Tuesday, August 2, 2016

சர்க்கரை வியாதி

யோகா ஆசிரியருக்கு வந்த சக்கரைவியாதி இரண்டு மாதங்களுக்கு முன்  நாகர்கோவிலில் புகழ்ப்பெற்ற ஒரு யோகா ஆசிரியர் என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறி , எப்ப வரலாம் என்று கேட்டார் நானும் காலை 11 மணிக்குள் என்றால் நமது பார்வதிபுரம் பயிற்சியகத்தில் சந்திக்கலாம் என்று கூறினேன். சரியென்று அடுத்தநாளே காலை ஒம்பது மணிக்கு வந்துவிட்டார். அவர் வந்தநேரம் ஓய்வுப்பெற்ற ஒரு ஆசிரியருக்கு சக்கரை நோயை குணப்படுத்தும் ஆசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்ததால் சற்றுநேரம் காத்திருங்கள் வந்துவிடுகிறேன் என்றேன்.! <அது என்னவோ தெரியலை பொதுவாக ஆசிரியப்பணி செய்பவர்களுக்கே சக்கரை நோய் அதிகமாக வருகிறது> நண்பர் உடனே இதோ வந்துவிடுகிறேன் என்று கிளம்பிவிட்டு பிறகு அடுத்த நாள் அதே நேரம் வந்து பள்ளி ஆசிரியருக்கு அளிக்கும் பயிற்சியை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவர் பயிற்சி முடிந்து போனதும். நேற்று ஒரு அவசர வேலை வந்துவிட்டதால் சென்றுவிட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவரின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது எடுத்துப் பேசியவர் தன்னால் இன்று  வரமுடியாது. வேண்டுமானால் வேறு ஒரு யோகா ஆசிரியரை அனுப்புகிறேன் என்றார் எதிர்முனையில் என்ன சொன்னார்களோ தெரியல கைப்பேசியை வைத்துவிட்டு பேச்சை தொடர்ந்தார் … சக்கரைவியாதியை நீங்கள் யோகாவின் மூலம் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்துள்ளீர்கள், இது எந்த அளவிற்கு சாத்தியம்? எனென்றால்  எனக்கும் மூன்று ஆண்டுகளாக சக்கரை உள்ளது.நானும்  சக்கரைக்காக பரிந்துரைக் கப்பட்டுள்ள வக்ராசனம், சலபாசனம், மயூராசனம் போன்றவற்றை தினமும் செய்துவருகிறேன். ஆனாலும், எந்த இனிப்பை சாப்பிட்டாலும் சக்கரை ஏறிவிடுகிறது, தினமும் இரண்டு அலோபதி மாத்திரைகளை போட்டால் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடிக்க முடிகிறது என்று அவர் கூறவும் மீண்டும்  கைப்பேசி ஒலித்தது. நான் அவரிடம் கூறினேன் நண்பரே தயவாய் இப்பொழுது சென்றுவிட்டு உங்களுக்கு கைப்பேசி அழைப்பு வராத நேரத்தில் வாருங்கள் அல்லது கைப்பேசியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் என்றதும் கைப்பேசியை அதிர்வு நிலையில் போட்டு  கொஞ்சம் தூரமாக வைத்துவிட்டு  என்னைப் பார்த்தார்   நான் கூறினேன்; " சக்கரை என்பது ஒரு வியாதியே அல்ல, அது உடலியல் இயங்குத் திறனில் ஏற்ப்பட்ட ஒரு தடுமாற்றம் மட்டுமே ஆறுமாதம் வரை தொடர்ந்து நாம் வரையறுத்துக் கூறும் யோகா நுட்பங்களுடன், உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொண்டால்  சக்கரை குணமாகிவிடும். நம்மிடம் பயிற்சி ஆரம்பித்த பத்தே நாட்களில்  நீங்கள் பயன்படுத்தும்  ஆங்கில மாத்திரை அல்லது இன்சுலினை  ஒருவேளையாக இருந்தால் முற்றிலும் நிறுத்திவிடலாம். இரண்டு வேளையாக இருந்தால் அதிகப்பட்சம் ஒரு மாதத்தில் நிறுத்தி ஆரோக்கியமாக வாழலாம். பயிற்சி ஆரம்பித்த சிலநாட்களிலேயே நாவறட்சி, அதிமூத்திரம், உடல்சோர்வு, எடைகுறைதல், பசியின்மை, படப்படப்பு போன்ற அனைத்தும்  கட்டுப்பாட்டில் வந்துவிடும், எல்லா வகையான இயற்கை இனிப்புகளையும் தராளமாக சாப்பிடலாம்  நீங்கள் நம்மிடமோ அல்லது வேறு எந்த ஆய்வகத்திலேயோ சக்கரை பரிசோதனை செய்துபார்த்தாலும் சக்கரை அளவு முன்பை விட குறைந்துகொண்டே வந்து ஆறுமாதத்தில் முழு குணம் கிடைக்கும் "  ' அய்யா கோபித்துக் கொள்ள வேண்டாம்  பிறகெதற்கு இதை குணப்படுத்தவே முடியாது என்று கூறுகிறார்கள்? " அது அறியாமை அல்லது வியாபர யுத்தியாக இருக்கலாம் " நீங்கள் கூறுவதை எப்படி நம்புவது? என்று அவர் கேட்டதும் நமது இன்சுலின் ஆவணப்பட குறுந்தகட்டை கொடுத்து இதைப்பாருங்கள் சகோதரரே.! ஒரு மாதத்திலேயே ஆங்கில மருந்துகளை நிறுத்தி யோகாவால்  தங்கள் சக்கரையை சீரமைத்துக் கொண்டவர்களின்  முழு விபரமும் இதில் உள்ளது. என்று நாம் கூறியதும் மிக நல்லது  என்று கூறி டிவிடியை வாங்கிவிட்டு எழுந்து இதைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று  விடைபெற  முயன்றார்.  குறுந்தகடின் விலை 250 ரூபாய் " என்று நான்   கூறினேன்; உடனே அவர் இலவசம் என்று கேள்விப்பட்டேனே என்று புருவத்தை உயர்த்தினார்;  கூறினேன்; "நண்பரே எளிய ஆலோசனைகளுக்கு நாம் கட்டணம் வாங்குவதில்லை, அதுபோலவே வருடத்தில் பாதிநாட்கள் ஒவ்வெரு வியாதிக்கும் தனித்தனியாக ஆராய்ச்சிப் பூர்வமாக இலவச வகுப்புகளுடன் மூலிகை மருந்துகளும் இலவசமாக வழங்குகிறோம். ஆனால், நமது டிவிடி, புத்தகம், பல்வேறு நோய்தீர்க்கும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை கட்டணத்திற்கே கொடுக்கிறோம்" என்றதும் எவ்வளவு என்று கேட்டுக் கொண்டு பிறகு நமது புத்தகம், சிறுகுறிஞ்சான் மாத்திரை போன்றவற்றையும் பணம் செலுத்தி வாங்கிசென்றார். ஆனால், இதுவரை  பயிற்சிக்கு வரவில்லையே என்று  நினைத்துக் கொண்டிருந்தேன். நேற்று மதியம் போன் செய்து  அய்யா, சக்கரை மாத்திரைகளை நிறுத்திவிட்டேன் எனது வழக்கமான ஆசனப்  பயிற்சிகளோடு உங்கள் டிவிடியில் கூறப்பட்டுள்ள கிரியை, பிராணாயாமப் பயிற்சியையும் சேர்த்து செய்துவருகிறேன். சக்கரை கட்டுக்குள் இருக்கிறது. முன்பிருந்த அடிக்கடி நாவறட்சி ஏற்படுதல், இரவில் இரண்டு மூன்றுமுறை எழுந்து சிறுநீர் கழிப்பது இப்போது இல்லை. அதோடு முன்பு அடிக்கடி ஏற்படும் வயிற்று உப்புச குறைபாடுகளும் சரியாகி விட்டன என்று மகிழ்வாக கூறியதோடு நானும் இப்பொழுது யோகாவுடன் இயற்கை வாழ்வியல் முறைகளையும் உணவு முறையையும் சேர்த்து எனது மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். இப்பொழுதுதான் என்னால் குற்ற உணர்வில்லாமல் பிறருக்கு பயிற்சி கொடுக்க முடிகிறது. என்றார். அதானே;  யோகா சக்கரையை கட்டுப்படுத்தும் என்று சொல்லிக் கொண்டே ஆசிரியர் மாத்திரையை போட்டுக் கொண்டு வகுப்பெடுத்தால் அது கேலிக் குறியதாகத்தான்  இருக்கும். இயற்கை இன்னும் யாருக்கெல்லாம் தன் அருளாசியை வழங்கி தூய்மைப்படுத்த முனைகிறதோ அவர்களெல்லாம் பாக்கியவான்களே.! நலம் பெருகட்டும் … amyogatrust.blogspot.in AM HERBALS Mobile:9629368389

No comments:

Post a Comment