சல், சளி இரத்தத்தில் கிருமி, ஆரம்பநிலை புற்றுநோய் போன்ற நோயிருப்பவர்கள் நோய் குணமாகும் வரை தினமும் ஒருவேளை அல்லது இரண்டு வேளை சாப்பிட்டு வரலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் 24 முதல் 48 நாட்கள் தொடர்ந்து ஒருவேளை மட்டும் எடுத்து வந்தாலே போதும் ஆச்சரியப்படத்தக்க வகையிலான பயன்களை பெறலாம்.☘ மாத்திரை தயாரிப்பு கருந்துளசி அல்லது வெண்துளசி இலை 100 கிராம் வால்மிளகு அல்லது நல்லமிளகு 50 கிராம் இரண்டையும் அம்மி அல்லது மருந்து தயாரிக்கும் அம்மியில் சிறிது நீர்விட்டு அரைத்துக் கொள்ளவும் பிறகு அதோடு ஒருத் தேக்கரண்டி மலைத்தேன் கலந்து பிசைந்து சிறுசிறு மாத்திரையாக பிடித்து ஒருப் பாத்திரத்தில் வைத்து ஒருநாள் நிழலிலும் ஒருநாள் வெயிலிலும் காயவைத்து எடுத்துக் கண்ணாடிப் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்🌿🌿 காய்ச்சலுக்கு நெற்றியில் பற்றைப் போட்டுவிட்டு இரண்டு மாத்திரையை மூன்று வேளை சாப்பிட உடனடி குணம் தலைவலிக்கு இரண்டு மூன்று மாத்திரையை போட உடனடி குணம் கிடைக்கும்.🍁 மற்ற வியாதிகளுக்கு நின்று நிதானமாக பயனளிக்கும்🍁🍁🍁 amyogatrust.blogspot.in AM HERBALS MOBILE:9629368389💐☘🌴 நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment